நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு

நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு

நீரில் மூழ்கி இருவர் பலி சடலம் மீட்பு ,நல்லச்சிய நீர்த்தேக்கத்தில் மூழ்கிய இருவரின் உடல்கள் மீட்கப்பட்டன

தம்புட்டேகமவில் உள்ள நல்லச்சிய

தம்புட்டேகமவில் உள்ள நல்லச்சிய நீர்த்தேக்கத்தின் இடது கரையில் இருந்து தண்ணீர் கொண்டு செல்லும் கால்வாயின் ஓரத்தில் உள்ள ஒரு சிறு

பாலத்திற்குள் இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இறந்தவர்கள் பண்டிவவ மற்றும் திம்பிரிகஸ்வேவவைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்களுக்கு முறையே 19 மற்றும் 30 வயது என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தபோது

கால்வாயில் குளித்துக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக உடல்கள் தம்புட்டேகம மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் குறித்து தம்புட்டேகம போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், நேற்று பிற்பகல் (18) பதிவான மற்றொரு சம்பவத்தில், அனுராதபுரத்தில் உள்ள திஸ்ஸவேவ ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது

நீரில் மூழ்கிய நபர், பொலிஸ் உயிர்காப்புப் பிரிவு அதிகாரிகளால் மீட்கப்பட்டார்.

பண்டாரவளையைச் சேர்ந்த 27 வயதான பாதிக்கப்பட்ட நபருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக

அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என காவல்துறை தெரிவித்தது.

யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கிணறு ஒன்றிலிருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண செய்திகள் தெரிவிக்கின்றன .

இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக உடனடியாக எதுவும் தெரியவில்லை .

சடலம் தற்பொழுது மருத்துவமனையில்

மீட்கப்பட்ட சடலம் தற்பொழுது மருத்துவமனையில் வைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் எவ்வாறு அங்கு இறந்த நிலையில் மீட்க பட்டது என்பது தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இது படுகொலையா அல்லது இயற்கை மரணமா என்பது தொடர்பாக உடனடியாக தெரிய வரவில்லை .

தொடர்ந்து விசாரணைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் விசாரணையின் முடிவில் மேலதிகமான விடயங்கள் தெரியவரும் எதிர்பார்க்கப்படுகிறது .

இலங்கையில் இறுதி யுத்தம்

இலங்கையில் இறுதி யுத்தம் முடிவுற்றதன் பின்னர் தற்பொழுது பரவலாக மனித சடலங்கள் தமிழ் பகுதியில் மீட்கப்பட்டுக் கொண்டிருக்கிற விடயம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

நீண்ட நெடுங்காலமாக இதே பகுதியில் வசித்து வந்த இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள்உலவுகிறது .

போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் படுகொலை செய்யப்பட்டிருந்தால் குற்றவாளி விரைவில் கண்டுபிடிக்கப்படுவார் என சொல்கிறது இலங்கை காவல்துறை.

மலசலகூட குழியில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மலசலகூட குழியில் சடலம் மீட்பு

மலசலகூட குழியில் சடலம் மீட்பு

மலசலகூட குழியில் சடலம் மீட்பு ,பொகவந்தலாவ கிவ் கீழ்பிரிவு தோட்டத்தில் மலசலகூட குழியில் இருந்து எட்டு வயது சிருவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று (3) மாலை 05.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில்

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, சிறுவனின் தந்தை வீடமைப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை சிறுவன் கை கழுவுவதற்காக

வீட்டின் பின்புறத்திற்கு சென்ற போது, அங்கு நீர் நிரம்பி காணப்பட்ட குழியில் தவறிவிழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மகனை காணவில்லை

தனது மகனை காணவில்லையென சிறுவனின் தந்தை இரண்டு முறைக்கு மேல் கூக்குரல் ஏழுப்பியும் மகன் வாரததை தொடர்ந்து, தந்தை வீட்டின் பின்புறமாக சென்று பார்த்த போது சிறுவனின் பாதணிகள் இரண்டும் மிந்து

கொண்டு இருந்ததாகவும் அதன் பிறகு சிறுவனை மீட்டெடுத்து டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் சிறுவன் மரணித்திருந்ததாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதேவேளை, கிவ் தமிழ் வித்தியாலயத்தில் தரம் மூன்றில் கல்வி கற்று வந்த லியோ பெற்ரீக் எலன் சசன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக

மீட்கப்பட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா

கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரதே அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இந்த தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு

சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு

சிலாபத்தில் மீனவரின் சடலம் மீட்பு ,புத்தளம் – மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா கடல் பகுதியில் நேற்று (22) சடலமொன்று கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு கரையொதுங்கிய சடலம், சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்று காணாமல் போன இரண்டு மீனவர்களில்

ஒருவருடைய என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மதுரங்குளி பொலிஸார் குறிப்பிட்டனர்.

37 வயதான நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சிலாபம் பகுதியில் இருந்து கடந்த சனிக்கிழமை (19) கடலுக்குச் சென்ற மூன்று மீன்பிடி இயந்திர படகுகள் பலத்த காற்று மற்றும் புயலில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது இரண்டு மீன்பிடி இயந்திர படகுகளில் பயணித்த மீனவர்கள் பாதுகாப்பாக நீந்தி கரை சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில், மற்றுமொரு படகில் பயணித்த 37 மற்றும் 40 வயதுடைய இரண்டு மீனவர்கள் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு காணாமல் போன மீன்பிடி படகு மற்றும் அதில் இருந்த இரண்டு மீனவர்களையும் தேடி சனிக்கிழமை (19) இரவு இலங்கை விமானப் படைக்குச்

சொந்தமான ஹெலிகொப்டர் மூலம் கடற்பிரதேசங்களில் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், காணாமல் போனதாக கூறப்படும் மீன்பிடி படகு மாத்திரம் ஞாயிற்றுக்கிழமை (20) காலை சிலாபம் பகுதியில்

கரையொதுங்கியுள்ளதாகவும், எனினும் இரண்டு மீனவர்கள் தொடர்பில் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையிலேயே, காணாமல் போன இரண்டு மீனவர்களில் ஒருவருடைய சடலம் மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குற்பட்ட தொடுவா கடல் பகுதியில் கரையொதுங்கிய நிலையில் இன்று (22) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட குறித்த சடலம் திடீர் மரண விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக சடலம் புத்தளம் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, காணாமல் போன 40 வயதான மற்றைய மீனவரை தேடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

பெண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு

பெண் ஒருவரின் சடலம் மீட்பு ,மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இறந்த பெண் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் அவர் கருப்பு, மஞ்சள் நிற உடை மற்றும் கருப்பு குட்டைப் பாவாடை அணிந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்தவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கடற்கரையில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடற்கரையில் சடலம் மீட்பு

கடற்கரையில் சடலம் மீட்பு

கடற்கரையில் சடலம் மீட்பு , களுத்துறை பஸ் கடவ பாதியில் உள்ள கொட்டல் ஒன்றின் பின்பகுதியில் உள்ள கடற்கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .

இவ்வாறு சடலமாக அமைக்கப்பட்டவர் 70 வயதுடைய முதியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .

இவர் இயற்கையாக மரணம் எய்தினாரா அல்லது திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அங்கு இவரது உடல் வீசப்பட்டதா என்பது தொடர்பில் தற்பொழுது போலீசார் விசாரணைகளை ஆரம்பித்து இருக்கின்றனர் .

மரண பரிசோதனை

சடலம் மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.

மரண பரிசோதனை வெளியிடப்படுகின்ற தகவலின் அடிப்படையிலேயே இவருக்கு நடந்தது என்ன என்ற விடயம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

இலங்கையில் நாள்தோறும் நீரேரிகள் காடுகள் ,பாழடைந்த வீடுக; , மலசல கூடங்கள் என்பனவற்றில் இருந்து மனிதர்கள் சடலங்கள் மீட்கப்பட்ட வண்ணமே உள்ளது .

அதிகரித்து செல்லும் படுகொலைகள்

இலங்கையில் அதிகரித்து செல்லும் இந்த படுகொலை சம்பவங்கள் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது .

இந்து தொடராக இடம்பெற்று வருகின்ற இந்த படுகொலையின் பின்புறத்தில் உள்ளது யார்.

ஏன் இந்த படுகொலை தொடர்கின்றன என்பதற்கான கேள்விகளுக்கு இலங்கை குற்ற புலனாய்வு துறையிடம் இருந்து இதுவரை எதுவும் பதிலும் வழங்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது .

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

வீடுஒன்றில் பெண்ணின் சடலம் மீட்பு ,ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட களுவலகொட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

50 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் எனவும், வீட்டின் படுக்கையில் இருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனிமையில் வசித்த பெண் கொலை

விசாரணையில் குறித்த பெண் வீட்டில் தனியாக இருப்பதும், கணவர் வேலை நிமித்தமாக வௌியே சென்றிருப்பதும் தெரியவந்துள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக எல்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஊரகஸ்மன்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக தனிமையில் வசித்து வரும் பெண்கள் பலர் சடலமாக மீட்க பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

தொடரும் இவ்வாறான மர்ம கொலைகளினால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டம் ஏற்பட்டுள்ளது .

