Category: குற்ற செய்திகள்
குற்ற செய்திகள், கொலை குற்ற செய்திகள் ,
தந்தையை அடித்து கொன்ற மகன்
தந்தையை அடித்து கொன்ற மகன்
இலங்கை குருவிட்ட காவல்துறை பகுதியில் தந்தையை அடித்து கொன்ற மகன் கொலைச் சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
தனது மனைவியை போதையில் வந்த தாக்கிய பொழுது அந்த தாக்குதலை தடுத்த அறுபத்தி ஆறு வயதுடைய தந்தையை கட்டையால் அடித்து மகன் கொலை செய்துள்ளார்
இரத்த வெள்ளத்தில் மிதந்த தந்தை சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது
பெற்று வளர்த்த தந்தையை இவ்விதம் மகன் அடித்து கொன்ற சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
போதைக்கு அடிமையாகி பல குடும்பங்கள் இவ்விதம் சீரழிந்து போகும் சம்பவங்கள் நாட்டில் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
முப்பத்தி நான்கு வயதுடைய மகன் தந்தையை அடித்து கொன்ற சம்பவத்தை அடுத்து அவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டு தடுத்து வைக்க பட்டுளளார்
தந்தை மரணம் மகன் சிறையில் ,போதை செய்த அலங்கோலம் .
அடிகாயங்களுடன் வவுனியாவில் சடலம் மீட்பு
அடிகாயங்களுடன் வவுனியாவில் சடலம் மீட்பு
இலங்கை வவுனியா பகுதியில் அடிகாயங்களுடன் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
கை ,கால்கள் தலை என்பனவற்றில் , அடிகாயங்கள் காணப்படுகின்றன
நாள் தோறும் இலங்கையில் இவ்வாறு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்க ப்பட்டு வருகிறது
இது திட்டமிடப் பட்டு செய்யப்படும் கொலையாக பார்க்க படுகிறது
தொடரும் இந்த மர்ம கொலைகள் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது
அடிகாயங்களுடன் வவுனியாவில் மீட்க பட்ட ஆணின் சடலம் மரண பரிசோதனைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
வவுனியாவில் சடலம் மீட்பு சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுதியுள்ளது
இந்த நபரை அடித்து கொன்றது யார் என்பது தொடர்பில் வவுனியா பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
பெண்ணை உருட்டி தாக்கும் ஆண்கள்
பெண்ணை உருட்டி தாக்கும் ஆண்கள்
வடக்கு சீனா பகுதியில் பெண்ணை உணவகத்தில் உருட்டி தாக்கும் ஆண்கள் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது
வடக்கு சீனா பகுதியில் உள்ள உணவகத்தில் பெண் குழு ஒன்று உணவு உண்ண சென்றுள்ளனர். அப்பொழுது அங்கு வந்த ஒன்பது பேர் கொண்ட ஆண்கள் அந்த பெண்ணை உருட்டி உருட்டி தாக்குதல் நடத்தியுள்ளனர்
உணவகத்தில் பெண்ணை உருட்டி தாக்கிய கும்பல் அந்த பெண் மீது பாலியல் நடவடிக்கையும் மேற்கொண்டுள்ளனர்
உணவகத்தில் பெண் மீது தாக்குதல் நடத்தும் ஆண்கள் அந்த பெண்ணை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் காணொளியாக வெளியிட பட்ட நிலையில் அவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
இந்த பெண்ணை உருட்டி உருட்டி ஒன்பது ஆண்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர் ,ஆண்கள் நடத்திய இந்த கொலை வெறி தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
அணைத்து மக்களும் சென்று உணவு உண்ணும் உணவகத்தில் நடந்த பெண்ணை தாக்கிய இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்பது பேர் கொண்ட ஆண்கள் குழுவினர் பெண்ணை தாக்கி கற்பழிக்க முனைந்த செயல் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூன்று வயது சகோதரனை சுட்டு கொன்ற 13 வயது அண்ணன்
மூன்று வயது சகோதரனை சுட்டு கொன்ற 13 வயது அண்ணன்
அமெரிக்கா Grand Bay பகுதியில் உள்ள வீட்டு தோட்டத்தில் மூன்று வயது சகோதரனை 13 வயது அண்ணன் சுட்டு கொலை செய்துள்ளார்
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது அண்ணா தம்பி கள்ளன், பொலிஸ் விளையாட்டு விளையாடி கொண்டிருந்தனர்
அப்பொழுது அண்ணன் துப்பாக்கியால் திருடனை சுட்ட போது அது நியமாகவே வெடித்து விட்டது
அண்ணன் பயன்படுத்திய விமான எதிர்ப்பு துப்பாக்கியில் இருந்து பாய்ந்த குண்டு மூன்று வயது சகோதரனை கண்ணை துளைத்து அவரை கொலை செய்துள்ளது
சகோதரனை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த பதின் மூன்று வயது அண்ணன் பொலிசாரால் கைது செய்ய பட்டுள்ளார்
