ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி தன்னுயிரை மாய்த்த காதலன்
Posted in உலக செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி தன்னுயிரை மாய்த்த காதலன்

ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி தன்னுயிரை மாய்த்த காதலன்

ஹமாஸ் தாக்குதலில் காதலி பலி தன்னுயிரை மாய்த்த காதலன் ,காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேலுக்குள் புகுந்து பயங்கரவாத தாக்குதல்

இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்

நடத்தினர். இந்த தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 251 பேரை பணய கைதிகளாக காசா முனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது.

தாமரைச்செல்வி அவர்களின் தீதும் நன்றும் சிறுகதை அறிமுகம்
தாமரைச்செல்வி அவர்களின் தீதும் நன்றும் சிறுகதை அறிமுகம்

இதையடுத்து, ஹமாஸ் ஆயுதக்குழு மீது போர் அறிவித்த இஸ்ரேல் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தியது. மேலும், பணய கைதிகள் பலரை ராணுவ நடவடிக்கை, ஒப்பந்தம் மூலம் இஸ்ரேல் மீட்டது.

இந்த தாக்குதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதேவேளை, இஸ்ரேல், ஹமாஸ் இடையே தற்காலிக போர் நிறுத்தம் அமலுக்கு

வந்துள்ளது. ஹமாஸ் தங்கள் வசம் உள்ள எஞ்சிய 20 இஸ்ரேலிய பணய கைதிகளை இன்று விடுதலை செய்கிறது.

இதனிடையே, இஸ்ரேலை சேர்ந்த இளைஞர் ரோயி ஷலீவ் (வயது 30). இவரது காதலி மபெல் ஆடம். 2023 அக்டோபர் 7ம் தேதி ரோயி ஷலிவ் தனது காதலி

மபெல் ஆடம் மற்றும் தனது நண்பர் ஹிலி சாலமோனுடன் கிப்ருட்ஸ் பகுதியில் நடைபெற்ற நோவா இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, அந்த இசை

ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கொடூர தாக்குதல்

நிகழ்ச்சிக்குள் புகுந்த ஹமாஸ் ஆயுதக்குழுவினர் கொடூர தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ரோயி ஷலீவ்வின் கண்முன்னே அவரது காதலி

மபெல் ஆடம் கொல்லப்பட்டார். ஹமாஸ் ஆயுதக்குழுவின தாக்குதலில் ரோயி ஷலீவ் படுகாயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்நிலையில், ஹமாஸ் தாக்குதலில் காதலி மபெல் ஆடல் உயிரிழந்து 2 ஆண்டுகள் கடந்த நிலையில் ரோயி ஷலீவ் நேற்று முன் தினம் தற்கொலை

செய்துகொண்டார். கடந்த 2 ஆண்டுகளாக ரோயி ஷலீவ் காதலியில் நினைவாகவே இருந்துள்ளார்.

கடந்த அக்டோபர் 7ம் திகதி ஹமாஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2ம் ஆண்டு அஞ்சலி அனுசரிக்கப்பட்டது. அன்றுமுதல் ரோயி ஷலீவ் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார்.

இதையடுத்து, வெள்ளிக்கிழமை (அக்.10) டெல் அவிவ் நகரில் தனது வீட்டின் அருகே காருக்குள் இருந்தவாறு ரோயி ஷலீவ் தன்னுயிரை

மாய்த்துக்கொண்டார். தகவலறிந்து சென்ற பொலிஸார் ரோயி ஷலீவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஹமாஸ் ஆயுதக்குழுவால் காதலி மபெல் ஆடம் கொல்லப்பட்ட நிலையில் 2 ஆண்டுகள்

கழித்து ரோயி ஷலீவ் தன்னுயிரை மாய்த்துக்​கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்னதாக, 2023 அக்டோபர் 7 ஹமாஸ் தாக்குதலில் மபெல் ஆடம் கொல்லப்பட்ட சில நாட்களில் ரோயி ஷலிவ்வின் தாயாரும் தன்னுயிரை மாய்த்துக்கொண்டார். என்பது குறிப்பிடத்தக்கது.

