கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

யாழ்ப்பாணம், மாவட்டத்தில் அராலி தொடக்கம் பொன்னாலை வரையான கடற்கரையோரப் பிரதேசத்தையும் பொன்னாலை துருத்திப்பிட்டியையும்

சுவீகரிப்பதற்கு வன ஜீவராசிகள் திணைக்களம் முயற்சி எடுத்துள்ள நிலையில் அதைக் கைவிடுமாறு வலியுறுத்தி பொன்னாலை சந்தியில்

கடற்றொழிலாளர்களும் பொதுமக்களும் இணைந்து போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளனர்.

கரையோரச் சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம்

நாளை (10) காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ள இந்தப் போராட்டத்துக்குப் பொன்னாலை தொடக்கம் அராலி வரையுள்ள கடற்றொழிலாளர்கள், அரசியல்

கட்சிகளின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரைக் கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம்

இலங்கையில் வெடித்த மக்கள் போராட்டம் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் இன்று (05) முன்னெடுத்துள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்.

இதன் காரணமாக பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்ற நுழைவு வீதி தற்போது முற்றாக தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஆளும் ரணில் ரஸுக்கு எதிராக தொடரும் மக்கள் போராட்டம் ,நெருக்கடியில் அரசு

வீடியோ

நெதன்யாகுவிற்கு ஏத்திற்றகு மக்கள் போராட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக அதே யூத
மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

தரைவழியாக தாக்குதல்களை மீள ஆரம்பித்துள்ளதால் சிறை கைதிகளை மீட்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் உடனடியாக போரை நிறுத்தி ,அவர்களை மீட்டு வர கோரி போராட்டம் இடம்பெறுகிறது .

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

மக்கள் கொள்கையை ஏற்க மறுத்து போரில் நாட்டம் கொண்டுள்ள நெதன்யாகு போரை நிறுத்த மாட்டேன் என ஆடம் பிடிக்கிறார்

இவ்வாறு தொடர்ந்து போரை நீடித்தால் தமது வாழ்வாதாரம் பாதிக்க பட்டு தொழில் துறைகள் முடங்கும் என
கருதும் மக்களும் ஆளும் அரசுக்கு எதிராக வீதி இறங்கியுள்ளனர்

போராடும் மக்களை சொந்த இராணுவத்தை ஏவி கலகம் அடக்கும் நடவடிக்கையில் நெத்தன்யாகு ஈடுபட்டுளளார்

வீடியோ

17 நாள் போராட்டம் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு
Posted in உலக செய்திகள்

17 நாள் போராட்டம் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

17 நாள் போராட்டம் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

சுரங்க விபத்தில் சிக்கியிருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுரங்கத்ல் இருந்து ஒருவரை மீட்க 2 முதல் 3 நிமிடங்கள் வரை ஆவதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய அமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

17 நாள் போராட்டம் 41 தொழிலாளர்களும் பத்திரமாக மீட்பு

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் அம்பியூலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சுமார் 15 நாட்களாக சுரங்கத்துக்குள் சிக்கியிருந்த தொழிலாளர்களை மீட்குப் பணியில் வெற்றி கிடைத்துள்ளது.

உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தின் சில்க்யாரா பகுதியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப் பாதையில் கடந்த 12-ஆம் திகதி திடீரென மண்சரிவு ஏற்பட்டது.

இதனால் சுரங்கப் பாதைக்குள் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த 41 தொழிலாளா்கள்
, கடுமையான இடிபாடுகளுக்குப் பின்னால் சிக்கிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்
Posted in உலக செய்திகள்

லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்

லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்

லண்டன் பகுதியில் மூன்று லட்சம் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .


பாலஸ்தீனத்தில் உடனடி சமாதானத்தை ஏற்படுத்த கோரி இந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்

லண்டனில் மூன்று லட்சம் மக்கள் போராட்டம்

ஆனால் பிரிட்டன் ஆளும் சுனிக் ஆட்சி மக்கள் உணர்வகளுக்கு மதிப்பளிக்காது இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல் பட்டு வருவதாகவும் ,மக்கள் படுகொலை கண்டு அமைதியாக உறக்கம் கொள்வதாக போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் பலர் குற்றம் சுமத்தியுள்ளனர் .