மூன்று வயது சகோதரன் சடலம் மீட்க பட்டு சடல மருத்துவ பரிசோதனைக்கு வைக்க பட்டுள்ளது
விளையாடடு துப்பாக்கி போல் விமான எந்திர துப்பாக்கி சுட்டு விளையாட லோட் செய்து வைத்தது யார் அது எவ்விதம் இடம்பெற்றது என்பது தொடர்பில் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
அமெரிக்காவில் துப்பாக்கிகள் அனுமதி பத்திரம் பெற்று வீடுகளில் வைத்திருக்க முடியும் ஆனால் அதனால் ஏற்படும் இவ்வாறான சுட்டு கொலை விபரீதங்கள் ஏற்பட்டால் துப்பாக்கி வைத்திருப்பவரே பொறுப்பாகும்
அவ்விதம் வயது அனுமதி பெற்று வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்க பட்டிருந்த துப்பாக்கி இன்று அதே வயது குறைந்த அண்ணனால் தம்பிக்கு எமனாக மாறியுள்ளது
அமெரிக்காவில் ஏற்படும் துப்பாக்கிசூட்டு சம்பவங்களை தடுக்க துப்பாக்கி வைத்திருக்கும் அனைவரது அனுமதி இரத்து செய்ய பட வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் ,
அவ்வாறான வேளையில் வயது குறைந்த அண்ணனால் சிறிய தம்பி சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவம் மக்களை மேலும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
துப்பாக்கி சூட்டில் சிக்கி மட்டும் அமெரிக்காவில் 700 பேர் பலியாகியுள்ளனர்
என்ற புள்ளி விபரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவம் நடைபெற்று முடிந்துள்ளது
சிறுவர்களை சிறுவர்கள் சுட்டு கொன்ற சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,
கடந்த மாதம் தாயை சிறுமி சுட்டு கொன்ற சம்பவம் பதிவாகி இருந்தது ,இது அமெரிக்கா அரசு மக்களுக்கு ஆயுதங்கள் வைத்திருக்கலாம் என வழங்கிய அனுமதியே, இந்த அப்பாவி உயிர்கள் பலியாக கரணம் என தெரிவிக்க படுகிறது
அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை
அமெரிக்காவில் மக்கள் பாவனைக்கு வழங்க பட்ட ஆயுத அனுமதி ஊடக இதுவரை 700 பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,
இந்த படு கொலைகளுக்கு காரணமாக விளங்கும் இந்த ஆயுத பாவனையை இரத்து செய்திட வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்
தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ஊடக நாள் தோறும் பல மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,
இந்த துப்பாக்கி கலாச்சாரம் மக்களின் இயல்பு வாழ்வுக்கும் ,நடமாடும் மக்கள் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது ,
எனவே இந்த ஆயுத பாவனை அனுமதியை இரத்து செய்திட வேண்டும் என மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சமீப காலங்களாக அமெரிக்காவில் தொடரான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன
அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை சம்பவம் பலத்த எதிர் நிலைய உருவாக்காகியுள்ளது
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலியாகிய வண்ணம் உள்ளனர் மேலும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி பல நூறு மக்கள் செயல் முடக்க பட்ட நிலையிலும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்
ஆளும் ஜோ பைடன் அரசுக்கு எதிராக மேற்கொள்ள படும் இந்த போராட்டங்கள் ,ஆளும் ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் நடத்த படும் இந்த துப்பாக்கி சுட்டுக் கொலை சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள இந்த நெருக்கடியை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்பது மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது
பாடசாலைகள் ,பொது இடங்கள் ஆலயங்கள்,பார்கள் என பல்வேறு பட்ட பகுதிகளில் தொடராக இடம்பெற்று வரும் துப்பாக்கி சூட்டு கொலை
மக்களை கிளர்ந்தெழ வைத்துள்ள செயலானது ஆளும் அமெரிக்கா அரசுகளுக்கு
பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது இடம் பெறும் மக்கள் எதிர்ப்பு நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன
உலக நாட்டு உல்லாச பயணிகள் அமெரிக்காவுக்கு உல்லாச பயணம் செல்வதற்கு இந்த ஆயுத சுட்டுக்கொலை சம்பவங்களினால் அங்கு செல்ல தயங்கி வருகின்ற நிகழ்வுகளும் இடம்பெறுகிறது
இவ்வாறான அச்சம் தோய்ந்த சிலரது கருத்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறும் பதிய பெறுகிறது .
