கடலில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்
Posted in இலங்கை செய்திகள்

கடலில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்

கடலில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்

மிரிஸ்ஸ கடலில் மூழ்கி மருத்துவர் ஒருவர் உயிரிழந்தார்.

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த

மிரிஸ்ஸ கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த 49 வயது மருத்துவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

வாலன மருத்துவமனையின் தலைமை

இறந்தவர் வெலிகம, வாலன மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி ஆவார்.

அவர் சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வாலன மருத்துவமனையில் கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

காய்ச்சலா மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ,காய்ச்சல் அறிகுறிகள் இருப்பின் உடனே மருத்துவமனையை அணுகுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால்,

மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தானது.

சிலர் இது ஒரு எளிய வைரஸ் காய்ச்சல் என்று நினைக்கலாம், ஆனால், டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.

இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதும், நிலைமையை மோசமாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.

மருத்துவரை அணுகாமல் ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரூஃபன் போன்ற மருந்துச் சீட்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

இந்த மருந்துகள் அனைத்து வகையான காய்ச்சலுக்கும் பாதுகாப்பானதாக இருக்காது.

உங்களுக்கு இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல், குறிப்பாக சோர்வு, தோல் வெடிப்புகள் அல்லது மூட்டு வலி இருந்தால்,

முறையான பரிசோதனைக்காக மருத்துவமனை அல்லது மருத்துவமனைக்குச் செல்வது நல்லது.

மேலும், இந்த நாட்களில் சிக்குன்குனியா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

முக்கிய அறிகுறிகளில் திடீர் அதிக காய்ச்சல், கடுமையான மூட்டு வலி, தசை வலி, தலைவலி, குமட்டல், சோர்வு மற்றும் தோல் வெடிப்புகள் ஆகியவை அடங்கும்.

பெரும்பாலான நோயாளிகள் ஒரு வாரத்திற்குள் குணமடைந்தாலும், சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக வயதானவர்களிடையே, மூட்டு வலி மாதங்கள் அல்லது ஆண்டுகள் கூட நீடிக்கும்.

எனவே, காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவ ஆலோசனையைப் பெறுவதன் முக்கியத்துவத்தை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், ஜனவரி முதல் இலங்கையில் 17,000 க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகளும் 16,600 சிக்குன்குனியா வழக்குகளும் பதிவாகியுள்ளன.

மொத்த டெங்கு வழக்குகளில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வழக்குகள் மேற்கு மாகாணத்திலிருந்து பதிவாகியுள்ளன.

நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, டெங்கு மற்றும் சிக்குன்குனியா பரவுவதைக் கட்டுப்படுத்த ஒரு சிறப்பு பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக,

மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் எல்.ஏ.கலு ஆராட்சி
(Dr. L.A.Kaluarachchi) தெரிவித்துள்ளார்.

பெண் சிறப்பு மருத்துவர் துஷ்பிரயோகம்
Posted in இலங்கை செய்திகள்

பெண் சிறப்பு மருத்துவர் துஷ்பிரயோகம்

பெண் சிறப்பு மருத்துவர் துஷ்பிரயோகம்

பெண் சிறப்பு மருத்துவர் துஷ்பிரயோகம் ,அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்ற பெண் சிறப்பு மருத்துவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில்

வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரரை பரிசோதனைக்காக ஆஜர்படுத்தி, தொடர்புடைய மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில்

சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் தலைமையக பொலிஸாருக்கு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இன்று உத்தரவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று அனுராதபுரம் பிரதம நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.

பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.

எனவே, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய, சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்

அர்ச்சுனாவை எச்சரிக்கும் எதிரிகள் |ஆட்டத்தை ஆரம்பித்த மருத்துவர்
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

அர்ச்சுனாவை எச்சரிக்கும் எதிரிகள் |ஆட்டத்தை ஆரம்பித்த மருத்துவர்

அர்ச்சுனாவை எச்சரிக்கும் எதிரிகள் |ஆட்டத்தை ஆரம்பித்த மருத்துவர்

அர்ச்சுனாவை எச்சரிக்கும் எதிரிகள் |ஆட்டத்தை ஆரம்பித்த மருத்துவர் ,அடுத்து என்ன ,காணொளியில் முழுமையான விபரங்கள் ,

பார்க்க மறவாதீர்கள் .

வீடியோ

காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா
Posted in அர்ச்சுனா உளவு செய்திகள்

காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா

காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா

காட்டி கொடுத்தது யார் |வெளியான உண்மைகள் |மருத்துவர் அர்ச்சுனா தொடர்பாக வெளியான செய்திகள் .

காட்டி கொடுப்பும்,நன்றி கெட்ட செயல்களும் ,தேச துரோகமும் எப்படி இடம்பெற்று கொண்டிருக்கிறது என்பதை இதோ காணொளியில் காணுங்கள் .

காணொளி கீழே உள்ளது அதில் அழுத்தி பாருங்கள் .