இஸ்ரேல் போரினை நடத்துவதற்கு காரணமாக விளங்குவது அமெரிக்கா ,பிரிட்டன் முக்கிய பாத்திரம் வகிக்கின்றன .

இஸ்ரேலுக்கு ஆளும் சுனெக் ஆதரவு அளித்த நிலையில் ,அவரது ஆட்சி இத்துடன் முடிவடைவதுடன் இந்த கட்சி மீள ஆட்சியை பிடிக்க நிலை ஏற்பட போகிறது என எதிர் பார்க்க படுகிறது
வீடியோ

வீதியில் வினோத போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

வீதியில் வினோத போராட்டம்

வீதியில் வினோத போராட்டம்

வலிகாமம் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட யாழ்.- மானிப்பாய் – காரைநகர் வீதியை புனரமைப்பு செய்யுமாறு கோரிக்கை விடுத்து மூளாயில் மக்கள் நேற்று (10) வினோத போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

வீதியில் ஆங்காங்கே வெள்ளம் தேங்கி நிற்கும் பெரும் பள்ளங்களில் ஏர் பூட்டியும் மற்றும் உழவியந்திரங்களைக் கொண்டும் வயல் உழுவது போன்று பாசாங்கு செய்து நெல் விதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீதியில் வினோத போராட்டம்

இப் போராட்டத்தில் முன்பள்ளி மற்றும் பாடசாலை மாணவர்களும் மூளாய், பொன்னாலை பிரதேச மக்களும் அதிக அளவில் பங்குபற்றினர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ரணில் அரசாங்கமே எங்கள் மீது ஏன் இந்தப் பாரபட்சம், R.D.A அதிகாரிகளே உங்களுக்கு கண் இல்லையா?,

வழக்கம்பரை தொடக்கம் பொன்னாலை வரை வாழும் மக்கள் மந்தைகளா?, வெள்ளத்தில் நீந்தியா நாம் பள்ளிக்கு வருவது போன்ற பல பதாகைகளைத் தாங்கியிருந்தனர்

வீடியோ

நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டம்

நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டம்

யாழ்ப்பாண மாவட்ட செயலக நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலகம் முன்பாக வெள்ளிக்கிழமை (10) காலை 10 மணியளவில் ஒன்று கூடிய கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்திய இழுவைமடிப் படகுகளை கட்டுப்படுத்த கோரி யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நுழைவாயிலை முடக்கி கடற்றொழிலாளர்கள் போராட்டம்

இதன் போது மாவட்டச் செயலகத்தை முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு பெருமளவு பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்துவதுடன் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி ஐனாதிபதி மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகியோருக்கு மாவட்ட மேலதிக அரச அதிபர் ஊடாக மகஜரொன்றையும் கையளித்திருந்தனர்.

வீடியோ

நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்

நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்


எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் 20,000 ரூபா கொடுப்பனவு அல்லது சம்பள அதிகரிப்பை வழங்குமாறு கோரி நாடளாவிய ரீதியில் இன்று (30) போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

அரச மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்கங்களின் சம்மேளனம் இந்த போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளதுடன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,

முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி, அலுவலக சேவைகள், மாகாண அரசாங்க சேவைகள் உட்பட பலர் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இன்று பகல் 12.00 மணிக்கு மதிய உணவு வேளையில் இந்த போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம்

எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால் எதிர்வரும் நவம்பர் மாதம் 13ஆம் திகதிக்கு பின்னர்

வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஜித் கே திலகரத்ன தெரிவித்தார்.

தொழிற்சங்க போராட்டங்களை ஒடுக்குவதே அரசாங்கத்தின் அடுத்த முயற்சி என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்றும் நாளையும் (31) தமது சேவையிலிருந்து விலகி தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தொடர்ந்தும் அதிகாரிகள் தமது தொழில்சார் பிரச்சினைகளுக்கு தீர்வை வழங்கத் தவறியதன் காரணமாகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாக சங்கத்தின் செயலாளர் .ஷானக போபிட்டியகே தெரிவித்துள்ளார்.

