160200 கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதி
Posted in இலங்கை செய்திகள்

160200 கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதி

160200 கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதி

160200 கர்ப்பிணிகளுக்கு உணவுப் பொதி ,நாட்டில் உள்ள 1,60,200 கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 5,000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.இதற்காக அரசாங்கம்

1,500 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என தெரிவித்த சிறுவர் மற்றும் மகளிர் விவகாரஅமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ், இந்த திட்டம் எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) இடம் பெற்ற தேசிய கணக்காய்வு (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் புத்தாண்டு காலத்தில் மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும மூலம் நிவாரணம் பெறும் பயனாளிகளுக்கு போசாக்கான உணவுப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

அந்த வகையில் அப்போது உள்ளூராட்சி சபைத் தேர்தல் காலம் என்பதால் தேர்தல் ஆணையாளரின் உத்தரவுக்கு இணங்க அந்த கொடுப்பனவு வழங்குவதை ஒத்தி வைப்பதற்கு அரசாங்கத்தினால்

தீர்மானிக்கப்பட்டது.அந்த நிதியை பயன்படுத்தியே மந்த போசனத்துடன் காணப்படும் தாய்மாருக்கு வழங்குவதற்கு தீர்மானித்துள்ளோம்.

கடந்த அரசாங்கத்தின் காலங்களில் இவ்வாறு ஒதுக்கப்பட்டு இடையில் நிறுத்தி வைக்கப்பட்ட நிதி அப்போதைய அமைச்சர்கள், ஜனாதிபதிக்கும்

போய் சேர்ந்துள்ளது. அந்த வகையில் எமது அரசாங்கம் எப்போதும் மக்கள் நலனுக்கு முன்னுரிமையளித்து செயற்படுகின்றது .

சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சினூடாக நாட்டில் வாழ்கின்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கர்ப்ப காலத்தில் ஆறு மாதங்களுக்கும் அதன்

பின்னர் பாலூட்டும் காலங்களில் நான்கு மாதங்களுக்குமாக 10 மாதங்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கு திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.அந்த வகையில்

டிசம்பர் மாதத்தில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை அதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

1,60,200கர்ப்பிணிகளை தெரிவு செய்து அவர்களுக்கு 5000 ரூபாய் பெறுமதியான உணவுப் பொதியை வழங்குவதற்கான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.

2 லட்சத்துக்கு 80 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்கள் நாட்டில் தற்போது உள்ளனர்.அவர்களில் மந்த போசனத்தோடு காணப்படும் தாய்மாரை

முக்கியமாக தெரிவு செய்து உணவுப் பொதியை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்றார்.

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம்

கர்ப்பிணி மானை வேட்டையாடிய சம்பவம் ,கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் கர்ப்பிணி மான் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட

விசாரணைகளின் போது, மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டதாகவும், அனுமதிப்பத்திரம் இல்லாத போர 12 ரக 3

துப்பாக்கிகள் பொலிஸாரினால் பறிமுதல்

துப்பாக்கிகள் பொலிஸாரினால் பறிமுதல் செய்ததாகவும் தம்புள்ளை உதவி பொலிஸ் அத்தியட்சகர் டபிள்யூ.ஜி.எம்.எம். சந்திரசிறி தெரிவித்தார்.

நேற்று (25) கைது செய்யப்பட்ட இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள் உள்ளிட்ட மூவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, வஹகோட்ட பகுதியைச் சேர்ந்த இருவர் மான்களை வேட்டையாட வந்திருப்பது தெரியவந்தது.

இவர்களில் ஒருவரின் சகோதரர் பொலிஸ் சார்ஜன்ட் எனவும் தெரியவந்துள்ளது.

மானைக் கொன்ற பிறகு அதை கொண்டு செல்வதற்காகவும், பிரதேச மக்கள் சம்பவத்தைக் கண்டதன் காரணமாகவும் சந்தேகநபர்களில் ஒருவரின் சகோதரரான பொலிஸ் சார்ஜனின் உதவியை கோரியுள்ளனர்.

அதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் மற்றொரு சார்ஜனின் உதவியை நாடி, தனது சகோதரரால் சுடப்பட்ட மான் இருக்கும் இடத்திற்கு சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நால்வரும் கிரானேகம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்படும் நிலைமை காணப்பட்டதால், அவர்கள் இன்று (26) அதிகாலையில் தம்புள்ளை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.

இதேவேளை, பிரதேச மக்களால் தாக்கப்பட்டதாகக் கூறி மகுலுகஸ்வெவ பொலிஸ் நிலையத்தின் ஜீப் வாகனத்தின் சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையில் மான் போர 12 ரக துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டிருப்பது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோதமாக துப்பாக்கி

கைது செய்யப்பட்ட நபர்கள் மீது சட்டவிரோதமாக துப்பாக்கிகளை வைத்திருந்தமை மற்றும் வனப்பகுதியில் உள்ள ஒரு மானை சுட்டுக் கொன்றமை ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

சந்தேகநபர்கள் இன்று (26) தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ்

கர்ப்பிணிகளை தாக்கும் புதிய வைரஸ் ,இலங்கையில் கர்ப்பிணிப் பெண்களை தாக்கும் புதிய வைரஸ் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நுலம்புகள் தாக்குதலை மேற்கொள்வதால் அதிலிருந்து புதிய வகையான ஜிகா வைரஸ் என பரவியுள்ளது .

இந்த ஜிகா வைரஸ் கர்ப்பிணிகளை இலகுவாக சென்று தாக்குதல் நடத்துவதாகவும் ,

அதனால் கர்ப்பிணிகள் பலமாக பாதிப்படைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுளம்புகளினால் ஏற்படுகின்ற இந்த வைரஸ் தாக்குதலைஅடுத்து அதிலிருந்து அவர்களை எவ்வாறு காப்பாற்றலாம் என்கின்ற நடவடிக்கையை இலங்கையின் சுகாதார அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.

இந்த நோய் அறிகுறி காணப்படுவதற்கான அறிகுறிகளாக தலைவலி தோள் வெடிப்பு ,காய்ச்சல், மூட்டு வலி ,உள்ளிட்டவர்களுக்கானப்படுகின்றன .

இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அவை ஜிகா வைரஸ்னுடைய நோயில் தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மீண்டும் அதனை இங்கு குறிப்பிடுகின்றோம், இந்த நோயின் அறிகுறியாக உங்களுக்கு காணப்படுவது தலைவலி ,தோல் வெடிப்பு , காய்ச்சல் மூட்டு வலி என்பன காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

எனவே இவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு தென்பட்டால் உடனடியாக மருத்துவமனைக்கு சென்று வைத்தியரை சோதனை நடத்திக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் வேண்டுதல் எடுத்துள்ளது.

இந்த நோயானது தற்போது தமிழகத்திலும் பரவி வருகின்ற நிலையிலும் இலங்கையிலும் இவ்வாறான எச்சரிக்கை அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்புறங்களை அசுத்தமாக வைத்திருப்பதன் காரணமாகவே இந்த நுளம்புகளின் பெருக்கம் காணப்படுகிறது .

அதனால் அந்த நுளம்புகளில் இருந்து நோய் தாக்கங்கள் ஏற்படுகின்றன .

சுத்தம் சுகம் தரும் என்பதற்கு இணங்க நாம் எமது வீடுகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நமது கடமையாகும் .

சுற்று புறங்களை நாங்கள் சுத்தமாக வைத்திருப்பதால் நாங்கள் நமக்கு நோய்களை உருவாக்கி கொள்கின்ற நடவடிக்கை காணப்படுவதாகவே சமூகநல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர் .

எனவே மக்களை எமது வீடுகளை சுத்தமாக நாங்கள் வைத்திருப்பதன் ஊடாக இவ்வாறான புதிய உயிர்கொல்லி நோய்களிலிருந்து, தப்பித்துக் கொள்ள முடியும் என விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது இங்கே மீளவும் சுட்டி காட்ட தக்கது ..

