Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
கண்டலமே ஹெடகாரயா” யானை உயிரிழப்பு
கண்டலமே ஹெடகாரயா” யானை உயிரிழப்பு
கண்டலமே ஹெடகாரயா” யானை உயிரிழப்பு ,6 மாதங்களுக்கும் மேலாக கண்டலம ஏரி பகுதியில் சிகிச்சை பெற்று வந்த ‘கண்டலமே ஹெடகாரயா’ யானை இன்று (13) பிற்பகல் உயிரிழந்தது.
25 முதல் 30 வயதுக்குட்பட்ட இந்த யானையின் முன்னங்கால் துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு உள்ளாகியதன் காரணமாக
கடந்த சில மாதங்களாக பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுத்து வந்திருந்தது.
மனித-யானை மோதலின் விளைவாக இந்த காட்டு யானை பல சந்தர்ப்பங்களில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இருந்தது.
இந்த யானையின் உயிரைக் காப்பாற்ற வனவிலங்கு அதிகாரிகள் பல்வேறு வகையான சிகிச்சைகளை மேற்கொண்டு வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு
வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு ,மீகொட, முத்துஹேனவத்த, நதுன் உயன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் முன் நேற்று (13) இரவு 10 மணியளவில் மோட்டார்
சைக்கிளில் வந்த முகமூடி அணிந்த இருவர், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.
9 மில்லிமீற்றர் ரக தோட்டா கொண்ட பிஸ்டல் வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டுள்ளதாவும், தோட்டாவும் தோட்டா உறையும் வீட்டுக்கு
முன்னால் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, மோட்டார் சைக்கிள் முத்துஹேனவத்த வீதியை நோக்கி தப்பிச் சென்றுள்ளதோடு,
சம்பவம் தொடர்பில் மீகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு
இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு
இலங்கையின் மனிதஉரிமை அமெரிக்க நிலைப்பாடு ,இலங்கையில் மனித உரிமைகள் நிலைமைகளில் கடுமையான சிக்கல்கள் இருப்பதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தெரிவித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள நாடுகளில் மனித உரிமைகள் நடைமுறைகள் குறித்த 2024 அறிக்கையை வெளியிடும்
போது, அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டது.
மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளை அடையாளம் கண்டு அவர்களைப் பொறுப்புக்கூற
வைப்பதற்கு இலங்கை அரசாங்கம் மிகக் குறைந்த முயற்சிகளையே மேற்கொண்டுள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
தனிநபர்கள் மீதான துப்பாக்கிச் சூடு, விளக்கமறியலில் இருக்கும்போது கொலைகள், ஊடகவியலாளர்களை துன்புறுத்துதல் மற்றும் கருத்துச் சுதந்திரத்தின் மீதான
கட்டுப்பாடுகள் குறித்து அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தனது அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.
2022 போராட்டத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், மனித உரிமை மீறல்களுக்குப்
பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக மிகக் குறைந்த நடவடிக்கையே எடுத்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்தல், பெண்கள் கட்டாய கருத்தடைக்கு உட்படுத்தப்படுவது தொடர்பிலும் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டில் 103 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், பொலிஸ் காவலில் வைத்து 7 மரணங்கள் சம்பவித்துள்ளதாகவும் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இருப்பினும், அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டில் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான எந்தவொரு சம்பவங்களும் பதிவாகவில்லை என்றும், போரில்
பாதிக்கப்பட்டவர்களின் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதில் சிறு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து
மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து
மக்களுக்கு சிரமமும் ஏற்பட்டால் திட்டம் ரத்து ,மன்னார் காற்றாலை மின் திட்டம் தொடர்பாக மன்னார் மாவட்ட மக்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதோடு மன்னார் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்
பாராளுமன்ற உறுப்பினர்களான ரிஷாத் பதியுதீன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் நேற்று (13) மாலை ஜனாதிபதி செயலகத்தில்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
கலந்துரையாடலின் போது, ஜனாதிபதி இந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு திட்டத்தை மறு ஆய்வு செய்ய ஒரு மாத கால அவகாசம் வழங்கியுள்ளார்.