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
Posted in உலக செய்திகள்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்

பலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி சிறைக்கைதிகளாக உள்ள மக்களை விடுவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .


எமதுவேண்டும் என இஸ்ரேல் ஆளும் அரசுக்கு எதிராக போரட்டம் நாடத்திய வண்ணம் உள்ளனர் .

ஆளும் நெதன்யாகு அரசு அதனை செவி மடுக்காது செயல் படுவதால்
ஜெருசேலம் வீதிகள் முற்றாக முடக்க பட்டு தொடர் போராடத்தில் நாம்


ஈடுபடுவோம் என சிறை கைதிகள் உறவுக்ஜ்கள் ,ஆதரவு மக்கள் தெரிவித்துள்ளனர் .

நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் திசை திரும்பியுள்ள பொழுதும் ,
ஆளும் அரசு மக்கள் கோரிக்கையை செவிமடுக்காது ,கைதிகள்


தொடர்பாக கவலை கொளளது செயல் படுவதாக இஸ்ரலியா
ஆர்ப்பாட்ட காரர்கள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர் .

யானையுடன் கொழும்பில் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானை மனித மோதலைத் தீர்ப்பதற்கான தேசிய செயற்திட்டத்தை உடனடியாக அமுல்படுத்துமாறு கோரி பல சிவில் அமைப்புக்கள் மற்றும்

சுற்றாடல் அமைப்புக்களின் பிரதிநிதிகள் குழுவொன்று கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தை புதன்கிழமை (18) காலை நடத்தியது.

இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் ஏறக்குறைய 300 யானைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் யானைகளுக்கும் சுதந்திரமாக வாழ உரிமை உண்டு எனவும் யானைகள் அழிவில் இருந்து காப்பாற்றப்பட வேண்டும்

எனவும் இல்லையெனில் யானைகள் எதிர்காலத்தில் புகைப்படங்களில் மட்டுமே காணப்படுமெனவும் போராட்டத்தில் ஈடுபட்ட குழு சுட்டிக்காட்டியுள்ளது.

யானையுடன் கொழும்பில் போராட்டம்

யானைகள் – மனித மோதலினால் ஹக்க பட்டாசுகளினால் 651 மரணங்கள் பதிவாகி உள்ளதாக அக்குழு சுட்டிக்காட்டியது.மேலும், யானைக் காணிகளை

பாதுகாக்குமாறும், யானை வழித்தடங்களைத் தடுக்க வேண்டாம் என்றும் வனப் பாதுகாப்பு அதிகாரிகளை பிரதிநிதிகள் குழுவினர் கேட்டுக் கொண்டனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சிறிய யானையொன்றையும் நிர்மாணித்து,
போட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News


நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்|demands Netanyahu resign||palestine news today |Ethiri News

நெதன்யாகு பதவி விலகு மக்கள் போராட்டம்,
இஸ்ரேல் இராணுவ தலமையகம் சுற்றிவளைப்பு ,
நெதன்யாகு மகன் இராணுவத்தில் இணைவு ,demands Netanyahu resign

வீடியோ

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரத்தில் கண்டணத்தை வெளிப்படுத்தும் வகையில் யாழ்ப்பாணத்தில் மருதனார்மடம், கொக்குவில் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போராட்டம் முன்னெடுக்கப்படும் பகுதியில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று (04) காலை 9 மணியளவில் மருதனார்மடத்தில் ஆரம்பித்து யாழ்ப்பாண நகர் வரையில்

நீளுகின்ற வகையில் சில இடங்களில் குறித்த மனித சங்கிலி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு நீதிபதிக்கு ஆதரவாக யாழில் மனித சங்கிலி போராட்டம்

இதன் போது மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள், சிவில் சமூகத்தினர், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த போராட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சி, தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழ்த் தேசிய கட்சி, தமிழ் மக்கள் விடுதலைக்

கழகம், தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி , தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவளிப்பதுடன் பல பொது அமைப்புகளும் இணைந்துள்ளன.

முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிரச்சுறுத்தல் விடுக்கப்பட்டு, அவர் நாட்டை விட்டு வெளியேறிய விவகாரத்தில் உரிய நடவடிக்கையெடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்
Posted in இலங்கை செய்திகள்

நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்

நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்

வன்னி முல்லைத்தீவு நீதிபதிக்கு இலங்கை சட்ட துறை மற்றும் ,அரசியல் கட்சிகளினால் வழங்க பட்ட மிரட்டல் காரணமாக ,அவர் இலங்கையை விட்டு தப்பி சென்றுள்ளார் .

இதனை அடுத்து கொதிக்கும் தமிழர்கள் அவருக்கு ஆதரவாக தமிழ் காட்சிகள் போராட்டம் நடத்த தயாராகி வருகின்றனர்

முல்லைதீவு குறும்தூர் மலை விவகாரத்தில் அதிரடி தீர்ப்பை வழங்கிய நீதிபதி சரவணராஜா ,இலங்கை பாதுகாப்பற்ற நாடு என தெரிவித்தும் ,இலங்கையில் வாழ முடியாது என கருதி அங்கிருந்து தப்பித்து வெளிநாடு சென்றார் .

இதனால் இந்த முல்லைத்தீவு நீதிபதிக்கு விடுக்க பட்ட மிரட்டல் சம்பவம் இலங்கை அரசியலில் புயலை கிளப்பியுள்ளது .

இலங்கை தமிழ் மக்களுக்கு ஆபத்தான நாடாக மாற்றம் பெற்றுள்ளதும் ,தமிழர்கள் அங்கு சிங்களவர்களினால் அடக்கி ஒடுக்க பட்டு நசுக்க பட்டு வருகின்றனர் என்கின்ற விடயத்தை இவை பறை சாற்றியுள்ளது .

முல்லைத்தீவு நீதிபதிக்கு விடுக்க பட்ட அச்சுறுத்தல் ,மிரட்டல் சம்பவங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்க படுகிறது .

இவ்வாறு நாட்டை விட்டு தப்பி சென்ற நீதிபதி சனல் போ தொலைக்காட்சி வாயிலாக உலக நாடுகளை அலறவிடுவார் என எதிர் பார்க்க படுகிறது .

தமிழீழ விடுதலை புலிகள் ,இலங்கையில் முற்றாக அழிக்க பட்ட பின்னர் ,ராஜபாக்ஷா குடும்பத்தால் உருவாக்க பட்ட நிழல் படைகள் ஊடக ,படுகொலைகள் கடத்தல்கள்,காணாமல் போதைல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நீதிபதிக்கு மிரட்டல் தமிழ் கட்சிகள் போராட்டம் கொதிக்கும் தமிழர்கள்

அந்த வகையில் இலங்கை அரசியல் சாசனத்தை பாதுகாத்து நீதியை நிலைநாட்டும் தமிழ் நீதிபதிகளுக்கு ,இலங்கையில் பாதுகாப்பு இல்லை .

என்பதை இந்த முல்லைத்தீவு நீதிபாதிக்கு நடந்த செயல் எடுத்து காண்பிக்கிறது .

வித்தியா படுகொலை வழக்கில் நீதிபதி இளஞ்செழியன் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்ட ,படுகொலை சம்பவமும் ,அரசியல் படுகொலையின் நீட்சியாகவே பார்க்க முடிகிறது .

சமாதான தேவன் என தன்னை உலகிற்கும் ,தமிழருக்கும் காண்பித்த ரணில் விக்கிரமசிங்கா ஜெ ஆர் ஜேவர்தனவின் மருமகன் தான் என்பதை காண்பித்துள்ளார் .

தமிழர்கள் மீது மேற்கொள்ள படும் அடக்கியாளும் அதிகார வன்ம வெறிகள் எடுத்து காட்டுகின்றன .

தமிழர் வாக்குகளை அபகரிக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போட்ட நாடகம் தற்போது அம்பல பட்டு உள்ளதை அவரது ஆளும் ஆட்சி அதிகார முறைகேடுகள் கட்டியம் இட்டுள்ளன .

சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்

சரத் வீரசேகரவுக்கு எதிராக சட்டத்தரணிகள் போராட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர முல்லைத்தீவு நீதிபதி தொடர்பாக தெரிவித்த கருத்தினைக் கண்டித்து யாழ்ப்பாண மாவட்டத்தில் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் இன்றையதினம்(25) பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கடந்த 22 ம் திகதியன்று முல்லைதீவு நீதிபதி தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர

அவதூறு பரப்பும் வகையிலும் நீதித்துறை சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தும் வகையிலும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கண்டித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம் இன்று (25) காலை

9.30 மணி முதல் 10.30 மணி வரை நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து அடையாள கண்டன போராட்டம் ஒன்றை நடத்த அழைப்பு விடுத்தது

இந்த அடையாள புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் ஏனைய கிளைச் சங்கங்களும் தத்தமது நீதிமன்றங்களில் குறித்த அடையாள கண்டன போராட்டத்தினை மேற்கொண்டன.

Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்

தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்

வவுனியாவில் அத்து மீறி வீட்டை உடைத்து இளைஞர் குழு ஒன்று தங்கியிருந்த நிலையில், வவுனியா பொலிசார் குறித்த வீட்டின் சாவியை உடைத்தவர்களிடமே வழங்கியமையால் அங்கு வாடகைக்கு குடியிருந்தோர் நீதி கோரி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக இரவிரவாக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 

நேற்று (14.07) இரவு 9.45 முதல்  இன்று (15.07) அதிகாலை 1.30 மணி வரை இடம்பெற்ற இப் போராட்டம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

வவுனியா, கந்தசாமி கோவில் வீதியில் உள்ள உணவகம் அருகில் உள்ள ஒழுங்கையில் ஆலயத்திற்கு சொந்தமான காணி ஒன்று நீண்டகாலமாக ஆலய உடன்படிக்கைக்கு அமைவாக அருளம்மா செல்வநாயகம் என்பவருக்கு வழங்கப்பட்டிருந்தது. அவர் குறித்த காணியில் வீடமைத்து குடியிருந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு அருளம்மா மரணமடைந்த நிலையில் குறித்த வீட்டினை அவரது மூத்த ஆண் மகன் பராமரித்து வந்துள்ளதுடன், அவர் குறித்த வீட்டில் பிறிதொரு குடும்பத்தை வாடகைக்கு குடியமர்த்தி விட்டு தற்போது வெளிநாடு ஒன்றில் வசித்து வருகின்றார். 

தமிழர் பகுதியில் அத்து மீறி வீட்டை உடைத்து உட்புகுந்த இளைஞர்களுக்கு ஆதரவாக பொலிசார் செயற்பட்டதால் இரவிரவாக போராட்டம் நடத்திய குடும்பம்

இந்நிலையில், குறித்த வீட்டு உரிமையாளரான அருளம்மா அவர்களின் வெளிநாட்டில் வசிக்கும் மகள் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வவுனியாவிற்கு வந்து வாடகைக்கு இருந்தோர், குறித்த வீட்டில் இல்லாத சமயம் வீட்டை உடைத்து உட்புகுந்து அங்கு சில நபர்களுடன் நின்றுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வாடகைக்கு குடியிருந்தோர் வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார், வாடகைக்கு இருந்தோரிடம் வீட்டை ஒப்படைக்குமாறும், சகோதரர்களுக்கு இடையிலான பிரச்சனையை நீதிமன்றத்தின் ஊடாக தீர்க்குமாறும் கூறியுள்ளனர். இதன் பின் வாடகைக்கு குடியிருந்தோர் அதில் தங்கியிருந்துள்ளனர். 

வெளிநாட்டில் இருந்த வந்த அருளம்மாவின் மகள் வெளிநாடு சென்ற பின் நேற்று (14.07) மதியம் வவுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தரான ரசிக்கா பிரியதர்சினி அவர்களின் இணைப்பாளர் உள்ளடங்கிய குழு வாகனம் ஒன்றிலும், மோட்டர் சைக்கிளிலும் சென்று குறித்த வீட்டை உடைத்து அங்கு தங்கியிருந்துள்ளனர். 

