Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்

லண்டனில் – பேய் பிடித்த மனைவியை வெட்டி கொன்ற கணவன்

பிரிட்டன் Godwin Road, Margate பகுதியில் 56 வயதுடைய நபர் ஒருவர் தனது மனைவியை

கழுத்தில் வெட்டி கொலை புரிந்துள்ளார் ,பின்னர் அவரது நெஞ்சிலும் குத்தியுள்ளார்

தனது மனைவிக்கு பேய் பிடித்துள்ளது என்ற முதன்மை குற்ற சாட்டை முன்வைத்து இவர் இந்த கொலையினை புரிந்துள்ளாராம்

கழுத்தை வெட்டி கொலை செய்த பின்னர் காவல்துறைக்கு அழைப்பினை

மேற்கொண்டு தனது மனைவியை கொன்று விட்டதாக தெரிவித்துள்ளார் ,போலீசார்

ஏன் கொன்ராய் என வினவியதுக்கு, அதற்கு பல காரணங்கள் உள்ளது என தெரிவித்துள்ளார்

வீடு வந்து கதவை தட்டிய பொழுது இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியை மீட்டனர் ,ஆனால் அவர் இறந்து விட்டார்

தற்போது கொலையாளி மன நிலை பாதிக்க பட்ட
நிலையில் இந்த கொலையினை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

    லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை

    லண்டன் – டோவர் பகுதியில் சிக்கிய கஞ்சா பண்ணை

    லண்டன் Folkestone Road, Dover பகுதியில் உள்ள வீடொன்றை போலீசார் திடீரென சுற்றி

    வளைத்தனர் ,அப்பொழுது நகு 180 கஞ்சா செடிகள் மற்றும் அது வளர்க்க பயன் படுத்த பட்ட உபகரணங்கள் என்பன மீட்க பட்டன

    சட்டவிரோதமாக மேற்கொள்ள பட்டு வந்த இந்த வியாபாரம் தடுத்து நிறுத்த பட்டுள்ளது

    பொலிசாருக்கு கிடைக்க பெற்ற புலனாய்வு தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட

    சுற்றிவளைப்பில் இரண்டு லட்சம் பவுண்டுகள் பெறுமதியான கஞ்சா பண்ணையே இவ்வாறு சிக்கியுள்ளது

    தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன

      Posted in Uncategorized உலக செய்திகள்

      இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

      இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

      உக்கிரேனுக்கு இஸ்ரேல் அரசு ஆயுதங்களை வழங்கி வருகிறது ,இஸ்ரேலின் இந்த

      முடிவிற்கு ரசியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

      தொடர்ந்து இஸ்ரேல் இவ்விதம்ஸ் செயல்பட்டால் அது விளைவுகளை சந்திக்கும் என ரசியா எச்சரித்துள்ளது .


      உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலையில் உள்ள போதும், சர்வதேச முக்கிய நாடுகள்


      ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        லண்டன் குகைக்குள் 170 ஆயிரம் பவுண்டுகளுடன் மூவர் கைது

        லண்டன் குகைக்குள் 170 ஆயிரம் பவுண்டுகளுடன் மூவர் கைது

        லண்டன் பிரான்ஸ் எல்லையோர சுரங்கவழி பாதையூடாக கார் ஒன்றில் பிரிட்டனை

        விட்டு பிரான்சுக்குள் நுழைய முயன்ற ஆண் , இரு பெண்கள் எல்லையோர காவல் படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

        இவர்கள் எடுத்து சென்ற கைப் பையை சோதனை செய்த பொழுது அதற்குள் இருந்து

        ஒருலட்சம் பவுண்டுகள் மற்றும் ,அதே காரில் பயணித்த இரு பெண்களிடம் இருந்து

        தலா முப்பத்தி ஆறாயிரம் பவுண்டுகள் மீட்க பட்டுள்ளன

        மூவரும் கைது செய்ய பட்ட நிலையில் இரு பெண்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

        ஆண் தொடர்ந்து தடுத்து வைக்க பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டு வருகின்றார்