விபத்தில் கர்ப்பிணி மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்

பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்

திருகோணமலை – மொரவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பாம்பு கடிக்கு இலக்காகி 3 மாத கர்ப்பிணித் தாயொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவமானது நேற்று(20) மாலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பாம்பு கடித்து கர்ப்பிணிப்பெண் மரணம்

இதில், திருகோணமலை மொரவெவ ஆறாம் வாய்க்கால் பகுதியைச் சேர்ந்த இமேஷா குமாரி (வயது 23) என்ற மூன்று மாத கர்ப்பிணித் தாயொருவர் மாடு கட்டுவதற்காக சென்றபோது பாம்புக்கடிக்கு இலக்காகியுள்ளார்.

இதில் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், உயிரிழந்துள்ளார். சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

க்கும் நோக்கில் அரசாக்கத்தினால் சமுர்த்தி வங்கிகள் ஊடாக ரூபா
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பணம் வழங்கி வைப்பு

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தும் நோக்கில் பணம் வழங்கி வைப்பு

கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசாக்கத்தினால் சமுர்த்தி வங்கிகள் ஊடாக ரூபா 10,000 ரூபா வீதம் நிதி வழங்கி வைக்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.

இத்திட்டத்திற்கமைய இறக்காமம் பிரதே செயலகத்திற்குட்பட்ட 382 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு 10,000 ரூபா கொடுப்பனவுகள் (28) இறக்காமம் சமுர்த்தி வங்கியில் வழங்கி வைக்கப்பட்டது.

சமுர்த்தி வங்கியின் முகாமையாளர் ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம்.றஸ்ஸான் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன் சமுர்த்தி

தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி பிரியந்தி, அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.முகம்மட் இம்தாத் உள்ளிட்ட அதிதிகள் கலந்து பயனாளிகளுக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.

(அபு அலா)

No posts found.
Posted in மருத்துவம்

கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்

கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்

கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில் மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.

கர்ப்பத்திற்கு முன்பாக பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜன் சுரப்பு அதிகரிக்கத் தொடங்கும். அதன் காரணமாக வழக்கத்தை விட சற்று அதிகமாக வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.

ஆனால் அதன் அளவு அதிகமாகிக் கொண்டே போனால் அது கருப்பை நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டிருப்பதன் அறிகுறியாக இருக்கலாம்.

பொதுவாக கர்ப்ப காலத்தில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு அதிகமாக இருக்கும். இயல்பாகவே இந்த ஹார்மோன் சுரப்பின் காரணமாக வெள்ளைப்படுதல் இருப்பது

இயல்பு தான். ஆனால் அதன் அளவு மற்றும் நிறங்களில் மாற்றங்கள் ஏற்படும்போது கவனமாக இருக்க வேண்டும்.

கர்ப்ப காலத்தில் வெள்ளைப்படுதல்

ஈஸ்ட் தொற்று போன்றவற்றாலும் இந்த வெள்ளைப்படுதல் பிரச்சினை ஏற்படலாம். கர்ப்பத்துக்கு முன்பாக இயல்பாக இருந்த வெள்ளைப்படுதலின் அளவு மற்றும் நிறத்தில்

மாற்றங்களைக் கண்டால் அதுகுறித்து உங்களுடைய மருத்துவரிடம் கேட்டு விளக்கம் பெறுங்கள்.

கர்ப்பம் அடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பிருந்தே வெள்ளை்படுதலின் அளவு அதிகமாகிக் கொண்டே போனாலோ அல்லது நிறத்தில் வேறுபாடு இருந்தாலோ மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

கர்ப்ப காலத்தில் பிறப்புறுப்பு திரவம் பல மாதங்களுக்குத் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருப்பது குறைப்பிரசவத்துக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். கர்ப்ப

காலத்தில் சிறுநீர் கழித்தலின்போது அதிகப்படியான வலியும் வெள்ளைப்படுதலும் ஏற்பட்டாலோ அல்லது பிறப்புறுப்பு வீக்கம், அரிப்பு மற்றும் எரிச்சல் இருந்தாலோ அது ஈஸ்ட் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

பிறப்புறுப்பு திரவம் பச்சை மற்றும் மெல்லிய சிவப்பு நிறத்தில் வெளியேறினாலோ அல்லது எரிச்சலுடன் வெளியேறினாலோ அவை ட்ரை- கோமோனியாசிஸ் மற்றும் பிற பாலியல் தொற்றுக்களின் அறிகுறியாக இருக்கலாம்.

