Tag: கோடாரி
மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்
மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன்
மனைவியை கோடாரியால் வெட்டிக்கொன்ற கணவன் ,குடும்பத் தகராறு தீவிரமடைந்ததன் காரணமாக, கணவன் ஒருவர் தனது மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (09) ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டுபிடிய, உடவெலவத்த பிரதேசத்தில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உடவெலவத்த, ஹட்டுபிடிய பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மரணமடைந்தவரின் உடல், நீதவான் பரிசோதனைக்காக பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சம்பவ இடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபரான கணவனை கைது செய்வதற்காக ஹெட்டிபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன்
தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன்
தங்கையை கோடாரியால் வெட்டிய அண்ணன் ,இந்தியா ஆந்திர மாநிலம் ஆனந்தபூர் பகுதியில் தங்கையை கோடாரியால் வெட்டிய இந்த கொடூரம் ஒன்று இடம் பெற்றுள்ளது .
நிலத்தகராறு காரணமாக அண்ணன் ,தங்கைக்கு ,இடையில் நீண்ட காலமாக பிரச்சினை இடம்பெற்று வந்துள்ளது .
அதனை அடுத்து தனது வீட்டில் இருந்து தங்கள் வெளியேற மறுத்ததால் கோடாரியா எடுத்து அவரை வெட்டியுள்ளார் .
கோடரி வெட்டு தாக்குதல் பலத்த காயமடைந்த தங்கை தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார் .
இந்த நிலையில் தங்கை மீதான இந்தகோடரி வெட்டு காணொளியை அங்கிருந்தவர்கள் சிலர் வீடியோ பிடித்து வெளியீட்டு நிலையில் தற்போது சமூக வலைதளத்தில் அவை வைரலாகி வருகிறது .
சமூக வலைத்தளங்கள் வீடியோ வைரலானதை அடுத்து தற்பொழுது சகோதரன் கைது செய்யப்பட்டுள்ளார் .
சொந்த காணி ஒன்றுக்காக தனது கூட பிறந்த சகோதரியை கோடாரியால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
அண்ணனின் கோடரி வெட்டு தக்குதலில் பலத்த காயமடைந்த தங்கை தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொலை குற்றச்சாட்டின் அடிப்படையில் தற்போது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளார் .
இப்படியும் நிலத்தகராருக்காக சொந்த உறவுகளே வெட்டி கொள்கின்ற விரோதம் பகைமை வளர்ந்து வருகின்றது, பெரும் ஆபத்தை உருவாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- லெபனானில் இருந்து இஸ்ரேல் விலாகாது இஸ்ரேல்

- சுவிட்சர்லாந்து பேச்சுவார்த்தைகளில் ஈரான் தூதுக்குழு

- லெபனானின் மேற்கு பெக்கா மற்றும் டயர் பகுதிகளில் இஸ்ரேலியத் தாக்குதல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக பாகிஸ்தான் ராணுவத் தளபதி சுவிட்சர்லாந்து வந்தடைந்தார்

- ஹார்முஸ் ஜலசந்தியில் சுங்கக் கட்டணம் இல்லை டிரம்ப்

- பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ராஜினாமா

- ஈரானுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கை வரம்பு மீறியது என பெரும்பாலான அமெரிக்கர்கள் கூறுகின்றனர்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் ராணுவ வீரர் பலி

- போர் நிறுத்தம் அர்த்தமற்றது ஹிஸ்புல்லா

கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை
கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக்
கொலை செய்த சம்பவமொன்று நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
சின்னமுகத்துவாரம் அக்கரைப்பற்று 9 பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய குணரட்ணம் குணதாஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இரு குடும்பங்களுக்கும் நீண்டகாலமாக குடும்பத் தகராறு காணப்படும்
நிலையில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 8.15 மணிக்கு இரு குடும்பத்திற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அதில் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரர் மீது கோடாரியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த குறித்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய சந்தேகநபரை பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட
கோடாரியுடன் கைது செய்துள்ளனர்.
யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்
யாழில் கோடாரி வெட்டு – ரவுடிகள் அட்டூழியம்
யாழ்ப்பாணம் பருத்துறை திக்கம் பகுதியில் 44 வயதான நபர் மீது கோடரி வெட்டு
தாக்குதல் இடம்பெற்றுள்ளது
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இந்த தாக்குதலை நடத்தி விட்டு தப்பி
சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பாதிக்க பட்டவர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுளளார்