மேலும், இந்தத் திட்டம் திறமையான அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் முறையாகச் செயல்படுத்தப்படும் என்றும், மக்களுக்கு எவ்வித சிரமமும்
ஏற்பட்டால் திட்டம் ரத்து செய்யப்படும் என்றும் உறுதியளித்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
கலந்துரையாடலின்பின்னர், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடகங்களுக்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கையில்,
பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர்
பொறுப்பேற்றார் பொலிஸ்மா அதிபர்
பொறுப்பேற்றார் புதிய பொலிஸ்மா அதிபர் ,புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய சற்றுமுன்னர் கடமைகளை பொறுப்பேற்றார்.
பொலிஸ் தலைமையகத்தில் வைத்து அவர் கடமைகளை பொறுப்பேற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் கருத்து வௌியிட்ட அவர், தனது கடமைகளின் போது பொலிஸ் துறையின் கௌரவத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்வேன் என்று குறிப்பிட்டார்.
பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வை
பொலிஸ் துறையின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்க தாம் பணியாற்றி வருவதாகவும், இதற்காக அனைத்து பொலிஸ்
அதிகாரிகளிடமிருந்தும் உயர் செயல்திறனை எதிர்பார்ப்பதாகவும், புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
ஒழுக்கமான பொலிஸ் துறை
ஒழுக்கமான பொலிஸ் துறையை நிறுவுவதே தனது ஒரே நோக்கம் என்றும், அதனை மிக உயர்ந்த இடத்தில் வைத்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.
அத்தோடு, பொலிஸ்மா அதிபராக நியமித்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் புதிய பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய இதன்போது தெரிவித்தார்.
அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்
அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம்
அனுராவுக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் ,வைத்தியசாலையில் மருந்தாளுநர்கள் இன்று அடையாள வேலைநிறுத்தம்
குருநாகல் போதனா வைத்தியசாலை
குருநாகல் போதனா வைத்தியசாலையில் இன்று (13) 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கவுள்ளதாக அரசாங்க மருந்தாளுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தகுதியற்ற மருந்து கலவை நிபுணரை வைத்தியசாலைக்கு நியமித்ததற்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் அஜித் திலகரத்ன தெரிவித்தார்.
அதன்படி, இந்த அடையாள வேலைநிறுத்தம் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
தகுதிவாய்ந்த மருந்தாளுநர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் போது, சேவை அவசியமின்றி ஒரு மருந்து கலவை நிபுணர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இது
சுகாதார சேவைகள் பணிப்பாளர்
குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இரண்டு முறை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் திலகரத்ன குறிப்பிட்டார்.
இருப்பினும், அதிகாரிகள் இந்த விடயத்தை புறக்கணித்ததன் காரணமாக இவ்வாறு அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி
ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி
ஹெலிகொப்டர் விபத்து நீதிமன்றில் விமானி ,இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212 ரக ஹெலிகொப்டர் பயிற்சியின் போது பறப்பட்ட 30 வினாடிக்குள், கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதி
விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன
விபத்துக்குள்ளானதாக பைலட் லெப்டினன்ட் போலன் ஜயவர்தன தெஹியத்தகண்டிய நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகி விமானப்படை மற்றும் இராணுவ விசேட
படையைச் சேர்ந்த 6 வீரர்களின் உயிரைப் பறித்த சம்பவம் தொடர்பான வழக்கு தெஹியத்தகண்டிய நீதவான்
பிரியந்த ஹால்யால முன்னிலையில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, தலைமை விமானி சாட்சியமளிக்கும் போதே இவ்வாறு நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
ஹெலிகொப்டர் கட்டுப்பாட்டை இழந்து மாதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் மோதியமைக்கு காரணம் தனது தவறு அல்ல என்று தான் நம்புவதாக
தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன
தலைமை விமானி லெப்டினன்ட் போலன் ஜயவர்தன மேலும் சாட்சியமளித்தார்.
ஹெலிகொப்டர் ஏதேனும் ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக அவர் கூறியுள்ளார், ஆனால் ஒரு குறிப்பிட்ட காரணம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த வழக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதவான், அன்றைய தினம் விபத்தில் இறந்த இரண்டு விமானப்படை வீரர்கள்
மற்றும் நான்கு இராணுவ விசேட படை வீரர்களின் மரணத்திற்கான காரணத்தை அறிவிக்கவும் தீர்மானித்துள்ளார்.