வீடியோ

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு

மருத்துவர் காயம் வவுனியாவில் வாள்வெட்டு சம்பவம் ஒன்று கடந்த இரவு பதிவாகியுள்ளது .

வவுனியா மாரம்பைக்குளம் அரசடி நகர் பகுதியில் நாய்கள் காப்பகம் ஒன்றுக்குள் நுழைந்த, வாள்வெட்டு தெரு ரவுடி கும்பல் ,திடீர் கோடாரி வெட்டு தாக்குதலை நடத்தியுள்ளது .

நாய்கள் காப்பகத்தின் நுழைவயில் கதவு கோடரியால் கொத்தி சேதமாக்க பட்டுள்ளதுடன் ,அவ்வேளை அங்கிருந்த நாய்கள் பராமரிப்பு கால்நடை மருத்துவர் மீதும் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இதில் மருத்துவருக்கு இரண்டு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார் .

நோர்வேயில் இருந்து சென்று நாய்கள் காப்பக்கத்தை நடத்தி வரும் நோர்வே ராசி என்பவரின் நாய்கள் காப்பகம் மீதே இந்த வாள்வெட்டு குழுவின் கோடரி தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

குறித்த நுழை வாயில் கதவு ஒன்றரை லட்சம் ரூபா செலவில் அமைக்க பட்டிருந்தது .

அவ்வாறான விலை உயர்ந்த பாதுகாப்பு கதவே தற்போது இந்த கூலி குழு ஊடாக வெட்டி சேத படுத்த பட்டுள்ளது .

வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் நோர்வே ராசி அவர்கள் கண்ணீரோடு கதறி விடயத்தை தெரியப்படுத்தியதை அடுத்து, அந்த டிக் டாக் நேரலையில் கலந்து கொண்ட உறவுகளில் முக்கியமானவர்கள் உடனடியாக போலீசாருக்கு தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தினர் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை நடத்தியுள்ளனர் .

குறித்த நாய் காப்பகத்தை முடக்கும் நடவடிக்கையில் ,வெள்ளை வேட்டி அரசியல் கட்சி பெருச்சாளி ஒன்று ஈடுபட்டு வருவதாகவும் ,

அவர்களின் நேரடி வழிகாட்டலில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இலங்கையில் புதிய நேர்மையான ஆட்சி இடம்பெற்று வரும் நிலையில் ,இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இந்த சம்பவம் இடம்பெற்ற பொழுது ,ஆளுகின்ற அனுரகுமார திசநாயக்கவின் கட்சி உறுப்பினர்களுக்கும் தெரிவிக்க பட்ட நிலையில் ,அவர்களும் காவல்துறையை தொடர்பு கொண்டு நேரடியாக சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தினர் .

மக்கள் அரசாக விளங்கும் அனுரகுமார திசாநாயக்க கட்சியினர் மக்கள் நலன் அக்கறையுடன் செயல்பட்ட விடயம், எம்மை வியப்பில் உறைய வைத்ததுடன் ,மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Akd கட்சி உறுபினர்கள் சம்பவம் இடம்பெற்ற நாய்கள் காப்பகம் சென்று பார்வையிட்டு ,உரிய நடவடிக்கையை மேலதிகமாக மேற்கொள்வார்கள் என எதிர் பார்க்க படுகிறது .

கடந்தஆட்சி காலத்தில் லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படும் இவ்வாறான சமூக விரோதிகள் உள்ளவரை ,நாடும் மக்களும் எப்படி பாதுகாப்பாக வாழ்வார்கள் என்ற கேள்வியை ,இந்த சம்பவம் எடுத்து காட்டியுள்ளது .

எனவே இன்றைய ஆளும் அரசு, மக்களை மிரட்டும் இந்த விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி,

சம்பந்த பட்ட நபர்களையும் ,அவர்களின் பின்னால் மறைந்திருக்கும் அரசியல் கட்சிக்கும், உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அன்பு கோரிக்கை விடுகின்றோம் .

Akd கட்சி உரிய நடவடிக்கை மேற்கொள்ள விட்டால் அதுவே அனுரகுமார திஸாநாயக்கவின் நல் ஆட்சிக்கும் பெரும் கலங்கத்தை ஏற்படுத்தும் .

ஆகவே Akd கட்சியினர் விழிப்புடன் செயல் படவேண்டிய காலமாக இது காணப்படுகிறது.

தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்
Posted in இலங்கை செய்திகள்

தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்

தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல்

தப்பிய மருத்துவர் கணேஷ் கொல்ல வந்த கும்பல் , வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் பேசி வரும் மருத்துவர் கணேஷ் அவர்களை கும்பல் ஒன்று கொலை மிரட்டல் விடுத்தது சென்றுள்ளது .

பிரிட்டன் பகுதியில் உளவியல் மருத்துவராக விளங்கி வரும் மருத்துவர் கணேஷ் மீது விடுதலை புலிகள் என கூறி வரும் கும்பல் இந்த கொலை வெறி தாக்குதல் நடத்திட முயற்சித்துள்ளது .

