பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு
Posted in இலங்கை செய்திகள்

பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு

பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு

பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு ,குருநாகலில் இருந்து நேற்று காலை மாவத்தகம மதிபொக்க நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பாம்பு இருந்தமையால் மிகவும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று காலை 8 மணியளவில் குருநாகல் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டுச் சென்றதுடன், சில நிமிடங்களின் பின்னர் பஸ்ஸின் பின் கதவுக்கு அருகில் உள்ள இருக்கைக்கு அடியில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.

நேற்று அலுவலக நாள் என்பதால், பஸ்ஸில் ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர்.

இதன்போது, இருக்கைக்கு அடியில் இருந்து பாம்பு வெளிப்பட்டதை பார்த்த பெண் ஒருவர், மிகவும் பயந்து, ‘பாம்பு..பாம்பு..’ என சத்தம் போட்டார்.

இதையடுத்து குறித்த பாம்பு பஸ்ஸின் முன்பகுதிக்கு ஊர்ந்து சென்றுள்ளது.

பாம்பு முன்னால் வருவதைக் கண்ட சாரதி, குருநாகல் அட்கந்த ஆலயத்திற்கு அருகில் பஸ்ஸை நிறுத்தினார்.

பஸ்சை நிறுத்தியதால் பயந்துபோன பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கினர்.

சிறிது நேரத்தின் பின் பஸ்ஸில் இருந்த பாம்பை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனினும் பஸ் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தாலும் அதில் பயணிக்க பயந்த சிலர் வேறு பஸ்ஸில் செல்ல முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி

வெள்ளை வேட்டிகள் வாறாங்க மக்களை தேடி ,மக்களை நினைத்து பார்க்க மறக்கும் இவர்கள் ,மக்களாகிய உங்களினால் வாக்குகள் போட்டு பாராளுமன்றுக்கு அனுப்பி என்ன பலன் காணப்பட போகிறது என்ற விடயம் கேள்வியாக உள்ளது .

சாவகச்சேரி மருத்துவமனைக்கு செல்ல மறுத்து, மக்கள் குரல்களை ,அவர்கள் குமுறல்களை கேட்க மறந்த ,பார்க்க மறந்த சைக்கிள் கட்சி, இந்த தேர்தலில் பாராளுமன்ற

உறுப்பினராக வருகின்ற பொழுது ,இதன் ஊடாக இவர்கள் என்ன மீள மக்களுக்கு செய்ய போகின்றார்கள் …?

அழுகின்ற பொழுது மக்கள் கண்ணீரை துடைக்க மறந்த சைக்கிள் கட்சியான செல்வராசா கயேந்திரன் ,கயேந்திரன் பொன்னம்பலம் போன்றவர்கள் தமிழருக்கு என்ன விடியலை பெற்று தர போகின்றார்கள் …??

ஆகவே தற்போது என் இனமே ,என் சனமே விழித்து கொள் ,இவ்வாறான கூட்டத்தை ஓட விரட்டியடிக்க வேண்டும் .

மக்களை ஏமாற்றி பிழைக்கின்ற இவ்வாறான வெள்ளை வேட்டிகளுக்கு மக்கள் இந்த பாரளுமன்ற தேர்தலில் தகுந்த சாட்டையடி கொடுக்க வேண்டும் என்பதே மக்கள் குமுறலாக உள்ளது .

ஆகவே ஒன்றாகி இந்த வெள்ளை வேட்டிகளை ஓட ஓட விரட்டியடிப்போம் மக்களே .எழுந்து வாருங்கள் இது இந்த வெள்ளை வெற்றிகளுக்கு தண்டனை கொடுக்கும் உகந்த காலம் .

கூட்டுமாறு கொண்டு கூட்டி அடிக்க வேண்டும் என் ஆத்திரத்தில் உள்ள மக்கள் கருத்துக்கள் பறந்து வருகிறது .

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா

அர்ச்சுனா அனுராவுக்கு ஆதரவு அளிப்பாரா என்ற கேள்வியே தற்போது தமிழ் மக்கள் மத்தியில் பரவலாக எழுந்துள்ளது .

