மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்
Posted in இலங்கை செய்திகள்

மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்

மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள்

மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ,முந்தைய நிர்வாகத்தில் மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்று விநியோகம் செய்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும்

அரசியல்வாதிகளின் பெயர்களை உடனடியாக அரசாங்கம் வெளியிட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் நேற்று மாலை கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய சுமந்திரன், குறிப்பாக நாடு முழுவதும் மதுபானசாலைகள் பெருகுவது தொடர்பில் சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், வெளிப்படைத்தன்மையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

இந்த நிறுவனங்களைத் திறக்க பரிந்துரை செய்வதற்கு பொறுப்பான நபர்களின் பட்டியலை அரசாங்கம் வெளியிட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“நாடு முழுவதும் மதுபானக் கடைகளில் ஒரு பரவலான பிரச்சினை உள்ளது, மேலும் இந்த உரிமங்களுக்கு எந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரசியல்வாதிகள் ஒப்புதல் அளித்தனர் என்பதை பொதுமக்கள் அறிந்து கொள்ளத் தகுதியானவர்கள்.

இது எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும், இதனால் சம்பந்தப்பட்டவர்கள் எதிர்கால பதவியில் இருந்து விலக்கப்படுவார்கள் சுமந்திரன் தெரிவித்தார்.

மதுபான விற்பனை நிலையங்களின் அதிகரிப்பானது இளைய தலைமுறையினருக்கு பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க சமூகப் பிரச்சினையாகும் என சுமந்திரன் வலியுறுத்தினார்.

மதுபானக்கடைகளை விஸ்தரிப்பதற்கு இரகசியமாக உதவிய அரசியல்வாதிகள் மற்றும் தனிநபர்களை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிதி ஆதாயத்திற்காக மதுபான அனுமதிப்பத்திரங்களை விற்று சிலர் இலாபம் ஈட்டியதாக தகவல் இருப்பதாக அவர் கூறினார்.

“இந்த நபர்களின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும். மேலும், அவர்களிடமிருந்து லாபம் பெறுவதற்காக அவர்கள் அனுமதிகளை விற்றதாக நாங்கள் செய்திகளைக் கேட்கிறோம்.”

குறிப்பாக தற்போதைய பொருளாதார நெருக்கடியின் போது பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையற்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

“அதிகப்படியான பலன்களைக் குறைப்பதற்கு எங்களின் முழு ஆதரவும் இருக்கும். பொருளாதார நெருக்கடியான நேரத்தில், பாராளுமன்ற உறுப்பினர்கள் இத்தகைய சலுகைகளை அனுபவிப்பது பொருத்தமற்றது,” என்று அவர் மேலும் கூறினார்.

தேவையற்ற பலன்களைக் குறைத்து, ஆட்சியில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவது மிகவும் முக்கியமானது என்று கூறி, சலுகைகளைக் குறைப்பதற்கான தனது கட்சியின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில் வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கான அவரது கட்சியின் வேட்புமனுக்கள் குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.

இம்முறை புதிய இளம் முகங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கிறோம் என்றும் குறிப்பாக பெண் வேட்பாளர்களை ஊக்குவிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்..

துறைமுகத்தில் 5 மனித எச்சங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

துறைமுகத்தில் 5 மனித எச்சங்கள் மீட்பு

துறைமுகத்தில் 5 மனித எச்சங்கள் மீட்பு

துறைமுகத்தில் 5 மனித எச்சங்கள் மீட்பு ,கொழும்பு துறைமுக வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக அகழ்வுப் பணிகளின் போது ஐந்து மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பத்தில் ஜூலை 13 அன்று ஒரு தனியார் நிறுவனத்தால் போர்ட் சிட்டி அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஒரு பகுதியாக, கொழும்பு கோட்டையில் உள்ள பழைய செயலகக் கட்டிடத்திற்கு அருகில் நிலத்தடியில் 6 அடி தோண்டும் கட்டுமானப் பணியின் போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொழும்பு துறைமுகத்தில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் மீதான விசாரணை கொழும்பு பிரதான நீதவான் தலைமையில் 2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 5 ஆம் திகதி அகழ்வு நடவடிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த கட்டத்தில் சட்ட வைத்திய அதிகாரிகள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மற்றும் காணாமல் போன நபர்கள் தொடர்பான அலுவலகத்தின் (OMP) பிரதிநிதிகள் இருந்தனர்.

தேவையேற்படின் குறித்த மனித புதைகுழிகள் தொடர்பான விசாரணையை மேற்பார்வையிட OMP (காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம்) க்கு நீதவான் அங்கீகாரம் அளித்துள்ளார்.

முதற்கட்ட அகழ்வாராய்ச்சியின் பின்னர் இரண்டாம் கட்டம் செப்டெம்பர் 26, 27, 28 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீட்கப்பட்ட மனித எலும்புக்கூடுகள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு (வடக்கு) குற்றத்தடுப்புப் பிரிவின் ஆய்வகத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ அகழ்வாராய்ச்சியை மேற்பார்வையிடுகிறார்.