பிரிட்டன் மற்றும் உலக நாடுகளில் இடம்பெறும் தமிழீழ விடுதலை புலிகள் என கூறி வரும் புலிகள் குழுவின் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் .

அந்த விடயம் தொடர்பாக வன்னி மைந்தன் டிக் டக் நேரலையில் பேசி வருகின்றார் .

அதனை எதிர்கொள்ள முடியாத இந்த குழுவினர் ,தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும் அவர் மீள வந்து ஆயுத போராட்டத்த்தை நடத்துவர் எனவும் ,

அவ்வாறு தலைவர் பிரபாகரன் உயிரோடு உள்ளார் எனவும் ,தாமே விடுதலை புலிகளின் தலைமை செயல்பாட்டு தலமை குழுவும் எனவும் தெரிவித்து மிரட்டியுள்ளனர் .

தொடர்ந்து தலைவர் பிரபாகரன் உயிரோடு இல்லை என கூற முற்பட்டாலோ ,அல்லது தமிழீழ விடுதலை புலிகள் பெயரில் பணம் சேகரிக்கும் விடயம் தொடர்பில் பேசினாலோ ,மருத்துவர் கணேஷிற்கு தகுந்த தண்டனை வழங்க படும் என கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளது .

பிரிட்டனுக்கு தலைமை தங்கிய செயல் பட்ட தமிழீழ விடுதலை புலிகளின் பிரிட்டன் பொறுப்பாளர் தனம் மீது தாக்குதல் நடத்திய அதே நெட்டையனும் ,குட்டையனும் ,இணைந்து தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது .

மருத்துவராக பணிபுரியும் மருத்துவ கார் திருப்பிடத்திற்கு சென்ற குழுவினர் ,இவரது காருக்கு அருகில் சென்று காருக்குள் வருமாறும் ,காருக்குள் வைத்து பேசுவோம் என மிரட்டியுள்ளனர் .

மருத்துவர் கணேசோ வெளியில் நின்றவாறே உரையாடலாம் விடயத்தை கூறுங்கள் என கூறி மிரட்டி விட்டு குறித்த குழு சென்றுள்ளது .

பிரிட்டன் தமிழீழ விடுதலை புலிகள் பெயரால் செயல் படும் இவ்வாறான பணம் பறிக்கும் மோசடி கும்பல் ,

பிரிட்டனில் புலிகள் தளபதிகள் என கூறியவாறு கேள்வி கேட்கும் மகளையோ மிரட்டி கொலை செய்திடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள செயல் அதிகரித்து வருகிறது அவதனமாக செயல்படுங்கள் .

மக்கள் பணத்தை கொள்ளையடித்த சுக போக வாழ்க்கை வாழ்ந்து வரும் புலிகள் பெயரில் இயங்கும் குழு மக்களை மிரட்ட ஆரம்பித்துள்ளது இதன் ஊடக மீளவும் அம்பல பட்டுள்ளது .

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நேரலையில் பேசிட வாருங்கள் இப்போது
Posted in அர்ச்சுனா இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள்

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள்

மருத்துவர் அர்ச்சுனாவுடன் நாள்தோறும் நேரலையில் பேசிட வாருங்கள் .மக்கள் விடியலுக்காக களம் இறங்கி போராடும் அர்ச்சுனா இராமநாதன் அவர்களுடன் நேரடியாக நேரலையில் நீங்கள் பேசலாம் .

நாள்தோறும் எமது டிக் டாக் நேரலையில் பேசுகின்றார் ,மக்கள் கருத்துக்கு பதில் வழங்குகிறார் .

லண்டன் நேரம் மதியம் 4.00 மணி முதல் இராணுவு 8,00 மணிவரை இந்த நேரலை இடம்பெறுகிறது .இலங்கை நேரம் இரவு எட்டு மணி முதல் 11,00 ,மணிவரை .

பாசமுள்ள நெஞ்சங்களே ,மக்கள் நாயகன் விடுதலை வீரனுடன் பேச இன்றே எழுந்து வாருங்கள் ,புதிய சரித்திரம் படைப்போம் .வரலாற்றை மாற்றுவோம் .இது உங்களுக்கான நேரம் .


எமது tik tok நேரலையில் கலந்து கொள்ள கீழே உள்ள அழுத்துங்கள்

video

click here video

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி

மருத்துவர் அர்ச்சுனாவை கொல்வதற்கு சதி என மருத்துவர் அர்ச்சுனா நூலில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் .

அந்த பதிவு பிவருமாறு ..

,என்னை கொல்வதற்குரிய ஒலிப்பதிவு கிளிநொச்சியில் இருந்து ஒரு நபரால் கதைக்கப்பட்டது என்னுடைய கைக்கு வந்துள்ளது..


வெகுவிரைவில் சம்பந்தப்பட்ட நபரின் விபரத்துடன் போலீஸ் கம்ப்ளைன்ட் ஒன்றை இட்ட பின்பு மக்களுக்கு தெரியப்படுத்துவதாக இருக்கிறேன்..