சிறையில் நீதிமன்ற காவலில் அர்ச்சுனா இராமநாதன் சிறை வைக்க பட்டுள்ள நிலையில் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் மக்கள் முன்பாக தோன்ற தவறினால்

அவரை நேசிக்கும் அல்லது அவரை பின்தொடரும் மக்கள் அனுராவுக்கு ஆதரவு அளிப்பார் என்ற சந்தேகம் எழுப்ப பட்டுள்ளது .

அர்ச்சுனா இராமநாதன் மற்றும் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு இடையில் நல்லுறவை மேற்கொண்டு ,அதன் ஊடாக தமிழ் மக்கள் வாக்குகளை பெற்று கொள்ள வேண்டிய நிலையில் களம் காணப்படுகிறது .

அதனை கருத்தில் கொண்டு அனுரா குமரா உறுப்பினர்கள் செயலாற்ற வேண்டும் ,என்பதே இனங்களுக்கு இடையில் நல்லுறவை ஏற்படுத்த வேண்டிய நிலையில் ,

களம் கசிந்துள்ள நிலையில் அதனை கருத்தில் எடுத்து அனுரா குமரா திசாநாயக்க பயணிக்க வேண்டும் என்பதே நமது எதிர் பார்ப்பாக உள்ளது .

ஆகவே பெரும்பான்மை பலத்த நிரூபித்தால் மட்டுமே ,அனுரா குமாரா திஸாநாயக்கா பாராளுமன்றில் வெற்றியை படைக்க வேண்டும் என்றால் ,மக்கள் அவரை வெல்ல வைக்க பட வேண்டும் என்பதே கள நிலவரமாக உள்ளது .

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல் 

அர்ச்சுனாவை விடுதலை செய் |அனுரா கட்சி மக்கள் மோதல்  ,கடந்த தினம் வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் அனுரகுமார திஸாநாயக்காவின் தேசிய மக்கள் சக்தியின் கம்பாக மாவட்ட கட்சி பிரமுகரை சுசில் பெர்னான்டோ எம்மோடு கலந்து கொண்டு சிறப்பித்தார் .

இந்த நீண்ட விவாதத்தில் பல கேள்விகளுக்கு சிறந்த பதில் வழங்கினார் .

அர்ச்சுனா இராமநாதன் விடுதலை ,மற்றும் வடக்கு மாகாண வைத்தியசாலைகளில் இடம்பெற்ற சுகாதார மோசடி ,லஞ்ச ஊழல் ,மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான விடயம் விசாரிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .

முள்ளி வாய்களில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மன்னிப்பு கூறுவீர்களா என்ற பல்வேறுபட்ட கேள்விகளுக்கு அவர் பதில் வழங்கினார் .

இந்த நிகழ்வில் நிஷா , சுசில் பெர்னான்டோ மற்றும் நால்வர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் .

அதன் முழுமையான விபரம் காணொளியில் ,மக்களே கண்டிப்பாக பாருங்கள் ,சூடு பறக்கும் விவாதம் .

வீடியோ

தேர்தலிலிருந்து பல எம்.பிக்கள் விலகல்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலிலிருந்து பல எம்.பிக்கள் விலகல்

தேர்தலிலிருந்து பல எம்.பிக்கள் விலகல்

தேர்தலிலிருந்து பல எம்.பிக்கள் விலகல் ,தற்போது கலைக்கப்பட்டுள்ள ஒன்பதாவது பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முதுமை, உடல்நலக்குறைவு,

அவர்களுக்கு சாதகமற்ற அரசியல் நிலைகள் போன்ற காரணங்களால் அரசியலில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பாரம்பரியக் கட்சிகளைப் பொறுத்த வரையில் அரசியல் இயக்கங்கள் அடியோடு மாறி வருவதாகத் தெரிகிறது. சுதந்திரத்திற்குப் பிந்தைய

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக, பாரம்பரிய பிரதான போக்குடைய கட்சிகளுக்கு அப்பாற்பட்ட ஒரு

சக்தியான தேசிய மக்கள் சக்தி, ஜனாதிபதித் தேர்தலில் ஈட்டிய வெற்றி நவம்பர் 14 அன்று பொதுத் தேர்தலில் பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான களத்தையும் அமைத்துள்ளது.

