இரண்டு சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இரண்டு சடலங்கள் மீட்பு

இரண்டு சடலங்கள் மீட்பு

இரண்டு சடலங்கள் மீட்பு .தங்காலை சீனிமோதர பகுதியில் புதுப்பிக்கப்பட்டு வரும் கைவிடப்பட்ட வீட்டில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நடத்தப்பட்ட சோதனை

அந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் (படிக

மெத்தம்பேட்டமைன்) என்ற போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் 10 பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபர் திடீரென நோய்வாய்ப்பட்டு தங்காலை பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. சிகிச்சை பெற்று வந்த அவர் பின்னர் உயிரிழந்தார்.

பொலிஸார் முழு அளவிலான விசாரணை

இந்த சம்பவம் குறித்து பொலிஸார் முழு அளவிலான விசாரணையை தொடங்கியுள்ளனர்,

அதே நேரத்தில் இறப்புக்கான காரணங்களைக் கண்டறிய அரசு பகுப்பாய்வாளர் துறை பிரேத பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது.

8எலும்பு கூடுகள் மீட்பு செம்மணியில்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு

செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு

செம்மணியில் 240 சடலங்கள் மீட்பு ,யாழ்ப்பாணம் செம்மணி மயானத்தின் அருகில் தமிழர்கள் கைது செய்யப்பட்டு புதைக்கப்பட்ட நிலையில் 30 வருடங்களின் பின்னர் தற்பொழுது சடலங்கலாங்களாக மீட்க பட்டுள்ளனர் .240 bodies recovered in Semmani

240 க்கு மேற்பட்ட எலும்புக்கூடுகள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளார்கள் .

சிங்கள அரச பயங்கரமாத ராணுவத்தினரால் கைது Arrested by Sinhala government terror forces

சிங்கள அரச பயங்கரமாத ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு செல்லப்பட்ட தமிழர்கள் மிகக் கொடூரமாக வதைகள் செய்யப்பட்டு பின்னர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவமாக இது காணப்படுகிறது .

இந்த எலும்புக்கூடுகள் மீட்பு சம்பவங்கள் சாட்சியாக இருக்கிறது .

சர்வதேச விசாரணை மேற்கொண்டு தமிழர்களை தண்டித்தவர்களை நீதியின் நிறுத்துவர்களை எதிர்பார்க்கப்படுகிற பொழுதும் அது இன்னும் கட்டப்படவில்லை.

இலங்கையை ஆண்ட ஜனாதிபதிகள் Presidents who ruled Sri Lanka

தொடர்ந்து 800க்கு மேற்பட்ட சடலங்கள் இருப்பதாகவும் அவை யாவும் போர்க்கால பகுதியில் இலங்கையை ஆண்ட ஜனாதிபதிகளின்

ஆட்சிக்காலத்தில் இராணுவத்தினரால் கொன்று புதைக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

விடுதலைப் புலிகள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டவர்கள்.

பாலியல் துன்பங்களுக்கு பின்னர் மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் காணப்படுகிறது.

கடற்கரைப் பகுதியில் மூவரின்சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கடற்கரைப் பகுதியில் மூவரின்சடலங்கள் மீட்பு

கடற்கரைப் பகுதியில் மூவரின்சடலங்கள் மீட்பு

கடற்கரைப் பகுதியில் மூவரின்சடலங்கள் மீட்பு ,மன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலுதுவாவ் கடற்கரைப் பகுதியில் கரையொதுங்கிய நிலையில், ஆணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

மரணித்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதோடு, நீல நிற காற்சட்டை மற்றும் சிவப்பு கோடு வந்த நீல நிற டீ-சர்ட் அணிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் மன்னார் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, பொகவந்தலாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டியாகலை தோட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் இருந்து அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் நேற்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குழு குறித்த சடலத்தை கண்டு பொலிஸாரிடம் தகவல் வழங்கியுள்ளனர்.

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்தபோது, குறித்த சடலத்தை அவதானித்த தொழிலாளர்கள், உடனடியாக பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில் உயிரிழந்தவர் சுமார் 73 வயது கொண்டவராக இருக்கலாம் என பொலிஸார்

சடலம் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலை

தெரிவித்ததோடு, சடலம் தற்போது டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

இதற்கிடையில் கல்கிஸ்ஸ கடற்கரைப் பகுதியிலும் அடையாளம் தெரியாத ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில், சடலம் தற்போது களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ ​பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு

காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு

காணாமல் போன மீனவர் சடலங்கள்மீட்பு ,களுத்துறை, பேருவளை, மொரகல்ல பகுதியில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில், காணாமல் போயிருந்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.

கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள்

பெந்தோட்டை கடற்கரையில் மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (28) காலை மீன்பிடிக்கச் சென்றிருந்த போது அவர்கள் இந்த விபத்திற்கு முகம் கொடுத்திருந்தனர்.

இறந்தவர்கள் அளுத்கம பகுதியைச் சேர்ந்த நதுன் குமார மற்றும் அவரது சகோதரர் துமிந்த நதுன் குமார என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் காணாமல் போயிருந்த நிலையில், பிரதேசவாசிகள் படகுகள் மூலம் அவர்களைத் தேடியிருந்தனர் .

மீனவ படகுகள் கடலில் விபத்தில்

தற்போது மீனவ படகுகள் கடலில் விபத்தில் சிக்கி மீனவர்கள் காணாமல் போவதும் ,மரணமாகி வருகின்ற சம்பவங்கள் ,மக்கள் மத்தியில் மிக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .

இவ்விதமான விடயங்கள் மக்கள் மத்தியில் சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது . என்பது குறிப்பிடத்தக்கது.

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு

நாட்டின் சில பகுதிகளில் 3 சடலங்கள் மீட்பு ,நாட்டின் சில பகுதிகளில் மீட்கப்பட்டுள்ள அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து பொலிஸ் ஊடகப் பிரிவால் அறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

இந்த சடலங்கள் நேற்று (18) மீட்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

மில்லனிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹால்தோட்ட கால்வாயின் கரையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் காணப்படுவதாக நேற்று மாலை கிடைத்த தகவலைத் தொடர்ந்து மில்லனிய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உடலின் மேல் பகுதி மட்டுமே எஞ்சியிருப்பதையும், ஏனைய பகுதியில் எலும்புக்கூடு எச்சங்களே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மில்லனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், நேற்று மதியம், கிரியெல்ல பொலிஸ் பிரிவின் குருகம்மோதர பகுதியில் உள்ள களுகங்கையில் சடலம் ஒன்று மிதப்பதாக கிரியெல்ல பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

அதன்படி, முன்னெடுத்த விசாரணையில் சடலத்தின் எலும்புக்கூடுகள் மட்டுமே எஞ்சியிருந்ததாகவும், தலை பகுதி இல்லை எனவும் தெரியவந்துள்ளது.

இறந்தவர் ஒரு ஆண் என்பதை பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

இறந்தவர் வெளிர் நீல நிற காற்சட்டை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் இரத்தினபுரி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்டசின்ன உப்போடை வாவியில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதாக மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, விசாரணையில் இறந்தவர் 60-70 வயதுக்குட்பட்ட மெலிந்த உடலமைப்பு கொண்ட பெண் என்பது தெரியவந்தது.

அவர் இறுதியாக வெள்ளை மற்றும் பச்சை நிறங்கள் கலந்த கவுன் அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், தற்போது மட்டக்களப்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு

ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் மீட்பு ,பாணந்துறை கல்கொட ஸ்ரீ மகா விகாரஸ்த வீதியிலுள்ள வீடொன்றில் ஆண் மற்றும் பெண்ணின் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் தரையிலும் , ஆணின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் காணப்பட்டதாக பாணந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த இருவரும் தகாத தொடர்பில் இருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த நபர் பெண்ணை கொலை செய்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

47 வயதுடைய ஆணும் 42 வயதுடைய பெண்ணுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பாணந்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4 சடலங்கள் மீட்பு
Posted in உலக செய்திகள்

4 சடலங்கள் மீட்பு

4 சடலங்கள் மீட்பு

4 சடலங்கள் மீட்பு, அமெரிக்கா தலைநகர் நியூ யோர்க்கில் உள்ள அப்பார்மென்ட் பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

இந்த கொலைகள் எவ்வாறு இடம்பெற்றன என்பது தொடர்பில் குற்ற தடுப்பு பிரிவினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

அமெரிக்காவில் சமீப காலங்களாக அதிகரித்து செல்லும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் சிக்கி நாள்தோறும் நூற்று கணக்கில் மக்கள் பலியாகி வருவதாக தகவல் வெளியாகி இருந்ததன .

அவ்வாறன சம்பவமாக இந்த துப்பாக்கி சூடு சம்பவம் பார்க்க படுவதாக தெரிவிக்க படுகிறது .

ஆயுத பயன்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி மக்கள் கோரிக்கை விடுத்தது வருகின்ற பொழுதும் ,அதனை செவி மடுக்காத அரசின் கொள்கை காரணமாகவே இந்த விடயங்கள் இடம்பெறுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மேற்படி கொலை சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு

47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு

47 சடலங்கள் முல்லைத்தீவில் மீட்பு , கொக்கு தொடுவாய் மனிதப்புதைகுழி ஆய்வுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதிபன் முன்னிலையில் சட்ட அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் தொல்லியல் பேராசிரியர்கள் முன்னிலையில் இந்த அகழ்வ பணி இடம்பெற்றது.

இதன்பொழுதே இந்த புதைகுழியில் இருந்து 47 சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அவை விடுதலைப் புலிகள் உடைய சீருடைகள் அடங்கிய உடல்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிலிருந்து மீட்கபட்ட அனைத்து போராளிகள் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் என தெரிய வந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு யுத்தம் இடம்பெற்று இன்று 15 ஆண்டுகள் கழிந்து வருகின்ற பொழுதும் இலங்கை அரச ஆக்கிரமிப்பு ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழின படுகொலைகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன .

தமிழ் மக்களை கொன்று புதைத்து தனது வெறியாட்டத்தை நடத்திய ராஜபக்ச குடும்பத்தினருக்கு இவ்விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அவ்வாறான ஒரு காலப்பகுதியில் இந்த புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது மக்கள் மத்தியில் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

இந்த புதைகுழியில் இருந்து மீட்கப்படுகின்ற சடலங்கள் உரிய முறையில் பகுப்பாய்வுக்கு உள்ளாக்கப்பட்டு ,இலங்கை அரசு மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்கு ஆளும் அரசுகள் தயாராகி வருமா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்றது.

ராஜபக்ச ஆட்சியின் அங்கீகாரத்தில் ஆட்சியை நடத்தி வருகின்ற ரணில் விக்கிரமசிங்காவினால் இந்த புதைகுழிகள் உரிய விசாரணைகள் நடத்தப்படுமா என்ற கேள்வியை சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

15 ஆண்டுகள் கழிந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்காது இழுத்தடித்து வரும் இலங்கை அரசாங்கத்தின் படுகொலைகள் ,என்று விசாரிக்கப்படுவது எப்போது தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் என்ற கேள்வியை தற்பொழுது எழுப்பப்பட்டுள்ளது.

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு

நீர்த்தேக்கத்தில் இரு சடலங்கள் மீட்பு விக்டோரியா நீர்த்தேக்கத்தில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிடைத்த தகவலுக்கமைய திகன, அம்பகோட்டே பகுதியில் இருந்து இரு சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை அடையாளம் காண முடியாத அளவிற்கு அழுகிப் போயுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தெல்தெனிய பதில் நீதவான் சம்பவ இடத்திற்கு சென்று சடலங்களை பார்வையிட்டுள்ளார். பிரேத பரிசோதனைகளுக்காக சடலங்கள் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பில், தெல்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

ஹோட்டல் அறையில் இரண்டு சடலங்கள் மீட்பு

ஹோட்டல் அறையில் இரண்டு சடலங்கள் மீட்பு

பெண் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்து, சந்தேக நபரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவமொன்று பொத்துவில் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அறுகம்பை பகுதியில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்த பெண் ஒருவரே நேற்று (12) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் மஹகளுகொல்ல பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த பெண் ஆண் ஒருவருடன் ஹோட்டல் அறையில் தங்க வந்திருந்த நிலையில், அறை திறக்கப்படாததால் சந்தேகமடைந்த முகாமையாளர் அறுகம்பை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு அறிவித்து அவர்களுடன் அறையின் கதவை உடைத்து திறந்துள்ளனர்.