என்னை கொல்வதற்கு தன்னுடைய ஆட்களிடம் 25 கோடி வந்துள்ளது என காசு ட்ரான்ஸ்பர் ஆகி இருக்கிறது என்று அவர் கதைத்துள்ள ஆடியோ ஆதாரம் என்னுடைய கையில் உள்ளது.


பிரபல அரசியல்வாதி ஒருவரின் பின்புலம் இருப்பதாக நான் அறிகிறேன் போலீசார் அதனை விசாரணையில் கொண்டு வருவார்கள் என நினைக்கின்றேன்..

என அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்துள்ளார் .மக்கள் ஆதரவை பெற்ற அரசியல் வெள்ளை வேட்டிகளை ஓடவிட்டு கொண்டிருக்கும் ,வீரமகன் அர்ச்சுனாவை எவ்வாறு எனினும் இல்லாது அழிக்க வேண்டும் என்ற நிலையில் இந்த கட்சிகள் ஈடுபட்டுள்ளதை இந்த விடயம் அம்பல படுத்தியுள்ளது .

இந்த தகவல் வெளியானதை அடுத்து மக்கள் கொந்தளிப்பில் உறைந்துள்ளனர் .

மருத்துவர் செந்தூரனை கிழித்த பெண்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் செந்தூரனை கிழித்த பெண்

மருத்துவர் செந்தூரனை கிழித்த பெண்

மருத்துவர் செந்தூரனை கிழித்த பெண். அர்ச்சுனா இராமநாதனுக்கு எதிராக மருத்துவர் செந்தூரன் வைத்த அவதூறு கருத்துக்களை கேட்ட பெண்கள் பொங்கி எழுந்து வெடித்துள்ளனர் .

எமது டிக் டாக் லைவ்வில் பேசிய பெண்கள் பலருக்குக் வைத்தியர் செந்தூரன் உண்ணாவிரதம் ,மற்றும் பெண்களுக்கு எதிராக அவர் பேசிய விடயங்கள் சூடு பிடித்தது .

அர்ச்சுனா இராமநாதன் பெண்களை வைத்து பாலியல் வியாபாரம் செய்வதாக தெரிவித்த விடயம் ,பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை அடுத்து ,பெண்கள் தற்போது பொங்கி எழுந்து வெடித்துள்ளனர் .

அவ்வாறு அந்த பெண்கள் தமது உள்ளக்குமுறலை இவ்வாறு தெரிவித்துள்ளனர் .

அதில் பாரதி என்கின்ற பெண் இவ்வாறு பொங்கி எழுந்து வெடித்துள்ளார் .

காணொளியில் அழுத்தி பார்வையிடுக

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில்

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில்

மருத்துவர் நாகநாதன் பொலிஸ் விசாரணையில் சிக்கியுள்ள சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பதிவுகள் சில காண்ப்பிக்கின்றன .

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் சைக்கோ மருத்துவர் அல்லது சக மருத்துவர்களை மன நோயாளியாக சித்தரிக்கும் ,

சத்தியமூர்த்தி என்கின்ற மருத்துவர் அர்ச்சுனாவை போல தற்போது நாகநாதன் மருத்துவரை கூண்டில் ஏற்ற பொலிஸ் விசாரனையை ஆரம்பித்துள்ளார் .

நாகநாதன் மருத்துவரை அணுகிய காவல்துறையினர் அவரை விசாரணைக்கு உள்ளாகியுள்ளதாகவும் ,அதில் அவர் சிகிச்சை புரிகின்ற சத்திர சிகிச்சை பகுதியில் மருத்துவர்கள் தாதிமார்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ள பட்டதாக சமூகவலைத்தள பதிவுகள் பேசுகின்றன .

தங்களது மாபியா கொள்ளையை தடுக்கும் முகமாக அப்பாவி மருத்துவர்களை மிரட்டி ஒடுக்கும் நடவடிக்கையில் சத்தியமூர்த்தி ஈடுபட்டு வருகின்றார் .

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக மருத்துவமனை ஊழல்களை கூறுபவர்களை மிரட்டி அடக்கும் ஒரு திறந்த நிகழ்ச்சி நிரலின் திட்டமிட்ட நகர்வாக இந்த வைத்தியர் நாகநாதன் மீதான பொலிஸ் விசாரணை விடயம் பார்க்க படுகிறது .

போலீஸ் விசாரணைக்கு உள்ளான மருத்துவர் நாகநாதன் தனது சட்டத்தரணியை நாடியுள்ளதாக தெரிவிக்கபடுகிறது .

