Posted in இலங்கை செய்திகள்

யாழை புரட்டிய புயல் – 66 குடும்பங்கள் பாதிப்பு

யாழை புரட்டிய புயல் – 66 குடும்பங்கள் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் காற்றின் தாக்கத்தின் காரணமாக 66 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப் பணிப்பாளர் தெரிவித்தார்.

அம்பன் சூறாவளியின் தாக்கமானது நாட்டின் பல்வேறுபட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ள நிலையில் யாழ்ப்பாண

மாவட்டத்தில் காற்றின் வேகமானது உயர்வாக உணரப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை காற்றின் தாக்கத்தின்

காரணமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமை பிரிவிற்கு

அறிக்கையிடப்பட்டுள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் என்.சூரிராஜ் தெரிவித்துள்ளார்

கடந்த 17 மற்றும் 18 ஆம் திகதி வீசிய காற்றின் தாக்கத்தின் காரணமாக குறித்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிலும் குறிப்பாக நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 14 குடும்பங்களைச் சேர்ந்த 54

அங்கத்தவர்களும் உடுவில் பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 5 அங்கத்தவர்களும் நல்லூர் பிரதேச

செயலகத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூன்று அங்கத்தவர்களும் பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த

50 குடும்பங்களுமாக மொத்தமாக 66 குடும்பங்களைச் சேர்ந்த 229 பேர்

பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குறித்த காற்றின் தாக்கத்தின் காரணமாக 47 வீடுகள் இதுவரை பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் ஓரிரு நாட்களுக்கு குறித்த காற்றின் தாக்கமானது கூடுதலாக

காணப்படுவதன் காரணமாக கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும்

வளிமண்டலத்திணைக்களத்தினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக

மீனவர் சமூகத்தினர் விழிப்பாக செயற்படுமாறும் அனர்த்த முகாமைத்துவ பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது

காற்றின் தாக்கத்தின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள்

னர்த்த முகாமைத்துவ அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

      Posted in இலங்கை செய்திகள்

      சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

      சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அண்ணா அவர்களின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

      தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரும், சமர்க்களங்களின் நாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ், எதிரிக்கு போர்முனைகளில் சிம்ம சொர்ப்பனமாக

      விளங்கினார்.தமிழீழத்தின் இதய பூமியான கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த பிரிகேடியர் பால்ராஜ், 1983ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டார்.

      வன்னியில் மேஜர் பசீலனுடன் இணைந்து எதிரிகளுக்கு எதிரான தாக்குதல்களை நடத்தினார். இந்தியப்படை வல்வளைப்புக் காலத்தில் வன்னியில் செயற்பட்ட இவர், மேஜர் பசீலனுடன்

      தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இருந்த மணலாறு மண்ணில் இருந்தபோது அவர்களைப் பாதுகாக்கும் செயற்பாட்டில் மேஜர் பசீலனுடனும் தொடர்ந்து லெப்.கேணல் நவத்துடனும் செயற்பட்டார்.

      இந்தியப்படை வெளியேற்றத்தின் பின்னர் வன்னிக்கான தளபதியாகி வன்னியில் தடைக்கற்களாக இருந்த சிங்களப் படைத்தளங்களை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.

      1990 ஆம் ஆண்டில் கொக்காவில் மாங்குளம் கிளிநொச்சி ஆகிய வன்னியின் நடுப்பகுதியில் இருந்த சிங்களப் படைத்தளங்களை இவர் நடத்திய தாக்குதல் நடவடிக்கைகள் மூலம்

      தகர்த்தழிக்கப்பட்டன.முல்லைத்தீவை விரிவாக்கும் சிறிலங்காப் படையினரின் கடற்காற்று எதிர் நடவடிக்கையையும் தலைமையேற்று வழிநடத்தினார்.

      தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கப்பட்ட முதல் சிறப்புப் படையணியான சார்ள்ஸ் அன்ரனியின் முதலாவது சிறப்புத் தளபதியாக இவர் நியமிக்கப்பட்டார்.

      வவுனியாவிலிருந்து சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட வன்னிவிக்கிரம நடவடிக்கையை முறியடித்து எதிரியின்

      உலங்குவானூர்தியைச் சுட்டுவீழ்த்தி எதிரிக்குப் பேரிழப்பை ஏற்படுத்திய சார்ள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல்களை வழிநடத்தினார்.

      1991 ஆம் ஆண்டு ஆனையிறவுப் படைத்தளம் மீதான ஆகாய- கடல்வெளிச் சமரில் வன்னிப்பகுதி ஊடாக நகர்ந்து சுற்றுலா விடுதி

      படைமுகாம் தகர்ப்பு நடவடிக்கை இவர் தலைமையில் நடத்தப்பட்டது.

      மணலாறில் சிறிலங்காப் படைகள் மேற்கொண்ட மின்னல் நடவடிக்கை முறியடிப்புத் தாக்குதலையும் வழி நடத்தியிருந்தார்.

      இதன் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

      யாழ்ப்பாணத்துக்கான ஒரே பாதையான கிளாலிப் பாதையை சிங்களப் படைகள் மூடிவிடும் நோக்கத்தில் மேற்கொண்ட

      யாழ்தேவி நடவடிக்கையை முறியடித்து எதிரிகளின் டாங்கிகளை முதல் தடவையாக அழித்த நடவடிக்கையில் காலில் காயமடைந்தார்.

      1995 ஆம் ஆண்டில் சிறிலங்காப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட முன்னேறிப்பாய்தல் முறியடிப்புத் தாக்குதலான

      புலிப்பாய்ச்சலில் அணிகளை களத்தில் வழிநடத்தி எதிரிக்குப் பலத்த இழப்புக்களை ஏற்படுத்த அந்த நடவடிக்கை முறியடிக்கப்பட்டதில் பங்காற்றினார்.

      யாழ்ப்பாணத்தினை சிறிலங்காப் படைகள் வல்வளைத்த சூரியக்கதிர் நடவடிக்கை எதிர்தாக்குதலில் பங்காற்றிய இவர், 1996 ஆம் ஆண்டில் விடுதலைப் போராட்டத்திற்கு பெரும்பலம் சேர்த்து

      எதிரிக்குப் பேரழிவை ஏற்படுத்திய முல்லைத்தீவு படைத்தளம் அழிக்கப்பட்ட ஓயாத அலைகள் – 01 நடவடிக்கையின் ஒருங்கிணைப்புத் தளபதியாக செயற்பட்டார்.

      வன்னியை சிறிலங்காப் படையினர் வல்வளைத்த ஜெயசிக்குறு நடவடிக்கை எதிர் நடவடிக்கையில் தொடக்க காலத்தில் செயற்பட்ட இவர், பின்னர் கிளிநொச்சியில் இருந்த சிங்களப் படையினர்

      விரட்டியடிக்கப்பட்ட ஓயாத அலைகள்- 02″ நடவடிக்கையின் வெற்றிக்கு உறுதுணையாக ஊடறுப்புத் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தினார்.

