Tag: பிள்ளை
யானைகளால் பாதிக்கும் பிள்ளைகளுக்கு நிதியுதவி
யானைகளால் பாதிக்கும் பிள்ளைகளுக்கு நிதியுதவி
யானைகளால் பாதிக்கும் பிள்ளைகளுக்கு நிதியுதவி ,காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அன்றாட நிகழ்வாக மாறியிருப்பதால் பாதிப்பை எதிர்கொண்டிருக்கும் குடும்பங்களிலுள்ள பிள்ளைகளின் கல்விச்
செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதற்கான ஊக்குவிப்பாக நிதியுதவியை வழங்க ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க
தலைமையில் கூடிய ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாகச் சபை தீர்மானித்துள்ளது.
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதால் பாதிக்கப்பட்ட, காயங்களுக்கு உள்ளாகியவர்கள் இருக்கின்ற குடும்பங்களுக்கு இதன்போது
முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவதால் சொத்துச் சேதங்களை எதிர்கொண்ட குடும்பங்களின் பிள்ளைகளும் இதற்காக விண்ணப்பிக்கலாம்.
பிரதேச செயலாளரின் மேற்பார்வைக்கு அமைய நிதியுதவிக்கு தகுதியுடைய குடும்பமாக இருக்க வேண்டும் என்பதுடன், 1 ஆம் வகுப்பு தொடக்கம் க.பொ.த
சாதாரண தரம் அல்லது க.பொ.த உயர்தரம் வரையில் கல்வி பயிலும் பிள்ளைகள் இருக்கின்ற குடும்பமாக இருப்பதும் இந்த நிதியுதவிக்கான தகுதியாக கருதப்படும்.
2025-01-01 திகதி அல்லது அதற்கு பின்னரான தினங்களில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைந்த காரணத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பமாக இருக்க வேண்டும் என்பதோடு, தற்போதும் ஜனாதிபதி நிதியத்தினால்
செயற்படுத்தப்படும் க.பொ.த உயர்தர புலமைபரிசு வேலைத்திட்டத்தின் பயனாளியாக இல்லாதிருப்பதும் தகுதியாக கருத்தப்படும்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக 1 ஆம் வகுப்பு முதல் 11 வரையில் கல்வி பயிலும் தெரிவு செய்யப்பட்ட பிள்ளையொன்றுக்காக 3,000 அடிப்படையில் அதிகபட்சமாக 12 மாத காலத்திலற்கும், 12 மற்றும் 13 வகுப்புக்களில் கல்வி
கற்கும் மாணவர்களில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5,000 அடிப்படையில் அதிகபட்சமாக 12 மாத காலத்திற்கும் 2025 ஏப்ரல் 01 ஆம் திகதி முதல் நிதியுதவி வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி தமது பிரதேச செயலாளர் பிரிவுகளில் தகுதியை பூர்த்தி செய்த குடும்ப பிள்ளைகளின் தகவல்களை பெற்றுக்கொண்டு தமது தனிப்பட்ட மேற்பார்வை மற்றும் பரிந்துரையுடன் குறித்த விண்ணப்பங்களை
தாமதமின்றி ஜனாதிபதி நிதியத்திற்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை
11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை
11 பிள்ளைகளின் தந்தை அடித்துக்கொலை ,மூன்று முதல் பதினைந்து வயது வரையான பதினொரு பிள்ளைகளின் தந்தை (41 வயது) மனைவியின் சகோதரனால் அடித்துக் கொல்லப்பட்டதாக றக்வான பொலிஸார் தெரிவித்தனர்.
றக்வான ரங்வலதென்ன தோட்டத்தில் வசித்து வந்த செல்லப்பன் பாலகிருஷ்ணன் என்ற தோட்ட தொழிலாளியே கடந்த 04 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவருக்கு இரண்டு மனைவிகளும், ஒரு மனைவிக்கு ஏழு பிள்ளைகளும், மற்றைய மனைவிக்கு நான்கு பிள்ளைகளும் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்தவர் குடிபோதையில் தகராறு செய்த போது, இறந்தவர் மனைவியின் சகோதரர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கானவர் சுமார் ஒன்றரை மணிநேரம் இரத்தம் கசிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் உள்ளூர்வாசிகள் பலர் காயமடைந்த நபரை றக்வான மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கிருந்து கஹவத்தை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சுமார் பத்து நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் 4ஆம் திகதியன்று அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலியா
சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலியா
சத்திரசிகிச்சை தவறால் மூன்று பிள்ளைகளின் தந்தை பலியா ,கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போது மெதிரிகிரியவில் வசித்து வந்த மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தமைக்கு சத்திரசிகிச்சை செய்த வைத்தியரே பொறுப்பேற்க வேண்டுமென உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் துண்டிக்கப்பட்ட நரம்பு காரணமாக அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டதால் குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர் ஒருவர் தெரிவித்த போதிலும், நரம்பில் ஏதோ குத்தப்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சத்திரசிகிச்சை செய்த வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மெதிரிகிரியவில் வசித்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 41 வயதான சஞ்சன ராஜபக்ஷ, விபத்திற்குள்ளானார்.
