மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

Spread the love

மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (17) 100 நாட்களை நிறைவு செய்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

இதேவேளை, போராட்டத்தில் தங்களது உயிரை அர்ப்பணித்த மக்களைக் நினைவுகூறும் விசேட நிகழ்வும் நேற்று (16) இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது.

இதற்கு திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    Author: நலன் விரும்பி

    Leave a Reply