தற்போதைய பாராளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக தம்மிடம்

இருந்து வெளியேறிய எம்.பி.க்களுக்கு வேட்புமனு வழங்குவதில்லை எனத் தீர்மானித்துள்ளது. இந்நிலை குறித்த எம்.பி.க்களை வேறு வேறு கூட்டணிகளில் இருந்து சீட்டு பெற தூண்டியுள்ளது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது மூத்த சகோதரர் சமல் ராஜபக்ஷ, காமினி லொக்குகே மற்றும் அலி சப்ரி உள்ளிட்ட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் இம்முறை போட்டியிட மாட்டார்கள்.

திரு.சமல் ராஜபக்ச தான் போட்டியிடப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தினார்.

எனினும் அவரது மகன் சஷீந்திர ராஜபக்ச மொனராகலை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.

ஒரு முறை பதவி வகிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் பாராளுமன்றத்தில் நுழைந்ததாக திரு. சப்ரி கூறினார்.

“இப்போது நான் எனது சட்டத் தொழிலுக்குத் திரும்பியுள்ளேன்,” என்று அவர் கூறினார்.

கடந்த முறை SLPP பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட திரு வாசுதேவ நாணயக்கார உடல்நலக்குறைவு காரணமாக இம்முறை போட்டியிடமாட்டார்.

திரு.பந்துல குணவர்தனவும் இம்முறை போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் போட்டியிடுவதா இல்லையா என்பது நிச்சயமற்ற நிலையில் உள்ளதாக தெரிகிறது.

இதற்கிடையில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) ஐ பிரதிநிதித்துவப்படுத்தும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இம்முறை போட்டியிடுவதாக தெரியவில்லை.

மாறாக அவரது மகள் சமிந்திரனி கிரியெல்ல இம்முறை கண்டி மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

பேராசிரியர் திஸ்ஸ விதாரண மற்றும் ஏ.எச்.எம்.பௌசி ஆகிய இரு அரசியல்வாதிகள் பாராளுமன்றப் போட்டியிலிருந்து விலகி இருக்க தீர்மானித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

307 பொலிஸார் இடமாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

307 பொலிஸார் இடமாற்றம்

307 பொலிஸார் இடமாற்றம்

307 பொலிஸார் இடமாற்றம் ,ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவில்( Presidential Security Division) இருந்து நாடு முழுவதும் உள்ள பல்வேறு பொலிஸ் பிரிவுகளுக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் 307 பொலிஸார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பொதுச் சேவை ஆணைக்குழுவின் நடைமுறை விதிகளின் 258(1) மற்றும் (II) இன் படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஒப்புதலின் கீழ் இந்த இடமாற்றங்கள் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்களில் 11 தலைமை ஆய்வாளர்கள், 5 ஆய்வாளர்கள், 38 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 12 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர்.

இதேவேளை, ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் தற்காலிகமாக கடமையாற்றிய 24 பொலிஸாரின் இடமாற்ற உத்தரவு இரத்து செய்யப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி

2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி

2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபருக்கு பதிலளித்தார் ஜனாதிபதி ,2019 ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் நேரடியாகப் பேசிய போது, அதிகாரிகள் நீதி வழங்கத் தவறியமை குறித்து தனது விரக்தியை வெளிப்படுத்தினார்.

நேற்று நீர்கொழும்பு கடுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு ஜனாதிபதி விஜயம் செய்திருந்த போது அவரிடம் கேள்விகளை முன்வைக்கும் சந்தர்ப்பத்தின் போதே குறித்த நபர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டின் நீதித்துறை சுதந்திரமாக இல்லை. இது அரசியலின் கீழ் உள்ளது. இந்நாட்டின் அரசியலால் நான் வெறுப்படைந்துள்ளேன். இப்போது இவ்விடத்தில் எங்களை மிருகங்களைப் பரிசோதிப்பது போல் சோதிக்கின்றனர்.

அனைவருக்கும் தெரியும் இங்கு யார் வருகின்றார் என. ஆனால் உங்களால் எனது பிள்ளையைத் தர முடியுமா? என் பெற்றோரைத் தர முடியுமா?

அன்று நடந்த சம்பவத்தை (ஈஸ்டர் தாக்குதல்) முழுமையாக தடுத்திருக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது. அது குறித்து நீங்களும் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.