பிறப்புறுப்பு பகுதியில் இருந்து மீனின் வாசனையோடு பிறப்புறுப்பு திரவம் வெளியேறினால் அது வஜினோசிஸ் போன்ற பாக்டீரியல் தொற்றுக்களாக இருக்கலாம்.

ஒருவேளை கர்ப்ப காலத்தில் வலி மிகுந்த பிடிப்புகளுடன் சேர்ந்து சிவப்பு நிறத்தில் திரவம் வெளியேறினால்
எந்த தாமதமும் இன்றி மருத்துவரைச் சந்திக்க வேண்டும்.

    Posted in இலங்கை செய்திகள்

    கர்ப்பிணி பெண் கொலை – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது

    கர்ப்பிணி பெண் கொலை – 5 வருடங்களின் பின் சந்தேகநபர் கைது

    ஊர்காவற்துறை பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரை அடித்து படுகொலை செய்த பின்னர், நகைகளை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில், ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்ட நபர் விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் , எதிர்வரும் 15 ஆம் திகதிவரையில் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

    ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 24ஆம் திகதி ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் 7 மாத கர்ப்பிணியான பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டு , அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

    அது தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வந்த நிலையில் ஐந்து வருடங்களின் பின்னர் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    அதேவேளை குறித்த கொலை சம்பவம் தொடர்பில் கொலை நடந்த அன்றைய தினமே சகோதரர்கள் இருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 17 மாத காலம் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்படிருந்த நிலையில் மேல் நீதிமன்ற உத்தரவில் பிணையில் விடுவிக்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    40 இற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஒமிக்ரோன்

    40 இற்கு மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு ஒமிக்ரோன்

    மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துக் காணப்படுகின்றது.

    கடந்த ஒரு வாரத்திற்குள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கொரோனா தொற்றாளர்கள் 1300 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். கடந்த 3 தினங்களுக்குள்

    தொற்றுக்குள்ளான 500 பேர் இனங்காணப்பட்டுள்ளனர் என்று பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்துள்ளார்.

    மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒரோ நாளில் நூற்றுக்மேட்பட்ட நோயாளர்களும், 20 கற்பினித்தாய்மார்களும் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

    மொத்தமாக மாவட்டத்தில் 40 இற்கு மேற்பட்ட கற்பினித்தாய்மார்கள் ஒமிக்ரோன் தொற்றுக்குள்ளாகியிருப்பது அறியப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் இதன்

    அபாயத்தினை உணர்ந்தவர்களாக அனைத்து நடவடிக்கைகளிலும் செயற்படவேண்டும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணன் கேட்டுக்கொண்டார்.

    மட்டக்களப்பில் ஒமிக்ரோன் பரவலைத் தடுக்க பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு விசேட ஆலோசனைகள் மாவட்ட செயலகத்தில்

    வழங்கப்பட்ட போதே பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

    மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இவ்வாலேசனைகள் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் நேற்று (28) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

      Posted in மருத்துவம்

      கர்ப்பிணிகளுக்கு இடுப்பு வலி ஏன் ஏற்படுகிறது

      கர்ப்பிணிகளுக்கு இடுப்பு வலி ஏன் ஏற்படுகிறது

      எடை அதிகரிப்பது, ஹார்மோன்கள் பாதிப்படைவது, தூங்கும்போது தவறான கோணத்தில் உடலை வைத்திருப்பது உள்பட பல்வேறு காரணங்களாலும் கர்ப்பகாலத்தில் வலி ஏற்படக்கூடும்.


      கருவில் இருக்கும் குழந்தையின் எடை அதிகரிப்பது, ஹார்மோன் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுவது காரணமாக கர்ப்பிணி பெண்கள் இடுப்பு வலியை எதிர்கொள்கிறார்கள்.

      கர்ப்பகாலத்தில் இடுப்புவலி என்பது கர்ப்பத்தில் பொதுவானது. பெண்கள் கர்ப்பகாலத்தில் இடுப்பு வலியை ஆரம்ப கட்டத்தில் உணர்வதில்லை.

      கர்ப்பத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் உண்டாகிறது.

      கர்ப்பகாலத்தில் இடுப்புவலி என்பது கர்ப்பத்தில் பொதுவானது. பெண்கள் கர்ப்பகாலத்தில் இடுப்பு வலியை ஆரம்ப கட்டத்தில் உணர்வதில்லை. கர்ப்பத்தின் இரண்டாவது அல்லது மூன்றாவது ட்ரைமெஸ்டர் காலங்களில் உண்டாகிறது.

      கர்ப்பிணிகளுக்கு இடுப்பு வலி ஏன் ஏற்படுகிறது

      கர்ப்பகாலத்தில் பெண்கள் அன்றாடம் செய்யும் சில தவறுகளாலும் இடுப்பு வலி உண்டாகிறது.

      இவை தவிர நீண்ட நேரம் நின்றுகொண்டே இருப்பது, உடற்பயிற்சிகள் செய்வது, குறிப்பிட்ட நிலையில் உட்கார்ந்துகொண்டே இருப்பது,

      எப்போதும் சரியான போஸில் இல்லாமல் படுத்துகொண்டே இருப்பது போன்றவையும் இடுப்பு வலியை அதிகரித்துவிடுகிறது

      இது கர்ப்பிணிகளின் உடல் ஆரோக்கியம் மட்டுமின்றி மன ஆரோக்கியத்தையும் பாதிக்கும். பொதுவாகவே கர்ப்பிணிகள் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் தசை நார் வலி பிரச்சினையை அனுபவிப்பார்கள்.

      எடை அதிகரிப்பது, ஹார்மோன்கள் பாதிப்படைவது, தூங்கும்போது தவறான கோணத்தில் உடலை வைத்திருப்பது உள்பட பல்வேறு காரணங்களாலும் கர்ப்பகாலத்தில் வலி ஏற்படக்கூடும்.

      மருத்துவர்களின் ஆலோசனைப்படி எளிமையான பயிற்சிகளை மேற்கொள்ளலாம்

        Posted in Uncategorized

        இலங்கையில் 7,000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

        இலங்கையில் 7,000 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

        இலங்கையில் இதுவரை 7,000 கர்ப்பிணிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதுடன், 55 பேர் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதாரப் பிரிவின் பணிப்பாளரும் சமூக மருத்துவ நிபுணருமான வைத்தியர் சித்ரமாலி டீ சில்வா தெரிவித்தார்.

        அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (27) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே
        அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், இலங்கையில் இதுவரை 90 சதவீதமான கர்ப்பிணிகள் கொரோனா தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கர்ப்பிணிகளுக்கான தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுகிறது என்றார்.

        இதுவரை 55 கர்ப்பிணிகள் தொற்றுக்குள்ளாகி மரணித்துள்ள நிலையில், அனைத்து மரணங்களும் இந்த வருடம் மே மாதத்தின் பின்னரே இடம்பெற்றுள்ள என்றார். அத்துடன் இவ்வாறு உயிரிழந்த அனைத்து கர்ப்பிணிகளும் எவ்வித தடுப்பூசியையும்
        பெறாதவர்கள் என்பதுடன், வரலாற்றின் முதற்தடவை அதிகளவு கர்ப்பிணிகள்
        உயிரிழந்துள்ளனர் என்றார்.

        மேலும் சிறுவர்களுக்கு கொரோனா ஒழிப்பு தடுப்பூசியை வழங்குவது தொடர்பில் தொற்றா நோய் தொடர்பான குழு தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதுடன், சிறுவர்களிடையே
        தொற்றுக்குள்ளாகி உயிரிழப்பவர்கள் குறித்து ஆராய்ந்த போது, பல நாள் நோய்
        வாய்ப்பட்டவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

        அதற்கமையவே பல்வேறு நோய்தொற்றுக்கு உள்ளான சிறுவர்களுக்கு முதலில் தடுப்பூசி செலுத்த தீர்மானித்தோம் என்றார்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில்; கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி

          இலங்கையில்; கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி

          கர்ப்பிணி (Risk )தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி மருந்தேற்றல் நடவடிக்கை எதிர்வரும் புதன்கிழமை

          முதல் ஆரம்பிக்கப்படும் என்று பிரசவ விசேட வைத்தியர்கள் நிலையத்தின் தலைவர் விசேட வைத்தியர் பிரதீப் டி சில்வா தெரிவித்தார்.