வாடைக்கு இருந்தோர் வெளியே சென்று வீடு திரும்பி அங்கு சென்ற போது அவர்களை உள் நுழைய தடுத்த இளைஞர் குழு அவர்களை அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் வவுனியா பொலிசில் முறைப்பாடு செய்ய சென்ற நிலையில் பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்யாததுடன், நீதிமன்றுக்கு போகுமாறு அசண்டையீனமாக செயற்பட்டுள்ளனர். 

இதனால் பாதிப்படைந்தவர் குறித்த விடயம் தொடர்பில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்திற்கு தனது நிலையை கொண்டு வந்துள்ளார். அவரது உத்தரவுக்கமைய வவுனியா பொலிசார் முறைப்பாட்டை பதிவு செய்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டனர். 

எனினும், இதன்போது வீட்டை உடைத்து உட்புகுந்தவர்களிடம் வெளிநாட்டிற்கு சென்றுள்ள மகள் சட்டத்தரணி ஊடாக வழங்கிய ஆவணம் இருப்பதாக கூறி வீட்டு சாவியை கொடுத்து விட்டு திங்கள் கிழமை நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வதாக கூறி இரு தரப்பையும் அனுப்பியுள்ளனர். 

அத்து மீறி வீட்டை உடைத்து உள் நுழைந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காது, அவர்களிடமே வீட்டு சாவியை கொடுப்பது எந்தவகையில் நியாயம் எனத் தெரிவித்தும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறு வீட்டில் வாடகைக்கு குடியிருந்த கணவன், மனைவி ஆகியோர் இரவு 9.45 இற்கு வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் முன்பாக வீதியோரத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார். அங்கு வந்த வவுனியா பொலிசார் அவர்களை வெளியேற்ற முயற்சித்ததுடன், விசாரணைகளை மேற்கொள்வதாக தெரிவித்தனர். இருப்பினும் தனது வீட்டு சாவியை தரும் வரை செல்ல மாட்டேன் எனக் கூறி அவர்கள் தொடர்ந்தும் போராட்த்தில் ஈடுபட்ட நிலையில் அதிகாலை 12.30 மணியளவில் வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியசகர் குறித்த குடும்பத்தை தமது வளாகத்திற்குள் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இன்று (15.07) மாலை குறித்த பிரச்சனையை நீதியான முறையில் விசாரணை செய்து தீர்வைப் தருவதாக அவர்களிடம் தெரிவித்திருந்தார்.

அவரது வாக்குறுதியையடுத்து குறித்த குடும்பத்தினர் அதிகாலை 1.30 மணியளவில் போராட்டத்தை கைவிட்டு சென்றிருந்தனர்.  குறித்த போராட்டமானது மூன்றரை மணித்தியாலயத்திற்கு மேலாக இரவிரவாக இடம்பெற்றிருந்தது. 

இதேவேளை, குறித்த காணிக்குரிய ஆலய உடன்படிக்கை குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் மீள புதுப்பிக்கப்பட்டு வந்த நிலையில் அருளம்மாவின் மரணத்தின் பின் அவ் ஆவணம் புதுப்பிக்கப்படவில்லை என்பதுடன், அவரது மகனின் பராமரிப்பின் கீழே குறித்த வீடு இருந்து வந்துள்ளதுடன் வாடகைக்கு குடியிருந்தோரே அருளம்மாவின் பெயரில் 15 வருடங்களாக ஆலயத்திற்கான நில குத்தகைப் பணத்தை செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையிலேயே மீள புதுப்பிக்கப்படாத அருளம்மாவின் பேரில் இருந்த பழைய ஆவணத்தை வைத்து சட்டத்தரணி ஒருவரின் துணையுடன் அவரது மகள் பிறிதொரு நபருக்கு குத்தகை உடன்படிக்கையை வழங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஈரானியர் தூக்கில் மாட்டி கொலை
Posted in உலக செய்திகள்

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஈரானியர் தூக்கில் மாட்டி கொலை

அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய ஈரானியர் தூக்கில் மாட்டி கொலை

ஈரான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்துவதைக்க பட்டார் .

