வீர மகன் அர்ச்சுனா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வீர மகன் அர்ச்சுனா

வீர மகன் அர்ச்சுனா

சிறை பிடித்து என்னை மிரட்டுகிறார்
சிரித்த படி செல்கிறேன்
வலைவிரித்து என்னை அடக்குகிறார்
வாய் பேசியே செல்கிறேன்

குறை பிடித்து என்னை மடக்கிறார்
குரல் வளை மெல்ல முறிக்கிறார்
ஏது செய்தும் இன்றென்ன
எங்கள் மக்கள் துடிக்கிறார்

கறை படிந்த வாய்கள் சில
கரை ஏறி கரைகிறார்
சுய நல வாதிகளாய்
சுற்றியே அலைகின்றார்

வீர மகன் அர்ச்சுனா
விடுதலை பெறுவான்
கந்தக துகளாய் – அவன்
கட்டாயம் வெடிப்பான் .

ஆக்கம் 06-08-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு.காதுகளை கொஞ்ச தாருங்கள் ,இதோ கேட்டு பாருங்கள் .

வீடியோ

மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக
Posted in இலங்கை செய்திகள்

மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக

மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக

மாபியாக்களின் 22சட்டத்தரணிகள் அர்ச்சுனாவுக்கு எதிராக நீதிமன்றில் அயராகி வாதாடியுள்ளனர் .

மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் படுகொலை செய்யப்பட்ட பட்ட தாரி தாயின் மரணத்திற்கு நீதி கோரி ,அந்த வைத்தியசாலையில் விசாரித்த ,ஐயா அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக வழக்கு தொடுக்கபட்டு சிறையில் அடைக்க பட்டுள்ளார் .

அவ்வாறு சிறையில் அடைக்க பட்டுள்ள அர்ச்சுனா இராமநாதன் இன்று நீதிமன்றில் ஆயர் படுத்த பட்ட பொழுது ,அவருக்கு எதிராக மருத்துவ மாபியாக்கள் சார்பில் 22 சட்டத்தரணிகள் வழக்காட வருகை தந்திருந்தனர் .

இது மிக பெரும் வியப்பை ஏற்படுத்தி இருந்தது .

தமிழ் மக்களின் விடியலுக்காக போராடும் தமிழ் தேசிய கூட்டமைப்பில்,வாதாடும் சட்டத்தரணிகள் உள்ளபொழுதும்,இவர்கள் எவரும் ,பாதிக்கபட்ட மக்கள் சார்பில் வாதாட களம் செல்லவில்லை .

தமிழ்தேசியம் பேசுகின்ற சட்ட தரணிகள் பலர் உள்ள பொழுதும் ,மக்களின் நீதி கோரி போராடிய மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை காப்பாற்ற இவர்கள் முயல இந்த விடயத்தை மக்களே நினைவில் இருத்தி வாக்கு வழங்காது புறக்கணியுங்கள் .

இதுவே அர்ச்சுனாவுக்கு மக்கள் வழங்கும் தீர்ப்பாகும் .

சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு
Posted in இலங்கை செய்திகள்

சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு

சிறையில் வாடும் அர்ச்சுனா

சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு ,சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு ,மன்னார் வைத்திய சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டு இருந்தார் .

அதனை அடுத்து இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்படுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,அவர் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைக்க பட்டுள்ளார் .

இது விடுதலை போராளி அர்ச்சுனாவின் ஆதரவு மக்கள் மத்தியில் மிக பெரும் கோபத்தையம் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

திட்டமிடப்பட்ட அரசியல் ,மருத்துவ மாபியாக்களின் பழிவாங்களாக இது பார்க்க படுகிறது .

மனிதம் ,சட்டம் ,நீதி செத்து போன நாடாக இலங்கை காணப்படுகிறது என்கின்ற வருத்தம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .

மன்னர் மாவட்ட வைத்தியசாலையில் இறந்துபோன பெண் பட்டதாரிக்கு நடந்த துயர சம்பவத்திற்கு ஆதரவாக எந்தவித வழக்குகளும் இதுவரை தொடுக்கப்படவில்லை ,

அதனை தட்டி கேட்ட மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டுள்ள இந்த செயல்பாடு மிக கவலை தருவதாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

வீடியோ

விடுதலை செய்யப்படுவாரா அர்ச்சுனா இன்று
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

விடுதலை செய்யப்படுவாரா அர்ச்சுனா இன்று

அர்ச்சுனா இன்று விடுதலை செய்யப்படுவாரா

அர்ச்சுனா இன்று விடுதலை செய்யப்படுவாரா ,மருத்துவர் அர்ச்சனா இராமநாதன் இன்று விடுதலை செய்யப்படுவாரா என்கின்ற கேள்வி உலகத் தமிழ் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது .

வவுனியா சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர் இந்த விடுதலை செய்யப்படுவார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது.

மன்னாரில் குழந்தை பெற்ற இளம் பட்டதாரி பெண் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக அங்கு பலியானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே இளம் பட்டதாரி பிள்ளை ,பிள்ளையை பெற்று அதனால் ஏற்பட்ட இரத்த கசிவு காரணமாக அவர் பரிதாபகரமாக பலியான சம்பவம் இடம் பெற்றது.

