Tag: திருடிய
நகை திருடிய பெண் கைது
நகைகள் திருடிய பெண் கைது
நகை திருடிய பெண் கைது, யாழ்ப்பாணம் கன்னா திட்டி காளி கோவில் கும்பாபிஷேகத்துக்கு வருகை தந்திருந்த மக்களிடத்தில் நகை திருடிய பெண் கைது .
பல்வேறுபட்ட மக்கள் மத்தியில் பல பவுன் நகைகளை கொள்ளை அடித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ்
யாழ்ப்பாணம் பிராந்திய போலீஸ் குற்ற பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலினை அடுத்து அவர்கள் மேற்கொண்ட நடவடிக்கையில் திருட்டில் ஈடுபட்டிருந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .
பெண்ணை கைது செய்து, யாழ்ப்பாணம் போலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரித்த பொழுதே ,பெண்ணின் உள்ளாடைகளுக்கு இருந்து திருடப்பட்ட தாலிக்கொடி மற்றும் நகைகள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
போலீசார் விசாரணை அடுத்து தற்பொழுது மேலதிக விசாரணைகள்மேற்கொள்ள நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் யாழ்ப்பாணம் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம்
யாழ்ப்பாணத்தில் ஆலயத்திற்கு செல்லும் மக்களின் நகைகளை திருடுவதற்கென்றே ஒரு கூட்டம் திட்டமிட்டு நகர்ந்து வருகின்றது .
அதே போலவே பேருந்துகளிலும் இவ்விதமான திருட்டு சம்பவங்கள் நூதனமான முறையில் இடம்பெற்று வருகிறது .
அதனை அடுத்து தற்பொழுது இந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார் .மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
நகைகளை இழந்தவர்கள் அந்த நகைகளை காவல்துறையில் சென்று பெற்றுக்கொள்ள முடியுமா என்கின்ற தகவலும் வெளியாகி இருக்கின்றது.
- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன

- எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது சுகாதார அமைச்சு

- வேல சூடாவின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

- அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்

- விமான நிலையத்தில் சிக்கிய 133 மில்லியன் சிகரெட்

- முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் உயர்வு

மயக்க மருந்து கொடுத்து திருடிய இளம் பெண் – மக்களே உசார்
மயக்க மருந்து கொடுத்து திருடிய இளம் பெண் – மக்களே உசார்
வவுனியாவில் பெண் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடிய சம்பவம் தொடர்பில் 21 வயது பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் இன்று (27) தெரிவித்துள்ளனர்.
வவுனியா, பண்டாரிக்குளம் நாவலர் வீதியில் வசிக்கும் முதிய பெண் ஒருவர் சுகயீனம் காரணமாக கடந்த புதன் கிழமை மருந்து எடுப்பதற்காக வவுனியா வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். மருந்து எடுத்து விட்டு குறித்த வயோதிப பெண்
வைத்தியசாலையில் சிறிது இளைப்பாறி இருந்த போது அங்கு வந்த யுவதி ஒருவர் குறித்த வயோதிப பெண்ணுடன் நீண்ட நேரமாக அனுதாபமாக உரையாடி வயோதிப பெண் தொடர்பான தகவல்களை பெற்றுள்ளார்.
உடல் சுகயீனம் என்பதால் தனியாக வீட்டிற்கு செல்ல வேண்டாம் எனத் தெரிவித்த அந்த யுவதி முச்சக்கர வண்டி ஒன்றில் வயோதிப பெண்ணின் வீட்டிற்கு அழைத்து
சென்றதுடன் மயக்க மருந்து கலந்து சோடாவையும் பருக கொடுத்துள்ளார். வீட்டிற்கு சென்று சிறிது நேரத்தில் வயோதிப பெண் மயக்கமடைந்ததும், அவர் அணிந்திருந்த
சங்கிலி, மோதிரம் மற்றும் வீட்டில் இருந்த நகைகள் என 7 அரைப் பவுண் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார்.
மயக்கம் தெளிந்து குறித்த வயோதிப பெண் எழும்பியதும் நகைகள் திருட்டு போனதை அறிந்து கொண்டு உடனடியாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைவாக வவுனியா பொலிஸ்
நிலைய பொறுப்பதிகாரி ஜே.ஏ.எஸ்.ஜெயக்கொடி அவர்களின் வழிகாட்டலில், வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் கியான் தலைமையில் பொலிஸ்
சார்ஜன்டுகளான திசாநாயக்கா (37348), விக்கிரமசூரிய (36099), டிலீபன் (61461), உபாலி (60945) பொலிஸ் கான்ஸ்டபிள்களான சங்கயரொகான் (31043), தயாளன் (91792),
திசாநாயக்கா (18219) ஆகியோர் அடங்கிய பொலிஸ் குழுவினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது, வவுனியா, மதீனாநகரில் வசித்து வந்த யாழ் பண்டதரிப்பு பகுதியைச் சேர்ந்த 21 வயது பெண் ஒருவரை கைது செய்துள்ளனர். திருடப்பட்ட நகையில் 4 அரைப்
பவுண் நகை குறித்த யுவதியிடம் இருந்து பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளின் பின் குறித்த
யுவதியை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
திருடிய பொருட்களை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்
திருடிய பொருட்களை போலீசாரிடம் ஒப்படைத்த மக்கள்
நீர்கொழும்பு பகுதியில் உள்ள பல கொட்டல்களில் பொருட்களை மக்கள் திருடி சென்றுள்ளனர்
இவ்வாறு திருடப்பட்ட பொருட்களை மீள அவர்கள் ஒப்படைத்துள்ளனர்
இவ்விதமான விசித்திர சம்பவங்களும் இலங்கையில் இடம்பெறுகின்றமை சிரிக்க வைக்கிறது