விமான விபத்து தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றத்தைக் குறிக்கும் அறிக்கையை அதே நாளில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு தெஹியத்தகண்டிய பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்
அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்
அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம்
அரச தனியார் பேருந்துகளில் AIதொழில்நுட்பம் ,அரச மற்றும் தனியார் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி புதிய தொழில்நுட்ப முறை பயன்படுத்தப்படும் என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
கதிர்காமம் பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், முதற்கட்டமாக 40 தொழிநுட்ப கருவிகளை பேருந்துகளில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படுமென தெரிவித்தார்.
சாரதிகள் சோர்வாக இருந்தால்
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சாரதிகள் சோர்வாக இருந்தால், தூக்கத்தில் இருந்தால், நித்திரைக் கலக்கம் இருந்தால் அல்லது பணியில் இருக்கும்போது செய்யக்கூடாத பிற விடயங்களைச் செய்தால், அவர்களுக்கு
நினைவூட்ட இந்த AI தொழில்நுட்பம் பயன்படும். இந்த அம்சங்களை இலங்கையில் உள்ள நிறுவனங்கள் பல வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் அவை இலங்கையில் பொதுப் போக்குவரத்திற்கு,
மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை
குறிப்பாக மில்லியன் கணக்கான மக்களை ஏற்றிச் செல்லும் இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளில் பயன்படுத்தப்படவில்லை. எனவே, அவர்களுடன் பேசிய பிறகு, அவர்கள்
தங்கள் நிர்வாக அறிவு, தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்களை வழங்க விருப்பத்துடன் முன்வந்தனர். முதற்கட்டமாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தனியார் பேருந்துகளுக்கு 40 கருவிகள் வழங்கப்படும்.
தமிழரை அலறவிட்ட படுகொலைகள்
தமிழரை அலறவிட்ட படுகொலைகள்
தமிழரை அலறவிட்ட படுகொலைகள் ,தமிழரை அலறவிட்ட படுகொலை சம்பவங்கள் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
தமிழர் வடக்கு பகுதியில் அதிகமான படுகொலைகள் சமீப நாட்களாக இடம்பெற்ற வண்ணம் காணப்படுகிறது .
வீதிகள் ,ஆறுகள், நீர்நிலைகள் ,கிணறுகள், பற்றை காடுகள்
வீதிகள் ,ஆறுகள், நீர்நிலைகள் ,கிணறுகள், பற்றை காடுகள் பாலடைந்த வீடுகள் என ,பல்வேறு தரப்பட்ட பகுதிகளிலிருந்து மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
ஆண் பெண்கள் என இரு பாலருடைய சடலங்களும் அடுத்தடுத்து மீட்கப்பட்டு வருவதால் இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நன்கு ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் இந்த படுகொலைகள்
ஆளுகின்ற அரசின் புலனாய்வு கட்டமைப்பு நன்கு ஒருங்கமைக்கப்பட்ட ரீதியில் இந்த படுகொலைகள் இடம் பெறுகிறதா
என்கின்ற சந்தேகத்தை இந்த படுகொலைகள் வெளிக்காட்டி உள்ளதாக மக்கள் இப்படி தெரிவித்து தமது அச்சத்தை வெளியிட்டு வருகின்றனர்.
50000 பேருக்கு காணி உறுதி
50000 பேருக்கு காணி உறுதி
50000 பேருக்கு காணி உறுதி ,காணி உரிமைப் பத்திரங்கள் மற்றும் அனுமதிப் பத்திரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘ஹிமிகம’ தேசிய திட்டம் இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதற்கமைய, கிளிநொச்சி – பளை மத்திய கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
விவசாயம், கால்நடை, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த தலைமையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தினூடாக ஆண்டு இறுதிக்குள் 50,000 பேருக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில், மோதலால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
இதனிடையே, முப்படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த 105,045 ஏக்கர் காணியில் 91% விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் சுனில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இருப்பினும் 26,330 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன.
வனவள திணைக்களம் மற்றும் பிற அரச நிறுவனங்களின் கீழ் உள்ள காணிகளும் இவற்றில் அடங்குவதுடன், எல்லை திருத்தங்களுக்குப் பின்னர் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் மீள கையளிக்கப்படும் என அவர் முன்னதாக தெரிவித்தார்.
