Author: நலன் விரும்பி
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு
இயக்குனர் விக்னேஷ் சிவனும், நடிகை நயன்தாராவும் காதலித்து வரும் நிலையில், இவர்கள் திருமணம் குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா திருமண தேதி அறிவிப்பு
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
நடிகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவர் விக்னேஷ் சிவன். இவர் சிம்புவின் ‘போடா போடி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதையடுத்து 2015-ம் ஆண்டு அவர் இயக்கிய ‘நானும் ரவுடி தான்’ படத்தின் போது
, நயன்தாராவுக்கும், அவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இவர்களது காதல் 6 ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
சமீபத்தில் நயன்தாரா, சமந்தாவை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில்
ஓடிக்கொண்டிருக்கிறது. நயன் தாராவும் விக்னேஷ் சிவனும் விரைவில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியானது.
நயன்தாரா – விக்னேஷ் சிவன்
இந்நிலையில், இவர்கள் திருமணம் ஜூன் 9 ஆம் தேதி நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவர்கள் திருமணம் திருப்பதி கோவிலில் நடைபெற இருக்கிறது.
விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இன்று திருமண மண்டபத்தை முன்பதிவு செய்துள்ளார்கள்.
துமிந்த சில்வா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
துமிந்த சில்வா நாட்டை விட்டு தப்பி ஓட்டம்
இலங்கையில் சிறையில் அடைக்க பட்டு கோட்டாவின் மன்னிப்பின் பேரில் விடுதலை
செய்யப்பட்ட துமிந்த சில்வா தற்போது நாட்டை விட்டு தப்பித்து சிங்கப்பூர் பயணமாகியுள்ளார்
இலங்கையில் ஆளும் அடச்சியாளர்கள் பதவி கவிழ்க்க பட்டு சிறையில் அடைக்க படும் நெருக்கடி
நிலை ஏற்படும் என்ற காரணத்தால் முக்கியமானவர்கள் தப்பி ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழில் பெண்மீது வாள்வெட்டு – திருடர்கள் கொலைவெறி தாக்குதல்
யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் தனிமையில் வசித்து வந்த பெண்மணி ஒருவர்
வீட்டுக்குள் திருடர்கள் நுழைந்துள்ளனர்.
இவர்களை கண்ணுற்ற அவர்கள் பெண்மணியை வெட்டி விட்டு தப்பி சென்றுள்ளனர்.
தப்பி ஓடிய திருடர்ளை கண்டு பிடிக்கும் நகர்வில் ல் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் யாழ்ப்பாண மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
கவர்ச்சி உடையில் விஜய் பட நடிகை
கவர்ச்சி உடையில் விஜய் பட நடிகை
தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து பிரபலமான நடிகை மாளவிகா மோகனனின் கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
கவர்ச்சி உடையில் விஜய் பட நடிகை.. வைரலாகும் புகைப்படம்
மாளவிகா மோகனன்
கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
பின்னர் தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார்.
மாளவிகா மோகனன்
இதையடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார். கடைசியாக இவர்
தனுஷுடன் இணைந்து நடித்து வெளியான ‘மாறன்’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தற்போது
புதிய கவர்ச்சி புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார். வெள்ளை நிற உடையில் இவர்
கவர்ச்சியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரிட்டனில் ஆளும் கட்சி பலத்த தோல்வி
பிரிட்டனில் ஆளும் கட்சி பலத்த தோல்வி
பிரிட்டனில் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் ஆளும்
கட்சியினர் நூறு ஆசனங்களை இழந்து பலத்த தோல்வியை சந்தித்துள்ளனர்
எதிர்வ்ரும் பாராளுமன்ற தேர்தலில் இவரக்ள மேலும் பலத்த சரிவை சந்திப்பார்கள் என எதிர் பார்க்க படுகிறது
ரணில் வீடு செல்ல வேண்டும் – மக்கள் அவர் வீடு முன்பாக போராட்டம்
ரணில் வீடு செல்ல வேண்டும் – மக்கள் அவர் வீடு முன்பாக போராட்டம்
இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்கு முண்டு டு கொடுத்து ஆட்சி நடத்தி வரும் ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டா ,மகிந்தா போல வீடு செல்ல வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர் .
