Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளிடமிருந்து இராணுவ உதவிஅவசியமில்லை – இராணுவம்
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த ஏனைய நாடுகளிடமிருந்து இராணுவ உதவிஅவசியமில்லை – இராணுவம்
இலங்கை இராணுவம் மற்றும் பொலிஸாரினால் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை திறம்பட கையாள முடியும்
இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புவது தொடர்பில் இருநாடுகளுக்குமிடையில் கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை
இலங்கையில் கொரோனவிரஸின் பரவலைக் கட்டுப்படுத்த மற்ற நாடுகளிடமிருந்து இராணுவ உதவி பெற எந்த ஒரு அவசியமும்
கிடையாது என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல்(ஓய்வு) கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டின் முப்படைமற்றும் பொலிஸார் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தி தமது திறன்களை ஏற்கனவே நிரூபித்துள்ளார்கள் என அவர் தெரிவித்தார்.
“எமது இராணுவம், கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஏற்பட்ட அவசரகால நிலைமையை கையாள்வதில் அவர்களின்
நிபுணத்துவம் மற்றும் தொழில்வான்மையை ஏற்கனவே வெளிக்காட்டியுள்ளது,” என அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில், ஒரு நாடு, அதன் புலனாய்வு நிறுவனங்களை, இராணுவ மற்றும் சுகாதார நிறுவனங்களுடன்
இணைப்பதன் ஊடாக எவ்வாறு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதில் ஏனைய நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்க விரும்புவதாக பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
“இலங்கையின் புலனாய்வு அமைப்புகள், கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் நெருக்கமாக
தொடர்புடையவர்களை கண்டுபிடிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இவ்வமைப்புக்கள், அவர்களை 14 நாட்கள்
தனிமைப்படுத்தலுக்குட்படுத்தும் செயல்முறைக்கு வழிகாட்டுகின்றன.” என அவர் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இலங்கையில் இந்திய இராணுவம்
பயன்படுத்தப்பட வேண்டும் என்ற வகையில் அண்மையில் வெளியான செய்திகள் தொடர்பாக கருத்துவெளியிட்ட பாதுகாப்பு
செயலாளர், இவ்வாறாக இரண்டு நாடுகளுக்கு இடையில் எத்தகைய கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை என அவர் தெரிவித்தார்.

217 தொழிற்சாலைகளில் பணிகள் மீண்டும் ஆரம்பம்
நாடு முழுவதுமுள்ள சுதந்திர வர்த்தக வலயங்களில் 217 தொழிற்சாலைகள் தற்போது மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக
தொழிற்சாலை ஏற்றுமதி மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் தொற்றுத் தடுப்புக்கான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு அமையவும், சுகாதார ஆலோசனைகளுக்கு
அமையவும் இவர்கள் செயற்பட வேண்டியது அவசியம் என அறிவறுத்தப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் 48 தொழிற் சாலைகளிலும் பியகம சுதந்திர வர்த்தக வலயத்தின் 35
தொழிற்சாலைகளிலும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 30,269 ஊழியர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

வீதியில் மயங்கி விழுந்த நபர் – மருத்துவ மனையில் அனுமதி
வீதியில் மயங்கி விழுந்த நபர் – மருத்துவ மனையில் அனுமதி
கடந்த தினம் வவுனியா இரண்டாம் குறுத்தெரு பகுதியில் நபர் ஒருவர்
திடீரென மயங்கி வீழ்ந்தார் ,இதனையே அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து
வந்த போலீசார் அவரை மீட்டு அம்புலன்ஸ் மூலம் வவுனியா மருத்துவ மனைக்கு அழைத்து செல்ல பட்டார்
இவருக்கு கொரனோ நோயானது உளளதா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