          நாடு முழுவதிலும் தற்போது 2 லட்சத்து 76 ஆயிரம் கர்ப்பிணி தாய்மார்கள் உள்ளனர். இவர்களுக்கு தடுப்பு ஊசி ஏற்றும் வேலைத்திட்டம்

          எதிர்வரும் 9ஆம் திகதி காலை பிலியந்தல சுகாதார வைத்திய உத்தியோகத்தர் அலுவலகத்திலும், கொழும்பு காசல் வீதி பெண்கள் வைத்தியசாலையிலும் இடம்பெறும்

            Posted in இலங்கை செய்திகள்

            கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி செலுத்த அனுமதி

            கர்ப்பிணிகளுக்கு கொரனோ ஊசி செலுத்த அனுமதி

            இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு கொரனோ தடுப்பூசி செலுத்த அனுமதி வழங்க பட்டுள்ளது

            ,இதன்படி சினோபார்ம்ஊசிகளை செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

            பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் பைசர் உள்ளிட்ட ஊசிகள் கர்ப்பிணிகளுக்கு செலுத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

              Posted in இலங்கை செய்திகள்

              கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கர்ப்பிணி பெண்பலி

              இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கர்ப்பிணி பெண்

              மரணமாகியுள்ளார்

              இவருடன் மூன்று கர்ப்பிணிகள் இந்த நோயில் சிக்கி இறந்துள்ளமை குறிப்பிட தக்கது

                Posted in இலங்கை செய்திகள்

                கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா

                கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா

                எட்டியாந்தோட்டை இங்கிரியாவத்த பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணி

                பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                இதனையடுத்து, சுகாதார பரிசோதகர்களால் குறித்த பெண்,

                ஐ.டி.எச்-இல் நேற்று இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

                குறித்த பெண்ணின் தந்தைக்கு முன்னதாக கொரோனா வைரஸ் தொற்று

                காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                Posted in இலங்கை செய்திகள்

                நோய் அறிகுறிகள் காணப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் தாமதமின்றி சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடுமாறு ஆலோசனை

                நோய் அறிகுறிகள் காணப்படும் கர்ப்பிணி தாய்மார்கள் தாமதமின்றி சிகிச்சைக்காக வைத்தியசாலையை நாடுமாறு ஆலோசனை

                கர்ப்பிணி மற்றும் பிரசவத்திற்குப் பின்னரான தாய்மார்கள் நோய் நிலைமையின் போது சிகிச்சைக்காக சமூகமளிக்காமையினால் துர்பாக்கிய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவலகள்; வெளியாகியுள்ளன.

                இந்த தாய்மார்களுக்கு காச்சல், இருமல், மூச்சு எடுப்பதில் சிரமம், கர்ப்ப பை வாய் குழாய் ஊடான இரத்தபோக்கு, திரவ போக்கு, குழந்தை துள்ளுதல் தொடர்பான உணரும் ஆற்றல் குறைவு,

                மயக்கம், உணர்விழந்த தன்மை, தலைச்சுற்றுதல், உடல் குலுக்கம், உடம்பு வீக்கமடைதல், அதிக இரத்த அழுத்தம் போன்ற நோய்

                அறிகுறிகள் காணப்படுமாயின், உடனடியாக அருகில் உள்ள அரச வைத்தியசாலைக்கு செல்லுமாறு குடும்ப சுகாதார பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                இவ்வாறான அறிகுறிகள் காணப்படும் சந்தர்ப்பத்தில் அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்படுவதுடன் எந்த காரணத்தை கொண்டும்