      தொடர்ந்து ஓயாத அலைகள் -03″ நடவடிக்கையில் சிங்களத்தின் மிகப்பெரும் தளமான ஆனையிறவை வெற்றி கொள்வதற்காக எதிரியின் கோட்டையான குடாரப்பில் பெரும் அணிக்கு

      தலைமையேற்று கடல்வழியாகச் சென்று தரையிறங்கி, இத்தாவிலில் ஊடறுத்து 34 நாட்கள் எதிரியின் முற்றுகைக்குள் நின்று எதிரிகளுக்குப் பெரும் இழப்புக்களை ஏற்படுத்தி

      ஆனையிறவு வெற்றிக்கு உறுதுணையாக நின்றார்.அப்போது சிங்களப் படை மாறி மாறி 4 தளபதிகளை தனது சிறப்புப்படைக் கொமாண்டோக்களுக்கு நியமித்து பெரும் தாக்குதல்களை நடத்திய

      போதும், ஆனையிறவு வெல்லப்பட்டு பளையைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் வந்து கைகுலுக்கும் வரை இத்தாவிலில் எதிரியை திணறடித்தவர் இவர்.

      2001 ஆம் ஆண்டில் முகமாலையில் இருந்து எதிரி மேற்கொண்ட தீச்சுவாலை: என்ற பெரும் தாக்குதலையும் முறியடித்ததில் முதன்மைப் பங்கை வகித்திருந்தார்.

      போர் நிறுத்த காலத்தில் மட்டக்களப்பின் வாகரைப் பகுதியில் நின்று செயற்பட்ட இவர், அங்கு ஆழிப்பேரலையில் அகப்பட்டு தப்பினார். பின்னர் வன்னிக்குத் திரும்பிய இவர், போராளிகளுக்கு

      பயிற்சி கொடுத்து வளர்த்தல் மற்றும் போரியல் உத்திகளை கற்றுக்கொடுத்தல் ஆகிய முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபட்டார்.

      அமைதிக்காலத்தில் நோய்க்காக சிகிச்சை பெற சிங்கப்பூர் சென்றிருந்தார். போராளிகளினதும் மக்களினதும் அன்பையும்

      மதிப்பையும் பெற்றவராக எதிரிக்கு சிம்ம சொப்பனமாக இருந்த பிரிகேடியர் பால்ராஜின் இழப்பில் உலகத்தமிழினம் துயருற்று இருக்கின்றது.

      வீரவணக்கம் அண்ணா.
      -ஈழம் ரஞ்சன்-

          Posted in இலங்கை செய்திகள்

          வாலிபன் துடி துடிக்க வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்

          வாலிபன் துடி துடிக்க வெட்டி கொலை – எகிறும் படு கொலைகள்

          இலங்கை ஏறாவூர் செங்கலடி பகுதியில் இருப்பத்தி ஐந்து வயதுடைய

          வாலிபர் ஒருவர் துடி துடிக்க வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்,இருவருக்கு

          இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி இந்த கத்தி வெட்டு தாக்குதல் படு கொலையில் முடிந்துள்ளது


          சம்பவ இடத்திலேயே வாலிபர் பலியாகியுள்ளார்
          கொலையாளி கைது செய்யப்பட்து விசாரணைகளிற்கு உட்படுத்த பட்டுள்ளார்

          Posted in இலங்கை செய்திகள்

          கிறிஸ் மனிதர்களுக்கு மாற்றீடாக மர்ம கொலையாளிகளை உருவாக்கியுள்ள கோட்டபாயா

          கிறிஸ் மனிதர்களுக்கு மாற்றீடாக மர்ம கொலையாளிகளை உருவாக்கியுள்ள கோட்டபாயா

          இலங்கையில் சிவத்த சால்வைகளின் இரத்த வெறிக்குள் சிக்கி தமிழர்கள் நாள்தோறும் சொல்லென்னா துயரங்களை தாங்கிய வண்ணம் நடை பயில்கின்றனர்

          தமிழர்களை தொடர்ந்து அச்சறுத்தல் ,பீதி நிலைக்குள் வைத்து கொள்ளும் கபட நோக்கம் கொண்ட சூழ்ச்சியை ஆளும் மகிந்த

          குடும்ப ஆட்சி தொடர்ந்து நடைமுறை படுத்தி அதனை கடைப்பிடித்து செல்கிறது

          இவர்களின் இந்த இனவெறி ஆட்சிக்குள் சிக்கி தமிழினம் பரிதபித்து கிடக்கிறது து ,கிறிஸ் மனிதர்கள் ,பின்னர் ஆவாக் குழு ,தற்பொழுது

          மர்ம கொலையாளிகள் ,என்ற மிக பெரும் அபாய அச்சத்தை உருவாக்காகி விட்டுள்ளார் ஆளும் தமிழின கொலையாளி கோத்தபாய

          மக்களின் வாய்களுக்குள் துப்பாக்கி நீட்ட பட்டு ,இராணுவத்தின் இரும்பு பிடிக்குள் மக்கள் சிறைப்படுத்த பட்டுள்ளனர் .

          தமிழர்கள் வாசல்கள் தோறும் நாய்களை போல சிங்கள புலனாய்வாளர்கள் சுற்றிய வண்ணம் உள்ளனர்


          ஓசை படமால் நடத்த படும் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ந்து செல்கிறது

          திடீரென குடும்பத்தில் உள்ளவர்கள் காணமல் போகின்றனர் ,காவல்துறையில் முறைப்பாடு செய்ய பட்ட பொழுதும் எவ்வித பயனும் இல்லை .

          இவ்வாறு வெளியில் தெரியாத பெரும் அபாயம் ஒன்று உள்ளக வாயிலாக நடந்த வண்ணமே உள்ளது .


          இந்த மிக பெரும் இனஅழிப்பு வேட்டையில் இருந்து தமிழர்களை எவ்வாறு காப்பாற்றுவது ..?

          இந்த கேள்விகளுக்கு பதில் தருவது யார் ..? மீண்டும் வெளிநாடுகளில் ஐக்கிய நாடுகள் சபை முன்பாக மக்கள் ஒன்று திரள வேண்டிய தேவையினை இவை ஏற்படுத்தியுள்ளது

          கால சுழற்சியில் கால் பாதிக்க வேண்டிய நிலையில் நாம் தமிழர் செல்கிறது .- வன்னி மைந்தன் –

              Posted in இலங்கை செய்திகள்

              சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு

              சர்வதேச பொறிக்குள் சிக்கிய இலங்கை – ஆடுகளம் திறப்பு

              இலங்கையில் தமிழ் இனப்படுகொலையினை புரிந்தவர்கள் ஆட்சி மீளவும் இடம் பெற்று வருகிறது ,இவர்களது அரசாட்சியில் தமிழர்

              பகுதியில் இராணுவத்தின் அத்துமீறல்கள் போலீசாரின் அடாவடிகள் ,மற்றும் மிரட்டல்கள்,கடத்தல்கள்,கொள்ளை,கொலை என தொடர்ந்த வண்ணமே உள்ளது

