Tag: சர்வதேச நாணய
சர்வதேச நாணய நிதியத்திடம் 700 மில்லியன் கடன் பிச்சை வாங்கும் அனுரா அரசு
சர்வதேச நாணய நிதியத்திடம் 700 மில்லியன் கடன் பிச்சை வாங்கும் அனுரா அரசு
சர்வதேச நாணய நிதியத்திடம்700 மில்லியன் கடன் பிச்சை வாங்கும் அனுரா அரசு ,இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியது; 700 மில்லியன் டாலர் நிதியுதவி எதிர்பார்க்கப்படுகிறது
விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழ், ஐந்தாவது மற்றும் ஆறாவது ஒருங்கிணைந்த ஆய்வுகளை நிறைவு செய்வதற்காக, சர்வதேச நாணய
நிதியமும் (IMF) இலங்கை அதிகாரிகளும் பொருளாதாரக் கொள்கைகள்
நிதியமும் (IMF) இலங்கை அதிகாரிகளும் பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் மட்ட ஒப்பந்தத்தை எட்டியுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்து, இலங்கை சுமார் 700 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியைப் பெறும்.
இலங்கை அதிகாரிகளால் செயல்படுத்தப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தங்கள் நாட்டின் மீட்சிக்கு உதவியுள்ளதாகவும்,
அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரித்து, உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி மற்றும் வருவாய் திரட்டல் ஆகிய இரண்டும் எதிர்பார்ப்புகளை மீறியுள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் குறிப்பிட்டது.
இருப்பினும், நாடு வெளிப்புற அபாயங்களுக்கு, குறிப்பாக மத்திய கிழக்கு மோதலின் தாக்கத்திற்கு, கணிசமாக ஆளாகியுள்ளதுடன், தித்வா புயலைத் தொடர்ந்து மீட்புப் பணிகளையும் தொடர்கிறது.
பேரியல் பொருளாதார நிலைத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், நாடு நீடித்த மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதி
செய்வதற்கும் சீர்திருத்தங்களை முன்னெடுப்பது இன்றியமையாதது என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியது.
தற்போதைய உலகளாவிய நிச்சயமற்ற நிலைக்கு மத்தியில் வெளிப்புற அதிர்ச்சிகளைச் சிறப்பாகத் தாங்குவதற்கு பொருளாதார மீள்திறனை வலுப்படுத்துவதும் அவசியமாகும்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை

- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்

- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை

- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்

- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை

- போலி கடவுச்சீட்டு மோசடி வழக்கில் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட அதிகாரி கைது

- வளைகுடாவில் அமெரிக்கா படைகள் தப்பி ஓட தயார் நிலையில்

சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சு
சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சு
சர்வதேச நாணய நிதியத்துடன் நடைபெற்ற பேச்சு ,இலங்கையின் உத்தியோகப்பூர்வ கடன்வழங்குநர் குழு மற்றும் சர்வதேச நாணய
நிதியத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாக நிதியமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஜூன் மாதம் உத்தியோகபூர்வ கடன் வழங்குநர் குழுவுடனும் சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியுடனும் இணக்கம் காணப்பட்ட விடயங்களும், உத்தியோகபூர்வ கடன் மறுசீரமைப்பு தொடர்பான
உடன்படிக்கையில் அடங்கியுள்ள விடயங்களும், சர்வதேச நாணய நிதிய நிபந்தனைகளுக்கு அமைவானது என்பதனை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புதிய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ள திட்டங்களுடன் தொடர்புடைய கடன் இலக்குகள், இணக்கப்பாடுகள் மற்றும் நிபந்தனைகள்
என்பன ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதுடன் அவற்றுக்கு அமைவாக, சர்வதேச இறையாண்மை முறிகளை மறுசீரமைப்பதற்கும் அனுமதி கிடைத்துள்ளதாக நிதியமைச்சின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை 8 ஐ நிறைவேற்றவில்லை
இலங்கை 8 ஐ நிறைவேற்றவில்லை
சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட வேலைத்திட்டங்களில் இலங்கையானது ஜூன் மாத இறுதியளவில் 8 வேலைத்திட்டங்களை நிறைவேற்றத் தவறியுள்ளதுடன் 33 வேலைத்திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
இலங்கை சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்பட்ட வேலைத்திட்டங்களில் எவ்வாறு வினைத்திறனுடன் செயல்படுகிறது என்பதைக் கண்காணிக்க இலங்கையின் “வெரிட்டே“ நிறுவனத்தின் மூலம் IMF Tracker’ என்ற நிகழ்நிலைத்தளம் ஒன்று செயற்பட்டு வருகின்றது.
இலங்கை 8 ஐ நிறைவேற்றவில்லை
2023 மே மாதத்தில் 4 ஆகவிருந்த தோல்வியடைந்த வேலைத்திட்டங்கள் மற்றும் முழுமைப்படுத்தப்படாத வேலைத்திட்டங்களின் எண்ணிக்கையானது 2023 ஜூன் மாதத்தில் 8 ஆக உயர்வடைந்துள்ளதாக வெரிட்டேவின் ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை மறுசீரமைப்பதற்காக அமைச்சரவை ஒப்புதலைப் பெறுதல், ஊழலுக்கு எதிரான புதிய சட்டத்தை இயற்றுதல், அரசுக்கு சொந்தமான 52 முக்கிய நிறுவனங்களின் 2022 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிடுதல் மற்றும் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைப் படிப்படியாகத் தளர்த்துவதற்கு திட்டமிடல் போன்றவையும் இவற்றில் உள்ளடங்கும்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
by நிருபர் காவலன் - மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
by நிருபர் காவலன் - பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
by நிருபர் காவலன் - இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
by நிருபர் காவலன் - சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
by நிருபர் காவலன்
இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா
இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்றையதினம் (31) இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
தனது விஜயத்தின் போது, இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையில் ஏற்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் மற்றும் எதிர்காலத்தில் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து பல சுற்று கலந்துரையாடல்களை ஒகமுரா நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதார மீட்சியைத் தடுக்கும் தடைகள் மற்றும் தாமதங்களைக் குறைப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதங்கள் கவனம் செலுத்தும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இன்று வருகிறார் கென்ஜி ஒகாமுரா
முதல் மறுஆய்வு பணிக்கு முன்னதாக, உலகளாவிய கடன் வழங்குபவருக்கும் தீவு நாட்டிற்கும் இடையிலான வழக்கமான ஆலோசனைகளின் ஒரு பகுதியாக, நாணய நிதிய பணியாளர்கள் குழு இலங்கைக்கு விஜயம் செய்த சில நாட்களுக்குப் பின்னர் ஒகாமுரா விஜயம் செய்யவுள்ளார்.
நிதியத்தின் ஆசிய மற்றும் பசிபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையில் இந்த தூதுக்குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Featured
சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் இன்று
சர்வதேச நாணய நிதியத்தின் தீர்மானம் இன்று
இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள கடன் வசதிக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவின் அனுமதி இன்று அறிவிக்கப்பட உள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு இலங்கை நேரப்படி இன்று இரவு கூடவுள்ளதுடன், இதற்கான அனுமதி தொடர்பில் இதன்போது இறுதித் தீர்மானம் எட்டப்படும் என நிதி இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
கூட்டத்தின் பின்னர் சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக்குழு விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் ஊடாக இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

