இதனை அடுத்து அந்த பிள்ளைக்கு நீதி கூறி மருத்துவமனை உள்ளே நுழைந்து மருத்துவர் அர்ஜுனார் ராமநாதன் விடயங்களை வினவிய பொழுது அவருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

வீரத்துக்காகவும் மக்களினுடைய நீதிக்காகவும் போராடிய இங்கு அன்பு அண்ணன் எங்கள் அன்பு தம்பி அர்ச்சனா ராமநாதன் எப்பொழுது விடுதலை செய்யப்படுவார் என உலகளாவிய ரீதியில் ஆண்கள் பெண்கள் என பல தரப்பட்டவரும் கடவுளிடம் வேண்டுதல் செய்த வண்ணம் இருக்கின்றனர்.

எங்களில் ஒருவனாக எங்களது குலசாமியாக எங்களது நீதியின் நாயகனாக எங்களது விடுதலையின் கனவாக, எங்களின் விடுதலைக்காய் உரத்த குரல் ஒலித்த அந்த அர்ச்சனா என்கின்ற அற்புதமான அந்த மனிதன் ,

எப்பொழுது விடுதலை செய்யப்படுவான் எனவே மக்கள் உலகளாவிய ரீதியில் ஏக்கத்தோடு தவித்து வருகின்றனர்.

இன்று விடுதலை செய்யப்படுவாரா சில மணித்தியாலங்களில் முடிவு தெரிய வருமான எதிர்பார்க்கப்படுகிறது

அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை

அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை

அர்ச்சுனாவின் கைதின் பின் மன்னார் வைத்தியசாலை ஊடக அறிக்கை வெளியிட பட்டுள்ளது .

மன்னர் மருத்துவமனையில் இடம்பெற்ற சிகிச்சை தவறாக வாழங்க பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள படும் என்ற விடயத்தை அந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரி ஊடாக சந்திப்பில் தெரிவித்துள்ளார் .

இந்த செய்தியாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த ,பொழுதும் தமது மருத்துவமணையில் மஞ்சள் டி சேட் மற்றும் காற் சட்டையுடன் பணியில் இருந்த யூனியன் பொறுப்பாளர் என கூற பட்ட நபர் தொடர்பாக ,

வைத்தியர் பேச்சு தொடர்பாகவோ எதனையும் தெரிவிக்கவில்லை என்பதை இந்த காணொளியை பார்க்கும் பொழுதே நீங்கள் தெரிந்து கொள்ள முடியும் .

விழுந்தடித்து ஏன் இந்த செவ்வி வழங்கினார்கள் ,சாள்ஸ் நிர்மலநாதன் பயந்து போயி பேட்டி கொடுப்பதையும் காணலாம் .

மருத்துவ மாபியாக்கள் இப்பொழுது பதறி கொண்டுள்ளதை இந்த விடயம் எடுத்து காண்ப்பிக்கிறது .

அர்ச்சுனா வென்று விட்டான் .மக்களே எழுச்சி கொள்ளுங்கள் ,இந்த மாபியாக்களை விரட்டி அடியுங்கள் .

வீடியோ

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால் ,அர்ச்சுனா ராமநாதன் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து உலகளாவிய தமிழர்கள் மத்தியில் தற்பொழுது பெரும் கொந்தளிப்பு காணப்படுகின்றது.

சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பின்னர் அங்கே இடம்பெற்ற ஊழல்கள் ஒற்றுமையின்மை காரணமாக தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டார் அர்ச்சனா ராமநாதன் அவர்கள்.

கடந்த தினம் மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று இருந்தார் .அங்கு சென்றிருந்த பொழுது அவர் அத்துமறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு செல்லப்பட்ட எவர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் அவர் திங்கட்கிழமை அல்லது ஏழாம் திகதி விடுதலை செய்யப்படலாம் என்ற நிலையில் நிலையில் தற்போது மக்கள் மத்தியில் ஒருவித கொந்தளிப்பு காணப்படுகின்றது.

திட்டமிட்ட சாதி நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே தற்பொழுது அர்ச்சனா ராமநாதன் அவர்கள் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தினுடைய வைத்தியசாலையில் இடம் பெற்ற பெண் ஒருவரது மரணம் தொடர்பாக நீதி கேட்டுச் சென்ற பொழுது அர்ச்சுனா இராமநாதன் இவ்வாறு நயவஞ்சகமாக திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் இந்த கைது நடவடிக்கை சற்றும் எதிர்பாராத ஒன்றாகவும்,

மக்கள் மத்தியில் அர்ச்சுனா இராமநாதன் கைது கோபத்தை தூண்டுகின்ற ஒரு நடவடிக்கையாக காணப்படுவதால் தற்பொழுது மக்கள் வீதி இறங்கி போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை காணப்படுகிறது .

அதனால அவ்வாறு செய்கின்ற பொழுதுதான் எங்களது அர்ச்சுனா இராமநாதன் விடுதலை செய்ய முடியும் என்கின்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மருத்துவர் அர்ச்சுனா கைது
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் அர்ச்சுனா கைது

அர்ச்சுனா கைது

மருத்துவர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

மன்னர் மருத்துவமனையில் இடம்பெற்ற இளம் பெண் ஒருவரது மரணம் தொடர்பில் அங்கு பயணம் செய்த மருத்துவர் ,அந்த பெண் மரணத்திற்கான விடயத்தை கேள்வி எழுப்பினார் .