              போருக்கு பிந்திய காலத்தில் இலங்கையில் தொடர்ந்து மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன ,அச்சுறுத்தல்

              ,அடக்குதல்,அதன் பின்னர் படுகொலை என இரும்புக்கரம் கொண்டு அடக்கியாளும் அதிகார வெறி தில்லை பாய்கிறது ,

              மனித உரிமை அமைப்புகள் இலங்கையை பலமுறை கண்டித்தும் அவற்றை எல்லாம் அசட்டை


              செய்து தான்தோன்றி தனமாக தமது சிங்கள பவுத்த ஏகாதிபத்திய நிகழ்வின் ஊடே நகர்ந்து செல்கிறது
              சிங்கள பவுத்த பேரினவாதம்

              இதற்கு 2025 ஆண்டு அளவில் பாரியா செக் வைக்கும் ,செக்மேட் நடவடிக்கை ஒன்றினை உள்ளரங்க வாயிலாக மேற்குல நாடுகள் முன்னெடுத்து செல்லும் என அடித்து கூற படுகிறது

              இலங்கையில் தொடர்ந்து சிறுபான்மை மக்களுக்கு இழைக்க படும் ,துன்பியல் நிகழ்விற்கு ,அதில் இருந்து அந்த மக்களை விடுவித்து

              நின்மதியுடன் கூடிய வாழ்வை அமைத்து கொடுக்கும் நகர்வில் மேற்குலகம் நகர்ந்து செல்கிறது

              பொஸ்னியா ,செச்சனியா ,நாடுகளில் இடம்பெற்ற இனப் படுகொலைக்கு எவ்வாறான தீர்வு வழங்க பட்டதோ அதே போன்ற நிலை இங்கும் நீடிக்க போகிறது

              தமக்கு கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் இலங்கை அரசு தவற விட்டுள்ளது
              பாரளுமன்ற தேர்தல் முடிவிற்காக சர்வதேசம் காத்துள்ளது

              இதிலும் தனி சிங்கள மக்களின் வாக்குகளினால் இலங்கை அரச ஆட்சியில் அமர வேண்டும் என்பதே விருப்பாக உள்ளது

              அதன் பின்னரே இங்கை அரசுக்கு அதன் மூன்றாண்டு ஆட்சி முடிவில் இருந்து அட்டமத்து சனி தலையில் ஏறி ஆடும் நிலை

              தோற்றம் பெறும் என்பதுவே மேற்குலக இராயத்தந்திரிகள் கணக்காக உள்ளது

              2020முதல் 2028 ஆண்டிக்குள் தமிழர்கள் நிலையான தீர்வு ஒன்றினை பெறுவார்கள் என யாரோ அடித்து கூறிய அந்த வார்த்தைகள்

              இன்னும் காதில் கேட்கிறது ,பார்க்கலாம் அவை சாத்தியமா என்பதை .

              • வன்னி மைந்தன் –
                  Posted in இலங்கை செய்திகள்

                  புலிகள் ஆயுத போரை பிழையென்று கூற எவருக்கும் அருகதை இல்லை – விக்கினேஸ்வரன் நெத்தியடி

                  புலிகள் ஆயுத போரை பிழையென்று கூற எவருக்கும் அருகதை இல்லை – விக்கினேஸ்வரன் நெத்தியடி

                  இலங்கையில் சிங்கள பவுத்த பேரினவாத அடக்கு முறையினால் தான் ஆயுத

                  போராட்டம் பிறந்தது ,இதற்கு வித்திட்டவர்கள் சிங்கள பவுத்த இனவெறி

                  அரசாட்சிகள் என தலைவர் பிரபகாரன் மிக நிதானமாகவும் ,இறுக்கமாகவும் தெரிவித்தார் .

                  அவரது ஆயுத போராட்டம் தந்தை செல்வா காலத்தில் முன்மொழிய பட்டு அதனை பின்பற்று மாறு கூற பட்டுள்ளது ,அதனையே தலைவர் பிரகாரன் புரிந்துள்ளார்

                  அவர் தாங்கிய அந்த போரை பிழை என்று கூறுவகற்கு இந்த மண்ணில்

                  எவருக்கும் அருகதை இல்லை என வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வர் விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்

                  முள்ளி வாய்காலில் நடந்தது இனப்படுகொலை என ஐயா விக்கினேஸ்வரன் தொடர்ந்து கூறிய வண்ணமே உள்ளார் ,

                  ஆனால் இந்த கூட்டமைப்பின் தலைமை சம்பந்தர் ,சுமந்திரன் போன்றவர்கள் அது ஒரு போர்க்குற்றம் என்றே இலங்கை அரசு

                  கூறுவது போன்ற அதை அவர்களை பின் தொடர்ந்து கூறி செல்கின்றனர்

                  இதில் இருந்து சுமந்திரன் சம்பந்தர் பித்தலாட்டங்களை மக்கள் புரிந்திருப்பார்கள்

                  விக்கினேஸ்வரன் தலைமையில் உருவாக்கும் புதிய அமைப்பிற்கு மக்கள் வாக்களித்து அதனை வலுவடைய செய்ய வேண்டும் ,.

                  சந்தர்ப்பம் ஒன்றை வழங்கி பார்க்கலாம் ,அதன் பின்னர் அவர்களும் தவறு இழைத்தால் மக்கள் ,தமது முடிவில் மாற்றங்களை ஏற்படுத்தி கொள்ளலாம் .

                  சுமந்திரன் மீது இதுவரை கூட்டமைப்பின் தலைமை எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுயுள்ளது குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      எமது நாட்டுக்கு அநீதி இழைக்க ஐநா முனைந்தால் – அதில் இருந்து விலகுவோம் – கோட்ட இறுமாப்பு

                      எமது நாட்டுக்கு அநீதி இழைக்க ஐநா முனைந்தால் – அதில் இருந்து விலகுவோம் – கோட்ட இறுமாப்பு

                      11வது படைவீரர்கள் நினைவு தின விழாவில் ஜனாதிபதி மேன்மைதங்கிய கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள்  ஆற்றிய உரை

                      பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுதூபி வளாகம் – 2020.05.19

                      மே மாதம் 19ஆம் திகதி இலங்கை வரலாற்றில் ஒரு முக்கிய நாளாகும்.

                      இற்றைக்கு 11 வருடங்களுக்கு முன்னர் 2009 மே மாதம் 19ஆம் திகதி, நாம் சுமார் 30வருடங்களாக இந்த நாட்டிற்கு சாபமாக இருந்து வந்த பிரிவினைவாத பயங்கரவாதத்தை முழுமையாக தோற்கடித்தோம்.

                      முப்படைகளினதும் தலைவர் என்ற வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அதற்கு தலைமைத்துவத்தை வழங்கினார். பயங்கரவாதம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன்

                      மூலம் மக்களுக்கு பயம், சந்தேகமின்றி வாழ்வதற்கும், தங்களது மனித உரிமைகளை சுதந்திரமாக அனுபவிப்பதற்கும் முடியுமான சூழல் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது.

