Tag: தமிழர்
பிரிட்டனில் தமிழர் செய்த செயல்
பிரிட்டனில் தமிழர் செய்த செயல்
பிரிட்டனில் தமிழர் செய்த செயல் ,இங்கிலாந்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர் விடுதியில் ஊழியர்களிடம் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதாக இலங்கையர் ஒருவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளது
இங்கிலாந்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்
இங்கிலாந்தில் உள்ள புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான சவுத்தாம்ப்டன் ஹோட்டலில் இரண்டு ஊழியர்களைத் தாக்கிய
பின்னர் இலங்கையர் ஒருவர் தன்னை வெளிப்படுத்திக் கொண்டதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 15, 2025 அன்று சவுத்தாம்ப்டனில் உள்ள ஹைஃபீல்ட் ஹவுஸ் ஹோட்டலில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு,
இலங்கையைச் சேர்ந்த சுகிர்தன் தங்க்ராஷா, போர்ட்ஸ்மவுத் கிரவுன் நீதிமன்றத்தில் ஒரு குற்றச்சாட்டுக்காக விசாரணையில் உள்ளார்.
நீதிமன்றத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளரின் உதவியைப் பெற்ற 38 வயதான அவர், இரண்டு ஊழியர்கள் மீதான தாக்குதல் குற்றச்சாட்டுகளுக்கு முன்னர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக ஜூரியிடம் கூறப்பட்டது.
தொலைபேசி வேலை செய்யாததால்
வழக்கு தொடர்ந்த ஜாக் ஃபர்னஸ், தங்க்ராஷா ஹோட்டல் வரவேற்பறைக்குச் சென்றார், அங்கு அவரது தொலைபேசி வேலை செய்யாததால் “கோபமடைந்தார்” என்று கூறினார்.
அவர் தனது கால்சட்டையை கழற்றுவதற்கு முன்பு வாய்மொழியாகத் திட்டத் தொடங்கினார்.
அவர் நீதிமன்றத்தில் கூறினார்: “அந்த நேரத்தில் பிரதிவாதி புகலிடம் தேடுபவர்களுக்கான தங்குமிடத்தில் தங்கியிருந்தார்.
அவர் தங்குமிடத்தின் வரவேற்பு பகுதிக்கு வந்தார், அவரது தொலைபேசி வேலை செய்யவில்லை என்று கோபமடைந்தார்.
“அவர் ஊழியர்களை வார்த்தைகளால் திட்டினார், தனக்காக தொலைபேசியை சரிசெய்யுமாறு கோரினார்,
அவர் தொலைபேசியை வரவேற்பு மேசையில் எறிந்தார். ‘நான் இலங்கையைச் சேர்ந்தவன், நீங்கள் சிறிய மனிதர்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், நீங்கள் என்னை மதிக்க வேண்டும்’ என்று அவர் கூறினார்.
“ஊழியர்கள் பிரதிவாதியை அமைதிப்படுத்த முயன்றனர். பிரதிவாதி ஒரு செடி தொட்டியை நெருங்கினார்,
அவர் பானையிலிருந்து செடியை வெளியே இழுக்க சிறிது முயற்சி செய்தார், பின்னர் அவர் தனது கால்சட்டையை கீழே இழுத்தார்.
“முதல் முறையாக அவர் தனது உள்ளாடையை விட்டுவிட்டு, தனது உடலை வெளிப்படுத்த தனது மேல் பகுதியை உயர்த்தினார்,
அவர் இப்படி நடக்கத் தொடங்கினார். ஊழியர்கள் அவரை நிறுத்தச் சொன்னார்கள், இறுதியில் அவர் தனது கால்சட்டையை மேலே இழுத்தார்.
“சிறிது நேரத்திற்குப் பிறகு பிரதிவாதி தனது உள்ளாடையுடன் தனது கால்சட்டையை மீண்டும் கீழே இழுக்கிறார்,
இதனால் அவரைச் சுற்றியுள்ள மக்களுக்கு அவரது பிறப்புறுப்புகள் வெளிப்படுகின்றன. அவர் பலருக்கு முன்னால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.”
பிரதிவாதி தன்னைத் தாக்குவார் என்று ஊழியர்களில் ஒருவர் “பயப்படுவதாக” தெரிவித்ததாகவும், தங்க்ராஷா தன்னையும் மற்றொரு ஊழியரையும் தாக்கியதாக ஒப்புக்கொண்டதாகவும் அரசு வழக்கறிஞர் கூறினார்.
சிசிடிவி இந்த சம்பவத்தைக் காட்டியதாகவும், பிரதிவாதி தன்னை வெளிப்படுத்துவதை மறுக்கவில்லை, ஆனால் பயம் அல்லது துயரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தை மறுத்ததாகவும் திரு. ஃபர்னஸ் கூறினார்.
விசாரணை தொடர்கிறது.
வெளிநாட்டு தமிழர் வீடுகள் பணத்தை பறிக்க தயராகும் அனுரா அரசு
வெளிநாட்டு தமிழர் வீடுகள் பணத்தை பறிக்க தயராகும் அனுராஅரசு
வெளிநாட்டு தமிழர் வீடுகள் பணத்தை பறிக்க தயராகும் அனுரா அரசு ,
வெளிநாட்டு தமிழர் வீடுகள்
வெளிநாட்டு தமிழர் வீடுகள் ,பணத்தை பறிக்க தயராகும் அனுரா அரசு செயல் பாடுகள் மக்கள் மத்தியில் பதட்டத்தை அதிகரித்துள்ளது .
இலங்கையிலே ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து ,இலங்கையில் தமிழர்கள் பகுதிகள் கைவிட பட்ட
தமிழர் வீடுகள் ,அல்லது ஆட்களற்ற வீடுகள் ,காணிகள் என்பனவற்றை கையக படுத்த அனுரா அரசு தயராகி வருகிறது .
அத்துடன் இவர்கள் பெயர்களில் உள்ள பணத்தையும் அரசு உடமையாக்கும் நடவடிக்கையில் அனுரா அரசு ஈடுபடலாம் என்கின்ற கசிவுகள் வெளியாகியுள்ளன .
வெளிநாட்டு தமிழர் பொருளாதார பொருண்மிய கட்டமைப்பே
வெளிநாட்டு தமிழர் பொருளாதார பொருண்மிய கட்டமைப்பே சிதைக்கும் நோக்கில் ஆளும் ஜேவிபி பயஙகரவாத இனவெறி அரசு ஈடுபட்டுள்ளது .
இது தமிழர்களுக்கு மிக பெரும் நெருக்கடி தரும் விடயமாக மாறலாம் என அஞ்ச படுகிறது .
மிரட்டி ,தமிழர் சொத்துக்களை அபகரிக்கும் நடவடிக்கையில் ஒன்றாக இருக்கலாம் என்கின்ற விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
தற்போது இரண்டு மாதங்கள் அவசரகால பிரகடனம் பிரகடன படுத்த பட்டுள்ள நிலையில் ,எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்கின்ற நிலை காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
தமிழர்களே எச்சரிக்கை .
வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு
வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு
வெளிநாட்டு தமிழர் காணிகளை பறிக்கும் அனுரா அரசு நடவடிக்கை வெளிநாடு தமிழர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள்
வெளி நாட்டில் வசிக்கும் தமிழர்கள் காணிகள் வடக்கு பகுதியில் அதிகம் காணப்படுகிறது .
காடுகள் படர்ந்ந்துள்ள காணிகள் ,மற்றும் பராமரிப்பு அற்று கிடைக்கும் காணிகள் யாவும் அரசு உடமையாக்க படுகிறது .
இந்த காணிகள் அரசு உடமையாக்க பட்டு அரசின் தேவைகளிற்கு வழங்க பட உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