எனவே இதுபோல் அல்லாத ஒரு முறைமையை உருவாக்கித் தாருங்கள் என்பதைத் தான் நான் கேட்கிறேன் என குறித்த நபர் ஜனாதிபதியிடம் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த ஜனாதிபதி திஸாநாயக்க, உயர் அரசியல்வாதிகளின் விசேட பாதுகாப்புப் பிரிவினருக்கு மட்டுமே தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளதாகத் தெளிவுபடுத்தினார்.

அப்போது பாராளுமன்றத்தில் இருந்த தனக்கும் தனது சக கட்சி உறுப்பினர்களுக்கும் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிறப்புப் பாதுகாப்பைப் பெறவில்லை என்பதை அவர் நினைவுபடுத்தினார்.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான வழிகளை கோடிட்டுக் காட்டிய ஜனாதிபதி, முதலில் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை விசாரணைகள் மூலம் கண்டறிந்து அதற்கு காரணமானவர்களை தண்டிக்க வேண்டும் என்றார்.

எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் நிகழாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தல் இரண்டாவதாகும்.

இறுதியாக, அரசியலால் இந்த அமைப்பு தோல்வியடைந்தால், தோல்வியடைந்த அமைப்பை அரசியலின் மூலம் மறுசீரமைக்க வேண்டும், ஏனெனில் இந்த அமைப்புகள் முறைமைகள் (சிஸ்டம்) அரசியல் இன்றி திருத்தப்பட்ட நடைமுறைப்படுத்தப்பட இயலாதது.

ஏனென்றால் இவை எல்லாம் அரசியலை மையமாகக் கொண்டே இயங்குகின்றன என ஜனாதிபதி பதிலளித்தார்.

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல்
Posted in இலங்கை செய்திகள்

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல்

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல்

ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக

வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர்

தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ‘அத தெரண’

வினவியதற்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை விரைவில் தீர்மானிக்கப்பட்டு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை ஸ்தாபிப்பதற்கு தேவையான அதிகாரிகளின்

எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றில்
Posted in இலங்கை செய்திகள்

நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றில்

நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றில்

நிலந்த ஜயவர்தன உயர் நீதிமன்றில் ,உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து ஏற்கனவே தகவல் கிடைத்தும் அதனை தடுக்கத் தவறியமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள்

தொடர்பிலான விசாரணைகளுக்காக புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன, தற்போது உயர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் நிலந்த ஜயவர்தன அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளார் என தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், 75 மில்லியன் ரூபா நட்டஈட்டை செலுத்துமாறு முன்னதாக உத்தரவிட்டிருந்தது.

ஆனால் அவர் நட்டஈட்டை முழுமையாகச் செலுத்தத் தவறியதால், நீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு எதிராக சட்டமா அதிபர் நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டைத் தாக்கல் செய்தார்.

அது தொடர்பான சமர்ப்பணங்களை முன்வைப்பதற்காக இன்று (07) நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உயர் நீதிமன்றம் முன்னர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் நிலந்த ஜயவர்தன நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை
Posted in இலங்கை செய்திகள்

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை

அனுரா அர்ச்சுனா மோதல் நேரலை .ஜேவி கட்சியின் முக்கிய உறுபினர்கள் 4 பேர் எமது வன்னி மைந்தன் டிக் டாக் live இல் இலங்கை நேரம் இரவு 9.00 மணிமுதல் பேச வாரங்க மக்களே உங்கள் கருத்துக்களை கேட்க வாருங்கள் .

வீடியோ

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம் ,அடித்த மெகா கொள்ளையில் வெள்ளை வேட்டிகள் ஒன்றாக கூடி பிரியாணி கொண்டாட்டம் .

தாயகம் ,தேசியம் ,சுயநிர்ணயம் என பேசி மக்களை ஏமாற்றி ,பிச்சைகாரர்களாக்கி ,அடித்த கொள்ளையில் ஆடம்பர உணவு ,பங்களா ,வாகனம் என தேர் ஓட்டும் நம்ம வெள்ளை வேட்டி கள்ளர் கூட்டம் இது படத்தில் காண்க .,

ஒருவேளை உணவுக்கு வழியில்லாமல் எத்தனை குடும்பங்கள் பசியோடு உறக்கத்திற்கு போகிறார்கள் .

அந்த மக்கள் பட்டினி பஞ்சம் யாவும் மறந்து ,இப்பொழுது ஒன்றாக கூடி பிரியாணி சாப்பாடு சாப்பிட்டு ஏப்பம் விட்டு ,எழுந்து நடமாடும் வயோதிப மடங்கள் .

வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்
வெள்ளை வேட்டிகள் பிரியாணி கொண்டாட்டம்

ஆண்டு ஆண்டுகளாக எமது மக்களும் வாக்களித்து வாசல் படி காய்ந்து கிடக்கிறது .

ஆனால் வாக்கு பெற்று பாராளுமன்றம் போனவர்களோ ஐந்து வருடத்தில் அம்பானியாக மாறிய காலத்தை பாருங்கோ .

உப்புடி மூக்கு முட்ட சாப்பிட்ட இந்த பிரியாணியில் கொஞ்சம் அந்த அப்பாவி மக்களுக்கு குடித்திருந்தா அந்த மக்கள் சந்தோசம் பட்டு இருப்பினம் .

ஆனால் நீங்க என்ன ஐயா செய்யிறீங்கள் .

ஆகா மொத்தம் இந்த வெள்ளை வேட்டி பட்டாசு வெடிகள், வேட்டியை கழட்டி வேலியில் காய விடுங்க மக்களே .

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்

ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில்


ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு தலைவர் ரணில் ,ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னபிரிய தெரிவித்துள்ளார்.

தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகள் பலவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றன.

எனினும், பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி கலந்துரையாடிய போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின
Posted in இலங்கை செய்திகள்

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

122 சுயேட்சை குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின ,2024ஆம் ஆண்டுக்கான பாராளுமன்றத் தேர்தலுக்காக 122 சுயேட்சைக் குழுக்கள் இதுவரை கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நேற்று முன்தினம் மாத்திரம் 36 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலேயே அதிகளவான சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

குறித்த இரண்டு மாவட்டங்களிலும், 15 சுயேட்சைக்குழுக்கள் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

வரியை செலுத்தாமல் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப்
Posted in இலங்கை செய்திகள்

வரியை செலுத்தாமல் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப்

வரியை செலுத்தாமல் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப்

வரியை செலுத்தாமல் அரசாங்கத்திற்கு நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப் ,சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாமல் நஷ்டத்தை ஏற்படுத்திய ஜீப் வண்டியொன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த ஜீப் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்படி ஆணைக்குழுவின் இரகசிய மற்றும் புலனாய்வுப் பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதன்படி கடந்த 18ஆம் திகதிக்கு முன்னர் குறித்த ஜீப் வண்டியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் ஒப்படைக்குமாறு தொழிலதிபருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் அந்த உத்தரவுகளை மீறியதன் காரணமாக பதுளை நெலும்கம பிரதேசத்தில் உள்ள தொழிலதிபருக்கு எதிராக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்த நிலையிலேயே, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் இரகசிய புலனாய்வுப் பிரிவினர் ஜீப்பை கைப்பற்றியுள்ளனர்.

11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை
Posted in இலங்கை செய்திகள்

11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை

11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை

11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை ,மூன்று முதல் பதினைந்து வயது வரையான பதினொரு பிள்ளைகளின் தந்தை (41 வயது) மனைவியின் சகோதரனால் அடித்துக் கொல்லப்பட்டதாக றக்வான பொலிஸார் தெரிவித்தனர்.

றக்வான ரங்வலதென்ன தோட்டத்தில் வசித்து வந்த செல்லப்பன் பாலகிருஷ்ணன் என்ற தோட்ட தொழிலாளியே கடந்த 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவருக்கு இரண்டு மனைவிகளும், ஒரு மனைவிக்கு ஏழு பிள்ளைகளும், மற்றைய மனைவிக்கு நான்கு பிள்ளைகளும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவர் குடிபோதையில் தகராறு செய்த போது, ​​இறந்தவர் மனைவியின் சகோதரர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.

தாக்குதலுக்கு இலக்கானவர் சுமார் ஒன்றரை மணிநேரம் இரத்தம் கசிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் உள்ளூர்வாசிகள் பலர் காயமடைந்த நபரை றக்வான மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து கஹவத்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4ஆம் திகதியன்று அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம்
Posted in இலங்கை செய்திகள்

மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம்

மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம்

மஹிந்தவின் வீட்டுக்கு வழங்கிய மின்சார கம்பிகள் அகற்றம் ,முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயன்படுத்திய வீரகெட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய மின் கம்பிகள் மின்சார சபை ஊழியர்களினால் அகற்றப்பட்டன.

