Tag: மதுபோதை
மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி
மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி
மதுபோதையால் நாளொன்றுக்கு 55பேர் பலி யாகி வருவதாக இலங்கையின் புள்ளி விபர தகவல்கள் தெரிவிக்கின்றது .55 people die every day due to alcohol intoxication
இலங்கையில் ஒருவர் குடியினால் மரணம் One person dies from alcohol poisoning in Sri Lanka
அவ்வாறு நோக்கின் ஒவ்வொரு முப்பது நிமிடத்திற்கும் இலங்கையில் ஒருவர் குடியினால் மரணம் ஆகி வருகின்ற அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகி இருக்கிறது .
நாள் ஒன்றுக்கு 55 பேர் மது போதையால் பலியாகி வருகிற பொழுது, அதை ஏன் ஆளுகிற அரசுகள் தடுக்கவில்லை என்ற கேள்வி மட்டும் எழுகிறது .
வருடம் ஒன்றுக்கு இருபதாயிரம் முதல் 23 ஆயிரம் பேர் அதிகமான போதை காரணமாக மரணமாகி வருகிறார்கள்.
ஈரல் கருகி பல நூற்றுக்கணக்கானவர் பலி Hundreds of people died from liver burns.
இந்த மரணத்தை தடுப்பது யார் இந்த மரணங்கள் ஏற்படுவது ஏன் சாராயக்கடைகளை தொடர்ந்து சாராயங்களை அதிகமாக விற்பதால் ஈரல் கருகி பல நூற்றுக்கணக்கானவர் பலியாகி வருகின்றனர்.
வளர்ச்சி அடைந்த நாட்டில் குடிகாரர்கள் அதிகமாக வளர்த்துவிட்டு உள்ளதை இந்த சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.
மேற்படி புள்ளி விவரங்கள் தமிழ் சமுதாயத்தை இலங்கை வாழ் மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
வருடம் ஒன்றுக்கு வீட்டிலிருந்து 26 பில்லியனுக்கு சாராயங்கள் தயாரிக்க பட்டு விற்கப்படுகின்றன.
நாட்டில் வாழுகிற மக்கள் தொகையில் 47 விதமானவர் போதைக்குஅடிமையாய் உள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கிறது.
மதுபோதையில் இருந்த சாரதிக்கு வாழ்நாள் ரத்து
மதுபோதையில் இருந்த சாரதிக்கு வாழ்நாள் ரத்து
மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற ஓட்டுநரின் ஓட்டுநர் உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ஷ உத்தரவிட்டார். அதற்கு மேலதிகமாக ரூ. 40,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
வேதநாகம் எட்வின் நிமல் என்ற பேருந்து ஓட்டுநருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டது.
தனியார் நிறுவன ஊழியர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு பாணந்துறையிலிருந்து களுத்துறை நோக்கிப் பயணித்த பேருந்து, பாணந்துறை நல்லுருவப் பகுதியில் நிறுத்தப்பட்டு, சோதனை
செய்யப்பட்டபோது, சாரதிக்கு மது வாசனை வந்தது. பொலிஸார் அவரைக் காவலில் எடுத்து, பரிசோதனையின் போது அவர் மது அருந்தியிருந்ததை உறுதிப்படுத்தினர்.
அதன்படி, பயணிகளின் உயிருக்கு ஆபத்தை விளைவித்ததற்காக அவர்களை கடுமையாக எச்சரித்த பின்னர் தலைமை நீதவான் தண்டனையை விதித்தார்.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்

- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG

- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG

- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG

தப்பிச் சென்ற கைதி மதுபோதையில் கைது
தப்பிச் சென்ற கைதி மதுபோதையில் கைது
தப்பிச் சென்ற கைதி மதுபோதையில் கைது ,சிறைச்சாலை அதிகாரிகளிடமிருந்து தப்பிச் சென்ற சந்தேக நபர் மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த போது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் ஒரு சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தவர் என்பது தெரியவந்துள்ளது.
தம்புத்தேகம பொலிஸ் பிரிவில், அனுராதபுரம்-பாதெனிய பிரதான வீதியில் உள்ள கோன்வெவ பகுதியில், மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக சந்தேக நபர், மோட்டார் சைக்கிளுடன், தம்புத்தேகம பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குருநாகல், அஸ்வெத்தும பகுதியைச் சேர்ந்த 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைப்பற்றப்பட்ட மோட்டார் சைக்கிள் நேற்று (24) அனுராதபுரம் பொலிஸ் பிரிவில் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் என்பது தெரியவந்தது.
மேலும், இந்த சந்தேக நபர் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக குருநாகல் பொலிஸ் நிலையத்தால் கைது செய்யப்பட்டு, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாகவும்,
அவருக்கு ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சிறை அதிகாரிகளிடமிருந்து அவர் தப்பிச் சென்றுள்ளமையும், சந்தேகநபருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்புத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
- தேனிசை செல்லப்பா நிகழ்வு காட்சிகள்
- வீரத்தின் குரலோனே வீரவணக்கம் | தேனிசை செப்பாவின் நினைவு பாடல் |பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- ஒரு முறை எழுவாயா | இந்த குரல் இனி ஒலிக்காதோ | பாசறை பாணர் செல்லப்பா பாடல் Thenisai Chellappa SONG
- தேனிசை உறங்கியதோ |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEW SONG
- பாயும் புலியே செல்லப்பா |கண்ணீர் பாடல் | பாசறை பாணர் செல்லப்பா பாடல் |Thenisai Chellappa NEWSONG











