முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நிராகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நிராகரிப்பு

முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நிராகரிப்பு

முன்னாள் அமைச்சரின் ரிட் மனு நிராகரிப்பு ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவின் ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

களனி பிரதேச செயலக அதிகார வரம்புக்கு உட்பட்ட அரச காணியை சட்டவிரோதமாக கையகப்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பாக தன்னை கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில், குறித்த ரிட் மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்துள்ளது.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட சிலர், இந்த சம்பவம் தொடர்பாக, தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்
Posted in இலங்கை செய்திகள்

பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்

பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார்

பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார் ,இலங்கையின் பழம்பெரும் சிங்கள பாடகர் சமன் டி சில்வா காலமானார் என்பதை அவரது குடும்ப வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இறக்கும் போது அவருக்கு வயது 69 ஆகும்.

இலங்கையின் பைலா இசைத் துறையில் மிகவும் முக்கியமான ஒருவராக சமன் டி சில்வா திகழ்ந்தவர்.

1975இல் தனது இசை வாழ்க்கையை ஆரம்பித்த இவர், கடந்த 4 தசாப்தங்களுக்கும் மேலாக தனது ரசிகர்களுக்காக சிறந்த பாடல்களை பாடி வந்துள்ளார்.

இலங்கை இசையை சர்வதேச பார்வையாளர்களிடம் கொண்டு சென்று, உலகம் முழுவதும் நிகழ்ச்சிகளை நடத்துவதில் தனது வாழ்க்கையை கழித்துள்ளார்.

அவர் கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி

ஜனாதிபதி அனுர தலைமையில் மே தின பேரணி ,தேசிய தொழிலாளர் தினத்தன்று தேசிய மக்கள் சக்தி இயக்க அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மே தின பேரணியை எதிர்வரும் வியாழக்கிழமை (மே 1) கொழும்பில் உள்ள காலி முகத்திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில், அரசாங்கத் தலைவர்களின் பங்கேற்புடன் நடைபெறும் இந்த மே தினக் கூட்டத்திற்கான அணிவகுப்பு நடத்துவது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில், அதன் தலைவர்களின் பங்கேற்புடன், தலவாக்கலை நகரில் மே தினக் கூட்டத்தை நடத்த ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது நுகேகொடை ஆனந்த சமரகோன் திறந்தவெளி அரங்கில் மே தினக் கூட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதுடன், நிமல் சிறிபால டி சில்வா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கொழும்பிலும் மே தினக் கூட்டங்களை நடத்தவுள்ளனர்.

மே தினக் கூட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் எடுக்கவில்லை.

இந்த நாட்டில் உள்ள பல அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் தீவின் பல்வேறு பகுதிகளில் மே தினக் கூட்டங்களை நடத்த ஏற்கெனவே முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை
Posted in இலங்கை செய்திகள்

மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை

மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை

மே 02 முதல் A/L பரீட்சை மறு பரிசீலனை ,2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் சனிக்கிழமை (26) அன்று வெளியான நிலையில்,

பரீட்சைப் பெறுபேறுகளின் மீளாய்வுக்கான விண்ணப்பங்களை மே 02ஆம் திகதி முதல் மே 16ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை

பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை

பாதாள உலக செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை ,உள்ளூராட்சித் தேர்தல் காலத்தில் பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக, பாதுகாப்புப் படையினரின் ஆதரவுடன், புதிய, விரிவான பாதுகாப்புத் திட்டத்தை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இந்தப் பாதுகாப்புத் திட்டத்தில், பொலிஸ் சிறப்புப் படையைச் சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள், அரச புலனாய்வு அமைப்புகள் மற்றும் சாதாரண உடையில் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

கூடுதலாக, நடமாடும் ரோந்துகள் மற்றும் பாதுகாப்பு மோட்டார் சைக்கிள் பிரிவும் செயல்படுத்தப்பட்டுள்ளன.

கொலன்னாவை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வேட்பாளர் டான் பிரியசாத்தின் கொலையைத் தொடர்ந்து, சில நபர்களின் தொடர்புகளின் அடிப்படையில், பாதாள உலகக் குற்றங்கள் நடந்திருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

பல்வேறு அரசியல் கட்சிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கு பாதாள உலகம் மிகவும் நுட்பமான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தக்கூடும் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி
Posted in இலங்கை செய்திகள்

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி

க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 3 பாடங்களில் 9457 மாணவர்கள் A சித்தி ,இந்த ஆண்டு நடைபெற்ற (2024) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 9,457 மாணவர்கள் மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்தியைப் பெற்றதாக பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர தெரிவித்தார்.

மேலும், மூன்று பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்ற மாணவர்களின் சதவீதம் 3.45 சதவீதம் என்றும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற சிறப்பு ஊடக சந்திப்பில் உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையர் ஜெனரல் அமித் ஜெயசுந்தர இவ்வாறு தெரிவித்தார்.

பெறுபேறுகளின்படி, பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகளில் 64.73 சதவீதமானவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.

பல்கலைக்கழக சேர்க்கைக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்யும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், 2023ஆம் ஆண்டில் 64.33 சதவீதத்தை எட்டுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு 274,361 பரீட்சார்த்திகள் தோற்றியதாகவும், அவர்களில் 177,588 மாணவர்கள் பல்கலைக்கழக நுழைவுக்கான அடிப்படைத் தகுதிகளைப் பூர்த்தி செய்ததாகவும் அவர் கூறினார்.

மேலும், தேர்வில் 222,774 பள்ளி பரீட்சார்த்திகளும் 51,587 தனியார் பரீட்சார்த்திகளும் பங்கேற்றதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், பரீட்சையில் 3 முக்கிய பாடங்களிலும் மொத்தம் 29,244 பரீட்சார்த்திகள் தோல்வியடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கள் புதிய பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள் விசேட செய்திகள்

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல்

வன்னிமைந்தனின் முள்ளிவாய்க்கல் புதிய பாடல் ,முள்ளிவாய்க்கால் துயர் சுமந்து புதிய பாடல் ஒன்றை வன்னி மைந்தன் வெளியிட்டுள்ளார் .

இந்த பாடல் உருவாக்கத்தில் கைகோர்த்து பங்காற்றியவர் ,தேனிசை செல்லப்பாவின் புதல்வன், இளங்கோவன்செல்லப்பாவின் இசையில் ,அவரது மகன் பாவேந்தன் குரலில் ,வன்னி மைந்தன் வரிகளில் ,காரை சேனாதி அண்ணாவின் நிதி பங்களிப்பில் ,இந்த பாடல் உருவாக்கம் பெற்றுள்ளது .

72 மணித்தியாலத்தில் சிறப்பாக உருவாக்கி உயிர் கொடுத்து ஈழ தமிழ் மக்கள் மனங்களின் சுமைகளை வெளிப்படுத்திய அனைவருக்கும் எதிரி இணையம் மற்றும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் தமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது
Posted in இலங்கை செய்திகள்

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது

ஐரோப்பிய ஒன்றிய குழு இலங்கை வருகிறது ,ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

GSP+ சலுகை தொடர்பான நிபந்தனைகள் குறித்த முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்வதற்காக இந்த குழு வருகிறது.

இந்தக் குழு எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்புக் குழுவொன்று எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் மே மாதம் 7 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு

கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு ,கட்டுநாயக்க துப்பாக்கிச் சூடு குறித்து மேலதிக தகவல்கள் வெளியாகின

கட்டுநாயக்க, ஹீனடியன பகுதியில் இன்று (26) அதிகாலை ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 29 வயதான உதார சதுரங்க என்ற இளைஞர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முதற்கட்ட விசாரணைகளில், அடையாளம் தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் T-56 துப்பாக்கியைப் பயன்படுத்தி இரண்டு முறை சுட்டதாக தெரியவந்துள்ளது.

காயமடைந்த இளைஞர், வட்டிக்கு பணம் வழங்குவது மற்றும் பல வணிக நிறுவனங்களை நடத்தி வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

இவர் தனது தந்தையுடன் வீட்டில் உள்ள அறையில் உறங்கிக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இரு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

காயமடைந்த இளைஞர் முதலில் மினுவங்கொடை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கம்பஹா பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடமான வீட்டு அறையில் இருந்து இரண்டு வெற்று துப்பாக்கி தோட்டா உறைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன

மின்னல் தாக்கி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி

மின்னல் தாக்கி ஒருவர் பலி ,அரலகங்வில பொலிஸ் பிரிவின் கெக்குளுவெல பகுதியில் நேற்று வயல்வெளியில் வேலை செய்துக் கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கியதில் காயமடைந்த நபர் அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர் அரலகங்வில, கெக்குலுவெல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

இதில் மற்றொரு நபரும் காயமடைந்து அரலகங்வில வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது
Posted in இலங்கை செய்திகள்

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது

துறவியின் உடையில் நுழைய முயன்ற மாணவன் கைது ,பௌத்த துறவியின் உடையில் ஸ்ரீ தலதா மாளிகைக்குள்நுழைய முயன்ற பள்ளி மாணவன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் கம்பஹா, கிரல்லவெல பகுதியைச் சேர்ந்த18 வயதுடைய பாடசாலை மாணவன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

புத்த துறவிகளுக்கான ஒதுக்கப்பட்ட வரிசை வழியாகதலதா மாளிகைக்குள் நுழைய முயன்ற போது அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்துகண்டி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர
Posted in இலங்கை செய்திகள்

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர

திடீரென மோடிக்கு தொலைபேசி அழைப்பு எடுத்த அநுர ,அண்மையில் 26 பேர் கொல்லப்பட்ட இந்தியாவின் காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று (25) பிற்பகல் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

இரு நாட்டுத் தலைவர்களும் சுமார் பதினைந்து நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடினர்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல் குறித்து தான் மிகவும் அதிர்ச்சியடைந்ததாகக் கூறிய ஜனாதிபதி, இந்திய மக்களுடன் இலங்கை எப்போதும் சகோதரத்துவத்துடன் பிணைந்துள்ளது என்றார்.

உலகில் எங்கு இடம்பெற்றாலும், பயங்கரவாதத்தை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்தித்தார்.

மேலும், எழுந்துள்ள நிலைமையால் ஏற்பட்டுள்ள பதட்டமான சூழ்நிலை விரைவில் தீர்க்கப்பட்டு பிராந்திய அமைதி நிலைநாட்டப்படும் என்பது இலங்கையின் எதிர்பார்ப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்

புதிய சட்டங்களை வகுத்தேனும் இனவாதம் தோற்கடிக்கடிப்போம் அநுரகுமார
Posted in இலங்கை செய்திகள்

புதிய சட்டங்களை வகுத்தேனும் இனவாதம் தோற்கடிக்கடிப்போம் அநுரகுமார

புதிய சட்டங்களை வகுத்தேனும் இனவாதம் தோற்கடிக்கடிப்போம் அநுரகுமார

புதிய சட்டங்களை வகுத்தேனும் இனவாதம் தோற்கடிக்கடிப்போம் அநுரகுமார ,புதிய சட்டங்களை வகுத்தேனும் நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிங்கள மக்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். முஸ்லிம் மக்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்துள்ளனர். பிளவுபட்டிருந்த நாட்டையும், நாட்டு மக்களையும் நாம் ஒன்றிணைத்துள்ளோம்.

கடந்த காலங்களில் ஆட்சியமைத்தவர்கள் அதிகாரத்தைத் தக்கவைப்பதற்காக இனவாதத்தைப் பரப்பினார்கள். சிங்கள முஸ்லிம் பிரச்சினையை ஏற்படுத்தினார்கள்.

இனவாத அமைப்புகளை வலுப்படுத்தினார்கள். அளுத்கமையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. திகனையில் தாக்குதல் நடத்தப்பட்டதாகச் செய்திகள் வெளிவந்தன. தற்போது இவ்வாறான செய்திகளுக்கு இடமில்லை.

எமது நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஒருபோதும் இனவாதத்திற்கு இடமளிக்கப்போவதில்லை எனும் உறுதிமொழியை வழங்குகின்றோம்.

இனவாதத்தைத் தோற்கடிப்பதற்கு நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்டம் போதுமானதாக இல்லாத நிலையில், புதிதாகச் சட்டத்தினை வகுத்தேனும் இனவாதத்தைத் தோற்கடிப்போம் என்றார்

சுகாதார பரிசோதகர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார்

மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார்

மித்தெனிய முக்கொலை இந்தியாவுக்கு தப்பியவர் சிக்கினார் ,மித்தெனிய பொலிஸ் பிரிவில், பெப்ரவரி (18) ஆம் திகதியன்று நடந்த மூன்று கொலைகளில் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் என

சந்தேகிக்கப்படும் 31 வயதான இஷான் மதுசங்க, இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டு, வௌ்ளிக்கிழமை(25) அன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டார்.

அவர் உஸ்வேவகெதர, டெபொக்காவ பகுதியைச் சேர்ந்தவர், மேலும் இந்த மூன்று கொலைகளுக்கு மேலதிகமாக, கொலை, கைக்குண்டுகளை வைத்திருத்தல் மற்றும் ஹெரோய்ன் உள்ளிட்ட போதைப்பொருள்

வைத்திருந்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளுக்காக மித்தெனிய, ஊருபொக்க, வலஸ்முல்ல மற்றும் மித்தெனிய ஆகிய மாத்தறை பிரிவுகளில் உள்ள பல பொலிஸ் நிலையங்களால் தேடப்படும் சந்தேக நபராவார்.

இந்த மூன்று கொலைகளில், விதானகமகே அருண பிரியந்த, அவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் படகு மூலம் இந்தியாவுக்கு தப்பிச் சென்று போலியான பெயரில் அங்கு தங்கியிருந்துள்ளார். குற்றப் புலனாய்வுத்

துறையால் நாட்டிற்கு வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அவர் நாட்டின் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு, வௌ்ளிக்கிழமை (25) அன்று கட்டுநாயக்கவிற்கு நாடு கடத்தப்பட்டார்.

யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை

யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை

யாழ் இளைஞர்களுடன் முரண்பட்ட பொலிஸாருக்கு எதிராக விசாரணை ,யாழில். இருந்து வவுனியா நோக்கி சென்ற இளைஞர் குழுவினருடன் முரண்பட்டு, அவர்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட மாங்குளம்

பொலிஸ் அதிகாரிகள் இருவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த இளைஞர் குழுவினர் கடந்த 22ஆம் திகதி யாழில். இருந்து வவுனியா நோக்கி காரில் பயணித்த போது, மாங்குளம் பொலிஸார், டோர்ச் லைட் வெளிச்சத்தை கண்ணில் பாய்ச்சி வழி மறித்துள்ளனர்.

இந்நிலையில் இவ்வாறு வழி மறிப்பது தவறு என அந்த இளைஞர் குழு எடுத்து கூறிய போது அவர்களுடன் பொலிஸார் முரண்பாட்டில் ஈடுபட்டு, அச்சுறுத்தியுள்ளனர்.

அத்துடன் தகட்டு இலக்கத்தையும் வழங்க மறுத்து, அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை அந்த இளைஞர் குழுவினர் ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வந்திருந்த நிலையில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர்.

இந்நிலையில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவருக்கும் எதிராக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி

கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி

கண்டிக்கு சென்றார் ஜனாதிபதி ,ஸ்ரீ தலதா வழிபாட்டில் பங்கேற்பதற்காக சென்ற மக்களைச் சந்திப்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்று (24) கண்டிக்கு திடீர் விஜயம் மேற்கொண்டார்.

அங்குள்ள மக்களின் தேவைகளை கேட்டறிவதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நேற்றிரவு குறித்த பகுதிகளுக்குச் சென்றுள்ளார்.

இதேவேளை, வரிசையில் காத்திருந்த மக்களுக்கு நேற்றிரவு தன்சல் (உணவு தானம்) வழங்கப்பட்டுள்ளன.

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்
Posted in இலங்கை செய்திகள்

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய்

அப்பா எங்கே பதில் சொல்ல முடியாது தவிக்கும் தாய் ,அப்பா எங்கே‘? என்ற என் குழந்தையின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை என பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் கணவனை இழந்த பெண் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிடன் அதிகாரி, மனைவி மற்றும் மூன்றரை வயது மகனுடன் அமெரிக்காவின் புளோரிடாவில் வசித்து வருகிறார். கடந்த 8-ம் திகதி சொந்த ஊருக்கு வந்த அவர்கள், காஷ்மீருக்கு

சுற்றுலா சென்றனர். இந்நிலையில்தான், பஹல்காமிலம் நடந்த தீவிரவாத தாக்குதலில் பிடன் கொல்லப்பட்டார்.

இதுகுறித்து அவருடைய மனைவி கூறும்போது, “தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகளின் ஊர் பற்றி கேட்டார்கள். பின்னர் ஆண்களை தனியாக நிற்க வைத்து அவர்களின் மதம் பற்றி கேட்டார்கள்.

அதன் பிறகு ஒவ்வொருவராக துப்பாக்கியால் சுட்டனர். என் குழந்தையின் கண் முன்னே என் கணவரை சுட்டுக் கொன்றனர். இப்போது, அப்பா எங்கே என என் மகன் அடிக்கடி கேட்கிறான்.

அப்பா இனி வரமாட்டார் என அவனிடம் எப்படி சொல்வது என்றே தெரியவில்லை” என மனம் உடைந்த நிலையில் தெரிவித்தார்.

மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்

மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம்

மஹியங்கனயில் பேருந்து விபத்து 28பேர் காயம் ,மஹியங்கனை – திஸ்ஸபுர சந்தியில் இன்று (25) காலை பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 28 பேர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மஹியங்கனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்தின் தடுப்பு செயலிழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்

ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம்

ரயில் சேவை திடீரென இடைநிறுத்தம் ,கொழும்பு கோட்டையிலிருந்து கண்டிக்கு இயக்கப்பட்ட விசேட ரயில் சேவையை நாளை (24) முதல் மறு அறிவிப்பு வரும் வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் வேண்டுகோளின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்தார்.

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு

மூளையில் கிருமித் தொற்று குடும்பஸ்தர் உயிரிழப்பு ,மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் குடவத்தை, துன்னாலைப் பகுதியில் நேற்று (23) இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த மணியம் ஜெகதீஸ்வரன் (வயது 34) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்

குறித்த குடும்பஸ்தர் திடீர் உடல்நல குறைவு காரணமாக நேற்று புதன்கிழமை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையை கொண்டு சென்ற போது அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.

பிரதேச பரிசோதனையில் மூளையில் ஏற்பட்ட கிருமித் தொற்று காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.