பாதிக்க பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வேண்டி தரவேண்டும் என்ற நோக்கத்துடன் ,முறைப்பாட்டு கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதி வழங்கினார் .

மருத்துவமனையில் ரகளை செய்தார் என நிலையில் கைது செய்யப்பட்டுளளார் .

அதனை அடுத்தே தற்போது அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் மன்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

மக்கள் அர்ப்பணிப்புக்கு தயாராகிவிட்ட அர்ச்சுனா மருத்துவர் கைது செய்யப்பட்ட விடயம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேர்தல் வரும் காலா பகுதியில் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்படுத்த பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட மருத்துவர் அர்ச்சனா இராமன்தான் எட்டிகிறவரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க போட்டுள்ளார் .

பிணையில் விடுதலை செய்யும் நிலை ஏற்படலாம் என்ற தகவல் வெளியிட பட்டுள்ளது ,

பெண் பலி அர்ச்சுனா அதிரடி
Posted in இலங்கை செய்திகள்

பெண் பலி அர்ச்சுனா அதிரடி

பெண் பலி அர்ச்சுனா அதிரடி

பெண் பலி அர்ச்சுனா அதிரடி ,மன்னாரில் இளம் தாய் ஒருவர் இரத்தப்போக்கு காரணமாக பலியான நிலையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர் அர்ஜுனர் ராமநாதன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

கடந்த தினம் மருத்துவமனைக்குச் சென்ற அர்ச்சனா இராமநாதன் அவர்கள் அங்கு யோகேஸ்வரனுடன் வாய் தாக்கத்தில் ஈடுபட்டார் .

இரத்தப்போக்கு அதிகமாக வெளியேறிய நிலையிலேயே இளம்பெண் பலியாகியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .

மருத்துவர்கள் அசமந்த போக்கும் காரணமாகவே இந்த மரணம் நிகழ்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் தகராறில் ஈடுபட்ட யோகேஸ்வரன் மற்றும் அங்கிருந்து யூனியன் பொறுப்பாளர் அவர்கள் தகாத வார்த்தைகளிலும் ரவுடிகள் போல காணப்பட்டது மக்கள் மத்தியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை மருத்துவமனைகள் மருத்துவமனைகள் தொடர்ந்தும் பல படுகொலை செய்து வருகின்ற நிலையிலும் ,மக்களை சொல்லெண்ணா துயருக்கு உள்ளாக்கி வருகின்ற சம்பவங்கள் தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு சிகிச்சை முறை சென்ற நோயாளர்கள் பல்வேறுபட்ட துன்பமான நிகழ்வுக்கு உள்ளாக்கப்பட்டு வருவதும் அவர்கள் தாங்கள் மருத்துவர்கள் நிண்ட திமிரோடு பேசி வருகின்ற நிலைப்பாடு ,

மக்களை ஏமாற்றி தவறான சிகிச்சை அளித்து அந்த உடலிலிருந்து உடல் பாகங்களை திருடி வருகின்ற அவர்கள் இருக்கின்ற குற்றச்சாட்டு தற்பொழுது முன்வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

உயிர் போச்சு அர்ச்சுனா கவலை
Posted in இலங்கை செய்திகள்

உயிர் போச்சு அர்ச்சுனா கவலை

உயிர் போச்சு அர்ச்சுனா கவலை

உயிர் போச்சு அர்ச்சுனா கவலை ,சாவகச்சேரி மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய மூவரில் ஒருவர் பலியாகியுள்ளார் என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் காணொளி வெளியிட்டுள்ளார் .

கீழ்வருமாறு வர முகநூலில் குறிப்பிட்டுள்ளார் .

இந்த வீடியோ தற்போது எனக்கு பகிரப்பட்டுள்ளது.
இது மிகவும் கவலையான விடயம்.


இதற்காகத்தான் மக்கள் போக வேண்டாம் என்று சொன்னபோது நான் இல்லை நான் போகின்றேன் போய் கதைத்து விட்டு வருகிறேன் என பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டு நான் வைத்தியசாலை விட்டு வெளியே போய் ,

இன்று வரை ஆரம்பகட்ட விசாரணை முடிக்காது இருந்தும் என்னுடைய சம்பளம் தரப்படாமல் இருந்தும் நான் மக்களுக்காக அமைதியாக இருக்கிறேன்.


அந்த வைத்தியசாலை ஆனது ஏற்கனவே இருக்கின்ற பழைய ஒப்பிடி பில்டிங் ஆனது மிகவும் சிறியதாகும்.


ஒரே தடவையில் ஒரு பஸ்ஸோ அல்லது ஒரு ட்ரெயின் பிரண்டு நோயாளர்கள் வந்தால் ஒரு நாளும் அதில் நோயாளர் தரம் பிடித்தல் கூட பண்ண முடியாது.

அந்தப் பழைய ஒப்பிடி பில்டிங் அதிதீவிர சிகிச்சை பிரிவினர் மூன்று கட்டில்கள் மாத்திரமே போடலாம்.


