Tag: போராட்டம்
முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்
முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் மக்கள் முழக்கம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி முட்டாள் கோட்டாவும் , பொம்மை பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவும் நமக்கு வேண்டாம் என மக்கள் குழு அறிவித்துள்ளது.
ரணில் இலங்கையின் ஜனாதிபதியாக வர முடியாது ,மக்கள் ஆதரவு இன்றி பின் கதவால் பிரதமர் ஆன பொம்மை ரணிலும் எமக்கு தேவையில்லை.
புதியவர் நியமிக்க பட வேண்டும். அவரும் 12 மதத்திற்கு பின்னர் தேர்தல் மூலம் தேர்வு செய்ய பட வேண்டும் என்கின்ற பல விடயங்களை மக்கள் குழு பரிந்துரைத்துள்ளது .
நாடு தழுவிய ரீதியில் தமிழர் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என மக்கள் திரண்டு நடத்திய போராட்டம் காரணமாக இலங்கை பதட்டத்தில் உறைந்துள்ளது.
கோட்டாபய ஜனாதிபதி இல்லை. அவரது குடும்பத்தில் அவன் ஒரு முட்டாள் .என தலைமை பிக்கு ஒருவர் கடுமையாக சாடினார்.
அவர் பதுங்கு குழிக்குள் அல்லது இராணுவ முகாமில் மக்களுக்கு பயந்து மறைந்து உள்ளார் .
இந்த முட்டாளும் பொம்மையும் எமக்கு வேண்டாம் என மக்கள் மன்றம் பகிரங்கமாக அறிவித்துள்ளது.
இவர்கள் எங்கு பதுங்கி இருந்தாலும் உடனே பதவி விலகுவதாக அறிவிக்க வேண்டும் .
இல்லை எனின் மக்களை எழுச்சி இதனை விட மோசமானதாக அமையும் என்கிறது மக்கள் குழு.
கோட்டா மாளிகையை தேடி வந்தோம். ஆனால் அவர் அங்கிருந்து தப்பி விட்டார் .
இதன் மூலம் மக்கள் சொல்ல வந்த செய்தியை அவர் புரிந்திருப்பார்.
எனவே உடனே முட்டாளும் ,பொம்மையும் பதவி விலக வேண்டும் என இவர்கள் இடித்துரைத்துள்ளனர்.
போர் கீரோ கோட்டா முட்டாளானர் ,அரசியல் சாணக்கியர் ரணில் பொம்மை ஆனார் .
மக்கள் மன்றில் மனதில் நடந்த சகிப்பு தன்மை அற்று போனதன் வெளிப்பாடாக இவை காணப்படுகிறது
இன்று இவர்களுக்கு நாளை நம்ம கிழட்டு சம்பந்தனுக்கும் சுமந்திரனுக்கும் இதுபோல நடக்கும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.
ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் போராட்டம்
ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் போராட்டம்
இலங்கை ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சே
ஜனாதிபதி செயலகம் முன்பாக மக்கள் ஒன்று கூடி பெரும் போராட்டம் ஒன்றை நடத்தினர்
ஜனாதிபதி செயலகம் முன்பாக போராட்டம் நடத்தியமாக்கல் அங்கு கூடாரம் அமைத்து தொடர போர்த்தில் ஈடுபட்டனர்
மக்கள் நடத்திய இந்த போராட்டம் காரணமா அந்த வழி சாலை போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது .
இதனை அடுத்து இராணுவத்தினர் குவிக்க பட்டு மக்களால் கைது செய்ய பட்டு நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
தொடர்ந்து ஸ்லேலு பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் நாடு பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது .
கோட்டாவே வீட்டுக்கு போ லண்டனில் மக்கள் போராடட்ம
இந்த பொருளாதார சுமைகளில் இருந்து தம்மை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
அதற்கு ஆளும் அரசு தமது அதிகாரத்தை தக்க வைத்து கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளா வருகிறது என்ற நிலையில்
கோட்டா கோ காம காலிமுக திடல் ஆர்ப்பாட்ட காரர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர் .