இவ்வாறான கோரிக்கையுடன் ரணில் விக்கிரமசிங்கா ,வீடு முன்பாக சிங்கள மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர் .
இந்த போராட்டத்தை அடுத்து அவர் கடுப்பில் உறைந்துள்ளாராம்.
தற்போது பலத்த இராணுவ காவல்துறை படதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
மகிந்தா பதவி விலகுகிறார் – உள்ளே வெடித்த மோதல்
மகிந்தா பதவி விலகுகிறார் – உள்ளே வெடித்த மோதல்
இலங்கையில் ஆளும் சகோதரர்கள் பதவி விலக கோரி நாடெங்கும் மக்கள் போராட்டம் நடத்திய வண்னம் உள்ளனர்
இவர்களின் இந்த போராட்டத்தினால் ராஜபக்ச குடும்பம் கொதிப்பில் உறைந்துள்ளது
தமது ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியாத நெருக்கடியில் கோட்டா சிக்கி தவித்து வருகிறார் ,
இந்த நிலையில் தற்போது பிரதமர் மகிந்தாவை பதவி விலகும் படி கோட்டா
தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் உள்வீட்டுக்குள் மோதல் வெடித்துள்ளது
ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்
ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் நீரில் மூழ்கி மரணம்
இலங்கை அக்கரைப்பற்று வாங்காமம் பகுதியில் உள்ள ஆறொன்றில் நீராட சென்ற
இரு சிறுவர்கள் நீரில் அடித்து செல்ல பட்டு மரணமாகியுள்ளனர்
நீரில் அடித்து செல்ல பட்ட அவர்களை மக்கள் மீட்டு அதே பகுதி மருத்துவ மனையில்
சேர்க்க பட்ட பொழுதும் அவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர்
இலங்கையில் ஆண்டு தோறும் 800 க்கு மேற்பட்டவர்கள் இவ்விதம் நீரில் மூழ்கி
மரணமாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் அவசரகால பிரகடனம் அமூல் – மக்களை அடக்க கோட்டா சதி
இலங்கையில் அவசரகால பிரகடனம் அமூல் – மக்களை அடக்க கோட்டா சதி
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் நாடெங்கும்
அதிகரித்து செல்கிறது ,இந்த நிலையில் கடந்த இரவு அமுலாகும் வகையில் அவசரகால
சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
இதற்கான வரத்தமானி கோட்டாவின் கையெழுத்துடன் வெளியாகியுள்ளது ,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கள் எழுந்து வருகின்றன
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்
இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்
இஸ்ரேல் தலை நகர் Tel Aviv பகுதியில் காரில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென மக்கள்
மீது கத்தி குத்து தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில மூவர் பலியாகினர்
,மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
பலஸ்தீன மக்கள் மீது பெரும் இனப் படு கொலையை புரிந்து இஸ்ரேல் வெறியாட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ,
இந்த தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது.
சாப்பாட்டு பாசலுக்குள் -பாம்பு தோல்- என்னங்கடா நடக்குது
சாப்பாட்டு பாசலுக்குள் -பாம்பு தோல்- என்னங்கடா நடக்குது
கேரளாவில், பரோட்டா பார்சலில் பாம்பு தோல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவின் நெடுமங்காட்டை அடுத்த பூவத்தூர் பகுதியை சேர்ந்த பிரியா, அதே
பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா பார்சல் வாங்கி வீட்டிற்கு சென்றார்.
வீட்டில் சென்று பார்சலை பிரித்து பார்த்த போது, அதில் பாம்பு தோல் இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து நெடுமங்காடு பொலிஸார் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.
வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் உணவை வாங்கி சோதனை செய்தனர். மேலும்,
சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கும் சீல் வைத்தனர். இந்த சம்பவம் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு
பாராளுமன்றுக்குள் பதட்டம் – சபை ஒத்திவைப்பு
பாராளுமன்ற வளாகத்தில் அகில இலங்கை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகைக்குண்டு
பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதை அடுத்து, சஜித் பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் சபைக்குள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
சபைக்கு ஓரிடத்தில் ஒன்றாக கூடிநின்றவர்கள், ஆளும் கட்சியினர் பதிலளிக்க
வேண்டுமென கோஷமெழுப்பினர். அத்துடன், சபைக்குள் இறங்கவும் முயற்சிச்செய்தனர் இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக,
சபை நடவடிக்கைகள் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்
சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்
சீனாவில் பாரிய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதற்குள் வசித்த 53 மக்கள் பலியாகினர்
இதுவரை பத்து சடலங்கள் மீட்க பட்டுள்ளன
இந்த விபத்துக்கு காரணமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல நடிகை மரணம் அடைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல நடிகை மர்ம மரணம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்
கைலியா போஸி
அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி தொடர் “டாட்லர்ஸ் & டியரஸ்”. சிறு குழந்தைகள் பங்குபெற்று போட்டியிட்டுக் கொள்ளும் இந்த தொடரில் இறுதியாக
நடுவர்கள் மூலம் ஒரு வெற்றியாளர் தேர்ந்து எடுக்கப்படுவர். இது 2009ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.
இந்த தொடரில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக பங்குபெற்று உலகம் முழுவதும் தனது ஜிஐஎப்(GIF) புகைப்படத்தால் புகழ் பெற்றவர் நடிகை கைலியா போஸி. தற்போது
16 வயதான இவர் வாஷிங்டனில் மர்மான முறையில் இறந்துள்ளார். கைலியா போஸி
தற்கொலை செய்து இருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் இவரது மரணத்திற்கான அதிகாரபூர்வ காரணம் வெளியாகவில்லை.
இந்த செய்தியை அவரது தாயார் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர், “என்னிடம் வார்த்தைகளோ எண்ணங்களோ இல்லை.
ஒரு அழகான பெண் குழந்தை இறந்துவிட்டது. கைலியாவை இழந்து தவிக்கும் எங்களுக்கு தனியுரிமை கொடுங்கள்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். உலகம்
முழுவதும் உள்ள கைலியா போஸி ரசிகர்கள் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும் கைலியா போஸிக்கு அவரது ரசிகர்கள்
தங்கள் இரங்கலை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்
முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்
இரவின் நிழல் பட விழாவில் பார்த்திபன், மைக் வேலை செய்யாத்தால் அதனை தூக்கி எறிந்த சர்ச்சைக்கு முத்தமிட்டு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
முத்தமிட்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பார்த்திபன்
பார்த்திபன்
இரவின் நிழல் பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் முன்னிலையில் நடிகர் பார்த்திபன் வேலை செய்யாத மைக்கை தூக்கி முன்வரிசையில் கோபத்தோடு
எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சமூக வலைத்தளங்களிலும் விமர்சனங்களை கிளப்பின. இதற்கு பார்த்திபன் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். அதில்
அவர் கூறும்போது, “மைக்கை தூக்கி எறிந்தார் பார்த்திபன். இவ்வளவு அகங்காரம் தேவையா என்றெல்லாம் சமூக வலைத்தளத்தில் பேசப்படுகிறது. தூக்கிப்போட்டது
மைக், ஆனால் உடைந்தது என்னவோ எனது மனது. வைரல் ஆக வேண்டும் என்பதற்காக எல்லாம் இல்லை.
பார்த்திபன் பதிவு
கடந்த சில நாட்களாக சரியான உறக்கம் இல்லை. ஏ.ஆர்.ரகுமான் படத்துக்கு இசையமைப்பது பெரிய விஷயமாக இருந்தது. பெரிய பொருட்செலவில் விழா
நடத்தினேன். ஏ.ஆர்.ரகுமானுக்கு அளித்த கேடயம் கீழே விழக்கூடாது என்ற பதற்றம். இப்படி நிறைய விஷயங்கள் எனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தின. பயம், படபடப்பு
எல்லாம் சேர்ந்து உள்ளே பேய் புகுந்த மாதிரி ஆனது. வைரலாக்கும் நோக்கோடு இது நடக்கவில்லை. மேடைக்கு நாகரிகங்கள் இருக்கின்றன. ஏ.ஆர்.ரகுமானிடம் மன்னிப்பு
கேட்டு குரல் பதிவு அனுப்பினேன்.