அந்த இடத்தில் மேலும் பல எலும்புக்கூடுகள் வெளிப்பட்டிருப்பதால், அடுத்த கட்ட அகழ்வாராய்ச்சி அவசியம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 17ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எச்சங்களின் தோற்றம் மற்றும் பின்புலம் பற்றிய கூடுதல் விவரங்களைக் கண்டறிய விசாரணைகள் நடந்து வருவதாக மூத்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேர்தலில் போட்டியிடவில்லை வினோ நோகராதலிங்கம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலில் போட்டியிடவில்லை வினோ நோகராதலிங்கம்

தேர்தலில் போட்டியிடவில்லை வினோ நோகராதலிங்கம்

தேர்தலில் போட்டியிடவில்லை வினோ நோகராதலிங்கம் ,எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடாதிருக்க தீர்மானித்துள்ளதாக முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் அவருடன் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஜனாதிபதி தேர்தலில் தெற்கிலே மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள பெரும்பான்மை மக்கள் மத்தியிலே அரசியல் மாற்றம் ஒன்றின் தேவை உணரப்பட்டது.

அதன் விளைவு தான் அநுர குமார திசாநாயக்க ஜனாதிபதியானார். அதைப்போலவே வடகிழக்கில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் மக்களும் மாற்றம் ஒன்றை எதிர்பார்த்து நிற்கின்றனர்.

அது புதியவர்களையும், இளையோரையும் பாராளுமன்றத்துக்கு அனுப்ப வேண்டும் என்பதாகும். மக்கள் மனங்களில் ஏற்பட்டிருக்கும் இந்த மன மாற்றத்துக்கு நாம் தடையாக இருக்க முடியாது.

அதற்கு வழி விட வேண்டியது தவிர்க்க முடியாததாகும். மக்கள் மனங்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு ஏற்றுக் கொண்டு இளைஞர்களுக்கும், முதியவர்களுக்கும் இடம் கொடுப்பதே அரசியல் கட்சிகளினதும், தலைவர்களினதும் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

என்னுடையதும் ஏனைய சில முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களதும் போட்டியிடாதிருக்கின்ற முடிவு ஏனையவர்களும் உணர்ந்து முடிவெடுக்க உந்துதலாக அமையும் என கருதுகின்றேன்.

வன்னி மாவட்டத்தில் அரசியல் தெளிவுள்ள ஆளுமை மிக்க இளம் தலைவர்களை பாராளுமன்றம் அனுப்ப வேண்டும் என்ற மக்களின்,

இளைஞர்களின் விருப்பங்கள் நிறைவேற மக்கள் மனதறிந்து எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் போட்டி யிடுவதில்லை என முடிவெடுத்துள்ளேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அநுரகுமார இந்தியா மீளவும் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

அநுரகுமார இந்தியா மீளவும் சந்திப்பு

அநுரகுமார இந்தியா மீளவும் சந்திப்பு

அநுரகுமார இந்தியா மீளவும் சந்திப்பு ,ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிற்கும் (Santosh Jha) இடையிலான சந்திப்பு இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திசாநாயக்கவின் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்த இந்திய உயர்ஸ்தானிகர், இலங்கையின் அபிவிருத்திச்

யற்பாடுகளுக்கு சகல வழிகளிலும் ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும், பிராந்தியத்தில் அமைதியான

மற்றும் நிலையான நாடாக இலங்கை வெளிப்படுவதை காண்பதே தமது நாட்டின் எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் நெருக்கத்தையும் நினைவுகூர்ந்த இந்திய உயர்ஸ்தானிகர், அண்டைய

சகோதர நாடுகள் என்றவகையில் இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்ச்சியான மற்றும் நிலையான நட்பைப் பேணி முன்னேறுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

ஊழலுக்கு எதிராக திறம்பட போராடுவதற்கு அரசாங்க கட்டமைப்புகளை டிஜிட்டல் மயமாக்குவதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய இந்திய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்பு திட்டத்தையும் பாராட்டினார்.

மேலும், டிஜிட்டல் மயமாக்கல் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் இலங்கைக்கு ஆதரவளிக்க இந்தியா தயாராக இருப்பதாக உயர்ஸ்தானிகர் மேலும் குறிப்பிட்டார்.

ரணில் ஆதரவு குழு யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் ஆதரவு குழு யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

ரணில் ஆதரவு குழு யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம்

ரணில் ஆதரவு குழு யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானம் , ,ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அடுத்த பொதுத் தேர்தலில் யானைச்

சின்னத்திலோ அல்லது வேறு பொதுச் சின்னத்திலோ போட்டியிடத் தயாராக உள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எரிவாயு சிலிண்டர் சின்னத்தை பெறுவது தொடர்பில் தேர்தல் ஆணைக் குழுவிடம் வினவியுள்ளதாகவும், அதன் முடிவு கிடைத்ததும் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் மற்றும் கூட்டணி தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வருவதற்காக குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (02) பிற்பகல் கொழும்பு ப்ளவர் வீதியிலுள்ள தேர்தல் செயற்பாட்டு அலுவலகத்தில் கூடியிருந்தனர்.