மக்கள் சாத்வீக மாக நடைபெறும் போராட்டங்களில் வன்முறை புகுத்தி மக்களை கைது செய்யும் வேட்டையில் இராணுவம் ,
போலீஸ் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .
50 தாவது நாளை எட்டிய காலிமுகத்திடல் போராட்டம்
50 தாவது நாளை எட்டிய காலிமுகத்திடல் போராட்டம்
காலிமுகத்திடல் போராட்டம் இன்று 50 ஆவது நாளை எட்டியுள்ளது. இதனை
கொண்டாடும் வகையில் காலி முகத்திடலை மையமாக கொண்டு பாரிய போராட்டமொன்றை ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
சாதாரண தர மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் போராட்டம் நடத்துமாறு போராட்டக்காரர்கள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.
இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு ஒன்று பெறப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் யோர்க் வீதி, பேங்க் வீதி மற்றும் செத்தம் வீதி உட்பட சில வீதிகளுக்கு நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எந்தவொரு அரச நிறுவனத்திற்கோ அல்லது உத்தியோகபூர்வ இல்லத்திற்கோ நுழைந்து சேதப்படுத்துதல்
போன்ற எந்தவொரு சட்டவிரோத செயற்பாடுகளையும் மேற்கொள்ளக்கூடாது எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முல்லையில் மீனவர்கள் போராட்டம் – இராணுவம் குவிப்பு
மண்ணெண்ணெய் இல்லாமையால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணெய்யை பெற்றுத் தரக் கோரி, முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர்கள், இன்று (26) கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
முல்லைத்தீவு சுனாமி நினைவாலயத்தில் இருந்து காலை 10.30க்கு பேரணியை ஆரம்பித்து, முல்லைத்தீவு மாவட்டக் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்கள அலுவலகம் உடாக முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் வரை அவர்கள் சென்றனர்.
அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலகத்துக்க்கு முன்னால் கடற்தொழிலாளர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இதன்போது மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், போராட்டக்காரர்களை உள்ளே அழைத்து, அவர்களது கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஏற்றுக்கொண்டார்.
“சாலை தொடக்கம் கொக்குளாய் முகத்துவாரம் வரையான எமது மீனவர்கள் மற்றும் தென்னிலைங்கையில் இருந்து வருகை தந்து தொழில் புரியும் மீனவர்களுக்கும்
முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நாயாறு போன்ற எரிபொருள் நிலையங்கள் ஊடாகவே எரிபொருள் விநியோகம் நடைபெற்று வருகின்றது.
“இருந்த போதிலும் இவ் எரிபொருள் நிலையங்களுக்கு வரும் எரிபொருளானது எமது மாவட்ட மீனவர்களுக்கு போதுமானதாகவில்லை. கடந்த 08.05.2022 தொடக்கம் குறித்த
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மண்ணெண்ணெய் வரவில்லை. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. “அத்துடன், விலையேற்றம் காரணமாக மக்கள் பட்டிணிச்சாவை எதிர்நோக்கியுள்ளனர்.
“எனவே, தயவுசெய்து எமது மீனவ மக்களின் இந்நிலையை கருத்தில் கொண்டு அவர்கள் தொழில் புரிவதற்கான எரிபொருளை பெற்றுத்தருமாறு, மீனவர்கள்
சார்பாகவும் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்பு சார்பாகவும் கேட்டுக்கொள்கின்றோம்” என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
இதன்போது கடற்தொழிலாளர்களிடம் கருத்துத் தொரிவித்த மாவட்டச் செயலாளர் க.விமலநாதன், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற
கூட்டத்தின் போது பொதுவாக எல்லா மாவட்டத்திலும் மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டது. மீனவர்கள் மாத்திரமல்ல விவசாய உற்பத்தி வீதமும் குறைந்துள்ளது.