                      சுமார் 30 வருடங்களுக்கு பின்னர் சுதந்திரமானதும் சுயாதீனமாதுமான தேர்தலொன்றை நடத்துவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்தி, ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டது. இந்த நாட்டில்

                      எந்தவொரு பிரஜைக்கும் தடையின்றி, நாட்டின் எந்தவொரு இடத்திலும் சுதந்திரமாக நடமாடக்கூடிய சூழல் மீண்டும் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டது. அச்சமும் பயமும் சூழ்ந்திருந்த எமது

                      நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக எமது படைவீரர்களும் அவர்களின் குடும்பங்களும் பெரும் அர்ப்பணிப்பையும் தியாகங்களையும் செய்துள்ளனர்.

                      யுத்தம் என்பது மலர்தூவிய பஞ்சணையன்று. குறிப்பாக சட்டத்தை மதிக்காத உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்துடன்

                      போராடும் போது படைவீரர்களுக்கு பல்வேறு துன்பகரமான அனுபவங்களுக்கும் கஷ்டங்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியிருக்கும்.

                      அந்த 30 வருட காலப் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பிரதேசத்தில் மட்டுமன்றி நாட்டின் அனைத்து இடங்களிலும் அப்பாவி பொது மக்கள் உயிரிழந்தனர். தற்கொலை குண்டுதாரிகள், பஸ்

                      வண்டிகளிலும் புகையிரதங்களிலும் வைக்கப்பட்ட குண்டுகள், கட்டிடங்கள் மீதான குண்டுத் தாக்குதல்கள் காரணமாக இந்த நாட்டில் பெருமளவு உயிர் மற்றும் சொத்துக்களுக்கு சேதங்கள்

                      ஏற்பட்டன. மனிதாபிமான நடவடிக்கையின் இறுதி நோக்கம் நாட்டில் நீண்ட கால சமாதானத்தை ஏற்படுத்துவதாகும்.
                      படைவீரர்கள் செய்த அந்த பெரும் அர்ப்பணிப்பின் காரணமாக

                      இன்று எமக்கு ஒன்றுபட்ட நாட்டில் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழ்வதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

                      பௌத்த சமயத்தினால் வளம்பெற்ற எமது நாட்டில் அனைத்து சமயத்தினருக்கும் அனைத்து இனங்களுக்கும் புகலிடமான ஒரு

                      நிர்வாக முறைமை உள்ளது. வரலாறு நெடுகிலும் இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள், மலாயர், பரங்கியர் ஆகிய

                      அனைத்து இனங்களும் சமமாக வாழும் உரிமையை பெற்றிருந்தனர்.

                      எம்மை பிரித்து வேறுபடுத்த வேண்டும் என்பதே தீவிரவாதிகளின் நோக்கம். அவர்களது நோக்கம் நிறைவேறியிருந்தால் எமது வரலாறு மாறியிருக்கும். மக்கள் ஒருவரையொருவர் வெறுக்கும்,

                      எல்லைகளுக்காக தொடர்ந்து போராடும், யுத்த பீதி மக்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிய, மற்றுமொரு துரதிஷ்டமான, பிளவுபட்ட நாடாக இலங்கை மாறியிருக்கும். அந்த அழிவிலிருந்து

                      நாட்டை விடுவித்த கௌரவத்தை, நீண்ட காலமாக எமது நாட்டின் சமாதானத்திற்காக போரிட்ட அனைத்து துணிச்சல்மிக்க படைவீரர்களுக்கும் பெற்றுக்கொடுக்க வேண்டும்.

                      மூன்று தசாப்தங்களாக இந்த வெற்றிக்காக உயிர் தியாகம் செய்து போரிட்ட ஜெனரல் கொப்பேகடுவ, ஜெனரல் விஜய விமலரத்ன உள்ளிட்ட அனைத்து படைவீரர்களையும் நாம் இச்சந்தர்ப்பத்தில்

                      மிகுந்த கௌரவத்துடன் நினைவுகூர்கின்றோம்.
                      இராணுவத்தில் 20 வருடங்கள் செயற்திறமான சேவையில் ஈடுபட்ட அதிகாரி என்ற வகையிலும் பின்னர் 10 வருடங்கள் பாதுகாப்பு

                      செயலாளராகவும், ஒரு பிரஜை என்ற வகையிலும் எமது படைவீரர்கள் செய்த அர்ப்பணிப்புகளை நான் நன்கறிவேன். யுத்தத்தின் வலிகள் எனக்கு நன்றாக தெரியும். எனவே பெரும்

                      தியாகங்களை செய்து அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தை ஏற்படுத்தித்தந்த எமது படைவீரர்களின் கௌரவத்திற்கும் நற்பெயருக்கும் இழுக்கை ஏற்படுத்துவதற்கு

                      மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு நான் ஒரு போதும் இடமளிக்க மாட்டேன். எனது அரசாங்கத்தின் கீழ் எமது படைவீரர்களின்

                      கௌரவத்தை பாதுகாப்பதற்கு அனைத்து வகையான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்பதை உங்களுக்கு உறுதியளிக்கின்றேன்.

                      அவர்களது உரிமைகளை பாதுகாப்பது ஒரு தேசிய பொறுப்பாகும். உலகின் பலம்வாய்ந்த நாடுகளின் தலைவர்கள் கூட தெளிவாக தமது நாட்டின் படைவீரர்களுக்கு எதிராக எந்தவொரு

                      நடவடிக்கையையும் எடுப்பதற்கு அனுமதிக்கப்போவதில்லை என தெரிவித்திருக்கின்ற சூழ்நிலையில், எம்மைப் போன்ற ஒரு சிறிய

                      நாட்டில் இத்தகைய அர்ப்பணிப்புகளை செய்துள்ள படைவீரர்கள் தேவையற்ற அழுத்தங்களுக்கு உள்ளாக நான் ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை.

                      அந்த வகையில் எமது நாட்டுக்கு அநீதியான வகையில் ஏதேனும் ஒரு சர்வதேச நிறுவனம் அல்லது அமைப்பு தொடர்ந்தும்

                      செயற்படுமாக இருந்தால் அந்த நிறுவனத்தின் அல்லது அமைப்பின் உறுப்புரிமையிலிருந்து இலங்கையை விலக்கிக்கொள்ள நான்

                      ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை.என தேர்தலை இலக்கு வைத்து முழங்கியுள்ளார் இரத்த காட்டேரி கோட்டபாயா

                          Posted in இலங்கை செய்திகள்

                          கொரோனா நோயால் 1020 பேர் பாதிப்பு

                          கொரோனா நோயால் 1020 பேர் பாதிப்பு

                          இலங்கையில் கொரோனா வைரசு நோயாளர்களின் எண்ணிக்கை 1020 ஆக அதிகரித்துள்ளது.

