Tag: நோய்
பாலியல் நோய் எய்ட்ஸ் மருத்துவமனைகளில் 10,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை
பாலியல் நோய் எய்ட்ஸ் மருத்துவமனைகளில் 10,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை
பாலியல் நோய் எய்ட்ஸ் மருத்துவமனைகளில் 10,000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்: அமைச்சர்
இலங்கை தேசிய பாலியல் நோய்
இலங்கை தேசிய பாலியல் நோய்/எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 41 மருத்துவமனைகளில் 4,771 எச்.ஐ.வி எய்ட்ஸ் நோயாளிகள்
சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
1,469 சிபிலிஸ் நோயாளிகள், 1,035 கோனோரியா நோயாளிகள் மற்றும் 2,891 ஹெர்பெஸ் நோயாளிகள்
மருத்துவ சிகிச்சை
மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாக அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், எய்ட்ஸ் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளுக்கு எந்தப் பற்றாக்குறையும் இல்லை என்றார்.
பிரிட்டன் தமிழருக்கு எச்சரிக்கை பரவும் நோய்
பிரிட்டன் தமிழருக்கு எச்சரிக்கை பரவும் நோய்
பிரிட்டன் தமிழருக்கு எச்சரிக்கை பரவும் நோய் ,பிரிட்டன் தமிழருக்கு அவசர எச்சரிக்கிகை ,பிரிட்டன் நாடு தழுவிய நிலையில் தற்போது புதிய வகை வைரஸ் ஒன்று வேகமாக பரவி வருகிறது .
இந்த நோயானது ஈரலை தாக்கும் நிலை
இந்த நோயானது ஈரலை தாக்கும் நிலையில் வேகமாக பரவி வருகிறது .
இந்த நோயல்ல பாதிக்க பட்ட மக்கள் மருத்துவமனைகளில் அதிகம் கூடி வருவதால் ,
வீட்டில் வைத்து சோதனை
முதலில் மக்களை இதனை வீட்டில் வைத்து சோதனை செய்யும் படி கூறப்படுள்ளது .
இது கொரனோ நோயின் தாக்கத்தின் ஒன்றாக பார்க்க படுகிறது .
.அதனால் தான் மறைமுகமாக இந்த் வீட்டில் சோதனை செய்யும் நடவடிக்கையில் ஈடுபாடுங்கள் என கூற படுவதாக பார்க்க படுகிறது .
எனவே பிரிட்டன் வாழ் தமிழ் மக்களே மிக எச்சரிக்கையாக இருங்கள்
அதிகரிக்கும் டெங்கு நோய்
அதிகரிக்கும் டெங்கு நோய்
அதிகரிக்கும் டெங்கு நோய்,தமிழர் பகுதியில் சமீப காலங்களாக டெங்கு நோய் அதிகரித்து காணப்படுகிறது இவ்வாறு வவுனியாவில் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுற்றுப்புறச் சூழல்களை அசுத்தமாக வைத்திருப்பதால் இந்த டெங்கு நோய் அதிகமாக மக்களை தாக்கி வருவதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
மழை நீர்கள் தங்கி அதன் ஊடாக நுளம்பு அதிகரித்து காணப்படுவதால் மக்களை இந்த டெங்கு நோய் தாக்குவதாக வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டு வரை என காலப்பகுதியில் 113 க்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நோய் தாக்குதலில் தொற்றுக்கு உள்ளாகி சிலர் பலியாகி உள்ள தகவல்களும் வெளியாகி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
எனவே மக்களே இந்த கொடிய நோயிலிருந்து உங்கள் உயிர்களை தப்ப வைத்துக்கொள்ளளுங்கள் , உங்கள் சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பது செய்தி கூட கடத்தப்படும் செய்தி ஆகிறது.
