Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
தீயில் கருகிய இரு வாலிபர்கள் – உயிருக்கு போராட்டம்
தீயில் கருகிய இரு வாலிபர்கள் – உயிருக்கு போராட்டம்
அவுஸ்ரேலியாவின் தலை நகர் மேற்கு பகுதியில் உள்ள Honeycomb Drive in Eastern Creek, Blacktown. பகுதியில் வீதி வேலையில் ஈடுபட்டு
கொண்டிருந்த முப்பது வயது மற்றும் இருபது வயதுடைய வாலிபர்கள் இருவர் ,அவர்கள் பயன் படுத்திய மின்சார இயந்திர
கருவிகள் வெடித்து சிதறியதால் உடல் முழுவதும் பலத்த எரி காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டனர்
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்புலன்ஸ் உலங்குவானூர்தி மூலம்
அவர்கள் மீட்க பட்டு மருத்துவ மனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
முகம்,கை ,கால்கள்,நெஞ்சு ,பகுதிகள் என்பன பலத்த எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளது ,ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளார் .
இந்த ஊழியர்கள் ,பாதுகாப்பு பொறிமுறையை குறித்த நிறுவனம் உரிய முறையில் கடைபிடித்ததா என்பது தொடர்பில் ,அதன்
கண்காணிப்பு அமைப்பு விசாரணைகளை முன்னெடுத்துள்ளது ,இதில்
குறித்த நிறுவனமானது ஊழியர்களுக்கு உரிய முறையில் உடல் பாதுகாப்பு
முறைமையை வழங்கவில்லை என கண்டறிய பட்டால் ,இந்த இரு ஊழியர்களுக்கும் குறித்த நிறுவனம் பல
மில்லியன் பணத்தை இழப்பீடாக செலுத்த நேரிடும் என்பது குறிப்பிட தக்கது

நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?
நிர்வாண நிலையில் இளம் பெண் சடலமாக மீட்பு – நடந்தது என்ன …?
அமெரிக்காவின் Bronx alleyway பகுதியில் 38 வயதுடைய இளம் பெண்
ஒருவர் சடலம் ஒன்று குப்பை மேட்டின் அருகில் வீச பட்ட நிலையில் மீட்க பட்டுள்ளது
இவர் படுகொலை செய்யப்பட்டு நிர்வாணமாக்க பட்ட நிலையில் சடலம் வீச பட்டுள்ளது .
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்டு பின்னர் படுகொலை செய்ய பட்டு இருக்கலாம் என நம்ப படுவதால் ,அது தொடர்பான தீவிர விசாரணையை குற்ற தடுப்பு போலீசார் ஆரம்பித்துள்ளனர்
குறித்த பகுதிகளில் உள்ள கமராக்கள் ,மற்றும் மறைத்து வைக்க பட்டுள்ள
ரகசிய போலீசார் கண்காணிப்பு கமராக்கள் என்பன தற்பொழுது சோதனைக்கு உள்ளாக்க பட்டு வருகின்றன
இதுவரை இந்த படு கொலைக்கான உடனடி காரணம் தெரியவரவிலை

பெண் மருத்துவர் அந்தப் பக்கத்தை தொட்ட நோயாளி கைது
பெண் மருத்துவர் அந்தப் பக்கத்தை தொட்ட நோயாளி கைது
Murwillumbah மருத்துவ மனையில் சிகிச்சை பெற அனுமதிக்க பட்ட
நோயாளி ஒருவர் அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட முப்பத்தி ஐந்து வயதுடைய
பெண் மருத்துவர் ஒருவரை பாலியல் ரீதியாக சீண்டியுள்ளார் .
இவரது உடலின் முக்கிய பகுதிகளில் பலமுறை தொட்டதை அடுத்து காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்ய பட்ட நிலையில் குறித்த
நோயாளி நான்கு குற்ற சாட்டுக்களின் கீழ் வழக்கு பதிவு செய்ய பட்டு கைது செய்ய பட்டுள்ளார்
தன்னுயிரை காப்பாற்றிட போராடிய இளம் பெண் மருத்துவரை 51 வயதுடைய நபர் இவ்வாறு பாலியல் முறையில் சீண்டிய செயல் அந்த மருத்துவ மனையில் பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