அரசியல் மற்றும் சட்ட சவால்கள் இருந்தபோதிலும் நீண்டகால காணி பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக பிரதியமைச்சர் சுனில் ரணசிங்க குறிப்பிட்டுள்ளார்
வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்
வெளியான சிங்கள படுகொலை விபரங்கள்
வெளியான சிங்கள படுகொலை விபரங்கள் ,எமது தமிழ் இனத்தின் வரலாற்றை மாற்றி அமைக்க அப்பாவி பொது மக்களை ஈனரக்கம் இன்றி கொலை கடத்தல் கற்பழிப்பு ரயர்களுக்குள் போட்டு அரை.குறை.உயிரோடும்
கொலைவெறி கொண்டு ராணுவ புலனாய்வு மற்றும் ஊர் காவல் படையோடு இணைந்து நீங்கள் நடத்தியது எம்மால் மறக்கவும் முடியாது மன்னிக்கவும் முடியாது கடந்து போகவும் முடியாது.
நீங்கள் எம் இனத்தின் மீது நடத்திய வெறியாட்டம் பின்வரும் பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
பொத்துவில் 233கொலை👈
வீரமுனை 13037கொலை👈
காரைதீவு 789கொலை👈
பாலமுனை 457கொலை👈
அட்டபள்ளம்324கொலை👈
விநாயகபுரம் 89கொலை👈
அக்கரைப்பற்று 229கொலை👈
திருக்கோயில் 148கொலை👈
நயினாகாடு 95கொலை👈
பனங்காடு 136கொலை👈
மல்லீகைதீவு 567கொலை👈
மல்வத்தை 390கெலை👈
வளத்தாபிட்டி290கொலை👈
கல்முனை 234கொலை👈
மாளிகைகாடு கல்முனைக்குடி 789கொலை👈
நற்பிட்டிமுனை 103கொலை👈
சவளக்கடை 93கொலை👈
சொறிக்கல்முனை145கொலை👈
வெப்பையடி சந்தி 56கொலை👈
வைக்கல ஓட்டு பேக்கரி 97கொலை👈
வெல்லாவெளி சந்தி 59கொலை👈
இந்தியன் ரெயின் பேஸ் பக்கம் 81கொலை👈
பெரிய நீலாவணை 358கொலை👈
பாண்டிருப்பில் 459கொலை👈
துறைநீலாவணை 654கொலை👈
மருதமுனை அரிசி ஆலையில் உள்ளே வேலை நிமித்தமாக இருந்த அப்பாவி
தமிழர்கள் 65கொலை👈
ஒந்தாச்சிமடம் மாரக்கேட்312கொலை👈 அருகாமையில்
மகிழூர் பெரிய பாடசாலை வீதி வெட்டி துண்டு துண்டாக வீசி ப 450கொலை 👈
பட்டிருப்பு சந்தி96 கொலை👈 களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் அருகாமையில் 387கொலை👈
பேருந்து நிலையம் மாங்காடு 54.கொலை👈குருக்கள் மடம்58கொலை👈 புதுக்குடியிருப்பு. 567கொலை👈
கிரான் குளம்.87கொலை👈 ஆரையம்பதி 480.கொலை👈
ஏறாவூர் களுவங்கேணி 234.கொலை👈
மாவடி வேம்பு.47கொலை👈 கிரான்123👈 புலி பாய்ந்த கல்36👈 சந்திவெளி123👈 பழைய.89கொலை👈 பொது நூலக வீதி
வாழைச்சேனை781👈கொலை பாடசாலை வீதி
சத்திர கொண்டான் 234 👈கொலை. பால் மீன்.123👈கொலை .திராய்மடு .598.கொலை👈
புதிய முகத்துவாரம்( லைட்👈 office)👈✍👈
சித்தாண்டி.287.கொலை பாடசாலையில்👈 தங்கி இருந்த மக்களை
பலவந்தமாக வீதியில் அழைத்து கைகள் கால்கள்✍ கண்களை கட்டியும் கொன்று குவித்தது இந்த இன வெறி பிடித்த தேசம்.👈✍
இவ்வாறு எல்லாம் அழிந்து விட்டு👈 குருக்கள் மடம் மட்டும் ஞாபகம் வருதா கக்கிம் ஐயா இனி அடி அத்திவாரம்✍ இருந்து எழுத தொடங்கினால் பின்னால் முன்னால் எல்லாம் மூட வேண்டிய நிலை வரும் ✍✍✍
மிச்சம் கவனம் 👈👈
இவை அனைத்தும் கிழக்கில் நிலை👈 கொண்டுள்ள முஸ்லிம் காடையர்களாலும் ஊர்வால் படையாலும்.அரங்கேற்றபட்டது
எழுத்துக்கள் மீண்டும் எழுதுவோம்.✍✍
தவறுகள் இருப்பின் தெரியப்படுத்தவும்…
மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி
மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி
மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .
இந்தியாவின் அதானி குடும்பத்திற்கு காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கு காணிகள் பறிமுதல் செய்து அதனூடாக அங்கு காற்றாலை மின்சார உற்பத்திக்கு வித்திடப்பட்டது .
காற்றாலை மின்சாரம்
இந்த காற்றாலை மின்சாரம் அங்கு நிறுவுவதால் தமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் ஏனைய தொழில் வாய்ப்புகளுக்கு மிகப்பெரும்
நெருக்கடியை அதை ஏற்படுத்தும் என்கின்ற காரணத்தினால் மக்கள் போராட்டம் இடம்பெற்றது .
அதனை அடுத்து தற்பொழுது காற்றாலை மின்சார உற்பத்தி நிர்மாண பணிகள் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகம்
இது மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகமா ,அல்லது தேர்தல் முடிந்ததை பின்னர் மூலமும் தமது நடவடிக்கை அங்கு மேற்கொள்வர்களா என்ன சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
எது எப்படி இருந்தாலும் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மிகப் பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக மக்கள் மன்றம் கருத்துரைத்துள்ளது .
வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு
வடகிழக்கில் ஹர்த்தால்அறிவிப்பு
வடகிழக்கில் ஹர்த்தால் அறிவிப்பு ,வடகிழக்கு பகுதியில் கர்த்தால் இடம்பெற உள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது .
தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை
முல்லைத்தீவு பகுதியில் தமிழ் வாலிபன் ஒருவர் இராணுவத்தினரால் அடித்து படுகொலை செய்யப்பட்ட நிலையில், அதனை எதிர்க்கும் முகமாக இந்த கத்தால் கடைப்பிடிக்கப் போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமந்திரன் தலைமையிலான அணியினரே இந்த கர்த்தால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிராக கிழக்கு மாகாணத்தில் படு தோல்வியை சந்திக்க கூடும் என தகவல் வெளிவருகிறது.
முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன்
ஆனால் முல்லைத்தீவு பகுதியில் ரவிகரன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கின்ற காரணத்தினால், அங்கு முழுமையான ஹர்த்தால் இடம்பெறலாம் என்கின்ற கருத்து நிலவுகிறது
ஆகவே இது இரண்டு பட்ட நிலையை காண்பிப்பதுடன் குழப்பத்தை ஏற்படுத்தும் அணி தோற்பதுடன் ,குழப்பத்தை ஏற்படதா அணி மக்கள் நன்மதிப்பை பெற்று மக்கள் ஆதரவுடன் செயல்படுகின்ற நிலவரத்தை கானாபிக்கும் .
இந்த ஹர்த்தால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை காண்பிக்கப் போவதாக அங்கிருந்து வரும் களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஒரு தமிழன் மரணத்தில் ஒரு கட்சிக்குள் இரண்டு பட்ட நிலை முருகல் உச்சம் பெற்று இருப்பதை இதன் ஊடாக அனுமாணிக்க முடிகிறது.
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்
அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம்
அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பம் ,அனுரா கட்சிக்குள் குத்துச்சண்டை ஆரம்பித்துள்ளதாக தற்போது செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளது .
ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரா குமர திசநாயக்கா
ஜனாதிபதியாக விளங்கிவரும் அனுரா குமர திசநாயக்காவிற்கும் ,ஆளும் பிரதமர் ஹரிணிக்கு இடையில் முறுகல் உச்சம் பெற்றுள்ளது.
இந்த அடிதடிகள் உச்சம் பெற்று வருகிற நிலையில் ,தற்பொழுது அனுரா ஆட்சி விரைவில் கவிழ்க்கப்படலாம் என்ற விடயம் தெளிவாகிறது .
இலங்கையினுடைய அரசியல் வரலாற்றில் குறைந்த காலத்தில் ஆட்சியை இழக்கும் அபாயத்தில் தற்பொழுது அனுரா குமரா திசாநாயக்க சிக்கி தவித்து வருகிறார் .
