Tag: பாராளுமன்றத்தில்
பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றத்தில் குழப்பம் சபை ஒத்துழைப்பு தற்போது ஆளுகிற அரசாங்கத்தின் பிரதி பாதுகாப்பு அமைச்சருக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவர பட்டது .
பிரதி பாதுகாப்பு அமைச்சர்
இந்த பிரதி பாதுகாப்பு அமைச்சர் என்பவர் முன்னாள் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசகுரவுக்கு எதிராக இந்த நம்பிக்கை கொண்டுவர கோரிக்கை விடுக்க பட்டது .
இவர் இறுதி முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் தமிழர்களை அழித்ததில் பிரதானியாக கடமையாற்றி இருந்தார்.
அவரே தற்போதுமேயர் ஜெனரலாக பதவி உயர்த்தப்பட்டு பிரதி பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உடனடியாக பதவி விலக்க வேண்டும்
இவரை உடனடியாக பதவி விலக்க வேண்டும் எனக் கூறி பாராளுமன்றத்தில் சஜித் உள்ளிட்ட எதிர்கட்சிகள் நம்பிக்கையில் பிரேரணை கொண்டு வந்தனர்.
அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் அறிவித்தார் .இதனால் பாராளுமன்றத்தில் குழப்பம் ஏற்பட்டது.
இந்த அமைதியின்மை காரணமாக சபை 10 நிமிடங்களுக்கு மேலாக ஒத்திவைக்கப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா
பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா
பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா ,பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட ஆச்சுடா ராமநாதன் சம்பவம் இன்று பாராளுமன்ற பர பரப்பாக இடம்பெற்றுள்ளது.
பாராளுமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கியமான விடயம் பேசப்பட்டு கொண்டிருந்த பொழுது, அங்கு அந்த பேச்சை குழப்பி சபையில் அநாகரிகத்தை மேற்கொண்டார் .
இதன் காரணத்தினால் அர்ச்சுனா இராமநாதன் அந்த பாராளுமன்றத் தேர்தலில் தூக்கி வீசப்பட்டார்.
தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தானே மீட்க வந்தவராகவும், தான் ஒருவரே பாராளுமன்றத்தை ஆட்டுவதாகவும், உருட்டி வந்து பொய்பித்தலாட்டம் ஆடிவந்த ,அர்ச்சுனா இராமநாதனுக்கு இந்த பாராளுமன்ற சாட்டையடி விழுந்திருக்கிறது.
நாள்தோறும் தமிழர் தமிழர் தேசியம் தமிழர் விடுதலை ,தமிழியம் தமிழ் பெண்கள் ,பெண்ணுரிமை எதிராக பேசி வருகின்றறார் அர்ச்சுனா.
பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அங்கு நடத்தப்படும் விவாதங்களை திசை திருப்பி ,நேரத்தை வீணடித்து அதனை குழப்புவதை நோக்கமாகக் கொண்டு அர்ச்சுனா செயல்பட்டார்.
அதன் அடிப்படையில் இப்பொழுது இன்று பாராளுமன்றத்தில் பேசுகின்ற பொழுது சபையை குழப்பினார் ,என்ற காரணத்தினால் அங்கிருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.
ஆக சபை குழப்பி என்கின்ற பெயர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எங்கே இலங்கை உடைய பாராளுமன்றம் சூட்டியிருக்கிறது.
ஆகவே சபை குழப்பி அர்ச்சனா இராமநாதன் தமிழருடைய சபைகளையும் தமிழ் தேசிய வரலாற்றை குழப்புகின்ற குழப்படி நாயகனாக காணப்படுகிறார்.
ஆகவே ஊசி கட்சிக்கு இன்று உருட்டி உருட்டி பாராளுமன்றத்தில் ஊசி போடப்பட்டு ,அர்ச்சனா ராமநாதன் இழுத்து வந்து, பாராளுமன்றத்துக்கு முன்னிலே வீசப்பட்ட சம்பவம் ,பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை
பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை
இலங்கை பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை முழு வடிவம் இதோ .
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் சரமரியாக பேசிய விடயம் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது .
இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து
1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, இதுவரை தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வருவதாக அவர தெரிவித்துள்ளார் .
தமிழர்களையும் இலங்கையினுடைய ஒரு குடிகளாக ஏற்று, அவர்களுக்கான சம உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுதுதான் ,மக்கள் ஒன்றாக வாழுகின்ற ஒரு ஒற்றை ஆட்சி நாடாக இதனை பார்க்க முடியும் என்பதாக அவரது கருத்து பதியப் பெற்றிருக்கிறது .
தமிழ் மக்களுக்கான உடனடியான உரிய தீர்வினை வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கப்பட விட்டால் , இந்த நாடு மிகப்பெரும் பேரழிவில் இருந்து மீளவும் எழுச்சி பெற முடியாது என்கின்ற ,விடயத்தினை ஆணித்தரமாக அவர் அங்கு தெரிவித்தார் .
அது தவிர அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ,அமைச்ச ஒருவர் தமிழ் கைதி ஒருவருடைய தலையில் காலை வைத்து, சப்பாத்தை நக்கும் படி கூறியதாக தெரிவித்துள்ளார் .
அவ்வாறான அமைச்சர் தற்பொழுது தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் எனவும் ,அவர்களுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாகவும் அவர் சூட்டிக் காட்டியுள்ளார் .
மேலும் சில தமிழ் அரசியல் தலைவர்களுக்கு மதுபான பத்திரங்கள் வழங்கி ,அதனூடாக தமது பக்கம் இழுத்து அரசியலை நகர்த்துகின்ற நடவடிக்கையில் இலங்கையினுடைய ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்கா ஈடுபட்டு ,உள்ளதான குற்றச்சாட்டினையும் ,சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .
சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி
சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி வர வேற்பையும் அவரது திறமையையும் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அவரது நல்லெண்ண வெளிப்பாட்டையும் இதனூடாக காண்பித்துள்ளது .
அதனால் பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்கு நிலையில் சிக்கித் தவித்த தமிழர்களும் ,இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை வரவேற்று உள்ளதாகவே பேசப்படுகின்றது .
சாணக்கியன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விரோதியாகவும், மக்களினால் அருவருக்கப்படுகின்ற அல்லது ஒதுக்கப்படுகின்ற, சுமந்திரன் வலது கையாக செயல்படுவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .
தேர்தல் வருகின்ற பொழுது பாராளுமன்றத்தில் ஏறி இவ்வாறு ,மக்களுக்கு எண்ணங்களை தூண்டிவிட .
உணர்ச்சிகரமாக பேசி தாங்கள் தமிழர்களின் ஏகப்பிரதிகள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே, திருவாளர் சாணக்கியன் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளதாக, ஒரு சில கருத்துக்களும் வரத்தான் செய்கின்றன.
Featured
முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் பாராளுமன்றத்தில் அதிருப்தி
முன்னாள் உபவேந்தர் மீது தாக்குதல் பாராளுமன்றத்தில் அதிருப்தி
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் அத்துல சேனாரத்ன மீது பல்கலைக்கழக மாணவர்கள் சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் சம்பவத்துக்கு பாராளுமன்றத்தில் இன்று (13) கவலை மற்றும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து உரையாற்றினார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்
பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் தாக்கப்பட்டமை பாரிய விடயமாகும். கல்வித்துறை பாரிய நெருக்கடியை நோக்கி செல்கிறது. வரலாற்றில் இவ்வாறான சம்பவம் இடம் பெற்றதில்லை. சம்பவம் தொடர்பில் கல்வி அமைச்சர் விசேட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். எதிர்காலத்தில் பல்கலைகழங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது இருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஒருவரை ஒருவர் நம்ப முடியாத தன்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஒருபோதும் பேராசிரியர் ஒருவர் அழுத்தத்திற்கோ அல்லது தாக்குதலுக்கோ உள்ளாகவில்லை.