சிங்கம்,புலி,பூனைக்கு கொரனோ – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
சிங்கம்,புலி,பூனைக்கு கொரனோ – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
அமெரிக்காவில் வேகமாக கொரனோ நோயானது பரவி வருகிறது
இதுவரை எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளனர் .பல்லாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்
இவ்வேளையில் வீட்டு வளர்ப்பு பிராணிகளாக உள்ள பூனைகளுக்கு கொரனோ நோயானது தற்போது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இரண்டு பூனைகள், எட்டு சிங்கம்,புலி போன்றவையும், இந்த நோயினால் பாதிக்க பட்டுள்ளன .
இந்த பிராணிகள் தனிமை படுத்த பட்டு தொடர் சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளன .
வீட்டு பிராணிகளுடன் மக்கள் பழகுவதை தவிர்த்து கொள்ளுங்கள் என்பதாக முன் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
விலங்குகளிடத்தில் இருந்து பரவிய நோயானது மனிதர்களுக்கு பரவி அதுவே தற்பொழுது மிருகங்களும் மீள் பரவ ஆரம்பித்துள்ளது இதன் மூலம் உறுதியாகிற்று .

கூகிளுக்கு போட்டியாக களமிறங்கிய பேஸ்புக்- பணம் உழைக்க வசதி – video
கூகிளுக்கு போட்டியாக களமிறங்கிய பேஸ்புக்- பணம் உழைக்க வசதி – video
உலக மக்களை கட்டி போட்டு வைத்துள்ளது சமுக வலை தளங்களாகும் ,
அதில் முன்னிலையில் உள்ளது பேஸ்புக் நிறுவனமாகும் ,
கூகிளுக்கு போட்டியாக களத்தில் நிற்கும் பேஸ்புக் தற்பொழுதுy outube
இணையத்தை மைய படுத்திய முறைமையில் பணம் உழைக்கும்
வசதியினை செய்துள்ளது
முழுமையான விபரங்கள் அறிய இந்த காணொளியை பாருங்கள்
அவுஸ்ரேலிய விபத்தில் நான்கு பொலிசார் உடல் சிதறி பலி – video
அவுஸ்ரேலிய விபத்தில் நான்கு பொலிசார் உடல் சிதறி பலி – video
அவுஸ்ரேலியாவின் Eastern Freeway -அதிவேக பகுதியில் வேகமாக சென்று கொண்டிருந்த இரண்டு காவல்துறையினர் கார் லொறி
ஒன்றுடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த நான்கு காவல்துறை ஊழியர்களும் சம்பவ இடத்தில பலியானார்கள்
ஒரே தடவையில் இவ்விதம் நான்கு காவல்துறையினர் இறந்துள்ளது ,காவல்துறை
ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இந்த விபத்தினால் அந்த வழிச்சாலை பல மணி நேரம் மூட பட்டிருந்தது .
மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