ரோபோ சங்கரிடமும் மன்னிப்பு கேட்டேன்” என்றார்.
போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்
போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்
இலங்கை பாரளுமன்றம் அருகில் அமைக்க பட்டுள்ள போலீஸ் வீதி தடைகள் மேல்
பட்டிகள் ,யங்கிகள்,பிரசியர் உள்ளிட்டவை காய போட்டு போராட்டக் காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த வினோத போராட்டம் மூலம் அரசுக்கு எதிராக தாம் கடும் கோபத்தில் உள்ளதை மக்கள் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்
நாடு தழுவிய ரீதியில் கரத்தால் இடம்பெற்று வருகிறது ,
இதுவரை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி
விலக கோட்டபாய மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்
கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்
இலங்கையில் ஆளும் அதிபர் கோட்டபாயாவின் பாதுகாப்பில் திடீர் மாற்றம் இடம்பெற்றுள்ளது ,
அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா
அதிபர் ஒருவரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பாதுகாப்பு படையணிக்கு பொறுப்பாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக புலனாய்வு மற்றும் கண்காணிப்புக்கு
பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.டி.ஜயலத் உட்பட 100 பொலிஸ்
புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக
இன்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாடெங்கும் அரசுக்கு எதிராக போரட்டம் – வீதிகள் அடித்து பூட்டு
நாடெங்கும் அரசுக்கு எதிராக போரட்டம் – வீதிகள் அடித்து பூட்டு
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்
இவர்கள் போராட்டத்தினால் நாட்டின் இயல்பு வாழ்வு முடக்க பட்டுள்ளது
வடக்கு கிழக்கு உள்ளிட்ட பகுதிகளும் தமிழர்கள் கடையடைப்பு மற்றும் வீதி
மறுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்
கட்டு நாயாக்க வீதிகள் முடக்கம் – இயல்பு வாழ்வு முடக்கம்
கட்டு நாயாக்க வீதிகள் முடக்கம் – இயல்பு வாழ்வு முடக்கம்
காட்டு நாயாக்க முதலீட்டு வீதி தற்போது முடக்க பட்டுள்ளது ,அங்கு ஊழியர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் இந்த் வீதி முடக்க பட்டுள்ளது
ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நாடு எங்கும் வெடித்து பறக்கிறது ,இதனால்
விமான நிலைய போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது
84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்
84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்
நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார்..
84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்
84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் பணியாற்றி கின்னஸ் சாதனை படைத்த 100 வயது முதியவர்
தனியார் துறையை பொறுத்தவரை இன்றைய நவீன காலத்தில் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெறுவது அரிதான ஒன்றாக உள்ளது. இந்த சூழலில் பிரேசிலில் நூறு
வயதை கடந்த முதியவர் ஒருவர் 84 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் தொடர்ந்து பணியாற்றி சாதனை படைத்திருக்கிறார். இதற்காக அவரது பெயர் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
பிரேசிலின் புருஸ்க்யூ நகரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனத்தில் கடை நிலை ஊழியராக தொடக்கத்தில் பணியாற்றி வந்த வால்டர் ஆர்த்மன் என்பவர், படிப்படியாக
முன்னேற்றம் அடைந்து விற்பனை மேலாளராக உயர்ந்தார். நூறு வயதிலும் அதே உற்சாகத்துடன் பணியாற்றும் வால்டர், பணியை விரும்பி செய்தால், ஒரே நிறுவனத்தில் நிச்சயம் நீடிக்க முடியும் என்கிறார்..
நிறுவனத்திற்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றுவது போல, ஆரோக்கியத்திலும் முறையான கவனம் செலுத்துவது அவசியம் என கூறுகிறார். தினசரி
உடற்பயிற்சியிலும் ஈடுபட்டுகிறார். தனது அன்றாட பணியை திறம்பட மேற்கொள்ளும் ஒருவரும் கின்னஸ்
உலக சாதனை படைக்க முடியும் என நிரூபித்துள்ளார் வால்டர்.