லண்டன் Chatham பகுதியில் தீவிரவாதி மக்கள் மீது சூடு – வீடியோ
லண்டன் Chatham பகுதியில் இயந்திர துப்பாக்கியுடன் தீவிரவாதி கைது – தப்பிய மக்கள் வீடியோ
லண்டன் Dock Head Road, Chatham பகுதியில் வீட்டு பால்கனியில் இயந்திர துப்பாக்கிகளுடன் நபர் ஒருவர் உலவியுள்ளார் ,இதனை
கண்ணுற்ற மக்கள் காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து அவர் மடக்கி பிடிக்க பட்டார் .
மக்களை சுடுவதற்கு முன்பாக இந்த துப்பாக்கிகளை காண்பித்து காவல்துறையினருக்கு அழையுங்கள் என சத்தம் போட்டுள்ளார் .
விரைந்து செயல் பட்ட காவல்துறையினரால் இவர் மடக்கி பிடிக்க பட்டார் ,இதனால் உயிர் சேதங்கள் தவிர்க்க பட்டன

மன்னார் ,வவுனியா மாவட்டங்களில் கடும் மழை
மன்னார் ,வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் மழை
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும்
வடமத்தியமாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியாமாவட்டங்களிலும்பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்
பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று காலை வெளியி;ட்டுள்ள வானிலை அறிக்கையில் ,மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல்
மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்
இலங்கையில் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை
பெற்று வந்தவர்களில் 104 பேர் அந்த நோயில் இருந்து முற்றாக விடுபட்டு
அவர் தம் குடும்ப உறவுகளுடன் மீள இணைந்துள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது
உலகில் தலை சிறந்த சேவையை தமது மருத்துவம் செய்து வருவதாக
இவர்கள் புகழாரம் சூடியுள்ளனர் .இவை தேர்தலை இலக்கு வைத்து இவ்விதமான
பரப்புரைகள் மெல்ல கசிய விட படுகிறது என்பதே யதார்த்த நிலையாக உள்ளது

ஊரடங்கை மீறிய 34,956 பேர் இலங்கையில் கைது
ஊரடங்கை மீறிய 34,956 பேர் இலங்கையில் கைது
இலங்கையில் ஊரடங்கு வேளையில் அந்த விதிகளை மீறி வெளியில் உலவிய சுமார் 34,956 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் ,
அவர்கள் வாகனங்களும் பறிமுதல் செய்ய பட்டுள்ளன
இந்த தண்ட பணத்தினை பதின் நாட்களுக்குள் செலுத்த வேண்டும் தவறின்
குற்ற பணம் மேலும் அதிகரிக்க பட்டு நீதிமன்றில் நிறுத்த படுவார்கள் என காவல்துறையினர் எச்சரித்து வருகின்றனர்
ஊரடங்கு விரைவில் அகற்ற படும் எனவும் ,சில பகுதியில் விலக்க பட்டுள்ளமைக்கு குறிப்பிட தக்கது

கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு
கால்களினால் கைகளை கழுவும் இயந்திரம் கண்டு பிடிப்பு
இலங்கையில் பிராவை வரும் கொரனோ நோயில் இருந்து தப்பிக்க எவ்வாறு கைகளை கழுவ வேண்டும் என விதிகள் கூறப்பட்டது .
அதனை அடுத்து இதனை நிவர்த்தி செய்திட எண்ணிய வாலிபர் ஒருவர்
கால்களினால் கைகளை புதிய இயந்திரம் மூலம் கழிவிடும் வழியொன்றை கண்டு பிடித்தார் .
மலிந்த விலையில் தயாரிக்க பட்டுள்ள இந்த இயந்திரம் மக்களுக்கு
பெரிதும் பலன் தரும் ஒன்றாக அமைந்துள்ளது
வெறும் மூவாயிரம் ரூபா செலவில் இது தயாரிக்க பட்டுள்ளது

