Tag: மட்டக்களப்பில்
மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
மட்டக்களப்பில் தலைவர் 71வது பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாட்டம்
மட்டக்களப்பில் தலைவர் 71வைத்து பிறந்த நாள் கேக்க வெட்டி கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது .
மேற்படி காணொளி பகுதிகள் எமக்கு மட்டக்களப்பில் இருந்து கிடைக்க பெற்றுள்ளது .
வன்னி மைந்தன் எதிரி இணையம் தயாரித்த தலைவர் புதிய பிறந்த நாள் பாடல்கள் அங்கு ஒலிக்க விடப்பட்டு இந்த கேக் வெட்ட பட்டுள்ளது .
இந்த நிகழ்வு உணர்வு பூர்வமாக கொட்டு மழையிலும் கொண்டாடிய எங்கள் தேச தாய் தமிழ் உறவுகளுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும் .
நன்றி துவா அண்ணா


மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து
மட்டக்களப்பில் சொகுசு பேரூந்து விபத்து ,மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் காத்தான்குடி பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று அதிகாலை
பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம்
இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை 4 மணியளவில் கொழும்பிலிருந்து கல்முனை நோக்கி வந்து கொண்டிருந்த லொறியொன்று காத்தான்குடி
பிரதான வீதியில் நிறுத்தப்பட்டிருந்த அதே நேரம் கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி
வந்து கொண்டிருந்த சொகுசு பஸ் ஒன்று குறித்த லொறியின் பின்னால் மோதியதன் காரணமாக பாரிய விபத்து சம்பவம் ஏற்பட்டுள்ளது.
விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில்
குறித்து விபத்தை தொடர்ந்து பிரதான வீதியில் வந்து கொண்டிருந்த முச்சக்கர வண்டியில் பஸ் மீது மோதியுள்ளது இதனால் பஸ்ஸில் நடத்துனர் படுகாயமடைந்தார்.
அதே நேரம் பஸ்ஸின் சாரதி முச்சக்கர வண்டியின் சாரதி ஆகியோர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர் பஸ்ஸின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை
மேற்கொண்டுள்ளனர்.மற்றும் சொகுசு பஸ் ஆட்டோ என்பது பெரிதும் சேதம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை
மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை
மட்டக்களப்பில் வீடு புகுந்து பல லட்சம் கொள்ளை , மட்டக்களப்பில் புண்ணை சோலை பகுதியில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கிருந்த பணம் நகைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர் . Several lakhs stolen in house break-in in Batticaloa ( இலங்கை செய்திகள் )
இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பணம் More than two lakhs of money இன்றைய
வீட்டில் இருந்த இரண்டு லட்சத்துக்கு மேற்பட்ட பணத்தையும் , 32 பவுனுக்கு மேற்பட்ட தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர் .
வீட்டினுடைய சமையலறை வழியாக உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கு அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொழுது அங்கு வைக்கப்பட்டிருந்த 32 தங்க நகை மற்றும் 2 லட்சத்து 80 ஆயிரம் ரொக்க பணம் என்பனவற்றை அலுமாறியில் இருந்து திருடி சென்றுள்ளனர் .
இந்த நூதன திருட்டு மேற்கொண்டதை அடுத்து தற்பொழுது பாதிக்கப்பட்டவர்கள் போலீசாரிடான் வீட்டில் இடம்பெற்ற கொள்ளை
சம்பவம் தொடர்பாக செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து அவர்களை தேடி கண்டுபிடிக்க நடவடிக்கையில் [போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
வீடு புகுந்து நகைகளை திருடி செல்லும் வரைக்கும் வீட்டின் உரிமையாளர்கள் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த திருட்டை இவர்கள் எவ்வாறு மேற்கொண்டார்கள் How did they carry out this theft?