        புறப்பட்டி வியாபாரத்தில் இவர்கள் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது

        இவர்கள் மூவரும் பிரிட்டன் Folkestone பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்க படுகிறது

          Posted in உலக செய்திகள்

          ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

          ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

          உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடராக போரை தொடுத்த வண்ணம் உள்ளது ,57 ழாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் ரசியா இராணுவம் அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது

          இவ்வேளைஉக்கிரேனில் முக்கிய நகராகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்கி வரும் மரியபோல் பகுதியில் 1400 க்கு மேற்பட்ட உக்கிரேனிய இராணுவத்தினர் எதிரி இராணுவமான ரசியாவிடம் சரண் அடைந்துள்ளனர்

          எதிரி படைகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு தம்மிடம் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய இராணுவம் தெரிவித்துள்ளது

          இந்த சரணடைதலின் பொழுது எதிரிகள் பயன் படுத்திய கனரக டாங்கிகள் மற்றும் கவச வண்டிகளில் ,அதே எதிரிகளின் சீருடை அணிந்தவாறு ரஷியா இராணுவம்

          முன்னேறிய வண்ணம் அந்த பகுதிகளில் உருமறைப்பு செய்தவாறு உலாவிய வண்ணம் வருகிறது

          உருமறைப்பு செய்ய பட்ட நிலையில் அதே இராணுவத்தின் கவச வண்டிகள் அடங்கிகளில் வளம் வரும் ரசியாவினது இந்த சம்பவம் உக்கிரேன் இராணுவத்தின் உளவியல் உரனில் போராடும் செயல்திறனை செயல் இழக்க வைத்துள்ளது

          கைது செய்யப் பட்ட எதிரி படைகள் உலக கைதிகள் பாதுகாப்பு சட்டதின் கீழ் ரசிய இராணுவதினால் நடத்துமா என்பதே இன்றுள்ள கேள்வியாக உள்ளது .

          அடி பணிய மறுக்கும் உக்கிரன் இராணுவம் என பறை சாற்றி வந்த உக்கிரேனிய அரச படைகளிற்கும் அதன் தளபதிகளுக்கும்

          ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

          இவ்விதம் பெரும் தொகையில் தஞ்சம் புகுந்துள்ள எதிர் தரப்பின் இராணுவ காவலர்கள் தஞ்சம் உலக ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          உக்கிரேன் இராணுவத்தின் சரணாகதி நடவடிக்கையும்

          இதனால் அந்த இராணுவத்திற்குள் எழப் போகும் உலவியில் கலக்கமும் தொடர்ந்து ரசிய படைகளுடன் போரிடும் தாக்கு திறனை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது

          போல் உளவியல் தளத்தில் பாதிப்பை எந்த படைகள் ஏற்படுத்துகிறோதோ அவர்களே அந்த போரில் வெற்றி பெறுவார்கள் ,

          இதற்க்காக இராணுவம் மற்றும் அரச இயந்திரம் ஊடகங்களை பயன் படுத்தி வெற்றி பரப்புரைகளை ஆற்றி வரும்

          இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற போரில் சிங்ளக தரப்பு நடத்திய ஊடக ஆதார பரப்புரை ஒன்றை எடுத்து கூறலாம்

          அதுபோலவே ரசியாவிடம் சரண் அடைந்த உக்கிரேன் இராணுவத்தை வைத்து ரசியா படைகள் பரப்புரை புரிந்து வருகின்றனர் ,

          இந்த செயல் பாடு ரசியா எதிர் பார்க்கும் உளவியல் வெற்றியை ஈட்டி தருமா என்பதே காலத்தின் முன் விரிந்து கிடக்கும் களமுனை சாட்சிகளாக மாற்றம் பெற்றுள்ளன

          • வணனி மைந்தன் –
            Posted in உலக செய்திகள்

            ஐ எஸ் தாக்குதல் – ஒருவர் மரணம் நால்வர் காயம்

            ஐ எஸ் தாக்குதல் – ஒருவர் மரணம் நால்வர் காயம்

            ஈராக் வடகிழக்கு Diyala.பகுதியில் ஐ எஸ் தீவிரவாத குழுவினர் நடத்திய தாக்குதலில்

            சிக்கி சம்பவ இடத்தில ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்

            தாக்குதல் சம்பவத்தை அடுத்து இராணுவம் குவிக்க பட்டு தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன

              Posted in Uncategorized உலக செய்திகள்

              டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை

              டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை

              சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் தலைமறைவான குற்றவாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

              டெல்லியில் பாஜக நிர்வாகி சுட்டுக் கொலை- போலீசார் விசாரணை
              டெல்லியில் துப்பாக்கிச் சூடு நடைபெற்ற இடம்

              அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தில் நடைபெற்ற வன்முறையை அடுத்து தலைநகர் டெல்லியின் கிழக்குப் பகுதியில் பதற்றமான சூழல் காணப்படுகிறது.

              இந்நிலையில் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ளூர் பாஜக நிர்வாகி ஜிது சவுத்ரி மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகள் அங்கிருந்து தப்பினர்.

              இந்த கொலை குறித்து அறிந்த டெல்லி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். துப்பாக்கிச் தோட்டாக்கள் உள்பட
              இந்த கொலை தொடர்பான சில ஆதாரங்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

              நேரில் கண்ட சாட்சிகள் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகளை தேடும் பணி நடைபெறுவதாக டெல்லி கிழக்கு பகுதி காவல்துறை அதிகாரி பிரியங்கா காஷ்யப் தெரிவித்தார்.

              மருத்துவமனையில் ஜிது சவுத்ரி உடலை பார்வையிட்ட டெல்லி பாஜக தலைவர் ஆதேஷ் குப்தா, அவர் கொல்லப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றார்.


              பிரேத பரிசோதனைக்கு பின்னர் குடும்பத்தினரிடம் அவரது உடல் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

                Posted in Uncategorized உலக செய்திகள்

                ரசியா 10 போர் கப்பல்கள் போர் ஒத்திகையில்

                ரசியா 10 போர் கப்பல்கள் போர் ஒத்திகையில்

                ரசியாவின் பத்து போர் கப்பல்கள் பால்டிக் கடல் பகுதியில் இராணுவ ஒத்திகையில் ஈடுபட்டுள்ளது


                இந்த போர் பயிற்சியின் ஊடாக நாடுகளை மிரள வைக்கும் நடவடிக்கையில் ரசியா

                ஈடுபடும் என எதிர்பார்க்க படுகிறது

                எனினும் இந்த கூற்று உக்கிரேனில் ரசியா படைகள் பலத்த இழப்பை சந்தித்து வரும் நிலையில்


                இராணுவ மிரட்டல்கள் பலிக்குமா எனபதே கேள்வியாக உள்ளது

                  Posted in உலக செய்திகள்

                  லண்டனில் பற்றைக்குள் காரை மறைத்து வைத்த டிரைவர்

                  லண்டனில் பற்றைக்குள் காரை மறைத்து வைத்த டிரைவர்

                  பிரிட்டன் Wrotham பகுதியில் அதிகாலை 4.15 மணியலாவில் ரவுண்டபோர்ட அருகில்


                  கறுப்பு நிற விளையாடடு மொடல் கார் ஒன்றினை சாரதி மறைத்து வைத்துள்ளார்

                  மேற்படி சம்பவத்தை முகர்ந்து பிடித்த போலீசார் அவ்விடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார்

                  அவ்வேளை அதிக போதையில் காணப்பட்ட சாரதி கைது செய்ய பட்டு நீதிமன்ற காவலில் வைக்க பட்டுள்ளார்

                  இப்படியும் சாரதிகள்

                    Posted in Uncategorized உலக செய்திகள்

                    மேற்கு நாடுகளின் பொருளாதார தடை தோல்வி – புட்டீன் நக்கல்

                    மேற்கு நாடுகளின் பொருளாதார தடை தோல்வி – புட்டீன் நக்கல்

                    உக்கிரேன் மீது போரினை நடத்தி வரும் ரசியா மீது மேற்குலக நாடுகளின் கூட்டணி பொருளாதார தடையினை விதித்தன

                    இந்த தடை உத்தரவினால் தமக்கு எவ்வித இழப்பும் ஏற்படவில்லை எனவும், அதனால்

                    அவர்கள் தோல்வியை தழுவியுள்ளதகாக ரசியா அதிபர் புட்டீன் கம்பிரமாக தெரிவித்துள்ளார்

                    ரஷியாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட முக்கிய நாடுகள் அதிக அளவான எரிவாயு

                    மற்றும் எரிபொருளை கொள்வனவு செய்து வருகின்றன

                    இதனால் அமெரிக்கா சீற்றம் அடைந்தது ,இந்த நிலையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டு மேற்குலக நாடுகள் ,


                    மற்றும் அவர்கள் கூட்டணிக்கு கடுப்பை கிழப்பியுள்ளன

                      Posted in Uncategorized உலக செய்திகள்

                      போதையின் உச்சத்தில் காரில் சென்று மகளை மோதிய தாய்- டயரில் சிக்கி துடித்த மகள்

                      போதையின் உச்சத்தில் காரில் சென்று மகளை மோதிய தாய்- டயரில் சிக்கி துடித்த மகள்

                      காரை நிறுத்தும்படி மகள் கத்தியும், மதுபோதையில் இருந்த தாய் காரை வேகமாக இயக்கியுள்ளார்.

                      மது போதையின் உச்சத்தில் காரில் சென்று மகளை மோதிய தாய்- டயரில் சிக்கி துடித்த மகள்

                      ஆஸ்திரேலிய சிட்னி மாகாணம் காரிங்பக் பகுதியை சேர்ந்த டெல் பல்மர் என்ற 58 வயது பெண்மணி போதையில் தன் மகள் மீது காரை ஏற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                      கடந்த ஆண்டு மே 2-ம் தேதி மது விருந்து ஒன்றில் பங்கேற்ற டெல் பல்மர் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் அவருக்கும் அவரது

                      மகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த டெல் பல்மர் வீட்டின் முன் நிறுத்தியிருந்த தனது காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேற முயற்சித்துள்ளார்.

                      அவரது காரின் முன், கெலி பெனித் என்ற அவரது மற்றொரு மகள் நிற்பதை டெல் பல்மர் கவனிக்கவில்லை. இதனால் தாய் ஓட்டிச் சென்ற கார் கெலி பெனித் மீது

                      மோதியுள்ளது. கார் வேகமாக வந்ததால் கெலி பெனித் காரின் முன்பகுதிக்கும் டயருக்கும் இடையே அவர் சிக்கிக்கொண்டுள்ளார். காரை நிறுத்தும்படி மகள் கத்தியும், மதுபோதையில் இருந்த தாய் காரை வேகமாக இயக்கியுள்ளார்.

                      காரின் அடியில் சிக்கிய மகள் 100 மீட்டர் தூரத்திற்கு இழுத்து செய்யப்பட்டார். அக்கம்பக்கத்தினர் கத்தியபின் தான் டெல் பல்மர் காரை நிறுத்தியுள்ளார்.

                      படுகாயமடைந்த மகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல மாத சிகிச்சைக்கு பின் தற்போது உடல்நிலை தேறியுள்ளார்.

                      இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டெல் பல்மரின் வழக்கு நீதிமன்றத்தில்
                      விசாரணைக்கு வந்துள்ளது. இதில் டெல் பல்மர் தனது மகளிடமும், அண்டை


                      வீட்டாரிடமும் மன்னிப்புக்கேட்டுக்கொள்வதாக டெல் பல்மர் கூறியுள்ளார்.
                      இந்த வழக்கிற்கான தீர்ப்பு அடுத்த மாதம் 26-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

                        Posted in Uncategorized உலக செய்திகள்

                        உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்

                        உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்

                        கவுதம் அதானியின் சொத்து தற்போது கூகுள் நிறுவனத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகியோரை விட அதிகமாக உள்ளது.

                        உலக பணக்காரர்கள் வரிசையில் கவுதம் அதானி 6-வது இடம்
                        கவுதம் அதானி

                        உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி இருக்கிறார். கடந்த ஆண்டில் அதிகமாக சொத்து சேர்த்த வகையில் அவர் மிகப்பெரிய லாபம் அடைந்தார்.

                        கவுதம் அதானி கடந்த ஆண்டே ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அவர் ரிலையன்ஸ் குழும நிர்வாக இயக்குனர் மற்றும் தலைவருமான முகேஷ் அம்பானியை பின்னுக்கு தள்ளினார்.

                        இந்த நிலையில் உலக பணக்காரர்கள் வரிசையில் பட்டியலில் கவுதம் அதானி 6-வது இடத்துக்கு முன்னேறி உள்ளார். போர்ப்ஸ் வெளியிட்ட தகவல்படி அவர் அமெரிக்காவின் சாப்ட்வேர் சக்கரவர்த்தி லேரி எலிசனை முந்தினார்.

                        கவுதம் அதானியின் சொத்து நேற்று (ஏப்ரல் 11) ஒரே நாளில் ரூ.68 ஆயிரம் கோடி உயர்ந்து உள்ளது. அதன் காரணமாக அவர் உலக பணக்காரர்களின் வரிசையில் 6-வது இடத்தை பிடித்துள்ளார்.

                        கவுதம் அதானியின் சொத்து தற்போது கூகுள் நிறுவனத்தை சேர்ந்த லேரி பேஜ் மற்றும் செர்ஜிபிரின் ஆகியோரை விட அதிகமாக உள்ளது.

                        நேற்றைய வர்த்தகம் முடிவில் கவுதம் அதானியின் சொத்து மதிப்பு ரூ.9.27 லட்சம் கோடியாகும். இது முகேஷ்அம்பானியின் சொத்தைவிட ரூ.1.67 லட்சம் கோடி

                        அதிகமாகும். 2 வாரத்தில் இருவருக்கும் இடையே உள்ள சொத்து மதிப்பு வித்தியாசம் அதிகமாகி உள்ளது. கவுதம் அதானியின் 7 நிறுவனத்தின் பங்குகளின் விலையால் அவரது சொத்து மதிப்பும் அதிகரித்து உள்ளது.

                        அதானி குழுமத்தின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமான அதானி கிரீன் எனர்ஜியின் பங்குகள் விலை 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.
                        இதனால் தான் ஒரே நாளில் அவரது சொத்து மதிப்பு உயர்ந்துள்ளது.

                        Posted in உலக செய்திகள்

                        வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது

                        வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது

                        நிரவ் மோடியின் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை சுபாஷ்சங்கர்தான் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை மும்பை அழைத்து வந்துள்ளனர்.

                        வங்கி கடன் மோசடி- நிரவ் மோடி கூட்டாளி எகிப்து நாட்டில் கைது
                        சுபாஷ் சங்கர்

                        இந்தியாவில் பிரபல வைர வியாபாரியாக இருந்தவர் நிரவ்மோடி. இவருக்கு நாடு முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தங்க, வைர நகை கடைகள் இருந்தன.

                        இவர் தனது தொழிலை மேம்படுத்துவதற்காக பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி இருந்தார். பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி கடன் பெற்று இருந்தார்.

                        சுமார் ரூ.30 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கி இருந்த அவர் பாதி பணத்தை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தவில்லை. 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் அவர் கடன் மோசடி செய்ததாக வங்கிகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.

                        இதை அறிந்ததும் நிரவ் மோடியும் அவரது குடும்பத்தினரும் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் வெளிநாடுகளுக்கு தப்பி சென்று விட்டனர். நிரவ் மோடி லண்டனில்

                        தஞ்சம் அடைந்தார். அவரை அங்கிருந்து இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடந்து வருகிறது.

                        நிரவ் மோடியின் சொத்துக்களை ஏலம் விட்டு அந்த பணம் வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. முழுமையாக பணத்தை மீட்பதற்காக அவரது கூட்டாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஈடுபட்டனர்.

