யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல்
யோஷித ராஜபக்ச மற்றும் கரன்னகோடா மீது குற்றப்பத்திரிகைகள் தாக்கல் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகோடா ஆகியோர்
ஊழல் குற்றச்சாட்டுகள்
மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு கொழும்பு உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிகைகளின்படி, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகோடா, இலங்கை கடற்படையின் தளபதியாகப் பணியாற்றியபோது,
ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அரச கடற்படைப் பயிற்சிக் கல்லூரி
சட்டப்பூர்வமான அதிகாரமின்றி, ஐக்கிய இராச்சியத்தில் உள்ள அரச கடற்படைப் பயிற்சிக் கல்லூரியில் நடைபெற்ற அரச கடற்படை இளம்
அதிகாரிகள் பயிற்சி வகுப்பில் யோஷித ராஜபக்ச பங்கேற்பதற்கு வசதி செய்து கொடுத்ததன் மூலம் அரசிற்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.