                          இன்றைய தினத்தில் (2020.05.19) இதுவரையில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட 28 பதிய நோயாளர்கள்;

                          பதிவாகியிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க குறிப்பிட்டார்.

                          இந்த நோயாளர்கள் 28 பேரும் ஒலுவில் தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடற்படை அங்கத்தவர்கள்.

                          இன்றைய தினத்தில் இதுவரையில் இலங்கையில் பதிவான கொரேனா

                          வைரசு நோயாளர்களில் 569 பேர் குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

                          இதேபோன்று இதுவரையில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நோயாளர்களில் 442 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

                          நேற்றைய தினத்தில் (2020.05.18) மேற்கொள்ளப்பட்ட Pஊசு பரிசோதனைகளின்

                          எண்ணிக்கை 960 ஆவதுடன் இத்தினத்தில் அடையாளங் காணப்பட்ட

                          நோயாளர்களின் எண்ணிக்கை 11 ஆகும் என்றும் சுகாதார சேவைகள்

                          பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்

                              Posted in இலங்கை செய்திகள்

                              வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – அழிக்கும் தமிழர் கண்ணீர்

                              வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – அழிக்கும் தமிழர் கண்ணீர்

                              நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல வீடுகள் பகுதியளவும் சில வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

                              குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் ஆங்காங்கே சிறு அளவிலான மண்சரிவு

                              சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனால் தடைகளுக்கு மத்தியிலேயே

                              வாகன போக்குவரத்து இடம்பெறுகின்றது. கடும் பனிமூட்டம் நிலவுவதால்

                              அவதானமாக வாகனம் செலுத்துமாறு சாரதிகளை பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்..

                              நுவரெலியா மாவட்டத்திலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால்

                              வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், நீர்வீழ்ச்சிகளின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.

                              மஸ்கெலியா சாமிமலை, ஓல்டன் கீழ்பிரிவு தோட்டத்தில் 20 வீடுகளுக்கு

                              வெள்ளநீர் புகுந்துள்ளது. இதனால் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தோட்ட ஆலயமும் நீரில் மூழ்கியுள்ளது.

                              சாமிமலை பாக்ரோ தோட்டப்பகுதியில் வெள்ளத்தால் 12 குடும்பங்களும்,

                              கொட்டகலை சார்மஸ் தோட்டத்தில் 23 குடும்பங்களும் தலவாக்கலை

                              ஸ்டார்லின் பகுதியில் 25 குடும்பங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இக்குடும்பங்களைச்

                              சேர்ந்த உறுப்பினர்கள், உறவினர்களின் வீடுகளிலும், பாதுகாப்பான

                              இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தேவையான உதவிகளை அரச அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.

                              இதேவேளை கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் டிக்கோயா,

                              தரவளை மேல்பிரிவு தோட்டத்தில் 11 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 61 பேர் இடம்பெயர்ந்துள்ளனர்..

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  கொரோனாவுக்கு எதிராக போராடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் photo

                                  கொரோனாவுக்கு எதிராக போராடும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் photo

                                  துயர்தோய்ந்த அவலம் நிரம்பிய முள்ளிவாய்க்கால் கூட்டுநினைவுகளை நெஞ்சில் சுமந்தவாறு, மானிடநேயம் கொண்ட

                                  ஈழவிடுதலைப்பண்பை வெளிக்காட்டும் உலகிற்கு வெளிக்காட்டும் வகையில், மே18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் கொரோனாவுக்கு எதிராக போராடும் பிரித்தானிய

                                  சுகாதாரகளப்பணியாளர்களுக்கு தனது தோழமையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், வெளிப்படுத்தியுள்ளது.

                                  பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு இதுவரை 246 406 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 34 796 பேர்

                                  உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் Croydon university hospital, kinston hospital, northwick park hospital, liverpool heart and chest hospital,royal

                                  Bournemouth hospital ஆகிய NHS மருத்துவமனைகளுக்கு ஓரு தொகுதி உலர்உணவுகள், குடிநீர்வகைகள் நாடுகடந்த தமிழீழ

                                  அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செய்தியோடுவழங்கப்பட்டிருந்தன.

                                  சிங்கள பேரினவாதத்தின் முள்ளிவாய்கால் இனவழிப்பின் போது, மக்கள் உணவின்றி மருத்துவமின்றி எந்தவித பாதுகாப்பும் இன்றி

                                  கதறிய கருகிய நாட்களை மட்டுமல்ல, அவ்வேளையில் குண்டுமழைகளுக்கு நடுவே மக்களோடு மக்களாக நின்று பணியாற்றிய சுகாhரப்பணியாளர்களை நெஞ்சில் ஏந்தி, வைரஸ்

                                  தொற்று அச்சுறுத்தல்களுக்கு நடுவே கொரோனாவுக்கு எதிராக போராடிவரும் சுகாதாதரப்பணியாளர்களுக்கு தமது நன்றியினை

                                  தெரிவித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள், தமிழினப்படுகொலை தொடர்பான ஆவணம் ஒன்றினையும் கையளித்தனர்.

                                  Corona – Tamils Task Force எனும் தமிழர் சிறப்பு குழுவினை அமைத்தது கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை

                                  மையப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கியுள்ளதோடு, கொரோனா நெருக்கடி நீண்டகாலத்துக்கு நீடிக்க இருக்கின்ற நிலையில், தமிழர்களின் நலன்களின்

                                  அடிப்படையில் உடனடியானதும், நீண்டகாலத்துக்குமான செயற்திட்டங்களை வகுத்து தமிழர் தாயகம், புலம்பெயர்

                                  தமிழர்கள், உலகத் தமிழர்கள் என செயற்பட்டு வருகின்றமை இங்கு குறிப்பிடதக்கது.

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      புலிகள் தலைவரை சந்தித்தேன் – இந்திய அமைச்சர் திடீர் தகவல்

                                      புலிகள் தலைவரை சந்தித்தேன் – இந்திய அமைச்சர் திடீர் தகவல்

                                      இலங்கையில் இந்தியா அமைதி படையினர் வருகையின் பொழுது

                                      இலங்கையின் இந்தியா அதூதராக அதிகாரியாக விளங்கிய கார்டீப்

                                      சிங் பூரி அவர்கள் தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்
                                      வேலுப்பிள்ளை

                                      பிரகாரனை சில தடைவைகள் சந்தித்து பேசியதாகவும்
                                      டில்லி வருவதற்க்கு தனே வலி ஏற்படுத்தி கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்

                                      இத்தனை வருடம் வெளியிடாது அவரது பகிர்வு இப்பொழுது மட்டும் ஏன் பதிவானது என்பதே சந்தேகத்தை கிளப்பியுள்ளது

                                      இவரது ஆட்சியில் ராஜீவ் மிரட்டி அடிமை படுத்தினார் . இதே மன்மோகன் சிங் ஆட்சியில் ,தமிழர்கள் அழித்து ஒழிக்க பட்டனர் .