இதற்கு பிரதேச சபைகள் முன் அறிவித்தல் இன்றி இந்த காணிகள் பறிக்க படும் என என நோட்டீஸ் ஓட்ட பட்டுள்ளது .
இந்த பிரதேசசபைக்குள் ஆளும் அனுரா அரசு மற்றும் இலங்கை தமிழரசு கட்சி ,சயிக்கிள் கட்சி உறுப்பினர்களும் உள்ளனர் .
இவர்களின் ஆதரவுடன் தமிழர்கள் காணிகள் பறிக்க படுகின்றன .
புலம்பெயர்ந்த வெளிநாட்டு தமிழர்
எனவே புலம்பெயர்ந்த வெளிநாட்டு தமிழர்களை இந்த தமிழ் காட்சிகள் கபட நாடகத்தை உற்று நோக்குங்கள் .
அனுரா அரசுடன் இணைந்து தமிழர்களை ஏமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள செயலையும் கவனிக்க .
இவர்கள் வெளிநாட்டுட வருகை தரும் பொழுது விரட்டி அடியுங்கள் ,மேலும் இந்த பிரேச சபையில் உள்ள மக்களுக்கு வெளிநாட்டு தமிழர்கள் உதவிகள் எதுவும் செய்யாதீர்கள் .
இவர்களுக்கு எதிரான நடவடிக்கை ஒன்றை வெளிநாட்டது தமிழர்கள் முன்னெடுத்தால் மட்டுமே இவர்களின் அடக்குமுறை காணி பறிப்புக்களை தடுக்கலாம் ,
அனுரா அரசின் இனவெறி நடவடிக்கைக்கு எதிராக தமிழர்களே கிளர்ந்து எழுங்கள் .
லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு
லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு
லண்டனில் தமிழர் கடைகளுக்கு ஆப்படிக்கும் அனுரா அரசு செயல்பாடுகள் உள்ளக ரீதியில் தீவிரம் பெற ஆரம்பித்துள்ளன .
இலங்கை பொருளாதாரத்தில்
இலங்கை பொருளாதாரத்தில் நலிவுற்று காணப்படும் நிலையில் ,லண்டன் வாழ் தமிழர் வர்த்தகர்களை
இலங்கையில் முதலீடு செய்யுமாறு அனுரா அரசு கோரிக்கை விடுத்தது .
அனால் அதனை பல தமிழர்கள் மேற்கொள்ளவில்லை .
ஆத்திரமுற்ற அனுரா அரசு
இதனால் ஆத்திரமுற்ற அனுரா அரசு தற்போது பிரிட்டன் வாழ் தமிழ் வர்த்தகர்களை இலக்கு வைத்து ,தாக்குதல்களை முடுக்கி விட்டுள்ளதாக பேச படுகிறது .
தமிழர் வர்த்தகர்களை காட்டி கொடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தமிழர்கள் மத்தியில் பேச படுகிறது .
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

அத்துப்பட்டி போல் கடலில் மூழ்கும் தமிழர் கிராமம்
அத்துப்பட்டி போல் கடலில் மூழ்கும் தமிழர் கிராமம்
அத்துப்பட்டி போல் கடலில் மூழ்கும் தமிழர் கிராமம் |முல்லை கடற்கரை |கொக்கு தொடுவ உள்வாங்கியுள்ளது .
கடல் கரையில்
முல்லைதீவினு கடற்கரை கொக்கு தொடுவாய் கடல் கிலோ மீட்டர் கடற்கரை உள்வாங்கியுள்ளது.
இதனால் முன்னர் வீடு அமைக்கும் பொழுது இக் கடல் கரையில் இருந்து மூன்று கிலோ மீட்டர் உள்ளே அமைக்க பட்ட வீடுகள் இப்பொழுது அழிந்து காணப்படுகிறது .
கடற்கரை பகுதியில் கற்களை போட்டு நீர் அலையை தடுக்க மறந்த காரணத்தால் இன்று கொக்கு தொடுவாய் என படும்
பாரம்பரிய தமிழர் பகுதி அத்துப்பட்டி
பாரம்பரிய தமிழர் பகுதி அத்துப்பட்டி போல் கடலில் மூழ்கும் அபாயம் காணப்படுகிறது .
ஆளும் அனுரா அரசு ஊழலில் சிக்கி தவிக்கிறதே தவிர ,இலங்கை மக்களை காப்பாற்றும் எண்ணம் அவர்கள் மத்தியில் இல்லை என்பதை இந்த விடயம் கோடிட்டு கடடுகிறது .
முல்லை கடற்கரை முல்லை கடற்கரை
கடலில் மூழ்குது கடலில் மூழ்குது
கொக்கு தொடுவ அழிந்து சாகுது
தமிழர் நிலம் பறிக்க வந்த சிங்க பகுதி
தாழ்ந்து போகுது உயிர் ஊச லாடுது
கடல் அரிப்பு கூட
கடல் கரை சாகுது
கட்டி வைத்த வீடு
கட்டு டைத்து விழுகுது
அழ கடல் ஓடி
தேடி வந்த சொத்து
கடல் அரிப்பில் தேயுது
கண்ணீர் உடல் குளிக்குது
இந்த நிலை மாற
ஏதும் செய்யல
எங்க வாழ்வை காக்க
யாரும் உதவல
வலி தர வந்தார்
வலியில் துடிக்குது
ஆண்டு சில கழிய
அத்துப்பட்டி ஆகுமோ
அழகான கொக்கு தொடுவ
வரை படத்தில் மறையுமோ
கொக்கு தொடுவ அழியுது
கடல் கரை கடல் அரிப்பில் தேயுது
இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு
இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு
இலங்கைக்கு உதவ தமிழர் மறுப்பு தெரிவித்து வருகின்றனர் .வெளிநாட்டடில் வாழும் தமிழர்கள் தப்பி ஓடியவர்கள் என தமிழ் காட்சிகள் தெரிவித்ததை அடுத்து தமிழர்கள் இந்த விடயத்தை அறிவித்துள்ளனர் .
இலங்கை அரச பேரினவாதம்
மேலும் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களை இலங்கை அரச பேரினவாதம் பயங்கரவாதி என அறிவித்து இருந்தது .
தமிழர்கள் பயங்கரவாதிகளாக தென் பட்ட இலங்கைக்கு இப்பொழுது வெள்ளம் ஏற்பட்டதும் எப்படி நல்லவர்களாக
மாறினார்கள் என்ற கேள்வியை வெளிநாட்டு தமிழர்கள் எழுப்பியுள்ளனர் .
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்ல முடியாத நிலை
வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்ல முடியாத நிலையில் 368க்கு மேற்பட்ட தமிழர்களுக்கு தடை விதிக்க பட்டுள்ளது .
இவ்வாறான நிலையில் இந்த முடிவை புலம் பெயர் வெளிநாட்டு தமிழர்கள் அறிவித்துள்ளனர் .
இது இலங்கை ஆளும் அனுரா அரசுக்கு தமிழர்கள் வழங்கிய சாட்டை அடியாக பார்க்க படுகிறது.
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை

புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை
புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை
புகையிரதத்தில் தமிழர் சிங்களவர் சண்டை ,காங்கேசன்துறையிலிருந்து கோட்டைக்கு செல்லும் மதியம் 1.30 புகையிரதத்தில் முன்பதிவு செய்த நால்வர் யாழ்ப்பாணத்திலிருந்த ஏறியிருக்கின்றனர்.
காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள்
ஆனால் அவர்கள் முன்பதிவு செய்து பயணச்சீட்டுக்களை பெற்றிருந்த ஆசனங்களில் காங்கேசன்துறையிலிருந்து நான்கு சிங்களவர்கள் அமர்ந்து வந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் முன்பதிவு செய்த நான்கு தமிழர்களும் பயணச்சீட்டைக் காட்டி, அது தம்மால் முன்பதிவு செய்யப்பட்டது எனவும், ஆசனத்தை விட்டுத்தருமாறு கேட்டபோது,
தாமும் முன்பதிவு செய்துதான் புகையிரத த்தில் பயணிக்கிறோம் எனவும் தாம் முன்பதிவு செய்த ஆசனங்கள் வேறொரு பெட்டியில் இருப்பதாகவும், தமிழர் நால்வரும் அந்த ஆசனங்களில் அமர்ந்து வருமாறும் கூறியிருக்கின்றனர்.
தாம் முன்பதிவு செய்துள்ள ஆசனத்தை தம்மிடமே ஒப்படைத்துவிட்டு, நீங்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்கே சென்று அமருங்கள் என யாழ்ப்பாணத்தவர்கள் கோரியபோதும் அதற்கு சிங்களவர்கள் செவிசாய்க்கவில்லை.
சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்
இதனையடுத்து புகையிரத பரிசோதகர்களிடம் இந்த விடயத்தை பாதிக்கப்பட்டவர்கள் முறைப்பாடு செய்தபோது சாவகச்சேரி புகையிரத நிலையத்தில்
புகையிரதம் நிறுத்தப்பட்டு சிங்களவர்களை அவர்கள் முன்பதிவு செய்த ஆசனத்தில் சென்று அமருமாறு புகையிரத பரிசோதகர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதனை ஏற்காத சிங்கள பயணிகள், தாம் அரசியல் செல்வாக்குடையவர்கள் என்றும் தம்மோடு பகைத்துக்கொண்டு யாரும் புகையிரத த்தில் பயணித்து கொழும்பு வரமுடியாது எனவும் அச்சுறுத்தியுள்ளனர்.
இந்தப் பிரச்சினைகளால் 30நிமிடம் வரை சாவகச்சேரி புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்க்க்கப்படதாகவும்,
சிங்கள பயணிகள் அடாத்தாக அமர்ந்த ஆசனங்களிலேயே தொடர்ந்தும் பயணம் செய்வதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்
தமிழர் காணி அபகரிப்பு
தமிழர் காணி அபகரிப்பு
தமிழர் காணி அபகரிப்பு நடவடிக்கை தொடர்பாக ஆழம் பிரதமருடன் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதான செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆளும் அனுரா ஆட்சியில் வர்த்தகமாணி அறிவிப்பின் பிரகாரம் வட கிழக்கு பகுதியில் உள்ள தமிழ் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன.
வடகிழக்கில் தமிழர் காணிகள் அபகரிப்பு
தமிழருடைய பூர்வீக நிலங்கள் பூர்வீக குடிகளுக்கு சொந்தமானதாகும் , எனவே அவர்களுடைய காணிகளை அபகரிக்க இவ்வாறான நடவடிக்கையை மேற்கொள்ளும், இந்த செயல் திட்டத்திற்கு எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தினயுள்ளனர் .
எனினும் இந்த பேச்சுவார்த்தை உரிய முறையில் செயல்படுத்தப்படுமா அல்லது ,கண்துடைப்பு ஒன்றாக காணப்படுமா என்பது தற்போது பேசு பொருளாக இருக்கிறது.
ஒன்றிணைந்த இலங்கையில் வாழ்வாக கூறிக் கொள்ளும், அனுர ஆட்சியானது, தமிழ்கள் மீது வன்மத்தை காக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது.
தமிழர் தேசியத்துக்கு ,எதிரான செயல்பாடுகள்
தமிழர் நிலங்களை அபகரித்தல் ,தமிழர் தேசியத்துக்கு ,எதிரான செயல்பாடுகள், வெளிநாட்டிலிருந்து வருகின்ற தமிழர்கள் தடை போடுதல்,
இவ்வாறான பல்வேறுபட்ட சொல்லெண்ணாத ,ஏற்றுக்கொள்ள முடியாத ,செயல் திட்டங்களை நடத்தி வருகிறது .
அளவே அவற்றை அவை சரியென அவர்கள் வாதிட்டு வருவதும் ,அதற்கு எதிராகதமிழர்கள் கொந்தளித்து நிற்பதுமே இப்பொழுது பிரச்சனையாகி உள்ளது.
தமிழர் பிரதிநிதிகளுடன் பேச்சு தமிழர் தரப்பை வலுப்படுத்தும் நிகழ்வாக இருக்குமா என்பதே எமது கேள்வியாகவும் .
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை

- யாழில் வாகன விபத்தில் ஒருவர் பலி

- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

தமிழர் அரசியல் கட்சிகளை சந்தித்த மோடி
தமிழர் அரசியல் கட்சிகளை சந்தித்த மோடி
தமிழர் அரசியல் கட்சிகளை சந்தித்த மோடி ,இலங்கையில் உள்ள தமிழ் சமூகத்தினரது தலைவர்களை சந்திக்கின்றமை எப்பொழுதும் மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்.
பெருமதிப்புக்குரிய தமிழ் தலைவர்களான திரு இரா. சம்பந்தன் மற்றும் திரு மாவை சேனாதிராஜா ஆகியோரது மறைவுக்கு இச்சந்தர்ப்பத்தில் அனுதாபம் தெரிவித்தேன், அவர்கள் இருவருமே தனிப்பட்ட ரீதியில் எனக்கு தெரிந்தவர்கள்.
அத்துடன், ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் சமூகத்திற்கு சமத்துவம், கௌரவம் மற்றும் நீதி ஆகியவற்றுடனான வாழ்க்கைக்கான எமது அசைக்கமுடியாத அர்ப்பணிப்பு இச்சந்திப்பின்போது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
எனது விஜயத்தின்போது ஆரம்பித்துவைக்கப்பட்ட பல திட்டங்களும் முன்னெடுப்புகளும் அவர்களது சமூக, பொருளாதார மற்றும் கலாசார முன்னேற்றத்துக்கான பங்களிப்பை வழங்கும்.
என தனது டுவிட்டர் பக்கத்தில் மோடி அவர்கள் தனது கருத்தை பதிவிட்டுளளார் .
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்

- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி

- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்

- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது

- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை

- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்

- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி

- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி

- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை

அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன
அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன
அர்ச்சுனா தமிழர்களுடன் ஏன் பிற மொழி பேச வேண்டும்|காரணம் என்ன மக்கள் எழுப்பும் கேள்விகள் .
தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும்
தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும் ,இந்த நாட்டிலே தமிழர்கள் உரிமைகளைப்பெற்று வாழவேண்டும், தமிழர்களுக்கான அரசியல் தீர்வினைப் பெறவேண்டும், தமிழர்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு
நீதிகிடைக்க வேண்டுமானால் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாகவே அவற்றினை பெற்றுக் கொள்ளமுடியும் என இலங்கை
தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
நேற்று (01) மட்டக்களப்பு நகரில் பல்வேறு இடங்களில் தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடைபெற்றன. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தபால் மூல வாக்களிப்பின் ஊடாக மக்கள் வடக்கு கிழக்கு பூராவும் இலங்கை தமிழரசு கட்சிக்கு அதிகளவான வாக்குகளை அளித்திருக்கிறார்கள் எங்களுடைய மக்கள் இம்முறை மிகத் தெளிவாக இருக்கின்றார்கள் காலை
முழுவதும் மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த அளவிலே ஆசிரியர்களாக இருக்கட்டும், ஏனைய அரசாங்க ஊழியர்கள் அனைவரும் இம்முறை தங்களது வாக்கு தமிழரசு கட்சிக்கு கட்சிக்கு நாங்கள் அளித்திருப்பதாக பெருமளவாக கூறி இருக்கிறார்கள்.
எங்களுடைய இம்முறை ஒரு பாரிய வெற்றியை நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் இந்த பாரிய வெற்றியை அடைவதே முதலாவது கட்டத்தை நாங்கள் அடைந்திருக்கின்றோம் ஏனென்றால் தபால் மூல
வாக்கெடுப்பின் ஊடாக வாக்களித்தவர்கள் நிச்சயமாக தங்களுடைய பிரதேசங்களில் ஏனைய தரப்பினரும் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று நிலைப்பாட்டை அறிவிப்பார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பொருத்த வகையில் இலங்கை தமிழரசு கட்சிக்கு அமோகமான வெற்றி பெற காத்துக் கொண்டிருக்கின்றது ஏனைய கட்சிகளைப் பொறுத்தளவில் அவதானித்த அளவிற்கு மக்கள் மத்தியில்
சென்று ஒரு பரப்புரை கூட்டம் கூட நடத்திக் கொள்ள முடியாத அளவிற்கு பல கட்சிகள் பல வேட்பாளர்கள் இன்னமும் இருக்கின்றார்கள்.
மாவட்டம் ஒரு மிகப்பெரிய மாவட்டம் வெறுகல் தொடக்கம் துறைநீலாவனை வரை நமது படுவான் கரையையும் இணைத்தால் 1,200 கிராமங்கள் எமக்கு இந்த பரப்புரைக்காக ஒதுக்கப்பட்டிருக்கின்ற காலப்பகுதிக்குள் இந்த
அனைத்து கிராமங்களுக்கும் சென்று நாங்கள் கூட்டங்கள் நடத்த முடியாத சூழ்நிலையில் இருக்கின்றோம்.
ஆனால் முடிந்த வரைக்கும் எங்களுடைய மக்களை தற்பொழுது வர இருக்கும் தேர்தலுக்கான பரப்புரை இன்னமும் 11 நாட்கள் இருக்கின்றது.
மக்கள் இம்முறை தமிழரசி கட்சிக்கு அதிகளவான வாக்குகளை வழங்குவதற்கு அதிக காரணங்களை கூறுகின்றார்கள் அதற்கான
காரணங்கள் இந்த மாவட்டத்தை பொறுத்த அளவில் கடந்த காலத்தில் மக்களுடைய அதிகளவான வாக்குகளை பெற்று அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட்டவர்கள்.
தங்களை தங்களது குடும்பங்களை வளர்த்துக் கொண்டார்கள் தங்களுடைய நெருக்கமானவர்களுக்கு பணம் உழைப்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்
கொடுத்தார்களே தவிர மக்களுக்கு பெரும்பாலான வேலைத்திட்டங்களை செய்யவில்லை என்பது மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து இருக்கின்றது.
அந்த வகையில் தமிழரசு கட்சி மக்களுக்கு சொல்லும் விடயம் தமிழரசு கட்சிக்கு வழங்கப்படும் ஒவ்வொரு வாக்கும் தங்களுக்கு ஒரு பெருமையை
தரும் வாக்காகவே அமைந்திருக்கின்றது ஏனென்றால் கடந்த நான்கு வருடங்களாக தமிழ் இனம் ஒரு அதி சிகிச்சை பிரிவில் இருந்த நோயாளியை போன்று வாழ்ந்து கொண்டிருந்தோம்.
ஒருவகையாக அரசாங்கத்தினுடைய பேரினவாத சக்தி உடைய குடியேற்றத் திட்டங்கள் இன்னும் ஒரு பக்கத்தில் காணி அபகரிப்பு, தொல்பொருள் தொடர்பான விடயங்களில் பல பிரச்சனைகள், நில ஆக்கிரமிப்பு, மகாவலி
அதிகார சபை, வன இலாகா, கரையோர பாதுகாப்பு பிரிவு இவ்வாறாக அரச திணைக்களங்களை வைத்துக்கொண்டு எங்களுடைய மக்களுடைய
காணிகளை அபகரித்துக் கொண்டு சுவிகரித்துக் கொண்டு இருந்தது நாங்கள் அனைவரும் பார்த்த விடயம்.
ஆகவே இந்த விடயங்களுக்கு எல்லாம் மக்களோடு நின்று போராட்டங்களை செய்து மக்களுடைய பிரச்சினைகளை குறைந்த பட்சம் பாராளுமன்றத்தில் பேசி சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்று ஜனாதிபதியுடன் பேசி
வேலைத்திட்டங்களை மக்கள் இட்ட வாக்கினால் தான் செய்யக் கூடியதாக இருந்தது என்பதனை மக்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
அந்த வகையில் இந்த விடயங்களுக்கு நாங்கள் தொடர்ந்தும் பிரச்சினைகளை பற்றி பேசிக்கொண்டு இருக்க முடியாது நாங்கள் அதி சிகிச்சை பிரிவிலே இருந்த நோயாளிகளில் என்று சொன்னது இவ்வாறான விடயங்களை
பாதித்துக் கொண்டிருந்த மக்கள் அதி சிகிச்சை பிரிவிலே இருந்த நோயாளி போன்று நாங்கள் இலங்கை தமிழரசு கட்சியாக நாங்கள் தான் இந்த போராட்டங்கள் போன்ற விடயங்களின் ஊடாக அந்த நோயாளியை உயிர்
தப்ப வைத்து கோட்டா ரணில் ஆட்சி காலத்தை கடக்கும் வரைக்கும் அந்த நோயாளியாக பார்த்தால் உயிர் தப்ப வைத்திருக்கின்றோம்.
மீண்டும் தமிழினம் இந்த மண்ணிலே தலை நிமிர்ந்து வாழ வேண்டும் கௌரவமாக வாழ வேண்டும் தமிழ் மக்களுக்கு சிறந்த ஒரு எதிர்காலத்தை
அமைக்க வேண்டும் தமிழ் மக்கள் இந்த நாட்டிலே அரசியல் தீர்வை அடைய வேண்டும் பொறுப்பு கூறல் விடயத்தில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
நில அபகரிப்புகள் இடம் பெறக் கூடாது இந்த பிரதேசத்தில் அபிவிருத்தி திட்டங்கள் இடம் பெற வேண்டும் என்றால் இலங்கை தமிழரசு கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாக மாத்திரம்தான் செய்ய முடியும்.
இலங்கைத் தமிழரசு கட்சிக்கு வாக்களித்தால் அதி சிகிச்சை பிரிவில் இருந்து எவ்வாறு நோயாளிகளை காப்பாற்றினோமோ அந்த நோயாளியை மீண்டும் வீட்டிற்கு வரும் வகையான வேலை திட்டங்களை முன்னெடுக்கலாம்.
ஆனால் எங்களுடைய மக்கள் சிலர் தவறான முடிவுகளை எடுத்து மீண்டும் அமைச்சர் வேண்டும் என்று சொன்னால் அது சிகிச்சை பிரிவிலே இருக்கும் நோயாளிகளை போன்ற வளர்ந்து கொண்டிருக்கின்ற தமிழ் இனம் நேரடியாக
மோட்ச்சரைக்கு சென்று உயிரிழக்கும் வேலையில் தான் அவர்கள் செய்வார்கள் அந்த வகையில் மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள்
இன்னமும் தெளிவுபடுத்தல்களை நாங்கள் எதிர்வரும் பாரங்களிலேயே வழங்க இருக்கின்றோம்.
இலங்கைத் தமிழரசு கட்சிக்கு இந்த மாவட்டத்திலே நான்கு ஆசனங்கள் என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்ற வெற்றி இதேபோன்றுதான் வடக்கு
கிழக்கு பூராக அனைத்து மாவட்டங்களிலும் தமிழரசு கட்சி அமோகமான வெற்றி அடையும் என தெரிவித்தார்.
தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும்,
குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..
வட மாகாணத்தில்
குறிப்பாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.
இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.
அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது நியமித்திருக்கின்றர்.
அங்குள்ள அரசியல்வாதியானபிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்.
அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடு
தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும்.
எனவே பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். கல்வி அமைச்சும் அதிகாரிகளும் இதற்கு இடமளிக்ககூடாது.
இதனால் தான் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ள இந்த பாடசாலைகளின் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்..
தேர்தலில் வெல்ல அரசியல் நுழைவு
தேர்தல் வருகின்றதால் தமக்கான ஆதரவை பெருகி கொள்வதற்கே அரசியல்வாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை தற்போது தீவிரமாக முன்னெடுக்கின்றனர்.
இதனை நிறுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் கூறிய போது, நிறுத்துவதாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.
இவ்வாறு நியமனங்கள் மட்டுமல்ல சில முறையான இடமாற்றங்களில் கூட அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்படுகின்றன.
இத்தகைய செயற்பாடுகள் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் கல்வியில் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.
மேலும் முழு இலங்கையிலும் இருக்கின்ற சுற்றறிக்கை வடமாகாணத்தில் பல சந்தர்ப்பங்கள் பல இடங்களில் ஆசிரியர்கள் விடயத்தில் மீறப்பட்டு வருகிறது.
ஆகவே சுற்றறிக்கையை மீறி செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறுகின்றோம்.
மேலும் இந்த வருடம் மே தினத்தை யாழ்ப்பாணத்தில் செய்ய தீர்மானித்திருக்கின்றோம். இதில் விசேஷமாக அதிபர், ஆசிரியர்கள் முகம் கொடுக்கிற பிரச்சினைகள் மட்டுமில்லாமல்,
இந்த அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்ற அடக்குமுறை சட்டங்கள் பேச்சுரிமை தொழிலுரிமை பயங்கரவாத எதிர்ப்பு போன்ற சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டக்களுக்கு எதிராகவும் அனைவரதும் உரிமைகளை வலியுறுத்தி இதனை செய்கிறோம்.
ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஒரு உரிமையும் இல்லை
எனவே மக்களுக்கு இருக்கின்ற உரிமையை மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஒரு உரிமையும் இல்லை.
ரணில் ராஜபக்ச அரசாங்கம் மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கல்வியில் கூட திருத்தங்கள் என்ற பெயரில் புதிய கொள்கைகளை கொண்டு வர முயன்றிருக்கின்றார்கள்.
இவ்வாறான திருத்தங்கள் அல்லது புதிய கொள்கைகளை கொண்டு வந்து இந்த நாட்டில் உள்ள இலவச கல்வி முறை இல்லாமல் ஆக்குகின்ற ஒரு செயற்பாட்டை தான் இவர்கள் செய்யப் போகின்றார்கள்.
இது இலவச கல்வியை காசுக்கு கொடுக்கிற செயற்பாட்டைதான் அரசாங்கம் முன்னெடுக்கின்ற ஆபத்து உள்ளது.
இதேபோன்று இப்போது பாடசாலைகளை மூடுகின்ற செயற்பாட்டுகளை ரணில் ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கின்றது.
இது அந்தந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்களின் உரிமையை பறிக்கின்ற ஒரு செயற்பாடாகவே இந்த அரசின் செயற்பாடுகள் அமைகின்றன.
அது மட்டுமல்லாமல் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் காசு கொடுத்து படிக்க வேண்டிய ஒரு செயல்பாட்டையும் இவர்கள் செய்ய பார்க்கின்றார்கள்.
அடக்குமுறை சட்டங்கள்
இந்த அரசாங்கம் கொண்டு வருகின்ற அடக்குமுறை சட்டங்கள் கல்வியை விற்கின்ற சட்டங்கள் ஆசிரியர், அதிபர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகள் சம்பளம் முரண்பாடுகளை பிரச்சனையை தீர்க்கிறது.
இப்படியான பல பிரச்சினைகளை முன் வைத்து தான் இலங்கை ஆசிரியர் சங்கம் வருகின்ற மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் எமது மே தினத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறது.
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்ப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தமாக நாம் கூறுகிறோம்.
அப்படி அரசாங்கம் செய்யாத விடத்து ஏனைய தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து நாம் போராட்டங்களை முன்னெடுப்போம்.
உண்மையிலே மக்கள் விரோத, மாணவர் விரோத, ஆசிரியர் விரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு எந்த உரிமையும் இல்லை.
ஏனென்றால் அவர் மக்கள் ஆணையில்லாத ஒரு ஜனாதிபதி, அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி அல்ல.
ஆனாலும் பெரமுனவின் 134 வாக்குகளை வைத்து தான் அவர் எல்லாத்தையும் செய்கின்றார்.. அவ்வாறு அவர் செய்கின்ற அனைத்தும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளாகத்தான் இருக்கிறது.
தேர்தலும் இல்லை
குறிப்பாக தேர்தல் வைக்கிறேன் வைக்கிறேன் என்று சொல்லி ஓரு தேர்தலும் இல்லை. அவ்வாறு தேர்தல் என்பது வெறுமனே பேசு பொருளாக மட்டுமே இருக்கிறது.
மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு அல்லது தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு அந்த மக்களுக்கு இருக்கின்ற உரிமையை வாய்ப்பை அளிக்காத ரணில் ராஜபக்ச அரசாங்கம், மறுபக்கத்தில் கல்வி உட்பட நாட்டின் எல்லா உரிமையும் அழிக்கின்ற செயற்பாடுகளை தான் செய்கின்றது என்றார்.
ஐநா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு
ஐநா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு
தமிழர் உரிமை செயலரங்கம்
ஐ.நா வும், தமிழர் உரிமை செயற்பாடுகளும்
“ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடரில் தமிழர்களின் ஒருங்கிணைந்த செயற்பாடுகளுக்கான அழைப்பு”
13/04/2023*சனிக்கிழமை
ஈழம்&தமிழ்நாடு 19:30PM
பிரித்தானியா 15:00PM
பிரான்ஸ் 16:00PM
கனடா&அமெரிக்கா 10:30AM (Eastern Time)
ஐ.நா மனித உரிமைகள் சபையின் 56வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 18 தொடங்கி ஜூலை 12ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
தமிழர்கள் நாம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தெளிவூட்டப்படும் இணையவழிக் கலந்துரையாடலில் இணைந்து கொண்டு தமிழர்களின் உரிமைக்கும் நீதிக்குமான செயற்பாடுகளுக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இணையவழி செயலரங்கில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் கீழே இணைக்கப்பட்டுள்ள ZOOM செயலியின் இணைப்பை அழுத்துவதன் மூலம் இணைந்து கொள்ளலாம்
Join Zoom Meeting
Meeting ID: 854 4168 6041
Passcord : 232425
நன்றி
உலகத் தமிழர் இயக்கம்
பாரதி அமைப்பு
Featured
லண்டனில் தமிழரின் புது காரை திருடி சென்ற திருடர்கள்
லண்டனில் தமிழரின் புது காரை திருடி சென்ற திருடர்கள்
லண்டனில் தமிழரின் ஒருவரது புது காரை திருடி சென்ற திருடர்கள், மீள அதே இடம் வந்து திரும்பி பார்த்த பொழுது கார் திருடப்பட்டுள்ளது கண்டு அதிர்ந்த்து போயுள்ளார் அந்த .தமிழர்.
லண்டன் தொண்டன் கீற்று பகுதியில் தனது புது காரை பார்க்கிங் செய்துவிட்டு வேலைக்கு சென்றுள்ளார் .
மீள வேலை முடித்து வந்து பார்த்த பொழுது தமிழர் கார் காணாமல் போயுள்ளது .
36.000 பவுண்டுகளுக்கு வாங்க பட்ட , காரை இழந்து அவர் அதிர்ச்சியில் உறைந்துள்ளார் .
கார் திருட பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசாருக்கு தெரிவிக்க பட்ட நிலையில் போலீஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன . .
வழமையாக எந்த இடத்தில் காரை பார்க்கிங் செய்கிறார் என்பதை கவனித்து வைத்த திருடர்கள் தமது கைவரிசையை காண்பித்துள்ளனர் .
இது போன்று உங்களுக்கும் இடம்பெறலாம் எச்சரிக்கையுடன் செயல் படுங்கள் லண்டன் .தமிழர்களே
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் பகுதிகள் ,கடைகள் வீடுகள் நீரில் மூழ்கின .தமிழர் பகுதியில் கடும் பதற்றம்.
வெள்ள பெருக்கு காரணமாக தமிழர் பகுதி கடும் பதற்றத்தில் உறைந்துள்ளது ,வீடுகள் கடைக்குள் நீர் புகுந்துள்ளதினால் ,சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளன .
மக்கள் சொல்லென்ன துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
வெள்ளத்தில் மிதக்கும் மாங்குளம் தமிழர் பகுதியில் கடும் பதற்றம்
தாழ்நில பகுதிகள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளதால் மக்கள் அங்கிருந்து அகதிகளாக நகர்ந்துள்ளனர் .
பாம்புகள் விசா ஜந்துக்கள் நீரோடு வருவதால் ஒருவித பதட்டத்தில் மக்கள் உறைந்துள்ளனர் .
மாங்குள குளம் வான் பாய்வதால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்



- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்
- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி
- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்
- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது
- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை
- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்
- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி
- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி
- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை
இலங்கையில் அனைத்து மக்களை போல மலையக தமிழர்கள் மேலெழும்பும் காலம்
இலங்கையில் அனைத்து மக்களை போல மலையக தமிழர்கள் மேலெழும்பும் காலம்
இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைக்குச் சென்று 200 ஆண்டுகள் (1823-2023) ஆவதை நினைவுகூரும் வகையிலும், அவர்கள் இலங்கைக்கு ஆற்றிய சேவைகளையும், இலங்கையின் பொருளாதாரத்துக்கு
வழங்கிய பங்களிப்பைப் பாராட்டியும் இலங்கை மத்திய அரசாங்கத்தின் பங்களிப்புடன் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஏற்பாடு
செய்யப்பட்ட ‘நாம் 200’ என்ற தலைப்பிலான தேசிய நிகழ்வில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
அவர் பேசியதாவது : மனிதன் வாழ்ந்திராத மலைக் காடுகளை மலையகத் தோட்டங்களாக மாற்றியவர்கள் மலையகத் தமிழர்கள். 1823ம் ஆண்டு கம்பளைக்கு அருகே உள்ள சிங்கபிட்டிய என்ற கிராமத்தில் கேப்டன் ஹென்றி
பேட் என்ற பிரிட்டிஷ்காரர், 14 இந்திய தொழிலாளர்களையும் சில சிங்களத் தொழிலாளர்களையும் வைத்து காப்பித் தோட்டம் தொடங்கினார்.
இது இலங்கைப் பொருளாதாரத்தில் மகத்தான மாற்றத்தை உருவாக்கியது. காப்பித் தோட்டங்கள் பெருகப் பெருக இந்திய தொழிலாளர்கள் ஏராளமாக
இலங்கைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கோப்பி தோட்டத்தை அடுத்து தேயிலை தோட்டங்கள் அதிகமானது. அதனையும் மலையகத் தமிழர்கள் வளப்படுத்தினார்கள்.
இலங்கையில் அனைத்து மக்களை போல மலையக தமிழர்கள் மேலெழும்பும் காலம்
கடந்த 200 ஆண்டுகளாக இலங்கையின் நல்வாழ்வுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். திமுக தோன்றிய காலம் முதல் புலம்பெயர் தமிழர்களது உரிமையைக் காப்பதில் கண்ணும் கருத்துமாகச் செயல்பட்டுள்ளது. 1952ம்
ஆண்டு திமுகவின் முதல் மாநில மாநாட்டில் பேரறிஞர் அண்ணா “இலங்கை வாழ் திராவிட மக்களுக்காக ஓட்டு உரிமையைக் கொடுத்து நீதியை நிலை
நிறுத்துங்கள். ஜனநாயகத்தைக் கேலி செய்யாதீர். வீண் போக்கு வெற்றியைத் தராது” என்று பேசினார். திமுகவின் இரண்டாவது மாநில மாநாட்டில் தனி தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.
1957 தேர்தல் அறிக்கையில், தமிழர்கள் நிறைந்துள்ள வெளிநாடுகளில், தமிழர்களே தூதுவர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று திமுக கோரியது. இப்படி தமிழ் மக்களது உரிமைகளுக்காக ஆரம்ப காலம் முதல் குரல்
கொடுக்கும் இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். “கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்? அது கடல் கடந்த தமிழர்களின் கண்ணீரால்” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா.
இலங்கையில் அனைத்து மக்களை போல மலையக தமிழர்கள் மேலெழும்பும் காலம்
மலையகத் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு திரும்பிய போது அவர்களை அரவணைத்து தமிழக மலைப்பகுதிகளில் குடியமர்த்தி டேன் டீ அரசு ரப்பர் தோட்டங்கள் மூலம் அவர்கள் வாழ்வில் உயர வழிவகை செய்தோம். உரிமை
காக்கவும் உதவிகள் செய்து வருகிறோம். மலையக தமிழர்களின் குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து மக்களையும் போல கல்வியிலும்
பொருளாதார முன்னேற்றத்திலும் அவர்கள் மேலெழும்பும் காலத்தை எதிர்நோக்கி தமிழ்நாடு காத்திருக்கிறது.
கல்வி, சுகாதாரம், வாழிட உரிமைகள், பொருளாதார உதவிகள், சமூக உரிமைகள் அனைத்தும் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.
அதற்காக தொப்புள் கொடி உறவுகளான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்
- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி
- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்
- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது
- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை
- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்
- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி
- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி
- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை
நியூசிலாந்து தேர்தலில் தமிழர் போட்டி
நியூசிலாந்து தேர்தலில் தமிழர் போட்டி
நியூசிலாந்து நாட்டின் தேர்தலில் தேசியக் கட்சி தேர்தல் வேட்பாளர் தேசியப் பட்டியலில் ஒரு இலங்கைத் தமிழர். நியுசிலாந்து நாட்டில் ஒக்டோபர் மாதம் பொதுத் தேர்தல் சனிக்கிழமை ( 14 ) நடைபெறுகிறது.
இந்தத் தேர்தலில் முன்னாள் நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் பிரதிநிதித்துவபடுத்திய ஆளும் தொழில் கட்சிக்கும் எதிர்கட்சியான தேசியக் கட்சிக்கும் இடையில் போட்டி நிலவுகிறது.
நியூசிலாந்து தேர்தலில் தமிழர் போட்டி
இரு கட்சிகளுக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு. ஆயினும் சிறு கட்சிகள் துணை கொண்டு தேசியக் கட்சி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகம் என கருத்துக் கணிப்புகள் சொல்கின்றன.
இந்தத் தேர்தலில் தேசியக் கட்சி தேசிய வேட்பாளர் பட்டியலில் இலங்கையைப் பூர்வீகமாக கொண்ட பொறியியல் ஆலோசகர் செந்தூரன் அருளாநந்தம் உள்ளார். அவர் இங்கிலாந்து சிங்கப்பூர் அவுஸ்திரேலியா, மற்றும்
நியுசிலாந்தில் பெரும் கட்டுமாணப் திட்டங்களில் அலோசகராக பணியாற்றி உள்ளார். இவர் யாழ் புனித ஜோன் கல்லூரி , மற்றும் கொழும்பு றோயல் கல்லூரியின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது
- கபில சந்திரசேனவை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு
- ஜேவிபி பயங்கரவாதி அனுராவினால் அவசரகால சட்டம் பிரகடனம்
- ஜூன் மாதத்திற்குள் வாகனப் பதிவுத் தகடுகள் அச்சிடும் பணி
- LAUGFS எரிவாயு விலை உயர்வால் உணவக விலைகள் திருத்தம்
- அஸ்வெசும நிதி இருமுறை வழங்கப்பட்டது
- பழைய விமானத்தை வாங்கி மில்லியன் மோசடி அனுரா அரசின் சாதனை
- ரத்துகல பழங்குடி கிராமத் தலைவர் காலமானார்
- அறுவை சிகிச்சைக்கு சென்ற சிசு பலி
- பொலிஸ் வெகுமதி நிதியில் மோசடி
- வித்யா படுகொலை வழக்கு நால்வருக்கு மரண தண்டனை
தியாகத்துக்கான காவடி தமிழர்
தியாகத்துக்கான காவடி தமிழர்
தியாகத்துக்கான காவடி தமிழர்
தாயகத்தின் காவடி.
மனக்காயத்தோடு உறங்கியவனின்
மரியாதைக்கான காவடி.
கடவுளுக்கான காவடி மக்கள்
கண்ணீரின் காவடி.
நினைவுகளைச் சுமந்தை செல்லும்
நெஞ்சங்களின் காவடி.
திலீபனுக்கான காவடி தேச
வீரனுக்கான காவடி.
வலியோடு நோன்பிருந்தவனுக்காக
வரலாற்றுக் காவடி.
அகிம்சைக்கான காவடி பெரும்
அநீதிக் கெதிரான காவடி.
வம்சங்கள் செடில் குத்தியாடும்
விடுதலைக்கான காவடி.
பருக நீர்மறுத்து பலநாள்
பசி இருந்தவனுக்கான காவடி.
முருகன் வாசலில் மூச்சுவிட்ட
புதல்வனுக்கான நாளடி❗
-பிறேமா(எழில்)-
- வெளியில் தெரியாத வேர்கள்.

- சேரன் குளிர்களி

- ஈழத் தமிழச்சி ஏலாத் தமிழச்சியா

- பாதுகாப்பு வலயமென்று

- செட்டிகுள முகாமும் சீ என்ற வாழ்க்கையும்

- தனியாகப் போறவளே

- அப்பான்ர சைக்கிளே அந்தநாள் வாகனம்

- பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

- டெங்கொழிக்க எங்களின் பங்கு

- மழைக்காலத் துன்பங்கள்

- நாங்கள் மலர்ந்துவிட்டோம்.

- சினிமாவுக்குள் மூழ்கும் சீமான்களுக்கு

- ஓடிஓடி வாழ்ந்தபோதும் ஓய்ந்திடாத கல்வி

- இளைஞரில்லா இலங்கை

- தியாகத்துக்கான காவடி தமிழர்

சிங்கப்பூர் ஜனாதிபதியானார் தமிழர்
சிங்கப்பூர் ஜனாதிபதியானார் தமிழர்
சிங்கப்பூரில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் 70 வீதத்துக்கு மேலான வாக்குகளைப் பெற்று தர்மன் சண்முகரத்தினம் என்ற தமிழர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
தர்மன் சண்முகரத்தினம் சிங்கப்பூர் நாட்டின் நிதி அமைச்சராகவும், துணை பாதுகாப்பு அமைச்சராகவும், துணை பிரதமராகவும் பதவி வகித்த நிலையில் தற்போது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இவருக்கு போட்டியாக ஜனாதிபதி வேட்பாளராக இருவர் களமிறங்கிய நிலையில் இருவரும் 20 வீத வாக்குகளை கூட பெறாத நிலை காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது
பிரிட்டனில் கடைக்குள் திருடனை வைத்து பூட்டிய தமிழர்
பிரிட்டனில் கடைக்குள் திருடனை வைத்து பூட்டிய தமிழர்
பிரிட்டன் நாட்டில் தமிழர் ஒருவரது கடைக்குள் திருடனுக்கு நடந்த,
தரமான சம்பாவம் ஒன்று வைரலாகிய வண்ணம் உள்ளது .
கடைக்குள் திருடன் நுழைந்து பியர் மற்றும் சில பொருட்களை திருடியுள்ளார் ,
இதனை கண்ணுற்ற கடை,ஊழியர் ஓடி சென்று கதவை பூட்டியுள்ளார் .
சற்றும் எதிர்பாரத திருடன் ,கதவின் சட்டர் கீழே நுழைந்து,
தப்பிக்க முயன்றுள்ளான் ,ஆனால் அதற்குள் ,
விரைந்து வந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர் .
ஆபத்தான நேரத்தில் சாதுரியமாக சிந்தித்த ஊழியருக்கு
வாழ்த்துக்கள் என மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
வீடியோ பார்க்க இதில் அழுத்துங்கள்

















