ஹோட்டல் அறையில் இரண்டு சடலங்கள் மீட்பு

இதன்போது, குறித்த அறையில் பெண் ஒருவர் இரத்த வௌ்ளத்துடன் சடலமாக காணப்பட்டதாகவும், சந்தேகநபர் அறையை அண்டிய குளியலறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொத்துவில் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய நபரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொத்துவில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எரகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நியூகுண விகாரைக்கு மேலே உள்ள ஏரிக்கு அருகில் நேற்று (27) காலை சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும், ஆனால் அவர் 45-50 வயது மதிக்கத்தக்க, 5 அடி 5 அங்குலம் உயரம் கொண்டவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அடையாளம் தெரியாத 2 ஆண்களின் சடலங்கள் மீட்பு

மேலும் அவர் மேலே ஊதா நிற சட்டையும், ஆரஞ்சு மற்றும் ஊதா கலந்த சாரமும் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ரம்புக்கனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஸ்மல்பொல புகையிரத கடவைக்கு அருகில் உள்ள மா ஓயாவில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கிடைத்த தகவலின் அடிப்படையில் ரம்புக்கனை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

சடலங்கள் மீது ஏறி ஓடும் இஸ்ரேல் வாகனங்கள்
Posted in உலக செய்திகள்

சடலங்கள் மீது ஏறி ஓடும் இஸ்ரேல் வாகனங்கள்

சடலங்கள் மீது ஏறி ஓடும் இஸ்ரேல் வாகனங்கள்

பாலஸ்தீனம் தல் அல்-ஹவா பகுதியில் கைவிட பட்ட மனித சடலங்கள் மேலே
இஸ்ரேலிய இராணுவத்தின் யுத்த வாகனங்கள் ஏறி பயணிக்கின்றன .
அந்த வண்டிகள் ஊடக அவை சிதைக்க படுவதாக மக்கள் தெரிவித்துள்ளன

அல்குட்ஸ் மருத்துவமனை அதனை அண்மித்த பகுதிகளில் இறந்தவர்கள் சடலங்கள் புதைக்க பட்டுள்ளன ,அவற்றின் மீதும் இந்த வண்டிகள் ஏறி செல்கின்றன .

சடலங்கள் மீது ஏறி ஓடும் இஸ்ரேல் வாகனங்கள்

மேலும் அதே பகுதியில் கைவிடப்பட்ட மனித சடலங்கள் அழுகிய நிலையில்
காணப்படுவதாக தெரிவிக்க படுகிறது .

சுடலைகளை இடித்து அளித்து நாசம் புரிந்த இனவாத இஸ்ரேல் இராணுவம் ,இப்பொழுது இந்த வெறியாட்டம் நடத்திய வண்னம் உள்ளது குறிப்பிட தக்கது .

தொடர்ந்து எறிகணை தாக்குதலை
இஸ்ரேல் இராணுவம் நடத்தி வருவதால் கட்டிடங்கள் உடைந்து தொங்கு கின்றன

மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளன .
இவ்வாறான காணொளி காட்சிகள் சிலது வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன

வீடியோ

சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை

சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை

இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் அகோர தாக்குதலில்
மருத்துவமனை மனித சடலங்களினால் நிரம்பி வழிகிறது .

மக்களை முற்றுகைக்குள் வைத்து தொடராக இஸ்ரேல் அரச இராணுவம் இன படுகொலையை நடத்திய வண்ணம் உள்ளது .

இதுவரை 1200 மக்கள் பலியாகியும் ஆறாயிரம் பேர் வரையில் காயமடைந்துள்ளனர் ,ஐநூறுக்கு மேற்பட்ட வீடுகள் தரை மட்டமாகியுள்ளன .

மின்சாரம் தடுக்க பட்டுள்ளதால் தொடர்ந்து காசா மருத்துவமனை,
இயங்க முடியாத நெருக்கடி ஏற்பட்டுள்ளது .

சடலங்களால் நிரம்பி வழியும் காசா மருத்துவமனை

எதிர்வரும் இரண்டு தினங்களில் மருத்துவமனை செயல் பாடுகள் தடை படலாம் என மருத்துவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

காசாவில் உள்ளவர்கள் யாவரும் மனித மிருகங்கள் என கோரியாவாறு இஸ்ரேல் அரச பயங்கரவாதம் அப்பாவி மக்கள் மீது தாக்குதலை நடத்தி வருகிறது .

இதுவரை இருநூறுக்கு மேற்பட்ட சிறுவர்கள் பலியாகியுள்ளனர் .
உணவு இன்றி சிறுவர்களும் பலியாகி வருகின்றனர் .


அவ்வாறு பசியால் இறந்த தாய்மாரின் கண்ணீர் கதறல் பார்ப்பவர்கள் கண்களில் கண்ணீர் சொரிய வைக்கிறது .

ஹமாஸ் போராளிகள் மீதே தாக்குதல் நடத்தி வருகிறோம் என இஸ்ரேல் இராணுவம் தெரிவித்து அப்பாவி மக்களை குறிவைத்து அடித்து வருகிறது .

உங்களை படுகொலை செய்வோம், எவர் என்ன கேட்பார் என்கின்ற நிலையில் யூத இனவெறி செயலாற்றுவதாக இந்த தாக்குதல்கள் எடுத்து காட்டுகின்றன

Israel Palestine war |lates news click here

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்

இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்

இலங்கையில் தொடராக மர்ம கொலைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நாள் தோறும் இலங்கையில் இடம்பெறும் இவ்வாறான மர்ம கொலைகள் ,எவ்வாறு இடம் பெறுகிறது என்பது தொடர்பில் சந்தேகங்கள் வெளியிட பட்டுள்ளது .

பண்டாரவத்தை, பொக்குனுவிட்ட பகுதியில் வாடகை வீட்டில் தங்கி இருந்த 23 வயதுடைய ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார்

இலங்கையை மிரட்டும் மர்ம கொலைகள் மிதக்கும் சடலங்கள்

இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

நாள் தோறும் இலங்கையில் மிதக்கும் மனித சடலங்களினால் , மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது .

புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரைரவிகரன் திடுக்கிடும் தகவல் video
Posted in உளவு செய்திகள்

புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரை ரவிகரன் திடுக்கிடும் தகவல் video

புதைகுழி மேல் இராணுவ முகாம் 1000 சடலங்கள் மேல் விகாரை
ரவிகரன் திடுக்கிடும் தகவல் video

முல்லைத்தீவில் கண்டு பிடிக்க பட்ட புதைகுழி காணப்படும் பகுதியில் , உள்ள இராணுவ முகாம் அருகே ,பல்லாயிரம் தமிழர் சடலங்கள் உள்ளதாக தமிழ்கட்சி அரசியல் பிரமுகர் ரவிகரன் ,அவர்கள் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுளளார் .

காணொளியை முழுமையாக பாருங்கள்

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் நான்கு சடலங்கள் மீட்பு

அமெரிக்காவில் நான்கு சடலங்கள் மீட்பு

அமெரிக்கா Nebraska பகுதியில் இரு வீடுகளில் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன.

இந்த சடலங்கள் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .

இவர்கள் மரணம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது.

இவ்வேளை அமெரிக்காவில் 14 வயது சிறுவன் ஒருவன் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளான் .

நாள் தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூடுகள் அதிகரித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

    Posted in Uncategorized

    சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

    சீனாவில் இடிந்து வீழ்ந்ந்த கட்டிடம் – 53 பேர் மரணம்

    சீனாவில் பாரிய கட்டிடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் அதற்குள் வசித்த 53 மக்கள் பலியாகினர்

    இதுவரை பத்து சடலங்கள் மீட்க பட்டுள்ளன

    இந்த விபத்துக்கு காரணமாக விளங்கிய ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர் ,


    தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

      இலங்கையில் கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

      இலங்கையில் ஆளும் மகிந்த ,கோத்தபாயா ஆட்சிக்கு வந்ததன் பின்ன

      நீர் நிலைகளில் மனித சடலங்கள் மிதக்கும் சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது

      கடந்த தினம் ஓமந்தை பகுதியில் ஏழுவயது மாணவன் ஒருவன்

      கிணறு ஒன்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளான்

      இவன் எவ்வாறு இந்த கிணற்றுக்குள் வீழ்ந்தான் என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

      அடித்து கொன்றுவிட்டு கிணறுகள்,குளங்கள் போன்ற பகுதிகளில்

      மனித சடலங்கள் வீச பட்டு வருவதாக உள்ளிருந்து வரும் சில கசிவுகள் தெரிவிக்கின்றன

      Posted in முக்கிய செய்திகள்

      கடலில் மிதக்கும் மனித சடலங்கள்- பீதியில் மக்கள் video

      கடலில் மிதக்கும் மனித சடலங்கள்- பீதியில் மக்கள் video

      ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக வருகை தந்த சிரியா,அகதிகள் கப்பல் கடலில் மூழ்கியது ,அதன் பொழுது அந்த கப்பலில் இறந்த மனிதர்களது சடலங்கள் இவை

      முழுமையாக காணொளியை பாருங்கள்

      https://www.youtube.com/watch?v=x3BnsApE3Fc&feature=youtu.be