Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி- வெற்றி பெற்ற தம்பதி
கணவன் மார்கள் தங்கள் மனைவியை தோளின் பின்புறம் சுமந்தப்படி ஓடினார்கள். சேறு, மணல்மேடு, குட்டை, ஆகியவற்றை கடந்து ஓடினர்.
ஹங்கேரியில் மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி- வெற்றி பெற்ற தம்பதிக்கு எடைக்கு எடை ‘பீர்’
மனைவியை தோளில் சுமந்து கணவர்கள் ஓடும் போட்டி
ஹங்கேரி நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் மனைவியை கணவன் மார்கள் தோளில் சுமந்து செல்லும் ஓட்டப்பந்தயம் நடத்தப்படுகிறது.
மொத்த பந்தய தூரம் 260 மீட்டராக நிர்ணயிக்கப்பட்டது. இதில் சேறு, குட்டை, மண்ல்மேடு, டயர்கள் ஆகியவற்றை கொண்டு தடைகள் அமைக்கப்பட்டன.
இந்த தடைகளை மனைவியை தோளில் சுமந்தபடி கணவர்கள் தாண்டிச் செல்ல வேண்டும்.
இப்போட்டியில் ஏராளமான தம்பதிகள் கலந்து கொண்டனர். கணவன் மார்கள் தங்கள் மனைவியை தோளின் பின்புறம் சுமந்தப்படி ஓடினார்கள். சேறு, மணல்மேடு, குட்டை,
ஆகியவற்றை கடந்து ஓடினர். இதில் ஒரு சிலர் கீழே விழுந்தனர். போட்டியில் பங்கேற்றவர்களை கை தட்டி உற்சாகப்படுத்தினார்கள்.
இப்போட்டியில் முதலிடம் பிடித்த தம்பதிக்கு பரிசு பொருட்களும், எடைக்கு எடை பீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.
வெடித்து சிதறிய கொட்டல் – 22 பேர் மரணம்
வெடித்து சிதறிய கொட்டல் – 22 பேர் மரணம்
கியூபா நாட்டின் தலைநகர் பகுதியில் அமைந்துள்ள கொட்டல் ஒன்றில் ஏற்பட்ட வெடி
விபத்தில் சிக்கி அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்தது
இவ்வேளை அதற்குள் சிக்கி 22 பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் பலர் காயமடைந்துள்ளனர்
எரிவாயு குழாய் வெடித்து சிதறியதில் இந்த அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் ஆளும் கட்சி பலத்த தோல்வி
பிரிட்டனில் ஆளும் கட்சி பலத்த தோல்வி
பிரிட்டனில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் ஆளும்
கட்சியினர் நூறு ஆசனங்களை இழந்து பலத்த தோல்வியை சந்தித்துள்ளனர்
எதிர்வ்ரும் பாராளுமன்ற தேர்தலில் இவரக்ள மேலும் பலத்த சரிவை சந்திப்பார்கள் என எதிர் பார்க்க படுகிறது
சாப்பாட்டு பாசலுக்குள் -பாம்பு தோல்- என்னங்கடா நடக்குது
சாப்பாட்டு பாசலுக்குள் -பாம்பு தோல்- என்னங்கடா நடக்குது
கேரளாவில், பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவின் நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா, அதே
பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் பாம்பு தோல் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நெடுமங்காடு பொலிஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் உணவை வாங்கி சோதனை செய்தனர். மேலும்,
சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கும் சீல் வைத்தனர். இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்
வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்
வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது
இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்
என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது
கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,
எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை
300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?
300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?