                                      இதே போன்றதொரு ஆட்சி மீள ஏற்பட்டதால் அன்று யாரை அழிப்பார்கள் ..?


                                      இரத்த கரை படிந்த இனமாக சிங் இனத்தவர் கைகள் மாறியுள்ளதாக தமிழர்கள் கருதுகின்றனர் என்பதே வெளிப்படையாகும்

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          யாழில் தொடரும் மர்மக் கொலைகள் பின்னால் – மருத்துவர் சத்தியமூர்த்தி – திடுக்கிடும் தகவல்

                                          யாழில் தொடரும் மர்மக் கொலைகள் பின்னால் – மருத்துவர் சத்தியமூர்த்தி – திடுக்கிடும் தகவல்

                                          இலங்கை தமிழர் தாயக பகுதியான யாழ்பாணத்தை மைய படுத்தி நிகழ்த்த பட்டு வரும் மர்ம கொலைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                          இந்த கொலைகள் பின்புலத்தில் இயங்குவது யார் என்பது தொடர்பான புலானய்வு தகவலை வெளி நாட்டு வெள்ளையர் ஊடகங்கள் சில தீவிரமாக திரட்டிய வண்ணம் உள்ளன .

                                          அவர்கள் வசம் பல திடுக்கிடும் தகவல்கள் சிக்கியுள்ளது என நம்பப் படுகிறது ,இவ்வேளை கடந்த தினம் நேற்று யாழ்ப்பாண மருத்துவ

                                          மனையின் குரல்தரவல்ல மருத்துவ அதிகாரியாக விளங்கி வரும் திருவாளர் சத்தியமூர்த்தி ,

                                          கொரனோ நோயின் போது விதிக்க பட்ட ஊரடங்கு தளர்த்த பட்டுள்ளது எனவும்இவ்வேளை முதல் நாள் அதிகம் விபத்துக்கள்

                                          யாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ளதாக பகீர் தகவல் ஒன்றை வெளியிட்டார்

                                          அவ்வாறு எனின் அந்த விபத்துக்கள் தொடர்பாக காவல்துறையினர் தமது விசாரணை அறிக்கையை சமர்பித்திருக்க வேண்டும்

                                          காவல்துறை ஊடகம் வாயிலாக இந்த விபத்து அதிகரிப்பு தொடர்பாக தெரிவித்திருக்க வேண்டும் .ஆனால் அவ்விதம் ஏதும்

                                          மேற்கொள்ள படவில்லை ,
                                          அவை தாண்டி இந்த விபத்து பேரவலம் தொடர்பான சமிக்கை ஒன்றை அறிவித்தார்

                                          இவரது இந்த அறிவிப்பு வெளியாகி 20 மணித்தியாலத்துக்குள்ளாக தற்போது யாழ்ப்பாணம் ஏ 9 நெடுஞ்சாலையில் நபர் ஒருவர் அடித்து கொலை செய்ய பட்டு தூக்கில் தொங்கவிட பட்டுள்ளார்

                                          இது இவர் மீதான சந்தேகத்தை அதிகரித்துள்ளது ,இதுபோலவே ,கடந்த சில செவ்விகளின் பொழுதும் இவரது உடல் அசைவுகள்

                                          ஒன்றையும் ,அவரது உதடுகள் ஒன்றையும் தெரிவிப்பதை புலனாய்வு சார்ந்த அவதானிப்பவர்கள் அடையாளம் கண்டு இருப்பார்கள்

                                          இவர் புரிகின்ற பல படுகொலைகள் மூடி மறைப்புக்கள் அதே மருத்துவ மனையில் பணிபுரியும் நபர்கள் ஊடாகவும் கசிகவுகள் வெளியாகி வருகின்றன

                                          அங்கு பணிபுரியும் அனைவரையும் காமராக்களின் மூலம் தீவிர கண்காணிப்புக்கு இவர்உள்ளாக்கி வருகின்றார்

                                          தனி நபர்கள் யாரவது அங்கு பணிபுரிபவர்கள் ஊடாக பேசினால் அவர்கள் விசாரணைக்கு உட்படுத்த பட்டும் நிலை உள்ளதாக அந்த கசிவுகள் எடுத்துரைக்கின்றன

                                          இவருக்கு பின்புலத்தில் போதைவஸ்து மன்னன் கஞ்சா அருள் உள்ளதுஅம்பலமாகியுள்ளது ,


                                          இந்த கூலி குழு மூலம் வீதிவிபத்துக்கள் ,மற்றும் படுகொலை செய்ய படும் நபர்களது சடலங்களை இவரே பகுப்பாய்வுக்கு உட்படுத்துகிறார்

                                            அங்கு மரணிக்கும் அனைவரும் இயற்கை ,மரண, விபத்து இறப்பு என சட்டநிபுணரை மிரட்டி மரண சான்றிதழ் வழங்க பட்டு வருகிறது

                                            மக்களே உசார் ,துரத்தும் மர்ம கொலையாளிகள் உங்கள் அருகே ,விழிப்பாக இருங்கள் ,விரைவில் சத்தியமூர்த்தி உள்ளிட்ட பலர்

                                            ,வெள்ளையர் ஊடகங்களில் தெறிக்க விட படுவார்கள் ,கண்காணிப்பு விளையாட்டு ஆரம்பமாகியுள்ளது என்பதனை அடித்து கூறுகிறோம் .

                                                Posted in இலங்கை செய்திகள்

                                                யாழில் கொலை செய்து மரத்தில் தொங்க விடப்பட்ட வாலிபர் – தொடரும் மர்ம கொலைகள்

                                                யாழில் கொலை செய்து மரத்தில் தொங்க விடப்பட்ட வாலிபர் – தொடரும் மர்ம கொலைகள்

                                                இலங்கை யாழ் கண்டி வீதியின் ஓரத்தில் நபர் ஒருவர் அடித்து கொலை

                                                செய்ய பட்ட பின்னர் ,மரத்தில் தூக்கில் தொங்கவிட பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

                                                யாழ்பாணத்தி மையப்படுத்தி தொடரும் பல படு கொலைகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது

                                                கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற 22 வது படு கொலை இதுவாகும் ,

                                                கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர் தொடரும் இந்த கொலைகளின்

                                                பின்புலத்தில் கஞ்சா கூலி கொலை குழு உள்ளது கண்டு பிடிக்க பட்டுளள்து

                                                எனினும் பொலிஸார் ஆதரவுடனும் ,அரசியல் செல்வாக்குடனும் இவர்கள் செயல் படுவதால் ,கைது தட்டி கழிக்க படுகின்றன

                                                தூக்கல் தொங்கி தற்கொலைஸ் ஐதர என சட்ட மருத்துவ அதிகாரி மரண

                                                சான்றிதழ் வழங்குவார் ,இவ்வாறே இந்த கொலைகள் மறைக்க பட்டு தற் கொலைகளாக மாற்றம் பெற்று வருகிறது

                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                    பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை

                                                    பூட்டிய அறையில் மங்கள ஐந்து மணி நேரம் விசாரணை

                                                    இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசு ஆட்சியில் அமர்ந்த நிலையில்

                                                    தற்பொழுது பழி வாங்கும் அரசியல் தீவிரம் பெற்றுள்ளது,

                                                    இவ்வேளை முன்னாள் நிதி அமைச்ச மங்கள சமரவீர ஐந்து மணித்தியாலங்கள்

                                                    குற்றப்புலானய்வு துறையினரின் விசாரணைக்கு உட்படுத்த பட்டார்

                                                    தேர்தல் நெருங்கும் வேளையில் ஆளும் அரசின் இந்த செயல் பாடுகள்

                                                    பெரும் அரசியல் எதிரொலியை ஏற்படுத்த கூடும் என எதிர்பார்க்க படுகிறது

                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                        புலிகள் அழிந்த 11 ஆவது ஆண்டுப் பூர்த்தி- கொலையாளி மகிந்தா பெருமிதம்

                                                        புலிகள் அழிந்த 11 ஆவது ஆண்டுப் பூர்த்தி- கொலையாளி மகிந்தா பெருமிதம்

                                                        தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான யுத்த வெற்றியின் பதினோறாவது ஆண்டுப் பூர்த்தியை நாம் மே மாதம் 19 ஆந் திகதி கொண்டாடுகிறோம்.

                                                        அது தமிழ் மக்களுக்கு எதிரானதொரு யுத்தம் அல்ல. மாறாக அமெரிக்காவின் எப்.பீ.ஐ. நிறுவனத்தினால் உலகின் கொடூரமான

                                                        தீவிரவாதிகள் எனப் பெயரிடப்பட்ட அமைப்பொன்றுக்கு எதிரான யுத்தமாகும். புலிகள் அமைப்பின் தோல்வி காரணமாக தற்போது தமிழ் மக்களும் சுதந்திரமாக வாழ்வதற்கான வாய்ப்பு

                                                        ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழ் சிறுவர்கள் புலிகள் அமைப்பினால் கடத்திச் செல்லப்படுவதில்லை. தமிழ் அரசியல் வாதிகள் புலிக் கொலையாளிகள் தொடர்பான அச்சத்துடன் வாழ்வதில்லை.

                                                        புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டமை மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும் தேர்தல்களை நடாத்துவதற்கான வாய்ப்புக்

                                                        கிடைத்துள்ளமையினால் அந்தப் பிரதேசங்களைச் சேர்ந்த மக்களின் இறையாண்மை அதிகாரம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

                                                        புலிகள் அமைப்புக்கு எதிரான போரில் வெற்றி பெற்றமை மூலம் முழு உலகினையும் வியப்பில் ஆழ்த்திய அந்த முப்படையினரும்

                                                        பொலிசாரும் இன்று கோவிட் – 19 அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டத்தை சுகாதாரப் பிரிவினருடன் இணைந்து

                                                        மேற்கொண்டுள்ளனர். இச்சந்தர்ப்பத்தில் இலங்கை கோவிட் – 19 போராட்டத்திலும் வெற்றியடைந்து வருகிறது என்பதே அனைத்து

                                                        விடயங்கள் ஊடாகவும் அவதானிக்க முடிகிறது. பொதுமக்கள் மத்தியில் நோய் பரவுவதனைத் தடுப்பதற்கு முப்படையினரும்

                                                        பொலிசாரும் ஒரு பட்டாளம் போன்று முன்நின்று ஆற்றும் பணி, கோவிட் – 19 நோயை இவ்வாறு கட்டுப்படுத்துவதில் சுகாதாரப்

                                                        பிரிவினருக்கு மிகவும் உறுதுணையாய் அமைந்தது என்பதில் சந்தேகமில்லை.

                                                        தீவிரவாதம், வெள்ளப்பெருக்கு, தொற்றுநோய் போன்ற எந்தவொரு அனர்த்த சூழ்நிலையிலும் முப்படையினர் பொதுமக்களைப்

                                                        பாதுகாக்கும் வகையில் முன் நின்று செயற்படுகின்றனர் என்பது இதன் மூலம் மீண்டும் உறுதியாகிறது. அதனால் இன்று சமூக

                                                        மட்டத்தில் ‘சிவில்’ மற்றும் ‘இராணுவம்’ என செயற்கையான பிளவொன்றை ஏற்படுத்துவதற்கு நல்லாட்சி அரசியல் கட்சிகள்

                                                        மேற்கொண்டுள்ள வஞ்சகமான முயற்சியை நான் கண்டிக்கிறேன். ஏதாவது பதவியொன்றுக்கு ஓய்வு பெற்ற முப்படை

                                                        அதிகாரியொருவரை நியமிக்கும் போது அதனை அவர்கள் ‘இராணுவ மயமாக்கல்’ என அழைக்கின்றனர். ஓய்வு பெற்ற

                                                        முப்படையினரும் சிவில் பிரஜைகளே. அவர்கள் இராணுவ உறுப்பினர்கள் அல்ல. அன்று இருந்த சங்க, மருத்துவர், ஆசிரியர்,

                                                        உழவர், தொழிலாளி சக்தியுடன் இன்று படையினரும் இணைந்துள்ளனர். எனவே நிச்சயமாக எமது அரசாங்கம்

                                                        அதிகாரத்திலுள்ள போது பாதுகாப்புப் படையினரைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் அரசாங்கத்தில் பல்வேறுபட்ட பதவிகளை வகிப்பார்கள்.

                                                        ஜனநாயக முறைமைக்கு அப்பால் வந்த அனைத்து சவால்களையும் தோற்கடித்து, இந்த நாட்டு மக்களின் சர்வஜன வாக்குரிமை

                                                        அடிப்படையிலான இறையாண்மை அதிகாரத்தைப் பாதுகாப்பதற்கு முப்படையினரும் பொலிசாரும் ஆற்றியுள்ள

                                                        வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பணியையும் நாம் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர வேண்டும். முழு உலகினையும் வியப்பில் ஆழ்த்திய

                                                        யுத்த வெற்றியின் பதினோறாவது ஆண்டுப் பூர்த்தியைக் கொண்டாடும் இச்சந்தர்ப்பத்தில் நல்லாட்சி அரசாங்கம் எமது

                                                        முப்படையினரை சர்வதேசத்திடம் காட்டிக் கொடுத்தமை, முப்படையில் தற்போது பணியாற்றுகின்ற மற்றும் ஓய்வு பெற்ற

                                                        அதிகளவான வீரர்களை வேட்டையாடி, அவமானத்திற்கு உட்படுத்தியமையினை நாம் ஒருபோதும் மறந்து விட மாட்டோம்.

                                                        அவ்வாறு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நீதி நிலைநாட்டப்படும் என்பதை நாம் மீண்டும் உறுதியளிக்கிறோம்.