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான அரசாங்கத்தின் கொள்கையின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட வசதிகளை அகற்றும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.

அதன் அடிப்படையில், வீரகட்டிய கார்ல்டன் தோட்டத்திற்கு மின்சாரம் வழங்கிய இரண்டு மின் கம்பிகள் அகற்றப்பட்டதாக இலங்கை மின்சார சபையின் வலஸ்முல்ல பிராந்திய அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கார்ல்டன் தோட்டத்தில் 03 மும்முனை மின்கம்பிகள் போடப்பட்டுள்ளதாகவும் அவற்றில் இரண்டு அகற்றப்படும் எனவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்
Posted in இலங்கை செய்திகள்

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர்

விவசாயத்தை விட்டுச்சென்ற ஒரு இலட்சம் பேர் ,இலங்கையில் விவசாயத் துறையில் ஒரு வருடத்திற்குள் 100,000 இற்கும் அதிகமானோர் தமது

வேலைகளை விட்டுச் சென்றுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அறிக்கை ஒன்றை வௌியிட்டு மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இதனை உறுதிப்படுத்தி உள்ளது.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த நாட்டில் விவசாய துறையில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளால் விவசாய வேலைகளை விட்டு மக்கள் வெளியேறுவதுடன் நாட்டிற்கு தேவையான விவசாய பொருட்களின் உற்பத்தியும் குறைவடைந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

இந்நிலை நீடித்தால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியா சாதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள்
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள்

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள் இன்றாகும் .

இந்தியா சதியில் பலியான குமரப்பா புலேந்திரன் நினைவு நாள் ,இதே நாளில் 1987 ,ஆண்டு 10,-05 ஆம் திகதி கடலில் பயணித்து கொண்டிருந்த குமரப்பா புலேந்திரன் உள்ளிட்ட 12 வேங்கைகளை இந்தியா சதியில் வீரமரணம் எய்தினர் .

இந்தியா சிப்பாய்களிடம் சிறையில் அடைத்து வதைபட்டு விடுதலை போராட்ட வரலாற்றை காட்டி கொடுத்துவிட கூடாது என்பதற்காக ,சயனைட் உட்க்கொண்டு அந்த வீரர்கள் சாவடைந்தனர் .

இந்திய தமிழீழ விடுதலைக்கு பாரிய துரோக செயலை புரிந்ததை ,இறுதி முள்ளிவாய்க்கால் நாள் வரை மக்கள் அறிந்திருப்பார் .

இந்தியா தமிழ் மக்களுக்கு எவ்வித உரிமையும் பெற்றுத்தராது என்பதற்கு ,இந்த வீரமிகு தளபதிகள் வீரமரணம் எடுத்துரைத்தது .

இந்திய சதியில் பலியான வீரர்கள் நினைவு நாளை உலக தமிழினம் இன்றும் நினைவு கூர்ந்து வருகிறது .

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா
Posted in இலங்கை செய்திகள்

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா

காப்பாற்றுவாரா அர்ச்சுனா சிக்கிய அனுரா குமார திஸாநாயக்காவின் ஆட்கை பீடம் என்பதே இன்றைய அரசியல் நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகிறது .

எதிர்வரும் பாரளுமன்ற தேர்தலில் அறுதி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய நிலையில் ,அனுரகுமார திசாநாயக்க காணப்படுகின்றார் .

ஆகவே தமிழ் ,முஸ்லீம் ,சிங்கள வாக்குகள் இவருக்கு இந்த பாரளுமன்ற தேர்தலில் முக்கியமான ஒன்றாக காணப்படுகிறது .

ஆனால் அனுரகுமார திஸாநாயக்கவின் வடக்கு மாகாண உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் பலத்த முரண்பாடுகள் காணப்படுகின்றன .

மக்கள் ஆதரவு அற்றவர்களாக தற்பொழுது அனுரா குமார திசாநாயக்க வடக்கு மாகாண உறுப்பினர்கள் காணப்படுகின்றனர் .