தமிழ் மக்களின் கலாச்சார பட்டினத்தில் உள்ள யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பொறுப்பதிகாரியான சத்தியமூர்த்தியின் ,தனக்கு எதிராக அவதூறு பரப்பினார் என்கின்ற இழி செயல் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

தமன்னாவுடன் படமெடுக்க அலைந்த சமுதாய மருத்துவர்
Posted in இலங்கை செய்திகள்

தமன்னாவுடன் படமெடுக்க அலைந்த சமுதாய மருத்துவர்

தமன்னாவுடன் படமெடுக்க அலைந்த சமுதாய மருத்துவர்

தமன்னாவுடன் படமெடுக்க அலைந்த சமுதாய மருத்துவர் ,மருத்துவ மாபியா விடயத்தில் போலியான கருத்துக்களை பரப்பி மருத்துவர் ஒருவர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .

அர்ச்சனாவினை பொய்யாக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் டாக்டர் முனா என்ற பெயர்வழி தமன்னாவுடன் படம் எடுக்க சென்ற விடயம் தொடர்பான ஆதாரம் கசிந்தது ள்ளது.

மருத்துவ துறையில் தன்னை முதன்மையான நபர் என தெரிவித்து இருக்கும் இவர் தமன்னாவை பார்க்க செல்ல பெரும் தொகையில் பணத்தை செலுத்தி முதல் ஆசனத்தில் அமர்ந்து தமன்னாவை தொட்டு ரசித்துள்ளதாக சமூக ஊடகங்கள் வாயில்கா மக்கள் பேசி கொள்கின்றனர் .

மக்களின் கடவுளாக தன்னை அறிவித்து கொள்ளும் இந்த மருத்துவர் ,நடிகை ஒருவரை கண்டு தரிசித்து ஆசிர்வாதம் செல்ல முயன்றது ஏன் என கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர் .

சமுகம் தொடர்பாக பேச வருகின்றவர்கள் சமூகத்தில் எவ்விதமான கருத்தை விதைக்கிறார்கள் என்பது கவனிக்க படவேண்டிய விடையம் என்பதாக அவர்கள் சுட்டி கடடுகின்றனர் .

மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை

மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை

மருத்துவர் ஜெயக்குமாருக்கு எதிராக சத்யமூர்த்தி நடவடிக்கை ,மருத்துவத் துறை ஊழல்களை அம்பலப்படுத்திய மகரகம புற்று நோய் சிறப்பு வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி ஜெயக்குமாருக்கு ,நடவடிக்கை எடுக்கத் கோரி

யாழ் போதனா வைத்தியசாலையில் கையொப்பம் கோரும் மருத்துவ மாபியா சத்தியமூர்த்தி .

தனிக்காட்டு ராஜாவாக வலம் வரும் மருத்துவர் சத்தியமூர்த்தி ,தனது நிர்வாகம் மற்றும் தனக்கு எதிராக செய்லபடுகின்ற அல்லது கருத்து வைக்கின்ற மருத்துவர்களுக்கு எதிராக அடக்குமுறையை மேற்கொண்டு வருகிறார் .

அவ்வாறன காலப்பகுதியில் தற்போது யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மருத்துவர் ஜெய்குமாருக்கு எதிராக சக மருத்துவரைகளை ஒருவாறு மிரட்டி அல்லது ,அதிகாரத்தை பயன் படுத்தி அவருக்கு எதிராக கையொப்பம் வாங்கி வருகிறார் .

இது சத்தியமூர்த்தியின் மிக கிழ்நிலையிலானசெயல்பாடாக பார்க்க படுகிறது .

இதே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பல நோயாளர்கள் தவறான சிகிச்சை காரணமாக இறந்தனர்.

அவ்வாறான விடயங்களுக்கு எதுவித விசாரணைகளோ அல்லது நடவடிக்கையையோ எடுக்க மறுத்து வரும் ,மருத்துவ மாபியா தலைவர் சத்தியமூர்த்தியின் இந்த செயல்பாடு ,இவர்கள் மருத்துவ மாபியாக்கள் தான் என்பதை கோடிட்டு காண்பிக்கிறது .

இதோ சமூக வலைத்தளங்களில் வெளியாகிய கடிதம் .

மருத்துவர் அர்ச்சுனா கைது
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் அர்ச்சுனா கைது

அர்ச்சுனா கைது

மருத்துவர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

மன்னர் மருத்துவமனையில் இடம்பெற்ற இளம் பெண் ஒருவரது மரணம் தொடர்பில் அங்கு பயணம் செய்த மருத்துவர் ,அந்த பெண் மரணத்திற்கான விடயத்தை கேள்வி எழுப்பினார் .

பாதிக்க பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வேண்டி தரவேண்டும் என்ற நோக்கத்துடன் ,முறைப்பாட்டு கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதி வழங்கினார் .

மருத்துவமனையில் ரகளை செய்தார் என நிலையில் கைது செய்யப்பட்டுளளார் .

அதனை அடுத்தே தற்போது அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் மன்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

மக்கள் அர்ப்பணிப்புக்கு தயாராகிவிட்ட அர்ச்சுனா மருத்துவர் கைது செய்யப்பட்ட விடயம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேர்தல் வரும் காலா பகுதியில் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்படுத்த பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட மருத்துவர் அர்ச்சனா இராமன்தான் எட்டிகிறவரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க போட்டுள்ளார் .

