ஒரு மாதத்தில் மாத்திரம் 203 பேர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ஒரு மாதத்தில் மாத்திரம் 203 பேர் பலி

ஒரு மாதத்தில் மாத்திரம் 203 பேர் பலி

ஒரு மாதத்தில் மாத்திரம் 203 பேர் பலி ,இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் ஏற்பட்ட வீதி விபத்துகளில் 203 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

ஜனவரி 1 முதல் பெப்ரவரி 7 வரை இடம்பெற்ற வீதி விபத்துகளில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

இதேவேளை, 2024 ஆம் ஆண்டில், கவனயீனமாக வாகனம் செலுத்தியதால் 1,585 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ள நிலையில் 1,667 பேர் உயிரிழந்திருந்ததாக அவர் தெரிவித்தார்.

2025 ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 7 ஆம் திகதி வரை 194 கோர வீதி விபத்துக்களும் 514 கடுமையான வீதி விபத்துக்களும் மற்றும் 880 சிறியளவிலான வீதி விபத்துக்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த விபத்துக்கள் அனைத்தும் 2025 பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி வரை பதிவாகியுள்ளன. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 203 ஆகும் என பொலிஸ் போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் நெடுஞ்சாலைகள் பணிப்பாளர் மனோஜ் ரணகல தெரிவித்தார்.

வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து
Posted in இலங்கை செய்திகள்

வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து

வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து

தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது.

வேலைத்தளத்தில் ஏற்பட்ட மின் ஒழுக்கு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

யாழ் மாநகர சபையின் தீயணைப்பு வாகனம்
வரவழைக்கப்பட்டு தற்பொழுது தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

No posts found.
Posted in உலக செய்திகள்

விபத்தில் காரை உடைத்தவர் முகத்தை அடித்து உடைத்த வாலிபர் -அவுஸ்ரேலியல் பயங்கரம்

விபத்தில் காரை உடைத்தவர் முகத்தை அடித்து உடைத்த வாலிபர் -அவுஸ்ரேலியல் பயங்கரம்

அவுஸ்ரேலியா தலைநகர் மேற்கு சிட்னி பகுதியில் Sydney’s west .M4 at Mays Hill, near Parramatta வாலிபர் ஒருவர் சென்ற கார் மீது 68 வயது முதியவர் சென்ற கார் மோதியுள்ளது .

இந்த விபத்தை ஏற்படுத்திய முதியவர் மீது ஆத்திரம் கொண்ட வாலிபர் ,காரை விட்டு இரங்கி அந்த பெரியவர் முகத்தில் தாறுமாறாக அடித்துள்ளார்

அவர் சுயநினைவு இழந்து அவ்விடத்தில்,வீழ்ந்தார் ,தாக்குதலை நடத்திய

வாலிபர் தப்பி ஓடிவிட்டார் ,எனினும் அவரை தூரத்தி சென்ற போலீசார்

அவர் பதுங்கி இருந்த இடத்தில் வைத்து கைது செய்துள்ளனர் .
ஆபத்தான

நிலையில் முதியவர் சிகிச்சை பெற்று வருகின்றார் ,இந்த தாக்குத்தல் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

விபத்தில் காரை உடைத்தவர்
விபத்தில் காரை உடைத்தவர்