மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது
Posted in இலங்கை செய்திகள்

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது

மத்திய அதிவேக நெடுஞ்சாலை கன்னோருவா வரை நீட்டிக்கப்பட உள்ளது மத்திய அதிவேக நெடுஞ்சாலையை எதிர்காலத்தில் கன்னோருவா வரை நீட்டிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து,

நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்

நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று (09) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் அனுராதா ஜெயரத்ன எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ரத்நாயக்க, கண்டியில் உள்ள சாலை வலையமைப்பை

மேம்படுத்துவதற்காக பல்வேறு சாலை அபிவிருத்தி திட்டங்களும் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், மோசமான வானிலை மற்றும் நிலச்சரிவுகளால் சேதமடைந்த கொழும்பு–கண்டி மலையக இரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் இந்த

ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027 ஆம் ஆண்டின் முதல் இரண்டு மாதங்களுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இரயில் பாதையை சீரமைப்பதில் ஏற்படும் தாமதம் குறித்து கவலை தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் அனுராதா ஜெயரத்னவால் இந்த விவகாரம்

எழுப்பப்பட்டது. இரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால் கண்டியின் சுற்றுலாத் துறையில் குறிப்பிடத்தக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டிக்கு இரயில் சேவை

கண்டிக்கு இரயில் சேவை இல்லாதது பொருளாதாரச் சிக்கல்களுக்கான காரணங்களில் ஒன்றாக மாறியுள்ளது.

“மலைப்பகுதி இரயில் பயணம் பல சுற்றுலாப் பயணிகளின் விருப்பப் பட்டியலில் உள்ளது, மேலும் இந்த நீண்டகால மூடல் சுற்றுலாத் துறையைப்

பாதிக்கிறது,” என்று கூறிய நாடாளுமன்ற உறுப்பினர், விரைவான கட்டுமான முறைகளைக் கடைப்பிடிக்கவும், பாதிக்கப்பட்ட இடங்களுக்கான அணுகலை மேம்படுத்தவும் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

இந்தக் கவலைகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரத்நாயக்க, கட்டுமானப் பொருட்களை இரயில் பாதை வழியாக மட்டுமே கொண்டு செல்ல முடியும் என்பதால், பழுதுபார்க்கும் பணி குறிப்பாகச் சவாலானது என்று விளக்கினார்.

“இந்த இடங்களில் பலவற்றிற்குப் பொருட்களைக் கொண்டு செல்ல மாற்று வழி இல்லை. சில பகுதிகள், குறிப்பாக நானு ஓயா மற்றும் அம்பேவெல இடையேயானவை,

பாதுகாக்கப்பட்ட வன இருப்புக்கள் மற்றும் மலைப்பாங்கான நிலப்பரப்புகள் வழியாகச் செல்கின்றன, இதனால் அணுகுவது மிகவும் கடினமாக உள்ளது,” என்று அமைச்சர் கூறினார்.

இரயில்வே திணைக்களம் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் (NBRO) பொறியாளர்கள் ஜனவரி மாதம் முதல் இந்தத் திட்டத்தில் பணியாற்றி

வருவதாகவும், கடுமையாக நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சில இடங்களுக்கு NBRO-வால் மட்டுமே மேற்கொள்ளக்கூடிய சிறப்புப் பொறியியல் தீர்வுகள் தேவைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“உள்ளூர்வாசிகளின் ஆதரவுடன் நாங்கள் தற்காலிக அணுகுசாலைகளை உருவாக்கி வருகிறோம். மேலும், பணிகளை விரைவுபடுத்துவதற்காக ரயில் என்ஜின்களை சாலை வழியாகக் கொண்டு சென்றுள்ளோம்.

இந்த முயற்சிகள், வழக்கமாக சாத்தியமானதை விட மிக வேகமாக இத்திட்டத்தை நிறைவு செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன,” என்று அவர் மேலும் கூறினார்.