நாம் பேசியதன் அடிப்படையில் மக்கள் மனங்களை தொட்டு முக்ரந்து அவர்களது உளவியலை அறிந்ததன் அடிப்படையில் ,அனுரகுமார திஸாநாயக்காவின் வடக்கு மாகாண உறுப்பினர்களை தமிழ் மக்கள் ஏற்று கொள்ளாத நிலை காணப்படுகிறது .

இவர்கள் சிலர் மாற்று குழுவில் இருந்து பதவிகளுக்காக ஒட்டியுள்ளனர் எனவும் ,மகிந்தவின் ஆட்கள் எனவும் மக்கள் மன்றம் பேசி கொள்கிறது .

இவ்வாறன குழப்பான நிலை மக்கள் மத்தியில் காணப்படுகின்ற பொழுது ,எவ்விதம் வடக்கு தமிழ் மக்கள் மத்தியில் அனுரா வெல்வார் என்கின்ற நிலை .காணப்படுகிறது .

இவர்கள் வடக்கு மாகாணத்தில் வெல்ல வேண்டுமாக இருந்தால் ஒரே தீர்வு அர்ச்சுனா இராமநாதனை ஆதரித்து அவரை அனுசரித்து செல்வதுடன் .

அதன் ஊடக அவர் பெரும் ஆசனங்களை தனது கட்சிக்கு மாற்றீடு செய்து அனுரா செல்ல முடியும் ,ஆனால் அதனை அவர் மேற்கோளாவரா என்பதே இப்போதுள்ள கேள்வியாகும் .

கண்மூடித்தனமாக அர்ச்சுனா இராமநாதனை பழிவாங்கும் வங்குரோத்து அரசியல் நிலையையோ அனுரா குமார திசாநாயக்க கடை பிடித்தால் ,இப்போதே அடித்து சொல்கிறோம் அனுரகுமார திசாநாயக்க தமிழர் பகுதியில் வெறுக்க படும் ஒருவராக காணப்படுவார் .

இவ்வாறான மிக ஆபத்தான அரசியல் பயணத்தை புரிந்து கொண்டு அனுரகுமார திசாநாயக்க செயல்பட்டால் மட்டுமே, மிக பெரும் வெற்றியை தனதாக்கி கொள்ள முடியும் ,அவ்விதம் இல்லாவிட்டால் அனுரகுமார திசாநாயக்க காணாமல் போகும் நிலை ஏற்படும் .

ஆகவே அர்ச்சுனா இராமநாதன் தேர்தல் கால பகுதியில் திறந்து விடவேண்டும் ,அது சிறையில் அடைத்தால் மக்கள் எதிர்ப்பு அனுராவுக்கு எதிராக மாறி ,அந்த வாக்குகள் எதிராணிக்கோ அல்லது மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் நிலைக்கு செல்ல கூடிய அபாயம் உள்ளது .

மரண பொறிக்குள் அனுரா குமார திசை நாயக்க ,சிக்கியுள்ளார் வெல்ல வேண்டுமா தோற்க வேண்டுமா என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும் ,இப்பொழுது அவரது காலில் பந்து .

  • வன்னி மைந்தன் –
வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது

வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது

வெள்ளை வேட்டிகள் அலறல் ஊழல் வெளியானது ,தமது பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி ஆடம்பர வாகனங்களை வெளி நாட்டில் இருந்து இறக்கி ,அதற்கு வரி செலுத்தாது கோடி பணம் சம்பாதித்துள்ள சம்பவம் வெளியாகியுள்ளது .

இவ்விதம் தமிழ் தேசிய கூட்டமைப்பே சேர்ந்த பல அரசியல் தலைகள் புரிந்த வாகன வரி ஏய்ப்பு மோசடி அம்பலமாகியுள்ளது .

ஒருவர் மூன்று கோடிக்கு மேல் லஞ்ச ஊழல் மோசடி செய்துள்ள விடயம் ஆதாரமாக வெளியாகியுள்ள சம்பவம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமிழ் தேசிய அரசியல் வாதிகளாக காணப்படும் இவர்களின் இந்த நரித்தந்திர ஊழல் மோசடி சம்பவம் வெளியான நிலையில் ,தமிழ் மக்கள் இவர்களுக்கு எதிராக கொதித்து கிளம்பியுள்ளனர் .

இந்த வெள்ளை வேட்டிகள் ,இடம்பெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் தோற்கடித்து ,வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற நிலை காணப்படுகிறது .