                        இந்த நிலையில் நிரவ் மோடியின் மிக முக்கிய நெருங்கிய கூட்டாளி சுபாஷ்சங்கர் எகிப்து நாட்டில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. சி.பி.ஐ. அதிகாரிகள் அவரது

                        நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். நேற்று அவரை எகிப்து தலைநகர் கெய்ரோவில் கைது செய்தனர்.

                        நிரவ் மோடியின் பெரும்பாலான பண பரிவர்த்தனைகளை சுபாஷ்சங்கர்தான் செய்ததாக தெரிகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக சி.பி.ஐ.

                        அதிகாரிகள் அவரை மும்பை அழைத்து வந்துள்ளனர். நிரவ் மோடி வழக்கில் சுபாஷ்சங்கர் கைதானது மிக பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

                        மும்பை அழைத்து வரப்பட்டுள்ள சுபாஷ்சங்கர் சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார். அதன் பிறகு அவரை சி.பி.ஐ. அதிகாரிகள் காவலில் எடுத்து

                        விசாரணை நடத்துவார்கள். இதன் மூலம் பல புதிய தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

                        நிரவ் மோடி நடத்தி வந்த நிறுவனங்களில் பயர்ஸ்டார் டைமண்ட் நிறுவனத்தின் துணை பொது மேலாளராக சுபாஷ்சங்கர் இருந்து வந்தார். வைர நகைகளை

                        கோடிக்கணக்கில் கைமாற்றியதில் இவருக்குதான்
                        முக்கிய பங்கு இருப்பதாக கருதப்படுகிறது

                          Posted in உலக செய்திகள்

                          இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

                          .
                          இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

                          சிரியா நாட்டின் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து இஸ்ரேலிய விமானங்கள் நான்கு


                          ஏவுகணை தாக்குதலை நடத்தின, எனினும் இவர்களினால் ஏவப்பட்ட ஏவுகணைகளை

                          தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது

                          சிரியா நாட்டுக்குள் நுழைந்து இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்களை நடத்தி

                          வருகின்றமை குறிப்பிட தக்கது

                            Posted in உலக செய்திகள்

                            லண்டன் – முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்ட இம்ரான்கான் கட்சி

                            லண்டன் – முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்ட இம்ரான்கான் கட்சி

                            பாகிஸ்தானில் சுதந்திர போராட்டம் மீண்டும் தொடங்குகிறது என முன்னாள் பிரதமர் இம்ரான்கான் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

                            லண்டன் – முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்ட இம்ரான்கான் கட்சியினர்
                            நவாஸ் ஷெரீப் வீட்டை முற்றுகையிட்ட இம்ரான்கான் கட்சியினர்

                            பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 174 உறுப்பினர்கள்

                            வாக்களித்தனர். இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கம் செய்யப்பட்டார்.

                            இதற்கிடையே, அந்நாட்டு புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சி தலைவரான ‌ஷாபாஸ் ஷெரீப்பை தேர்வு செய்ய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

                            இந்நிலையில், இங்கிலாந்தின் லண்டன் நகரில் அமைந்துள்ள முன்னாள் பிரதமர்

                            நவாஸ் ஷெரீப்பின் வீட்டை பாகிஸ்தான் தெஹ்ரிக் இன்சாப் கட்சி தொண்டர்கள் முற்றுகையிட்டனர். அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.

                            முற்றுகை போராட்டத்தைட் தொடர்ந்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது

                              Posted in உலக செய்திகள்

                              இரவு விடுதியில் துப்பாக்கி சூடு -இருவர் மரணம் – 10 பேர் காயம்

                              இரவு விடுதியில் துப்பாக்கி சூடு -இருவர் மரணம் – 10 பேர் காயம்

                              அமெரிக்கா Taboo Nightclub and Lounge, Cedar Rapids பகுதியில் உலா இரவு விடுதியில்

                              நடத்தி பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி இருவர் பலியாகினர் ,மேலும் பது பேர்

