Tag: வேட்டை
குரங்குகள் வேட்டை சீனாவுக்கு விற்பனை
குரங்குகள் வேட்டை சீனாவுக்கு விற்பனை
குரங்குகள் வேட்டை சீனாவுக்கு விற்பனை ,கண்டியில் உள்ள தனது வளாகத்தில் குரங்குகள் குழு வன்முறையில் தடுத்து வைக்கப்பட்டதாக
வெளியான செய்தி
வெளியான செய்திகளைத் தொடர்ந்து, தும்பனை பிரதேச சபை விசாரணையைக் கோரியுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த சம்பவத்தின் காணொளி, பிரதேச சபைத் தலைவர் சமிந்த
தேதும்பிட்டியவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும், இது குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது.
குரங்குகள் கூண்டுகளில் அடைக்கப்பட்ட
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேதும்பிட்டிய, தனது அறிவுறுத்தலின் பேரில் குரங்குகள் கூண்டுகளில் அடைக்கப்பட்டதாக தகவல்கள்
தெரிவிப்பதால், முறையான விசாரணையைத் தொடங்க கலகெதர காவல்துறைக்குத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்.
குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்வதற்கும், தும்பனை பிரதேச சபையின் நற்பெயருக்கு மேலும் சேதம் ஏற்படுவதைத் தடுப்பதற்கும் விசாரணை அவசியம் என்று அவர் மேலும் கூறினார்.
செவந்தி வேட்டையில் காட்டுக்குள் பாய்ந்த பெண்
செவந்தி வேட்டையில் காட்டுக்குள் பாய்ந்த பெண்
செவந்தி வேட்டையில் காட்டுக்குள் பாய்ந்த பெண் ,திட்டமிட்ட குற்றத் தலைவர் கணேமுல்லே சஞ்சீவவின் கொலைக்குப் பின்னணியில் உள்ளதாகக் கருதப்படும் இஷார செவ்வந்தி, நாட்டின் அனைத்து பாதுகாப்புப் படையினராலும் தேடப்பட்டு வருகிறார்.
செவந்தி, தெபுவனவில் உள்ள ரன்னகல தோட்டத்தில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான வீட்டில் பதுங்கியிருப்பதாக தெபுவன பொலிஸ் தெரிவித்துள்ளது.
கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து, அந்த வீடு உடனடியாக சோதனை செய்யப்பட்டது. வீட்டினுள் இருந்த ஒரு பெண் வீட்டை விட்டு ஓடி காட்டுக்குள் ஓடியுள்ளார்.
அதே நேரத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது, அந்தப் பெண் ஒரு சிறு குழந்தையுடன் காட்டில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்டார்.
நடத்தப்பட்ட விசாரணையில், அந்தப் பெண் இஷாரா செவ்வந்தி அல்ல என்பது கண்டறியப்பட்டதாகவும், ஆனால் முதல் பார்வையில் அவர் இஷாரா செவ்வந்தியை போலவே இருப்பது தெளிவாகத் தெரிந்ததாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபருடன் வீட்டில் இருந்த போதைப்பொருள் கடத்தல்காரரின் அத்தை மற்றும் பெண்ணும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீட்டிலிருந்து கிட்டத்தட்ட 7 சிம் கார்டுகள் மற்றும் 4 மொபைல் போன்களையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். சம்பவத்தைத் தொடர்ந்து, இராணுவம், சிறப்பு அதிரடிப்படை, தெபுவானா, அகலவத்தை மற்றும் தொடங்கொட
காவல்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை (24) இரவு முதல் வீட்டிற்கு பலத்த பாதுகாப்பை வழங்கினர். செவ்வாய்க்கிழமை (25) மதுகம மூத்த காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் பிற அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை
ராமநாதன் 2மகன்களின் நிதி வேட்டை ,அண்ணன் (ரகுரமன் ஒரு தளத்திற்குள் வருவார். அந்த தளத்திற்குள் உள்ளவர்களுக்கு தனது தம்பியைப் பற்றி புகழ்பாடி மூளைச்சலவை செய்வார்.
அந்த தளத்தை நடத்துபவருடன் இணைந்து டீல் பேசி சிறிது காலம் பயணிப்பார்.
முட்டாள் மக்கள் ஒன்றின் பின் ஒன்றாக வந்து இவர்கள் வலையில் விழுவார்கள். சில அன்ரிமார்கள் (அர்ச்சுனாவின் விசிறிகள்) வந்து கண்ணீர் சிந்துவர்.