அது தவிர அங்கே வேலை செய்கின்ற கனிஷ்கர் தர ஊழியர்கள் அனைவரும் பெண்கள் ஆவர்.


திட்டமிட்ட ரீதியில் வைத்தியர் கேதீஸ்வரன் ஐயா அவர்கள் எங்களுடைய வைத்தியசாலையில் இருந்த ஆண் ஊழியர்கள் அனைவரையுமே பருத்தி துறை வைத்தியசாலைக்கு மாற்றினார்.


இவற்றையெல்லாம் நான் கேட்டபோது என்னுடைய என்னை குற்றவாளியாக்கி எல்லா வைத்தியர்களும் திட்டமிட்ட ரீதியில் மனவிரக்திக்கு உள்ளாக்கப்பட்டு அர்ச்சுனாவை

திறத்தினால் எல்லாம் சரியாகும் என வைத்தியர் கேதீஸ்வரன் ஐயா அவர்கள் 25 வைத்தியர்களையும் கொண்டு போய் தனது ஆபிஸில் வைத்து ஸ்ட்ரைக் பண்ணினார்.
எல்லாவற்றையும் நான் பொறுமையாக கேட்டு கொண்டேன்.


நானே சொன்னேன் நானே போகிறேன் என்று.


இப்போது இவ்வாறான ஒரு நிகழ்வானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
வைத்தியசாலை நிர்வாகம் தெரியாத யாரும் வைத்தியசாலை நிர்வாகம் செய்யக்கூடாது என 2021 ஆம் ஆண்டில் வர்த்தமானி அறிவித்தல் கூட உள்ளது நான் அவற்றையும் வெளியிடுகிறேன்.


ஏனோ தெரியவில்லை மனம் கனக்கிறது.
மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு. என அவர் மனம் குமுறி இந்த விபத்து மரணம் காயம் தொடர்பில் தெரிவித்துள்ளார்

இதில் அழுத்தி வீடியோ பார்க்க

செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா

செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா

செல்லப்பா ஐயாவை வாழ்த்திய அர்ச்சுனா, யாழ் மண்ணே அலறுதடா என்ற பாடலை பாடிய தேனிசை செல்லப்பாவை வாழ்த்தி முகநூலில் மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

தமிழீழ தேசிய விடுதலைக்காக தன்னை அர்ப்பணித்து தனது மதுர குரலினால் பாசறை பாணர் செல்லப்பா பலத்தை ஈட்டி கொடுத்தவர் .

அவ்வாறான அற்புத பாடகர் அர்ச்சுனாவிற்கு அவரது வீரம் எண்ணி வன்னி மைந்தன் ஆகிய என்னால் எழுத பட்ட வரிகளுக்கு உயிர் கொடுத்து ,குரல் வழங்கி செல்லப்பா மற்றும் அவரது பேரன் பாவேந்தன் இணைந்து பாடிட, அழகிய துள்ளிசையில் இளங்கோ செல்லப்பா இசை அமைத்து இருந்தார் .

28 மணித்தியாலத்தில் இந்த பாடல் உருவாக்கம் பெற்று இருந்தது .மிக வேகமாக பாடலை அமைத்து குறித்த நேரத்தில் வழங்கி இருந்தார் இளங்கோ செல்லப்பா அவர்கள் .

தன் உயிரை துச்சமென மதித்து மக்களுக்கு குரல் வழங்கிய அர்ச்சுனா வெற்றி பெற எண்ணும் மக்களில் நாமும் அடங்கும் என்பதை இந்த பாடல்; கூட்டு தயாரிப்பின் ஊடக வெளி படுத்தியுள்ளோம் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது .

பட்டி தொட்டி எல்லாம் வேகமாக அர்ச்சுனா பரவிட இந்த யாழ் மண்ணே அலறுதடா என்ற ஒரு பாடல் முதலாவதாக வெளியாகி இருந்ததும் ,மக்கள் இரசித்து கேட்டதுமாக அமைந்து இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ

அர்ச்சுனா வெளியிட்ட குரல் பதிவு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா வெளியிட்ட குரல் பதிவு

அர்ச்சுனா வெளியிட்ட குரல் பதிவு

அர்ச்சுனா வெளியிட்ட குரல் பதிவு . நல்லவன் யார் கெட்டவன் யார் என்பதை மருத்துவர் அர்ச்சுனா மட்டும் அல்ல ,உலக தமிழினமே உள்ளது .

எனவே பல முகமூடிகள் கிழிக்க படவும் ,அவர்களது பின்புலம் யார் என்பதையும் மக்கள் ,முன்பாக களம் இறங்கி இருக்கும் மருத்துவர் அர்ச்சுனா இப்படி ஒரு குரல் பதிவை வெளியிட்டுள்ளார் .

இந்த பதிவிற்கும் வெளியேற்றிற்கும் காரணம் மருத்துவர் அர்ச்சுனா ஆவர் .

எனவே அது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் அவரிடமே பதிலையும் ,விடயங்களையும் கேட்டு தெரிந்து கொள்ள முடியும் .