பொருளாதாரத்தில் தள்ளாடி வருகின்ற இலங்கை
பொருளாதாரத்தில் தள்ளாடி வருகின்ற இலங்கையினுடைய பொருளாதாரம். அனுரா அரசை ஓட விட்டுக் கொண்டிருக்க ,இப்பொழுது கட்சிக்குள் உள் வீட்டு சண்டை ஆரம்பித்துள்ளது.
இது அனுராவுக்கு மிகப்பெரும் தலையிடியாக மாறியுள்ளதாக அவதானிகள் உள்ளக செய்திகளுடாக தெரிவித்து வருகின்றனர்.
அப்படி என்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்க பட போகிறது என்பதற்கான முன்னோட்டமாக இதனை பார்க்கலாம்.
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

யாழில் ஆணின் சடலம் மீட்பு
யாழில் ஆணின் சடலம் மீட்பு
யாழில் ஆணின் சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் மன்கும்பான் கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
அப்பகுதி வசித்த மக்கள் போலீசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ஊர்காவல்துறை போலீசாரிடம் மேற்கொண்ட விசாரணை அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆணினுடைய மனித சடலம் தற்போது யாழ்ப்பாண போதனை வைத்தியசாலையில் அனுப்பி
மரணப் பரிசோதனைகள்
வைக்கப்பட்டு, மரணப் பரிசோதனைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதி எங்கும் தொடராக இவ்வாறான மனிதச் சடலங்கள் மீட்கப்பட்டு வருகிற சம்பவத்தின் பின்புலத்தில், இலங்கையினுடைய நிழல் உளவு பிரிவுகள் ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
இந்தப் படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார்
இந்தப் படுகொலையின் பின்புலத்தில் உள்ளது யார் ஏன் இவ்வாறு இடம்பெறுகிறது என்பது தொடர்பாக, இதுவரை எவ்வித முடிச்சுகளும் அவிழ்க்கப்படவில்லை.
தமிழர்களை அச்சுறுத்துகிற வகையில் இந்த படுகொலைகள் இடம்பெறுகிறதா என்ற சந்தேகத்தை ,மேற்படி தொடர்ப படுகொலைகள் ஏற்படுத்தியுள்ளதாக சமூக நலவாதிகள் கருத்துரைத்து வருகின்றனர்.
கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு
கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு
கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு ,கிளிநொச்சி ஊற்றுப் புலப் பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு இறந்தவர் 68 வயதான பெண் எனவும் , வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் இவ்விதம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை மீட்ட போலீசார்
சடலத்தை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடல பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர்
தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர் நாள்தோறும் வீதிகள் பற்றை காடுகள் புதர்கள் நீர் ஏரிகள் பாழடைந்த வீடுகள்
என்பனவற்றிலிருந்து தமிழர்களுடைய சடலங்கள் தொடராக மீட்கப்பட்டு வருகிற அவலம் தொடர்கிறது .
இது 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கை ஒன்றாகவே இதனை பார்க்க முடிகிறது.
ஆகவே இந்த படுகொலைகள் யாவும் மர்மமாகவே தொடர்ந்து நிலை பெறுவதால் தமிழர்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு
வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு
வவுனியாவில் கிணற்றில் பெண்சடலம் மீட்பு வவுனியாவில் தனியார் கல்வி நிலைய கிணறு ஒன்றில் இருந்து உயர்தர மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில்
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் உள்ள தனியார் கல்வி நிலையம் ஒன்றில் உயர்தர வர்த்தகப் பிரிவு
மாணவர்களுக்கு காலையில் இருந்து மதியம் 12 மணிவரை வகுப்பு நடைபெற்றுள்ளது.
குறித்த கல்வி நிலையத்தில் உயர்தர வர்த்தகபிரிவு 2025 இல் கல்வி கற்ற குறித்த மாணவி நீண்ட நேரமாகியும் வீடு வந்து சேராமையால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் குறித்த மாணவியை தேடியுள்ளனர்.
இதன்போது, குறித்த மாணவியின் புத்தகப்பை, துவிச்சக்கர வண்டி என்பன மாணவி கல்வி பயின்ற தனியார் கல்வி நிலையத்தில் காணப்பட்டதுடன்,
அக் கல்வி நிலைய வளாகத்தில் இருந்த கிணற்றின் அருகே மாணவியின் செருப்பும் காணப்பட்டுள்ளது.