உக்கிரேன் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை அதி வேகமாக தொடுத்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது
ரசியாவின் இந்த திடீர் வலிந்து தாக்கும் இராணுவ நடவடிக்கையால் உக்கிரேனின் பல முக்கிய நகர் பகுதிகள் வீழ்ந்த வண்ணம் உள்ளன
ரசியா மேற்கொள்ளும் இந்த இராணுவ முன் நகர்வினால் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,ஆனால் ஆளும் உக்கிரேன் அதிபர் அடிபணிய மறுத்து ரசியாவை வென்று விடுவேன் என அடம் பிடித்து வருகிறார்
பரம எதிரியாக விளங்கும் ரசியாவை வென்று விட அமெரிக்கா பிரிட்டனிடம் உக்கிரேன் மில்லியன் டாலரில் ஆயுதத்தை வாங்கு குவிகிறது
அவசர உதவி என்ற போர்வையில் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்கிரேனுக்கு அதி நாவீன ஆயுத தளபாடங்களை வழங்கி வருகின்றன
பிரிட்டன் அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனை ஊடாக உக்கிரேன் பொருளாதாரம் மீள்சி கொள்ளுமா
இந்த பரம எதிரியான ரசியாவின் போரில் இருந்து முற்றாக விடுதலை பெறுமா என்ற கேள்விகள் வெடித்து பறக்கின்றன ,அவை பேசு பொருளாகவும் மாற்றம் பெற்றுள்ளன
இந்த நிலையில் தற்போது பிரிட்டன் முன்னூறு மில்லியன் பவுண்டுக்கு உடனடி ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்குகிறது ,
பிரிட்டன் முன்னூறு மில்லியனுக்கு விற்கும் ஆயுத தபாடங்கள் ஊடாக ரசியாவை உக்கிரேன் வீழ்த்தி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது
பிரித்தானிய அரசு விற்கும் இந்த ஆயுத வியாபாரத்தின் ஊடாக தனது பலத்தை பிரித்தானிய முதுகில் ஏறி நின்று உக்கிரேன் காண்பிப்பது போல் உள்ளது
பிரிட்டன் வழங்கும் இந்த ஆயுத விற்பனை பட்டியலில் அதி முக்கிய .
ஏவுகணைகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ,மற்றும் இரவு நேர கருவிகள் என்பன உள்ளடங்குகின்றன
300 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் பிரிட்டன் – தப்புமா உக்கிரேன் ..?
மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகள் மூலம் ரசியாவின் போரை வென்றுவிடலாம் என உக்கிரேன் எதிர் பார்க்கிறது ,
ஆனால் அது தோல்வியில் முடிய போகிறது என்பதை வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உக்கிரேன் வேற்று கோஷம் முழங்கி வருவதை காண்பிக்கிறது
இந்த கால விதியின் ,கள நிலவரத்தை உக்கிரேன் அதிபர் உணர மறுத்து வருகின்றமை துன்பியலின் விளைவாக பார்க்க படுகிறது,
இங்கிலாந்தினதும் மற்றும் மேற்குலக ஆயுதங்கள் ஊடாக தப்புமா உக்கிரேன் என்பதே கேள்வியாக வீழ்ந்து கிடக்கிறது .
- வன்னி மைந்தன் –
- குவைத் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து குறைவு
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடி
- ஈரான் அரசாங்கத்தைக் கவிழ்க்க இஸ்ரேல் செயல்பட்டு வருகிறது என நெதன்யாகு
- ஈரானிய வான்வழித் தாக்குதல்களை’ இடைமறித்து அழித்ததாக பஹ்ரைன் கூறுகிறது
- ஹமாஸ் பாதுகாப்புத் தலைவர் கைது இஸ்ரேல் அறிவிப்பு
- ஜோர்டானில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஈரான் தாக்குதல்
- ஐரோப்பாவை சாடிய ஈரான்
- இஸ்ரேலிய உயர் உளவுத்துறை அதிகாரி இரகசியமாக அமெரிக்கா சென்றார்
- ஈரானிடம் போதுமான அந்நியச் செலாவணி
- நேபாளம்-சீனாவில் ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தில் 1,000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
- ஈரானிலிருந்து வந்த ட்ரோனை எதிர்கொண்டதாக ஐக்கிய அரபு அமீரகம்
- ஐக்கிய அரபு அமீரகத்தின் விமான தளம் மீது தாக்குதல்
- ஈரான் மீதான போரைத் தொடர்வது குறித்து ஹெக்ஸெத்துக்கு அமெரிக்க ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை
- ஈரான் கார்க் தீவில் பெரும் அழிவு
- இஸ்ரேல், கிரீஸுடன் 3.6 பில்லியன் டாலர்ஆயுத டீல்
- ஈரானைத் தாக்குவதற்கு ஜப்பானின் விமானப்படை தளத்தில் அமெரிக்கா
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் -12 வயது சிறுமியை காணவில்லை – தேடும் பொலிஸ்
லண்டன் லூசியம் பகுதியில் பன்னிரெண்டு வயது சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
இவர் லூசியம் பகுதியில் முப்பதாம் திகதி காணப்பட்டுள்ளார் ,அதன் பின்னர் எங்கு
சென்றார் என்பது தொடர்பாக தெரியவில்லை.
இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிய படுத்தும் படி போலீசார் வேண்டுதல் விடுத்துள்ளனர்.
900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்
900 பலஸ்தீனியர்களை கைது செய்து இஸ்ரேல் வெறியாட்டம்
இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மேற்கு கரையில் ஒரு மாதத்தில் 900 பலஸ்தீன
மக்களை கைது செய்து சிறையில் அடைத்து வதை புரிந்து வருகிறது
இஸ்ரேல் மீது காமாஸ் ரொக்கட் தாக்குதலை நடத்தி ஓய்ந்த நிலையில் ,தற்போது
மீளவும் அப்பாவி மக்களை போராளிகள் என கூறி இஸ்ரேல் கைது
செய்த வண்ணம் உள்ளது மீளவும் ஓரும் பெரும் ரொக்கட் தககுத்தலுக்குள் இஸ்ரேல் சிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது
ஜெர்மனியில் மோடி – குவிந்த இந்தியர்கள்
இந்தியா, ஜெர்மன் நாடுகள் தூதரக உறவை தொடங்கி 70 ஆண்டுகள் ஆகும் நிலையில், பிரதமர் ஓலப் ஸ்கால்சுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபடுகிறார்.
பாட்டு பாடிய சிறுவனுக்கு பாராட்டு தெரிவித்தார் பிரதமர் மோடி – பெர்லினில் ருசிகரம்
சிறுவனை பாராட்டிய பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகிய 3 ஐரோப்பிய நாடுகளுக்கு இன்று அதிகாலை சுற்றுப்பயணத்தை தொடங்கினார். முதல் கட்டமாக,
ஜெர்மன் பிரதமர் ஓலப் ஸ்கால்சின் அழைப்பின் பேரில் இன்று ஜெர்மன் தலைநகர் பெர்லினுக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார்.
இதற்கிடையே, 6-வது இந்தியா, ஜெர்மன் அரசுகளுக்கு இடையிலான ஆலோசனைக்கு இரு நாட்டு பிரதமரும் தலைமை வகிக்கிறார்கள். தொடர்ந்து, இந்திய மந்திரிகள்
பலரும் ஜெர்மனி வந்து தங்கள் இலாகா மந்திரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பெர்லினில் இந்திய வம்சாவளியினரை பிரதமர் மோடி சந்தித்தார்.
அப்போது பிரதமர் மோடி ஒரு சிறுமி வரைந்திருந்த படத்தில் கையெழுத்திட்டார். ஏராளாமானோர் பிரதமர் மோடியுடன்
செல்பி எடுத்துக் கொண்டனர். மேலும் ஒரு சிறுவன் பாடிய பாடலை தாளம் போட்டபடி கேட்டு ரசித்தார் பிரதமர் மோடி.
பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்
பிரிட்டன் பாராளுமன்றில் நீல படம் பார்த்த எம்பி பதவி விலகினார்
பிரிட்டன் பாராளும்னற பகுதிக்குள் நீல பட காட்சிகளை இரு தடவை பார்த்தார் என்ற குற்ற சாட்டு ஆளும்
கட்சி உறுப்பினர் Conservative Party, Neil Parish மீது சுமத்த பட்ட நிலையில் அவர் தனது பதவியை ராஜினமா செய்துள்ளார்
மேற்படி சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது ,இப்படியும் நடக்கிறது சம்பவங்கள் பார்த்துக்குங்கோ
Neil Parish, the Tory MP who has said he will resign after
admitting watching pornography in the House of Commons, has a strong interest in farming, the countryside and animal welfare issues.
லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே
லண்டன் லூசியம் பகுதியில் – பாலத்தில் சிக்கிய லொறி – படம் உள்ளே
லண்டன் லூசியம் Verdant Lane in SE6 பகுதியில் உள்ள பாலம் ஒன்றுக்குள் டொயிலட்
றோலகளை ஏற்றி சென்ற லொறி ஒன்று சிக்கியுள்ளது இந்த லாரியின் உயரம் அதிகம்
என்பதால அதனை கவனிக்காது சாரதி அந்த பாலத்தின் உள்ளே செலுத்தி சென்றதால் அந்த லொறி பாலத்தில் சிக்கி சேதமானது
போலீசார் வரவழைக்க பட்டு லொறி மீட்க பட்டது ,இந்த விபத்தினால் அந்த
வழிச்சாலை பலமணி நேரம் போக்குவரத்து தடை பட்டது

லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்
லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்
லண்டன் லூசியம் பகுதியில் கடந்த இருபத்தி இரண்டாம் திகதி முதல் பதினேழு வயதுடைய இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்
இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிவிக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்
குறித்த மாவட்டத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து செல்வதால் போலீசார் சிவில்
உடையில் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்.
கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் முக ஸ்டாலின்
தேனியில் இன்று நடந்த அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று 11,000 பேர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதைதொடர்ந்து அவர் கூறியதாவது:
தேனி மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பாடுபடும் அனைவருக்கும் எனது பாராட்டுகள். வளர்ச்சி என்பதை அனைவருக்கும் சாத்தியப்படுத்துவதே திராவிட மாடல். மக்கள் முகத்தில் தோன்றும் மகிழ்ச்சியே எங்களின் செயல்பாட்டிற்கு ஊக்கமாக உள்ளது.
- 10 ஆண்டில் செய்ய வேண்டிய சாதனைகளை ஒரே ஆண்டில் செய்துள்ளது தி.மு.க. அரசு. ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற சிறப்பு வாய்ந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.
- இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.
- தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் பட்டம் பெற வேண்டும் என்பதே அரசின் எண்ணம். பெண் கல்விக்கு எதிரான அத்தனை தடைகளையும் தகர்த்தெறிவோம்.
- கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிச்சயம் நிறைவேற்றுவோம்.
- பெரிய குளம், உத்தமபாளையம் மருத்துவமனைகள் மேம்படுத்தப்படும்.
- மக்களுக்கு சேவை செய்வதற்கே நேரம் போதுமானதாக இல்லை; விமர்சனத்திற்கு பதில் தர விரும்பவில்லை.
- எம்.ஜி.ஆரிடம் இருந்த அரசியல் நாகரீகம் தற்போது உள்ளவர்களிடம் இல்லை.
- 133 புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் ரூ.64 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு
லண்டன் லூசியம் தமிழர் கடை முன்பாக வாலிபன் மீது கத்தி வெட்டு
இன்று வியாழக்கிழமை மதியம் மூன்று மணியளவில் லீ கை வீதியில்
பதினெட்டு வயது வாலிபன் மீது மர்ம நபர்கள் திடீர் கத்தி குத்து தாக்குதலை நடத்தினர்
இதில் குறித்த வாலிபன் பலத்த கத்தி குத்து காயங்களுக்கு உள்ளான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் ,இதுவரை
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்ய படவில்லை ,
தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,குறித்த சம்பவமானது
தமிழர் கடைகளின் முன்பாக உள்ள வீதியில் இடம்பெற்றுள்ளது ,இதன் அருகில் புகழ் வாய்ந்த லண்டன் சிவன் ஆலயம் உள்ளது
அதிக தமிழர்கள் இந்த ஆலயங்கள் ,மற்றும் பிரபல தமிழர் உணவகங்கள்,
பல்பொருள் அங்காடிகளுக்கு வந்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடும் மாணவர்கள்
மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடும் மாணவர்கள்
மாணவர் சமுதாயம் எதை நோக்கி பயணிக்கிறது. இதன்விளைவு என்னவாகும்
என்பதை எண்ணிப்பார்க்க வேன்டிய கட்டாயாத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடும் மாணவர்கள்- அதிர்ச்சியில் பெற்றோர்
மாணவிகள் மடியில் தலை வைத்து செல்போன் விளையாடும் மாணவர்கள்
தகவல் தொழில்நுட்பம் காலத்தின் பரிணாம வளர்ச்சி அதன்விளைவு அனைவரும் கைகளிலும் சரளமாக செல்போன் பயன்பாடு.
அதிலும் கடந்த 2 ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு மாணவர்களிடம் கட்டாயம் செல்போன்களை பெற்றோர்களே கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
ஆன்லைன் வகுப்பு என்ற புதிய கல்வி கற்றலுக்கு மாற்றப்பட்ட குழந்தைகள் கையில் கூட செல்போன்
கொடுக்கப்பட்டதால் பள்ளி பாடத்திட்டத்திற்கு மட்டுமல்லாமல் விளையாடுவதற்கும் அதிகளவில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
2 வருட பள்ளி நேரடி வகுப்பு தடைபட்டதால் மாணவர்களின் பழக்க வழக்கமும் மாறிவிட்டது. மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் முதல் எல்.கே.ஜி. குழந்தைகள்
வரை செல்போனுக்கு அடிமையாகி எந்நேரமும் அதில் பயன்படுத்தத்தொடங்கிவிட்டனர்.
பள்ளிக்கு செல்போன் கொண்டு செல்லக்கூடாது. பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாட்டை கொரோனா நோய் தகர்த்தெறிந்து விட்டதன் மூலம் இப்போது பள்ளிகளுக்கு மாணவர்கள் செல்போன்களை கொண்டு செல்கின்றனர்.
பெற்றோருக்கு கீழ்படியாமல், ஆசிரியர்களுக்கு கட்டுப்படாமல் வகுப்பறைகளில் மாணவர்கள் சர்வசாதாரணமாக செல்போன்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
இதன் விளைவு மிகமோசமான நிலைக்கு பள்ளி மாணவர்கள் சென்று கொண்டிருப்பதை கடந்த சில நாட்களாக நடந்த சம்பவங்கள் சமூக வலைதளம் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளன.
பாட புத்தகங்களை சுமக்க வேண்டிய மாணவர்கள் கையில் ஆயுதங்களும், செல்போன்களும் புழங்குவது அதிர்ச்சியூட்டுகின்றன. கஞ்சா, மது பழக்கங்களுக்கும் அடிமையாகி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது.
கடந்த மாதம் அரசுப் பள்ளி மாணவிகள் பேருந்தில் மதுகுடித்து ஆட்டம் போட்ட சம்பவம் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பள்ளி
மாணவர்கள், ஆசிரியர்கள் முன்பே ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டு வருவது பெற்றோர்களையும், கல்வியாளர்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்தும்போது மாணவர்கள் ஒரு குழுவாக எழுந்து நின்று குத்தாட்டம் போட்ட சம்பவம் சமீபத்தில் வெளியானது. தலை முடியை ஒழுங்காக
வெட்டி வா என்று ஆசிரியர், மாணவர்களை அறிவுறுத்தலினால் அவரை அடிக்க பாய்வது போன்ற செயல்கள் மாணவர் சமுதாயம் தடம் மாறி செல்கின்றதோ என்ற அச்சத்தை உணர்த்துகிறது.
குருவாக, ஆசானாக மதிக்க வேண்டிய ஆசிரியர்களை இன்றைய மாணவர் சமுதாயம் எதிரியாக பார்க்க காரணம் என்ன? அன்பையும், பண்பையும் விதைத்து நல்வழிப்படுத்தக்கூடிய ஆசிரியர்கள் இரண்டாம் பெற்றோராக கருதப்படுகிறார்கள்.
ஒரு மாணவருக்கு தாய், தந்தை முதல் பெற்றோரும், 2-வது பெற்றோர் ஆசிரியர் என்று போற்றக்கூடிய நம் நாட்டில் மாணவர்கள் அத்துமீறி செல்வதற்கான காரணம் என்ன என்று கல்வியாளர்கள் ஆராய்கிறார்கள்.
இவை ஒருபுறம் இருக்க வகுப்பறையிலே மாணவர்கள் செல்போன் பார்ப்பதும், மாணவிகள் மடியில் மாணவர்கள் தலை சாய்த்து இருப்பது போன்ற படங்கள் வெளியாகி இருப்பது மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மதிய உணவு நேரத்தில் இத்தகைய செயல்களில் மாணவ-மாணவிகள் ஈடுபட்டு உள்ளனர். இந்த சம்பவம் தமிழகத்தில் உள்ள நம் பள்ளியில் நடந்தது என்றால் நம்ப
முடிகிறதா? செல்போன் மதிமயக்கத்தில் இன்றைய மாணவர் சமுதாயம் கிரங்கி கிடக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
வகுப்பறையில் இருக்கையை மாணவர்கள் சேதப்படுத்தி அதனை செல்போனில் படம் பிடித்து வெளியிட்டுள்ள மற்றொரு சம்பவம் வேலூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.