அதன் பின்னர் பொது மக்கள் முன்பாக தூக்கல் மாடத்தி படுகொலை செய்யப்பட்டுளளார் .

அரசுக்கு எதிராக மேற்குலக உளவு நிறுவனர் ஊடகங் ஆளும் அரசுக்கு எதிரான போராடடம் இடம்பெற்று வருவதாக கருதும் ஈரான் ,மக்கள் கலக்கத்தை அடக்க இவ்விதமான தூக்கு தண்டனையை அரங்கேறி வருகிறது .

இந்த செயல்பாடு மக்களை மேலும் கொத்தி நிலைக்கு உட்படுத்தியுள்ளது .

மாணவர்களுக்கு காதல் பாடம் கற்ப்பிக்கும் ஆசிரியரை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களுக்கு காதல் பாடம் கற்ப்பிக்கும் ஆசிரியரை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்

மாணவர்களுக்கு காதல் பாடம் கற்ப்பிக்கும் ஆசிரியரை இடமாற்ற கோரி மக்கள் போராட்டம்

இலங்கை முல்லைத்தீவு மந்துவில் அரசரத்தினம் வித்தியாலத்தில் ,கல்வி போதித்து வரும் ஆசிரியர் ஒருவர், இடமாற்ற படத்தை அடுத்து, அங்கு மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

குறித்த பாடசாலையில் ஆசிரிய ஒருவர். தனது காதல் கதையினை மாணவர்களுக்கு புகட்டி வந்த நிலையில்.
அவரை இடம் மாற்றம் செய்திடும் படி மக்கள் கோரியுள்ளனர் .

மேலும் இவர் மாணவர்களுக்கு .அடித்து துன்புறுத்தும் வேலைகளிலும் ஈடுபட்டுளளார் ,என்ற குட சாட்டு முன் வைக்க பட்டுள்ளது .

மாணவர்கள் வெறுக்கும் ஆசிரியர் ,அங்கு கல்வி போதித்து வரும் நிலையிலும் ,மக்கள் மாணவர்கள் விரும்பும் ஆசிரியர் இடமாற்றம் செய்ய பட்ட நிலையிலும் ,இந்த போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது,

மக்கள் கோரிக்கையை ஏற்று கொண்ட கல்வி நிர்வாகம், குறித்த ஆசிரியரை மீளவும் ,அதே பாடசாலைக்கு நியமிக்க நடவடிகை ,மேற் கொள்வதாக உறுதியளித்துள்ளது.

இதனால் மக்கள் போராட்டத்தை கைவிட்டு வீடு திரும்பினார் .

    Posted in இலங்கை செய்திகள்

    கோட்டபாயவுக்கு எதிராக பிரான்சில் தமிழர்கள் போராட்டம்

    கோட்டபாயவுக்கு எதிராக பிரான்சில் தமிழர்கள் போராட்டம்

    பிரான்ஸ் ; உலகலாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கோட்டபாய இராஜபக்சவை சிங்கப்பூர் அரசு கைது செய்யக் கோரும் தொடர் போராட்டங்களின் வரிசையில் தலைநகர் பரிசில் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

    கோத்தபாய சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலாளராக இருந்த ஆறு மாத காலத்தில் 40 முதல் 70 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐ.நா.வின் அறிக்கையொன்று தெரிவிப்பதோடு, நூற்றுக்கணக்கான தமிழ்

    பெண்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானர்கள் தெரிவிக்கின்றது. தவிர ஆயிரக்கணக்கான தமிழர்கள், குழந்தைகள் இவரது காலத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

    இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து சுமார் 12 வருடங்கள் கடந்துள்ள போதிலும், போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான

    குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் இன்னும் இல்லை என ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

    கோட்டபாயவுக்கு எதிராக பிரான்சில் தமிழர்கள் போராட்டம்

    சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் ஓர் நாட்டின் எல்லைக்குள் நடக்காதபோதும், பாதிக்கப்பட்டவரோ அல்லது குற்றவாளியோ அந்த

    நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றாலும், சர்வதேச சட்டத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க, ஓர் நாட்டின் அதிகார வரம்பிற்கு சர்வதேச நியாயாதிக்கம் வழி சமைக்கின்றது.