அத்துல சேனாரத்ன என்பவர் இந்த நாட்டின் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு புவியியல் நிபுணர். இவ்வாறான சம்பவங்கள் இடம் பெற்றால் நாட்டில் நிபுணர்கள் நிச்சயம் நாட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். இவர் அந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர். இது குறித்து நாட்டில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னர் மாணவர்கள் மத்தியில் மோதல்கள் இருந்தது. தற்போது மாணவர்கள் விரிவுரையாளர்கள் மத்தியில் அது மோதலாக மாறி வருகிறது. நாட்டில் கல்வி உறுதி செய்யப்பட வேண்டும் என்றால் நாட்டில் இவ்வாறான மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும்.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன:
பேராதெனிய பல்கலைகழகத்தின் உபவேந்தர் அவரது புதல்வர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை, வீட்டை சேதப்படுத்தியமை தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டது.
இதன்போது பக்க சார்பற்ற விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி அறிவித்தார்.
வரலாற்றில் இடம்பெற்ற முதலாவது சம்பவம் இது அல்ல. வன்முறை காலப்பகுதியில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டென்லி விஜயசுந்தர கொல்லப்பட்டார்.
நாட்டின் பல்கலைக்கழகங்களில் சுதந்திரம் இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் அச்சம் பீதியின்றி செயற்பட முடியாது என்றால் அது கேள்வி குறியாகும். நாட்டில் பொது சட்டமுறை பல்கலைக்கழகங்களிலும் சட்டமாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்படுவதற்கு அரசியல் கட்சி, நிறம், பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து செயல்படுவோம்.
பல்கலைக்கழகங்கள், பாடசாலைகளில் போதை பொருள் பரவுவதை தடுப்பதற்காக விசேட ஜனாதிபதி செயலணி நியமிப்பதற்காக பிரேரணை நிறைவேற்றப்பட வேண்டும்.
எதிர்க்கட்சியின் பிரதம கொறடா லக்ஸ்மன் கிரியெல்ல
இந்த சம்பவத்தை ஐக்கிய மக்கள் சக்தி கண்டிக்கின்றது. சம்பவத்தை அனுமதிப்பதில்லை. தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு கோருகின்றோம்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு கல்வியை தொடர்வதற்கு அமைதி சூழ்நிலை இருக்க வேண்டும். பேராதனை பல்கலைக்கழகம் ஒக்ஸ்போட் கேம்பிரிட்ஜ் முறைக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் இதன் நோக்கம் நிறைவேற்றப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர் அசோக பிரியந்த
பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட போது இவ்வாறு ஒன்றிணைந்திருந்தால்
இந்த பிரச்சினையை தடுத்திருக்க முடியும். எனது வீட்டை தாக்கினர். எனக்கு தற்போது வீடு இல்லை.
பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரியதர்சன யாப்பா
இவ்வாறான சம்பவங்களை நாம் தினமும் காண்கின்றோம். இருப்பினும் இது உச்சக்கட்டமாகும். பல்கலைக்கழகங்கள் வரி மூலம் நடத்தப்படுகின்றன. பல்கலைக்கழக மாணவர்களும் இந்த வரி மூலமே கல்வி கற்கின்றனர். இன்று உலகில் அனைத்து பல்கலைக்கழங்களிலும் இவ்வாறான கேலிக்குரிய வன்முறைகள் இல்லை. இம்முறை இதனை பெரும் சிந்தனையுடன் அறிந்துக்கொண்டு செயல்பட வேண்டும். பாரிய வன்முறைக்கு இடமளிக்கக் கூடிய நிலைமையாகும்.
பாராளுமன்ற உறுப்பினர் சமான் பிரிய ஹேரத்
நாம் செய்வது என்னவெனில் சம்பவம் குறித்து கவலை தெரிவிப்பது மட்டுமே இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. 74 பாராளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் தீயிடப்பட்டன.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் எமது விகாரையின் பிக்குவை கண்ணத்தில் அறைந்துள்ளார். இன்று நாடு இவ்வாறான நிலைமைக்கு உள்ளாகியுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் டி.பி ஹேரத்
இது மனித உரிமை மீறலாகும். புத்தி கூர்மை மிக்கவர்களை உருவாக்கும் இடத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுமாயின் அது வெட்கப்பட வேண்டிய விடயமாகும்.
