தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது

தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது

தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது ,உள் மோசடி வழக்கில் தேசிய வளர்ச்சி வங்கி மேலாளர் உட்பட பலர் கைது

தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நடந்த உள் நிதி மோசடி தொடர்பாக, அதன் மேலாளர் உட்பட பலரை காவல்துறை கைது செய்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வுத் துறையிடம் (CID) ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

வங்கி மற்றும் காவல்துறை ஆள்மாறாட்ட மோசடிகள் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வங்கி மற்றும் காவல்துறை ஆள்மாறாட்ட மோசடிகள் எச்சரிக்கை

வங்கி மற்றும் காவல்துறை ஆள்மாறாட்ட மோசடிகள் எச்சரிக்கை

வங்கி மற்றும் காவல்துறை ஆள்மாறாட்ட மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: CERT

வங்கி மற்றும் காவல்துறை

வங்கி மற்றும் காவல்துறை ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்பான நிதி மோசடி வழக்குகள் அதிகரித்து வருவதால், இலங்கை கணினி அவசர

தயார்நிலை குழு (Sri Lanka CERT) பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது, பொதுமக்கள் விழிப்புடன்

இருக்கவும், தனிப்பட்ட அல்லது நிதித் தகவல்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும் வலியுறுத்துகிறது.

இன்று வெளியிடப்பட்ட ஊடகக் குறிப்பில், “சந்தேகத்திற்கிடமான செயல்பாடு” காரணமாக கிரெடிட் கார்டுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறும் மோசடி

SMS செய்திகள் மற்றும் ஆன்லைன் அறிவிப்புகள் குறித்து பல புகார்கள் வந்துள்ளதாக CERT தெரிவித்துள்ளது. பெரும்பாலும் நன்கு அறியப்பட்ட

வங்கிகளின் பெயர்களைக் குறிப்பிடும் இந்தச் செய்திகள், பெறுநர்கள் தங்கள் அட்டைகளை மீண்டும் செயல்படுத்த இணைப்புகளைக் கிளிக் செய்து தேசிய

அடையாள அட்டை (NIC) எண்கள் போன்ற முக்கியமான விவரங்களை வழங்குமாறு அறிவுறுத்துகின்றன.

CERT இன் படி, நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் 24 மணி நேரத்திற்குள் அட்டை நிரந்தரமாக ரத்து செய்யப்படும் என்று எச்சரிப்பதன் மூலம் செய்திகள் அவசரத்தை உருவாக்குகின்றன.

இணங்கும் பாதிக்கப்பட்டவர்கள் பின்னர் ஒரு முறை கடவுச்சொற்களை (OTPகள்) வெளிப்படுத்த ஏமாற்றப்படுகிறார்கள், இது மோசடி செய்பவர்கள் வங்கிக் கணக்குகளை அணுகவும் நிதியைத் திருடவும் அனுமதிக்கிறது.

மோசடி செய்பவர்கள் மூத்த காவல்துறை அதிகாரி

மற்றொரு முறையில், மோசடி செய்பவர்கள் மூத்த காவல்துறை அதிகாரிகளைப் போல வாட்ஸ்அப் வீடியோ அழைப்புகள் மூலம்

ஆள்மாறாட்டம் செய்து வருகின்றனர், சில சமயங்களில் காவல்துறை சீருடையில் தோன்றுகிறார்கள். இந்த அழைப்பாளர்கள் குற்றவாளிகள்

பாதிக்கப்பட்டவரின் தேசிய அடையாள அட்டை விவரங்களைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டுகளைப் பெற்று மோசடி செய்ததாக பொய்யாகக் கூறி, பின்னர்

கைது செய்வதாக அச்சுறுத்தி பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தி பெரிய அளவிலான பணத்தை மாற்றுமாறு மிரட்டுகின்றனர்.

தேவைப்படாத செய்திகள் அல்லது அழைப்புகள் மூலம் தேசிய அடையாள அட்டை எண்கள், அட்டை விவரங்கள், கடவுச்சொற்கள் அல்லது OTP களை

ஒருபோதும் பகிர வேண்டாம் என்றும், அத்தகைய எந்தவொரு கூற்றுகளையும் வங்கிகள் அல்லது அதிகாரிகளுடன் நேரடியாக அதிகாரப்பூர்வ தொடர்பு

விவரங்களைப் பயன்படுத்தி சரிபார்க்க வேண்டும் என்றும் இலங்கை CERT பொதுமக்களுக்கு கடுமையாக அறிவுறுத்தியுள்ளது. சந்தேகிக்கப்படும்

மோசடி குறித்து உடனடியாக தங்கள் வங்கிகளுக்குத் தெரிவிக்குமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

இத்தகைய அதிநவீன மோசடிகளால் ஏற்படும் நிதி இழப்புகளைத் தடுப்பதற்கு தகவலறிந்தவராகவும் விழிப்புடனும் இருப்பது மிகவும் முக்கியம் என்பதை CERT எடுத்துரைத்தது.

வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு

வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு

வங்கியில் அதிக பணம் 4ம் மாடிக்கு மக்கள் அழைப்பு என பாதிக்க பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .

இலங்கையில் ஆளும் அனுரா அரசு 87 பில்லியன் கடனில் தத்தளித்து வருகிறது .

கடன் சுமையை நிவர்தி செய்ய முடியாத நிலை

இந்த கடன் சுமையை நிவர்தி செய்ய முடியாத நிலையில் தமிழ் மக்களை இலக்கு வைத்து அவர்கள் பணம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது .

இதன் அடிப்படையில் தற்போது தமிழர் வங்கிகளில் பணம் சேமிப்பு மற்றும் அந்த பணம் எப்படி பெற்றீர்கள் என்பது

தொடர்பில் கணக்கு காட்டும் படி நான்காம் மாடிக்கு தமிழர்கள் அழைக்க பட்டுள்ளனர் .

இலங்கை கொழும்பில் உள்ள நான்காம் மாடி என்பது சிறப்பு பயங்கரவாத தடுப்பு முகாம் ஆகும் .

தமிழர்கள் பணம் விடயம்

அதனை அடுத்து தற்போது தமிழர்கள் பணம் விடயம் தொடர்பாக நான்காம் மாடிக்கு அழைக்க பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வெளிநாட்டு தமிழர்களே உங்கள் முதுகெலும்பை முறிக்க அனுரா அரசு சதி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

கொழும்பு நாயகம் மாடிக்கு தமிழர்கள் அழைக்க பட்டுள்ள விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு

NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு

NPP எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு ,தேசிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின்

கொடுப்பனவுகளும் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொரளையில் உள்ள மக்கள் வங்கியில் உள்ள தற்போதைய வங்கிக் கணக்கில் தொடர்புடைய கொடுப்பனவுகள் வைப்பிலிடப்படும் என்றும், பின்னர் அந்தப்

பணம் பொது சேவைக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறிய பிரதி அமைச்சர், இது மக்களுக்கு மேலும் சேவை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம்

இலங்கைக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம் ,இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரியா எக்ஸிம் வங்கி இணக்கம் இலங்கை அரசாங்கத்தின் அபிவிருத்தித்

திட்டங்களுக்கு நிதியுதவி வழங்க கொரிய எக்ஸிம் வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

கொரியா எக்ஸிம் வங்கியின் அதிகாரிகள் இன்று (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவை சந்தித்த போதே இந்த உடன்பாட்டை வெளியிட்டனர்.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்த நிலையில், இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கு கொரிய எக்ஸிம் வங்கி வழங்கிய நிதியுதவி 2022-2024 ஆம் ஆண்டுகளில் இடைநிறுத்தப்பட்டது.

அந்த அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கு சலுகைக் கடன் உதவி வழங்க எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாக கொரிய எக்ஸிம் வங்கியின் பிரதிநிதிகள் ஜனாதிபதியின் செயலாளரிடம் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார ரீதியில் பயனுள்ள வேலைத்திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கு தாங்கள் எதிர்பார்ப்பதாக கொரிய எக்ஸிம் வங்கி பிரதிநிதிகள் வலியுறுத்தினர்.

கொரிய எக்ஸிம் வங்கியின் பணிப்பாளர் வொன்சுக் ஹா, பிரதிப் பணிப்பாளர் ஹனுய் ஹன், திட்ட முகாமையாளர் நளின் ஜயதுங்க ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரொஷான் கமகேயும் இதில் இணைந்து கொண்டார்.

ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு

ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு

ஜனாதிபதி மத்திய வங்கி ஆளுநர் சந்திப்பு ,ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (24) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தும் நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

வங்கி உடைத்து தங்கம் திருட்டு
Posted in இலங்கை செய்திகள்

வங்கி உடைத்து தங்கம் திருட்டு

வங்கி உடைத்து தங்கம் திருட்டு

வங்கி உடைத்து தங்கம் திருட்டு ,கலவானை தனியார் நிதி நிறுவனமொன்றை உடைத்து தங்கம் திருடிய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (22) அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்ட நிலையில், குறித்த விற்பனை நிலையத்தில் விற்பனை அதிகாரி ஒருவரும் தங்கப் பொருட்களுக்கு பொறுப்பான அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கலவான பிரதேசத்தில் வசிக்கும் 26 மற்றும் 33 வயதுக்குட்பட்ட இருவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

68,978,357 ரூபா பெறுமதியான கழுத்தணிகள், மோதிரங்கள், வளையல்கள், பிரேஸ்லட், காதணிகள், பென்டன்கள் உள்ளிட்ட 03 கிலோ 770 கிராம் தங்கப் பொருட்கள் மற்றும்

சிசிரிவி அமைப்பின் டெகோடர் ஆகியவை திருடிச் செல்லப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பதில் முகாமையாளர் கலவானை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலவானை பொலிஸார் விசேடமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி

இலங்கை ஆசிய அபிவிருத்தி வங்கி 600 மில்லியன் டொலர்களை வழங்கவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியுற்றுள்ள இந்த கால பகுதியில் கடன் மேல் கடனை வாங்கி அதில் நாட்டை ஒட்டி செல்கிறது ஆளும் ரணில் அரசு .

இலங்கைக்கு 600 மில்லியன் டொலர் வழங்கும் வங்கி

இவ்வாறு பெறப்படும் நிதியில் பல மில்லியன் டொலர்கள் மோசடி செய்ய படும் என எதிர் பார்க்க படுகிறது.

இலங்கையை ஆளும் ஆட்சியாளர்கள் தமது குடும்பம் சுக போகமாக வாழ்ந்திட நாட்டை கொள்ளையடித்து ஏப்பம் இட்டு வருகின்றனர் .

அதன் தொடர்ச்சியாக இந்த கொள்ளையடிப்பும் ,அபிவிருத்தி என்கின்ற பெயரில் கடனை வாங்கி குவிப்பதும் இடம்பெற்று வருகிறது என்பது இங்கே குறிப்பிட தக்கது

வீடியோ

Posted in Uncategorized

எதிரி வங்கிகளுக்குள் புகுந்து 1.3 பில்லியன் கொள்ளையடித்த வடகொரியா

வடகொரியா உலக நாடுகளுக்கு பெரும் சவாலாகவும் மிரட்டலாகவும் விளங்கி வருகிறது ,

கைக்கிங்

ஒரே தடவையில் நூறு நாடுகளின் கணனிகளை கைக்கிங் மூலம் செயல் இழக்க வைத்த வடகொரியா பெரும் மிரட்டலாக வளர்ந்துள்ளது

வங்கி கொள்ளை

அவ்விதம் ,உலக நாடுகளின் மிக முக்கிய வங்கிகளை இலக்கு வைத்து பெரும் பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது

    இவ்விதம் மிக முக்கிய வங்கிகளின் பிராதன கணனிகளை கைக்கிங் செய்த வடகொரியா அந்த வங்கிகளிடம் இருந்து சுமார் 1.3 மில்லயன் டொலர் பணத்தை கொள்ளையடித்துள்ளது

    மேற்படி தகவல் திரட்டு இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

    அமெரிக்கா இலக்கு

    வடகொரியாவின் இலக்குகள் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்தவையாக உள்ளது,

    இவர்களே வடகொரியாவுக்கு பெரும் நெருக்கடி தருவிக்கும் நாடுகளாக விளங்கி வருகின்றன

      பொருளாதார தடை
      வடகொரியாவா கொக்கா ,அதன் மீது பொருளாதார தடையை விதித்து அடங்கும் என எதிர்பாத்த அமெரிக்காவுக்கு

      இப்பொழுது புரிந்துள்ள இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

      Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

      விமான நிறுவன வங்கி கணக்கில் இருந்து மாயமான 2 மில்லியன்

      விமான நிறுவன வங்கி கணக்கில் இருந்து மாயமான 2 மில்லியன்

      டப்பிலினை தலமாக கொண்டு இயங்கு வரும் சீனா விமான லீசிங் நிறுவனம்

      ஒன்றின் வாங்கி கணக்கில் இருந்து சுமாரா இரண்டு மில்லியன் டொலர்கள் மாயமானது

      வாங்கி மோசடியாளர்கள் இணையத்தை கைக்கிங் புரிந்து அதன் ஊடக இந்த பணத்தை காங் காங்கிற்கு மாற்றியுள்ளனர்

      மேற்படி பணம் காணாமல் போன சமபவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய

      நிலையில் அது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      இவ்வாறு பெரும் தொகையில் பணம் திருட்டு போனது குறித்த நிறுவனத்தை

      அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது ,இது தொடர்பான நீதி விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன