Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
கொரனோ நோயில் இருந்து மீண்ட 106 வயது மூதாட்டி
கொரனோ நோயில் இருந்து மீண்ட 106 வயது மூதாட்டி
பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று
வந்த 106 வயது மூதாட்டி ஒருவர் தற்பொழுது அந்த நோயில் இருந்து மீண்டு வந்துள்ளார்
1913 ம் ஆண்டு பிறந்த வயது கூடிய பெண்மணி என்ற பட்டத்தை தன் பக்கம்
வைத்துள்ளார் ,அவ்வாறான இவர் பேர்மிங்காம் மருத்துவ மனையில்
சிகிச்சை பெற்று வந்தார் ,இவ்வாறான மூத்தவரே இந்த கொடிய நோயில்
இருந்து மீண்டு வந்துள்ளார் என்ற மகிழ்வான செய்தி வெளியாகியுள்ளது

இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி
இத்தாலியில் தொடரும் சோகம் 151 மருத்துவர்கள் பலி
இத்தாலி நாட்டில் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மக்கள் அதிகமாக பாத்திக்க பட்டுள்ளனர் ,
இதுவரை இருபது ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .
மேலும் ஒரு லட்சத்து முப்பது ஆயிரத்துக்கு மேல் பாதிக்க பட்டுள்ளனர்
இவ்வாறு பாத்திக்க பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கி வந்த 121 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர்,இவர்களுக்கு உதவி புரிந்து வந்த 30 தாதிமார்களும் பலியாகியுள்ளனர்
தொடர்ந்தது கிட்ட ஆறாயிரம் பேர் வரை இதுவரை இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .
உலகில் அதிக மருத்துவர்கள்,தாதிமார்கள் பாதிக்க பட்ட நிலையில் உள்ள ஒரே நாடு இத்தாலியாக காண படுகிறது ,இவை உத்தியோக பூர்வ தகவலாக உள்ளன .
எனினும் பாதிப்பு இதைவிட இரண்டு மடங்காக உள்ளதாக பிற செய்திகள் தெரிவிக்கின்றன ,
தமது அரசுகளை காப்பாற்றி கொள்ள தொடர்ந்து நாடுகள் ஒவ்வொன்றும் மூடி மறைப்பை மேற்கொண்டு வருகிறது என்ற பலமான விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிட தக்கது

வீதிகள் எங்கும் ரஷியா படைகள் குவிப்பு -மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்
வீதிகள் எங்கும் ரஷியா படைகள் குவிப்பு -மக்கள் வீடுகளுக்குள் முடக்கம்
ரஷியாவில் அமெரிக்காவை போல மீளவும் பெரும் கொரனோ நோயின்
பாதிப்பு ஏற்பட்டு விடும் என்ற நிலையில் தற்பொழுது வீதிகள் எங்கும் இராணுவம் குவிக்க பட்டுள்ளது
மக்கள் வெளியில் நடமாட முடியாத படி தடைகள் ஏற்படுத்த பட்டுள்ளது .
எதிர்வரும் ஐந்து முதல் ஏழு நாட்களுக்கு இந்த தடை உத்தரவு நீடிக்க படும் எனவும் ,அதன் பின்னர் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு அவை தளர்த்த படும் என அறிவிக்க பட்டுள்ளது
அமெரிக்காவை போல மிக பெரும் அழிவை சந்திக்க முன்பாக நாம் சுதாகரித்து
செயல் பட வேண்டும் என்ற நிலையில் புட்டின் இந்த அவசர நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளார்
மோஸ் கோவின் வீதிகள் எங்கும் தற்பொழுது இராணுவம் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளது

கொரானாவுக்கு ஈரான் இராணுவம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி
கொரானாவுக்கு ஈரான் இராணுவம் கண்டுபிடித்துள்ள புதிய கருவி
ஈரான் இராணுவத்தின் புரட்சிகர இராணுவம் தற்போது நாட்டில் பரவி வரும்
கொரனோ வைரஸ் நோயை கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை கண்டு பிடித்துள்ளனர் .
இந்த கருவியானது நோயாளரை நூறு மீட்டர் தொலைவில் வைத்தே அடையாளம் காட்டி கொடுக்கும் வல்லமை கொண்டது
ஐந்து வினாடிகளுக்குள் இந்த அறிவிப்பை அது தெரிவித்து விடும் என அவர்கள் தெரிவித்துள்ளனர் ,
அங்கு பாதிக்க பட்ட எண்பது வீதமான நோயாளர்கள் முன்பாக இது சோதனை செய்ய பட்டதில் இந்த கருவி சிறந்த பெறுபேறுகளை தந்துள்ளதகவும் ,
இதில் அதி விசேடம் என்னவெனில் இரத்த பரிசோதனைக்கு நோயாளரை உட்படுத்த தேவை இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்,இது ரிமோட் மூலம் இயக்க படுகிறது ,
இந்த கருவி பால் உலக நாடுகள் அதிக கவனம் திரும்பியுள்ளது ,
நோயை கண்டு பிடிக்கும் கருவியை கண்டு பிடித்துள்ள ஈரானால் அதற்குரிய மருந்தை இதுவரை கண்டு பிடிக்கப்படவிலை .
எனினும் அவர்கள் மரபு சார் சில மூலிகைகளை பயன் படுத்தி வருகின்றனர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது ,
இந்த கருவியின் வருகை அந்த நாட்டு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அமெரிக்காவினால் முடியாத
ஒன்றை ஈரான் சாதித்துள்ளது, அதன் தொழில் நுட்ப வளர்ச்சி போக்கை காட்டுகிறது

ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது
ஜெர்மனியில் அமெரிக்கா இராணுவம் மீது தாக்குதல் நடத்த வந்த ஐவர் கைது
ஜேர்மனியில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் மீது பெரும் தாக்குதலை நடத்திட திட்டம் இட்டு பதுங்கி இருந்த ஐந்து ஐஸ் எஸ்
தீவிரவாதிகள் பொலிஸாரினால் கைது செய்ய பட்டுள்ளார் ,ஆறு மறைவிடங்களில்
பதுங்கி இருந்த இவர்கள் அனைவரும் கைது செய்ய பட்டுள்ளனர்
மேலும் இவர்களுடன் தொடர்பில் உள்ள ஏனையவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் உளவுத்துறையினர் ஈடுத்துள்ளனர்
தப்பி ஓடி கொண்டிருக்கும் சிலரை கைது செய்யும் வேட்டையை உளவுத்துறையினர் தீவிர படுத்தியுள்ளனர் ,
அமெரிக்கா ஐராணுவத்தினர் மீது தாக்குதல் நடித்தும் நோக்குடன் இனிக்க பதுங்கி இருந்த மேலும் சிலர் சில மாதங்களுக்கு முன்னர் கைது செய்ய பட்டமை குறிப்பிட தக்கது
கொரனோ செய்த வேலையால் -பிரிட்டனில் 151 மைல் வேகத்தில் கார் ஓடிய நபர் video
கொரனோ செய்த வேலையால் -பிரிட்டனில் 151 மைல் வேகத்தில் கார் ஓடிய நபர் video
பிரிட்டனில் கொரனோ நோயின் காரணமாக மக்களை வீதியில் செல்ல
தடை செய்ய பட்டுள்ளது ,தேவையற்று வீதியில் உலவிட இந்த தடை தொடர்ந்து நீடிக்க பட்டுள்ளது
ஆனால் பிரிட்டன் எம் ஒன்று வேக சாலையில் நபர் ஒருவர் 151 மைல் வேகத்தில் கார் ஓடி சென்றுள்ளார் ,
இவரது இந்த வேகமான கார் ஓட்டத்தை அங்கு பொருத்த பட்டிருந்த கமராவில் கண்காணித்த வீதி போக்குவது போலீசார் ,அவரை துரத்தி சென்றனர்
சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் ,அவரது சாரதி அனுமதி பாத்திரம் முடக்க படும் அபாயம் எழுந்துள்ளது
90 மைல் வேகத்தில் பயணிக்க வேண்டிய சாலையில் இவ்விதம் இவர் பயணித்தது தண்டனை குற்றமாகும்

Extreme speeds this wkend in #London. Many enforced including 97mph (40) on #A10. This driver reached 151mph on #M1 before decamping car & evading 👮♂️ on foot. We will do upmost to identify & take action. Anyhow no doubt will come to our attention again🤞 before he hurts somebody! pic.twitter.com/SyGV1aS3l5
— Andy Cox (@AndyCoxDCS) April 13, 2020
அமெரிக்காவில் 23,649 பேர் பலி – 582,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் 23,649 பேர் பலி – 582,000 பேர் பாதிப்பு
அமெரிக்காவில் கோரனோ வைரஸ் நோயினால் சிக்கி இதுவரை 23,649 பேர் பலியாகியுள்ளனர் .
இன்று மட்டும் ஆயிரத்து ஐநூறு பேருக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்
இதுவரை 582,000 பேர் நோயின் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் .
மேலும் சடலங்களை வைப்பதற்கு இடமின்றி அரசு தவித்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி
கொரனோவால் பிரிட்டனில் முதியோர் மடங்களில் 500 பேர் பலி
பிரிட்டனில் அதி வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி எண்பதாயிரம் பேர் வரை பாத்திக்க பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்க பட்டவர்களில் முதியோர் மடங்களில் வசித்து வந்த முதியவர்கள் ஐநூறு பேர் பலியாகியுள்ளனர்
மேலும் கிட்ட தட்ட மூவாயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்250 க்கு மேற்பட்ட
முதியோர் பராமரிப்பு மையங்களில் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ள நிலையில் கண்டறிய பட்டுள்ளனர்
மேலும் பலர் நாள்தோறும் பாதிக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது , நான்கு வாரஙக்ளுக்கு பிரிட்டன் தொடர்ந்து
லக்கடவுன் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது,
இறந்தவர்களில்
பல்லாயிரம் பேர் வயதானவர்கள் என்பது கண்ணீர் தரும் செய்திகளாக உள்ளன

சிறையில் இருந்து பத்தாயிரம் கைதிகளை விடுதலை செய்த துருக்கிய அதிபர்
சிறையில் இருந்து பத்தாயிரம் கைதிகளை விடுதலை செய்த துருக்கிய அதிபர்
துருக்கியில் வேகமாக பரவி வரும் கோர்னோ வைரஸ் நோயின் தாக்குதலில் துருக்கி நாடும் பாதிக்க பட்டுள்ளது
இவ்வேளை துருக்கிய அதிபர் அவசர பிரேரணை ஒன்றை நிறைவேற்றி
சிறையில் இருந்த பத்தாயிரம் கைதிகளை உடனடியாக விடுதலை செய்கின்றார்
சிறைகளில் மிக நெருக்கடி ஏற்படுவதாகவும் அதனால் இவர்களை விடுவிப்பதாக கூறி இந்த விடுதலையை புரிந்துள்ளார்
கொரனோ அபாயத்தின் மனிதாபிமான உயிர் காக்கும் நடவடிக்கையை
இவர் மேற்கொண்டுள்ள செயலுக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்த பிரிட்டன் பிரதமர் video
உயிரை காப்பாற்றிய மருத்துவர்களுக்கு உருக்கமான நன்றி தெரிவித்த பிரிட்டன் பிரதமர் video
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயால் பாதிக்க பட்டு
சிகிச்சை பெற்று வந்தார் ,மூன்று நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்க பட்டார் .
அப்பொழுது தன்னை போர்த்துக்கல் ,நியுசுலாந்து ,தாதிகள் ஒவ்வொரு வினாடிகளும் அக்கறையோடு கவனித்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார் .
அத்துடன் அணைத்து மருத்துவர்கள் ,தன்னை அன்போடு கவனித்த சிறப்பு
மருத்துவர்கள் அனைவருக்கும் உருக்கமான நன்றிகளை தெரிவித்துள்ளார் .
தான் உயிர் தப்பி மீண்டுவர இவர்களே காரணமாக இருந்தனர் என்ற அழுத்தமான செய்தியை அவர் வெளியிட்டுளளார்
இதோ காணொளியை பாருங்கள்

இருபத்தி மூவாயிரம் மருத்துவர்கள்,தாதிமார் பாதிப்பு =240 பேர் பலி
இருபத்தி மூவாயிரம் மருத்துவர்கள்,தாதிமார் பாதிப்பு =240 பேர் பலி
உலகம் முழுவதும் பரவி வரும் கொரனோ வைரஸின் தாக்குதலில் ,மக்களுக்கு
சிகிச்சை வழங்கி வந்த மருத்துவர்கள் ,தாதியர்கள் ,அம்புலன்ஸ் ஊழியர்கள்
இருபத்தி மூன்றாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் பாதிக்க பட்டுள்ளனர்,இவர்களில் 240 மருத்துவர்கள் தாதிமார்கள் பலியாகியுள்ளனர்
இவர்களில் இத்தாலியில் மட்டும் 140 மரணங்கள் இடம்பெற்றுள்ளன ,அது
தவிர ஆறாயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இத்தாலியில் பாதிக்க பட்டும் உள்ளனர், என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது
மக்களை காப்பாற்றி தமதுஉயிரை பறி கொடுத்த இவர்கள் போராளிகளாக பார்க்க படுகின்றனர்

அமெரிக்காவில் கொரோனாவுக்கு 40 இந்தியர்கள் பலி
அமெரிக்காவில் கொரோனாவுக்கு 40 இந்தியர்கள் பலி
அமெரிக்காவில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலி – உருக்கமான தகவல்கள்
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. ஊரடங்கு, சமூக இடைவெளி பராமரிப்பு,
முக கவசம் அணிதல் என்று கட்டுப்பாடான வாழ்க்கை வாழ்ந்து வந்தாலும் கூட அமெரிக்கர்களை கொரோனா வைரஸ் விடாமல்
துரத்தி வருகிறது. 5 லட்சத்துக்கும் அதிகமான அமெரிக்கர்களின் உடல்களுக்குள் கொரோனா வைரஸ் புகுந்து ஆட்டம் போட்டு வருகிறது.
நேற்றுமுன்தினம் ஒரே நாளில் கொரோனா வைரசுக்கு 2,108 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு முந்தைய இரு நாட்களில் தொடர்ந்து கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.
கொரோனா வைரசுக்கு இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் பலியாகி வருவது மிகுந்த வேதனை ஏற்படுத் துவதாக அமைந்துள்ளது.
இதுவரை 40-க்கும் மேற்பட்ட இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் கொரோனா வைரசால் உயிரிழந்து இருப்பது அவர்களின் குடும்பங்களை தீராத சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
பலியானவர்களில், அதிகபட்சமாக கேரள மாநிலத்தை சேர்ந்த 17 பேர் அடங்குவார்கள்.
குஜராத்தை சேர்ந்த 10 பேர், பஞ்சாப் மாநிலத்தின் 4 பேர், ஆந்திராவின் 2 பேர், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவரும் பலியாகி
இருப்பதாக வாஷிங்டனில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. மற்றவர்களைப் பற்றிய விவரம் தெரிய வரவில்லை.
உயிரிழந்தவர்களில் ஒருவர் மட்டும் 21 வயதானவர், மற்ற அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என தெரிய வந்துள்ளது.
கொரோனாவின் மையமாக நியூயார்க்தான் உருவாகி உள்ளது. இங்கும், அதன் அண்டை மாநிலமான நியூஜெர்சியிலும்
இந்தியர்களும், இந்திய வம்சாவளியினரும் அதிகளவில் வசித்து வருகின்றனர்.
கொரோனாவுக்கு பலியானவர்களில் 12-க்கும் மேற்பட்டவர்கள் நியூஜெர்சி மாகாணத்தில், குறிப்பாக ஜெர்சி நகரின் லிட்டில்
இந்தியா மற்றும் ஓக் ட்ரீ ரோடு பகுதியில் வசித்து வந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
நியூயார்க்கில் மட்டுமே இந்திய வம்சாளியினர் 15 பேர் கொரோனாவால் இறந்திருக்கிறார்கள். பென்சில்வேனியாவிலும்,
புளோரிடாவிலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியாவில் தலா ஒரு இந்திய வம்சாவளியினர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
பலியான இந்தியர்களில் குறிப்பிடத்தகுந்தவர், சுன்னோவா அனலிட்டிகல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி
அனுமந்தராவ் மரே பள்ளி ஆவார். அவர் நியூஜெர்சியின் எடிசன் நகரில் மரணம் அடைந்தார்.
அவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கிறார்கள்.
நியூஜெர்சி நகரத்தில் உள்ள இந்திய சதுக்கத்தில் பிரபலமான சந்திரகாந்த் அமின், தனது 75-வது வயதில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார்.
நியூஜெர்சியில் வீட்டுக்குள் ஒரு இந்திய வம்சாவளி இறந்து கிடந்ததும் தெரியவந்தது.
நியூஜெர்சியில் 400 இந்திய வம்சாவளியினரும், நியூயார்க்கில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் கொரோனா வைரஸ்
தாக்குதலுக்கு ஆளாகி, மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளனர்.
நியூயார்க்கில் உள்ள இந்திய வம்சாவளி கார் டிரைவர்கள் பலரும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். பல சமூக தலைவர்களையும் கொரோனா வைரஸ் விட்டு வைக்கவில்லை.
நியூயார்க், நியூஜெர்சி பகுதியில் 12 இந்தியர்கள் பலியாகி இருப்பதாகவும், இதற்கு முன்னர் இப்படி ஒரு துயர நிகழ்வை
பார்த்தது கிடையாது எனவும் நியூஜெர்சி மாகாணத்தில் ரியல் எஸ்டேட் தொழில் நடத்தி வருகிற இந்தியர் பாவேஷ் தவே
தெரிவித்தார். இவர் முககவசங்கள் வழங்குவதற்கு நிதி திரட்டி வருகிறார்.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்கிய இந்தியர்களையும், இந்திய வம்சாவளியினரையும் காப்பாற்ற பிளாஸ்மா என்று
அழைக்கப்படக்கூடிய ரத்த அணுக்களை ஏந்தி செல்லும் நிறமற்ற திரவம் தேவைப்படுகிறதாம்.
இதை தானமாக வழங்க கோரி சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு வருகிறது என வாஷிங்டன் தகவல்கள் கூறுகின்றன.
ஜெர்சி நகரில் ரசிக் பட்டேல் என்ற 60 வயது இந்திய வம்சாவளி முதியவருக்கு 2 நாட்களுக்கு முன்னர் செயற்கை சுவாச கருவி
அகற்றப்பட்டுள்ளது. அதன்பின்னர் அவர் நிலைமை மோசமாகி உள்ளது. இது அங்குள்ள இந்திய வம்சாவளியினர் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாதிப்புக்குள்ளாகி உள்ள இந்தியர்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் பல தரப்பிலும் உதவும் கரங்கள் நீண்டுள்ளன.
நியூஜெர்சி மெடிக்கல் சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ள வர்களுக்கு இந்திய வம்சாவளியை சேர்ந்த அஜித், சச்சின், சஞ்சய்மோடி உள்ளிட்டோர் இலவச சைவ உணவு வழங்கி வருகின்றனர்.
நியூயார்க், நியூஜெர்சி, மேரிலாந்து, புளோரிடா, பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் உள்ள ஆஸ்பத்திரிகளில்
சேர்க்கப்பட்டுள்ளவர்களுக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து இலவசமாக உணவுகள் வினியோகிக்கப்பட்டு வருவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.
பாஸ்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் பணியாற்றுகிற பணியாளர்களுக்கு உலக இந்து கவுன்சிலின் அமெரிக்க கிளை
உணவு அளித்து வருகிறது. உள்ளூர் போலீசாருக்கு 85 ஆயிரம் கையுறைகளையும் அந்த அமைப்பு வழங்கி உள்ளது.
இப்போது அமெரிக்கவாழ் இந்தியர்களுக்கும், இந்திய வம்சாவளியினருக்கும் உள்ள ஒரே ஆறுதல், இந்த நெருக்கடியான
தருணங்களில் பல தரப்பில் இருந்தும் உதவிக்கரங்கள் நீளுவதுதான்.

வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்
வெள்ளைக்கார பெண்களுக்கு கொரனோ பரப்பிய பொலிஸ்
உத்திரகாண்டில் ஊரடங்கை மீறி சுற்றித்திருந்த வெளிநாட்டினரை பிடித்த போலீஸ் அவர்களை ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர்.
ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் – ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என 500 முறை எழுத வைத்த போலீஸ்
தண்டனை பெற்ற வெளிநாட்டினர்
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நாடு முழுவதும் 8 ஆயிரத்து 447 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி
செய்யபட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 273 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதற்கிடையில், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மாதம் 25-ம் தேதி முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய காரணங்களுக்கு அல்லாமல் மக்கள் யாரும் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். ஆனால், பொதுமக்களில் சிலர் ஊரடங்கை மீறி அத்தியாவசிய
காரணங்கள் அல்லாமல் சாலைகளிலும், பொது இடங்களிலும் சென்ற வண்ணம் உள்ளனர்.
அவ்வாறு ஊரடங்கை மீறுபவர்களை பிடிக்கும் போலீசார் அவர்கள் மீது குற்றங்களுக்கு ஏற்றார்போல் வழக்குகளும் பதிவு செய்து சிறையிலும் அடைக்கின்றனர்.
அதேபோல் சில சமயங்களில் ஊடரங்கை மீறுபவர்களுக்கு போலீசார் நூதனை தண்டனைகளும் வழங்குகின்றனர்.
அவ்வாறான ஒரு சம்பவம் உத்திரகாண்ட் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால், அங்கு ஊரடங்கை மீறியவர்கள் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஆவர்.
தண்டனை பெற்ற வெளிநாட்டினர்
உத்திரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷ் நகரில் பாயும் கங்கை நதிக்கரையோரம் நேற்று போலீசார் ரோந்து பணியில்
ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 10 பேர் ஊரடங்கு உத்தரவை மீறி
கங்கை நதிக்கரையோரம் சுற்றித்திரிந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
அவர்களை பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வெளிநாட்டினர் 10 பேரும் ஊரடங்கை மீறி கங்கையை சுற்றிப்பார்க்க வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, ஊரடங்கை மீறிய வெளிநாட்டினர் 10 பேரிடமும் ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து
விடுங்கள்’ என 500 முறை எழுதச்சொல்லி நூதன தண்டனை வழங்கினர்.
தாங்கள் செய்த தவறை உணர்ந்த வெளிநாட்டினர் அனைவரும் தனித்தனியாக போலீசார் வழங்கிய இந்த தண்டனையை ஏற்ற 500
முறை ‘ நான் ஊரடங்கு விதிகளை பின்பற்றவில்லை, என்னை மன்னித்து
விடுங்கள்’ என எழுதி கொடுத்தனர். இதையடுத்து அந்த வெளிநாட்டினரை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

அமெரிக்காவில் கோர புயல் 7 பேர் பலி – ஒரு லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு
அமெரிக்காவில் கோர புயல் 7 பேர் பலி – ஒரு லட்சம் பேர் மின்சாரம் இன்றி தவிப்பு
அமெரிக்காவில் கொரனோ வேகமாக பரவி மக்களை கொன்று குவித்து
வரும் நிலையில் தற்பொழுது கோர புயல் ஒன்றும் அந்த மக்களை தாக்கியுள்ளது
இதில் இதுவரை ஏழுபேர் பலியாகினர் ,மேலும் பல டசின் பேர் காயமடைந்துள்ளனர்
பல நூறு வீடுகள் காற்றில் உடைக்க பட்டுள்ளதுடன் ,வீட்டு கூரைகள் என்பன அடித்து செல்ல பட்டுள்ளன .
மேலும் இந்த காற்றின் கோர தாக்குதலினால் ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் ,குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர்
Kentucky பகுதியில் 60,000 பேர் மின்சாரம் இன்றி தவிக்கின்றனர் ,அதேபோல
Mississippi பகுதியில் 40,000 பேர் ,அவ்வாறே Georgia பகுதியில் 30,000.பேர் மின்சாரம் இன்றி தொடர்ந்து தவித்து வருகின்றனர்
இரண்டு நாட்களாக இந்த பேரவலம் தொடர்கிறது
மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெறுகின்றன
இவ்வாறு பாதிக்க பட்ட மக்களை விரைந்து மீட்பதில் ,மீட்பு குழுவுக்கு
பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,கொரனோ பீதியே இதற்கு தடையாக உள்ளது
அமெரிக்கா செய்த கொடிய பாவங்களின் அறுவடையையே இந்த பேரழிவுகள்
என மக்கள் பேசு பொருளாக மாறி வருகிறது,பனையால் விழுந்தவனை
மாடேறி மிதித்த கதை போல அமெரிக்கா மக்கள் இப்பொழுது சிக்கியுள்ளனர்

கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது.
காசர்கோடு அருகே கும்பலா பகுதியில் இருந்து வளைகுடா நாட்டில் பணிபுரிந்த நபர் கடந்த மாதம் முதல் வாரம் கேரளா திரும்பினார்.
அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.
அவர் மூலம் அந்த நபரின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கணவன் -மனைவி இருவரையும் பரியராம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் -மனைவி இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கணவரை வீட்டுக்கு அனுப்பிய டாக்டர்கள், அவரது மனைவிக்கு பிரசவ நேரம் நெருங்கியதால் அவரை மட்டும் ஆஸ்பத்திரியில் தங்க வைத்தனர்.
நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை நல்ல உடல் நலத்துடன் 3 கிலோ எடையுடன்
காணப்பட்டது. தற்போது காயும், சேயும் ஆஸ்பத்திரியில் நலமுடன் இருப்பதாக அவருக்கு பிரசவம் பார்த்த அரசு டாக்டர்கள்
தெரிவித்தனர். கொரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருப்பது கேரளாவில் இதுவே முதல் முறை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பெண் கடந்த 10-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டதால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு கரூரைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர்
அல்லது உறவினர்களிடம் இருந்து நோய் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது.
பிரிட்டனில் அபாயம் -தீர்ந்த கொரனோ சாதனங்கள் – வேலைக்கு செல்ல மறுக்கும் மருத்துவ ஊழியர்கள்
பிரிட்டனில் அபாயம் -தீர்ந்த கொரனோ சாதனங்கள் – வேலைக்கு செல்ல மறுக்கும் மருத்துவ ஊழியர்கள்
பிரிட்டனில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக PPE ,
முக கவசங்கள் ,கையுறைகள் ,மற்றும் கொரனோவின் முன் தடுப்பு பாதுகாப்பு பொருட்கள் முடிவுற்றுள்ள நிலையில் மருத்துவ
தாதிமார்கள் ,மருத்துவர்கள் ,மற்றும் அம்புலன்ஸ் சாரதிகள் போன்றவர்கள பணிக்கு செல்ல தயக்கம் காட்டி வருகின்றனர் .
இவ்வாறு பலநூறு ஊழியர்கள் பணிக்கு செல்ல மறுத்து வீட்டில் தங்கியுள்ளனர் ,தமக்கு உரிய பாதுகாப்பு அங்கிகள் ,கவசங்கள்
இல்லாத நிலையில் தாம் ஆபத்தான நோயாளர்களுடன் பணியில் ஈடுபட முடியாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்
விரைவாக வினியோகத்தை மேற்கொள்ளும் படி கேட்ட பொழுதும் ,குறித்த பொருட்களுக்கு தட்டு பாடு நிலவுவதால் அரசிடம்
சேமிப்பில் ஏதும் இல்லை ,அதனால் தற்பொழுது பேராபத்து நீடிக்கிறது
இதனால் மக்கள் பெரும் பீதியில் , உறைந்துள்ளனர் ,நோயால் பாதிக்க படுபவர்களுக்கு பனடோல் மாத்திரைகளே வழங்க படுகின்றன ,
எனினும் இந்த மாத்திரைகளினால் எவ்வித பயனும் இல்லை எனவும் மருத்துவமனை செல்லும் நோயாளர்கள் அங்கேயே இறக்கும் நிலை
ஏற்படுவதாக பாதிக்க பட்டு சிகிச்சை பெற்று வரும் தமிழர்கள் ,தமது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர்
எனவே மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் ,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம் ,அரசு இதனை தொடர்ந்து கூறிய வண்ணம் உள்ளது

கொரனோ வேளை கொண்டாட்ட நிகழ்வு- உள்ளே புகுந்து மக்களை சூட்ட நபர் -பலர் காயம்
கொரனோ வேளை கொண்டாட்ட நிகழ்வு- உள்ளே புகுந்து மக்களை சூட்ட நபர் -பலர் காயம்
அமெரிக்கா கலிபோனியா பகுதியில் கொண்டாட்ட நிகழ்வு ஒன்றை நடத்தியுள்ளனர் ,
பல நண்பர்கள் உறவினர்கள் இணைந்தும் இந்த கலியாட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர் .
இதனை அவதானித்த நபரை ஒருவர் துப்பாக்கியை எடுத்து சென்று அந்த
பாட்டியில் கலந்து கொண்டவர்கள் மீது திடீர் துப்பாக்கிக்கு சூட்டை நடத்தினார்
இதில் ஆறுபேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,
கொரனோ நோயால் மக்கள் பல்லாயிர கணக்கில் இறந்த வண்ணம் இருக்க ,
உங்களுக்கு கொண்டாட்ட நிகழ்வா தேவை என கத்தியவாறே சுட்டு தள்ளியுள்ளார் இந்த மனிதர்
மக்களை வீடுகளை விட்டு வெளியி செல்ல வேண்டாம் எனவும் ,ஒன்று
கூட வேண்டாம் என அரசு பலமுறை வேண்டுதல் விடுத்து வந்த பொழுதும்
அதனை செவிமடுக்காது அலட்சியம் செய்து மக்கள் இவ்வாறான குதூகல
நிகழ்வுகளை வைத்து வருவது குறிப்பிட தக்கது, இப்போ சொல்லுங்க இந்த நபர் செய்த செயல் சரியா ..? தவறா ..?

கொரனோவால் 108,000 பேர் பலி – 17 லட்சம் பேர் பாதிப்பு
கொரனோவால் 108,000 பேர் பலி – 17 லட்சம் பேர் பாதிப்பு
உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
சிக்கி இதுவரை ஒரு லட்சத்து எட்டாயிரம் பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் பதினேழு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
இந்த நோயால் அதிகம் பாதிக்க பட்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடம்
பிடித்துள்ளது ,இங்கு இதுவரை இரு பதாயிரம் பேர் பலியாகியுள்ளனர் ,நான்கு லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர்
அதனையே அடுத்து இத்தாலி ,பிரான்ஸ்,ஸ்பெயின் ,பிரிட்டன் இடம் பிடித்துள்ளது ,
தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் செல்கின்றன

நான் சாக போகிறேன் பிள்ளைகளுடன் இறுதியாக கதைத்த தாய் -கொரனோவால் மரணம்
நான் சாக போகிறேன் பிள்ளைகளுடன் இறுதியாக கதைத்த தாய் -கொரனோவால் மரணம்
பாகிஸ்தானை சேந்த பத்தொன்பது வயதுடைய தாய் ஒருவர் கொரனோ
நோயால் பாதிக்க பாட்ட நிலையில் ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார் ,
ஸ்கைப்பில் பிள்ளைகளுடன் உரையாடிய இவர் தான் திரும்பி வரமாட்டேன் என நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார் .
இவ்வாறு அவர் கூறியதற்கு கணவன் ,பிளளைகள் பேசியுள்ளனர்
ஆனால் அவர் கூறியது போலவே திங்கட்கிழமை மரணமானார்
குறித்த பெண்ணின் இந்த உரையாடல்கள் சமூக வலைத்தளங்களில்
வைரலாகி வருகிறது ,
சீன அந்நாட்டு விமானத்தை இவர் பயன் படுத்தியதால் இந்த நோயானது பரவியதாக
கணவன் தெரிவித்துள்ளார் கொரனோ நோயினால் பாதிக்க பட்டவர்கள் மன உணர்வுகள்
அதனை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பது இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன

இத்தாலி மே மாதம் வரை முற்றாத அடித்து பூட்டு – அரசு அறிவிப்பு
இத்தாலி மே மாதம் வரை முற்றாத அடித்து பூட்டு – அரசு அறிவிப்பு
இத்தாலியில் வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி
மக்கள் பலி எண்ணிக்கை அதிகரித்த்து வருகிறது ,இந்த நிலையில் மக்களை அந்த
நோயில் இருந்து காப்பாற்றும் நோக்குடன் எதிர்வரும் வைகாசி மாதம் வரை
லக் டவுன் முழுமையாக அடித்து பூட்டும் நகர்வு தொடரும் என அந்த நாட்டு அரச அதிபர் அவசர அறிவிப்பை மேற்கொண்டுள்ளார்
நாள்தோறும் பலநூறு மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,நோயினை கட்டு படுத்த முடியாது அரசு தினறி வருகிறது
மருத்துவர்கள் தாதியர் உள்ளிட்ட 140 பேர் இதுவரை பலியாகியுள்ளனர் என்பது இங்கே சுட்டி காட்ட தக்கது