இந்த திருட்டை இவர்கள் எவ்வாறு மேற்கொண்டார்கள் என்கின்ற விடயம் தொடர்பாக தற்பொழுது கொள்ளை சம்பவங்களை மேப்பம் பிடிக்கும் குற்றவியல் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வீட்டுக்குள் நுழைந்து திருட்டை மேற்கொண்ட திருடர்கள் சிக்குவார்களா அல்லது இந்த கொள்ளையர்களை இலங்கை காவல்துறையினர் தப்பிக்கப்படுவார்களா பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேற்படி திருட்டு சம்பவம் அந்த மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது
மட்டக்களப்பில் துப்பாக்கிசூடு துப்பாக்கிதாரி கைது ,மட்டக்களப்பு வவுணதீவில், பக்கத்து வீட்டு காரர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (02) மாலை இடம் பெற்றதுடன் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட நபரை கைது செய்துள்ளதுடன் துப்பாக்கி ஒன்றை மீட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.
கன்னங்குடா பாடசாலை வீதியை சேர்ந்த 28 வயதுடைய பாக்கியராசா சதீஸ்கரன் என்பவர் படுகாயமடைந்துள்ளார்.
தண்ணீர் பிரச்சனை காரணமாக துப்பாக்கி பிரயோகம்
குடி தண்ணீர் பிரச்சனை காரணமாக இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள கன்னங்குடா பிரதேசத்தில் துப்பாக்கி சூட்டு இலக்காகி படுகாயமடைந்தவரின் வீட்டுக்கு அருகில் உள்ள அவரது சகோதரனின் காணியில் தேசிய நீர் வழங்கல் சபையினால் குடிநீர் பெற்றுள்ள
குடிநீரை பக்கத்து வீட்டைச் சேர்ந்த வரும் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவரும் பாவித்து வந்துள்ளனர். இந்நிலையில் அதற்கான
பணத்தை செலுத்தாத நிலையில் நீர் வழங்கல் சபையினால் குடிநீர் விநியோகத்தை துண்டித்தனர்.
இது தொடர்பாக குடிநீரை பாவித்து வந்த பக்கத்து வீட்டுகாரிடம் தண்ணீரை பாவித்து விட்டு அதற்கான பணத்தை செலுத்த வில்லை ஏன்? என கேட்ட போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகி
இந்த நிலையில் சம்பவதினமான திங்கட்கிழமை (02) உள்ளுரில் தயாரிக்கப்பட்ட துப்பாகியால் பக்கத்து வீட்டுக்காரர் மீது பிற்பகல் 4.30 மணிக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளார்..
இதனால், தொடையில் துப்பாக்கிச் சன்னம் பாய்ந்த நிலையில் காயமடைந்த அவர், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில்
அனுமதிக்கப்பட்டார் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது
இதையடுத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சின்வன் என அழைக்கப்படும் அருளானந்தம் யோகேஸ்வரன் என்பவரை கைது செய்ததுடன் துப்பாக்கி ஒன்றையும் மீட்டனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வவுணதீவு பொலிஸார், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம்
சூறாவளி வீடுகள் சேதம்
மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம் ,மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம் என மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடந்த தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பேரறிவு பற்றி பிரதேச பிரிவு பகுதியில் வீசிய கடும் மினி சூறாவளி காரணமாக அங்கு பல வீடுகள் சேதமடைந்த காணப்பட்டுள்ளது .