ஈரான் இராணுவ சாட்லைட் வெற்றிகர சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா – வீடியோ
ஈரான் இராணுவ சாட்லைட் வெற்றிகர சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா – வீடியோ
ஈரான் நாடானது தனது புதிய தொழில் நுட்பத்தை தாங்கிய ய இராணுவ சாட்லைட் ஒன்றை சோதனை செய்து வந்ததது ,மூன்று
தடவைகள் நடத்த பட்ட சோதனைகள் தோல்வியில் முடிந்தது, தற்போது இன்று ஏவிய இந்த் சாட்லைட் வெற்றிகரமாக தனது இலக்கு நோக்கி பயணித்துள்ளது
இந்த செய்மதி ஊடாக இராணுவ நிலையங்களை ஈரான் கண்காணிப்பதுடன் ,புதிய ஏவுகணை தொழில் நுட்பத்தில்
மேம்பட்ட ஏவுகணைகளை ,அதாவது வான்மறிப்பு ஏவுகணைககளுக்குள் சிக்காத ஏவுகணையை ஈரான் வரும்
காலங்களில் தயாரிக்கும் நிலைக்குச செல்லும் என அடித்து கூற படுகிறது
எமது நாட்டின்மீது போர் தொடுத்தால் அமெரிக்காஇதுவரை சந்திக்காத பாரியஅழிவுகளை சந்திக்கும் எனவும் எங்களிடம்
,அவ்வாறான கருவிகள் உள்ளது என்பதே ஈரானை சொல்லாமல் கூறி வந்தது
அதன் ஒரு கட்டமாக இந்த சோதனை நிகழ்வு இடம்பெற்று .இது அமெரிக்கா,இஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை
ரசியா விமான தளங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் – சுட்டு வீழ்த்த பட்ட ஏவுகணை
சிரியாவில் உள்ள ரசியாவின் விமான தளங்களை இலக்கு வைத்து இஸ்ரேல் விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தின .
எனினும் இஸ்ரேல் ஏவுகணைகளை ரசியாவின் ஸ்-400 ரக வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகள் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தின .
மேற்படி சுட்டு வீழ்த்தும் காட்சிகளை சிரியா இராணுவம் வெளியிட்டுள்ளது
குறித்த வான் தடுப்பு ஏவுகணைகள் செயல் இழந்து விட்டதாக அமெரிக்கா பரப்புரை புரிந்து வந்த நிலையில் இந்த சுட்டு வீழ்த்துதல் இடம்பெற்றுள்ளது .
தானியங்கி முறையில் சுட்டு வீழ்த்தும் சக்தி வாய்ந்த ஏவுகணைகள் இவை என்பது குறிப்பிட தக்கது ,
இஸ்ரேல்,அமெரிக்கா ,தொடர்ந்து ஈரான் ,ரசியா இராணுவ தளங்கள் மீது தாக்குதல் நடத்த முயன்று வருகின்றமையும் அதனை சிரியா தீவிரமாகி தடுத்து வருவதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது
சிரியாவின் முப்பது ஆயிரம் இராணுவம் குவிக்க பட்டுள்ள நிலையில் ,அந்த இராணுவத்திற்கு ஆதரவு தாக்குதல்களை அமெரிக்கா,இஸ்ரேல் வழங்கிய வண்ணம் உள்ளன
வரும் நாட்களின் போரின் வேகம் அகோரமாக இருக்கும் என மனித உரிமை கண்காணிப்பு மையம் எச்சரித்துள்ளது

அமெரிக்காவுக்கான விமான பயணங்கள் இரத்து – கனடா அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவுக்கான விமான பயணங்கள் இரத்து – கனடா அதிரடி அறிவிப்பு
அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலை
அடுத்து தற்போது கனடா அரசுக்கு சொந்தமான Air Canada விமான நிறுவனம்
தனது பயணங்களை இம்மாதம் 26 ஆம் திகதி வரை விமானங்கள் பயணிக்க தடை விதித்தது .
இந்த சேவையானது வைகாசி 22 அம திகதி வரை மேலும் பிற்போட பட்டுள்ளது
மே மாதம் வரை இந்த விமான சேவைகள் அமெரிக்காவுக்கு இடம்பெறாது என தெரிவிக்க பட்டுள்ளது .
அமெரிக்காவுக்கு இவ்வாறு பல நாடுகள் விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டுள்ளதால் அமெரிக்காவின் பொருளாதரம் பாரிய சரிவை சந்தித்துள்ளது