காதலியை கொல்லவந்த காதலன் திருந்தினார்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கொல்லவந்த காதலன் திருந்தினார்

காதலியை கொல்லவந்த காதலன் திருந்தினார்

காதலியை கொல்லவந்த காதலன் திருந்தினார் ,தனது பிரிந்த காதலியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தச் சென்ற காதலன், அவரது முகத்தை பார்த்து .

வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு

பரிதாபப்பட்டு, வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்ற சம்பவமொன்று கோவிந்தபுரம் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம், கோவிந்துபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தம ரிதிகஹவத்தே பகுதியில், கடந்த 11 ஆம் திகதி காலை இடம்பெற்றுள்ளது.

புத்தம ரிதிகஹவத்தயைச் சேர்ந்த 24 வயது பெண், அதே கிராமத்தைச் சேர்ந்த 29 வயது இளைஞனுடன் உறவில் இருந்ததாகவும்,

இருவரும் சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பிரிந்து விட்டதாகவும் கோவிந்தபுரம் பொலிஸ் தெரிவித்துள்ளது.

மொனராகலை நகரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலை

அந்த பெண், தற்போது மொனராகலை நகரில் உள்ள ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிகிறார். அவர் வேறொரு இளைஞனுடன் உறவில்

இருப்பதாக கேள்விப்பட்ட அவரது முன்னாள் காதலன், அப்பெண்ணின் மீது துப்பாக்கிச் சூடு நடத்த திட்டமிட்டார்.

அந்த பெண், வீதியைக் கடந்து ஆடைத் தொழிற்சாலையில் பேருந்தை பிடிக்க தனது வீட்டிலிருந்து வந்து கொண்டிருந்த போது, ​​அவளை சுட முயன்றார்.

அவரது முகத்தை பார்த்து பரிதாபப்பட்டு, பின்னர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.

கோவிந்தபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம். கருணா சாந்த, அவரைக் கைது செய்ய விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்.

காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்

காதலியை வெட்டி கொலைசெய்த காதலன்


காதலியை வெட்டி கொலைசெய்த காதலன் ,அம்பாறை, பதியதலாவ, மரங்கல பகுதியை சேர்ந்த இளம் பெண்ணொருவர் இன்று (23) அதிகாலை அவரது

காதலனால் கழுத்தறுத்து கொலை

காதலனால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதுடன், பின்னர் காதலனும் தனது கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு பிரவேசித்த இளைஞன், இளம் பெண்ணின் தாய் மற்றும் தந்தை மீதும்

வெட்டுக்காயங்களை ஏற்படுத்தியதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

சம்பவத்தில் காயமடைந்த தாயும் தந்தையும் தற்போது மஹா ஓயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொலை செய்யப்பட்டவர் 22 வயதான சரோஜா உதயங்கனி என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,

கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை

கொலையைச் செய்த இளைஞன் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 31 வயதானவர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து பதியதலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

காதலியை கடத்திய காதலன் கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கடத்திய காதலன் கைது

காதலியை கடத்திய காதலன் கைது

காதலியை கடத்திய காதலன் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இலங்கை மொனராகலை காவல்துறை பிரிவில் வசிக்கும் 14 வயது காதலியை 33 வயது காதலன் கடத்தி சென்ற பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார் .

காதலியுடன் காதலன் ஒன்றாக தங்கி வாசித்த நிலையை அடுத்து தற்போது காதலி தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளார் .

சிறுமியை கடத்தினார் என்கின்ற குற்ற சட்டத்தில் இவர் மீது வழக்கு பைஅத்துள்ளது குறிப்பிட தக்கது .

காதலியை கொன்று சரணடைந்த காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கொன்று சரணடைந்த காதலன்

காதலியை கொன்று சரணடைந்த காதலன்

காதலியை கொன்று சரணடைந்த காதலன் ,தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞன், இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை(18) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய விமல்கா துஷாரி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண், மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவருடன் சுமார் ஒன்றரை வருட காலமாக காதல் உறவில் இருந்த நிலையில் அண்மையில் , இந்த உறவை முறித்துக் கொள்ளலாம் என தனது காதலனிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக குறித்த பெண்ணின் வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காதலியால் கம்பி எண்ணும் காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியால் கம்பி எண்ணும் காதலன்

காதலியால் கம்பி எண்ணும் காதலன்

காதலியால் கம்பி எண்ணும் காதலன், காதலியால் கம்பு என்னும் காதலன் கைத்தலும் சேர்ந்த களவாடி காதலுக்கு பரிசாக வழங்கிய பெண் ஒருவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள்ளார் .

நுவரெலியா நீதிமன்ற களஞ்சிய சாலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த தொலைபேசி ஒன்று திடீரென காணாமல் போனது .

அதனை அடுத்து போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்ட பொழுது அங்கு பணிபுரிந்த பெண் அந்த களஞ்சிய சாலையிலிருந்து அந்த போனை திருடி சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.

இவ்வாறு திருடப்பட்டபோனை தனது காதலனுக்கு அவர் வழங்கி இருக்கின்றார் .

வீடியோ

காதலன் அந்த போனை பயன்படுத்திக் கொண்டிருந்த பொழுது அவரை தேடிச் சென்ற போலீசார் தற்பொழுது அவரை கைது செய்து விளக்கமறியலில் வைத்துள்ளனர் .

மேற்படி செய்தியானது தற்பொழுது உலக ஊடகங்களின் தலைப்புச் செய்தியாக மாறியது போலதமிழர் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக மாறி உள்ளது .

இதனால் காதலன் காதலி மிகப் பெரும் தலை குனிவுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை
Posted in இலங்கை செய்திகள்

காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை

காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை

காதலி ஏமாற்றியதால் காதலன் தற்கொலை ,காதலியிடம் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மனமுடைந்த காதலன் அவருக்கு வீடியோ அலைபேசியை ஏற்படுத்தி ,

அதன் ஊடாக தான் மரணம் அடைகிறேன் என்பதை காண்பித்து அவர் தற்பொழுது தன்னைத்தானே தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வாழச்சேனை ஓட்டமாவடி பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபனே இவ்வாறு தனது காதலிக்கு தொலைபேசியை அழைத்து அதில் கமரா மூலமாக ,தனது தற்கொலையை காண்பித்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலியுடன் ஏன் முரண்பட்டார் எதற்காக தன் உயிரை மாய்த்துக் கொண்டார் என்பது தொடர்பாக ,

பொலிஸ் விசாரணை

காதலியை தற்பொழுது போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் .இந்த சம்பவம் அந்தப் பகுதி மக்கள் மத்தியில் ஒரு துயரை ஏற்படுத்தியிருக்கின்றது.

18 வயதில் வருகின்ற காதல் காதலா அல்லது மோகம் காதலா என்பதை இதுவரை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

காதலி எதற்காக முரண்பட்டார் ஏன் அவரை ஏற்க மறுத்தாள் அல்லது ஏற்றுக் கொண்டவள் எதற்காக அவரிடம் முரண்பாடுகளில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக தற்பொழுது கேள்வி பதிலாக ஏழு ஆரம்பித்திருக்கின்றது.

வாலிபர்களின் வாலிபத்தில் ஏற்படுகின்ற இந்த காதலினால் வாலிபங்கள் தமது வாழ்வைச் சீரழித்து அதிலிருந்து அவர்கள் தமிழ் தாமரை அழைத்துக் கொள்கின்ற நிலையானது மிகவும் கவலைக்குரிய ஒரு விடயம் என்பதாக மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது .

காதலியால் காதலன் உயிரை மாய்த்துக் கொண்டு சம்பவம் அந்த மக்கள் மத்தியில் துயரை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வாறான காதலில் ஈடுபடுகின்றவர்களுக்கும் இது ஒரு முன் எச்சரிக்கை ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.