                              படுகாயமடைந்துள்ளனர்


                              இந்த சூட்டு சம்பவத்திற்கான கரணம் தெரியவிலை விசாரணைகள் தொடர்ந்து

                              இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                Posted in உலக செய்திகள்

                                லண்டனில் – ஆடையில் தீப்பிடித்து எரிந்த வீடு

                                லண்டனில் – ஆடையில் தீப்பிடித்து எரிந்த வீடு

                                கடந்த ,தினம் லண்டன் Landon Road, Herne Bay பகுதியில் ஆடம்பர வீடு ஒன்று தீயில்

                                எரிந்து சாம்பலானது ,இந்த தீ பற்றால் அங்கிருந்த ஆடையில் தீ பற்றிய நிலையில்

                                அவை வீடு முழுவதும் பரவி எரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                இந்த புகை மணடலத்தில் சிக்கி நிறைமாத கர்ப்பிணி மூச்சு திணறலுக்குள் உள்ளாகியுள்ளார் ,


                                குழந்தை பிரசவிக்க எட்டு வாரங்கள் உள்ள நிலையில் அணைத்து உடமைகளும் தீயில் எரிந்து அழிந்துள்ளது

                                இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,தொடர்ந்து விசாரணைகள்

                                இடம்பெற்ற வண்ணம் உள்ளன
                                தமிழர்களே எச்சரிக்கை

                                  Posted in உலக செய்திகள்

                                  சாப்பாட்டு கடைக்குள் புகுந்த கார் – 11 பேர் காயம்

                                  சாப்பாட்டு கடைக்குள் புகுந்த கார் – 11 பேர் காயம்

                                  அமெரிக்கா Texas பகுதியில் உள்ள நாடமாடும் food truck in Austin, ஒன்றுக்குள் வேகமாக

                                  பாயனித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அந்த லொறி கடைக்குள் மோதி சிதறியது


                                  இதன் பொழுது அங்கு நின்ற பதினொரு மக்கள் படுகாயமடைந்தனர்

                                  காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டனர் ,கார்

                                  பலத்த சேதமடைந்துள்ளது குறித்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                                  அமெரிக்காவில் இவ்வாறான சம்பவங்கள் சாதாரண நிகழ்வுகளில் ஒன்றாக மாற்றம்

                                  பெற்று வருகின்றமை கவனிக்க தக்கது

                                    Posted in Uncategorized உலக செய்திகள்

                                    உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி – ரசியா கண்டணம்

                                    உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி – ரசியா கண்டணம்

                                    துருக்கி நட்டு உளவு விமானங்களே உக்கிரேனில் ரசியா நாட்டின் தாக்குதல்களை

                                    தடுத்து நிறுத்தவும் பேரழிவுகளை ஏற்படுத்தவும் துருக்கி உதவி புரிந்து வருவதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

                                    இவை ரசியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது

                                    மார்ச் மாதம் அளவில் மட்டும் சுமார் 42 20 TB2 unmanned combat aerial vehicles (UCAV) விமானங்களை விற்பனை செய்துள்ளது


                                    இந்த விமான விற்பனைக்கு எதிராக துருக்கியை ரசியா கடிந்துள்ளது

                                    தமது இராணுவம் முடக்க பட துருக்கி காரணமாக அமைந்துள்ளதை எண்ணி ரசியா கொதிப்பில் உறைந்துள்ளது

                                      Posted in உலக செய்திகள்

                                      இராணுவ முகாம் மீது அதிரடி தாக்குதல் – 16 இராணுவம் பலி – 20 பேர் காயம்

                                      இராணுவ முகாம் மீது அதிரடி தாக்குதல் – 16 இராணுவம் பலி – 20 பேர் காயம்

                                      Burkina Faso’s Sanmatenga மாநிலத்தில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது


                                      போராளிக்குழு நடத்திய தாக்குதலில் பதினாறு இராணுவத்தினர் சம்பவ இடத்தில பலியாகினர்

                                      மேலும் இருபதுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்

                                      தொடர்ந்து அரச இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடத்த பட்டு வருகின்றமை

                                      குறிப்பிட தக்கது