                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                            பலாலி விமானப்படை தளத்தில் – தனிமை படுத்த பட்ட 98 பேர் விடுதலை

                                                            பலாலி விமானப்படை தளத்தில் – தனிமை படுத்த பட்ட 98 பேர் விடுதலை

                                                            பலாலி விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த

                                                            98 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டனர்.

                                                            கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையை சேர்ந்த 98 பேரே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டனர்.

                                                            இவர்களில் 6 மாத குழந்தை ஒருவர் உட்பட 10 சிறுவரும் உள்ளடங்குகின்றனர்.

                                                            பலாலி விமானப்படை தளத்தில்
                                                            பலாலி விமானப்படை தளத்தில்
                                                                Posted in இலங்கை செய்திகள்

                                                                வெளிநாட்டவர் மீது கூரை வீழ்ந்து பலி – தொடரும் விசாரணைகள்

                                                                வெளிநாட்டவர் மீது கூரை வீழ்ந்து பலி – தொடரும் விசாரணைகள்

                                                                கடந்த தினம் இலங்கை Kotadeniyawa பகுதியில் உள்ள தொழில்சாலை

                                                                ஒன்றின் கூரை வீழ்ந்து பங்களாதேஸ் நாட்டை சேர்ந்த 52 வயது நபர் பலியாகியுள்ளார்

                                                                இவரது இந்த மரணம் தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன

                                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                                    சிங்கள இராணுவ இணையங்களில் புலி கொடியை பறக்கவிட கைக்கிங் புரிய முயன்ற புலிகள் – அரசு கூவல்

                                                                    சிங்கள இராணுவ இணையங்களில் புலி கொடியை பறக்கவிட கைக்கிங் புரிய முயன்ற புலிகள் – அரசு கூவல்

                                                                    இலங்கை ,சிங்கள இராணுவத்தின் மிக முக்கிய பாதுகாப்பபு துறை சார்ந்த

                                                                    இணையங்களை கைக்கிங் புரிந்து அதில் புலிக்கொடி மற்றும் ,புலிகளை

                                                                    வெற்றி காணொளிகளை வெளியிட புலிகளின் வெளிநாட்டு கைக்கிங்

                                                                    குழு ஒன்று முயன்றுள்ளதாக சிங்கள அரச பயங்கரவாதம் அறிவித்துள்ளது

                                                                    முள்ளி வாய்க்கால் தினத்தில் இந்த நாசகார வேலைகளை புரிந்திட அவர்கள்

                                                                    முயன்றுள்ளதாகவும் ,ஆனல் அவை தமது பாதுகாப்பு பிரிவினரால் முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

                                                                    சிங்கள இராணுவ இணையங்களில்
                                                                    சிங்கள இராணுவ இணையங்களில்
                                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                                        மன்னாரில் காற்றுடன் கூடிய மழை 75 குடும்பங்கள் பாதிப்பு

                                                                        மன்னாரில் காற்றுடன் கூடிய மழை 75 குடும்பங்கள் பாதிப்பு மன்னார் மாவட்டத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு பெய்த

                                                                        காற்றுடன் கூடிய கன மழை காரணமாக வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் சில சேதம் அடைந்துள்ளன.

                                                                        அத்தோடு தோட்ட செய்கைகளும் நேதமடைந்துள்ளன. மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. நள்ளிரவு 12 மணி தொடக்கம் கடும்

                                                                        இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததை அடுத்து மன்னார் மாவட்டத்திலுள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் 75 குடும்பங்களை சேர்ந்த 254 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                                                        மன்னார் நகர் பிரதேச செயலக பிரிவில் 28 குடும்பங்களை சேர்ந்த 91 நபர்களும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவில் 18

                                                                        குடும்பங்களை சேர்ந்த 60 நபர்களும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் 13 குடும்பங்களை சேர்ந்த 43 நபர்களும் முசலி

                                                                        முசலி பிரதேசச் செயலாளர் பிரிவில் 8 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்களும் மடு பிரதேசச் செயலாளர் பிரிவில் 6 குடும்பங்களை சேர்ந்த 25 நபர்களும் பாதிக்கப்படுள்ளனர் .

                                                                        குறிப்பாக ஜீவபுரம் சாந்திபுரம்இ ஜிம்றோன் நகர் இவஞ்சியன் குளம் இதரவான்கோட்டை வெள்ளாங்குளம் சிறுநாவற்குளம் உற்பட

                                                                        அதிகளவான கிராமங்களில் வீடுகள் பாடசாலைகள் மற்றும் வர்த்தக நிலையங்களும் சேதம் அடைந்துள்ளன முன்னால்

                                                                        வீடமைப்பு நிர்மாண துறை அமைச்சர் சஜித் பிரேமதாசாவால் வீட்டு திட்டம் வழங்கப்பட்டு முதலாம் இரண்டாம் கட்ட மிகுதி பணம்

                                                                        வழங்கப்படாமல் பழையா வீடும் இன்றி புதிய வீடும் கட்டி முடிக்கப்படாத நிலையில் தற்காலிக கொட்டில்களில் வசித்து வந்த

                                                                        அதிகமான மக்கள் இதனால் பாதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் குறித்த பாதிக்கப்பட்ட வீடுக சொத்துக்கள் தொடர்பில்

                                                                        கிராம சேவகர் மற்றும் சமுர்த்தி உத்தியோகஸ்தர்கள் விபரங்களை சேகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது

                                                                        மன்னாரில், காற்றுடன், மழை,
                                                                        மன்னாரில், காற்றுடன், மழை,
                                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                                            கிளிநொச்சியில் சமுர்த்தி பயனாளிகள் – இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள்

                                                                            கிளிநொச்சியில் சமுர்த்தி பயனாளிகள் – இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள்

                                                                            கிளிநொச்சி மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் குறைந்த வருமானம் பெறுவோர் தொழில்

                                                                            இழந்தவர்கள் மற்றும் மேன் முறையீடு செய்தவர்களுக்கான இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் வழங்கும் பணி இன்று ஆரம்பமானது.

                                                                            பிரிவு உத்தியோகத்தர்கள் குறித்த தொகையினை வழங்கி வருகின்றனர்.

                                                                            2020 ஆண்டு மே மாதத்தில் சமுர்த்தி நலனுதவிக் கொடுப்பனவைப் பெறுபவர்களில் தகுதியான 24040 குடும்பங்களுக்கான

                                                                            கொடுப்பனவும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்கள் குறைந்த வருமானம் பெறுவோர் தொழில் இழந்தவர்கள் மற்றும் மேன்

                                                                            முறையீடு செய்தவர்கள் என்ற அடிப்படையில் 10564 பயனாளிகளுமாக 34604 பயனாளிகளுக்கு இரண்டாம் கட்ட கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன.

                                                                            இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த கொடுப்பனவு நடவடிக்கை எதிர்வரும்

                                                                            29.05.2020 ஆம் திகதி வரை தொடரும் என கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

                                                                            கிளிநொச்சியில், சமுர்த்தி,
                                                                            கிளிநொச்சியில், சமுர்த்தி,