எரிவாயு சிலிண்டர் சின்னத்தைப் பெற முடியாவிட்டால், அவர்கள் பெரும்பாலும் யானை அல்லது வேறு சின்னத்தின் கீழ் போட்டியிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

வடமாகாண மிருக வைத்திய அதிகாரி திரு வசீகரன்
Posted in இலங்கை செய்திகள்

வடமாகாண மிருக வைத்திய அதிகாரி திரு வசீகரன்

வடமாகாண மிருக வைத்திய அதிகாரி திரு வசீகரன்

வடமாகாண மிருக வைத்திய அதிகாரி திரு வசீகரன்(Northern Province Veterinary Officer) அவர்களை புதிய அரசு விசாரணைக்கு உட்படுத்துமா? தண்டிக்குமா?

இறதுபோன/ இறந்து கொண்டிருக்கும் கால்நடைகளுக்கு நீதி கிடைக்குமா? கால்நடை தொழிலை விட்டுச்செல்கின்ற சென்ற பண்ணையாளர்களுக்கு நீதி கிடைக்குமா?

திரு வசீகரன் அவர்கள் வடமாகாண வைத்திய அதிகாரியாக வரமுன்னர் முக்கியமாக, “பால்மாடுகளின் உற்பத்தியும் , கால்நடை பண்ணைகளின்

உற்பத்தியும் மிகவும் அதிககமாக இருந்ததோடு, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும், ஆர்வமும் மிகவும் அதிகமாக இருந்தது.

ஆனால், இன்றைய நிலை அப்படியா? பல வெளிநாட்டாளர்கள் பண்ணைகளை மூடியதோடு, பண்ணைவ்தொழிலை முயற்சிக்காமலும் விட்டுவிட்டனரே.?? யார் காரணம்? நாட்டுக்கு எப்படி வருவாய் வரும்? முதலீடுகள் வரும்? காரணகர்த்தாவாக நீங்களும் ஒருவன்…!!!!😡😡

“மிகச்சுருக்கமான காரணங்களாக:
1/ யாழ் மாவட்டங்களில் இருந்து பால்மாடுகளை வேண்டிவந்து
வன்னி, மற்றும் கிழக்குமாகாணங்களில் அதிக விலைக்கு விற்று வியாபாரிகள் கொழுத்தனர், அந்த பால்மாடுகள் பால்கறக்கவில்லை என்று விட்டு

உரிமையாளர் இறைச்சிக்கு விற்பனை செய்த்தனர்/ செய்கின்றனர். பல விடையங்களை …கூறிக்கொண்டே போகலாம்!


” வைத்தியர்கள்/ வேலை ஊழியர்கள் கூட்டு, வத்தியர் வேலைக்கு வரமாட்டார்…கேட்டால், கண்டி / நுவரேலியா என்று மற்ற ஊழியர்கள் பொய்சொல்வார்கள், எபயாவது இதைகண்டீர்ககளா? தண்டனை வழங்கியிருந்தீர்களா,?

2: நீங்கள் பாஸ் முறைமையை கொண்டுவந்தமையால் பல Veterinari doctor மாரை கோடீஸ்வரர்களாக்க விட்டமை உதாரணத்துக்கு, 25 பால்மாடுகளை வேண்டவேண்டும் என்றனிலையில் நெடுங்கேணி ( வவுனியா வடக்கு) எனக்கு

அவர் அனுமதி தரவில்லை; மாறாக , அவரே யாழில் இருந்து அடிமாடுகளை கொண்டுவந்து விற்றதோடு ( புதிய தோடுகளையும் அடித்தார். ( இவருக்கு அனுமதி எப்படி வந்தது)


மாடுகள் பால் கறக்கவில்லை! மாறாக மாஸ் மாசாக தின்றதும் சாணிபோட்டதுமே மிச்சம். சினைப்பிடிக்கவில்லை, இறப்புக்கள் அதிகம், உற்பத்தி இல்லை! அவரிடம் மாடுவேண்டுவதை நிறுத்தியதும் , அவர்

பண்ணை பக்கமே வருவதில்லை! நோயால், மாதம் இரண்டுமாடுகள் என்றவிகிதத்தில் செத்தொழிந்தன! ( வைதியர் எனக்கு மாடு விற்ற ஆதாரங்களை வசிகரன் ஐயாவுக்கு அனுப்பினேன். விசாரணைகள் நடந்தன,

பிழை நிரூபிக்கப்பட்டது.( என்னால்) ஆனால் குறித்த வைத்தியருக்கு பதவி உயர்வு கொடுத்து மாங்குளத்துக்கு மாறம் பெற்றார்!!!! ( மாறாக என்னை

வசிகரன் ஐயா மிரட்டினார். இதுக்கு யாரை தண்டிப்பது? திரு வசிகரன் அவர்களே முழுப்பொறுப்பும்!!! ( comments) பகுதியில் கேட்டால் தருகின்றேன்.

3 : வேலை நேரங்களில் , வைத்தியர்கள் , Private ராக வேலைசெய்வது, தனியார் கிளிக்க்குகளை அமைத்து சம்பாதிக்க அனுமதித்தது மற்றும், கோழிக்குஞ்சுகள், / தடுப்பு மருந்துகள் போன்ற இலவசங்களை விற்பது/

அரசிடம் இருந்து ஏழை விவசாயிகளுக்கு வழங்கப்படும் புல்லுவெட்டும் இயந்த்கிரம் போன்றவெற்றை தங்களுக்கு இசைவானவர்களுக்கு விற்பது…..???