துருக்கி ஆயுத வாகனம் சிக்கியது – மீட்க பட்ட ஆயுதங்கள்
துருக்கி ஆயுத வாகனம் சிக்கியது – மீட்க பட்ட ஆயுதங்கள்
சிரியாவின் வடக்கு ,மற்றும் கிழக்கு பகுதியில் உள்ள நிலைகள் மீது தாக்குதலை நடத்தும் படி துருக்கிய புலனாய்வு
துறையால் ஆயுத குழுவுக்கு வழங்க பட்ட நவீன ரக புதிய ஆயுதங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளது
வாகனத்தில் ஏற்றி சிரியாவின் Raqqa பகுதிக்கு கொண்டு செல்ல பட்ட பொழுதே இவர்களை துரத்திய சிரியா உளவுத்துறையினர் மேற்படி ஆயுதங்களை மீட்டனர்
இந்த ஆயுத கடத்தல்களில் இவர்கள் தினம் தோறும் ஈடுபட்டு வந்துள்ளதும் அம்பலமாகியுள்ளது ,
தற்பொழுது இட்லி பகுதியை மீட்கும் நடவடிக்கையில் முப்பது ஆயிரம்
துருக்கிய படைகள் குவிக்க பட்டு தயார் நிலையில் உள்ளனர்எவ்வேளையும்
இங்கு பெரும் தாக்குதல்கள் இடம்பெறலாம் ,எனினும் சிறு சிறு சண்டைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

வெடித்து பறக்கும் ஏவுகணைகள் -30 ஆயிரம் இராணுவம் குவிப்பு
வெடித்து பறக்கும் ஏவுகணைகள் -30 ஆயிரம் இராணுவம் குவிப்பு
சிரியாவின் Al-Fterah and Kansafra in Jabal Al-Zawiyah. கிராமங்கள் மீது துருக்கிய ஆதரவு படைகள் கடும் பல் குழல் எறிகணை தாக்குதலை மேற்கொண்டு வருகின்றன
இதில் மக்கள் கிராமங்களில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளில் நாற்பதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .சம அளவிலான மக்கள் படுகாயமடைந்துள்ளனர் .
தொடராக இடம்பெற்று வரும் எறிகணை தாக்குதலினால் மக்கள் வாழ்விடங்களை விட்டு இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்
துருக்கிய உலங்கு வானூர்திகள் ,உளவு விமானங்கள் என்பன வடக்கு இட்லி பகுதி மேலாக பறந்த வண்ணம் உள்ளன
முப்பதாயிரம் துருக்கிய படைகள் குவிக்க பட்டு இராணுவ நடவடிக்கைக்கு தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர்
தாம் இட்லி பகுதியை மீட்டே திருவோம் என துருக்கிய அதிபர் பாராளுமன்றில் முழங்கியுள்ளார்
,துருக்கியின் தாக்குதலை முறியடிக்கும் வகையில் சிரியா படைகள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து இரு பகுதியினரும் கடுமையான மோதலை தோற்று வித்த வண்ணம் உள்ளனர்
சுமார் ஐம்பதாயிரம் மக்கள் தற்பொழுது ,அகதிகளாகி வாழ்விடங்களை விட்டு ஓடிய வண்ணம் உள்ளனர்

பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்
பிரிட்டனில் வீட்டுக்குள் வெடி குண்டு – சுற்றிவளைத்த பொலிஸ்
பிரிட்டன் West Hill, Hastings. பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து வெடிகுண்டுகள் மீட்க பட்டுள்ளன .
இங்கு குண்டுகள் உள்ளதாக Sussex காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி குண்டுகள் மீட்க பட்டுள்ளன
குண்டூ செயல் இழக்க வைக்கும்படையினர் வரவழைக்க பட்டு வெடிக்காத நிலையில் இருந்த குண்டு அகற்ற பட்டுள்ளது
இதனை அடுத்து அந்த பகுதி தீவிர சோதனைகளுக்கு உள்ளாக்க பட்டுள்ளது .
மோப்ப நாய்கள் இந்த சோதனையில் ஈடுபடுத்த பட்டன ,எனினும் இது
தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

