Tag: பாம்பு
பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு
பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு
பஸ்ஸில் பதற்றத்தை ஏற்படுத்திய பாம்பு ,குருநாகலில் இருந்து நேற்று காலை மாவத்தகம மதிபொக்க நோக்கி பயணித்த தனியார் பஸ்ஸில் பாம்பு இருந்தமையால் மிகவும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று காலை 8 மணியளவில் குருநாகல் பிரதான பஸ் நிலையத்தில் இருந்து பஸ் புறப்பட்டுச் சென்றதுடன், சில நிமிடங்களின் பின்னர் பஸ்ஸின் பின் கதவுக்கு அருகில் உள்ள இருக்கைக்கு அடியில் பாம்பு ஒன்று இருந்துள்ளது.
நேற்று அலுவலக நாள் என்பதால், பஸ்ஸில் ஏராளமானோர் பயணம் செய்துள்ளனர்.
இதன்போது, இருக்கைக்கு அடியில் இருந்து பாம்பு வெளிப்பட்டதை பார்த்த பெண் ஒருவர், மிகவும் பயந்து, ‘பாம்பு..பாம்பு..’ என சத்தம் போட்டார்.
இதையடுத்து குறித்த பாம்பு பஸ்ஸின் முன்பகுதிக்கு ஊர்ந்து சென்றுள்ளது.
பாம்பு முன்னால் வருவதைக் கண்ட சாரதி, குருநாகல் அட்கந்த ஆலயத்திற்கு அருகில் பஸ்ஸை நிறுத்தினார்.
பஸ்சை நிறுத்தியதால் பயந்துபோன பயணிகள் அனைவரும் பஸ்சை விட்டு இறங்கினர்.
சிறிது நேரத்தின் பின் பஸ்ஸில் இருந்த பாம்பை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. எனினும் பஸ் மீண்டும் பயணத்தை ஆரம்பித்தாலும் அதில் பயணிக்க பயந்த சிலர் வேறு பஸ்ஸில் செல்ல முடிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா

- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்

பாம்புடன் பாடசாலை வந்த மாணவி
பாம்புடன் பாடசாலை வந்த மாணவி
தரம் 8 இல் கல்வி பயிலும் மாணவியொருவரின் புத்தகப் பைக்குள் விஷப்பாம்பொன்று இருந்ததில் வகுப்பு மாணவர்கள் மத்தியில் பெரும் அச்சத்ததை ஏற்படுத்தியுள்ளது.
ஹிங்குராக்கொட கல்வி வலயத்திற்குட்பட்ட நகரிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் புதன்கிழமை (13) காலை பாடசாலைக்கு வருகை
தந்திருந்த மாணவி புத்தகத்தை எடுப்பதற்காக புத்தகப் பைக்குள் கையை விட்ட வேளை ஏதோவொன்று அசைவதாக உணர்ந்த மாணவி சத்தமிட்டவாறு வகுப்பறையை விட்டு வெளியேறியுள்ளார்.
பாம்புடன் பாடசாலை வந்த மாணவி
விடயமறிந்த பாடசாலை அதிபரும்,ஆசிரியர்களும் அந்த மாணவியின் புத்தகப் பையை வகுப்பறையை விட்டு வெளியே எடுத்து பார்க்கையில் அதனுள்ளே கறுப்பு நிற விஷப்பாம்பொன்று இருப்பது தெரிய வந்தது.
மேலும் பாடசாலையில் பணிப்புரிவோரின் உதவியுடன் பாம்பை விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்
- புத்தாண்டில் இருவர் படுகொலை
- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன
- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி
- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்
- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்
- யாழில் சடலம் மீட்பு
- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்
- புலிகள் ஆயுதக் கிடங்கில் வீழ்ந்த அனுரா
- பண்டிகைக் காலத்தில் சாலை விபத்து மரணங்கள்
- சூரிய மின்சக்தி பயனர்களுக்கு இன்று ஆப்பு
- சிங்களப் புத்தாண்டின் புனிதமான நாளாம்
மாணவனின் சப்பாத்துக்கள் பாம்பு
மாணவனின் சப்பாத்துக்கள் பாம்பு
கொழும்பில் உயர் தரம் கற்கும் மாணவன் ,ஒருவரது சப்பாத்துக்குள் பாம்பு ,குட்டி ஒன்று இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொழும்பில் உள்ள தனது பாடசாலைக்கு வந்து ,அந்த சப்பாத்தை கழற்றி பார்த்த பொழுது ,அதற்குள் பாம்பு குட்டி ஒன்று உள்ளது கண்டு பிடிக்க்க பட்டுள்ளது.
எனினும் மாணவனுக்கு பாம்பின், விஷ பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் மக்கள் சப்பாத்தை அணிவதற்கு ,முன்னர் அதனை சோதனை செய்த பின்னர் ,அணிந்து செல்லும் அப்டி அறிவிக்க பட்டுள்ளது.
வானை சுற்றிய அனகொண்டா பாம்பு காணொளி
வானை சுற்றிய அனகொண்டா பாம்பு காணொளி
அனகொண்டா பாம்பு ஒன்று வான் ஒன்றை சுற்றியுள்ள காட்சிகள்
டுவிட்டர் சமூக வலைதளத்தில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
இந்த பாம்பு வானை சுற்றியுள்ள காட்சியை கண்ணுற்ற மக்கள் அங்கிருந்து தப்பி ஓடும் காட்சிகள் வைரலாகிய வண்ணம் உள்ளது.
அந்த காணொளியை இங்கே காணுங்கள் .
லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்
லண்டன் வீதியில் இரட்சத பாம்பு அலறிய ஓடிய மக்கள்
லண்டன் கென்ட் Hudson வீதியில் ஐந்து அடி நீளமான பாம்பு ஒன்று உலாவியதை கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
வீதியால் சென்ற தபால் காரர் ஒருவர் பாம்பை பிடித்து பேஸ்புக்க்கில் பதிவு செய்துள்ளார் .
அதுவே உள்ளூர் ஊடகங்களில் தலைப்பு செய்திகளாக மாறியுள்ளது.
பிரிட்டனில் பாம்பு தொல்லை இல்லை என உலாவும் மக்களே யாக்கிரதை. இதோ பாம்பு உலவுகிறது எச்சரிக்கையாக இருங்கள் .
சாப்பாட்டு பாசலுக்குள் -பாம்பு தோல்- என்னங்கடா நடக்குது
சாப்பாட்டு பாசலுக்குள் -பாம்பு தோல்- என்னங்கடா நடக்குது
கேரளாவில், பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவின் நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா, அதே
பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் பாம்பு தோல் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நெடுமங்காடு பொலிஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் உணவை வாங்கி சோதனை செய்தனர். மேலும்,
சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கும் சீல் வைத்தனர். இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஒரு பெண் பாம்பிற்கு சண்டை போட்ட மூன்று ஆண் பாம்பு
ஒரு பெண் பாம்பிற்கு சண்டை போட்ட மூன்று ஆண் பாம்பு
அவுஸ்ரேலியாவில் வீடொன்றுக்குள் நுழைந்த பெண் பாம்பு ஒன்றுக்கு மூன்று ஆண் பாம்புகள் சண்டை போட்ட சுவாரசியம் நடந்துள்ளது
கோல்டன் வகை என குறிக்க படும் இந்த பாம்புகள் மிக அரிதானவை என தெரிவிக்க படுகிறது
மனிதன் மட்டும் அல்ல பாம்புகளும் பெண்ணுக்கு அடிமை என்பது இதன் மூலம் தெரிகிறது