                இதில் தாமதம் ஏற்படகூடாது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

                நோய்வாய்க்கு உட்படும் தாய்மார்களுக்கு தேவையான சிகிச்சையை 24 மணித்தியாலயமும் வழங்குவதற்கு அனைத்து அரச வைத்தியசாலைகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

                கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்பட்டுள்ள குறிப்பு புத்தகம் அவசரகால அனுமதி பத்திரமாக கருதப்படும் என்றும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

                எத்தகைய சந்தர்ப்பத்திலும் அல்லது பிரச்சினையை எதிர்நோக்கப்படும்; பொழுதும் பிரதேச குடும்ப சுகாதார சேவை

                அதிகாரி, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அல்லது சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் 1999 என்ற துரித தொலைபேசி இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும்.

                எத்தகைய நோய் சந்தர்ப்பதிலும் 1990 என்ற தொலைபேசி இலக்க சுவசெரிய அம்புலன்ஸ் சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என்று

                இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார அலுவலகத்தின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

                Posted in மருத்துவம்

                கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன்..?

                கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன்..?

                கர்ப்பிணிகளை கொரோனா வைரஸ் குறிவைப்பது ஏன்? என்பது குறித்து மதுரை சுகாதாரத்துறை அதிகாரி விளக்கம் அளித்தார்.

                கர்ப்பிணிகளை கொரோனா குறிவைப்பது ஏன் ?
                கர்ப்பிணி


                கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்தாலும் நோயின் தாக்கம் குறைந்ததாக தெரியவில்லை. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படும்

                  மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மதுரையில் இதுவரை 91 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 5 பேர் கர்ப்பிணிகள்.

                  தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவருகிறது. எனவே கொரோனாவில் இருந்து கர்ப்பிணிகள் எவ்வாறு தங்களை

                  பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பிரியாராஜ் விளக்கம் அளித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-

                  500 பேருக்கு பரிசோதனை

                  மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் விளைவாக மதுரை மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகள்

                  அனைவருக்கும் கொரோனா தொடர்பான பரிசோதனை செய்யப்படுகிறது. அதாவது பிரசவ தேதி அறிவிக்கப்பட்டுள்ள ஒரு வாரத்திற்கு முன்பு கர்ப்பிணிகளுக்கு கொரோனா தொடர்பான

                  பரிசோதனை செய்யப்படுகிறது. அதில் அவர்களுக்கு பாதிப்பு ஏதேனும் இருக்கும் பட்சத்தில் உடனடியாக அவர்கள் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

                    கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் மாத இறுதியில் இருந்து அனைத்து கர்ப்பிணிகளுக்கும் இந்த கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள

                    59 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 32 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ரத்த பரிசோதனை, எச்.ஐ.வி. பரிசோதனை

                    போன்று கொரோனா தொடர்பான பரிசோதனையும் செய்யப்படுகிறது. அதன்படி இதுவரை புறநகர் பகுதியில் மட்டும்

                    500-க்கும் மேற்பட்ட கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.நோய் எதிர்ப்பு சக்தி குறைவு

                    கர்ப்பிணிகள் வெளியே செல்லும்போது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அதுபோல் கர்ப்பிணிகள் இருக்கும் வீட்டில் மற்ற நபர்களும் வெளியே சென்று வரும் போது மிகவும்

                    கவனத்துடன் இருக்க வேண்டும். ஏனென்றால் கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். இதனால் நோய் தொற்று அவர்களை விரைவில் தாக்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

                    ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் கர்ப்பிணிகள் பரிசோதனைக்கு வரும் நேரம் மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

                    அதாவது காலை முதல் மதியம் 12 மணி வரை மற்ற நோயாளிகள் அதிக அளவில் வருவார்கள். எனவே மற்ற நோயாளிகளிடமிருந்து

                      கர்ப்பிணிகளுக்கு நோய்த்தொற்று பரவாமல் இருக்க மதியத்திற்கு மேல் கர்ப்பிணிகளை சிகிச்சைக்கு வரவைக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறோம்.