சூறாவளியின் பொழுது கூட வந்து மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் அங்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,
வீட்டினுடைய கூரைகள் காட்டில் அடித்துச் செல்லப்பட்டு நிலையில் காணப்படுகிறது அது தவிர அங்கிருந்த உலபு இயந்திரங்கள் மீதும் அந்த தகரங்கள் விழுந்து தான் சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
அதேபோன்று அதே பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பில் கிராம சேவலுக்கு அறிவிக்கப்பட்டு அதனுடைய அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது,
இரவில் அர்த்த முகாமத்துவ அமைச்சின் ஊடாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான இழப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,
முள்ளுவாய்க்கால் தினத்தில் இவ்வாறு சிங்கள தமிழர் பகுதிகளில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி
மட்டக்களப்பில் யானை தாக்கி குடும்பஸ்தர் பலி ,மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 37ஆம் கிராமத்தில் சித்திரைப் புத்தாண்டு தினமான நேற்று அதிகாலை, காட்டு யானையின் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்த சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று அதிகாலை ஒரு மணியளவில், வீட்டு முற்றத்தில் நண்பர்களுடன் புத்தாண்டைக் கொண்டாடி விளையாடிக் கொண்டிருந்த 31 வயதுடைய இராசதுரை சசிகரன் என்பவர், சத்தம் கேட்டு வீட்டு வாசலுக்கு வந்தபோது, எதிர்பாராதவிதமாக யானையின் தாக்குதலுக்கு உள்ளானார். இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
தாக்குதலில் படுகாயமடைந்த சசிகரனை, உறவினர்கள் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் அதிகாலை அவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக வெல்லாவெளி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு
மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு
மட்டக்களப்பில் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிப்பு ,மட்டக்களப்பில் ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்த முன்னாள் இராஜாங்க
அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக மட்டு அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான ஜே.ஜே.முரளிதரன் அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு பழைய கச்சேரி மண்டபத்தில் நேற்று11) தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்தவர்களுக்கான வேட்புமனு ஏற்பு மற்றும் சின்னம் வழங்குவதற்கான கூட்டம் இடம்பெற்றது.
இதன் போது வேட்புமனு தாக்கல் செய்த கட்சிகளின் வேட்புமனுக்கள் பரிசீலிக்கும் நடவடிக்கையின் போது ஜனநாயக தேசிய முன்னணி கட்சியின் தபால் பெட்டி சின்னத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சதாசிவம்
வியாழேந்திரனின் தலைமையில் தாக்கல் செய்த வேட்பு மனுவில் சத்திய கடதாசி இணைக்கப்படாததால் அந்த வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தெரிவத்தாட்சி அலுவலகர் அறிவித்தார்.
கடந்த 2015ம் ஆண்டு தேர்தலில் புளொட் சார்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வீட்டு சின்னத்தில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், 2020ம் ஆண்டு தமிழ் தேசிய
கூட்டமைப்பில் இருந்து வெளியேறி கட்சி மாறி பொதுஜன பெரமுன கட்சியில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினராகி இராஜாங்க அமைச்சரானார்.
இவர் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்த நிலையில் 2024ம் ஆண்டு தேர்தலில் போட்டியிடுவதற்காக கொழும்பைச்
சேர்ந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசனின் கட்சியான ஜனநாயக தேசிய முன்னணி கட்சியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது தலைமையில் போட்டியிடுவற்காக 8 பேர்களுடன் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தார்.
இதேவேளை சுயேச்சைக் குழு ஒன்றின் தலைமை வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யாது போட்டியிடும் 3வது நபர் வேட்புமனு தாக்கல்
செய்ததையடுத்து அதன் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதுடன் ஒரு கட்சி 6 சுயேச்சைக்குளுக்கள் உட்பட 7 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்
மட்டக்களப்பில் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம் தொழில் வாய்ப்பு வழங்கக்கோரி போராட்டம் நடத்தியுள்ளனர் .
நீதிக்கு குரல் கொடுப்பதற்காக இன்று மனித போராட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது .
ஐக்கிய மக்கள் சக்தி என் தலைவரும் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று இரண்டாவது நாளாகவும் மட்டக்களப்பில் தமக்கு உரிய வேலைவாய்ப்பினை பெற்று தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த தற்பொழுது ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக அவருக்கான வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுப்போம் என இடி முழக்கத்துடன் முழங்கியுள்ளார்.
தேர்தல் வருகின்ற பொழுது
தேர்தல் வருகின்ற பொழுது இவ்வாறான மக்கள் வீதியிறங்கி தமது கோரிக்கைகளை அரசுக்கு எதிராக வைக்கின்றதும் அதனூடாக ஒரு பேரம் பேச்சின் ஊடாக வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொள்வதுமான நடைமுறை இலங்கையில் இருந்து வருகின்றது.