இவ்வாறான சம்பவங்களுக்கு கவலை தெரிவித்து நிறுத்த முடியாது. நாட்டில் பாரிய நெருக்கடி நிலைமை உண்டு. இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான சம்பவங்கள் மூலம் பொதுவான நிலை தெரிகின்றது. இந்த சீரழிக்கும் சம்பவத்தை சமூகத்தில் இருந்து நீக்க வேண்டும்.
பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில்
பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இந்த images 2விசாரணை பெறுபேறுகளை அறிந்து கொள்வதற்கு எமக்கு உரிமை உண்டு பாராளுமன்ற உறுப்பினரின் உயிர் இழக்கப்பட்டது. சொத்துக்கள் இழக்கப்பட்டன. இதேபோன்று இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலாகும். விசாரணை அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பியுங்கள்.
இது குறித்து விரிவான பிரச்சாரத்தை வழங்குங்கள். சில விடயங்களை பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியாது நீங்கள் தலையிட்டு செயல்படுத்துங்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் குணதிலக ராஜபக்ச
இந்த சம்பவம் ஆர்ப்பாட்டத்திற்கு பின்னரே ஏற்பட்டது. இதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் முற்போக்கு இடதுசாரி முன்னணி கட்சியும் பொறுப்பு கூறவேண்டும். பேராசிரியருக்கு எதிராக செயல்பட்ட மாணவர்கள் தொடர்பில் சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஆளும் கட்சியின் பிரதம கொறடா பிரசன்ன ரணதுங்க
நாம் அனைவரும் இந்த சம்பவத்தை கண்டிக்கின்றோம். சம்பவம் தொடர்பில் சட்டத்தை சரியான முறையில் நடைமுறைப்படுத்துமாறு நான் கோருகின்றேன்.
இவர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது சில அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றனர். 2 விதமான பேச்சு தேவையில்லை. சட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும்.
வீடுகளை சேதப்படுத்துவதற்கு தூண்டியவர்கள் மத்தியில் பேராசிரியர்கள் இருந்தனர். சில பேராசிரியர்கள் சில பேராசிரியர்களின் வீடுகளில் தீ வைக்க சென்றனர். இன்று அப்பாவி பல்கலைக்கழகமாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு செல்ல அஞ்சுகின்றனர்.
பல நிறுவனங்களை அரச பல்கலைக்கழக மாணவர்களை சேர்த்துக் கொள்ள அஞ்சுகின்றனர். இதனாலே தனியார் பல்கலைக்கழக மாணவர்களை இணைத்துக்கொள்கின்றனர்.
இந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு நானும் கூறுகின்றேன்.மாணவர்களுக்கு ஜஸ் போதைப் பொருளை கொடுத்து அவர்களின் மனநிலையை மாற்றியுள்ளனர். சிலபேராசிரியர்கள் அடியுங்கள் உதையுங்கள் கொல்லுங்கள் என்று பேசுகின்றனர்.
கெளரவ சபாநாயகர் அவர்களே. இதற்கான சட்டம் நடைமுறையில் உள்ளது இந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சில அரசியல் கட்சிகள் இளைஞர்களைக் கைது செய்வது ஜனநாயக விரோதம் என்று கூறுவார்கள். மே 9 இச்சம்பவம் குறித்து கூறும்போது பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் டாக்டர் பேராசிரியர்களின் நடத்தை பற்றி நான் முன்பு பேசினேன்.
அந்த பேச்சு முடிந்ததும் ஃபேஸ்புக்கில் கண்டனத்திற்குள்ளானேன். நான் மனசாட்சியுள்ள ஒரு பேச்சாளன். வீடுகளுக்கு தீ வைக்க குழந்தைகளை தூண்ட அரசியல் பின்னணி கொண்ட ஒரு குறிப்பிட்ட குழு இருந்தது. எல்லோரும் இல்லை. ஒரு குறிப்பிட்ட குழு சில காலமாக குடும்ப வன்முறை மற்றும் பயங்கரவாதத்தில் ஈடுபட ஏற்பாடு செய்துள்ளது. இல்லை என்று சொல்ல முடியாது.