பிணையில் விடுதலை செய்யும் நிலை ஏற்படலாம் என்ற தகவல் வெளியிட பட்டுள்ளது ,

யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி
Posted in இலங்கை செய்திகள்

யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி

யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி

யாழ் மருத்துவர்களை மிரட்டும் சத்தியமூர்த்தி,யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பணிபுரியும் நோயாளர்களை மட்டும்ல ,மருத்துவர்களையும் மிரட்டி ஒடுக்கும் சத்தியமூர்த்தி .

யாழ்ப்பாணம் என்பது கற்றவர்கள் வாழும் பகுதியாக மாற்றம் பெற்ற வேளையில் தற்போது ,அங்கு மக்களுக்கு சேவை புரிந்து வரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திறந்த வெளியாக காணப்படுகிறது .

இந்த மருத்துவமனையின் பொறுப்பதிகாரியாக விளங்கி வரும் சத்தியமூர்த்தி அவர்கள் சகா மருத்துவர்களை பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பாதிக்க பட்டுள்ள மருத்துவர்கள் தெரிவித்து வருகின்றனர் .

அதோ அந்த காணொளி கீழே

வீடியோ

அரசியல்வாதிகள் மருத்துவர் அர்ச்சுனாவால் அலறல்
Posted in இலங்கை செய்திகள்

அரசியல்வாதிகள் மருத்துவர் அர்ச்சுனாவால் அலறல்

அரசியல்வாதிகள் மருத்துவர் அர்ச்சுனாவால் அலறல்

அரசியல்வாதிகள் மருத்துவர் அர்ச்சுனாவால் அலறல் ,சாவகச்சேரியில் முன்னாள் பொறுப்பதிகாரிய விளங்கிய அர்ச்சனா ராமநாதன் தற்பொழுது அரசியலுக்கு வர உள்ளதாக அறிவித்துள்ளார்.

மிக முக்கியமான கட்சி ஒன்றுக்கு தான் ஆதரவு அளிக்க உள்ளதாக நேற்று தெரிவித்திருந்தார் .

அதனை அடுத்து இவரது அரசியல் வருகையை அடுத்து தற்பொழுது தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுக்கு இடையில் மிகப் பெரும் வீதி நிலவுகின்றது.

இவர் எந்த கட்சிக்கு தனது ஆதரவை வழங்குவார் என்கின்ற விடயம் தற்பொழுது பேசிப் பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

தமிழ் தேசியவாதிகள் தாங்களே தவறுகளை மிகுந்தவர்களாக தெரிவித்து மக்களை ஏமாற்றி வந்த நிலையில் ,அர்ச்சனா ராமநாதன் அவர்கள் முன்னெடுத்த சில விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக மாற்றப்பட்டது .

அடுத்து வடக்கு பகுதியில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகள் காணாமல் போகின்ற நிலை ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகள் மருத்துவ மாபியாக்கள் உள்ளதான பரப்புரையில் இவர் ஈடுபட்டு வருகின்றார் ,

அந்த விடயம் தற்பொழுது மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று அர்ச்சனாவை தமது தலைவராக மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் அர்ச்சுனா ராமநாதனுக்கு மக்கள் வழங்கி வரும் பெரும் ஆதரவு காரணமாக, தற்பொழுது வடக்கில் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல கட்சிகள் தமது வெள்ளை வேட்டிகள் ,

அவிழ்த்து விழும் நிலை காணப்படுவதான புதிய தகவல்களும் மக்களது கருத்துக்களும் காணப்படுகின்றன.

அதனால் அர்ச்சனா ராமநாதன் இந்த வேளையில் கை காண்பிக்கும் காட்சி பலத்தை வெற்றியை பெற்று விடும் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது .

இதனாலயே தமிழ் அரசியல் கடசிகளுக்கு இந்த பதட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மருத்துவர்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மருத்துவர்

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக யாழில்களமிறங்கிய மருத்துவர்

அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களமிறங்கிய மருத்துவர் வுக்கு ஆதரவாக யாழில்களமிறங்கிய மருத்துவர் .யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல வைத்தியசாலையில் ஒன்றில் பணிபுரிந்து வரும் தமிழ் வைத்தியர் ஒருவர் ,அர்ச்சுனாவுக்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளார் .

அவ்வாறு அர்ச்சுனா இராமநாதன் மருத்துவருக்கு இடையில் எவ்வாறான முரண்பாடு அல்லது இடைவெளி ஏற்பட்டது என்பது தொடர்பில் விளக்குகின்றார் .

மக்களுக்கும் மருத்துவர் அர்ச்சுனாவுக்கும் இடையில் எவ்வாறு விரிசல் ஏற்பட்டது என்பது தொடர்பில் ,இந்த மருத்துவர் மிக தெளிவாக விடயங்களை விளக்குகிறார் .

இந்த காணொளியை மிக துல்லியமாக அவதனிக்கின்ற பொழுது தான் , தெளிவாக தெரியவரும் என்பதை காணமுடிகிறது .

எந்த அரசியல் கட்சி எப்படி எப்பொழுது எங்கே என்ன நடந்தது என்பது தொடர்பில் விரிவாக விளக்குகின்றார் .காணொளியை முழுமையாக பாருங்கள் .

சந்தேகங்கள் ,கேள்விகளுக்கு .பதில் இதில் காணப்படுகிறதா ,காணொளியை பார்க்கும் பொழுதே உங்களுக்கு தெரியவரும் .

மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார்

மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார்

மருத்துவர் அர்ச்சுனா youtube ஆரம்பித்தார் ,முன்னாள்சாவகச்சேரி மருத்துவமனையின் பணிப்பாளராக விளங்கி வந்த அர்ச்சுனா ராமநாதன் அவர்கள், தற்போது youtube தளத்தினை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார் .

இந்த youtube திட்டத்தின் ஊடாக தனது காணொளிகளை வெளியிட்டு வருகின்ற அவர் தொடர்ந்தும் அதனூடாக தாங்கள் பயணிப்போம் என அறிவித்திருக்கின்றார்.

சவகச்சேரி மருத்துவமனையில் ஊழல்களையும் ,அங்கு நடைபெறுகின்ற மருத்துவ தவறுகளையும் சுட்டிக்காட்டிய நிலையில் ,

அவர் மக்கள் மத்தியில் பேசப்படுகின்ற ஓருவராகவும் ம,க்கள் ஆதரவு வழங்கும் ஒருவராகவும் தற்பொழுது விளங்கி வருகின்றார்.

youtube தளத்தை ஆரம்பித்த அர்ச்சுனா இராமநாதன்

அவ்வாறான நிலையில் தற்போது youtube தளத்தை ஆரம்பித்து அவர் அதனூடாக தான் பயணிக்க உள்ளதாக அறிவித்துள்ளார் .

இந்த youtube தளத்தை தான் ஆரம்பிப்பதற்கான காரணம் ,தன் மீதான பல தவறான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்று வருவதாகவும் ,எனவே அதனை தடுக்கும் முகமாகவும் அதனை அதனை விளங்கப்படுத்த முகமாகவும், இந்த youtube தளத்தை தான் ஆரம்பித்துள்ளதாக அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பல youtube நிர்வாக இயக்குனர்கள் அதனூடாக இவருக்கு எதிரான பல்வேறுப்பட்ட விமர்சனங்களையும், சில ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

பல்வேறுபட்ட மன உளைச்சலுக்கும் போலியான பரப்புரைக்கு மத்தியில் உள்ளாகி வரும் மருத்துவர் அர்ச்சனா ராமநாதன் ,

தற்பொழுது தனது பக்க நியாயங்களையும் நீதிகளையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்தி தொடராக வெளியிட்டு வருகின்றார்.

அவ்வாறான நிலையில் தற்போது இந்த youtube மற்றும் பேஸ்புக் போன்ற அவற்றை பயன்படுத்தி தனது பரப்புரவுகளை மேற்கொண்டு வருகின்றார் .

இதன் ஊடாகவே அவரை பின் தொடரும் மக்கள் அவரது கருத்துக்களை தொடராது தவறாது கேட்டும் பார்த்தும் வருகின்றனர் .

அதன் அடிப்படையில் இப்பொழுது அவர் மேலும் ஒரு சமூக ஊடகத்தை பயன்படுத்த ஆரம்பித்துள்ளது ,அவரது கருத்துக்கள் மிக வேகமாக பரப்புவதற்கு இவை உடனடியாக இருக்கும் என நம்பப்படுகின்றது.

போலி மருத்துவ மாணவி கைது
Posted in இலங்கை செய்திகள்

போலி மருத்துவ மாணவி கைது

போலி மருத்துவ மாணவி கைது

போலி மருத்துவ மாணவி கைது ,வைத்திய பயிற்சி ஆரம்பிப்பதற்கு முன்பே பயிற்சி பெற்ற வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி தனியார் மருத்துவமனை ஒன்றில்

6 மற்றும் 8 வயதுடைய சட்டத்தரணி தம்பதியரின் இரண்டு பிள்ளைகளுக்கு வைத்திய சிகிச்சை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவ மாணவியை

சடலம் ரயில் நிலையத்தில் மீட்பு
சடலம் ரயில் நிலையத்தில் மீட்புசடலம் ரயில் நிலையத்தில் மீட்பு

எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல நேற்று பிற்பகல் உத்தரவிட்டார்.

கடந்த 3ஆம் திகதி கொலன்னாவை பிரதேசத்தில் உள்ள வைத்திய நிலையமொன்றுக்கு வருகை தந்த சட்டத்தரணி ஹுசைன் அஸார் சைதுன் மற்றும் சட்டத்தரணி பாத்திமா ஜுதைன் ஆகியோர் தமது இரண்டு பிள்ளைகளுக்கும் வைத்திய சிகிச்சைகளை மேற்கொண்டிருந்தனர்.