இவை சமூக ஊடகங்களில் இவ்விதம் விடயம் ஒன்று பரவி வருகிறது .

பத்து வருடம் ஊடகத்தில் உள்ளதாக தெரிவிக்கிறார் .இந்த வீடியோவை போட்டாலும் பரவியில்லை என அந்த நபர் தெரிவிக்கிறார் .

காணொளியில் விடயம் உள்ளது பார்வை இடுக மக்களே .

வீடியோ

https://www.youtube.com/watch?v=13nShYzuuME
யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு

யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு

யார்குழு நான் அர்ச்சுனா அறிவிப்பு ,மருத்துவர் அர்ச்சுனா யார் குழு நான் என்கின்ற தலைப்பின் கீழ் ஒரு காணொளியை பதிவு செய்துள்ளார் .

அதன் ஊடாக அவர் மூன்று வெளிநாட்டு குழுக்களாக புலிகள் அணிகள் மற்றும் நாம் தமிழர் உள்ளதாக அறிவித்துள்ளார் .

இதில் முக்கிய தலைவர் மகளை முன்னிறுத்திய துவராக ,மற்றும் நாம் தமிழர் குழு ,இரண்டாவது துவராகா இல்லை என்ற குழு ,நாம் தமிழர் கட்சி என்ற குழு என்ற விடயத்தை மருத்துவர் அர்ச்சுனா தெளிவு படுத்தியுள்ளார் .

இதில் ஐயா இதில் தவறாக குறிப்பிட்டுள்ளீர்கள் என்பதை நாம் சுட்டி காட்ட விழைகின்றோம் .

புலம் பெயர் தேசத்தில் உள்ள குழுக்களை நாங்கள் இவ்வாறு அழைக்கின்றோம் .

அதில் அனைத்துலக தலைமை செயலகம் ,தலைமை செயலகம் ,நாடு கடந்த அரசாங்கம் ,மற்றும் நாம் தமிழர் கட்சி பாசறை என்பன இயக்கம் பெறுகின்றன .

எனவே நீங்கள் கூறிய குழு என்பதற்குள் நாம் தமிழர் கட்சி உள்ளடக்க முடியாது .

காரணம் அது ஒரு காட்சியாக தேர்தலில் போட்டியிட்டு இயங்குகிறது .அது போன்றே நாடு கடந்த அரசாங்கமும் காணப்படுகிறது ,அப்படி நோக்கின் அவை அரசியல் கட்சி என்ற வடத்திற்குள்; அடக்கி விடலாம் .

அடுத்து அனைத்துலக செயலகம் என்பது ,இது விடுதலை புலிகள் தாயகத்தில் இயக்கம் பெறுகின்ற பொழுது உருவாக்கம் பெற்ற முதலாவது புலிகளின் சர்வதேச கட்டமைமைப்பு ,அதனை வலையமைப்பு என கூறலாம் .

இறுதி யுத்தம் முடிவடைந்த பின்னர் உருவாக்கம் பெற்றதே தலைமைச்செயலகம் மற்றும் நாடு கடந்த அரசாகும் .

எனவே இதனை புரிந்து கொண்டு தரவுகளை செம்மையாக வழங்குங்கள் ,உங்களை பின் தொடரும் இளைய சமுதாயம் தவறான தகவலை பெற்று குழப்பத்தில் ஆழ்ந்து விடுவார்கள் .

தவிர துவராகா குழு என்பதே மேலே கூறப்பட்ட ,அனைத்துலக சார்ந்த குழுவாக காணப்படுகிறது .

அதில் பாவலர் காசி ஆனந்தன் , ,திரைப்பட இயக்குனர் கவுதமன் மற்றும் மாவீரர் வியாபரிகள் என பலர் உள்ளடக்கம் பெற்றுள்ளனர் .

எனவே இதனை ஐயா மருத்துவர் அர்ச்சுனா தாரவுகளை தெளிவாக தெரிந்து அறிந்து கொண்டு விடையத்தை பகிருங்கள் .

உங்கள் அண்ணா லண்டனில் உள்ள அவர்களை கேட்டாலே இது பல விடயங்கள் தெளிவு படுத்துவார் என நம்புகிறேன் .

தாரவுகள் பிழையாகும் பொழுது நீங்கள் சர்ச்ச்சைக்குள் சிக்கி விடக்கூடாது என்பத்திலும் ,உங்களை ஆதரிக்கும் நான் ,மற்றும் நாம், எதிரிகளுக்கு கருத்து அல்லது பதில் கூற முடியாத நெருக்கடியை நீங்கள் ஏற்படுத்தி விடாதீர்கள் என்பதை இந்த பத்தியின் ஊடாக கேட்டு கொள்கிறேன் .

விடுதலையின் கனவை விரித்து மலரும் நீங்கள் கறைபடிந்து , காணாமல் போய்விட கூடாது என்பதில் உங்களை ஆதரிக்கும் எமக்கும் கரிசனை உள்ளது .

ஆதலால் கொஞ்சம் இதனை கருத்தில் கொள்ளுங்கள் மருத்துவர் அர்ச்சுனா அவர்களே .