பென்சன் எடுக்கும் அங்கிள்மார் இந்த தளத்துக்குள் நுழைந்து அர்ச்சுனாவிற்கு பணம் கொடுக்க தயாராவார்கள்.
சிறிது காலம் சென்றதும் ரகுரமன் தன் தம்பி விசாரித்ததாகவும் தளத்தில் நடைபெறுவதை தான் சொன்னதாகவும் சொல்வார்.
இந்த மூளைசலவை செய்யப்பட்டு வசியப்பட்டிருக்கும் பைத்தியங்கள் அர்ச்சுனாவை தளத்திற்கு அழைத்துவருமாறு கெஞ்சிக் கதறுவார்கள்.
ஒருசில நாட்களில் அர்ச்சுனா அந்தத் தளத்திற்கு வருவான். வந்த அன்றே தன்னை பெருமையாக கதைக்கத் துவங்குவான் அத்துடன் பணம் பணம் என்று கதைக்கத் துவங்குவான்.
இவ்வளவு பணமிருந்தால் நான் இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என்று சொல்லத்துவங்குவான்.
ரகுராமன் மற்றும் தளத்தினை நடத்துபவர் கையாள்கள் தாங்கள் இவ்வளவு தருகிறோம் என்று முன்வருவார்கள்.
இதை உண்மையென நம்பும் முட்டாள்கள் உண்மையிலேயே குளிரில் பனியில் வேலை செய்து உழைத்த பணத்தை கொடுக்கத் துவங்கும்.
சிறிது காலம் இந்த திரள்நிதி சேகரிப்பு நடக்கும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் அர்ச்சு கௌசியுடன் சேரும் பணத்தில் கூத்தடிக்கும்.
கணக்கு கேட்க மக்கள் துவங்கியதும் உடன் அர்ச்சு துரோகி பட்டம் பலருக்கும் படபடவென வழங்கும். தூஷணங்களால் திட்டும்! பைட்ஸ் கொத்து போடுவேன் என்றும் மிரட்டும்.
அத்துடன் அண்ணனும் தம்பியும் அந்த தளத்திற்கு வருவதை நிறுத்துவார்கள். அண்ணன் புதிய தளம் தேடி கண்டுபிடித்ததும் மீண்டும் முதலில் இருந்து துவங்குவார்கள்!
இதுதான் ராமநாதன் மகன்களின் நூதன திரள்நிதி வேட்டை! இவ்வாறு சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவுகிறது .அதனை இங்கே பிரசுரிகிர்றோம் .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி
வேட்டைக்கு ஆரம்பம் சைக்கிள் கட்சி என அந்த கடைசி பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் பத்திரத்தில் ஒப்பம் இடுதல் ஊடாக அறிவித்துள்ளது .
தெரிவு செய்ய பட்ட பகுதிகள் யாவிலும் சைக்கிள் சின்னத்தில் ,சைக்கிள் கட்சி போட்டியிடவுள்ளது என்பது இந்த தேர்தல் வேட்பு மனு பதிவின் ஊடாக அறிவிக்க பட்டுள்ளது .
மக்கள் தாயக கொள்கை கோட்பாட்டை மறந்து பெட்டிக்கு போட்டியிட்ட இந்த கட்சிகள் ,தற்போது பாராளுமன்றம் செல்ல தயாராகி வருகின்றனர் .
சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல மறந்த கயேந்திரன் குமார் அணியினர் இந்த தேர்தலில் மக்கள் அதிக வாக்குகளை பெற்று ஆட்சியில் அமர்வர்களாக என்பதே கேள்வியோ குறியாக உள்ளது .
எது எப்படியோ தற்போது வேட்டைக்கு சைக்கிள் கட்சி தயாராகி விட்டதை இந்த தேர்தல் வேட்பு மனு தாக்கல் கெயோப்பம் இடுதலுடன் அறிவித்துள்ளது .
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

- விமான நிலையத்தில் சிக்கிய சீன நாட்டவர்

- பாங்காக் விமான நிலையத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிகாரி மற்றும் விமானி மோதல்

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக- கையெழுத்து வேட்டை !
இலங்கையை சர்வதேச நீதிமன்றில் நிறுத்த கோரி கையெழுத்து வேட்டை – பொங்கி எழுந்த தமிழர்கள் -பீதியில் சிங்கள தேசம்
சர்வதேச நீதிமன்றில் இலங்கை
ஐ.நா மனித உரிமைச்சபை தீர்மானம், சிறிலங்காவை அனைத்துலக குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தக் கோரும் வகையில் அமையவேண்டுமென்பதனை வலியுறுத்தி, ஜேர்மன்
அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இணையவழி கையெழுத்து இயக்கம் ஒன்று இடம்பெற்று வருகின்றது.