                      கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் வசிக்கும் கர்ப்பிணிகள் குறித்தும் கணக்கெடுக்கும்

                      பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கு சுகாதாரத் துறையின் மூலம்

                      பல்வேறு அறிவுரைகள் வழங்கப்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறை அறிவுறுத்தும் அனைத்து

                      நடவடிக்கைகளையும் கர்ப்பிணிகள் மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களும் கடைபிடிக்கும்பட்சத்தில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.

                      தனிமைப்படுத்தவும்

                      கர்ப்பிணிகள் இருக்கும் வீடுகளில் உள்ள மற்ற நபர்கள் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே சென்று வந்தால் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும்.

                      அதுபோல் வீட்டிலுள்ள குழந்தைகளையும் கவனிக்க வேண்டும். குழந்தைகள் வெளியே சென்று விளையாடி விட்டு வரும்போதும் அதன்மூலம் நோய்த்தொற்று கர்ப்பிணிகளுக்கு பரவ வாய்ப்பு

                      இருக்கிறது. கர்ப்பிணிகள் வீட்டில் இருக்கும் போது தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது நல்லது.

                      ஆரோக்கியமான உணவுகள், பழங்களை சாப்பிட்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

                      கொரோனா
                      கொரோனா
                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

                          இலங்கையில் கர்ப்பிணி பெண்களுக்கு விசேட அறிவித்தல்

                          காய்ச்சல் இரத்தப்போக்கு முதலானவை காணப்படும் கர்ப்பிணி பெண்கள்

                          சிகிச்சை (க்கிளிக்கு) களில் கலந்துகொள்ளுமாறு சுகாதார சேவைகள்

                          பணிப்பாளர் நாயகம் ஜாசிங்க விசேட வைத்திய நிபுணர் அறிவுறுத்தியுள்ளார்

                          இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள விசேட அறிவித்தல் பின்வருமாறு:

                              பின்வரும் அபாய அறிகுறிகள் ஏற்படுமாயின் கர்ப்பிணிப்பெண்கள் உடனடியாக

                              மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும் – காய்ச்சல், இரத்தப்போக்கு,

                              கடுமையான தலைவலி ,சுவாசிப்பதில் சிரமம், பார்வை குறைபாடு, வலிப்பு (Fits),

                              நெஞ்சு/வயிற்று வலி ,சிசுவின் அசைவு குறைதல், உடலின் வீக்கம் அல்லது வேறு

                              ஏதேனும் கடுமையான அசௌகரியம்.
                              தரமான

                              சேவையை வழங்கவும் மருத்துவமனைகளில் நெரிசலைக் குறைக்கவும்

                              கிளினிக்குகளில் கலந்து கொள்ளும் கர்ப்பிணிப்பெண்கள் முற்பதிவுகளை பெறுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

                              இலங்கையில் கர்ப்பிணி
                              இலங்கையில் கர்ப்பிணி
                                  Posted in உலக செய்திகள்

                                  ரஷியாவில் 390 கர்ப்பிணிகள் கொரனோ நோயால் பாதிப்பு

                                  ரஷியாவில் 390 கர்ப்பிணிகள் கொரனோ நோயால் பாதிப்பு

                                  ரசியாவை தற்போது ஆட்டம் காண வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி 390 கர்ப்பிணிகள்
                                  பாதிக்க பட்டுள்ளனர் .

                                  ரசியாவின் தலைநகர் மோஸ்க்கோவில் அதிகமானவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்

                                  இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் இரு வேறாக தனிமை படுத்த பட்டு சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

                                  அமெரிக்காவை போலவே ரசியாவிலும் இழப்பு எனவும் ,ஆனால் அதனை வெளியில் கூறாது ஆளும் அரசு மறுத்து வருவதான குற்ற சாட்டு முன் வைக்க படுகிறது

                                      நேற்று முன்தினம் மட்டும் கிட்ட தட்ட ஏழாயிரம் பேர் புதிதாக இந்த நோயால் பாதிக்க பட்ட நிலையில் அடையாளம் காண பட்டுள்ளனர்.

                                      உத்தியோக பூர்வம் அற்ற தகவலின் படி எண்ப தாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

                                      ரஷியாவில் 390 கர்ப்பிணிகள்
                                      ரஷியாவில் 390 கர்ப்பிணிகள்