யாழில் பரவும் புதிய நோய்
யாழில் பரவும் புதிய நோய்
யாழில் பரவும் புதிய நோய் , யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனிய காய்ச்சலுக்கு உள்ளாகிய நிலையில் தற்போது பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்ட நிலையில் இவர் மருத்துவ முறையில் சிகிச்சைக்கு சமூகமளித்திருந்த வழியில் அந்த நோயின் உச்சம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் புன்னாலை கட்டுவான் வடக்கு பகுதியைச் சேர்ந்த நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .கடந்து சில நாட்களாக பாரிய காய்ச்சல் நோயினால்
தாக்கப்பட்ட உள்ளத்தில் அவர் மருதுவம்சனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறு நோய்கள் அதிகமாக பரவி வருகின்ற நிலையில் ,தாக்குதல் அதிகரித்து மக்கள் பலியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவரது தொடர்பான வருட விசாரணைகள் முடிவுற்ற நிலையில் தற்போது உறவினர் சடலம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

மாத்தறை சிறைச்சாலையில் பரவும் நோய்
மாத்தறை சிறைச்சாலையில் பரவும் நோய்
மாத்தறை சிறைச்சாலை தடுத்து வைக்கப்பட்டுள்ள 08 கைதிகள் நோய்த் தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைய சிறைச்சாலை நடவடிக்கைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் உத்தரவின் பேரில், மாத்தறை சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட புதிய கைதிகளை அங்குனுகொலபலஸ்ஸ சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு
தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், சுகாதார பரிந்துரைகளின்படி பார்வையாளர்களை அனுமதிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
இஸ்ரேலுக்குள் பரவும் புதிய வகை நோய்
இஸ்ரேலுக்குள் பரவும் புதிய வகை நோய்
இஸ்ரேலுக்குள் பரவும் புதிய வகை நோய் ஒன்றினால் இஸ்ரேல் பர பரப்பில் உறைந்துள்ளது .
கொரனோ நோயானது மீளவும் பரவ ஆரம்பித்துள்ளதாகவும், இதன் தாக்கம் பத்து வீதத்தால் அதிகரித்துள்ளதாக இஸ்ரேல் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.
- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு
வேகமாக பரவும் புதிய நோய் குறித்து எச்சரிக்கை
வேகமாக பரவும் புதிய நோய் குறித்து எச்சரிக்கை
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா A மற்றும் B ஆகிய இரண்டு நோய்கள் வேகமாக பரவி வருவதாகத் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில், பிள்ளைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு றிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இருமல், காய்ச்சல் அல்லது சளி மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்றும், இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பகல்நேர பராமரிப்பு மையங்களுக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றும் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்
2 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சுவாச நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த நோய்க்கு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Featured
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க இதை சாப்பிடுங்க
சிறுநீரகம் கல்லீரல் மற்றும் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை வெளியேற்றும் சக்தி மூக்கிரட்டை கீரையில் உள்ளது. சிறுநீரகங்களில் கற்கள்
உருவாவது, சிறுநீரக தொற்று நோய்கள் போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணமாக மூக்கிரட்டை கீரை விளங்குகிறது.
சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்கும் மூக்கிரட்டை கீரை சூப்
மூக்கிரட்டை கீரை சூப்
தேவையான பொருட்கள்:
மூக்கிரட்டை கீரை – 2 கையளவு
வெங்காயம் – 1
தக்காளி – 1
பூண்டு – 2 பல்
மஞ்சள் தூள் – சிறிதளவு
மிளகுத் தூள் – 1 டீஸ்பூன்
சீரகப் பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மூக்கிரட்டை கீரையை நன்றாக சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, வெங்காயம், தக்காளி, கீரையை போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
கீரை நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
நன்றாக கொதித்த பிறகு அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும்.
சூப்பரான மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.
மூக்கிரட்டை கீரை கிடைக்காதவர்கள் மூக்கிரட்டை கீரை பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை வாங்கியும் பயன்படுத்தலாம்
சிறு நீராக நரோயினால் உலக அளவில் பல லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,இந்த சிறுநீரக நோயானது தொற்றி கொள்ள நாம் நாளாந்தம் அருந்தும் குடிநீர் முக்கியமான ஒன்றாகும்
இந்த நீரில் கால்சியம் படிந்துள்ளதால் அதி வேகமாக சிறு நீரக கல்லடைசல் ஏற்படுகிறது ,இது ஆசியா நாடுகளில் அதிகம் காணப்படுகிறது ,
வறண்ட நில பகுதியில் வசிக்கும் மக்கள் நீர் தட்டுப்பாடு காரணமாக ஆற்று நீர் மற்றும் மஞ்சள் காவி படர்ந்த ஒருவகை அசுத்த நீரினை அருந்துகின்றனர், இதனால் அதிக மக்கள் இவ்வகையான நோயிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .
தலை சுற்று ஏன் வருகிறது ..?
தலை சுற்று ஏன் வருகிறது ..?
மனிதருக்கு ஏற்படும் வியாதிகளில் ஒன்று தலைச்சுற்று,இந்த தலை சுற்றானது ஏன் எவ்வாறு ஏற்படுகிறது ,
அவ்விதம் ஏற்படும் தலை சுற்றை தடுக்க என்ன வழிகள் என்பதை நாம் தேடி கொண்டு உள்ளோம் அனால் அதற்க்கு தீர்வு ஏற்படதாக தெரியவில்லை
இந்த தலை சுற்று ஏன் ஏற்படுகிறது என்பதற்கு இதோ தலை சுற்று ஏன் வருகிறது
என மருத்துவ மாணவர் தரும் விளக்கத்தையும் ,அதனை எவ்வாறு தடுப்பது என்பதை இங்கே கவனியுங்கள்
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
மீள உருவெடுக்கும் எபோலா நோய் – பீதியில் உலகம்
மீள உருவெடுக்கும் எபோலா நோய் – பீதியில் உலகம்
உலக நாடுகளை அச்சுறுத்திய எபோலா காச்சல் நோயானது மீள கொங்கோவில் தற்போது ஆரம்பித்துள்ளது
இந்த நோயினால் பாதிக்க பட்ட டசின் கணக்கானோர் அடையாளம் காணப்பட்ட
நிலையில் இந்த நோயானது மிக வேகமாக பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது
இந்த நோயின் தாக்கம் மனித உடலின் தசைகள் உதிர்ந்து விழுதல் தன்மை கொண்டது
,
நடந்து செல்ல சதைகள் வீழ்ந்து நொறுங்கும் தன்மை கொண்டது என தெரிவிக்க படுகிறது
சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்.
சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்.
உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும் பெண்கள் சர்க்கரை நோயால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.
முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.
கர்ப்பகாலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, பல பெண்களுக்கு ‘கர்ப்பகால சர்க்கரை நோய்’ உண்டாகிறது. இதில் சிலருக்கு பிரசவம் முடிந்த சில
மாதங்களில் இந்த நோய் குணமாகிவிடும். ஒரு சிலர் இதனால் நிரந்தர பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
கர்ப்ப காலத்தில் உடலில் உற்பத்தியாகும் சில ஹார்மோன்கள், தாயின் இன்சுலின் சுரப்பைப் பாதிக்கும். இதன் மூலம் உடலுக்குத் தேவையான இன்சுலின் கிடைக்காமல், சர்க்கரை நோய் உண்டாகிறது. உடல் பருமன் மற்றும் கர்ப்பப்பை நீர்க்கட்டி இருக்கும்
பெண்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். மரபு ரீதியாகவும் இவ்வாறு ஏற்படலாம். முந்தைய கர்ப்பத்தில் சர்க்கரை நோய் ஏற்பட்டிருந்தால் அடுத்த கர்ப்பத்திலும் அதே நிலை தொடரும் வாய்ப்புள்ளது.
இதைத் தவிர்க்க சில எளிய வழிகளைப் பின்பற்றினால் போதும். அவற்றில் சில:
ஊட்டச்சத்துள்ள உணவு:
கர்ப்ப காலத்தில் ஆரோக்கியமான உணவு முறை அவசியம். காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். சுரைக்காய், பாகற்காய், வாழைத்தண்டு, வெள்ளை முள்ளங்கி, வாழைப்பூ, அவரைக்காய், முருங்கைக்கீரை
சர்க்கரை நோயும் மருத்துவ ஆலோசனையும்
ஆகியவற்றை அவ்வப்போது சாப்பிடலாம். இரவில் கார்ப்போஹைட்ரேட் நிறைந்த உணவைத் தவிர்த்து சிறுதானிய உணவு, பயறு வகைகளை அதிகம் சேர்த்துக் கொள்ள
வேண்டும். குறைந்த அளவிலான கொழுப்பு உள்ள பொருட்களும் கர்ப்பிணிகளின் உணவில் இருக்க வேண்டும்.