எத்தனை எத்தை ஊழல்கள் ஐயாசாமி…..!!! மற்றும், சினை ஊசி போடுபவர் போதிய அனுபவமில்லாதவராகவும் , ஆனால் கூடிய பணங்களை பண்ணையாளர்களிடம் இருந்து திரும்ப திரும்ப அறவிடுவது( அதாவது ஒரேமாட்டுக்கு பலதடைவை வந்து சினை ஊசி போடுவது…பணம் கறப்பது…..

இதில் இவர் கவனம் செலுத்துவதே இல்லை…..இதனால், சின்ன சின்ன குடும்பங்கள் வாழ்வாதார. வறியகுடும்பங்கள் பண்ணையாளர்கக் கடும் பாதிப்பு அடைந்தனர்/ அடைகின்றனர்……( கண்டு கொள்ளாமை)

4: (இது மிகவும் கேவலமானது) கால்நடைக்கு பிரச்சனை என்றால், தொலைபேசியில் சொல்லமுடியாது. நேரில் சென்று முறைப்பாடு கொடுக்கவேண்டும். வைத்தியர் வந்து போகும் வாகனச்செலவுகள் கொடுக்கவேண்டும்,

அவர் எழுதித்தரும் மருந்தை வேண்டிவிட்டு, “மீண்டும் முறைப்பாடு, மீண்டும் வாகன செலவு. …

இதன் காரணமாக உயிரினங்களின் இழப்பு பொருளாதார தனிப்பட்ட நட்டங்கள்( பண்ணையாளர்களுக்கு சலிப்புத்தன்மை/ வெறுப்புணர்வு ஆக்கி பல்லாயிரம் கால்நடைகளை அழிக்க காரணமாக இருந்தீர்கள்!!

( பண்ணையாளர்களின் காசில்த்கான் நீங்கள் வருவீர்கள் என்றால், ( ஓசிவாகனம், ஓசி சாரதி எதர்க்கு? ) ???

5: தீவனங்களின் கட்டுப்பாடற்றவிலை, !!! உற்பத்திப்பொருட்களான , பால், முட்டை, இறைச்சிகளை, பண்ணையாளன் கடும் நட்டத்துக்கு விற்று பண்ணையாளர்களை தவிக்கவிட்டமை!


” ஒரு நிர்னய விலைகளை உண்டு பண்ண முயற்ச்சிக்காமை!
( பால் நிர்வனங்களுக்கு விலை போனீர்களா???


ஏன் கண்களுக்கு தெரியவே இல்லையா? பாலின் விலையும் தண்ணீரின் விலையிலும் எவ்வளவு வேறுபாடு? ” ஏறக்குறைய ஒரே விலைதான்!!

6: வத்தியர்களில் புகார் கொடுத்தால், கண்டு கொள்ளாமை!

7 : (அதர்க்காக எல்லா வைத்தியர்களையும் குற்றம் சொல்லவில்லை) நல்லவரைப்பற்றியும் கீழே எழுதியுள்ளேன்.


( வடக்கு கிழக்கில் கால்நடை கடும் அடிவாங்கிக்கொண்டே இருக்கிறது……. முக்கியமாக வடமாகாணம்! காரணம் பொறுப்பற்ற அதிகாரி) பதவியாசை….( ஐயா போங்கோ)

“அதாவது, எல்லாம் எழுத வெளிக்கிட்டால். இக்கட்டுரையை நிறைவு செய்யமுடியாது. எட்டு ஆண்டுகளாக ஒருவர் எப்படி ஒரே இடத்தில் இருக்கமுடியும்? முதலில் அனுரா அரசு இவரின் வாகனத்தை பறிக்கவேண்டும்.

பல பண்ணையாளர்களின் அழிவுக்கு வித்திட்ட ஒரு விருட்சம் இவர்” இவரை முதலில் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும். ” 56 வயதாகிவிட்டது தயவு செய்து போய்விடுங்கள் ஐயா! ஏழைகளை வாழவழி செய்யுங்கள் ஐயா!

குறிப்பு: இந்த எட்டு ஆண்டுகளில், கள்ளப்பாஸ் எடுத்து விற்ற / விக்கின்ற எந்த வைத்தியரை தண்டித்தீர்கள்? காரணம் உங்களுக்கும் பங்குண்டல்லவாய்யா? கண்டும் காணாமை ?


( வைத்தியர்களின் கண்ணுக்கும் பண்ணையாளர்கள் கண்ணுக்கு சுண்மாம்பும் ஏன் தடவுகின்றீர்கள் ஐயா?


ஆக மொத்தத்தில் ( கள்கர்களுக்கு வழிவிட்ட ஒருவராக இருக்கின்றீர்கள்!!
கோடிக்கணக்கில் கொட்டி உங்களால் மரண அடியை சந்தித்த ஒரு பண்ணையாளன்( நெடுங்கேணிப்பண்ணை+ Esu Dairy farm
தெ. சுரேஷ்
27/09/24


( இதை அதிகம் share செய்தால் பல பண்ணையாளர்களுக்கு வெளிச்சம் கிடைகமுகவரி
. ஜனாதிபதி செயலகம்
காலிமுகத் திடல்,
கொழும்பு 1,
முறைப்பாடு செய்யும் முகவரி

அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு

அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு

அமெரிக்கா அனுரா திடீர் பேச்சு இடம்பெற்றுள்ளது .இந்த சந்திப்பில் மிக முக்கிய விடயம் பேச பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையின் ஒன்பதாவது ஜெனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவி ஏற்றதை அடுத்து தற்பொழுது ,இந்தியா மிக பெரும் நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .

அதனை அடுத்து தற்பொழுது அமெரிக்கா ,மற்றும் இந்தியா , சீனாவுக்கு இடையில் கடும் போக்கு நிலவுகிறது .

அமெரிக்கா இலங்கை தூதர் ஊடக இலங்கை ஆளும் ஜனாதிபதிக்கு கடும் எச்சரிக்கை விடுக்க பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

எனினும் இரு நாட்டு உறவு நிலை தொடர்பாக இங்கே பேச பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும்

மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் ,இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படியும்,

மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும்படியும், இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்த வேண்டும்” என்று பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க, பொறுப்பேற்ற பிறகு, முதல் வெளிநாட்டுத் தலைவராக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரும் 4ம் திகதி இலங்கை செல்கிறார்.

இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் அவர் மேற்கொள்ளவிருக்கும் இந்தப் பயணம் அங்குள்ள தமிழர்களுக்கு பயனும், அதிகாரமும் அளிக்கும் வகையில் அமைய வேண்டும்.


இலங்கைப் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் ஆகும் நிலையில், அங்கு நிகழ்த்தப்பட்ட கொடிய போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் எவரும் இதுவரை தண்டிக்கப்படவில்லை.

இலங்கை அரசியலமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 13-ம் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தினாலும் கூட எந்தப் பயனும் ஏற்படவில்லை.

இத்தகைய சூழலில் இலங்கை செல்லும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் குறித்த

ஐநா மனித உரிமை ஆணையத்தின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும்.

13-ம் அரசியல் சட்டத் திருத்தத்தின்படி தமிழர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட அதிகாரப் பரவல் என்பது மிக மிக குறைவானது தான் என்றாலும் கூட, அதுவும் கூட 35 ஆண்டுகளாக சாத்தியமாகவில்லை.

கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கையை ஆட்சி செய்த கட்சிகள் அல்லாத புதிய கட்சியைச் சேர்ந்த ஒருவர் ஜனாதிபதியாகியுள்ள நிலையில், ஈழத்தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க வேண்டும், வடகிழக்கு மாநிலங்களில்

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை தடுத்து நிறுத்த வேண்டும், பிரிக்கப்பட்ட வடக்கும் மற்றும் கிழக்கு மாநிலங்களை

இணைந்து தேர்தல் நடத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளையும் நிறைவேற்றும்படி இலங்கை ஜனாதிபதியை அமைச்சர் ஜெய்சங்கர் கண்டிப்புடன் வலியுறுத்த வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இன்றைய நிலையில் தமிழக மீனவர்கள் 162 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரையும் விடுதலை செய்யும்படியும், மீனவர் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண கூட்டுப் பணிக்குழுவை அமைக்கும்படியும் இலங்கை

அதிபரை வலியுறுத்த வேண்டுமென்று வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரைக் கேட்டுக் கொள்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி
Posted in இலங்கை செய்திகள்

அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி

அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி

அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவி ,எனது மகன் அநுர குமார திசாநாயக்கவை 12 வயதிலேயே புத்த துறவியாக்குவதற்காக துறவறத்துக்கு அனுப்புமாறு சொல்லியதை நான் ஏன் ஏற்கவில்லை” என இலங்கையின் புதிய ஜனாதிபதியின் தாயார் சீலாவதி தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடமத்திய மாகாணத்தின் தலைநகரான அனுராதபுரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள விவசாய கிராமமான

தம்புத்தேகம எனும் பகுதியில் ஒரு சிறிய ஆஸ்பெட்டாஸ் கூரையினாலான வீட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தாயார் டி.எம். சீலாவதி (86) தனது மகள் ஸ்ரீயலதாவுடன் (62) வசித்து வருகிறார்.

இலங்கையின் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இளம் பருவம் பற்றி தாயார் சீலாவதி அளித்த பேட்டி ஒன்றில் கூறியது: “எனது மகனுக்கு

சிறுவயதில் காற்றில் பட்டங்களை பறக்க விட மிகவும் பிடிக்கும். தினமும் அருகிலுள்ள நீச்சல் குளத்திற்கு சென்று நீச்சலடிக்கவும் பிடிக்கும். அநுரவுக்கு எப்போதும் புத்தகங்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும்.

வீட்டின் எதிரே இருந்த மரத்தின் கிளையில் அமர்ந்து சப்தமாக படித்து கொண்டிருப்பது இன்னும் நினைவில் எனக்கு இருக்கிறது. சாப்பிடும் போதும் புத்தகமோ செய்தித்தாளோ வாசித்துக் கொண்டே சாப்பிடுவது அநுரவின்

வழக்கமாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது அநுரவுக்கு அரசியலில் ஆர்வம் ஏற்பட்டது. அப்போது அவருக்கு கொலை மிரட்டலும் வந்தது.

அவர் நெருங்கிய தொடர்பிலிருந்த அவரது சிறிய தந்தையார் (தந்தையின் சகோதரர்) கொலை செய்யப்பட்டார்.