- வன்னி மைந்தன் –
- ஈரான் அமெரிக்கா கடலில் போர்
- 39 தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக ஹிஸ்புல்லா
- ஈரான் மீதான போர் ‘மிக விரைவில் முடிவுக்கு வரலாம்’ என்கிறார் டிரம்ப்
- அமெரிக்காவையும் இஸ்ரேலையும் ‘உண்மையான பயங்கரவாதிகள்’ என ஈரான் அதிபர் சாடினார்
- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது
- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை
- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
- ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படை முற்றுகை போர்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை
கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
கத்தியால் குத்தி ஒருவர் படுகொலை
இலங்கையில் கடந்த தினம் கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் நபர் ஒருவர் கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார் ,
இவ்வாறு கத்தி குத்துக்கு உள்ளானவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்
கத்தியால் குத்திய நபர் படுகொலை செய்ய பட்ட நபராது கைபேசியை திருடிய
நிலையில் அது தொடர்பாக அவரது இரு மகனுடன் சென்று விசாரிக்க சென்ற பொழுது அவரது வீட்டில் வைத்து கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்
கத்தியால் கோரமாக குத்தி படுகொலையை புரிந்து விட்டு கொலை குற்றவாளி தப்பி
ஓடியுள்ளார் ,இவ்வாறு தப்பி ஓடிய கொலையாளியை கைது செய்யும் நோக்குடன் விசேட காவல்துறையினர் செயலாற்றி வருகின்றனர்
இலங்கையில் நாள் தோறும் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருட்களின் விலைவாசி போல எகிறிய வண்ணம் உள்ளது
மக்கள் மத்தியில் இவ்விதமான கொடூர குற்றவியல் மனோ நிலையை இவ்வாறான படுகொலை சம்பவங்களுக்கு காரணமாக அமைய பெறுகிறது
கடந்த சில காலங்களாக நீர் நிலைகளில் படுகொலை செய்யப்பட்டு வீச பட்ட
நிலையில் மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றன ,அதுபோலவே இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இலங்கையில் அதிகரித்து செல்லும் இவ்வாறான கத்தி குத்து படுகொலைகளை
தடுக்க போலீசார் தவறி வருகின்றனர் ,மேலும் இந்த படுகொலை குற்ற செயல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளவும் மக்கள் தவறி வருகின்றனர்
திருட பட்ட ஒரு கைபேசியை திருடன் என்கின்ற முறையில் வன்முறையோடு திருடியவர் வீடு சென்று விசாரிக்க சென்ற போதே
வாக்குவாதம் முற்றிய நிலையில் குறித்த திருட்டு பழிக்குற்றத்தில் இருந்து தப்பிக்க திடீர் கத்தி குத்து படுகொலை தாக்குதலை நடத்தியுள்ளார்
வாய் தர்க்கம் முற்றிய நிலையில் அதனை சமாதான முறையில் அணுகிட தவறியதன் விளைவே அப்பாவி உயிர் ஒன்று படு கோரமாக கத்தியால் குத்தி படுகொலை செய்யப்படும் நிலைக்கு சென்றுள்ளது
அறிவார்ந்த நிலையில் பிரச்சனைகளை கையாள மறுத்ததன் விளைவே இந்த கத்தி குத்து படுகொலைக்கு காரணமாக அமைந்துள்ளது.
- வன்னி மைந்தன் –
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
முல்லைத்தீவு மூங்கிலாறு பகுதியை சேர்ந்த பன்னிரண்டு வயது சிறுமி ஒருவர் தனது காதலனுடன் தப்பி ஓடியுள்ளார்
இவர் தமது வீட்டை விட்டு காதலனுடன் தப்பி போக முன்னர் ,அங்கு கடிதம் எழுதி வைத்து விட்டு தப்பி சென்றுள்ளார்
காதலனுடன் ஓட்டம்
அதில் என்னை தேட வேண்டாம் நான் வீடு வரமாட்டேன் என அதில் குறிப்பிட்ட பட்டிருந்தது
அந்த கடிதத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தை கடிதத்துடன் காவல்துறை நிலையம் சென்று முறையிட்டுள்ளார்
அப்போது சிறுமியான மகள் தந்தையின் பணம் ,மற்றும் கைபேசி என்பனவற்றை திருடி கொண்டு தப்பி ஓடியுள்ளது தெரியவந்துள்ளது
சிறுமி கண்டு பிடிப்பு
போலீசார் சிறுமியின் கைபேசியில் தொடர்பு கொண்டு
வினவிய பொழுது அவர் கட்டனில் உள்ளது கண்டு
பிடிக்க பட்டுள்ளது ,சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்ற சாட்டில் காதலன் கைது செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது
காதல் புரிந்த அலங்கோலம்
அறியா பருவத்தில் புரியா வந்த காதல் மோகத்தினால் தனது எதிர்கால வாழ்வினை குழி தோண்டி புதைத்துள்ளளார் இந்த சிறுமி ,பெற்றவர்களை மறந்து அவர்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை திருடி கொண்டு காதலனுடன் ஓடிய மகளின் செயல் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம்
பட்டினி கிடந்தது பகலிரவாய் பிள்ளைகளுக்கு என உழைத்த தந்தை , தயார் இவருடன் கூடி பிறந்தவர்கள் வாழ்வில் மண்ணை தூவி இன பால் கவர்ச்சியில் சிக்கி சீரழிந்து போகும் இந்த சிறிசுகளை என்னவென்று சொல்ல
பேஸ்புக் மூலம் ஏற்பட்ட காதல்
குறித்த காதலனுடன் பேஸ்புக் மூலம் தொடர்பை ஏற்படுத்தி சிறுமி காதல் வலையில் வீழ்ந்துள்ளார் ,அவரது இனிப்பான பேச்சும் அந்தரங்க உரையாடல்களும் இன்று சந்தி சிரிக்க வைத்துள்ளது
பிள்ளைகள் விரும்பும் கைபேசியை அவர்களுக்கு வழங்கியதன் ஊடாக அவர்கள் பேஸ்புக் மூலம் காதல் வலையில் சிக்கி குடும்ப மானத்தை ரோட்டில் விற்றுள்ளனர் ,
இந்த விடயங்கள் அனைத்திற்கும் பிள்ளைகள் மீது பெற்றவர்கள் வைக்கும் கண்மூடித்தனமான நம்பிக்கையும் , பாசமுமே காரணம் ,அதனை புரியாது பிள்ளைகள் பெற்றவர்களை ஏமாற்றியதாக கருதி தம்மை தாமே ஏமாற்றி கொள்ளும் இழி செயல்களே இவையாகும்
இளைய சமுதாயமே கொஞ்சம் சிந்தியுங்கள் ,அழகான வாழ்வை அறியா பருவத்தில் தொலைத்து விடாதீர்கள் ,வாழ்க்கை வாழ்வதற்கே ,இடையில் கண்ணீரில் அலைவதற்க்கு அல்ல ,ஒன்றை செய்திட முன்னர் கொஞ்சம் யோசியுங்கள் .
12 வயது சிறுமி காதலனுடன் ஓட்டம் எங்கே செல்கிறது எமது தேசம் ..?
- வன்னி மைந்தன் –
மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி
மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி
இலங்கை மொனராகலை எதிமலே பொலிஸ் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் அதே குடும்பத்தை சேர்ந்த மூவரால் கற்பழிக்க பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் பதிவாகியுள்ளது
வயிற்று வலியால் துடித்த சிறுமி மொனராகல மருத்துவ மனைக்கு அழைத்து சென்று நடத்திய சோதனையில் கூட்டாக கற்பழிக்க பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது
நடந்தது என்ன
பதின் மூன்று வயதான சிறுமியை அவரது மூத்த சகோதரன் ,மற்றும் தாத்தா,மற்றும் தாயின் தம்பி ,மாமா கூட்டாக இணைந்து கற்பழித்துள்ளனர்
இந்த கூட்டு கற்பழிப்பு சம்பவம் பல மாதங்காளாக தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் இருந்துள்ளது ,சம்பவ தினம் கடுமையான வயிற்று வலியால் துடித்த சிறுமியை பெற்றவர்கல் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல பட்ட பொழுதே மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது
மருத்துவமனை மருத்துவர்களுக்கு ஏற்பட்ட சாந்தேகத்தை அடுத்து பொலிசாருக்கு அறிவிக்க பட்ட நிலையில் ,பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மேற்படி திடுக்கிடும் விடயம் அம்பலமாகியுள்ளது
போலீஸ் விசாரணை
போலீசாரை மேற்கொண்ட தீவிர விசாரணையில் சிறுமி கற்பழிக்க பட்ட சம்பவம் உறுதியானது ,அந்த பாலியல் சம்பவத்தில் அதே குடும்பத்தை சேர்ந்தவர்கள் நடத்திய
செயல் உறுதியான நிலையில் தாத்தா,மாமா ,சகோதரன் ஆகியோரை கைது செய்யும் வேட்டையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்
பெற்றவர்களின் அசமந்த போக்கும் சிறுமியின் தெளிவில்லா நிலையும் இந்த கூட்டு கற்பழிப்பு நடந்தேறியமைக்கு காரணமாக அமைந்துள்ளது
மூவரால் கற்பழிக்க பட்ட சிறுமி
குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவரலாம் என எதிர் பார்க்க படுகிறது,இதைவிட மேலும் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகலாம் எனவும் எதிர் பார்க்க படுகிறது
அதிர்ச்சியில் குடும்பம்
தமது சிறு வயது மகள் தாத்தா,மாமா,சகோதரனால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டுள்ள செயல் குடும்பத்தாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
சிறுமியை கற்பழித்த அனைவரும் தண்டிக்க படவேண்டும் என அவர்கள் உரத்த குரலில் தெரிவித்து வருகின்றனர்
இந்த செய்தி காட்டு தீயாக அந்த கிராமத்தில் பரவிய நிலையில் அந்த பகுதி மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
பதின் மூன்று வயது பாடசாலை மாணவி கற்பழிக்க பட்ட செய்தி ஊடகங்கள் வாயிலாக பரவிய நிலையில் ,சிறுமிகள் மீது அதிக கவனத்துடன் அவர்களை பராமரிக்க வேண்டும் என அந்த கிராம மக்கள் மட்டுமல்லாது இந்த செய்திகள் அறிந்த அனைவரும் உறுதி நிலை எடுத்துள்ளனர்
சினிமா காட்சிகளில் வருகின்ற சம்பவம் போல இந்த கற்பழிப்பு குற்ற செயல் இடம்பெற்றுள்ளது,சிறுமியை சீரழித்த அனைவரும் தண்டிக்க படவேண்டும் என்பது மக்களின் கொதிப்பாக உள்ளது .
- வன்னி மைந்தன் –
கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு
கணேசபுரம் காட்டுப்பகுதியில் 16 வயது பெண் சடலம் மீட்பு
நேற்று மாலை, குறித்த சிறுமி காணாமல் போயிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் சிறுமியின் வீட்டுக்கு அண்மித்த பாதை ஒன்றில் அவரது காலணி மற்று புத்தகங்கள் கண்டெடுக்கப்பட்டன.
குறித்தப் பகுதியில் தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டதுடன், அந்தப் பகுதியில்
இருந்த கிணறு ஒன்றில் இருந்து சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது
மயக்க மருந்து கொடுத்து திருடிய இளம் பெண் – மக்களே உசார்
மயக்க மருந்து கொடுத்து திருடிய இளம் பெண் – மக்களே உசார்
வவுனியாவில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 21 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (27) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் முதிய பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த புதன் கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். மருந்து எடுத்து விட்டு குறித்த வயோதிப பெண்
வைத்தியசாலையில் சிறிது இளைப்பாறி இருந்த போது அங்கு வந்த யுவதி ஒருவர் குறித்த வயோதிப பெண்ணுடன் நீண்ட நேரமாக அனுதாபமாக உரையாடி வயோதிப பெண் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார்.
உடல் சுகயீனம் என்பதால் தனியாக வீட்டிற்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்த அந்த யுவதி முச்சக்கர வண்டி ஒன்றில் வயோதிப பெண்ணின் வீட்டிற்கு அழைத்து
சென்றதுடன் மயக்க மருந்து கலந்து சோடாவையும் பருக கொடுத்துள்ளார். வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் வயோதிப பெண் மயக்கமடைந்ததும், அவர் அணிந்திருந்த
சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என 7 அரைப் பவுண் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மயக்கம் தெளிந்து குறித்த வயோதிப பெண் எழும்பியதும் நகைகள் திருட்டு போனதை அறிந்து கொண்டு உடனடியாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ்
சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792),
திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, வவுனியா, மதீனாநகரில் வசித்து வந்த யாழ் பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். திருடப்பட்ட நகையில் 4 அரைப்
பவுண் நகை குறித்த யுவதியிடம் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் குறித்த
யுவதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை
கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக்
கொலை செய்த சம்பவமொன்று நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
சின்னமுகத்துவாரம் அக்கரைப்பற்று 9 பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய குணரட்ணம் குணதாஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இரு குடும்பங்களுக்கும் நீண்டகாலமாக குடும்பத் தகராறு காணப்படும்
நிலையில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 8.15 மணிக்கு இரு குடும்பத்திற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அதில் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரர் மீது கோடாரியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த குறித்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய சந்தேகநபரை பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட
கோடாரியுடன் கைது செய்துள்ளனர்.
லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் வீட்டுக்குள் நுழைந்து ரேஞ்சோவர் வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்கள்
லண்டன் லூசியம் பகுதியில் தமிழர் வீட்டுக்குள் நுழைந்து ரேஞ்சோவர் வாகனத்தை திருடி சென்ற கொள்ளையர்கள்
லண்டன் லூசியம் பகுதியில் உள்ள தமிழர் வீடொன்றுக்குள் நுழைந்த திருடர்கள் ,அவர்கள் வீட்டின் முன்பாக உள்ள
தரிப்பிடத்தில் ஆடம்பர ரேஞ்சோவர் வாகனத்தை நிறுத்தி விட்டு அவர்கள் இரவு தூக்கத்திற்கு சென்று விட்டனர்
இரவு கிட்ட தட்ட பண்ணிரெண்டு மணியின் பின்னர் அந்த வாகனத்தை திருடர்கள் அங்கிருந்து திருடி சென்றுவிட்டனர்
குறித்த வீட்டின் முன்பாக றிங் டோர் பெல் கமரா பொருத்த பட்டுள்ளது ,திருட்டு
சம்பவம் நிகழும் பொழுது அந்த கமராவின் இணையத்தை செயல் இழக்க செய்த பின்னர் காரினை திருடி சென்றுள்ளனர்
குறித்த காமராவனது இணையம் செயல் இழந்தால் வேலை செய்யாது ,
அதை பயன் படுத்தி இந்த துணிகர கொள்ளையை நடத்தியுள்ளனர் ,குறித்த காரினை
இழந்தவர் ஒரு புதுக்குடியிருப்பை சேர்ந்த தொழில் அதிபர் ஆகும் ,இன்றைய சந்தை விலையில் 40 ஆயிரம் பவுண்டுகள்
மதிப்புள்ள வண்டியாகும்
எனவே இவ்விதமான ஆடம்பர வாகனங்களை வைத்துள்ள தமிழர்களே எச்சரிக்கையாக இருங்கள்
திருடர்கள் உங்கள் அருகில்
பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்
பெண்ணை வெட்டி தப்பிக்க முயன்றவர் – மின்சாரம் தாக்கி மரணம்
இலங்கை கிரிபத் கொட பகுதியில் பெண் ஒருவரை கத்தியால் வெட்டி விட்டு தப்பி
செல்ல முயன்ற வாலிபர் ஒருவர் வேலி பாய்ந்து தப்பிக்க முற்பட்ட பொழுது மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார்
அங்குள்ள கமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது ,
வெட்டு காயங்களுக்கு உள்ளான பெண் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு
யாழில் தெரு ரவுடிகள் வாள்வெட்டு
நல்லூர் கல்வியங்காடு பகுதியில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக வைத்து இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் நல்லூர் சட்டநாதர் கோவிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றின் முன்பாக இன்று இரவு 6.40 மணிக்கு இடம்பெற்றுள்ளது.
47 வயதுடைய இருவரே தாக்குதலுக்குள்ளாகி படுகாயமடைந்துள்ளனர்.
3 மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேரே இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் முன்பாக இருவர் மோட்டார் சைக்கிள்களில் நின்று கதைத்துக் கொண்டிருந்த போது அங்கு 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டதுடன் மோட்டார் சைக்கிள்களையும் சேதப்படுத்திவிட்டுத் தப்பித்தனர்.
கல்வியங்காடு செங்குந்தா மைதானம் தொடர்பான பிணக்கே இந்தத் தாக்குதலின் பின்னணியாக இருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் கோப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட போதும் சில மணித்தியாலங்களின் பின்பே சம்பவ
இடத்துக்குப் பொலிஸார் வருகை தந்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மக்கள் பார்க்க – சந்தையில் ஒருவர் வெட்டிக் கொலை
மக்கள் பார்க்க – சந்தையில் ஒருவர் வெட்டிக் கொலை
இலங்கை தனமல்வில பகுதியில் உள்ள சந்தையில் பொருட்களை கொள்வனவு செய்திட வருகை
தந்த 44 வயதுடைய நபர் ஒருவர் மிக கொடூரமாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
இந்த கொலைக்குரிய காரணம் தெரியவில்லை ,விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு
லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு
இன்று வியாழக்கிழமை மதியம் மூன்று மணியளவில் லீ கை வீதியில்
பதினெட்டு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி குத்து தாக்குதலை நடத்தினர்
இதில் குறித்த வாலிபன் பலத்த கத்தி குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் ,இதுவரை
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்ய படவில்லை ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,குறித்த சம்பவமானது
தமிழர் கடைகளின் முன்பாக உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது ,இதன் அருகில் புகழ் வாய்ந்த லண்டன் சிவன் ஆலயம் உள்ளது
அதிக தமிழர்கள் இந்த ஆலயங்கள் ,மற்றும் பிரபல தமிழர் உணவகங்கள்,
பல்பொருள் அங்காடிகளுக்கு வந்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடும் மாணவர்கள்
மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடும் மாணவர்கள்
மாணவர் சமுதாயம் எதை நோக்கி பயணிக்கிறது. இதன்விளைவு என்னவாகும்
என்பதை எண்ணிப்பார்க்க வேன்டிய கட்டாயாத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடும் மாணவர்கள்- அதிர்ச்சியில் பெற்றோர்
மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடும் மாணவர்கள்
தகவல் தொழில்நுட்பம் காலத்தின் பரிணாம வளர்ச்சி அதன்விளைவு அனைவரும் கைகளிலும் சரளமாக செல்போன் பயன்பாடு.
அதிலும் கடந்த 2 ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு மாணவர்களிடம் கட்டாயம் செல்போன்களை பெற்றோர்களே கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆன்லைன் வகுப்பு என்ற புதிய கல்வி கற்றலுக்கு மாற்றப்பட்ட குழந்தைகள் கையில் கூட செல்போன்
கொடுக்கப்பட்டதால் பள்ளி பாடத்திட்டத்திற்கு மட்டுமல்லாமல் விளையாடுவதற்கும் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
2 வருட பள்ளி நேரடி வகுப்பு தடைபட்டதால் மாணவர்களின் பழக்க வழக்கமும் மாறிவிட்டது. மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் முதல் எல்.கே.ஜி. குழந்தைகள்
வரை செல்போனுக்கு அடிமையாகி எந்நேரமும் அதில் பயன்படுத்தத்தொடங்கிவிட்டனர்.
பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது. பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாட்டை கொரோனா நோய் தகர்த்தெறிந்து விட்டதன் மூலம் இப்போது பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன்களை கொண்டு செல்கின்றனர்.
பெற்றோருக்கு கீழ்படியாமல், ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் வகுப்பறைகளில் மாணவர்கள் சர்வசாதாரணமாக செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதன் விளைவு மிகமோசமான நிலைக்கு பள்ளி மாணவர்கள் சென்று கொண்டிருப்பதை கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்கள் சமூக வலைதளம் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.
பாட புத்தகங்களை சுமக்க வேண்டிய மாணவர்கள் கையில் ஆயுதங்களும், செல்போன்களும் புழங்குவது அதிர்ச்சியூட்டுகின்றன. கஞ்சா, மது பழக்கங்களுக்கும் அடிமையாகி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.
கடந்த மாதம் அரசுப் பள்ளி மாணவிகள் பேருந்தில் மதுகுடித்து ஆட்டம் போட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி
மாணவர்கள், ஆசிரியர்கள் முன்பே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவது பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்தும்போது மாணவர்கள் ஒரு குழுவாக எழுந்து நின்று குத்தாட்டம் போட்ட சம்பவம் சமீபத்தில் வெளியானது. தலை முடியை ஒழுங்காக
வெட்டி வா என்று ஆசிரியர், மாணவர்களை அறிவுறுத்தலினால் அவரை அடிக்க பாய்வது போன்ற செயல்கள் மாணவர் சமுதாயம் தடம் மாறி செல்கின்றதோ என்ற அச்சத்தை உணர்த்துகிறது.
குருவாக, ஆசானாக மதிக்க வேண்டிய ஆசிரியர்களை இன்றைய மாணவர் சமுதாயம் எதிரியாக பார்க்க காரணம் என்ன? அன்பையும், பண்பையும் விதைத்து நல்வழிப்படுத்தக்கூடிய ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோராக கருதப்படுகிறார்கள்.
ஒரு மாணவருக்கு தாய், தந்தை முதல் பெற்றோரும், 2-வது பெற்றோர் ஆசிரியர் என்று போற்றக்கூடிய நம் நாட்டில் மாணவர்கள் அத்துமீறி செல்வதற்கான காரணம் என்ன என்று கல்வியாளர்கள் ஆராய்கிறார்கள்.
இவை ஒருபுறம் இருக்க வகுப்பறையிலே மாணவர்கள் செல்போன் பார்ப்பதும், மாணவிகள் மடியில் மாணவர்கள் தலை சாய்த்து இருப்பது போன்ற படங்கள் வெளியாகி இருப்பது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மதிய உணவு நேரத்தில் இத்தகைய செயல்களில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள நம் பள்ளியில் நடந்தது என்றால் நம்ப
முடிகிறதா? செல்போன் மதிமயக்கத்தில் இன்றைய மாணவர் சமுதாயம் கிரங்கி கிடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வகுப்பறையில் இருக்கையை மாணவர்கள் சேதப்படுத்தி அதனை செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ள மற்றொரு சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் உடன் படிக்கும் சக மாணவர்களிடம் ‘ராகிங்’ செய்த சம்பவம் பெற்றோர்களை மிரள வைத்துள்ளது.
வகுப்பறையில் 3 மாணவர்கள் தாதா போல உட்கார்ந்து இருக்க 10 பேர் அவர்களுக்கு தேர்வு அட்டையால் காற்று வீச செய்யச்சொல்லி ராக்கிங் செய்துள்ள வீடியோ பரவி வருகிறது. அதில் ஒரு மாணவரை பளார் என்று கன்னத்தில் அறையவும் செய்கிறார் மூத்த மாணவர்.
கல்லூரிகளில் தான் ராகிங் நடைபெறுவது வழக்கம். ஆனால் பள்ளியில் ராகிங் செய்வது புதுமையாக உள்ளது. பள்ளி பருவ மாணவர்கள் ஆசிரியர்களிடமும்,
வகுப்பறையிலும் ஒழுங்கீனமாக நடக்கும் செயல் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியதாக மாறிவிடும் அச்சுறுத்தல் நிலவுகிறது.
மாணவர் சமுதாயம் எதை நோக்கி பயணிக்கிறது. இதன்விளைவு என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேன்டிய கட்டாயாத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. பள்ளி மாணவர்களை வழிநடத்தக்கூடிய கல்வித்துறை மாணவர்களுக்கு தேவையான அடிப்படையான நெறிமுறைகளை கற்றுத்தர வேண்டும்.
பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு எப்படி நிம்மதியாக இருக்க முடியும். மாணவ- மாணவிகள் தடம்மாறி செல்வதை தடுக்க கூடிய நடவடிக்கை
உடனடியாக தேவை என்பதையும் ஆசிரியர்கள் அச்சமின்றி பாடம் நடத்துவதை உறுதிப்படுத்தவும் சரியான வழிகாட்டுதல்
இருந்தால் மட்டுமே வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்.
உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்
உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்
பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய வீரர்கள்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷிய படைகள் சமீபத்தில்
வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷிய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு
தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது.
அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களை சேர்ந்த பெண்கள்,
ரஷிய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
யாழில் போலீஸ் தடுப்பில் இருந்த வாலிபனுக்கு கழுத்தில் வெட்டு
யாழில் போலீஸ் தடுப்பில் இருந்த வாலிபனுக்கு கழுத்தில் வெட்டு
யாழ்ப்பாணம் போலீஸ் பகுதியில் தடுப்பில் வைத்திருந்த வாலிபர் ஒருவர் தான்
மறைத்து வைத்திருந்த பிளேட்டினை எடுத்து கழுத்தில் வெட்டியுள்ளார்
இதனால் அவர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாண போதான வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது
பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை பீதியில் கிராமம்
பெண்ணை கொன்று நகைகள் கொள்ளை பீதியில் கிராமம்
இலங்கை தலவாக்கலை பகுதியில் தனிமையில் வசித்து வந்த 84 வயது மூதாட்டி
கழுத்தை நெரித்து கொன்று அவரது காதணியை திருடர்கள் திருடி சென்றுள்ளனர்
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தனிமையில் உள்ளதை அறிந்த திருடர்கள் அவரது வீட்டுக்கு சென்று இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்
குறித்த கொலையினை புரிந்த திருடர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

