உப்பு, புளிப்பு, காரம் மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை குறைவாக சாப்பிடுவது நல்லது. ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்றவற்றை அதிகம் சாப்பிடலாம்.
மருத்துவ ஆலோசனை:
கர்ப்பத்தின் ஆரம்ப காலம் முதல் பிரசவம் வரை, மருத்துவர்களின் சர்க்கரை அதனால் ஏற்படும் தாக்குதல் தொடர்பான மருத்துவ ஆலோசனை முக்கியம். புதிய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைக்குப் பிறகே முயற்சிக்க
வேண்டும். இதுதவிர, சீரான இடைவெளியில் சர்க்கரை நோயின் அளவை பரிசோதனை செய்வதும், இன்சுலின் சுரப்பை சீராக்கத் தேவையான முயற்சிகளை மேற்கொள்வதும் முக்கியமானது.
சர்க்கரை நோயும்… மருத்துவ ஆலோசனையும்.
உடற்பயிற்சி கட்டாயம்:
கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையோடு நடைப்பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். இதன் மூலம், கர்ப்ப காலத்தில் அதிகப்படியான உடல் எடை
கூடுவதைத் தவிர்க்க முடியும். வாரத்தில் 4 முதல் 5
நாள் யோகா, தியானம் அல்லது வேறு ஏதேனும் உடற்பயிற்சியும் செய்து வரலாம்.
பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்
பிரிட்டனில் ஒரே நாளில் 148 000 பேர் பாதிப்பு 143 பேர் மரணம் அமெரிக்கா 869 மரணம்
பிரிட்டனில் கடந்த தினம் 148 ஆயிரம் பேர் கொரனோ நோயினால் பாதிக்க பட்டும் ,சுமார் 143 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 842 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர்
அமெரிக்கா
இதே போன்று அமெரிக்காவில் 233,485 பேர் பாதிக்க பட்டும் 869 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
இந்தியா
இதே போன்று இந்தியாவில் ,6,358 பேர் பாதிக்க பட்டும் 293 பேர் பலியாகியுள்ளனர்
ரஷியாவில் 305,155 பேர் பாதிக்க பட்டும் 937பேர் பலியாகியுள்ளனர்
தொடர்ந்து நோயின் தாக்குதல் தீவிரமாகி வருவதால் பிரிட்டன் உள்ளிட்ட பல நாடு முழு அடைப்புக்கு வரும் சில தினங்களில் இடம்பெற கூடும் என முக்கிய தகவல்கள் தெரிவிக்கின்றன
பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரனோ
பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரனோ
பிரிட்டனில் தற்போது ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் ரகத்தை சேர்ந்த கொரனோ
நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த நோயினால் பாதிக்க பட்ட
நிலையிலிருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்
முன்னர் பரவிய நாள்களில் இருந்து இது வேறுபட்டு காணப்படுவதாகவும் ,தற்கு புதிய அறிகுறிகள்
தென்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது
கொவிட் நோயிலிருந்து குணமடைந்த பெண்களுக்கு நீண்டகால நோய் அறிகுறிகள்
கொவிட் நோயிலிருந்து குணமடைந்த பெண்களுக்கு நீண்டகால நோய் அறிகுறிகள்
கொவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பெண்களுக்கு, மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் சில பாதிப்புகளைக் கொண்ட நீண்டகால நோய் அறிகுறிகள் அடையாளம்
காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் : மரபணு உயிரியல் மருத்துவப் பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இந்த நோய் அறிகுறிகள் ஆண்களுக்கும் ஏற்படலாம்.
இந்த நோய் அறிகுறிகளில், மன அழுத்தம் சுமார் 15 வீதம் உயர்வாக காணப்படும்.
ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இதுபோன்ற ஒன்பது அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
- இயல்பற்ற சுவாசம் 8%
- வயிறு சம்பந்தப்பட்ட நோய் அறிகுறிகள் 8%
- மன அழுத்தம் 15%
- மார்பு மற்றும் தொண்டை வலி 6%
- அறிவாற்றல் பிரச்சினைகள் 4%
- சோர்வு 5%
- தலைவலி 5%
- தசை தொடர்பான வலி 5%
- மற்றும் பிற உபாதைகள் 7%
ஆகியன அறிகுறிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நாள்பட்ட கொவிட் நோய் அறிகுறிகள் நவீன மருத்துவத்திற்கு ஒரு சவாலாக இருக்கலாம் என்று விசேட வைத்திய நிபுணர் சந்திம ஜீவந்தர ட்விட்டர் செய்தியொன்றில் தெரிவித்துள்ளார்..
நுவரெலியாவில் அதிக நோய் பரவல் -5 கிராமங்கள் தனிமை படுத்தல்
நுவரெலியாவில் அதிக நோய் பரவல் -5 கிராமங்கள் தனிமை படுத்தல்
நுவரெலியா பகுதியில் நோயின் தாக்குதல் அதிகரித்து வருகின்ற நிலையில் ஐந்து கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
விசேட இராணுவம் போலீசார் குவிக்க பட்டு கண்காணிப்பு தீவிரமாக்க பட்டுள்ளது
மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது
மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது
. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.
உலகளவில் அதிகமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் அமைந்திருக்கிறது.
அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் சவாலான
விஷயமாக இருக்கிறது. ஒருசில உணவு வகைகளை தவறாமல் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும். பூண்டிற்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி
இருக்கிறது. மார்பகம், மூளை, நுரையீரல், கணையம், வயிறு போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதை இது தடுக்கும்
பிரோக்கோலிக்கும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை நீராவியில் வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது.
மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது
அதில் சூப், சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.
சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை
தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.
வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம்
கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது.
கிவி பழத்திலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.
வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது.
அவகோடா, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம்,
மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி, திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
பார்வைத்திறனை திருடும் நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது என்றும், ஆரம்ப நிலையிலேயே இதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் தெரிவித்தார்.
கண்விழி விறைப்பு நோயினால் ஏற்படும் பார்வை திறன் இழப்பை முற்றிலுமாக ஒழிப்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரமாக கடைப்பிடிப்பதின் முக்கிய குறிக்கோள் ஆகும்.
இந்த ஆண்டு ‘‘உலகம் ஒளிமயமானது, உங்கள் பார்வையை காத்திடுங்கள்’’ என்பதே உலக கண்விழி விறைப்பு நோய் வாரத்தின் கருப்பொருளாக இருக்கிறது. அந்த வகையில் கணிவிழி
விறைப்பு நோய் குறித்து டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் பிராந்திய மருத்துவ இயக்குனர் டாக்டர் ஆர்.கலாதேவி சதீஷ் கூறியதாவது:-
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
கண்விழி விறைப்பு நோய் வராமல் தடுப்பதற்கான முன்நடவடிக்கைகள் என்று எதுவும் இல்லை.
ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்தாத கண்விழி விறைப்பு நோயினால், பார்வைத் திறன் இழப்பு வராமல் தடுப்பதற்கு ஒரே வழி, அதனை தொடக்க நிலையிலேயே
பாதிப்பை கண்டறிந்து சரிசெய்வது தான். கண்ணுக்கு தெரியாமல் சத்தமின்றி பார்வைத்திறனை திருடும் இந்த நோய்க்கு உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்.