அநுர தலைமறைவாக இருந்த காலத்தில் 1992-ம் ஆண்டு அவரது அப்பா இறந்துபோது, அவரது இறுதிச் சடங்கில் கூட கலந்து கொள்ள முடியவில்லை.

12 வயதிருக்கும்போது புத்த விகாரை ஒன்றின் தலைமை குரு ஒருவர், அநுரவை துறவறத்துக்கு அனுப்புமாறு கேட்டார்.

அதனை நான் மறுத்து விட்டேன். அநுர பிறந்து ஆறாம் மாதத்தில் அவரது ஜாதகத்தை ஒரு ஜோதிடரிடம் காட்டியபோது, ’உங்கள் மகன் ஒரு நாள் அரசாள்வான்’ என்று அதிர்ச்சியோடு சொன்னார்.

எனது மகன் சாதாரண குடும்பத்திலிருந்து இன்று அதிபராகி உள்ளார். அவர் பொய் சொல்பவரோ, மோசடி செய்பவரோ கிடையாது.

அனுராதபுரத்தில் உள்ள ஆலயங்களில் எனது மகனுக்காக பிரார்த்திக்க வேண்டும்” என தெரிவித்தார்.

சகோதரி ஸ்ரீயலதா கூறும்போது, “எனது தாயார் தினமும் இரவு தொலைக்காட்சியில் செய்திகளை பார்க்கிறார்.

செய்தியில் எனது சகோதரன் வரும்போதெல்லாம் என் மகனா என கேட்பார். மகனுடன் இருக்க அவர் விரும்புவார். என் சகோதரன் அநுரவும் இந்தப் பகுதிக்கு வரும்பொதெல்லாம் எங்களை பார்க்க வீட்டுக்கு வருவார்.

அவர் இந்த நாட்டின் இந்த பகுதிக்கு வரும்போதெல்லாம், எங்களை சந்திக்கிறார்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது, ​​அநுர காரில் தூங்கியதுதான் அதிகம். அவரது பதவியேற்பு ஆரவாரமின்றி நடைபெற்றது. அவர் ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்” என தெரிவித்துள்ளார்.

யார் இந்த திசாநாயக்க? – இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அநுராதபுரம் மாவட்டம் தம்புத்தேகம எனும் பகுதியில் 24.11.1968-ல் அநுர குமார திசாநாயக்க பிறந்தார்.

தனது பள்ளி படிப்பினை தம்புத்தேகவில் உள்ள கமினி மகா வித்யாலயா பள்ளியிலும், தம்புத்தேகம மத்திய கல்லூரி மற்றும் பேராதனை பல்கலைக்கழகத்தில் பயின்றார்.

1988-ம் வருடம் இடதுசாரிக் கட்சியான தேசிய மக்கள் சக்தி (ஜேவிபி)யில் இணைந்தார். 1995-ம் ஆண்டு அதன் மாணவர் அமைப்பின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டார்.

2000-ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் மூலம் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக ஆனார். 2004-ம் ஆண்டு அப்போதைய கூட்டணி ஆட்சியில் விவசாய அமைச்சராக அநுர குமார திசாநாயக்க பதவி வகித்தார்.

2014-ஆம் ஆண்டு ஜேவிபியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2019-ம் ஆண்டு நடைபெற்ற எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 418,553 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தை பிடித்தார்.

தொடர்ந்து இலங்கையில் ஊழலுக்கு எதிராக அநுர குமார திசாநாயக்க குரல் கொடுத்து வந்தார். மேலும், இலங்கையில் 2022-ம் ஆண்டு ஏற்பட்ட

பொருளாதார நெருக்கடியின்போது நடைபெற்ற போராட்டங்களில் முன்நின்று நடத்தியதில் அநுர குமார திசாநாயக்க முன்னணி வகித்ததும் குறிப்பிடத்தக்கது.

2024-ம் ஆண்டு நடைபெற்ற ஒன்பதாவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட அநுர குமார திசாநாயக்க 57,40,179 வாக்குகள் பெற்று ஜனாதிபதியானார். (நன்றி: தி ஹிந்து)

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி
Posted in இலங்கை செய்திகள்

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி

பிரான்ஸ் செல்ல அமைச்சின் நிதியை செலவு செய்த அதிகாரி ,பனை அபிவிருத்தி சபையின் முன்னாள் தலைவர், பிரான்ஸ் செல்வதற்காக அமைச்சுக்கு சொந்தமான நிதியிலிருந்து 19 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான தொகையை செலவிட்டமை தொடர்பில் உடனடி விசாரணை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அந்த சபையின் தலைவர் தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சின் செயலாளரிடம் நேற்று (01) கையளித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

முன்னாள் தலைவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பனை அபிவிருத்தி சபையின் தலைவராக நியமிக்கப்பட்டார், மேலும் அவர் நாட்டின் பனை உற்பத்திகளை

பிரபலப்படுத்துவது தொடர்பாக 2021 செப்டம்பர் 4 முதல் 27 ஆம் திகதி வரை பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் செய்தார்.

இந்த 23 நாள் பயணத்திற்காக, பனை அபிவிருத்திச் சபை செலவிட்ட தொகை 1,949,450 ரூபாய்.

இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் பனை தொடர்பான பொருட்களை பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் விற்பனை செய்வதை ஊக்குவித்தல், களஞ்சியசாலைகளை மேம்படுத்துதல், உள்ளுர் பனை

உற்பத்திகள் விற்பனை வலையமைப்பை முறையாகப் பேணுவதற்கு பிரதிநிதி ஒருவரை நியமித்தல் ஆகியனவே தலைவரின் பிரான்ஸ் விஜயத்தின் நோக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனினும், 2021ஆம் ஆண்டு மற்றும் ஏப்ரல் 2022ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளுக்கு பனைப் பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைத்த வருமானம் பூஜ்ஜியமே எனத் தெரியவந்துள்ளது.

இந்த நாட்டிலுள்ள பனை உற்பத்திகளை இத்தாலி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு பணிப்பாளர் சபையின் அனுமதியின்றி

விளம்பரப்படுத்துவதற்கு தலைவர் பிரதிநிதிகளை நியமித்துள்ள போதிலும், அந்த நாடுகளின் பனை உற்பத்திகளின் ஏற்றுமதி வருமானம் பூஜ்ஜியமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த முகவர்கள் மூலம் இலங்கையில் பனை உற்பத்திகளுக்கான ஆர்டர்கள் கிடைக்காததால், ஏற்றுமதி வருமானம் பூஜ்ஜியமாக குறைந்துள்ளது.

பிரான்ஸ் சுற்றுப்பயணத்திற்கு செலவழித்த தொகையை அவரிடமிருந்து திரும்ப பெற விசாரணை குழு பரிந்துரை செய்துள்ளது.

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்

IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம் ,சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.

அதன்படி, நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4-ஆம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர்.

அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர்.

இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாத்திரமே நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.

அதன் கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்த விவாதம் ஒக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெற உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி

மருத்துவ மனையில் அர்ச்சுனா அனுமதி க்கப்பட்டு சிகிச்சை பெற்று சென்றதாக தெரிவிக்க படுகிறது .

இன்று நீதிமன்றில் வழக்காடு மன்றத்திற்கு எடுக்க பட்டதாக தெரிவிக்க படுகிறது .அப்பொழுதே இவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்டதாக தெரிவிக்க படுகிறது .

தற்போது மருத்துவமனையில் இருந்து விடுவிக்க பட்டு மீளவும் சிறைச்சாலைக்கு அழைத்து செல்ல பட்டுள்ளதாக குறிப்பிட படுகிறது .

எதிர் வரும் பத்தாம் திகதி மீளவும் வழக்கு விசாரணைக்கு ,வருகிறது அப்பொழுது இவர் விடுவிக்க படலம் என எதிர் பார்க்க படுகிறது .

இன்று விடுதலையாவர் என எதிர் பார்க்க பட்ட பொழுதும் ,அது நிறைவேராதா நிலையில் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு

அர்ச்சுனா காலில் பந்து |வென்றிட அருமையான வாய்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பதிவாக காணப்படுகிறது .

கீழே உள்ளே காணொளியில் அழுத்தி பாருங்கள்

வீடியோ

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி
Posted in இலங்கை செய்திகள்

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி

விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி ,சி.வி விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணியின் மத்திய குழுக் கூட்டம் நேற்றைய தினம் (30) இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள சீ.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் இடம்பெற்றது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் இதன் போது ஆராயப்பட்டது.

இதன் போதே ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியோடோ,

இலங்கை தமிழரசுக் கட்சியோடோ இணைந்து போட்டியிடப் போவதில்லை எனவும், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டணி தனித்து போட்டியிடுவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.

விளையாடும் சாணக்கியன்
Posted in இலங்கை செய்திகள்

விளையாடும் சாணக்கியன்

விளையாடும் சாணக்கியன்

விளையாடும் சாணக்கியன் ,அபிவிருத்தியை காட்டி அமைச்சர்களாக மட்டக்களப்பில் இருவர் வந்தபோதிலும் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளின் போது அவர்களுடன் நின்று

தீர்வினைப்பெறுவதற்கான முயற்சிகளை நான் முன்னெடுத்தேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பத்தாவது பாராளுமன்றம் கூடுவதற்கான தேர்தல் நடைபெறுவதற்கான ஆரம்ப வேலைகளை தற்போது அனைத்து கட்சியினரும் முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய மத்திய செயற்குழு வவுனியாவிலே ஒன்றுகூடி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

அந்தத் தீர்மானங்களுக்கமைவாக எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலிலே இலங்கை தமிழரசுக் கட்சி வீட்டுச் சின்னத்திலே போட்டியிடுவதென்பது ஒரு தீர்மானமாக எடுக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து போட்டியிட வருமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றவர்களுக்கும் நாங்கள் அழைப்பு விடுத்திருக்கின்றோம்.

இலங்கை தமிழரசுக் கட்சி மட்டக்களப்பிலே போட்டியிடுவது பற்றிய தகவலை வெளியிட்ட பின்னர் பல துறைகளைச் சேர்ந்த பெருமளவான இளைஞர்கள்,

சுகாதாரம், கல்வித் துறையைச் சேர்ந்தவர்கள், வர்த்தகர்கள் எனப் பலர் எங்களுடன் இணைந்து போட்டியிடுவதற்கான விண்ணப்பங்களை தந்திருக்கின்றார்கள்.