“எரிபொருள் விநியோகத்துக்கு பொறுப்பான பிராந்திய முகாமையாளருடன் கதைத்துள்ளோம். இன்று இரண்டு லோட் மண்ணெண்ணெய் அனுப்புவதாக உறுதிமொழி தந்துள்ளார்கள்.
“மாவட்ட மீனவர்களின் கோரிக்கைறை கடற்றொழில் அமைச்சுக்கும் எரி சத்தி அமைச்சுக்கும் நாங்கள் அனுப்பவுள்ளோம்” என்றார்.
குறித்த போராட்டத்தை மீனவர்கள் ஆரம்பித்த போது, சம்பவ இடத்துக்கு வருகைதந்த இராணுவத்தினர் மண்ணெண்ணெய் பெற்றுத்தருவதாக மீனவர்களுடன்
கலந்துரையாடி போராட்டத்தை நிறுத்த முயற்சித்திருந்தனர். இருப்பினும்,
மீனவர்கள் அதற்கு உடன்படாமல் போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


பாரபட்சம் காட்டும் வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்!
பாரபட்சம் காட்டும் வைத்தியசாலை நிருவாகத்திற்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம்!
பைஷல் இஸ்மாயில் –
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார ஊழியர்களின் மேலதிக நேரக் கொடுப்பனவு குறைப்பிற்கு எதிராகவும் அதனை வழங்கக்கோரிய ஒரு மணிநேர கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப்
போராட்டத்தை நாளை (27) முன்னெடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலையின் சுகாதார தொழில் வள்லுனர்கள் ஒன்றியத்தின் தலைவரும், தாதிய உத்தியோகத்தருமான ஏ.ஆர்.விஷாம் தெரிவித்தார்.
வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் ஒன்றினைந்து நாளை காலை 9.30 மணி தொடக்கம் 10.30 மணிவரை வைத்தியசாலைக்கு முன்பாக
கவனயீர்ப்பு அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில், அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் நிலவுகின்ற எரிபொருள் பற்றாக்குறை மற்றும் விலையேற்றம் போன்ற பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தாதிய உத்தியோகத்தர்கள், மருத்துவ ஆய்வுனர்கள், ஒளிப்பதிவு
இயக்குனர்கள், மருத்துவ மாதுக்கள், E.C.G தொழில் நுட்பவியலாளர்கள், கண்பார்வை தொழில் நுட்பவியலாளர்கள் ஆகியோர் வைத்தியசாலைக்கு வருகைதந்து தங்களின்
கடமைகளில் எவ்வித குறைகளுமின்றி பொதுமக்களுக்கான சேவைகளை வழங்கி வருகின்ற இந்நிலைமையில் அவர்களின் முழுமையான மேலதிக நேரக் கொடுப்பனவை வைத்தியசாலை நிருவாகம் வழங்க மறுத்துள்ளது.
கடந்த 2022.05.13 ஆம் திகதி அரசினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கமைவாக, வைத்தியசாலையின் நிருவாகத்திடம் கலந்துரையாடியபோது, அவரவர்களின்
அடிப்படைச் சம்பளத்திற்கேற்ப எல்லோருக்கும் சமமாக முழுமையான மேலதிக நேரக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் என்று நிருவாகத்தினர் தெரிவித்திருந்தபோதும்,
கடந்த ஏப்ரல் மாதக் கொடுப்பனவை முழுமையாக வைத்தியர்களுக்கு மட்டும் வழங்கிவிட்டு ஏனை சுகாதார ஊழியர்களுக்கு பூரணமாக வழங்க மறுத்துவிட்டனர்.
அரசினால் வெளியிடப்பட்ட சுற்று நிருபத்திற்கு முரனாகவும்,
வைத்தியர்களைத் தவிர ஏனைய சுகாதார ஊழியர்களுக்கு பாரபட்சம் காட்டும் செயற்பாடுகளை
வைத்தியசாலை நிருவாகத்தினர் முன்னெடுத்து வருகின்ற விடயங்களை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
எங்களுக்கான சரியான தீர்வினை எதிர்வரும் 30 ஆம் திகதிக்குள் வழங்கவேண்டும் இல்லை எனில்
தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு முன்வைக்கப்பட்டு அதற்கான போராட்டங்களை முன்னேடுக்கவுள்ளோம்
என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமிழ் அரசியல்வாதிகளிற்கு எதிராக மக்கள் போராட்டம்
தமிழ் அரசியல்வாதிகளையும் ‘கர்மா விடாது’ என்று வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான போராட்டம், நேற்றையதினத்தோடு 1919 நாளை எட்டியுளளது.
இதனையொட்டி, நேற்று (23) இடம்பெற்ற ஆர்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் இவ்வாறு தெரிவித்தனர்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்கள், வடக்கு- கிழக்கில் இராணுவத்தை அகற்றுமாறுஇ சர்வதேச நாணய நிதியம் நிபந்தனைகளை விதித்ததால் , இலங்கை பொருளாதாரத்தின் 15 சதவீத செலவீனம் இதுவாகும்.
இது தமிழ் மக்களின் பிரதான கோரிக்கையாகும். இதனைத்தெடர்நது மக்கள் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள் இந்த கோரிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
‘ஐ நா கூட்டத்தொடருக்கு முன்பு இலங்கைக்கு உதவிகள் வழங்கும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிடம் வலுவான கோரிக்கைகளை தமிழ் அரசியல்வாதிகள்,
சிவில்அமைப்புக்கள் முன்வைக்கவேண்டும். இல்லாவிடில், கர்மா அனைவரையும் பாதிக்கும்.
‘சிங்கள அரசியல் வாதிகள் பதவிக்கு வந்ததும் இனவாதிகளாக பேசுவார்கள். இதுதான்
74 வருட தமிழர்களின் வரலாறு. நல்லிணக்கம் மற்றும் தெற்கு அரசியல் பற்றிபேசும் தமிழ் அரசியல்வாதிகள் இனப் படுகொலைக்கான
நீதியை பெறமுடியாது’ என்றனர்.
காலிமுக திடலில் குவிந்த மக்கள் – அதிர்ச்சியில் கோட்டா
காலிமுக திடலில் குவிந்த மக்கள் – அதிர்ச்சியில் கோட்டா
இலங்கை காலிமுக திடலில் சமீப நாட்களாக மக்கள் போராட்டம் வீழ்ச்சியடைந்த
நிலையில் காணப்பட்டது ,ஊரடங்கு ,மற்றும் இராணுவ குவிப்பின் காரணமாக மக்கள் வருகை மந்தமாக காணப்பட்டது
இன்று வழமை போல மக்கள் அதிகம் வருகை தந்து தமது எதிர்ப்பை காண்பித்த வண்ணம் உள்ளனர்
தொடர்ந்து இடம் பெறும் இந்த போட்டத்தின் வாயிலாக இதுவரை கோட்டா பதவி விலகாது உள்ளமை
மக்களை மேலும் கொந்தளிப்பில் உறைய வைத்துள்ளது

எரிபொருள் தர கோரி – மக்கள் போராட்டம்
எரிபொருள் தர கோரி – மக்கள் போராட்டம்
இலங்கையில் நாவின்ன சாந்தி அருகில் மக்கள் எரிபொருளை தரும்படி கோரி
போராட்டத்த்தில் குதித்துள்ளனர்
இதனால அந்தவழி சாலையில் பெரும் போக்குவரத்து தடை ஏற்பட்டுள்ளது ,
பிரதமர் மாறிய நிலையிலும் மக்களின் தற்கால நெருக்கடிகளை இவர்களினாலே தீர்க்க முடியாது போயுள்ளது குறிப்பிட தக்கது
மக்களை மிரட்டும் கோட்டா – உக்கிரம் பெறும் போராட்டம்
மக்களை மிரட்டும் கோட்டா – உக்கிரம் பெறும் போராட்டம்
காலிமுக திடலில் ஒரு மாதத்திற்கு மேலாக கூடாரம் அமைத்து கோட்டா மகிந்தா பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் போரட்டம் நடத்தி வருகின்றனர்
இவ்வாறான கால பகுதியில் அந்த மக்களை அங்கிருந்து அகன்று செல்லுமாறு கோட்டா பணிப்புரை விடுத்துள்ளார்
பொலிஸாரினால் இவ்விதம் அறிவிக்க பட்டுள்ள போதும் மக்கள் அங்கிருந்து அகன்று
செல்ல மறுத்து வருகினறனர் ,அவ்விதம் அத்துமீறி தரித்து நின்றால் அவர்கள் கைது செய்ய படுவார்கள் என போலீசாரை மிரட்டி வருகின்றனர்
ஊரடங்கு வேளை ஒன்று கூடுதலை தடுக்க இந்த அடக்குமுறையை அவர்கள் விடுத்தது வருகின்றனர் ,இங்கு துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
இடம்பெற்று பெரும் ரணகளமாக இலங்கை மாற போகிறதை இந்த விடயங்கள் எடுத்து காட்டுகின்றன
முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
முள்ளிவாய்க்கால் இறுதி நாளில் போர் முற்றுகையில் தமிழர்களை சிக்க வைத்து அப்பாவி மக்கள் உயிர் குடித்து ஏப்பம் இட்டது இதே மகிந்தா ராஜபக்ஸ்சா குடும்பம்
இன்று அதே நாள் முற்றுகையில் அதே மகிந்தா ராஜபக்ச குடும்பத்தை அதே சிங்களவர்கள் துரத்தி தாக்கும் தாக்குதல் ,முற்றுகை இடம்பெற்ற வண்ணம் உள்ளது
குண்டு வீசி தமிழர் குருதி குடித்து ,அப்பாவிகளின் கண்ணீரில் குளித்த அதே முள்ளிவாய்க்களின் மே மாதத்தில் ,அதே முற்றுகை நிலையில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அவர் தம் ஆட்சி சிக்கி தவிக்கிறது
13 ஆண்டுகள் முன்பாக இதே அதிகாரம் ,தமிழர்களை கொன்று அவர்கள் பிணங்கள் மீது ஏறிக் குதித்து கும்மாளம் இட்டது , குடித்து வெறியாட்டம் போட்டது ,
முள்ளிவாய்க்கால் நாளில் – அலறும் மகிந்தா குடும்பம்
இன்று அதே முள்ளிவாய்க்களின் நாளில் மகிந்த ராஜபக்ஸ்சா குடும்பம் அழிக என அதே சிங்களவர்கள் கோசம் இடுகின்றனர் ,
அன்று வெற்றியின் வேந்தர்களாக கொண்டாடிய அதே மக்களே வெளியே போ என முப்பது ஆண்டுகள் கழித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
அக்கிரம அநீதிகள் அதை புரிந்தவர்களை அவ்வழியே அழிக்கும் என்பதற்கு இந்த களம் ஒரு சான்றாக உள்ளது ,
இறுதி போரின் இறுதி நாள் வெற்றி நாளில் மகிந்தா குடும்பம் பதவி பறிபோகும் நிலை ஏற்பட போகிறது.