கண்புரை நோய் மற்றும் சிகிச்சையளிக்கப்படாத ஒளிக்கதிர் விலக்க குறைபாடுகளுக்கு அடுத்ததாக இந்தியாவில் பார்வைத்திறன் இழப்புக்கு காரணமான நோயாக கண்விழி விறைப்பு நோய் இருக்கிறது. இந்த நோய் அதிக சிக்கலானது மற்றும் ஆபத்தானது. கண்ணுக்குள் அழுத்தம்
அதிகரிக்கும் போது இது நிகழ்கிறது. கண்ணின் முன்புற பகுதிக்குள் இருக்கும் தெளிவான திரவத்தின் உற்பத்தி விகிதம் இயல்பானதாக இருக்கின்ற காலம் வரை இந்த அழுத்தமானது அதன்
வெளியேறல் விகிதத்துக்கு நிகரானதாக இருக்கும். இந்த திரவத்தை எடுத்துச்செல்கிற பாதைகளில் அடைப்பு ஏற்படும்போது கண்ணுக்குள் அழுத்தம் அதிகரிக்கும்.
மேலும் மூளைக்கு தகவல்களை அனுப்பும் விழி நரம்பையும் சேதப்படுத்துகிறது.
பார்வைத்திறன் இழப்பு
எந்தவொரு வயது பிரிவில் உள்ள நபரையும் கண் விழி விறைப்பு நோய் தாக்கலாம். கண்விழி விறைப்பு நோய்க்கு சுமார் 2.3 சதவீதம் வாழ்நாள் இடர்வாய்ப்பு மக்களுக்கு
இருப்பதாக அறியப்படுகிறது. குடும்பத்தில் கண்விழி விறைப்பு நோய் இருந்த வரலாறு, நீரிழிவு நோய்
பார்வைத்திறனை திருடும் கண் விழி விறைப்பு
உள்ளவர்கள் மற்றும் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள், ஒளிக்கதிர் விளக்க குறைபாடுள்ள நபர்கள் மற்றும் ஸ்டெராய்டு மருந்துகள், கண் சொட்டு மருந்துகள், மாத்திரைகள் மற்றும் சரும கிரீம்களை பயன்படுத்துபவர்கள் இந்த இடர்வாய்ப்புள்ளவர்களாக கருதப்படுகிறார்கள்.
இத்தகைய நபர்கள் ஒவ்வொரு ஆண்டும் கண்விழி விறைப்பு நோய் தங்களுக்கு இருக்கிறதா? என்பதற்கான பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்.
ஆரம்ப நிலையிலேயே கண்விழி விறைப்பு நோய் இருப்பது கண்டறியப்படுமானால், பார்வை திறன் இழப்பை தவிர்க்க அல்லது குறைக்க தேவையான சிகிச்சைகளை பெற முடியும். இதுவரை 12 மில்லியன் நபர்களை இந்த நோய் பாதித்திருக்கிறது.
இலங்கையில் பரவும் புதியவகை நோய்
இலங்கையில் பரவும் புதியவகை நோய்
இலங்கை அனுராதாபுரம் பகுதியில் டைனியா எனப்படும் புதிய வகை நோயானது பரவி வருகிறது ,இது மனிதர்களின் தோலினை
தாக்கிய பின்ன அது உடல் முழுவதும் வேகமாக பரவி மனிதர்களின்
உயிரை கொல்லும் கொடிய ஆபத்தான நோயாக பார்க்க படுகிறது
இது தொடர்பான விழிப்புணர்வு எச்சரிக்கை நிகழ்வுகள் நடத்த பட்டு வருகின்றன
தலைவலி வர காரணம் என்ன தெரியுமா..?
தலைவலி வர காரணம் என்ன தெரியுமா..?
தலைவலி வர காரணம் இது தான் – உடனே இதனை சரி செய்ய இதனை பண்ணுங்க பறந்து போயிடும்
ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் நோய்களுள் ஒன்றாக ஒற்றைத் தலைவலி விளங்குகிறது. தலைவலிக்கும், ஒற்றைத்தலைவலிக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன.
சாதாரண தலைவலி கொஞ்ச நேரத்தில் சரியாகிவிடும். ஆரம்பத்தில் வலி அதிகமாக இருந்தாலும் படிப்படியாக
திருமணத்திற்கு முன்பு பெண்கள் செய்யும் அந்த விடயம்
குறைந்துவிடும். ஆனால் ‘மைக்ரேன் ஹெட்டேக்’ எனப்படும் ஒற்றைத்தலைவலி லேசாக வலிக்க ஆரம்பித்து பிறகு தலையே வெடித்துவிடும் அளவுக்கு கொடூரமாக மாறிவிடும்.