சீனாவில் இருந்து விசேட விமானத்தில் Scotland க்கு வந்திறங்க்கிய 10 மில்லியன் முக கவசம்
சீனாவில் இருந்து விசேட விமானத்தில் Scotland க்கு வந்திறங்க்கிய 10 மில்லியன் முக கவசம்
பிரிட்டன் ஸ்கொட்லாந்து பகுதிக்கு சீனாவில் இருந்து விசேட விமானம் மூலம் கிளாஸ்க்கோ விமான நிலையத்தில் முக கவசங்கள் வந்திறங்கியுள்ளன .
பிரிட்டன் மருத்துவ மனைகளில் நிலவும் முக கவசங்கள் இதன் ஊடாக நிவர்த்தி செய்ய படும் நிலை ஏற்பட்டுள்ளது
பத்து மில்லியன் முக கவசங்கள் இவ்விதம் வந்திறங்கியுள்ளது ,நோயை
பரப்பிய சீனா இப்பொழுது அதற்குரிய தடுப்பு கவசங்களையும் அதுவே விநியோகம் செய்கிறது .
உலகம் இப்பொழுது இவ்வகையான கொரனோ தடுப்பு சோதனை கருவிகள்,மற்றும்
முக கவசங்கள் எனபனவற்றை சீனாவிடமே எதிர் பார்த்து காத்திருக்கிறது ,அப்படி என்றால் சீனா தான் இப்பொழுது வல்லரசு


தீவிரவாதிகள் அட்டூழியம் -கிராமங்களுக்குள் புகுந்து 47 பேரை சுட்டு கொன்று எரித்த கொடூரம்
தீவிரவாதிகள் அட்டூழியம் -கிராமங்களுக்குள் புகுந்து 47 பேரை சுட்டு கொன்று எரித்த கொடூரம்
வடமேற்கு நையீரியாவில் பல கிராமங்களுக்குள் புகுந்த தீவிரவாதிகள் அப்பாவி மக்களை சுட்டு கொன்றுள்ளனர் .
திடீரென மக்கள் கிராமங்களுக்குள் சென்று சுற்றிவளைத்த ஆயுத படைகள் அங்கிருந்த மக்களை தாக்கி கொடுமை படுத்தி அதன்
பின்னர் படுகோரமாக சுட்டு கொன்று கிராமத்தை எரித்து விட்டு தப்பி சென்றுள்ளனர்
இந்த தீவிரவாதிகளின் தொடர் வெறிச்செயலினாலே மக்கள் பெரும் பீதியில் உறைந்துள்ளனர் ,
பொக்கோ கராம் அமைப்பினர் மக்களை கடத்துவது ,கொலை ,செய்வது
பாலியல் வன்கொடுமை என தமது இனவாத ,இராணுவ அடக்குமுறையை கட்டவிழ்த்து வருவது தொடர்கிறது .

சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்
சுட்டியல் ,கத்தி,துப்பாக்கியுடன் நட மாடியவரை -சுட்டும் கொன்ற பொலிஸ்
அவுஸ்ரேலியா Rockdale, தெற்கு சிட்னி பகுதியில் கத்தி ,சுத்தியல் ,துப்பாக்கியுடன்
நடமாடிய நபரை சுற்றிவளைத்த போலீசார் அவரை சுட்டு படுகொலை செய்தனர் .
ஆயுதங்களை கீழே போடுமாறு போலீசார் வேண்டிய பொழுதும் அதனை
செவி மடுக்காது எதிர் நிலை எடுத்த காரணத்தால் அவர் மீது சரமாரி துப்பாக்கி சூட்டை மேற்கொண்டனர் .
இதில் சம்பவ இடத்திலேயே அவர் துடி துடித்து இறந்தார் .இது தீவிரவாத
செயலா என்பது தொடர்பில் போலீசார் தெரிவிக்கவில்லை

லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
லொறிகளை தூக்கி பிரட்டி வீடுகளை உடைத் தெறிந்த கோர புயல் – video
அமெரிக்காவில் நேற்று முன்தினம், முன்னைய தினம் இடம்பெற்ற புயலின் கோர தாண்டவத்தில்
லொறிகளை தூக்கி பிரட்டியுள்ளதும் ,வீடுகளை அடித்து உடைத்துள்ள காட்சிகள் வெளியாகியுள்ளன
இந்த புயலின் தாக்குதலில் சிக்கி ஒரு லட்சம் மக்கள் மின்சாரம் இன்றி தவித்து வந்தனர்
இந்த காட்சிகள் புயலின் வேகத்தை தெளிவாகவே சொல்லி செல்கின்றன
கொரனோ ஒரு புறம் மக்களை வாட்ட மறு புறம் புயல் இவ்வாறு
கதற வைத்துள்ளது குறிப்பிட தக்கது

ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்
ஜப்பானில் பாரிய நில நடுக்கம் – சுனாமி அபாயம் – மக்கள் சிதறி ஓட்டம்
இன்று திங்கட்கிழமை அதி காலை கிழக்கு ஜப்பான் கடல் பகுதியை அண்மித்து
இடம் பெற்ற பாரிய நில நடுக்கத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன ,இந்த நில அதிர்வு 6.4 ஆக பதிவாகியுள்ளது
சுனாமி அனர்த்தம் நிகழும் அபாயம் உளதாக எதிர் பார்க்க படுகிறது ,
மக்கள் பீதியில் சிதறி ஓடிய வண்ணம் உள்ளனர் ,வீடுகளை விட்டு வெளியில் உலாவுவதை அவதானிக்க முடிகிறது
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவிலை ..சில
மணித்தியாலங்களில் இதே பகுதியில் முழுமையான விபரங்கள் இணைக்க படும்

ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரே நாளில் 6060 பேர் பாதிப்பு
ரஷியாவில் வேகமாக பரவும் கொரனோ – ஒரே நாளில் 6060 பேர் பாதிப்பு
ரஷியாவில் அமெரிக்காவை முந்தி சென்று விடும் பாரிய அளவில் மிக வேகமாக கொரனோ வைரஸ் பரவி வருகிறது
கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் மட்டும் 6060 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
மேலும் 48 பேர் பலியாகியுள்ளனர்
இதுவரை சுமார் 42,853 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இவ்வாறு பெரும் தொகையில்
மக்கள் பாதிக்க பட்டு வருவதால் வீதி எங்கும் இராணுவம் நிறுத்த பட்டுள்ளது ,
மக்கள் உயிர் பலிகளை தடுக்கும் முகமாக சில பகுதிகளில் லக்கடவுன்
செய்ய பட்டுள்ளது ,உலகம் தழுவிய நிலையில் 170 ஆயிரம் பேர் பலியாகியும் 23 லட்சம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர்

விபத்தில் காரை உடைத்தவர் முகத்தை அடித்து உடைத்த வாலிபர் -அவுஸ்ரேலியல் பயங்கரம்
விபத்தில் காரை உடைத்தவர் முகத்தை அடித்து உடைத்த வாலிபர் -அவுஸ்ரேலியல் பயங்கரம்
அவுஸ்ரேலியா தலைநகர் மேற்கு சிட்னி பகுதியில் Sydney’s west .M4 at Mays Hill, near Parramatta வாலிபர் ஒருவர் சென்ற கார் மீது 68 வயது முதியவர் சென்ற கார் மோதியுள்ளது .
இந்த விபத்தை ஏற்படுத்திய முதியவர் மீது ஆத்திரம் கொண்ட வாலிபர் ,காரை விட்டு இரங்கி அந்த பெரியவர் முகத்தில் தாறுமாறாக அடித்துள்ளார்
அவர் சுயநினைவு இழந்து அவ்விடத்தில்,வீழ்ந்தார் ,தாக்குதலை நடத்திய
வாலிபர் தப்பி ஓடிவிட்டார் ,எனினும் அவரை தூரத்தி சென்ற போலீசார்
அவர் பதுங்கி இருந்த இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர் .
ஆபத்தான
நிலையில் முதியவர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,இந்த தாக்குத்தல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது









