Tag: விஜயம்
மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம்
மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம்
மனிதப் புதைகுழிக்கு நீதிபதி விஜயம் ,குருக்கள் மடத்தில் உள்ள மனிதப் புதைகுழி அமைந்துள்ள இடத்தை நேரில் சென்று நீதிபதி உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பார்வையிட்டனர். Judge visits mass grave
1990 ஆம் ஆண்டில் புனித ஹஜ் யாத்திரை முடித்த பின்னர் கல்முனை வழியாக காத்தான்குடிக்கு பயணம் செய்த முஸ்லிம்கள், ஆயுததாரிகளால் இடைமறிக்க
பட்டு குருக்கள் மடத்தில் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு தொடர்புடைய வழக்கு விசாரணை களுவாஞ்சிக்குடி நீதவான்
நீதிமன்றத்தில் வியாழக்கிழமை(11) விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது உரிய நபர்களின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கருதப்பட்டு அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடத்தை நீதிபதி ஜே.பீ.ஏ.ரஞ்சித்குமார்
முன்னிலையில் தொல்பொருள் திணைக்களத்தினர், சட்டத்தரணிகள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர், பிரதேச சபைத்
தவிசாளர், பொலிஸார், காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகள், சட்ட வைத்திய நிபுணர்கள், தடயவியல் பொலிஸார், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், உள்ளிட்ட பலரும் பார்வையிட்டனர்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரும் உரிய இடத்திற்கு வருகை தந்திருந்தனர்.
சம்பவ இடத்தில் புதைக்கப்பட்ட மனித எச்சங்களை தோண்டி எடுக்குமாறு ஏற்கனவே களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த
நிலையில் ம் நீதிபதி தலைமையிலான உயர் அதிகாரிகள் உரிய இடத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
குருக்கள்மடம் கடற்கரைப் பகுதியை அண்மித்ததாக உள்ள இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு பொலிஸாருக்கு பாதுகாப்பு வலயம் அமைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.
ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம்
ரயில் நிலைய கண்காணிப்பு விஜயம்
ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் ,போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் .
அமைச்சர் பிமல் ரத்நாயக்க
அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நேற்று (14) பிற்பகல் நானுஓயா ரயில் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.
இவ்விஜயத்தின்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர, ஆராய்ச்சி மற்றும் உயர் கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன,
பாராளுமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் கலைச்செல்வி உள்ளிட்ட மாவட்ட அரச அதிகாரிகள் உடனிருந்தனர்.
அமைச்சர் நானுஓயா ரயில் நிலையத்தை பார்வையிட்டு, பிரதான அதிபர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, திருத்தப் பணிகள்,
நவீனமயமாக்கல் மற்றும் நிலையத்தில் உள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்ந்தார்.
சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்
சுற்றுலாப் பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் அதிகரிப்பு மற்றும் நானுஓயாவிலிருந்து பதுளை
செல்லும் ரயில்களுக்கு கூடுதல் பெட்டிகளை இணைத்து, அவற்றை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புனரமைப்பது குறித்து கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
மேலும், ரயில் நிலைய பணியாளர்களின் பிரச்சினைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் வாகன சாரதிகளின் பிரச்சினைகள் குறித்தும் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டன.
சீதுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஈரான் அதிபர் அஜர்பைஜானுக்கு விஜயம்
ஈரான் அதிபர் அஜர்பைஜானுக்கு விஜயம்
ஈரான் அதிபர் அஜர்பைஜானுக்கு விஜயம் செய்கிறார் ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், வரும் நாட்களில் அஜர்பைஜானுக்கு விஜயம் செய்ய உள்ளார். ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன், அஜர்பைஜானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வார் என்று APA தெரிவித்துள்ளது. உயர்மட்ட விஜயம் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும்.
சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம்
சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம்
சுகாதார அமைச்சர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு விஜயம் ,சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று காலை அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு சென்று, வைத்தியசாலைப் பணிப்பாளர் மற்றும் துணை
இயக்குநர் உள்ளிட்ட மருத்துவக் குழுவுடன் சிறப்புக் கூட்டத்தை நடாத்தினார்.
குறித்த சந்திப்பின் போது மருத்துவமனையில் பெண் வைத்தியர் ஒருவர் மீதான பாலியல் வன்புணர்வு சம்பவம் குறித்து பேசியதுடன் தற்போதைய நிலைமைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பிரபல பாடகர் இலங்கைக்கு விஜயம்
பிரபல பாடகர் இலங்கைக்கு விஜயம்
பிரபல பாடகர் இலங்கைக்கு விஜயம் ,உலகப் புகழ்பெற்ற அமெரிக்க பாடகர் ஆலோ பிளாக், இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு திங்கட்கிழமை (10) காலை கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்தார்.
உலகெங்கிலும் உள்ள 22 நாடுகளில் இசை தரவரிசையிலும் அமெரிக்காவில் கிராமி விருதுகளுக்கான பரிந்துரைக்கப்பட்டவர்களிலும் முதலிடத்தில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் சுகாதார துறையில் முதலீட்டுத் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கோமிக உடுகமசூரியவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கை வந்துள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவருக்கு இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய ஆகியோரால் வறவேற்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி டிசம்பரில் இந்தியாவுக்கு விஜயம்
ஜனாதிபதி டிசம்பரில் இந்தியாவுக்கு விஜயம்