எனவே இவ்வாறான நடைமுறைகளை உடைத்து அனைவருக்கும் வேலைவாய்ப்பு கொடுக்கப்படுவது ஊடாக இலங்கை சார்ந்த ஒரு பொருளாதார நாடாக மாற்றம் வருவதுடன் ,
அனைவருக்கும் கிடைக்கப் பெறுவதுடன் பல குடும்பங்கள் தமது வாழ்வுகளையும் எதிர்கால நடவடிக்கையும் துரிதமாகவும் மகிழ்ச்சியாகவும் மேற்கொள்ள காரணமாக அமையும்.
ஆதலால் வேலையற்ற மக்களுக்கு வேலைகளை வழங்க வேண்டியது அரசினுடைய கடமை என்பதாக அவர் முழங்கினார்.
இதன் அடிப்படையில் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 2020 ஆம் ஆண்டு தொடக்கம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவில்லை எனவும் இழுத்தடிப்பு செய்யப்படுவதாக மரண குற்றச்சாட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து பாராளுமன்றத்தில் இது தொடர்பாக குரல் கொடுக்க உள்ளதாகவும் ,அதனூடாக வேலைகளையும் பட்டப்படிப்பு உயர்வு பதவிகளையும் அவர்களுக்கு வழங்க முடியும் என்பதாக அவர் தெரிவித்துள்ளார் .
வெடித்த மக்கள் போராட்டம்
இலங்கையில் பட்டினியாலும் ஒரு வேளை உண்பதற்கு உணவில்லாமலும் எத்தனை மக்கள் வீதியில் உறங்குகின்ற நிலை காணப்படுகின்றது.
இந்த அவலத்தை தொடப்பது யார் அதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும் என மக்களாகிய நீங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் அரசியல்வாதிகள் செய்வார்கள் .
என எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் அவை யாவும் வேலையற்ற ஒன்றாக மாறிவிடும் ,
எனவே நாங்கள் நமக்காக எமது சேவைகளை செய்ய ஆரம்பிக்கின்ற பொழுதுதான் இவ்வாறான பிரச்சாரங்களில் இருந்தும் பரப்புரிலிருந்தும் இவ்வாறான மக்களுடைய தொகுதிகள் என்றும் அவர்களை மீட்டெடுத்து சிறந்த ஒரு நாடாக இலங்கையை காட்டியமைக்க முடியும்.
ஒன்றிணைந்த இலங்கைக்கு ஒற்றுமையாக அனைவரும் வாழ்வதன் ஊடாகத்தான் ,இலங்கையினுடைய பொருளாதாரத்தை கட்டி எழுப்ப முடியும், நிலைக்கு தற்பொழுது தமிழர்கள் உள்ளிட்டவர்கள் வருகை தந்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பில் ரணிலுக்கு பெரிய பதாகை
மட்டக்களப்பில் ரணிலுக்கு பெரிய பதாகை
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பயணம் செய்யவுள்ளார் .
அதனால் அவருக்கு மிக பெரும் பதாகை ஒன்று வைக்க பட்டுளள்து ,சமாதானத்தின் தேவன் ரணில் லஞ்ச ஊழல் கொள்ளையில் ஈடுபட்டு இருக்கும் இவ்வேளையில் அவருக்கு பதாகை வைத்து கொண்டாடுகிறது ஒரு கூட்டம்
அடிப்படை தமிழர் பிரச்சனையை தீர்க்க மறுக்கும் ரணில் தமிழர்கள் ஓட்டை கேட்டு ஓடி வருவது வெட்க கேடு என்கிறது தமிழர் தேசம் .
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்
- மோசடியால் தள்ளாடும் இலங்கை பங்கு சந்தை
- பள்ளத்தில் கவிழ்ந்த பேருந்து 40 பேர் காயம்
- இலங்கையில் டெங்கு பரவல் பெருந்தொற்று நிலையை எட்டியுள்ளது
- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்
- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி
- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்
- ஜனாதிபதியின் 1 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்புக் குற்றச்சாட்டு மத்திய வங்கி அதிகாரிகளிடம் விசாரணை
- இளைஞர் வேலையின்மை குறைவு பிரதி அமைச்சர்
- 2026-ஆம் ஆண்டிற்கான உலகின் முன்னணி ஆரோக்கிய சுற்றுலாத் தலமாக இலங்கை
மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு
மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு
இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம், மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனின் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் சனிக்கிழமை (07) காலை நடைபெற்றது.
கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.சுமந்திரன், இரா.சாணக்கியன், த.கலையரசன், உட்பட வடக்கு கிழக்கிலுள்ள கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற , மாகாண சபை உறுப்பினர்,
உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், கட்சியின் இளைஞர் அணியினர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
மட்டக்களப்பில் கூடியது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு
இந்த கூட்டத்தின் ஆரம்பத்தில் கட்சிக்கொடி தமிழரசுக் கட்சியின் தலைவரால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவர் இராசமாணிக்கம் அவர்களின் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
அதனை தொடர்ந்து மத்தியகுழு கூட்டம் ஆரம்பமாகியதுடன் இதில் கட்சியின் பல முக்கிய விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல் விடயங்கள், பங்காளிக்
கட்சிகளின் விடயதானங்கள் உள்ளிட்டவை கலந்துரையாடப்படவுள்ளதுடன், பல முக்கிய தீர்மானங்களும் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டம் நடைபெறுகின்ற போது, மண்டபத்துக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
மட்டக்களப்பில் 800 மாடுகள் மரணம் புதிய வகை நோய் பரவல்
மட்டக்களப்பில் 800 மாடுகள் மரணம் புதிய வகை நோய் பரவல்
மட்டக்களப்பு பகுதியில் கடந்த இரண்டு வாரங்களில் 800 மாமடுகள் பலியாகியுள்ளன.
நீர் நிலைகளை அண்மித்த பகுதியில், மேய்ச்சலில் ஈடுபட்ட மாடுகள் இவ்விதம் இறந்துள்ளன .
மூச்சு சுவாசிக்க முடியாது ,வாயால் நுரை தள்ளிய நிலையில் இறந்துள்ளன .
மாடுகள் தொடராக இவ்விதம் இறந்து வருவதற்கான காரணம் கண்டறியப்படவில்லை .
சட்டவிரோத நிறுவன கழிவுகள், நீரில் கலந்து அவை நச்சு தன்மை அடைந்து இறந்திருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
அரசியல் செல்வாக்குடன் விஷமிகளினால் இயக்க படும் இரசாயன பாவனை நிறுவன கழிவுகள் நீர் மற்றும் ,விவசாய நிலங்களில் கலக்க படுகிறது .
அதில் விளையும் உணவுகள் ,மற்றும் நீர் என்பன நச்சு
தன்மை அடைந்து ,இவ்விதம் ஏற்பட்டு இருக்க கூடும் என்ற அச்சம் நிலவுகிறது .
மட்டக்களப்பில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் பாம்புகள்
மட்டக்களப்பில் இறந்து கரை ஒதுங்கும் மீன்கள் பாம்புகள்
மட்டக்களப்பு வட்டுவான் பகுதியில் உள்ள ஆற்றில் மீன்கள், பாம்புகள், ,நண்டுகள் ,என கடல்வாழ் உயிரினங்கள், யாவும் இறந்த நிலையில் கரை ஒதுங்கு கின்றன .
இங்கு உள்ள இறால் பண்ணையில் இருந்து வெளியேறும், நச்சு கழிவுகள் ,ஆற்றில் கலந்துள்ளன .
இந்த நிலையில் ,இந்த மீன்கள் பாம்புகள் என்பன, இறந்த நிலையில் கரை ஒதுங்குவதாக மக்கள் தெரிவித்துள்ளனர் .
எனினும் இந்த மீன்கள் ,பாம்புகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள், இறந்து கரை ஒதுங்குகின்றன .
இந்த நிலை,தொடர்பாக,அரச அதிகாரிகள் கவனத்தில் எடுக்கவில்லை என படுகிறது.


