இன்னும் பல விண்ணப்பங்கள் கிடைக்குமென எதிர்பார்க்கின்றோம். இந்த விண்ணப்பங்களை ஆராய்ந்து மட்டக்களப்பு மாவட்டத்திலே இம்முறை

இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய வீட்டுச் சின்னத்திலே சிறந்த வேட்பாளர் பட்டியலொன்றை முன்னிறுத்த வேண்டுமென்பதை மட்டக்களப்பு மாவட்டத்தினுடைய இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக நான் இவ்விடத்தில் கூறிக்கொள்கின்றேன்.

இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் பெருஞ் செய்தியொன்றை சொல்லியிருக்கின்றார்கள். அந்த செய்தி என்னவென்றால் ஊழலற்ற,

மோசடியில்லாத, நேர்மையானதொரு எதிர்காலத்தை நோக்கி செல்லக்கூடிய அரசியல்வாதிகள் தான் தேவை என்பதாகும்.

மக்களுடைய மனநிலை அவ்வாறிருக்கும்பொழுது நாங்கள் அதனை புரிந்துகொண்டு எங்களுடைய வேட்பாளர் பட்டியலும் பொதுவான

இலங்கையில் இருக்கின்ற அந்த நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும் ஒரு பட்டியலாக இருக்க வேண்டும்.

கிழக்கு மாகாணத்தில் உள்ள ஒரு சில கட்சிகள் அனைத்து மாவட்டங்களிலும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளனர். அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலத்தில் தமிழர்கள் ஒரு பிரதிநிதித்துவத்தினை இழந்திருந்தார்கள்.

கடந்த காலத்தில் மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்தவர்களே இந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இழப்பதற்கு காரணமாக அமைந்தார்கள். என்றார்.

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இரத்தினபுரி பகுதியிலிருந்து ரம்புகளை நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து ஒன்று அவிசாவளை கேகாலை பிரதான வீதியில் கொட்டப்பல தண்டவாளத்திற்கு அருகில் விபத்தில் சிக்கியத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

காயமடைந்த எட்டு பேரும் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .

இலங்கையில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வீதி விபத்துக்களினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு

சாராயக்கடையை மூடு மக்கள் ஆர்ப்பாட்டம்

மக்கள் ஆர்ப்பாட்டம் சாராய கடையை மூடு ,தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் திறக்கப்பட்ட புதிய மதுபான கடையை மூட கோரி மக்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர் .

மக்கள் முன்னெடுக்கும் இந்த பபோராட்டம் காரணமாக அந்த சாராய கடையை திறந்து வியாபாரம் நடத்தி வரும் ,வெள்ளை வெட்டி ஒருவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அனுரகுமார திசாநாயக்க ஆட்சியில் மிக பெரும் மக்கள் புரட்சி அதர்மத்திற்கு எதிராக இடம்பெற்று வருவதால் ,இந்த நடவடிக்கை தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைப்பு

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைப்பு

பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலை குறைப்பு ,இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருட்களின் விலையைக் குறைக்கவுள்ளது.

இதன்படி, இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம், ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 21 ரூபாவினால் குறைத்து 311 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.

அதேநேரம், ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 24 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 283 ரூபாவாகும்.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதன் புதிய விலை 319 ரூபாவாகும். அதேநேரம், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 19 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 ரக பெற்றோலின் விலை 377 ரூபாய் என்ற விலையிலேயே மாற்றமின்றி தொடரும் எனவும் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனத்தின் விலை திருத்தங்களுக்கு ஏற்ப லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் தமது எரிபொருட்களின் விலையை திருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ
Posted in இலங்கை செய்திகள்

வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ


வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ

வன்னி மைந்தன் துரோகி |எதிரிகளை ஓட விட்ட கலக்கல் வீடியோ வெள்ளை வேட்டிகளை ஓட விட்ட கலக்கல் காணொளி .

இலங்கை அரசியலில் என்ன தான் நடக்கிறது ,வாருங்கள் மக்களே கேட்டு பாருங்கள்

வீடியோ

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம்

நுவரெலியாவில் துப்பாக்கிச் சூடு ஒருவர் காயம் ,வலப்பனை, மந்தாரம் நுவர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எலமலை வனப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மந்தாரம் நுவர பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், திங்கட்கிழமை (30) காலை திடீர் சுற்றிவளைப்பை பொலிஸார் மேற்கொண்டனர்.

அதன்போது, சந்தேக நபர்கள் தப்பிச்செல்ல முயற்றுள்ளனர். அதனையடுதே, பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகம் செய்தனர். அதில் ஒருவர் காயமடைந்தார். தப்பிச்​சென்ற நால்வரையும் பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 40 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் இதில், தற்காலிகமாக பணி இடைநிறுத்தம்

செய்யப்பட்ட பொலிஸ் அதிகாரி ஒருவரும் உள்ளடங்குகின்றார் என பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் காயடைந்தவர் (41) வயதுடையவர் எனவும் இவர் ரிகில்கஸ்கட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக

சிகிச்சைக்காக கண்டி- போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மந்தாரம் நுவர பொலிஸார், நுவரெலியா தடயவியல் பொலிஸாரின் உதவியுடன் மேற்கொண்டு வருகின்றனர்.