    இந்தக் கொள்கை மூன்றாம் நாடுகளின் தேசிய நீதிமன்றங்களுக்கு வாய்பளிக்கின்றது. வேறு நாட்டில் சர்வதேச குற்றங்களை புரிந்தவர்களை

    பொறுப்புக்கு உட்படுத்தவும், தண்டனையிலிருந்து விடுபடுவதை தடுக்கவும் முடியும் என்ற சர்வதேச சட்டவெளி காணப்படுகின்றது.

    இந்நிலையில், சர்வதேச நியாயாதிக்கத்தின் கீழ் இனப்படுகொலையாளியான கோத்தபாய கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் சிங்கப்பூர் நிறுத்த

    வேண்டும் என்ற கோரிக்கையினை நாம் வலுவாக முன்வைக்கின்றோம் என நா.தமிழீழ அரசாங்கம் தெரிவித்திருந்தது.

    இக்கவனயீர்ப்பு ஒன்றுகூடலின் போது சிங்கப்பூர் தூதரக இராஜதந்திரி ஒருவரை சந்தித்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்க அமைச்சர்கள் மகிந்தன்

    மற்றும் சுதன்ராஜ் கோரிக்கை மனுவினை கையளித்திருந்ததோடு, தமிழர்களின் நிலைப்பாட்டினை வலியுறுத்தியிருந்தனர்.

    இக்கவனயீர்ப்பு நிகழ்வில் பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு பிரதிநிதிகள்
    மற்றும் தமிழ் சமூக அரசியல் செற்பாட்டாளர்கள் பங்கெடுத்திருந்தனர்.

    https://youtu.be/USloSt9sst4
      Posted in இலங்கை செய்திகள்

      மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

      மக்கள் போராட்டம் 100 நாட்களை நிறைவு

      காலி முகத்திடலில் ஆரம்பமான போராட்டம் இன்றுடன் (17) 100 நாட்களை நிறைவு செய்கிறது.

      கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் திகதி, கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு வலியுறுத்தி இளைஞர்கள் குழுவொன்று இந்த எதிர்ப்புப் பிரச்சாரத்தை ஆரம்பித்தது.

      இதேவேளை, போராட்டத்தில் தங்களது உயிரை அர்ப்பணித்த மக்களைக் நினைவுகூறும் விசேட நிகழ்வும் நேற்று (16) இரவு போராட்ட களத்தில் இடம்பெற்றது.

      இதற்கு திரளான மக்கள் கலந்துகொண்டதுடன், போராட்டத்தின் 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் வகையில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

        Posted in இலங்கை செய்திகள்

        கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்

        கோட்டா ரணில் பதவி விலகும்வரை ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்கும் மக்கள்

        இலங்கையின் மக்களாட்சி தலைவரான கோட்டபாய ரணில் பதவி விலகும்வரை நாம் ஜனாதிபதி மாளிகையில் தரித்து நிற்போம் என கூறியவாறு மக்கள் பெரும் திரளில் அங்கே நிற்கின்றனர் .

        எதிர்வரும் பதின்மூன்றாம் திகதி இலங்கை ஜனாதிபதி கோட்டாபய பதவி விலகுவர் என அறிவித்துள்ள நிலையில் மக்கள் அதனை ஏற்காது தொடர்ந்தும் அலரிமாளிகையில் மற்றும் ஜனாதிபதி செயலகம் அருகில் காத்துள்ளனர்.

        இராணுவம் பொலிசார் மக்களுடன் முறுகளில் ஈடுபட்டால் அதுவே பெரும் வன்முறை மோதலாக வெடிக்கும் நிலை காணப்படுகிறது.

        முட்டாள் கோட்டாவும் பொம்மை ரணிலும் எமக்கு வேண்டாம் என்கிறது மக்கள் மன்றம் ,தம்மை எதிர்த்தவர்களை பழிவாங்க துடிக்கிறது இந்த அரசியல் தலைகள் .