கூட்டு நாடுகள்
சிறிலங்கா தொடர்பில் தீர்மானத்தினை முன்னெடுக்கின்ற கூட்டு நாடுகளில் ஒன்றாக ஜேர்மனும் இருக்கின்றது. கனடா, பிரித்தானிய
ஆகிய நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் அந்நாடுகளில் இடம்பெற்று வருகின்றது.
இதனொரு அங்கமாக ஜேர்மனியிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் இணையவழியிலான கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டு www.gerechtigkeitfürtamilen.de எனும் இணையவழி மூலமாகமக்களால் ஒப்பமிடப்பட்டு வருகின்றன.
1) சிறிலங்காவை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்துக்கு அனுப்புவதற்கான பரிந்துரையோடு, ஐ.நா பாதுகாப்பு சபைக்கு அனுப்ப வேண்டும்.
2) மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், போர்குற்றங்கள், இனப்படுகொலை மீண்டும் நிகழ்வதைத் தடுக்கும் பொருட்டு, பாதிக்கப்பட்ட தமிழ்மக்களே தமிழ்த் தேசிய இனச்சிக்கலுக்கான நிரந்தர அரசியல் தீர்வினைக் காண அனுமதிக்கப்பட வேண்டும்.
சிங்கள அடக்குமுறை
சிறிலங்காவை சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து இந்தச் சிக்கல் பீடித்துள்ளது. இந்தச் சிக்கல் 1958, 1977, 1983 ஆண்டுகளில் தமிழர்களுக்கு எதிரான கொடிய கட்டமைக்கப்பட்ட
இனப்படுகொலைகளாக வெளிப்பட்டது. 1983-2009 போர்க் காலத்திலும் அதன் பின்விளைவாகவும் தமிழர்களுக்கு எதிரான
போர்க் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனவழிப்புக் குற்றம் ஆகியவற்றிலும் வெளிப்பட்டது.
பாதிப்புக்காளான மக்கள் பொதுவாக்கெடுப்பின் வழியாக அரசியல் தீர்வு காண்பதில் பங்கேற்க அதிகாரமளித்தல் வேண்டும். பொதுவாக்கெடுப்பு என்பதே பொருத்தமான ஜனநாயக
பொறிமுறையாகும். ஏனென்றால் இலங்கைத்தீவில் நீடித்த நிலையான தீர்வுக்குத் தமிழர்களின் பங்கேற்பு இன்றியமையாதது என்பதோடு, பொதுவாக்கெடுப்பு ஈடுசெய் நீதியின் ஓர் அம்சமாகவும் அமையும்.
போர் பாதிப்பு
3) போரினால் விதைவைகளான 90,000 தமிழ்ப் பெண்களின் நிலைகுறித்தும், காணாமலாக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்தும், சட்டத்துக்குபுறம்பாகச்
சிறைவைக்கப்பட்ட தமிழ்போர்க் கைதிகளின் நிலைமை குறித்தும், வெள்வேறு காரணிகளின் முன்னிறுத்தி மேற்கொள்ளப்படும் நில அபகரிப்பு குறித்தும், இராணுவமயமாக்கல் குறித்தும், ஐ.நா
மனிதவுரிமைகளுக்கான உயராணையர் அலுவலகத்திலிருந்து ஆறு மாதங்களுக்கு ஒரு தடவை ஐ.நா மனிதவுரிமைப் பேரவைக்கு தொடர்ந்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.
ஆகிய மூன்று நிலைப்பாடுகளை ஜேர்மன் உட்பட கூட்டு நாடுகளால் கொண்டு வரப்பட இருக்கின்ற புதிய தீர்மானத்தில் உள்ளடக்க வேண்டும் என கோரியுள்ள இந்த கையெழுத்து இயக்கம்,
தாயக தமிழ் அரசியல் தரப்பு, சிவில் சமூகமும், வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கம் ஆகியன எடுத்துள்ள ஒன்றுபட்ட நிலைப்பாட்டையும், சிறிலங்காவை
சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்துக்கு பாராப்படுத்துமாறு பரிந்துரை செய்துள்ள ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளரின் அறிக்கையினையும் சுட்டிக்காட்டியுள்ளது.