காதலியின் நிர்வாணபடங்களை வெளியிட்ட காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியின் நிர்வாணபடங்களை வெளியிட்ட காதலன்

காதலியின் நிர்வாணபடங்களை வெளியிட்ட காதலன்

காதலியின் நிர்வாணபடங்களை வெளியிட்ட காதலன் ,17 வயதுடைய பாடசாலை மாணவியின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில்

வெளியிட்ட குற்றச்சாட்டில் 18 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் மத்தேகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .

நுகேகொட பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட மாணவன்

கைது செய்யப்பட்ட மாணவன் நுகேகொட பிரதேசத்தில் உள்ள பிரத்தியேக வகுப்பொன்றிக்கு சென்று கொண்டிருந்த போது, ​​மத்தேகொட , குடமாதுவ

பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவருடன் காதல் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் .

இந் நிலையில் , குறித்த மாணவன் அடிக்கடி மருந்து வகைகளை உட்கொள்வதை அறிந்த மாணவி அது தொடர்பில் வினவிய போது மாணவனுக்கு தீராத நோய் ஒன்று ஏற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது .

பின்னர் குறித்த மாணவி அவர்களின் காதல் உறவை முறித்துக்கொண்டு வேறொரு இளைஞனுடன் காதலை வளர்த்துக்கொண்டுள்ளார் .

இதனால் கோபமடைந்த மாணவன் , குறித்த இருவரும் காதல் உறவில் இருந்த போது , வீடியோ அழைப்புகள் மூலம் ஸ்கிரீன் ஷாட் செய்யப்பட்ட மாணவியின் நிர்வாண புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் .

மாணவியின் நண்பர்கள்

மாணவியின் நண்பர்கள் சிலர் இந்த புகைப்படங்களை பார்த்து சம்பந்தப்பட்ட மாணவிக்கு தெரியப்படுத்தியதையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரிடம்

செய்யப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் , கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக

விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மத்தேகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர் .

Featured

Loading...
காதலனை கொன்ற காதலி கைது
Posted in இலங்கை செய்திகள்

காதலனை கொன்ற காதலி கைது

காதலனை கொன்ற காதலி கைது

காதலனை கொன்ற காதலி கைது ,குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போருந்தார்.

காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு

பின்னர் காணாமல் போன இளைஞனின் சடலம் சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது.

சம்பவம் தொடர்பில், குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தையான ‘சிங்கிதி’ என அழைக்கப்படும் சுஜித் பெர்னாண்டோ மற்றும் அவரது மனைவு டிலானி ரசிகா ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

காதலனை கொன்ற காதலியின் செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

Featured

Loading...
மரத்தால் வந்த வினை ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கணவனை கழுத்தறுத்து கொன்று மனைவி கள்ளக்காதலன் கைது

கணவனை கழுத்தறுத்து கொன்று மனைவி கள்ளக்காதலன் கைது

வீடு ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக கடந்த 10ஆம் திகதி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட சம்பவம் கொலையாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவத்தில் அக்கரைப்பற்று கோளாவில் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

நேற்று (11) நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையின் போது கழுத்தை அறுத்ததால் ஏற்பட்ட அதிக இரத்தப்போக்கு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அக்கரைப்பற்று வைத்தியசாலையில் இந்த பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், இந்த மரணம் தொடர்பில் உயிரிழந்தவரின் 33 வயது மனைவி மற்றும் அவரது 63 வயதுடைய கள்ளக்காதலன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சடலம் அக்கரைப்பற்று வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அக்கரைப்பற்று பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Featured

Loading...
கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்மடியில் இருந்து குதிப்பு வீடியோ
Posted in உலக செய்திகள்

கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்மடியில் இருந்து குதிப்பு வீடியோ


கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்|மடியில் இருந்து குதிப்பு

கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன் | மடியில் இருந்து குதிப்பு |கள்ள காதல் லீலை

கணவனிடம் சிக்கிய மனைவி கள்ள காதலன்,கணவன் வீடில்லா நேரம் கள்ள காதல் விளையாட்டு , திடீரென கணவன் வீடு வந்ததால் சிக்கிய மனைவி காதல் லீலைகள்

வீடியோ

https://www.youtube.com/watch?v=REB_ejDL29o
Error: View 9293b2au4w may not exist
காவலரை கட்டிப்போட்டு இரும்பு திருட்டு யாழில் திருட்டு கும்பல் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள்

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

தனது காதலியுடன் விடுமுறையை கழிப்பதற்கு பதுளையில் இருந்து அம்பாறைக்கு வந்த இளைஞனொருவர் விடுதிக்கு செலுத்த பணம் இல்லாத காரணத்தினால் கடையொன்றில் 10,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை பஸ் நிலையத்தில் யுவதியை இருக்குமாறு தெரிவித்து நகரின் பிரபல மொத்த விற்பனை நிறுவனத்திற்குள் நுழைந்த குறித்த இளைஞன் பணத்தை திருடி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடையை உடைத்த காதலன் கைது கவலையுடன் காதலி

அம்பாறை பொலிஸ் போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர் ஒருவருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், இளைஞனுடன் சென்ற யுவதியை பெற்றோரிடம் ஒப்படைத்த பொலிஸார், சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

காதல் ஜோடிக்கு வலை
Posted in இலங்கை செய்திகள்

புது ஜோடியைக் கொன்ற காதலன்

புது ஜோடியைக் கொன்ற காதலன்

2023 டிசெம்பர் மாதம் 23 ஆம் திகதி (நக்கல வத்த) கல்வெட்டுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த பெண்ணும், ஆணொருவரும் உயிரிழந்துள்ளதாக மொனராகலை தலைமையக பொலிஸ் போக்குவரத்து பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஜானக சிறிரத்ன தெரிவித்தார்.

மொனராகலை-பிபில வீதியில் இடம்பெற்றது விபத்தல்ல, அவரது முன்னாள் காதலனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

தம்பகல்ல, கொட்டகலை, மஹாலந்த கிவுல பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயான திசாநாயக்க முதியன்செலாகே அமிதா ஜீவமாலி (37) என்பவரே விபத்தில் உயிரிழந்துள்ளார். இவர் ஆயுர்வேத துறையில் பணியாற்றி வருகிறார்.

தனது முதல் திருமணத்திலிருந்து பிரிந்த பின்னர், மொனராகலை பிபில வீதியின் சாரதி ஒருவருடன் சுமார் ஐந்து வருடங்களாக வாடகை வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளார். அவருடன் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, அவரை பிரிந்து மற்றுமொரு சாரதியுடன் காதலில் ஈடுபட்டுள்ளார்.

புது ஜோடியைக் கொன்ற காதலன்

அவ்வாறு இருக்கையில், முதலாவது காதலன், அப்பெண்ணுக்கும், அவருடைய தற்போதைய காதலனுக்கும் தொலைபேசியிலும், பல முறை மிரட்டல் விடுத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி காலை புதிய காதலனுடன் அப்பெண் மோட்டார் சைக்கிளில் பதுளை பகுதிக்கு செல்வதை அறிந்த பழைய காதலன் அவர்கள் மொனராகலை-பிபில வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் வாகனத்தால் மோதிவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற பெண்ணின் புதிய காதலன் மற்றும் பெண், மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்தி வான், படல்கும்புர கரவிலபாறையில் உள்ள வீடொன்றுக்கு முன்னால் விடப்பட்டிருந்த நிலையில் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த வாகனத்தை செலுத்திச் சென்ற முன்னாள் காதலன், சட்டத்தரணி ஊடாக மொனராகலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஜனவரி ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் நீண்ட விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், குறித்த விபத்து திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட கொலை என கண்டறிந்தனர். இந்நிலையில், சந்தேகநபரை வியாழக்கிழமை (04) நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடியோ

காதலிக்காக சிறுமியை கடத்திய காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலிக்காக சிறுமியை கடத்திய காதலன்

காதலிக்காக சிறுமியை கடத்திய காதலன்

அதிருப்தியடைந்த தனது காதலியை அழைத்து வருவதற்காக அவரது சகோதரனின் ஏழு வயது மகளை இளைஞர் ஒருவரால் கடத்திச் சென்ற

சம்பவம் ஒன்று ஹொரணை, கோனபொல, எட்டம்பஹேன பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

இதையடுத்து சிறுமியுடன் இருக்கும் புகைப்படத்தை காதலிக்கு அனுப்பி வைத்துவிட்டு, வரவில்லை என்றால் கொலை சிறுமியை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

பின்னர், தனது காதலியின் உறவினர் வீட்டிற்கு சென்று சிறுமியை ஒப்படைத்து விட்டு குறித்த இளைஞர் காதலியுடன் தப்பிச் சென்றுள்ளார்.

இதன்படி, கடத்தப்பட்ட சிறுமியை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகளை ஆரம்பித்த மொரகஹஹேன பொலிஸார், நேற்று (14) கோனாபினுவல

காதலிக்காக சிறுமியை கடத்திய காதலன்

பிரதேசத்தில் வைத்து சந்தேகநபரின் காதலன் மற்றும் கடத்தலுக்கு உதவிய அவரது மைத்துனரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்த தகவலின்படி, கோனாபினுவல பிரதேசத்தில் உள்ள சந்தேக நபரின் காதலனின் வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கடத்தலுக்கு சந்தேகநபர்கள் பயன்படுத்திய காரையும் பொலிஸார் பொறுப்பேற்றதுடன் , அது வாடகை அடிப்படையில் எடுக்கப்பட்டமையும் தெரியவந்துள்ளது.

பணத்திற்காக காதலியை விற்ற காதலன்
Posted in இலங்கை செய்திகள்

பணத்திற்காக காதலியை விற்ற காதலன்

பணத்திற்காக காதலியை விற்ற காதலன்

காதலன் ஒருவர் தனது காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று அதன் முகாமையாளருடன் இணைந்து இரண்டு நாட்கள் குறித்த பெண்ணை அறையில் தடுத்து வைத்து நால்வருக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் அந்த விடுதியின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் அகலவத்தை ஓமத்த வீதியில் உள்ள விடுதி ஒன்றின் முகாமையாளர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த பெண்ணின் காதலன் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரைக் கண்டுபிடிக்க விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அகலவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பணத்திற்காக காதலியை விற்ற காதலன்

பெண் ஒருவர் விடுதி ஒன்றில் அடைத்து வைத்து பணத்திற்காக தனிநபர்களுக்கு விற்கப்படுவதாக 119 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதன்படி, சிறுவர் மற்றும் மகளிர் பணியக உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் மோட்டார் சைக்கிள் கண்காணிப்பு அதிகாரிகளும் இணைந்து குறித்த பெண்ணை பொறுப்பேற்றதையடுத்து விடுதியின் முகாமையாளரை கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட பெண் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிபவர் எனவும், அவர் தற்போது வைத்தியபரிசோதனைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அகலவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காதலியை கடத்தி சென்ற காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கடத்தி சென்ற காதலன்

காதலியை கடத்தி சென்ற காதலன்

இலங்கை பிலியந்தலை பகுதியில் இராணுவ சிப்பாய் ஒருவர் இளம் பெண் ஒருவரை கடத்தி சென்றுள்ளார் .

இந்த பெண்ணை கடத்திய சிங்கள இராணுவ சிப்பாய், குறித்த பெண்ணுடன் காதல் தொடர்பில் இருந்துள்ளார் .


எனினும் ஆறு மாதங்களுக்கு முன்னதாக காதலை முறித்து கொண்டுள்ளார் .இதன் பின்னர் கள்ள காதலிக்கு மிரட்டல் விடுத்து வந்துள்ளார் .

சம்பவ தினத்தன்று பெண்ணை சந்தித்து , அவரை கடத்தி சென்றுள்ளார் .