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

விடுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

விடுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

மஹரகம ரயில் நிலைய வீதியிலுள்ள விடுதி ஒன்றில் விஷம் அருந்தி உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரின் சடலம் இன்று (03) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நபர் நேற்று (02) மதியம் 1.30 மணியளவில் இந்த விடுதிக்கு வந்து, மாலை 6 மணியளவில் அந்த இடத்தை விட்டு வெளியேறுவதாக விடுதி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார்.

ஆனால், அவர் வெளியே வராததால் சந்தேகம் ஏற்பட்டு அறையை ஆய்வு செய்தபோது, ​​சம்பந்தப்பட்ட இளைஞன் படுக்கையில் கிடப்பதைப் பார்த்து ஊழியர் ஒருவர் இது குறித்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

விடுதியில் இருந்து இளைஞனின் சடலம் மீட்பு

அதன்படி, மஹரகம பொலிஸ் மற்றும் நுகேகொட குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் வந்து சோதனையிட்ட போது, ​​ஹோமாகம பகுதியில் விஷம் அருந்தி உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்குக்கு இந்த நபர் வந்திருந்தமை தெரியவந்துள்ளது.

உயிரிழந்த இளைஞன் மேற்கூறிய நபரை பின்பற்றுபவர் என்பதும் அவரது பிரசங்கங்களில் கலந்து கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.

இறந்த இடத்தில் விஷம் அடங்கிய பை, தண்ணீர் போத்தல் மற்றும் இரண்டு அலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மஹரகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

புத்தளம் கடலில் ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

புத்தளம் கடலில் ஆணின் சடலம் மீட்பு

புத்தளம் கடலில் ஆணின் சடலம் மீட்பு

புத்தளம் – முள்ளிபுரம் பூவரசன் குடா சிறுகடல் பகுதியில் மிதந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சிறுகடல் பகுதிக்குத் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் சிலர், கடலுக்குள் சடலம் ஒன்று கிடப்பதை அவதானித்து அது பற்றி அந்தப் பகுதியிலுள்ள கிராம சேவகருக்கு தெரியப்படுத்தினர்.

இதையடுத்து சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

வீடியோ

நீர்த்தேக்கத்தில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

உடல் பாகங்கள் சிதறிய நிலையில் சடலம் மீட்பு

உடல் பாகங்கள் சிதறிய நிலையில் சடலம் மீட்பு

இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹரஸ்பெத்த பகுதியில் சுமார் 1000 அடி உயரம் கொண்ட தர்பனா எல மலை அடிவார பகுதியில் உடல் பாகங்கள் உடைந்து சிதறி உயிரிழந்த நிலையில் இளைஞர் ஒருவரின் சடலத்தை இராகலை பொலிஸார் நேற்று மாலை மீட்டுள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டவர் இராகலை ஹரஸ்பெத்த பகுதியில் வசிக்கும் மலிந்த தில்ஷான் (வயது 24) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.

சடலமாக மீட்கப்பட்ட மலிங்க தில்ஷான் தனது வீட்டில் தாய், தந்தையரை தாக்கி சண்டையிட்டு
நான் எங்காவது போய் எனது உயிரை மாய்த்துகொள்வேன் எனது உடம்புக்கூட உங்களுக்கு கிடைக்காது என கூறிவிட்டு பின் 1ஆம் திகதி மாலை வீட்டை விட்டு வெளியேரியுள்ளார்.

இதையடுத்து பெற்றோர்களும் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு விரைந்து தனது மகன் மது அருந்திவிட்டு தங்களை தாக்கிவிட்டு கோபத்தில் வீட்டைவிட்டு சென்றதாக முறைப்பாடு செய்துள்ளனர்.

அதேநேரத்தில் கோபத்தில் சென்ற மகன் வீட்டுக்கு வந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளதாகவும் விசாரணையில் தெரிவித்தும் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று மாலை இளைஞரின் வீட்டாருக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.அந்த அழைப்பில் தன்னை அடையாளம் படுத்திகொள்ளாத நபர் தர்பனா எல மலை அடிவாரத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக தெரிவித்துள்ளார்.

உடல் பாகங்கள் சிதறிய நிலையில் சடலம் மீட்பு

இதையடுத்து இத் தகவலை பெற்றோர் இராகலை பொலிஸ் நிலையத்திற்கு தெரிவித்துள்ளனர். பின் தர்பனா எல மலை அடிவாரத்திற்கு விரைந்த இராகலை பொலிஸார் அங்கு உடல் பாகங்கள் உடைந்து உயிரிழந்த நிலையில் இளைஞரின் சடலத்தை மீட்டுள்ளனர்.

அதேநேரத்தில் உயிரிழந்திருப்பதாக தனது மகன் என பெற்றோர்களும் அடையாளம் காட்டியுள்ளனர்.

பின் சம்பவம் தொடர்பில் வலப்பனை நீதவான் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ள பொலிஸார் இந்த சம்பவத்தில் உயிரிழந்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற சந்தேகத்தையும் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் தர்பனா எல மலை சுமார் ஆயிரம் அடி உயரம் கொண்டுள்ளது என தெரிவித்த பொலிஸார் இம் மலை உச்சியிலிருந்து இவ் இளைஞன் வீழ்ந்துள்ளமையினால் உடல் பாகங்கள் உடைந்து மரணம் சம்பவித்திருக்கிறது எனவும் தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்தில் உயிரிழந்த இளைஞரின் உடல் மரண விசாரணையின் பின் பிரேத பரிசோதணைக்காக நுவரெலிய மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் மேலதிக விசாரணைகளை இராகலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

வீடியோ

இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு

இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு

லெபனானில் கட்டட இடிபாடுகளில் உயிரிழந்த 65 வயதுடைய இலங்கைப் பெண்ணின் சடலம் சனிக்கிழமை மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த ஐ. பிரேமலதா என அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) தெரிவித்துள்ளது.

இலங்கைப் பெண்ணின் சடலம் மீட்பு

செவ்வாய்க்கிழமை, ஒக்டோபர் 17 ஆம் திகதி, பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம், லெபனானில் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில்

இடிபாடுகளுக்குள் சிக்கிய பல நபர்களில் ஒரு இலங்கைப் பெண்ணும் இருப்பதாக உறுதிப்படுத்தியது.

லெபனானில் உள்ள மன்சூரியில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் ஒக்டோபர் 16 அன்று இடிந்து விழுந்தது, அதன் மூன்று தளங்கள் மட்டுமே நிற்கின்றன.

கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு

கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு

உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளிவாசல்பாடு பிரதேசத்திலுள்ள கடற்கரையோரத்தில் உருக்குலைந்த நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்று இன்று (03) காலை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பள்ளிவாசல்பாடு பிரதேச மீனவர்கள் இன்று காலை கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சென்றபோது சடலம் ஒன்று கரையொதுங்கி கிடப்பதை அவதானித்துள்ளனர்.

பின்னர் சடலம் தொடர்பில் மீனவர்கள் உடனடியாக உடப்பு பொலிஸாருக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

கடற்கரையோரத்தில் உருக்குலைந்த பெண்ணின் சடலம் மீட்பு

சம்பவ இடத்திற்கு வருகை தந்த உடப்பு பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டனர்.

குறித்த சடலத்தின் முகம், கை, கால் மற்றும் தலைப் பகுதிகள் முழுமையாக உருக்குலைந்த நிலையில் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த பெண் சடலம் யாருடையது என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் ஏனைய பொலிஸ் நிலையங்களுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

மேலும், நீதிவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நீதிவான் விசாரனையை மேற்கொண்டதன் பின்னர், சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் தொடர்பான மேலதிக விசாரனைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு

கொழும்பு துறைமுக நகரின் கடற்கரையில் அடையாளம் தெரியாத ஆணி ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கொழும்பு துறைமுக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (23) பிற்பகல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இறந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு துறைமுக நகரில் சடலம் மீட்பு

இந்த நபர் 40 முதல் 45 வயதுடையவர் எனவும் 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இறுதியாக நீல நிற டெனிம் காற்சட்டையை அணிந்திருந்தாக குறிப்பிடப்படுகிறது.

தற்போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பு துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீட்டுக்குள் இருந்து சந்தேகத்துக்கு இடமான சடலம் மீட்பு

வீட்டுக்குள் இருந்து சந்தேகத்துக்கு இடமான சடலம் மீட்பு

வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கங்பங்குவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இருந்து வெட்டுக்காயங்களுடன் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.

வெல்லவாய பொலிஸ் நிலையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் 33 வயதுடைய கங்பங்குவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டுக்குள் இருந்து சந்தேகத்துக்கு இடமான சடலம் மீட்பு

உயிரிழந்தவர் தனது தாய் மற்றும் மூத்த சகோதர சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், உயிரிழந்தவர் குடிப்பழக்கம் உள்ளவர் என்பதும் அயலவர்களுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தவர் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாதன் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறிய குளம் ஒன்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மீன் பிடிக்க சென்ற 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே தொழிலில் ஈடுபட்டிருந்த பொழுது உயிரிழந்துள்ளார்.

குளத்திலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

திடீரென ஏற்பட்ட வலிப்பு நோய் காரணமாக நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் காணாமல் போன முதியவர் ஒருவர் நேற்று சனிக்கிழமை (15) மட்டு நகர் வாவிக்கரை வீதியிலுள்ள வாவியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சேத்துக்குடாவைச் சேர்ந்த 74 வயதுடைய சங்கரப்பிள்ளை கதிர்காமநாதன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

குறித்த முதியவர் கடந்த 5 ம் திகதி வீட்டை விட்டு காணாமல் போயுள்ள நிலையில் அவரை தேடிய போது அவர் கிடைக்காததால் உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

இந்த நிலையில் வாவிக்கரை வீதியிலுள்ள வாவியில் சடலம் ஒன்று உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியதை கண்ட பொதுமக்கள் பொலிசாருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர்.

சடலத்தை உறவினர்கள் அடையாளம் காட்டியதுடன் அவருக்கு நீண்ட காலமாக காணப்பட்ட நோய் சுகமடையாது இருந்துள்ளதாகவும் அதன் காரணமாக வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இவ்வாறு சடலமாக மீட்டகப்பட்டவரை பிரேத பரிசோதனைக்காக மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஓப்படைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற் கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

மொனராகலை, படல்கும்புர வீதியில் 11 ஆவது மைல்கல் அருகில் தற்காலிகமாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பழக்கடை ஒன்றிற்கு அருகில் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக்காயங்கள் காணப்பட்டதுடன், படல்கும்புர பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (14) பிற்பகல் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

புஸ்ஸல்லாவ, படல்கும்புர பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெட்டு காயங்களுடன் சடலம் மீட்பு

விசாரணையில் இறந்தவர் பழக்கடை உரிமையாளர் என்பது தெரியவந்தது.

கடந்த 12 ஆம் திகதிக்கும் நேற்றைய (04) தினத்திற்கும் இடையில் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சந்தேகநபரோ அல்லது கொலைக்கான காரணமோ இதுவரை அறியப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கும்புர பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்பு

மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் சடலம் மீட்பு

சீதுவ, ரத்தொலுகம, சாம மாவத்தை பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றில் இருந்து 04 வயதுடைய சிறுமியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

அதே இடத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் 45 வயதான ஆண் ஒருவரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (26) பிற்பகல் குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட நபர், உயிரிழந்த சிறுமியின் தந்தையின் சகோதரன் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சிறுமி இறந்த விதம் தொடர்பில் இதுவரை தகவல் ஏதும் வௌியாகவில்லை.

No posts found.
பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் பருத்தித்துறை 3 ஆம் குறுக்கு தெருவில் உள்ள வீடொன்றுக்கு அருகில் இருந்து இன்றைய தினம் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை இரண்டாம் குறுக்கு தெருவை சேர்ந்த தியாகராசா சந்திரதாஸ் (வயது 33) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

களுவாஞ்சிகுடியில் 17 வயது மாணவனின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

களுவாஞ்சிகுடியில் 17 வயது மாணவனின் சடலம் மீட்பு

களுவாஞ்சிகுடியில் 17 வயது மாணவனின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறு பகுதியில் கடலில் மூழ்கி காணாமல் போன மாணவனின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இம்முறை சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர் ஒருவர் நேற்று மாலை பெரியகல்லாறு கடலில் குளிக்கச்சென்ற நிலையில் காணாமல் போயிருந்தார்.

பெரியகல்லாறு,பொற்கொல்லர் வீதியை சேர்ந்த பாலச்சந்திரன் ஜெசான் என்னும் 17 வயதுடைய மாணவரே இவ்வாறு காணாமல் போயிருந்தார்.

மூன்று பேர் கடலுக்குள் குளிக்கச்சென்ற நிலையில் குறித்த மாணவன் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்டிருந்தார்.

இந்நிலையில் காணாமல் போன மாணவனின் சடலம் இன்று காலை கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்டுள்ளது