வத்தேகம–மாத்தளைப் பகுதியைத் தவிர, சேதமடைந்த மற்ற அனைத்து ரயில் பாதைப் பகுதிகளையும் 2026 ஆம் ஆண்டின் இறுதிக்குள் அல்லது 2027 ஆம்

ஆண்டு ஜனவரி–பிப்ரவரி மாதத்திற்குள் சீரமைத்துவிட முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

“பணியின் சிக்கலான தன்மை காரணமாக, வத்தேகம–மாத்தளைப் பகுதிக்குக் கூடுதலாக ஆறு மாதங்கள் தேவைப்படலாம்,” என்று அமைச்சர் ரத்நாயக்க மேலும் கூறினார்.

அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்

அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம்

அதிவேக நெடுஞ்சாலை பணிகள் ஆரம்பம் ,கடவத்தமீரி கமா அதிவக நெடுஞ்சாலைகள் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அனுரா குமர திசைநாயக்க கட்டுமான பணிகள் ஆரம்பித்து வைக்க உள்ளார்.

சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி

மேலும் திட்டத்தை தொடங்க சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வழங்கிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டவர் கடன் பெறப்பட்டுள்ளது.

31 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த அதி நெடுந்தாலையின் பணிகள் 2021 ஆம் ஆண்டில் நடுப்பகுதியில் நடவடி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனுடன் கடவத்தை இடமறு வழி மாற்றுக்கருவத்திலிருந்து அதிவாக நெடுஞ்சாலைகள் முதல் 500 மீட்டர் பணிகளும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளது.

வீதியை அமைக்கும் இலங்கை

சீனாவிடம் கடனை வேண்டி வீதியை அமைக்கும் இலங்கை அதை எவ்வாறு மீள செலுத்த போகிறது.

46 பில்லியன் டாலர் கடன் இருக்கின்ற பொழுது மீளவும் கடனை வேண்டி குவிக்கின்றது ஆளும் அரசு குறிப்பிடத்தக்கது

அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF
Posted in இலங்கை செய்திகள்

அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF

அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF

அதிவேக நெடுஞ்சாலையில் மீண்டும் STF ,அதிவேக நெடுஞ்சாலைகளுக்கு நேற்று (11) இரவு முதல் சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துகள் ஏற்படும் போது உயிர்காக்கும் மற்றும் தீயணைப்பு சேவைகளுக்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திடீரென இராணுவம் குவிக்க பட்டுள்ள செயல் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி
Posted in இலங்கை செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கவிழ்ந்த லொறி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் லொறி ஒன்று விபத்திற்குள்ளானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, மாத்தறை நோக்கிச் செல்லும் அனைத்து கனரக வாகனங்களையும் பின்னதுவயில் இருந்து வெளியேறுமாறு வீதி அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

பின்னதுவைக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம்
Posted in இலங்கை செய்திகள்

நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம்

நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம்

நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பெரிய கொங்ரீட் தளம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.

பெம்முல்ல கந்தஒலுவாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பகுதியொன்றே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.

நேற்று மதியம் இந்த கொங்ரீட் தளம் உடைந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொடை மற்றும் களனிகம இடையே 20.7 கிலோ மீற்றர் துாணுக்கு அருகில் மாத்தறையிலிருந்து

கொட்டாவை நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் கவிழ்ந்து வீதி முற்றாக மூடப்பட்டுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.

எனவே மாத்தறையிலிருந்து பயணிக்கும் வாகனங்கள் அனைத்தும் தொடங்கொடையில் வெளியேறி மத்துகம-களுத்துறை வீதியில் பயணித்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

களனிகம ஊடாக மீண்டும் அதிவேக நெடுஞ்சாலைக்குள் நுழைய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காலி வீதி ஊடாகவும் கொழும்பு நோக்கி பயணிக்கலாம் என குறிப்பிடப்படுகிறது.

நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு வீதியின் ஒரு மருங்கையேனும் திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.