இதில் இடது கையில் நசுங்கியதால், அது உணர்ச்சியற்று போனதால் அவரின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதற்கு சிகிச்சை எடுப்பதற்காக கண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையொன்றுக்கு சென்று மருத்துவர் ஒருவரை சந்தித்த போது நரம்பு முறிவு ஏற்பட்டுள்ளதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்தால் சுமார் 15 லட்சம் ரூபாய் செலவாகும் என்றும், அரசு மருத்துவமனையில் செய்தால் நீண்ட நாள் காத்திருப்போர் பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் மருத்துவர் குறிப்பிட்டிருந்தார்.
நிதி நெருக்கடி காரணமாக கடந்த ஜூலை மாதம் 21ஆம் திகதி உரிய சத்திரசிகிச்சைக்காக அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதியானார்.
பின்னர் கண்டி தனியார் வைத்தியசாலையில் சஞ்சனவாவை பரிசோதித்த வைத்தியரால் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி, மூன்று பிள்ளைகளின் தந்தையான இவருக்கு கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அறுவைசிகிச்சைக்குப் பிறகு, அவர் சுயநினைவை இழந்ததால், அவரது மனைவி இது குறித்து மருத்துவரிடம் கேட்டுள்ளார்.
சஞ்சனவின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து மூளை இறக்கத் தொடங்கியதால், நோயாளியைக் காப்பாற்ற முடியாததால், சுவாசக் கருவியை அகற்றியதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
வைத்தியரின் அலட்சியத்தால் தனது கணவர் உயிரிழந்துள்ளதாக சஞ்சனவின் மனைவி கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
சஞ்சனவின் பிரேத பரிசோதனை அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில், அவரது உடலை அடக்கம் செய்யுமாறு மரண விசாரணை அதிகாரி அறிவித்துள்ளார்.
இது குறித்து விசாரிக்க கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயற்சித்த போதிலும் அது தோல்வியில் முடிந்தது.
சிந்துஜா அவருடைய பிள்ளை
சிந்துஜா அவருடைய பிள்ளை
சிந்துஜா அவருடைய பிள்ளை ,பெரும்பாலும் சில விடயங்களை நான் கண்டும் காணாதுபோன்று கடந்து போவது வழக்கம்.
கீழ்த்தரப்பட்ட இணையத்தளமானது தமிழ் முஸ்லிம் பேசும் மாவட்டத்தில் முக்கியமாக வடக்கு கிழக்கிலே ஒரு அரசியல் கட்சியை சார்ந்தது என்பதை இந்த இணையதளத்தினது கடந்த பகுதிகளை நீங்கள் பார்க்கும் போது தெளிவாக தெரிந்திருக்கும்.
வைத்தியர் செந்தூரன் அவர்கள் தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் ஜனாதிபதியின் ஊட்டலின் அடிப்படையில் முக்கியமாக வடக்கு மாகாணத்திலே நாங்கள் யாரை பிழை விட்டு இருக்கிறார்கள் என்று சொல்லுகிறோமோ அந்த
வைத்தியர்கள் சார்ந்த மற்றும் வைத்தியர் செந்தூரன் தனக்கென ஒரு பரப்புரை செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை இவர்கள் திட்டமிட்ட
ரீதியில் முதலே வகையாக திட்டமிட்டு பனர்கள் பிரிண்ட் பண்ணப்பட்டு வைத்திய செந்தூரன் அவர்கள் பச்சை கலர் உடுப்புடன் அழைக்கப்பட்டு அங்கே ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டது.
அதற்கு முக்கியமான சூத்திரதாரி வடக்கு மாகாணத்தில் தற்போது வடக்கு மாகாண சுகாதார துறையில் முக்கிய பதவி வைக்கும் ஒரு சிங்கள வைத்தியரும் மற்றும் சம்பந்தப்பட்ட சிந்துஜா இறந்த வைத்தியசாலையில் வேலை செய்கின்ற அதற்கு
சார்பாக இருந்த சில பல ஊழியர்கள் மற்றும் முதலில் வைத்தியசாலை பக்கம் என்று இருந்து மறுபடியும் கழுதை போன்று குத்துக்கரணம் அடித்த பொது அமைப்புகளின் தலைவர் சிவகரன் ஆகியோர்களுக்கு திட்டமிட்ட ரீதியில் தாங்கள்தான் இந்த
போராட்டத்தை செய்கிறோம் என்றும் அதற்குரிய கிரெடிட் அல்லது பலன்களை தங்களது பேரில் மாற்றிக் கொள்ள முனைகின்ற சம்பந்தப்பட்ட ஒரு சில அரசியல் சார்ந்த புள்ளிகளும் அவர்களுடைய அடியாட்களும் விசிறிகளுமே இந்த திட்டத்தை
நன்கு திட்டமிடாமல் (திட்டமிட்டதென நினைத்துக் கொண்டு) செய்திருந்தார்கள்.
பொதுமக்களுக்கு இது சம்பந்தமான நன்கு தெளிவான அடிப்படை அறிவு உண்டு என்பதை இவர்கள் ஒரு முட்டாள்கள் சமூகம் போதிக்கின்றது போன்று ஒரு மன்னார்
என்ற ஒரு படித்த சமூகத்தை ஒரு காலத்திலேயே வடக்கு கிழக்கிலே மன்னார் என்று சொன்னால் நடுங்கும் அளவுக்கு கல்விமான்களை கொண்டிருந்த ஒரு சமூகத்தை திட்டமிட்ட ரீதியில் இனரீதியில் அடக்கி ஒடுக்கி அவர்கள் செய்கின்ற இந்த கூத்தானது
தமிழ் மக்களினுடைய இனத்தை இருப்பை கேள்விக்குறியாக்குவதும் மேலும் தமிழ் மக்களுடைய குரலை அரசியல் ரீதியாக ஒடுக்குவதற்குமே இவர்கள் இந்த திட்டமிட்ட செயலை செய்கிறார்கள்.
மிகவும் கவலைக்குரிய விடயம் என்றால் இதில் நாங்கள் சம்பந்தப்படாத ஒரு சில சக்திகள் கூட்டாக வேலை செய்கின்றன.
ஆகவே பொதுமக்கள் வைத்திய செந்தூரனோ அல்லது சிவகரனோ செய்கின்ற ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக எதையுமே செய்ய மாட்டார்கள் என்பது எனது கணிப்பு.
ஆனாலும் உணர்ச்சிவசப்பட்டு அவ்வாறான போராட்டங்களில் இணையும் போது நன்மதிப்பு மிக்க நீதிமன்றத்தை நாங்கள் அவமதிப்பதாகவும் அதுமட்டுமல்ல இந்தப் போராட்டத்தை பல திசைக்கு இழுத்து போராட்டத்தை மழுங்கடிக்கின்ற அரசியல்
லாபம் தேடுகின்ற செய்திகளை பொதுமக்கள் தெளிவாக அறிந்து கொண்டுள்ளார்கள் என்பதை இந்த கழுதைகள் அறிந்து கொள்ளாவிட்டால் அதற்கு பொதுமக்களாகவும் பொதுமக்கள் சார்பாகவும் நான் பொறுப்பு அல்ல.
பொறுப்புத் திறப்பு.
முட்டாள்களுக்கானது.
சம்பந்தப்பட்ட சிந்துஜா அவருடைய பிள்ளை சம்பந்தமான முழு பொறுப்பும் இதுவரை இவர்களுக்கு இருந்தும் நான் வைத்தியசாலையை நோக்கி வரும் வரை இவர்கள் எதுவுமே செய்யவில்லை என்பது பொதுமக்களுக்கு நன்றாகவே தெரியும்
இவர்களுடைய தெருக்கூத்துகளை தெருக்கூத்துகளாக வீட்டில் இருந்து சாப்பிட்டுவிட்டு நன்றாக அனுபவிப்போம் இப்படிக்கு உங்கள் அன்பு மகன் மன்னாரின் மைந்தன் இராமநாதன் அர்ச்சுனா.
இவ்வாறு அர்ச்சுனா அதனது முகநூலில் பதிவிட்டுள்ளார் .
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

பொலிசில் 3பிள்ளைகளை ஒப்படைத்த தாய்
பொலிசில் 3பிள்ளைகளை ஒப்படைத்த தாய்
மூன்று பிள்ளைகளை பொலிசில் ஒப்படைத்த தாய் ,பொலிசில் 3பிள்ளைகளை ஒப்படைத்த தாய் ,இலங்கை பகுதியில் 3 பிள்ளைகளை பொலிசில் ஒப்படைத்துவிட்டு ரயிலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்ய முயன்ற தாய் ஒருவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் .
ரயில்வேயில் பணிபுரிந்து வருகின்ற கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் தொடர்ந்து இடம் பெற்று வந்த வாய் தர்க்கம் முற்றி மன உளைச்சலுக்கு ஆளான பெண் மூன்று பிள்ளைகளையும் போலீசாரிடம் ஒப்படைத்துவிட்டு
அவர்களை திட்டிவிட்டு ரயிலுக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ளும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டதாகவும்
,அதை அறிந்து கொண்டு சுதாரித்துக்கொண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி அழைத்துச் சென்று விசாரித்த பொழுது மேற்படி விடையங்கள் அம்பலத்துக்கு வந்தன.
பிள்ளைகளுக்கு உணவளித்து பாதுகாப்பு
அதனை அடுத்து மூன்று பிள்ளைகளுக்கு உணவளித்து பாதுகாப்பு போலீசார் மூலமும் பிள்ளைகளை தந்தை இடம் ஒப்படைத்தனர்.
தாய் மனநிலைக்கு பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை அழைத்து மருத்துவமனையில் ஒப்படைத்து அவருக்கு சிகிச்சை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மன உளைச்சலுக்கு ஆளான நிலையில் அதிகமாக பிள்ளைகளை திட்டுதல் கணவனை திட்டுதல் போன்ற நடவடிக்கையில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார் .
அது ஒரு உளவியல் நோயாக காணப்படுவதாகவும் மன உளைச்சலுக்கு உள்ள நிலையில் அவர் அவ்வாறு செய்து வந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர் .
இதனால் கணவன் மனைவிக்கு இடையில் இரண்டு நாட்களாக இவ்வாறு பிரச்சனை இடம்பெற்று வந்த பொழுது கணவன் தனக்கு தொல்லை தருகிறார்.
அவரால் வாழ முடியாது என கூறிவிட்டு தற்கொலை செய்ய முயன்ற பொண்ணையே தற்பொழுது போலீசார் கைது செய்தனர் .
நான்கு வயதிலிருந்து எட்டு வயதுடைய 3 பேராளிகள் இரண்டு ஆண் இருக்கிறார்கள் மற்றும் ஒரு பெண் பிள்ளை உள்ளடங்களாக மூன்று குழந்தைகளை ஒப்படைத்து விட்டே அவர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார் .
படுகொலை செய்ய இயலாது
என்னிடம் இந்த தாயார் தனது பிள்ளைகளை அவர்களை தனது தனுடன் அழைத்துச் சென்று அவர்களையும் படுகொலை செய்ய இயலாது இவ்வாறு
ஒப்படைத்துள்ள செயல் மக்களுக்கு மர நிம்மதியை தருவதாக பல மக்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை எழுதி வருகின்றனர் .
குடும்பங்களில் இயல்பாக பிரச்சினைகள் எழுவது வழமைதான் , அதனை எவ்வாறு சரி செய்து பயணிக்க வேண்டும் என்கின்ற நடவடிக்கையில் .
புதிய திட்டங்களை நாங்கள் தயாரித்து வைத்து அதற்குள்ளாக பயணித்தால் இதிலிருந்து நாம் இலகுவாக விடுதலை பெற்று விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்
வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்
வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம் .வவுனியாவில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
பாடசாலைக்கு சென்ற மாணவர்களை அழைத்துச் சென்ற இளம் தாய் ஒருவர் தற்பொழுது பிள்ளைகளுடன் காணாமல் போய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய இளம் தாயும் அவரது 11 மற்றும் 8 வயது உடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என அவர்கள் குடும்பத்தினால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
கோவிலா புதுக்குளம் பகுதி குடும்பம் மாயம்
கோவிலா புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி குடும்ப உறவுகளே காணாமல் போயிருந்தார் .
இவர்கள் கடத்தப்பட்டார்களா, அல்லது கடத்தி படுகொலை செய்யப்பட்டார்களா ,அல்லது வேறு இடங்களுக்கு ஏதும் சென்றார்களா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
இலங்கையில் காணாமல் போகின்ற இவ்வாறான பல நபர்கள் இறுதியில் சடலங்கலாக மீட்க கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
கடத்திச் செயல்படுவது மற்றும் ,வாகனங்கள் ஊடாக அவர்களை அடித்து விபத்தில் இறந்ததாக தோற்றப்பட்ட ஏற்படுத்தி, படுகொலை செய்வதற்கான நடவடிக்கைகள் அங்கு அதிகமாக காணப்படுகின்றன.
அவ்வாறன நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும் தாயும் காணாமல் போயுள்ளதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களையம் வவுனியாவில் காணவில்லை
32 வயதுடைய இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களுமே காணாமல் போய் உள்ளனர்.
காணாமல் போன இவர்கள் சம்பவம் அந்த பாவனையா பகுதி மக்கள் மத்தியில் வேகமாக பரவியது .
அடுத்து மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் காணப்படுகின்றது .
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இலங்கையின் போலீசார் மற்றும்குற்றவியல் தடுப்பு பிரிவு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இவர்கள் பாடசாலை சென்று வந்த பகுதியில் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் சோதனை செய்யப்பட்டு அதிலிருந்து தடயங்கள் கிடைக்கிறதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன .
இலங்கையில் தொடராக இவ்வாறு காணாமல் போன சம்பவங்கள் அதிகரித்து வருவதும்,
வீதி ஓரங்களில் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்டவர்களில் இருந்து நாள்தோறும் சடலங்களும் எடுக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இலங்கை செல்லும் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது .
காணாமல் போன இவர்கள் பத்திரமாக கண்டுபிடிப்பார்களா ,அல்லது அவர்கள் சுடலங்களாக மீட்கப்படுவார்களா என்பது மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக காணப்படுகின்றது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

பிள்ளைகளை துன்புறுத்திய தாய் கைது
பிள்ளைகளை துன்புறுத்திய தாய் கைது
பிள்ளைகளை துன்புறுத்திய தாய் கைது ,மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 11 வயது சிறுவனை தலைகீழாக கட்டி தொங்கவிட்டு கம்பால் அடித்து சித்திரவதை செய்ததுடன்
இரண்டரை வயது ஆண் குழந்தையை அடித்து துன்புறுத்திய 28 வயதுடைய தாய் ஒருவரை நேற்று (28) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்களையும் வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
தமிழரான குறித்த தாயார் திருமணம் முடித்த பின்னர் கணவரைவிட்டுவிட்டு அவருக்கு பிறந்த குழந்தையுடன் முஸ்லீம் மதத்திற்கு மதம்மாறி முஸ்லீம் நபர் ஒருவரை திருமணம் முடித்துள்ளார்.
சிங்களவர் ஒருவரை திருமணம் முடித்து
அதன்பின்னர் அவரை விட்டுவிட்டு புத்தளம் பகுதியிலுள்ள சிங்களவர் ஒருவரை திருமணம் முடித்து அவருக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை
இருக்கும் நிலையில், அவரையும் விட்டுவிட்டு இரு பிள்ளைகளுடன் மீண்டும் ஏறாவூர் சதாம் உசைன் கிராமத்தில் வந்து தங்கி வாழ்ந்து கொண்டுவருகின்றார்.
இந்த நிலையில், கடந்த ஏப்பிரல் மாதம் தனது 11 வயதுடைய மூத்த பிள்ளை புகைத்தலில் ஈடுபட்டார் என அந்த சிறுவனை பிடித்து மரம் ஒன்றில் தலைகீழக கட்டி தொங்க விட்டு கம்பால் தாக்கி சித்திரவதை செய்துள்ளார்.
அதேவேளை இரண்டாவது, இரண்டரை வயது மகனையும் அடித்து துன்புறுத்தி வருவதாக அந்த பிள்ளையின் தகப்பனான புத்தளத்தைச் சேர்ந்தவருக்கு
தெரியவந்ததையடுத்து அவர் உடனடியாக ஏறாவூருக்கு சென்று தாயாரிடம் தனது மகனை தருமாறு கேட்ட நிலையில், சிறுவனை தரமுடியாது என அவர் மறுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த தந்தை, பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து சம்பவதினமான நேற்று இரவு பொலிசார் குறித்த தாயாரின் கையடக்க தொலைபேசியை பரிசோதித்த போது, இரு சிறுவர்களை துன்புறுத்தும் போது எடுக்கப்பட்ட வீடியோக்களை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவரை கைது செய்தனர்.
பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணை
பின்னர் இரு பிள்ளைகளையும் மீட்டு வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிசாரின் ஆரம்ப கட்டவிசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
Featured
பரந்தன் பகுதியில் இரண்டு பிள்ளை தந்தை சடலமாக மீட்பு
பரந்தன் பகுதியில் இரண்டு பிள்ளை தந்தை சடலமாக மீட்பு
இரண்டு பிள்ளை தந்தை நீர்ப்பாசன வாய்க்காலில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய பரந்தன் பகுதியில் நீர்ப்பாசன வாய்க்காலில் இவ்வாறு குறித்த நபர் அடையாளம் காணப்பட்ட நிலையில் பொலிசாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் பகுதியை சேர்ந்த பெனடிற் பெனிஸ் நிமலன் எனும் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன
Featured
மனைவி 3 பிள்ளைகளை சுட்டு கொன்று கணவன் தற்கொலை
மனைவி 3 பிள்ளைகளை சுட்டு கொன்று கணவன் தற்கொலை
அமெரிக்கா வடக்கு கரோலினா பகுதியில் மனைவி மற்றும் மூன்று
பிள்ளைகளை கணவன் சுட்டு கொன்றுள்ளார் ,
அதன் பின்ன தன்னை தானும் சுட்டு தற்கொலை புரிந்துள்ளார் .
இந்த தற்கொலைக்கான காரணம் தெரிய வரவில்லை .
போலீஸின் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
கடந்த வாரமும் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் ,
சுட்டு கொலை செய்ய பட்டு இருந்தமை குறிப்பிட தக்கது.
துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்
துருக்கியில் பிள்ளை பெற்ற பிரிட்டன் பெண்ணுக்கு 50 ஆயிரம் பவுண்டு கட்டணம்
துருக்கி ,பிரிட்டனில் இருந்து துருக்கி நாட்டுக்கு உல்லாச பயணம் மேற்கொண்ட பிரிட்டன் பெண் அங்கு குழந்தை பெற்றார் .
இவரது மருத்துவ அனுமதி கட்டணம் 4500 பெறப்பட்டுள்ளது .
அதன் பின்னர் பிள்ளை பேறு மற்றும் தாயார் பராமரிப்பு மற்றும் மருத்துவ செலவுகள் உள்ளடங்களாக ஐம்பதாயிரம் பவுண்டுகள் கட்டணம் குவிந்துள்ளது.
இதனால் குறித்த தம்பதிகள் என்ன செய்வது என தெரியாதது திண்டாடி வருகின்றனர் .
உல்லாச பயணம் சென்ற கர்ப்பிணி அங்கு குழந்தை பெற்றவுள்ளதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது .
மேலு இவருக்கு மருத்துவக்காப்புறுதி வழங்கிட காப்புறுதி நிறுவனம் மறுத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியள்ளது.
குறித்த தம்பதிகள் மருத்துவ கட்டணம் செலுத்திட மக்களிடம் பணம் சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது .
பிள்ளை இல்லையா ..? அப்படின்னா இது தான் காரணம்
பிள்ளை இல்லையா ..? அப்படின்னா இது தான் காரணம்
உடலில் தேவைக்கு அதிகமாக கொழுப்பு சேர்வதற்கு சோம்பல், தவறான உணவுப்பழக்கம், உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தைராய்டு பிரச்சினையும் ஒரு காரணம்
என்று பரவலாக சொல்லப்படுகிறது. உண்மையில் தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் உடலில் கொழுப்புச்சத்து சேர்வது இல்லை.
ஆனால், நீர் அதிகமாகச் சேர்க்கிறது. அந்த நீர்தான் உடலை பருமனானதுபோல் காட்டுகிறது.
தைராய்டு பிரச்சினைக்காக தைராக்சின் சிகிச்சையைத் தொடங்கியதும், உடலில் இருந்து நீர் வேகமாக வெளியேறும். சராசரியாக 10 லிட்டர் நீர் வெளியேற்றப்பட்டால், உடல் எடை 10 கிலோ
அளவுக்கு குறையும். எனவே, உடல் பருமனுக்கு தைராய்டு மட்டுமே காரணம் என்று நினைப்பது தவறு. அதே நேரத்தில் கொழுப்புச் சத்துக் காரணமாக உடல் பருமன் ஏற்பட்டவர்களுக்கு உடல்
பிள்ளை இல்லையா ..? அப்படின்னா இது தான் காரணம்
எடை அதிகமாக இருக்கும். அவர்களுக்கு தைராய்டு உள்ளதாக நினைத்து தைராக்சின் உட்பட மருந்துகளை கொடுத்து உடல் எடையைக் குறைக்க முயல்வது தவறான மருத்துவ முறையாகும்.
அதேபோல் குழந்தையின்மைக்கும் தைராய்டு காரணமாக சொல்லப்படுகிறது. சில பெண்களுக்கு குழந்தையின்மை என்பது இயல்பானதாக இருக்கும். எனினும் தைராய்டு பிரச்சினையால் ஒரு
பெண்ணுக்கு தாய்மை அடைவதில் சிக்கல் இருக்குமானால் அவற்றை உரிய பரிசோதனை மூலம் உறுதி செய்யலாம். தைராய்டு மிகுதியாகவோ, குறைவாகவோ அல்லது தைராய்டு எதிர்
அணுக்களால் அந்தப் பெண் பாதிக்கப்பட்டது உறுதியானால் அவருக்கு தகுந்த சிகிச்சை வழங்கி இந்த பிரச்சினையை சரிசெய்து விடலாம். அந்த பெண் தாய்மை அடையவும் முடியும். இதற்கு
மாறாக சில பெண்களுக்கு உடல்நலக் குறைப்பாட்டால் மகப்பேறின்மை பிரச்சினை இருக்கும்.
இதுபோன்ற பெண்களுக்கு தைராய்டு சிகிச்சை செய்வதில் பலனில்லை என்கிறார்கள், மருத்துவர்கள்.
தாயை சுட்டு கொன்ற மகள் – அமெரிக்காவில் நடந்த பயங்கரம்
அமெரிக்கா கரோலினா பகுதியில் இருபத்தி ஐந்து வயதுடைய தாய் ஒருவரை அவரது பிள்ளை சுட்டு கொன்ற பெரும் துயர் இடம் பெற்றுள்ளது
தாயை சுட்டு கொன்ற பிள்ளை
சம்பவ தினம் அன்று அப்பார்ட்மெண்ட் பகுதியில் உள்ள வீடொன்றில் ஐந்து பிள்ளைகள் இருந்துள்ளனர் ,
இதில் ஒரு பிள்ளை தாயின் பையை சோதனை செய்துள்ளது ,அப்பொழுது அதற்குள் செமி ரக கைதுப்பாக்கி ஒன்று இருந்துள்ளது
,அவ்வளவு தான் அதனை எடுத்து லோட் பண்ணி தாயினை சுட்டுள்ள்ளார் ,
இதில் தாயார் சம்பவ இடத்திலேயே பலியானார் , மேலும் ஒரு குழந்தையும் படுகாயமடைந்துள்ளது ,எனினும் உயிர் ஆபத்து இல்லா தப்பித்துள்ளது ,
,இறந்தவர் ஐந்து பிள்ளைகளின் தாய் என பொலிசார் தெரிவித்துள்ளனர்
அலட்சியதால் நடந்த பரிதாபம்
சிறுவர்கள் முன்பாக துப்பாக்கியை பாதுகாப்பாக வைக்க தவறியதன் விளைவே இந்த படுகொலை சம்பாவத்திற்கு காரணாமாக அமைந்துள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்
இரண்டாவது பிள்ளை பிறக்க போகிறது -இளவரசர் கரி மேகன் அறிவிப்பு
இரண்டாவது சிங்க குட்டி பிறக்க போகிறது கரி மேக்கன் தம்பதிகள் இணைந்து அறிவிப்பு- அரண்மனை வாயில் அலறுமா ..?இல்லை பதறுமா ..?
இளவரசி மேக்கன் கர்ப்பம்
பிரிட்டன் பட்டது இளவரசர் பதிவு திறந்த கரி மற்றும் அவரது மனைவி மேக்கன் ஆகியோர் இணைந்து புதிய அறைவிப்பை
வெளியிட்டுள்ளனர் ,அதில் தமக்கு இரண்டாவது குழந்தை கிடைக்க உள்ளதாகும் என்ற மகிழ்ச்சி செய்தியே
பிரிட்டன் வெளியேற்றம்
பிரிட்டனில் இளவரசர் பட்டத்தை திறந்து சென்றதன் பின்னர் இந்த தம்பதிகிகள் அறிவித்துள்ள வாரிசு அறிவிப்பு இதுவே முதலாகும்
,தாய் டயானா கொலை திட்டமிட்டு நடத்த பட்ட ஒன்று என கருதும் கரி
அரச பட்டத்தை தூக்கி எறிந்து செல்ல காரணமாக அமைந்ததான கருத்துக்கள் உலாவ தான் செய்கின்றன
ஜெர்மனியில் வீதியில் பிள்ளை பெற்ற – வீடற்ற இளம் பெண்
ஆளை கொல்லும் குளிருக்குள் அதி காலை வேளை பிள்ளை பெற்ற இளம் பெண் -பிறந்த பிள்ளையை பையில் சுற்றி வெப்பம் ஊட்டிய தாய் கண்ணீர் சம்பவம்
ஜெர்மன் Nuremberg பகுதியில் அதி காலை ஐந்து மணியளவில்
இருபது வயது இளம் வீடற்ற பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தார்
பிறந்த சிசுவை தான் வைத்திருந்த பையொன்றினால சுற்றி
பாதுகாத்த படி , ஐந்து மைனஸ் குளிர் வெப்ப நிலைக்குள் உறங்கியபடி இருந்துள்ளார்
மேற்படி சம்பவத்தை கண்ணுற்றவர்கள் அம்புலன்சுக்கு வழங்கிய
தகவலை அடுத்து தாயும் ,சேயும் மீட்க பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
உலக ஊடகங்களில் வெளியான இந்த செய்தியை அடுத்து அந்த இளம்
பெண்ணுக்கு உதவிட உலகில் பல மக்கள் முன்வந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
கேரளாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதையடுத்து குழந்தை நலமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
கேரளாவில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது
இந்தியாவில் முதல் கொரோனா பாதிப்பு கேரளா மாநிலத்தில் தான் கண்டறியப்பட்டது.
காசர்கோடு அருகே கும்பலா பகுதியில் இருந்து வளைகுடா நாட்டில் பணிபுரிந்த நபர் கடந்த மாதம் முதல் வாரம் கேரளா திரும்பினார்.
அவரை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.
அவர் மூலம் அந்த நபரின் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கணவன் -மனைவி இருவரையும் பரியராம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அந்த பெண் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு கணவன் -மனைவி இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டனர்.
கொரோனா தொற்றில் இருந்து மீண்ட கணவரை வீட்டுக்கு அனுப்பிய டாக்டர்கள், அவரது மனைவிக்கு பிரசவ நேரம் நெருங்கியதால் அவரை மட்டும் ஆஸ்பத்திரியில் தங்க வைத்தனர்.
நேற்று முன்தினம் அந்த பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை நல்ல உடல் நலத்துடன் 3 கிலோ எடையுடன்
காணப்பட்டது. தற்போது காயும், சேயும் ஆஸ்பத்திரியில் நலமுடன் இருப்பதாக அவருக்கு பிரசவம் பார்த்த அரசு டாக்டர்கள்
தெரிவித்தனர். கொரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்து இருப்பது கேரளாவில் இதுவே முதல் முறை என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த 29 வயது கர்ப்பிணி பெண் கடந்த 10-ந் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு அங்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்தநிலையில் அவருக்கு காய்ச்சல், சளி, இருமல் ஏற்பட்டதால் அவரது ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதில் அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவருக்கு கரூரைச் சேர்ந்த அவரது குடும்பத்தினர்
அல்லது உறவினர்களிடம் இருந்து நோய் தொற்று பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தற்போது கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உள்ளது.
பிள்ளை பெற்றுக்கொள்ளாதது ஏன்? – விஜயசாந்தி
பிள்ளை பெற்றுக்கொள்ளாதது ஏன்? – விஜயசாந்தி
13 ஆண்டு இடைவேளைக்கு பின் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள விஜயசாந்தி,
குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
குழந்தை பெற்றுக்கொள்ளாதது ஏன்? – நடிகை விஜயசாந்தி விளக்கம்
விஜயசாந்தி
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த விஜயசாந்தி அரசியலுக்கு சென்றதால் சினிமாவை விட்டு ஒதுங்கினார். 13 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது மீண்டும்
தெலுங்கு படமொன்றில் மகேஷ் பாபுவின் அம்மாவாக நடித்து இருக்கிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- “என்னை நடிக்க சொல்லி தொடர்ந்து அழைப்புகள் வந்தன.
ஆனால் நல்ல கதைகள் அமையாததால் விலகி இருந்தேன். இப்போது மகேஷ் பாபு படத்தில் முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
அரசியல்தான் எனக்கு முக்கியம். பிடித்த கதாபாத்திரம் அமைந்தால் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிப்பேன். குழந்தைகள் எனக்கு பிடிக்கும். ஆனாலும்
குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்து விடும். அரசியலுக்கு வந்த பிறகு சுயநலத்தை விட்டால்தான் பொது தொண்டு செய்ய முடியும். எனவே குழந்தைகள் நமக்கு வேண்டாம்
என்று கணவரிடம் சொன்னேன். அவரும் ஒப்புக்கொண்டார். ஜெயலலிதாவும் குழந்தை, குடும்பம் இல்லாமல் சுயநலமின்றி மக்களுக்கு தொண்டு செய்தார்.
விஜயசாந்தி
அவர் மாதிரி இருக்க வேண்டும் என்பதற்காகவே குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை. எங்கள் காலத்தில் காருக்குள் இருந்தே மேக்கப் போட்டு உடை மாற்றிக்கொள்வோம்.
குளிர்சாதன கார் தருவது இல்லை. படப்பிடிப்பில் காற்று வரவில்லை என்றால் ஓலையில் செய்த விசிறி கொடுப்பார்கள். சரியாக தூக்கம் இருக்காது. அது மாதிரி
கஷ்டம் இப்போதைய நடிகைகளுக்கு இல்லை. கேரவன் உள்ளிட்ட நிறைய வசதிகள் செய்து கொடுக்கிறார்கள்.”
இவ்வாறு விஜயசாந்தி கூறினார்.




