இந்த கடத்தல் சம்பவத்தை அரங்கேற்றியவர் ,திருமணம் முடித்தவர் என தெரிய வந்துள்ளது .

இந்த கடத்தல் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

No posts found.
காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த காதலன்

காதலியை கொன்று தோட்டத்தில் புதைத்த காதலன்

இலங்கை காலை வதூரம்போற் பகுதியில் கூலி தொழிலாளி ஒருவர் தன்னோடு வசித்த 41 வசித்து பெண்ணை கொன்று தாம் வசித்த அதே தோட்ட பகுதியில் புதைத்துள்ளார் .

காதலன் காதலிக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது .

காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் ,மேற்படி விடயம் அம்பலமான நிலையில் ,சடலம் தோண்டி எடுக்க பட்டு மரண விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளது .

இலங்கையில் இவ்விதமான கொடூர சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .

Featured

Loading...
Posted in இலங்கை செய்திகள்

காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

காதலன் மரணம் துயரத்தால் காதலி ஆற்றில் குதித்து தற்கொலை

இலங்கை மாத்தறை பகுதியில் நீராட சென்ற நான்கு வாலிபர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு காணாமல் போயினர் .

இவ்வாறு காணாமல் போன மூவர் சடலங்களை , மீட்க பட்டனர் ,ஒருவர் மட்டும் காணாமல் போனார் .

காணாமல் போனவரின் ஒருவர் , காணாமல் போனவரின் காதலியின் காதலன் எனப்படுகிறது .

காதலன் இறந்த துயரில் வாடிய காதலி , நில்வள கங்கை ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் .

இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட, பெண்ணின் சடலம் மீட்க பட்டுள்ளது.

காதலியின் இந்த தற்கொலை ,மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தான் உண்மை காதல் என்பது .

    Posted in பிரித்தானிய செய்தி

    காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

    காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

    பிரிட்டனில் தனது காதலி தன்னை சந்திக்க மறுத்த காரணத்தால் கோபமடைந்த காதலன் லொறியால் East Kilbride, South Lanarkshire, பகுதியில் உள்ள அவரது வீட்டை இடித்து உடைத்த பயங்கரம் இடம்பெற்றுள்ளது .

    காதலன் காதலியின் வீட்டை லொறியால் இடித்து உடைக்கும் பொழுது அவ்வேளை அந்த வீட்டிற்குள் காதலி மற்றும் இரண்டு பிள்ளைகள் வசித்துள்ளனர் .

    அவ்வாறு அவர்கள் அந்த வீட்டுக்குள் வசிக்கும் பொழுது இவர் மேற்கொண்ட இந்த கொலை வெறி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    போதையில் லொறியை செலுத்திய காதலன் காதலியின் லிவ்விங் அறைக்குள் லொறியை பார்க்கிங் செய்திட இவ்விதம் லொறியால் வீட்டை இடித்து உடைத்துளளார் .

    காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்
    காதலி வீட்டை லொறியால் இடித்து உடைத்த காதலன் பிரிட்டனில் நடந்த பயங்கரம்

    இந்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இவரால் வீட்டிற்கு ஏற்படுத்த பட்ட சேதம் 475 ஆயிரம் பவுண்டுகள் இவரே செலுத்த வேண்டும் என அறிவிக்க பட்டுள்ளது .

    அது தவிர லொறியின் சேதம் மற்றும் அதன் இழப்பு . உயிராபத்தை விளைவிக்க கொலை முயற்சியில் ஈடுபடடர் என்ற கோணத்தில் இவை பார்க்க படுகிறது .

    காதலிகளே யாக்கிரதை காதலன் கோபத்தில் பேசினால் அவரை சமாதனம் செய்த்து உள்ளே விட்டு விடுங்க இல்லை என்றால் இப்படி ஏதாவது கிறுக்குத்தனமாக பண்ணிட போறாங்க .

    எதற்கும் இவ்வாறான வேளையில் எச்சரிக்கையாக இருங்கள் .
    காதல் செய்த அலங்கோலம் .இதுக்கு பேர் தான் காதலா ..?