இலங்கை மக்கள் ஒரு தாய் பிள்ளைகள் என்ற சிங்கப்பூர் அதிபரின் மனோ நிலையை இலங்கையில் ஆளும் ராஜாபக்சே குடும்பம் உணர்ந்திட மறுக்கிறது
இறுதி போரில் புலிகளை சிக்க வைக்க பட்டுளளர்கள் என கூறிய படி அப்பாவி மக்களை கொன்று குவித்து ஏப்பம் இட்டது ஆளும் மகிந்தா ராஜபக்சே குடும்பம்
இன்று அந்த மக்களின் அவல சாவும் ,அவல வாழ்வும் இதே ஆட்சியாளர்க்ளுக்கு தர்மத்தின் வாயிலாக மீள கையளிக்க பட்டுள்ளது
ஆணவத்தில் அடக்கியாளும் அதிகார பீடங்களுக்கு நிகழ்காலம் மறந்தாலும் எதிர் காலம் அதற்குரிய தண்டனையை வழங்கும் என்பதை மேற்படி விடயங்கள் எடுத்து காட்டுகின்றன
முள்ளி வாய்க்கால் பேரவலம் தமிழ் இன அழிப்பு மட்டும் மல்ல தமிழர்கள் வீழ்ந்த அதே நாளில் தமிழன் எழுச்சி கொள்ளும் நாளாகவும் மற்றம் பெற போகிறது என்பது நிகழ்கால சம்பவங்கள் எதிர்கால அரசியல் விழிப்பை இடித்து கூறி கடக்கிறது .
- வன்னி மைந்தன் –



வெடிக்கும் கோட்டாவுக்கு எதிரான போராட்டம்
வெடிக்கும் கோட்டாவுக்கு எதிரான போராட்டம்
நாளை (09) முதல் ஒரு வார காலம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
அவசரகாலச் சட்டங்களை விதித்து போராட்டங்களை நசுக்கும் அரசாங்கத்தின்
முயற்சிக்கு எதிராகவே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை மின்சார சபை
கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
ரணில் வீடு செல்ல வேண்டும் – மக்கள் அவர் வீடு முன்பாக போராட்டம்
ரணில் வீடு செல்ல வேண்டும் – மக்கள் அவர் வீடு முன்பாக போராட்டம்
இலங்கையில் ஆளும் கோட்டா அரசுக்கு முண்டு டு கொடுத்து ஆட்சி நடத்தி வரும் ரணில் விக்கிரமசிங்கவும் கோட்டா ,மகிந்தா போல வீடு செல்ல வேண்டும் என மக்கள் கோரி வருகின்றனர் .
இவ்வாறான கோரிக்கையுடன் ரணில் விக்கிரமசிங்கா ,வீடு முன்பாக சிங்கள மக்கள் போராட்டம் ஒன்றை நடத்தி வருகின்றனர் .
இந்த போராட்டத்தை அடுத்து அவர் கடுப்பில் உறைந்துள்ளாராம்.
தற்போது பலத்த இராணுவ காவல்துறை படதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .
போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்
போலீஸ் காவலரணில் யட்டிகளை காயபோட்டு மக்கள் போராட்டம்
இலங்கை பாரளுமன்றம் அருகில் அமைக்க பட்டுள்ள போலீஸ் வீதி தடைகள் மேல்
பட்டிகள் ,யங்கிகள்,பிரசியர் உள்ளிட்டவை காய போட்டு போராட்டக் காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இந்த வினோத போராட்டம் மூலம் அரசுக்கு எதிராக தாம் கடும் கோபத்தில் உள்ளதை மக்கள் வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்
நாடு தழுவிய ரீதியில் கரத்தால் இடம்பெற்று வருகிறது ,
இதுவரை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பதவி
விலக கோட்டபாய மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
தமிழ் அமைச்சர் வீடு முன்பாக மக்கள் போராட்டம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், இன்றைய பணிபுறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் லிந்துலை மெராயா பகுதியில் நேற்று மதியம் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
அந்தவகையில் லிந்துலை எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெரயா, ஹென்போல்ட், திஸ்பனை ஆகிய தோட்டங்களை சேர்ந்த 800ற்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள்
, இளைஞர், யுவதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த போராட்டமானது எல்ஜீன் பிரதேசத்திலிருந்து பேரணியாக திஸ்பனை சந்தி வரை சென்று மீண்டும் போராட்டகாரர்கள் லிந்துலை மெராயா பிரதேசத்தில் உள்ள
இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமாரின் வீட்டிற்கு முன்னால் போராட்டத்தை தொடர்ந்தனர்.