பாராளுமன்ற உறுப்பினர் எஸ். பி. திஸாநாயக்க:
இந்த சம்பவத்துக்கு மக்கள் விடுதலை முன்னணி, முற்போக்கு சோசலிச முன்னணி பொறுப்பு கூற வேண்டும். இவர்களுக்கு எதிராக சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
வரலாற்றிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளனர்.
பாராளுமன்றத்தில் பதற்றம் – சபாநாயகரின் அறிவிப்பு
பாராளுமன்றத்தில் பதற்றம் – சபாநாயகரின் அறிவிப்பு
பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை காரணமாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு சபாநாயகர் அறிவித்துள்ளார்.
இன்று காலை பாராளுமன்றம் ஆரம்பமானதும் வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா உரையாற்றினார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நிமல் லான்சாவை தாக்க முயற்சித்ததன் காரணமாக சபாநாயகர்
சமிந்த விஜேசிறியை சபையை விட்டு வெளியேறுமாறு அறிவித்துள்ளார்.
Featured
நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விளக்கினார்
நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விளக்கினார்
அண்மைக்கால வரலாற்றில் நாடு எதிர்நோக்கிய பாரிய பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்காக பழைய முரண்பாடுகளை மறந்து பொது வேலைத்திட்டத்தில் அனைவரையும் இணையுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான நான்கு கட்ட மூலோபாயத் திட்டத்தை அறிமுகப்படுத்திய ஜனாதிபதி, முதல் கட்டம் வெற்றியடைந்துள்ளதாகவும், இரண்டாவது கட்டத்திற்கான அடித்தளம் தயாராகி வருவதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இன்று (06) பாராளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள், விசேட உரையொன்றை நிகழ்த்தினார்.
ஜப்பான்-பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கான விஜயம் தொடர்பில் பாராளுமன்றத்தில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, கடன் மறுசீரமைப்புப் பணிகளில் மத்தியஸ்தராக ஜப்பான் முன்னணி வகிக்க உடன்பட்டிருப்பது
நல்லதொரு அறிகுறி எனவும், கடன் வழங்கிய நாடுகளின் மாநாட்டின் இணைத் தலைமை பொறுப்பை ஜப்பானுக்கு வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
கடன் வழங்கி உள்ள இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனும், ஏனைய கடன் வழங்குனர்களுடனும் நடத்தப்படும்
பேச்சுவார்த்தைகளின் முன்னேற்றம் தொடர்பிலும் மிக விரைவில் அவர்களுடன் பலதரப்பு இணக்கப்பாட்டை எட்டுவது குறித்தும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், சிங்கப்பூர் பிரதமர் லீ ஷென் லோனுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பில் பாராளுமன்றத்தில் விளக்கமளித்த ஜனாதிபதி,
கடந்த காலத்தில் கைவிடப்பட்ட சிங்கப்பூர்-இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மீண்டும் புத்துயிர் பெறச் செய்ய வேண்டுமெனவும் இங்கு குறிப்பிட்டார்.
அதன் ஊடாக சிங்கப்பூருடன் நிலையான பொருளாதார அணுகுமுறையை ஏற்படுத்துவதன் வாய்ப்பு தொடர்பாகவும் தென்கிழக்காசியாவுடனான
நாட்டின் பொருளாதார உறவுகளை வலுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறு பற்றியும் ஜனாதிபதி எடுத்துரைத்தார்.
விவசாயத் துறை தொடர்பில் துரிதமாக மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களினால் கடந்த போகத்தில் எதிர்பார்த்ததை விட அதிக அறுவடையை பெற முடிந்ததாகவும், அடுத்த பெரும் போகத்தை எவ்வித
தடையுமின்றி வெற்றிகரமாக மேற்கொள்வதற்கு தேவையான விதைநெல் மற்றும் உரங்கள் என்பன தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேலும் தெரிவித்தார்.
உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக துரித உணவு உற்பத்தி வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட
ஜனாதிபதி,பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கத்தைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
பொருளாதார நெருக்கடிகளைத் தீர்க்கத் தேவையான எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் விளக்கினார்.
















