உயிர்த்த ஞாயிறு தாக்குல் – குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்
உயிர்த்த ஞாயிறு தாக்குல் – குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்
தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ அல்லது தனிநபர்களுக்கோ இடமளிக்கப்படமாட்டாது
குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து, அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன்
மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும். சுமார் 270 க்கும் அதிகமானோரின் உயிரிழப்புக்கும் 500க்கும்
அதிகமானனோரின் படுகாயத்திற்கும் காரணமான உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலை, திட்டமிட்டு, நிதியுதவியளித்து,
ஆதரவளித்த அனைத்து குற்றவாளிகளையும் அரசாங்கம் வெளிக்கொண்டுவரும் என பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு)கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
மூன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்கள் ஆகியவற்றில் உள்நாட்டைச் சேர்ந்த
இஸ்லாமிய தீவிரவாத குழுவினால் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்று ஒரு ஆண்டு
நிறைவடைந்துள்ளதையடுத்து வெளியிடப்பட்ட அறிக்கையில் நாட்டில் தீவிரவாதத்தை பரப்புவதற்கு எந்த ஒரு குழுவினருக்கோ
அல்லது தனிநபர்களுக்கோ ஒருபோதும் இடமளிக்கப்படமாட்டாது என அவர் தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக தற்போது இடம்பெறும் விசாரணைகள் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள
பாதுகாப்புச் செயலாளர், இந்த குண்டுத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு, அவர்களின் சமூக அந்தஸ்து,
அரசியல் சிறப்புரிமை, இன,மத பேதம் பாராமல் தண்டனை வழங்குவதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பெற்றுக் கொடுக்கப்படும் என தெரிவித்தார்.
தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ், நாட்டு மக்கள்
அனைவருக்கும் பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்திலிருந்து பூரண பாதுகாப்பு அளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
“நாம், எமது நாட்டு மக்கள், இவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவங்களினால் மீண்டும் பாதிக்கப்படுவதற்கு ஒருபோதும்
அனுமதிக்கமாட்டோம். பயங்கரவாத அல்லது தீவிரவாத நடவடிக்கைகளை, அதன் ஆரம்ப கட்டத்திலேயே அடையாளம்
காணும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தார்.
தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதில் பொது மக்களின் உதவி மற்றும் புலனாய்வு அமைப்புகளின் பங்களிப்பு ஆகியவற்றின்
முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டிய பாதுகாப்பு செயலாளர், ஜனாதிபதியின் வழிகாட்டலுக்கமைய, நாட்டின் அனைத்து
புலனாய்வு அமைப்புகளும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரப்பட்டு, அவை பலப்படுத்தப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக லைசன்ஸ் இரத்து
சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக லைசன்ஸ் இரத்து
ஒன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடும்போது சரியான சுகாதார முறைகளை பின்பற்றாத வர்த்தகர்களின் வர்த்தக உரிமங்கள்
இரத்து செய்யப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களை விற்பனை செய்யும் மொபைல் விற்பனையாளர்கள் பாதுகாப்பான முறையில்
வியாபாரம் செய்யாமையால் கொவிட் 19 வைரஸ் பொது மக்களுக்கு பரவும் அபாயம் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன் விளைவாக, வீடு வீடாகச் சென்று மீன், காய்கறிகள், பழங்கள் மற்றும் பேக்கரி தயாரிப்புகளை ஒன்லைன் முறையின் கீழ்
விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட விற்பனையாளர்கள் மற்றும் நிறுவனங்களின் மொபைல் வணிகத்தை முன்னெடுப்பதில்
பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களை பொலிஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதற்கமைய சுத்தமான சீருடை அணிவது, பொருத்தமான காலணிகளை அணிவது, வியாபாரம் செய்யும் போது முக
கவசங்களை அணிவது, மற்றும் கையுறைகளை பயன்படுத்துதல், கைக்கழுவும் திரவங்களை உபயோகித்தல் ஆகியனவும் கைக்கொள்ள வேண்டும்.
மேலும் பேக்கரி உற்பத்தி பொருட்கள், சமைத்த உணவு போன்றவற்றை வழங்கும் போது அவற்றை கைளில் தொட்டு வழங்குவதை தவிர்க்குமாறும் பொலிஸார் கேட்டுள்ளனர்.
உணவு பொருட்களை காகிதத்திலோ அல்லது பிற அட்டைகளிலோ விற்பது, பணத்தைத் தொட்ட பின்னர் உணவுப் பொருட்கள் அல்லது வேறு பொருட்களைத் தொடக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உணவுகளை வழங்கும் போது ஒரு மீட்டர் சமூக இடைவெளியை பேணுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு
கணவனை அடித்து கொன்ற மனைவி – பிள்ளைகள் தவிப்பு
இலங்கை கண்டி பகுதியில் காதல் கணவனை அடித்து கொன்ற மனைவி பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துளளர் .
தினம் தோறும் போதையில் வந்து மனைவியை அடித்து ,வதை செய்து
வந்த கணவனின் தொல்லை தாங்கிட முடியாது ஒரே அடியாக அடித்து
கொலை செய்து விட்டு தற்பொழுது இரு பிள்ளைகளுடன் காவல்துறையில் சரண் அடைந்துள்ளார்
தாயிடம் இருந்து பிள்ளைகளை பிரித்தெடுத்து காவல்துறையினர் மனைவியை நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளார்
பிள்ளைகள் சிறார் நலன் காப்பகத்தில் ஒப்படைக்க பட்டுள்ளனர்
அவசரம் செய்த அலங் கோலத்தால் பிள்ளைகள் பெற்றவர்கள் இன்றி அனாதைகளாக தவித்து வருகின்றனர்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் – உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
இலங்கையில் கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம
சாந்திக்காக இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் மௌன அஞ்சலி மற்றும் மத வழிபாடுகள் நடைபெற்றன.
திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுனர் அலுவலகத்தில் ஆளுனர் அனுராதா யஹம்பத் தலைமையில் உயிர்
இழந்தவர்களின் ஈத்ம சாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று காலை 8.45 மணியளவில் இடம் பெற்று இந்த நிகழ்வில் அலுவலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
மலையகத்திலும் இன்று (21.04.2020) வழிபாடுகள் நடைபெற்றன.
மலையகத்திலுள்ள தேவாலயங்களில் இன்று விசேட ஆராதனைகள் நடைபெற்றன.
கோவில்கள்இ விகாரைகள்இ பள்ளிவாசல்கள் ஆகியவற்றிலும் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டி வழிபாடுகள் இடம்பெற்றன.


