Tag: மரம்
வாகனங்கள் மீது முறிந்து விழுந்த மரம்
வாகனங்கள் மீது முறிந்து விழுந்த மரம்
கண்டி அஸ்கிரிய திலக் ரத்நாயக்க மாவத்தையில் வளர்ந்திருந்த அரச மரம் மற்றும் மனோரஞ்சிதம் மரம் ஆகிய இரண்டு மரங்களும் முறிந்து விழுந்தமையால், அந்த வீதியில் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டி உள்ளிட்ட எட்டு வாகனங்கள்
சேதமடைந்துள்ளன. கடும் காயங்களுக்கு உள்ளான இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கண்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி மாநகரில் புதன்கிழமை (27) முற்பகல் 11 மணியளவில் பெய்த கடும் மழையினால், பொலிஸ் விளையாட்டு மைதானத்துக்கு முன்பாக, பொலிஸ் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்துக்கு திரும்பும் முற்சந்தியில் இருந்த இவ்விரு மரங்களும் ஒரே நேரத்தில் வீதியில் சரிந்துவிட்டுள்ளது.
வாகனங்கள் மீது முறிந்து விழுந்த மரம்
அப்போது முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் கடும் காயங்களுக்கு உள்ளாகி, கண்டி தேசிய வைத்திசாலையில் அனுமுதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த வீதியின் ஓரத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஏனைய ஏழு வாகனங்களும் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளன.
இந்த மரங்களின் வேர்கள் செத்துவிட்டதாக அதிகாரிகளின் கவனத்துக்கு தாங்கள் ஏற்கெனவே கொண்டுவந்திருந்தோம் என அப்பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது
கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது
மோசமான வானிலை காரணமாக கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று (07) பிற்பகல் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது குறித்த மரம் விழுந்ததில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி கொழும்பில் பஸ் மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.
கொழும்பில் மற்றொரு மரம் முறிந்து விழுந்தது
அக்டோபர் 30ஆம் திகதி அதே சாலையில் மற்றொரு மரம் விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்தன.
இந்த பாதுகாப்பற்ற நிலை குறித்து கொழும்பு மாநகர சபையின் மாநகர ஆணையாளர் தெரிவிக்கையில்
நேற்றைய மோசமான வானிலை காரணமாக கொழும்பில் 36 மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து வீழ்ந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக . குறிப்பிட்டுள்ளார்.
ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் இயந்திரம் கொழும்பு மாநகர சபையிடம் இருந்தாலும் அதனை பயன்படுத்துவதற்கு ஆள் இல்லை என மாநகர ஆணையாளர் தெரிவித்தார்
பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி
பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி
இலங்கை கொள்ளுப்பிட்டி டூப்பிளிகேஷன் வீதியில் பயணிகள் பேரூந்து ஒன்றின் மீது இரட்ஷத மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அதில் பயணித்த 5 பேர் பலியாகியுள்ளனர் .
அதே பேரூந்தில் பயணித்த 17 பேர் படுகாயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் யாவரும் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பேரூந்து மீது வீழ்ந்த மரம் 5 பேர் பலி
அரச பேரூந்தின் மீதே இந்த மரம் முறிந்து வீழ்ந்ததில் ,அந்த பேரூந்து பலத்த சேதமடைந்துள்ளது .
இந்த் பேரூந்து விபத்தினால் அந்த சாலை போக்குவரத்தில் தடை ஏற்பட்டது .எமனாக மாறிய மரத்தினால் அப்பாவி மக்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது

- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை

- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி

- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

- வெள்ளப் பெருக்கு 30000 பேர் பாதிப்பு

- வெறும் காலுடன் மரதன் ஓட்டம் நடத்திய அமைப்பு வெடித்த சர்ச்சை

- துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாக 22 வயது இளைஞர் கைது

- இலங்கை முழுவதும் மோசமான வானிலையால் 28000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- டாலர் விற்பனை விகிதம் ரூ 353 ஆக உயர்கிறது

- ஊர் சுற்றும் உல்லாச துறை அமைச்சர்

மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –
மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –
இலங்கையில் ஆளும் கோட்டா அரசு உடனடியாக பதவி விலக கோரியும்
,ரம்புகளையில் வாலிபர் சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு
தெரிவித்தும் வாலிபர் ஒருவர் மரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்
மக்களின் தொடர் போராட்டங்களுக்கு செவி சாய்க்காது கோட்டா தனது ஆட்சியை
முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிட தக்கது