நாம் எமது டிக் டாக் live இல் நாள்தோறும் உங்களுக்கு ஆதரவை பேசி வருகிறோம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள் நன்றி .எதிரி இணையம்

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

சிந்தை தளரா சிரித்து நடப்பவன்
சிகரம் உயர எழுந்து வெடித்தவன்
கள்ளம் இல்லா பேசி நடப்பவன்
கயவர் சூழ்ச்சி தோலுரிப்பவன்

விந்தை செய்திட விண்ணை அளப்பவன்
விடியல் பெற்றிட புரட்சி செய்பவன்
என்ன கேட்டாலும் எடுத்து உரைப்பவன்
எதற்கும் அஞ்சா எங்கும் நடப்பவன்

வெள்ளை வேட்டியை கதற வைத்தவன்
வெருட்டி வந்தாரை வாயில் அடித்தவன்
தோட்டா துளைக்க தலையை தந்தவன்
தோடுகள் பொங்கிட விதையை எறிந்தவன்

அண்ணன் பெயரை சொல்லி நடப்பவன்
அந்த வரலாறு மீட்டி படிப்பவன்
காலம் அறிந்து களம் திறந்தவன்
கரிகாலனாய் ஆகி நிற்பவன்

எட்டு திசையும் அலற வைத்தவன்
எரிமலையாய் பொங்கி வெடிப்பவன்
பாட்டன் பேரனை படைக்கு அழைத்தவன்
பாமர மக்களை நெஞ்சில் தரித்தவன்

அந்த மனிதன் இன்று யாராடா
அவன் எங்கள் அர்ச்சுனா காணடா
வீரம் விளைந்த மண்ணில் உதிர்த்தவன்
அவனை பாடடா அகிலம் போற்ரடா

இன்றைய மண்ணின் எழுச்சி இவனடா
எடுத்து கொஞ்சம் உலகம் பரப்படா
அடித்து புரட்டி எழுதினேன் நானடா
அணல் வரி வன்னி மைந்தண்டா !


போற்ரடா

வீடியோ

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல்

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல்

அர்ச்சுனாவை முகநூலில் விமர்சித்தால் வழக்கு தாக்கல், அர்ச்சுனா சட்ட தரணி தெரிவித்துள்ளார் .

அர்ச்சுனாவை பிடிக்காத நபர்கள் கண்மூடித்தனமாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை மிக கீழ் நிலையில் மனித நாகரிகமற்று விமர்சனம் செய்து கொள்ள படுகிறது .

அதற்கு இந்த பதிவு மிக சாட்டையடியாக வெளியிட பட்டுள்ளது .

சமூக வலைத்தளங்களில் தேவையற்று விமர்சித்தால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள படும் என தெரிவிக்க பட்டுள்ள விடயம் ,

அர்ச்சுனா நீதியை நேசிக்கும் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

முழுமையான் விடயம் காணொளியில் உள்ளது .

வீடியோ

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள்

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள்

அன்பு தம்பி தங்கைகளுக்கு அர்ச்சுனா வேண்டுகோள் ,அன்பு தம்பி தங்கைகளுக்கு எங்கள் பணிவார்ந்த வேண்டுகோள்.


இதுதான் எனது வரலாற்றில் யூட்யூப் மூலம் சமூக செய்திகளை கொண்டு செல்லும் எனது தம்பி தங்கைகளுக்கான கடைசி ஆன ஒரு யூடியூப் வீடியோவாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.


வழக்குகள் முடியும் வரை எந்த ஒரு youtubeபருக்கும் தனிப்பட்ட ரீதியில் எந்த கருத்தையும் தெரிவிக்கவும் அல்லது வீடியோக்கான நேர்காணல் தெரிவிக்கவும் எனக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்பதை நான் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.


நேற்றைய தினம் மிஸ்டர் ரஜித் என்பவர் என்னுடன் பழகிக் கொண்ட விதம் என்னை அவமதித்த விதம் தொடர்பாக நான் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளதால் எனது சட்டவாளரினால் எனக்கு இந்த அறிவுரை கூறப்பட்டு நான் அதை ஏற்றுக் கொண்டுள்ளேன் தேங்க்யூ செலஸ்டின் அண்ணா.


மேலும் என் சார்பில் எந்த youtube பேரும் உங்களிடம் பணம் கேட்டு அதை தாங்கள் உதவி செய்கிறோம் என்ற பாணியில் வேண்டுபவர்கள் இருந்தால் அவர்கள் சம்பந்தமாக எனக்கு அறிய தரவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


கீழுள்ள தம்பி தங்கைகள் என்னிடம் எடுத்துக்கொண்ட youtube தான் நான் கடைசியாக ப்ரொபஷனலாக நான் வழங்கிய யூடியூப் செவியாகும் இதற்குப் பிறகும் என்னால் செவ்விகள் வழங்க கூடிய மனநிலையில் இவர்கள் என்னை வைத்திருக்கவில்லை என்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.


எனது தம்பி தங்கைகள் ஏதோ ஒரு வழியில் முன்னேற்றம் காண அதற்காக நான் ஒரு சிறு துரும்பாக இருப்பேன் என்கின்ற எண்ணத்தில் மட்டுமே

இவர்களை அழைத்த நேரம் எல்லாம் இவர்களிடம் சொன்ன இடம் எல்லாம் அவர்களை நம்பி நான் சென்று வீடியோக்களை நேர்காணல் மூலமாக தயாரித்து வெளியிடுவதற்கு உதவினேன்.


கடைசியில் என் கண்கள் என்னையே குத்திவிட்டன.


இனிமேல் மேலதிகமாக என்னிடமிருந்து வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் எனது youtube தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்பதையும் எனது youtube தளத்தில் வெளியிடப்படுகின்ற ,

எந்த ஒரு வீடியோக்களை பகிரவோ அல்லது அதனை கொப்பி பிரதி செய்து அதனை தங்களை யூட்யூபில் பிரதியிடுவதற்கு முற்றிலுமாக தடை செய்துள்ளேன்.


கொப்பி செய்து பிரதியிடுபவர யாராக இருந்தாலும் அவர்களுடைய youtube தளத்தினை youtube மூலமாகவும் இலங்கையிலுள்ள Online protection act மூலமாகவும் தடை செய்வேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி.

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா

கைது செய்யப்படுவாரா அர்ச்சுனா ,சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பணிப்பாளர் ஐயா அர்ச்சனா ராமநாதன் அவர்கள் இந்த நீதிமன்றத்தில் ஆயர் படுத்தப்படுகிறார்.

இவர் நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் பொழுது இவர் கைது செய்யப்படுவாரா என்கின்ற பதட்டம் பரபரப்பு தமிழ் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

வடக்கு மாகாண மருத்துவமனைகளில் இடம்பெறுகின்ற மாபியா ஊழல் தொடர்பாக அவர் பர பரப்பாக வெளியீடு செய்திருந்தார் .

அதனை அடுத்து இந்த நீதிமன்றத்தில் வைத்து இவர் கைது செய்யப்பட கூடும் என்கின்ற ஒரு எதிர்பார்ப்பு காணப்படுகின்ற வேளையிலேயே மக்கள் மத்தியில் ஒருவித பதட்டமும் அச்சமும் காணப்படுகின்றது.

தேர்தலில் பல போட்டி இடம்பெறுகின்ற இந்த காலப்பகுதியில் இவர் மீது வைத்திய கலாநிதி கேதீஸ்வரன் சத்தியமூர்த்தி அவர்களால் ஐந்துக்கு மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டிருந்தன.

அந்த வழக்கிலே ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்கின்ற நிலையில் இவர் மீது இந்த நீதிமன்றம் விசாரணையில் ஆரம்பிக்கப்பட்டன.

இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டால் சிறையில் அடைக்கப்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.

அவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டால் ஜனாதிபதி தேர்தலில் இடம் பெறுகின்ற இந்த காலப்பகுதியில் மக்கள் அவருக்கு ஆதரவாக போராடுகின்ற பொழுது ,ரணில் விக்ரமசிங்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆக மொத்தம் இன்று நீதிமன்றில் இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் அல்லது குற்றச்சாட்டுகளின் இவர் விடுதலை செய்யப்படுவாரா என்கின்ற விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக இடம்பெற்று வருகின்றது .

மக்கள் மத்தியில் ஒரு வித நீதிமன்றத்தின் முன்பாக மக்கள் திரண்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள்

அர்ச்சுனா மக்களுக்கு அன்பான வேண்டுகோள் ,அன்புள்ள தமிழ் உறவுகளுக்கு நான் ஓர் அன்பான வேண்டுகோள்.


அன்புள்ள தம்பி தங்கை அண்ணா அக்கா நீங்கள் யாரெல்லாம் youtube வைத்திருக்கிறீர்களோ தயவுசெய்து இதை பார்க்கவும்.


உங்களுக்கு நான் செலவிடுகின்ற ஒவ்வொரு நிமிடமும் எனது பரப்புரைக்காகவோ அல்லது எனது இலாப நோக்கங்களுக்காகவோ அல்ல.


நான் ஒரு சாமானியன் என்பதை நீங்கள் என்னுடன் அருகில் நிற்கும் போது நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள்.


நீங்கள் எடுக்கின்ற ஒவ்வொரு youtube வீடியோக்களும் நீங்கள் பதிவிடுகின்ற ஒவ்வொரு டிக் டாக் காணொளிகளும் உங்களுக்கானது.


அதை நீங்கள் பகிரும்போது உங்களுக்கு தான் லாபமாக போகுமே தவிர அதனால் எனக்கு கிடைக்கப் போவது தமிழ் மக்களுக்கு நான் யார் என்று உண்மையை சொல்லுவதற்குரிய சந்தர்ப்ப களம் மட்டும் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள்.


உண்மையில் உங்களுக்கு உங்களுடைய யூடியூப் தளத்தைபிரபஞ்சம் ஆக்குவதற்காக நான் சாப்பிடாமல் தண்ணீர் குடிக்காமல் போய் வருகின்ற பாதைகளில் சுவனோரங்கள் நின்று கூட உங்களுக்குரிய காணொளியை நான் தந்து விட்டு தான் போயிருக்கிறேன்.