இந்த தலைவலி ஒவ்வொருவருடைய உடல்நிலையை பொறுத்து மாறு படக்கூடியது. சிலருக்கு சில மணி நேரம் வலி இருக்கும். சிலருக்கு காலை முதல் மாலை வரை பாடாய் படுத்திவிடும்.
சிலருக்கு இரவில் தூங்கி எழுந்தால்தான் சரியாகும். ஒற்றைத்தலைவலி வந்தால் ஓரிரு நாட்கள் வரை
அவதிப்படுபவர்களும் இருக்கிறார்கள். வலி இருக்கும் சமயத்தில் ஒவ்வொரு நொடியும் ரண வேதனையை அனுபவிக்க வைத்துவிடும்.
பெரும்பாலும் ஒற்றைத் தலைவலி ஒரு பக்கத்தில்தான் வலியை ஏற்படுத்தும். சிலருக்கு இரண்டு பக்கமும் வலிக்கும். அந்த சமயத்தில் கண் இமை பகுதிகளில் வலியின் தாக்கம் அதிகமாக
இருக்கும். இரவில் நன்றாக தூங்காமல் இருப்பது, சரியான நேஇரத்தில் உணவு சாப்பிடாதது, பசித்தாலும் குறைவாக
சாப்பிடுவது போன்றவை ஒற்றைத்தலைவலிக்கான பொதுவான காரணங்கள்.
சிலருக்கு காரணத்தை கண்டறிய முடியாதபடி பலவிதமான அறிகுறிகளை வெளிப்படுத்தும். குறிப்பிட்ட நாள் இடைவெளியில் அடிக்கடி வந்து கொண்டேஇருக்கும். ஒவ்வொரு முறை வரும்போதும்
நீண்ட நேரம் வலி இருந்து கொண்டிருக்கும். வலி அதிகரிக்கும்போது கண் இமைகளில் கடும் பாதிப்பு உண்டாகும். சிலருக்கு பார்வை
தெளிவாக தெரியாது. தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
ஒற்றைத் தலைவலி நீடித்துக்கொண்டிருந்தால் மூளை நரம்புகள் பாதிப்படையும். நாளடைவில் மறதி ஏற்படும். மன அழுத்தத்திற்கு ஆளானாலும் அடிக்கடி இந்த தலைவலி வரும். மலச்சிக்கல்,
அடிக்கடி சிறுநீர் கழிப்பது ‘மைக்ரேன்’ தலைவலிக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா
யாருக்காவது ஒற்றைத்தலைவலி இருந்தால் பரம்பரை ரீதியாகவும் பின் தொடர்ந்து வரும்.
வேலைப்பளு அதிகரிக்கும்போது டென்ஷன் அதிகமாகி அதன் காரணமாகவும் உண்டாகும். அப்போது வெளிச்சத்தை பார்த்தால் கண்கள் கூசும். சிலர் தலைவலி என்றதும் கண்களில் தான்
பிரச்சினை இருப்பதாக நினைப்பார்கள். தொடர்ந்து ஒற்றைத் தலைவலி இருப்பவர்கள் எம்.ஆர்.ஐ ஸ்கேன், சி.டி ஸ்கேன் போன்ற
பரிசோதனைகளை மேற்கொள்வது நல்லது. அதன் மூலம் மூளை சார்ந்த பிரச்சினைகள் எதுவும் இருக்கிறதா என்பதை கண்டறிந்து சிகிச்சை பெறலாம்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து
எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளும், முக்கிய காரணங்களும்
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகளும், முக்கிய காரணங்களும்
மனித உடல் உறுப்புகள் அனைத்துமே மிக முக்கியமானவை. அதில் சிறுநீரகம் பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் நாம் தெரிந்து கொள்வது மிக அவசியம்.
சிறுநீரகங்கள் வயிற்று பின்புறம் முதுகெலும்பின் இரு பக்கங்களிலும் 2 செ.மீ. நீளத்தில் 6 செ.மீ அகலத்தில் 3 செ.மீ. தடிமானத்தில் இருக்கின்றன.
சிறுநீரகத்தின் வேலை: ஒரு மில்லியன் சிறுநீரக முடிச்சுகள் (நெப்ரான்கள்) நமது உடலில் உள்ளன. இந்த நெப்ரான்கள்
இரத்தத்திலிருந்து சிறுநீரை வடிகட்டி சிறுநீர்ப்பைக்கு அனுப்பிக் கொண்டேயிருப்பது தான் இதன் வேலையாகும்.
பொதுவாக நாளை நாம் என்ன வேலை செய்யப் போகின்றோம் என்று திட்டமிட்டு அதன்படி செயல்படுவது வழக்கம். நாளை நமது
வேலை என்ன என்று குத்துமதிப்பாக நமக்கு தெரியும். ஆனால் சிறுநீரகத்திலுள்ள நெப்ரான்களுக்கு அன்று என்ன வேலை
வரப்போகின்றது என்று கூடத்தெரியாது. நாம் எப்படி சாப்பிடுகின்றோம்! அப்பா கேட்கவே வேண்டாம். காலை டிபன்
வயிறு முழுக்க, அது ஜீரணமாகுமுன் ஸநாக்ஸ் வேறு பின் மதியம் பின் நொறுக்குத் தீனி, மாலை வடை, பஜ்ஜி, டீ, இரவு முழுக்க கட்டு
கட்டி விடுகின்றோம். இவ்வாறு அதிகப்படியான உணவுகளைச் சாப்பிடுவதால் அதிக கழிவுகள் சேர்கின்றன. அவற்றை வெளியேற்ற நெப்ரான்கள் ஓவர் டைம் வேலை பார்க்கின்றது.
தாயின் வயிற்றில் கரு உண்டான மூன்றாவது மாதத்திலிருந்து அந்த மனிதன் வளர்ந்து சாகும் வரை நம் உடலில் ஓய்வின்றி வேலை
பார்ப்பது சிறுநீரகம். இந்த ஆரம்பநிலை சிறுநீர் நெப்ரான்களின் வழியே பொட்டாசியம், பாஸ்பேட், அமோனியா போன்ற தாதுப்
பொருட்கள் தண்ணீருடன் கலந்து சிறுநீர்ப் பையில் சேருகின்றன. இப்படிபட்ட சிறுநீரகம் செயல் இழதால் உடலில் கீழ்கண்ட அறிகுறிகள் தோன்றும்.
சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள்
- அடிக்கடி காய்ச்சல் வரும்.
- கை, கால் வீக்கம் ஏற்படும்.
- பசியின்மை, வயிறு உப்புசம்
- இருமல், சளி, மூச்சுத்திணறல்
- தோல் வியாதி
- வயிற்றுப் போக்கு
- மன சோர்வு
- பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி மாற்றங்கள்
- தசைப் பிடிப்பு
- இரத்த சோகை
மேற்குறிப்பிட்ட அறிகுறிகள் உங்கள் உடலில் இருந்தால், சிறுநீரகம் ஒழுங்காக இயங்கவில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
சிறுநீரக செயலிழப்பிற்கு முக்கிய காரணங்கள்
- அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக் கொள்வதால்
- சிகரெட், பீடி, மது பழக்கத்தால், தவறான உணவு முறை,
- பசித்தால் மட்டும் புசிக்காமல் ருசிக்காக நேரம் தவறி உணவு உட்கொள்வதால்
- உயர்ந்த இரத்த அழுத்தம்
- மன உளைச்சல், மன அழுத்தம், கோபம்
- அளவுக்கு அதிகமாக போகத்தில் ஈடுபடுதல்
நம்முடைய இயற்கைக்கு மீறிய செய்கையால், நமது சிறுநீரகம் சற்று செயலிழக்கும் நிலையில் முழித்துக்கொள்ளுங்கள். விழித்து
எழுந்து எளிமையான யோகாசனத்தின் மூலமும், உணவு உண்ணும் முறை மூலமும் மீண்டும் சிறப்பாக இயங்கச் செய்ய முடியும்..






