இதனையடுத்து, பெற்றோர் மற்றும் கல்வி நிலைய நிர்வாகத்தினர் வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிசார், மாநகர சபையினர், கிராம அலுவர், கிராம மக்கள்,
மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்
மாணவர்கள் எனப் பலரும் இணைந்து 40 அடி ஆழமான கிணற்றில் தேடுதல் மேற்கொண்டு குறித்த மாணவியை சடலமாக மாலை மீட்டு எடுத்தனர்.
குறித்த சம்பவத்தில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரி உயர்தர வர்த்தகப் பிரிவில் கல்வி பயிலும் வவுனியா, கோமரசன்குளம் பகுதியைச் சேர்ந்த மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
சடலமாக மீட்கப்பட்ட மாணவியின் உடலம் வவுனியா வைத்தியாசலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வவுனியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்ர்கள்.
- சவுதி ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தல்

- கத்தார் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட விமானியின் உடல் திருப்பி ஒப்படைக்கப்படும் ஈரான்

- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

யாழில் கோரவிபத்தில் ஒருவர் பலி
யாழில் கோரவிபத்தில் ஒருவர் பலி
யாழில் கோரவிபத்தில் ஒருவர் பலி யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ-9 வீதியின் மிருசுவில் பகுதியில் நேற்று (10) இரவு நான்கு
வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி
வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
கிளிநொச்சி திசையிலிருந்து யாழ் திசை நோக்கி பயணித்த காரும் – யாழ் திசையிலிருந்து கிளிநொச்சி திசை நோக்கிப் பயணித்த டிப்பர், கூலர்
வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன ஒன்றோடு ஒன்று மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தில் 35 வயதான நபரொருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்துக்குள்ளான வாகனங்கள்
விபத்துக்குள்ளான வாகனங்கள் கடுமையாக சேதமடைந்ததுடன், மூவர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு, அதில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
முல்லைஇளைஞன் மரணம் இராணுவ சிப்பாய்கைது
முல்லைஇளைஞன் மரணம் இராணுவ சிப்பாய்கைது
முல்லைஇளைஞன் மரணம் இராணுவ சிப்பாய்கைது முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட முத்துஐயன்கட்டு குளத்திலிருந்து இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது .
மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில்
செய்யப்பட்ட மூன்று இராணுவ சிப்பாய்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
கைதானவர்களை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள்
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பில் பிரதேச மக்கள் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய முத்துஐயன்கட்டு
இராணுவ முகாமை சேர்ந்த மூன்று இராணுவ சிப்பாய்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முத்துஐயன்கட்டு பகுதியை சேர்ந்த 05 இளைஞர்களை இரும்பு சேகரிக்க வருமாறு அழைத்து இராணுவ சிப்பாய்கள் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன்போது அங்கிருந்து தப்பிப்பதற்காக குளத்தில் குதித்த போதே குறித்த இளைஞன் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம்
ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம்
ராமேஸ்வரம் மீனவர் நிறுத்த போராட்டம் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள்
காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இன்று (11) காலை முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற 55 நாட்களில் 61 மீனவர்களையும் ஒன்பது படகுகளையும்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
மீனவர்களின் இந்த தொடர் கைது நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை படகுகளுடன் உடனடியாக விடுதலை
செய்யுமாறு வலியுறுத்தியும் இன்று (11) காலை முதல் ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
மீன்பிடி விசைப் படகுகள்
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக ராமேஸ்வரத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட மீன்பிடி விசைப் படகுகள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாமல் கரையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளதுடன், சுமார் 20,000 மேற்பட்ட
மீனவர்களும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலை இழந்துள்ளனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லாததால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வரை அந்நிய செலவாணி பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும், தவறும்
பட்சத்தில் வரும் 13 ஆம் திகதி ஆர்ப்பாட்டமும், 15ஆம் திகதி உண்ணாவிரத போராட்டமும், 19ஆம் திகதி ரயில் மறியல் போராட்டத்திலும் ஈடுபட போவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகம் காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக வெறிச்சோடி காணப்படுகிறது.












