அதற்குரிய காரணம் இன்றோ நாளையோ நான் காணாமல் ஆக்கப்பட்டாலும் ஆகுதியாக்கப்பட்டாலும் அல்லது மரணிக்கப்பட்டாலும் நான் உங்களுடைய நலம் சார்ந்து உங்களுடைய தளத்திற்கு தந்த ஒவ்வொரு வார்த்தைகளும் என்றுமே காற்றில் இருக்கும் என்ற நம்பிக்கையுடன் மட்டுமே.


இருந்தும் ஒரு சிலர் அவற்றை தவறாக பயன்படுத்தி அதன் மூலம் ஒரு சில ரூபாய்களை உழைக்கலாம் என்பதற்காக நீங்கள் வெளியிடுகின்ற ஒவ்வொரு வீடியோக்களும் மக்களை பல தாகப் பாதிக்கும் தம்பி.


அதன் மூலம் நீங்கள் பணக்காரனாக வாழ்ந்து விட்டு போகலாம் ஆனால் A9 ரோட்டில் நிற்கின்ற ஒவ்வொரு ஏழையின் இதயத்திலும் நீங்கள் கத்தியை ஏத்துகிறீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.


கருத்துக்களை கருத்துகளாக பதிவிடுங்கள்.
சொல்பவற்றை முழுமையாக பதிவிடுங்கள்.
நான் உங்களுக்காக வாழ்வேன்.


ஆதலால் தயவுசெய்து முதுகில் குத்துகின்றதைப் போன்ற பதிவுகளை இட வேண்டாம்.
இப்படிக்கு உங்கள் அண்ணா அர்ச்சுனா…

என அவர் முகநூலில் பதிவிட்டுள்ளார் .

அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள்

அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள்

அர்ச்சுனா ரிச்சா பண்ணையை புறக்கணியுங்கள். என மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது கருத்தை தெரிவித்துள்ளார் .

அங்கு பணி புரிகின்றவர்களுக்கு ஊதியம் போதாது எனவும் ,சமுக அக்கறை உள்ளவராக தன்னை கூறி கொள்ளும் அதன் நிர்வாகம் ,அங்கு பணிபுறியும் ஊழியர்களுக்கு முறையான சம்பளம் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார் .

மிக மோசமான வேலைகளை செய்கிறார்கள் என பகிரங்க வெளியில் குற்றம் சுமத்தியுள்ளார் .

கிழி கிழியென கிழித்து தொங்க விட்டுள்ளார் .

தமிழ் தேசிய கட்சி ஒன்றின் ஊடக அரசியலுக்குள் நுழைய முற்பட்டவர்களுக்கு தகுந்த சட்டையை வழங்கியுள்ளார் .

தவிர சமூக அக்கறை கொண்டவராக தன்னை காண்பித்து வரும் இவர் ,பலவேறு பட்ட விடயங்களில் தவறாக செயல் பட்டு வருகிறார் என அர்ச்சுனா அக்குற்றம் சுமத்தியுள்ளார் .

எனினும் ரிச்சாவின் கருத்துக்கள் வெளிவருகின்ற பொழுது தான் ,இந்த விடயம் தொடர்பான தெளிதல் பெரும் என்பதாக கருத்துக்கள் உலவுகின்றன .

வீடியோ

https://www.youtube.com/watch?v=xS35FdU5Lzk
ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல்
Posted in இலங்கை செய்திகள்

ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல்

ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல்

ஐபீசியை புறக்கணிக்க அர்ச்சுனா வேண்டுதல். மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தொடர்பாக அவதூறாக ,உண்மைக்கு புறம்பாக ஐபீசி செய்தியை வெளியிட்டது தொடர்பாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .

தன்னிடம் செவ்வி பெறுவதற்கு நேரம் ஒதுக்கி அதன் பின்னர் அங்கு வந்து செவ்வியை பெற்று கொண்ட அவர்கள் ,பின்னர் அழையா விருந்தாளியாக தமக்கு செவ்வி தந்தவரை பிழையான ,

அவதூறாக ,தன்னை இழிவு படுத்தும் நிலையிலான நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .

மேலும் தன்னோடு அவர்கள் உரையாடிய விடயங்களை வெளியிட்டு அது தவறு என்பதாக கருத்துரைத்துள்ளார் . .

இந்த ஐபீசி என்கின்ற ஊடகத்தை மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனவும் ,இவர்கள் உண்மைக்கு புறம்பானவர்கள் என அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

மக்களின் நலன் வேண்டி களத்தில் நிற்கும் ஒருவரை மிக கேவலமாக கொச்சை ப்படுத்தியுள்ளதாக மக்கள் மன்றம் சமுக ஊடகங்கள் வாயிலாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .

குறித்த ஊடகம் தொடர்பாக அர்ச்சுனா இராமநாதன் வெளியிட்ட குரல்பதிவு இப்பொழுது வெளியாகியுள்ளது .

மேற்படி குற்ற சாட்டு தவறு என ஐபீசி கருதினால் ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதனை தொடர்பு கொண்டு மேலதிக விடயங்களை கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் .

மேலும் தனது தொடர்பாக இவர்கள் எதுவித செய்திகளையோ பேட்டிகளையோ பெற வர கூடாது எனவும் அர்ச்சுனா இராமநாதன் காட்டமாக தெரிவித்துள்ளார் .

வீடியோ

https://www.youtube.com/watch?v=o52SELn0S-w