மேற்படி வைத்திய சிகிச்சையின் பின்னர் அவர்களின் உடல் நிலை மோசமடைந்ததையடுத்து, சந்தேகநபரான வைத்தியருக்கு இதுபற்றி அறிவிக்கப்பட்டு, மருத்துவச் சான்றிதழ் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மேற்படி மருத்துவச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரபூர்வ முத்திரையில் மற்றொரு வைத்தியரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்கு

பின்னர் இது தொடர்பில் வினவிய போது, ​​எவருக்கும் வைத்தியச் சிகிச்சை வழங்குவதற்குத் தான் தகுதி பெற்றுள்ளதாக சந்தேகநபரான பெண்

தெரிவித்துள்ள நிலையில், அதன் பிரகாரம் வெல்லம்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

முறைப்பாட்டின் படி, நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்காக தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் பதிவு

செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறான சந்தேக நபர் அல்லது மேற்படி தகவல் அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பில் சட்டத்தரணி

தம்பதியினரும் ஏனைய சட்டத்தரணிகள் குழுவொன்றும் மேலதிக நீதவானிடம் தெரிவித்திருந்தனர்.

இதன்படி, சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகளை அழைத்த மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுணவெல, சந்தேகத்திற்குரிய மருத்துவ மாணவி செய்தது

கொலை முயற்சிக்கு சமமான குற்றம் என குறிப்பிட்டு அவரை உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

உரிய அனுமதி இன்றி மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட அஜ்ரா நியாஸ் என்ற சந்தேக நபரான பெண் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை

8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை

8மருத்துவர்களை யாழில் பணிமாற்ற நடவடிக்கை, யாழ்ப்பாணத்தில் மருத்துவ மாபியாக்களாக விளங்கி வரும் 8 பேரை உடனடியாக பணி மாற்ற நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக தகவல் வெளியாகியுள்ளது .

மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்கள் மேற்கொண்ட பல நடவடிக்கை காரணமாக ,தற்போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல மருத்துவ மோசடிகள் ,மாபியா கொள்ளை அம்பலமானது .

அதனை அடுத்து மருத்துவர் அருச்சுனா இராமநாதன் ,மற்றும் பாதிக்க பட்ட மக்களினால் குற்றம் சுமத்த பட்டதை அடுத்து ,தற்போது எட்டு மருத்துவர்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரும் நாட்களில் பணிமாற்றம் செய்ய படவுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மக்கள் எதிர் பார்க்கும் விடயங்கள் நடைமுறைக்கு உள்ளாக்க பட்டு வரும் என எமது டிக் டாக் நேரலையில் ( click here tiktok ) கலந்து கொண்ட மருத்துவ பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார் .

அதனை ஏற்கும் போல் தற்போது மருத்துவர் அருச்சுனா இராமநாதன் அவர்களும் தனது முக நூலில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார் .

இவ்வாறான மாற்றங்கள் காலம் கடந்து ,மக்கள் அழுத்தம் காரணமாக மேற்கொள்ள படுகிறது .

வடக்கு மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் இடம்பெற்று வரும் ,இவ்வாறான விடயங்கள் மக்கள் மத்தியில் மிக பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

பிராந்திய சுகாதார பணிப்பாளர் நாயகம் கேதீஸ்வரன்,யாழ்போதன வைத்தியசாலை நிர்வாக இயக்குனர் சத்தியமூர்த்தி ,பிரணவன் ,மயூரன் ,இந்திரகுமார் ஆகியோர் பிரதான இடம் வகிக்கின்றனர் .

இவர்களுடன் இந்திரகுமார் ,தர்சன் ,மேலும் சிலரும் உள்ளடக்கம் பெற்றுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன .

ஆகவே மக்கள் கொந்தளிப்பை தடுக்க ,உடனடியாக இவர்கள் எட்டு போரையும் பணிமாற்றம் செய்யவேண்டும்.

,அல்லது மக்கள் ,யாழ்போத்ன வைத்தியசாலை உள்ளிட்ட மருத்துவ மனைகளை முற்றுகையிடலாம் என்பதாக மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .

கொந்தளித்துள்ள மக்களும் ,பாதிக்க பட்ட மக்களும் மீளவும் தன் எழுச்சியாக ,போராட்டங்களை நடத்தினால் ,மக்கள் இயல்பு வாழ்வுக்கு தடைகள் ஏற்படும் .

ஆகையால் ,அதனை கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு ,உடன் விரைந்து ,மக்கள் கொந்தளிப்பை தடுக்கவும் ,குற்ற சாட்டுகளை ஏற்றுக்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை, நாமும் இங்கே முதன்மை கோரிக்கையாக முன் வைக்கின்றோம் .

புரிந்து கொண்டு செயல் படுங்கள் ,முக்கிய பொறுப்பில் உள்ள அதிகாரிகளே .