கொரனோவேளை கோட்டபாயா திமிர் பேச்சு
கொரனோவேளை கோட்டபாயா திமிர் பேச்சு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்திற்கு ஒரு வருடம் நிறைவடைவதை முன்னிட்டு ஜனாதிபதி அவர்களின் செய்தி
கொடூர தீவிரவாத கருத்தினைக் கொண்ட ஒரு குழுவினர் 2019 ஏப்ரல் 21 ஞாயிறன்று முக்கிய கத்தோலிக்க தேவாலயங்களையும்
சுற்றுலா ஹோட்டல்கள் சிலதையும் இலக்குவைத்து மேற்கொண்ட பாரிய மனிதப் படுகொலைகள் இடம்பெற்று இன்று ஒரு வருடம் நிறைவடைகின்றது.
இந்த காட்டுமிராண்டித்தனமான குற்றத்தின் மூலம் உயிரிழந்தவர்களினதும் கடுமையாக காயப்பட்டவர்களினதும்
குடும்ப உறுப்பினர்களுக்கும், அதனால் பெரிதும் கவலைக்குள்ளான கத்தோலிக்க மக்களுக்கும் அனைத்து
இலங்கையர்களுக்கும் நான் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தற்கொலை தாக்குதலினால் சுமார் 270பேர் உயிரிழந்தனர். சுமார் 500 பேர் காயமுற்றனர்.
காயமடைந்தவர்களில் சிலர் பின்னர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் அங்கவீனமுற்றுள்ளனர்.
தாக்குதலில் உயிரிழந்த பெரும்பாலானவர்கள் கத்தோலிக்க சமயத்தவர்கள் என்ற போதும் அது அவர்களை மட்டுமன்றி முழு
இலங்கை மக்களையும் இலக்கு வைத்த பயங்கரவாத நடவடிக்கையாகும். எந்த சிந்தனையின் பெயரில் இந்த மனிதப்
படுகொலை இடம்பெற்றாலும் இது மனித இனத்திற்கே இழுக்கான ஒன்றாகும்.
தேசிய பாதுகாப்பை மறந்து பாதுகாப்பு திட்டங்களும் ஏற்பாடுகளும் கைவிடப்பட்டிருந்த காரணத்தினாலேயே உயிர்த்த
ஞாயிறு மனிதப் படுகொலைக்கு வசதியான பின்னணி உருவானது. அத்தகையதொரு கட்டற்ற சூழலில் தீவிரவாதமும் பயங்கரவாதமும் தலைதூக்குவது ஆச்சரியமான ஒன்றல்ல.
‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற எனது கொள்கைப் பிரகடனத்தில் உறுதியளித்தவாறு எனது ஆட்சிக் காலத்தில் அனைத்து
இனங்களினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், எந்தவகையிலும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாத வன்முறைக்கும்
இடமளிக்கப்போவதில்லை என்றும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு வகைகூறவேண்டியவர்களை சரியாக இனம்கண்டு சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் நான் எனது மக்களுக்கு உறுதியளிக்கின்றேன்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியான, பாதிப்புக்கு உள்ளான கத்தோலிக்க மக்கள் உள்ளிட்ட இலங்கை மக்களுக்கு நான் மீண்டும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்
வெளிநாடுகளில் தவிக்கும் மக்களை அழைத்து வர பறந்தன இலங்கை விமானங்கள்
கொரனோ வைரசால் வெளி நாடுகளில் சிக்கி தவித்து வரும் இலங்கையர்களை
அழைத்து வரும் நடவடிக்கையில் இலங்கை விமானங்கள் ஈடுபட்டுள்ளன
இவ்வாறு இந்த விசேட விமானங்கள் Amritsar, Coimbatore, Pakistan’s Karachi,
Lahore and Nepal’s Kathmandu
போன்ற விமான தளங்களுக்கு பறப்பில் ஈடுபட்டுள்ளன
நாடு திரும்ப முடியாது தவிக்கும் மக்களை நாம் இலங்கை அழைத்து வருவோம்
என இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்திருந்த நிலையில் இந்த விமான சேவைகள் இடம் பெறுகின்றன

ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி
ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் மோதல் -ஒருவர் பலி
இலங்கை நாவல பிட்டிய பகுதியில் ஆட்டோ ,மோட்டார் சைக்கிள் நேரெதிர்
மோதி விபத்தில் சிக்கியதில் ஆட்டோ சாரதி சம்பவ இடத்தில பலியானார் ,
அவரது மகன் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள்
அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

கொரனோ சந்தேகம்-பண்டாராநாயக்க மாவத்தையில் 242 பேர் கைது
கொரனோ சந்தேகம்-பண்டாராநாயக்க மாவத்தையில் 242 பேர் தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பு
இலங்கை பண்டாரயாகக் மாவத்தை பகுதியில் கொரனோ நோயாளி
ஒருவர் அடையாளம் காணப்பட்ட நிலையில்
அவர்
வசித்து வந்த பண்டாரநாயக்க மாவத்தை ,மற்றும் கொழும்பு 12 ஆகியவற்றில்
வசித்து வந்த 242 பேர் பொலிஸாரால் கைது செய்ய பட்டு தனிமை படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்
காவல்துறை ,மற்றும் இராணுவத்தினரின் திடீர் இந்த செயலினால்
அந்த மக்கள் பெரும் சீற்றத்தில் உறைந்துள்ளனர்

இலங்கையில் கொரனோவால் 309 பேர் பாதிப்பு
இலங்கையில் கொரனோவால் 309பேர் பாதிப்பு
இலங்கையில் பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி 309 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,இதுவரை ஏழுபேர் உயிரிழந்துள்ளனர் .
மேலும் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்க கூடும் என தனிமை
படுத்தல் முகாம்களில் தடுத்து வைக்க பட்டுள்ளது பன்னி ரெண்டாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் இதுவரை விடுதலை செய்ய படவில்லை
அது தவிர சில கிகிராமங்கள் தொடர்ந்து இராணுவ கண்காணிப்பில் மக்கள் நடமாட தடை விதிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது

சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்
சாராய கடைகளை மூடுமாறு உத்தரவு- கொதிக்கும் குடி மகன்கள்
இலங்கையில் உள்ள அனைத்து மதுபான சாலைகளையும் மூடுமாறு இலங்கை அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது
ஊரடங்கு தளர்த்த பட்ட நிலையில் குடிமகன்கள் முண்டியடித்து சாராய கடைகளில் நிரம்பி வழிந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து
இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

கொரனோ பணத்தை கொள்ளையடிக்கும் குழுக்கள்
கொரனோ மக்கள் உதவி என்ற போர்வையில் – பணத்தை கொள்ளையடிக்கும் குழுக்கள்
உலக நாடுகளை மிரள வைத்து வரும் கொரனோ நோயின் காரணமாக மக்கள் உயிர்பலிகள் அதிகரித்து செல்கின்றன ,மேலும்
பல நூறு குடும்பங்கள் உண்ண உணவுகள் இன்றி தவித்த வண்ணம் உள்ளன ,
நாளாந்த கூலிகள் தமது தொழிலை இழந்த நிலையால் அந்த மக்களினால் மீள் தமது குடும்பத்தை கொண்டு நடத்த முடியவில்லை
இவ்வேளை அதனை சாதகமாக பயன் படுத்திய சில தமிழர் குழுக்கள் ,உலகம் தழுவிய நிலையில் மக்களிடம் உதவி
கோரிக்கையை முன் வைத்தனர் ,இவர்கள் மக்களிடம் உதவிகளை பெற்று ,உலர் உணவு பொருட்கள் வழங்குவதாக உறுதி அளித்தனர் .
ஆனால் அங்கு செல்லும் பணத்தில் நாப்பது வீதமானவை மட்டுமே மக்களுக்கு செல்கின்றன ..
ஏனைய அறுபது வீதமானவை இவர்கள் சுருட்டி கொள்கின்றனர்
இவர்கள் அந்த உணவுகளை எடுத்து செல்லும் வாகனம்,எரிபொருள் இவர்கள் சாப்பாடு செலவுகள் ,என்பனவற்றை அதற்குள் அடக்கி கொள்கின்றனர்
இதில் வேடிக்கை என்னவென்றால் அந்த வண்டிகள் இவர்களுடையது ,அதற்கு மக்கள் வழங்கும் இந்த பண்ணத்தில் கூலி எடுக்க படுகிறது
பரிதவித்த மக்களுக்கு உதவிகள் சென்று சேர வேண்டும் என இந்த வெளி நாட்டு மக்கள் வழங்கிய பணத்தை இவ்வாறும் கணக்கு காட்டி இந்த கொள்ளை கூட்டம் கொள்ளையடித்து வருகிறது
எனவே உதவி வழங்க முற்படும் மக்கள் பாதிக்க பட்டவர்களுக்கு நேரடியாக பணத்தினை வழங்குங்கள்
இவ்வாறான இந்த முகவர்கள் ஊடாக வாங்காதீர்கள் என்பதே வலி பட்டார் கருத்தாக உள்ளது .

79வது அகவை காணும் தேனிசை செல்லப்பா
79வது அகவை காணும் தேனிசை செல்லப்பா
தமிழீழ விடுதலை புலிகளது போராட்டத்திற்கு தனது தேனிசை குரலினால்
உரமேற்றி வீரம் செழிக்க வைத்த
தேனிசை செல்லப்பா அவர்கள்
21/04/2020 நாளை 79வது பிறந்த நாள் கொண்டாடுகிறார் , தடைகள் மத்தியில் பல நெருக்கடியான சூழலில் ,அயராது உழைத்த பெருமகன் ,
விடுதலைக்காய் தன்னையே அர்ப்பணித்து ,பிள்ளைகளிற்கு தமிழ் பெயர் சூட்டி வாழும் தமிழ் மைந்தன் .அவரை நாமும் இந்த இனிய நாளில் வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
வாழ்த்துக்கள் ஐயா ,மேலும் நூறாண்டு வாழி வாழி என எதிரி இணையமும் நெஞ்சார வாழ்த்துகிறது