இதேபோல திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் உடன் படிக்கும் சக மாணவர்களிடம் ‘ராகிங்’ செய்த சம்பவம் பெற்றோர்களை மிரள வைத்துள்ளது.
வகுப்பறையில் 3 மாணவர்கள் தாதா போல உட்கார்ந்து இருக்க 10 பேர் அவர்களுக்கு தேர்வு அட்டையால் காற்று வீச செய்யச்சொல்லி ராக்கிங் செய்துள்ள வீடியோ பரவி வருகிறது. அதில் ஒரு மாணவரை பளார் என்று கன்னத்தில் அறையவும் செய்கிறார் மூத்த மாணவர்.
கல்லூரிகளில் தான் ராகிங் நடைபெறுவது வழக்கம். ஆனால் பள்ளியில் ராகிங் செய்வது புதுமையாக உள்ளது. பள்ளி பருவ மாணவர்கள் ஆசிரியர்களிடமும்,
வகுப்பறையிலும் ஒழுங்கீனமாக நடக்கும் செயல் அவர்களின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடியதாக மாறிவிடும் அச்சுறுத்தல் நிலவுகிறது.
மாணவர் சமுதாயம் எதை நோக்கி பயணிக்கிறது. இதன்விளைவு என்னவாகும் என்பதை எண்ணிப்பார்க்க வேன்டிய கட்டாயாத்தில் பெற்றோர்களும், ஆசிரியர்களும், கல்வியாளர்களும் தள்ளப்பட்டு இருக்கிறோம்.
இன்றைய மாணவர்கள் நாளைய தலைவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. பள்ளி மாணவர்களை வழிநடத்தக்கூடிய கல்வித்துறை மாணவர்களுக்கு தேவையான அடிப்படையான நெறிமுறைகளை கற்றுத்தர வேண்டும்.
பெற்றோர்கள், பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு எப்படி நிம்மதியாக இருக்க முடியும். மாணவ- மாணவிகள் தடம்மாறி செல்வதை தடுக்க கூடிய நடவடிக்கை
உடனடியாக தேவை என்பதையும் ஆசிரியர்கள் அச்சமின்றி பாடம் நடத்துவதை உறுதிப்படுத்தவும் சரியான வழிகாட்டுதல்
இருந்தால் மட்டுமே வரும் காலங்களில் இதுபோன்ற தவறுகள் நடப்பதை தடுக்க முடியும்.
119 வயது பாட்டியம்மா மரணம் – சோகத்தில் மக்கள்
119 வயது பாட்டியம்மா மரணம் – சோகத்தில் மக்கள்
உலகில் அதிக வயதான பெண்மணியாக இடம்பிடித்த டனக்கா என்ற மூதாட்டி தனது
119 தாவது வயதில் பலியாகியுள்ளார்
ஜப்பானில் அதிக வயது கொண்ட பெண்மணியாக இவர் இடம்பிடித்து சாதனை நிகழ்த்தியுள்ளார்
இவரது மரணம் உலக மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளது
உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்
உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்
பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய வீரர்கள்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்
உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷிய படைகள் சமீபத்தில்
வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷிய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.
தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு
தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது.
அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
முன்னதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களை சேர்ந்த பெண்கள்,
ரஷிய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்-பதிலடியாக இஸ்ரேல் எறிகணை தாக்குதல்
இஸ்ரேல் நிலைகள் மீது ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர்
,அதனை அடுத்து குறித்த ரக்கட் வீச பட்ட நிலைகள் மீது இஸ்ரேல் இராணுவம் ஐம்பது ஆட்டிலறி எறிகணைகள் வீசியுள்ளன
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,
கமாஸ் இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதல் நடத்தி ஓய்ந்துள்ள நிலையில் தற்போது
ஹிஸ்புல்லாக்களை இஸ்ரேல் வலிந்து இழுத்து வருகிறது
கடந்த தினம் இஸ்ரேல் உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் இந்த பழிவாங்கும்
தாக்குதலை இஸ்ரேல் படைகள் நடத்தியுள்ளமை குறிப்பிட தக்கது.
எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு
எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு
ஈரானில் இருந்து எண்ணையை கடத்தி சென்று கொண்டிருந்த வெளிநாட்டு எண்ணெய்
கப்பல் ஒன்று மத்திய தரைக் கடல் பகுதியில் வைத்து ஈரான் இராணுவத்தால் சுற்றிவளைக்க பட்டு சிறை பிடிக்க பட்டுள்ளது
குறித்த எண்ணெய் கப்பலில் இரண்டு லட்சம் லீட்டர் எண்ணெய்கள் இருந்ததாக ஈரான் இராணுவம் அறிவித்துள்ளது
தமது நாட்டின் எல்லை பகுதிக்குள் நுழைந்து ,இந்தஎண்ணெய் திருட்டில் ஈடுபடும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் கப்பல்களை ஈரான் இராணுவம் துரத்தி சிறை பிடித்து வருகிறது
மத்திய கிழக்கு முஸ்லீம் நாடுகளை பயங்கரவாதம் என்ற போர்வையில் மிரட்டி அதன் ஆட்சிகளை கவிழ்த்து அந்த நாட்டின் செல்வதை சுரண்டி வந்த அமெரிக்காவுக்கு ஈரான் நெத்தியடி வழங்கி வருகிறது
ஈரான் கடல் எல்லையை கடந்தது இவ்வாறு கப்பல்கள் கடத்தி செல்ல படும் எண்ணெய்களை ஈரான் இராணுவத்தின் விசேட கடல் சார் கண்காணிப்பு படைகள் துரத்தி பிடித்து வருகின்றன
அமெரிக்கா ஐரோப்பிய அரச கொள்ளையர்களின் இந்த கடல் கொள்ளையை தடுக்க ஈரான் இராணுவத்தினரால் சிறப்பு புலனாய்வு மற்றும் முப்படைகள் இந்த படை பிரிவு விசேடமாக இயங்கி வருகிறது
கடல் கொள்ளையர்கள் வெள்ளையர்கள் என்பதும் ,நாடுகளை ஆக்கிரமித்து அந்த நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கும் கோட்டு போட்ட எதிரி கொள்ளையர்கள் இவர்கள் என்பது இப்பொழுது எதிரிக்கு அம்பலமாகியுள்ளது
எண்ணெய் கடத்திய கப்பல் – ஈரானால் சிறை பிடிப்பு
தொடர்ந்து குறித்த ஈரானிய எதிரி நாட்டின் கப்பல் ஈரான் இராணுவத்தால் தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த படுகிறது ,
ஈரான் இராணுவத்தினருக்கு கிடைக்க பெற்ற புலனாய்வு தகவலை அடுத்தே இந்த எதிரி கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது என ஈரான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் தமது கடல் எல்லையில் பாதுகாப்பை ஈரானிய கடல் படை அதிகரித்துள்ளது ,மத்திய ஈராக்கில் நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவம் சிரியா முதல் ஈராக் வரையான பகுதிகளில் எண்ணெய் திருட்டில் ஈடுபட்டு வருகிறது
இந்த எண்ணெய்கள் அமெரிக்கா இராணுவ கப்பல்கள் மூலமும் கடத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
உணவகத்தில் வெடித்த மனித குண்டு – உடல் சிதறி பலர் பலி
உணவகத்தில் வெடித்த மனித குண்டு – உடல் சிதறி பலர் பலி
சோமாலிய தலைநகர் பகுதியில் தற்கொலை குண்டு தாரி நடத்திய தாக்குதலில் சிக்கி
ஏழுபேர் உடல் சிதறி பலியாகினர் மேலும் எட்டுக்கு மேற்பட்டவர்கள் பாடுகாயமடைந்துள்ளனர்
உணவகம் முற்றாக சேதமடைந்துள்ளது
இந்த தாக்குதலானது Mogadishu’s Lido Beach பகுதியில் இடம்பெற்றுள்ளது ,
சம்பவத்தை அடுத்து விசேட இராணுவத்தினர் குவிக்க பட்டு தேடுதல் முடுக்கி விட பட்டுள்ளது


