ஜனாதிபதி டிசம்பரில் இந்தியாவுக்கு விஜயம் ,இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இலங்கை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க டிசம்பர்
மாத நடுப்பகுதியில் இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் திங்கட்கிழமை தெரிவித்தார்.
அவர் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார். திஸாநாயக்க செப்டெம்பர் மாதம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது அவரை
சந்தித்த முதல் வெளிநாட்டு பிரமுகரான வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் இந்த அழைப்பை விடுத்திருந்தார்.
திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செப்டம்பர் 23 அன்று பதவிக்கு வந்ததிலிருந்து ஜெய்சங்கர் அக்டோபர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதன் பின்னர் திஸாநாயக்கவின் முதலாவது அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சுப் பதவியைத் தக்கவைத்துக் கொண்ட ஹேரத், புதிய
அரசாங்கம் தீவின் ஆட்சியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த உலக நாடுகளுடன் இலங்கையின் உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இருப்பதாகத் தெரிவித்தார்.
ஏப்ரல் 2022 இல், தீவு நாடு 1948 இல் பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் அதன் முதல் இறையாண்மை இயல்புநிலையை அறிவித்தது.
முன்னோடியில்லாத நிதி நெருக்கடி அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை உள்நாட்டு அமைதியின்மைக்கு மத்தியில் 2022 இல் பதவியில் இருந்து விலக வழிவகுத்தது.
51 பில்லியனுக்கும் அதிகமான வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாக அறிவித்த பின்னர், ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியிலிருந்து தீவு தேசத்தை மீட்டெடுக்க இந்தியா சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்
உதவியை வழங்கியது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் (IOR) இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடான இலங்கை, ‘சாகர்’
(பிராந்தியத்தில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) மற்றும் ‘அண்டை நாடுகளின் முதல் கொள்கை’ போன்ற அதன் முன்முயற்சிகளில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளது.
IMF இலங்கை விஜயம்
IMF இலங்கை விஜயம்
IMF இலங்கை விஜயம் ,இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று நவம்பர் 17 முதல் 23 வரை கொழும்பிற்கு விஜயம் செய்யவுள்ளது.
IMF இன் விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் கீழான இலங்கையின் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் மூன்றாவது மதிப்பாய்வை இக்குழு நடாத்தவுள்ளதாக, IMF பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதையும் நாடு எதிர்நோக்கும் நிதி சவால்களை எதிர்கொள்வதையும் இலக்காகக் கொண்ட
சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதில் இந்த மீளாய்வு ஒரு முக்கியமான படியாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதித் திட்டம் இலங்கையின் பொருளாதார மீட்பு முயற்சிகளை எளிதாக்குவதற்கு தேவையான நிதி உதவி மற்றும் கொள்கை வழிகாட்டல்களை வழங்குகிறது
IMF குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது
IMF குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது
IMF குழு விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழுவொன்று விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்து, நாட்டின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வு
பற்றி கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பணிப்பாளர் கிருஷ்ண ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் இன்று (01) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த உடனேயே; நாங்கள் இலங்கையில் ஒரு பணியை மேற்கொண்டோம், அங்கு நாங்கள் ஜனாதிபதி மற்றும் அவரது குழுவினருடன் ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை நடத்தினோம்.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பது தெளிவாகிறது, மேலும் இந்த ஆதாயங்கள்
பாதுகாக்கப்பட வேண்டும். இதுவரை பெற்ற வெற்றிகளைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என்றார்.
புதிய அரசாங்கம் IMF-ஆதரவு திட்டத்திற்கு, குறிப்பாக நிதி மற்றும் கடன் இலக்குகள் தொடர்பாக முழுமையாக அர்ப்பணிப்புடன் இருப்பதாக சீனிவாசன் மேலும் வலியுறுத்தினார்.
“அடுத்த மறுஆய்வு பற்றிய விவாதங்களைத் தொடர இலங்கையில் இருந்து ஒரு குழு வாஷிங்டனில் இருந்தது, பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த மூன்றாவது மறுபரிசீலனைக்காக இந்த பேச்சுவார்த்தைகளை தொடர இலங்கைக்கு திரும்புவதே எங்களின் பணியாகும்” என்று அவர் கூறினார்.
IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்
IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம்
IMF பிரிதிநிதிகள் குழு இன்று இலங்கை விஜயம் ,சர்வதேச நாணய நிதியத்தின் உயர்மட்டக் குழுவொன்று இன்று (02) இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளது.
அதன்படி, நிதியத்தின் ஆசிய பசிபிக் துறையின் பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ஒக்டோபர் 4-ஆம் திகதி வரை நாட்டில் தங்க உள்ளனர்.
அவர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் புதிய அரசாங்கத்தின் பொருளாதார நிபுணர்களை சந்திக்க உள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, இலங்கையின் புதிய பொருளாதார அபிவிருத்திகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் இலங்கை பொருளாதார வேலைத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
நேற்று (01) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத், நிதியத்தின் வேலைத்திட்டம் தொடர்பான ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் மாத்திரமே நிதியத்தின் பிரதிநிதிகளுடன் நடத்தப்பட உள்ளதாக தெரிவித்தார்.
அதன் கட்டமைப்புப் பிரச்சினைகள் குறித்த விவாதம் ஒக்டோபர் மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெற உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

- மாத்தறையில் ஹெராயின், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

- கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி

- கிளிநொச்சியில் தாத்தாவின் வாடகைக் கார் மோதியதில் ஒரு வயது சிறுமி உயிரிழந்தார்

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியம்
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியம் ,இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (01) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்க உள்ளனர்.
இந்த கலந்துரையாடல் இன்று காலை இடம்பெறவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்போது சர்வதேச நாணய நிதியத்தின் நான்காவது தவணையை பெற்றுக்கொள்வது தொடர்பில் கவனம் செலுத்தப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
“நான்காவது தவணையை பெறுவதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.
எந்தத் தாமதமும் இன்றி, தேர்தல் காலத்திலும் அந்த வேலைத்திட்டத்தில் எவ்வித விலகலும் இன்றி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையைத் முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும்.
ஏனெனில் மூன்றாவது பரிசீலனையில் கிடைக்கவுள்ள 4வது தவணை எந்த வகையிலும் தாமதமானால் அது இலங்கையின் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அந்த விளைவை தவிர்க்க ஜனாதிபதி விசேட வேலைத்திட்டத்தை தயாரித்துள்ளார்.
வரவிருக்கும் காலத்தில், கடன் உரிமையாளர்களின் இந்த திட்டத்தை எவ்வாறு பாதுகாப்பது குறித்து கலந்துரையாட எதிர்பார்க்கின்றோம்” என்றார்.
இதேவேளை, இலங்கை க்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை நேற்று (31) மாலை சந்தித்துள்ளனர்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய கடன் தவணை தொடர்பிலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலும் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாசிம் மற்றும் ஹர்ஷ டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

- மாத்தறையில் ஹெராயின், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

- கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி

- கிளிநொச்சியில் தாத்தாவின் வாடகைக் கார் மோதியதில் ஒரு வயது சிறுமி உயிரிழந்தார்

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் 1,13,000-க்கும் மேற்பட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகம்

- மாத்தளையில் தந்தை கொலை வழக்கில் 16 வயது சிறுவன் கைது

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
சுகாதார அமைச்சர் யாழ் போதனா வைத்தியசாலைக்கு விஜயம்
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்

- மாத்தறையில் ஹெராயின், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது

- கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி

- கிளிநொச்சியில் தாத்தாவின் வாடகைக் கார் மோதியதில் ஒரு வயது சிறுமி உயிரிழந்தார்

- வறண்ட வானிலைக்கு மத்தியிலும் 1,13,000-க்கும் மேற்பட்ட மக்களுக்குக் குடிநீர் விநியோகம்

- மாத்தளையில் தந்தை கொலை வழக்கில் 16 வயது சிறுவன் கைது

- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி

- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு

- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு

உலக வங்கிக் குழுவினர் யாழுக்கு விஜயம்
உலக வங்கிக் குழுவினர் யாழுக்கு விஜயம்
இலங்கை வந்துள்ள உலக வங்கிக் குழு தினம்திங்கட்கிழமை (30) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளது.
அதன் போது , உலக வங்கியின் நிதியுதவியில் நடைபெறும் வேலைத்திட்டத்தை பார்வையிடுவதற்காக கோப்பாய் பிரதேச வைத்தியசாலைக்கு உலக வங்கி குழு விஜயம் செய்துள்ளது.
உலக வங்கியின் செயற்பாட்டு முகாமைத்துவப் பணிப்பாளர் அன்னா பிஜியர்ட் தலைமையில் குறிப்பிட்ட விஜயம் மேற்கொள்ளப்பட்டது.
- ஜனாதிபதியின் தலைமையில் இன்று முதல் தொடர் மக்கள் பேரணிகளை நடத்தவுள்ளது NPP
- பூட்டானுக்கான உத்தியோகப்பூர்வ பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் ஹரினி திரும்பினார்
- மாத்தறையில் ஹெராயின், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது
- கொஸ்கொட தாரகாவின்’ உறவினரைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு முயற்சி
- கிளிநொச்சியில் தாத்தாவின் வாடகைக் கார் மோதியதில் ஒரு வயது சிறுமி உயிரிழந்தார்