மேலும், அவ்விடத்தில் சவப்பெட்டி, டயர், உருவ பொம்மை ஆகியன எரித்து மலையக மக்களுக்கு துரோகம் செய்த அரவிந்தகுமார் ஒழிய வேண்டும் என கோஷங்களை
எழுப்பினர். இதனால் அந்தபகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதோடு, போக்குவரத்து சேவையும் இரண்டு மணித்தியாலயங்கள் பாதிக்கப்பட்டிருந்தன.
இதன்போது அமைச்சரின் வீட்டிற்கு எவ்வித சேதங்களும் ஏற்படாத வகையில் லிந்துலை, நானுஓயா,
அக்கரப்பத்தனை, டயகம ஆகிய பொலிஸார் பாதுகாப்பு பணியில் இருந்தனர்.
1000 தொழில் சங்கங்கள் இணைந்து மகிந்தா ,கோட்டாவுக்கு எதிராக போராட்டம்
1000 தொழில் சங்கங்கள் இணைந்து மகிந்தா ,கோட்டாவுக்கு எதிராக போராட்டம்
இலங்கையில் லயம் கோட்டா மகிந்த அரசுக்கு எதிராக ஆயிரம் தொழில் சங்கங்கள்
இணைந்து இன்று மாபெரும் போரட்டம் ஒன்றை நாடத்துகின்றன
இந்த ஒன்றிணைந்த எதிர்ப்பினால் ஆளும் அரசு பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது
,மக்களின் இந்த எதிர்ப்புக்கு பொறுப் பேற்று பதவி விலகிட தொடர்ந்து சகோதர்கள் மறுத்து வருகின்றமை
குறிப்பிட தக்கது
ஆசிரியர்கள் போராட்டம் – பாடசாலைகள் பூட்டு
நாடளாவிய ரீதியில் அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுத்துவரும் பணி பகிஷ்கரிப்பு
போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு உடனடி தீர்வைக் கோரி,
அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள்,
இன்று (25) பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வீதியை எரித்த போராட்ட காரர்கள்
வீதியை எரித்த போராட்ட காரர்கள்
பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட
நிலையில், புதிதாக காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட குறித்த வீதி
சேதமடைந்துள்ளது என நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
பாரிய நிதி செலவில் ஒரு வருடத்துக்கு முன்னர், பொகவந்தலாவை வீதி
புனரமைக்கப்பட்டதாகவும், நேற்றைய தினம் அங்கு டயர்கள் எரிக்கப்பட்டமையால் வெப்பத்தால் சேதமடைந்து போட்டப்பட்ட
காபட் கழன்றுள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.
மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –
மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –
இலங்கையில் ஆளும் கோட்டா அரசு உடனடியாக பதவி விலக கோரியும்
,ரம்புகளையில் வாலிபர் சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்தும் வாலிபர் ஒருவர் மரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
மக்களின் தொடர் போராட்டங்களுக்கு செவி சாய்க்காது கோட்டா தனது ஆட்சியை
முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு
தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு
ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் இரண்டாவது நாளாக இன்றும் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் தொடர்கின்றது.
ஜனநாயகத்துக்கான மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.
இந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கோ கோட்டா ஹோம், மலையக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுமை உள்ள அரசாங்கம் உருவாக வேண்டும், பாராளுமன்ற
உறுப்பினர்கள் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள வேண்டும், விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தினர்.
அத்தோடு, கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த போராட்டத்தின் போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் கோ கோட்டா கம கிராமத்தின்
கிளை அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.
பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்
பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா பிரதமர் மகிந்தா உள்ளிட்டவர்கள் பதவி
விலக கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியாளர்கள் பதவி திறக்க மறுத்து வருவதால் போராட்டம் அதி உச்சம் பெற்றுள்ளது
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காது செல்லும் ராஜபக்ஸ்ச குடும்பங்களுக்கு எதிராக
மக்கள் மேலும் கொதிப்படைந்து போராட்டம் உக்கிரம் பெற்று வருகிறது






