Posted in Uncategorized

இலங்கைக்கு உதவாதீர்கள் ராமதாஸ் கோரிக்கை

இலங்கைக்கு உதவாதீர்கள் ராமதாஸ் கோரிக்கை

இலங்கைக்கு செய்யப்படும் உதவிகள் ஒரு போதும் இந்தியாவுக்கு எதிராக அமைந்து

விடக் கூடாது, எனவே கடல்வழி மின் தடம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

இது குறித்து இன்று ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “இலங்கைக்கு மின்சாரம் வழங்குவதற்கு வசதியாக தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கடியில் மின்

பாதை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுகள் மீண்டும் தொடங்கியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள்

அதிர்ச்சியளிக்கின்றன. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் அது நாட்டின்

வளர்ச்சியை பாதிக்கும் என்பதை அரசு உணர வேண்டும்.
என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்

    Posted in Uncategorized

    இந்தியாவுக்கு 3,000 கோடி கட​னை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை

    இந்தியாவுக்கு 3,000 கோடி கட​னை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை

    பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், அந்த நாடு

    கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் (ரூ.3,000 கோடி) தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா நீட்டித்துள்ளது.

    இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

    இலங்கைக்கு பல்வேறு வழிகளில் இந்தியா உதவி செய்வது தொடா்கிறது. இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மத்திய வங்கி மூலமாக இந்திய ரிசா்வ் வங்கி 40 கோடி டொலா்

    கடனுதவி அளித்துள்ளது. அந்தக் கடன் தொகையை கரன்சி பரிமாற்ற முறையில் இலங்கை அரசு திருப்பிச் செலுத்துவதற்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்நிலையில், இலங்கை அரசு கடன்

    தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்திய ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, இந்தியாவுக்கு கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

    தலைமையிலான அரசு கடந்த 12 ஆம் திகதி அறிவித்தது. IMF மூலமாக நிதியுதவி கிடைக்கும் வரை கடன் தவணை நிறுத்தி வைப்புத் தொடரும் என்றும் இலங்கை அரசு கூறியது.

    இந்த அறிவிப்பு வெளியான பிறகு, சா்வதேச அளவில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த இந்தியா அவகாசம் அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

    இலங்கை மத்திய வங்கியுடன் ‘சாா்க்’ கரன்சி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்திய ரிசா்வ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய ரிசா்வ் வங்கியிடம்

    அதிகபட்சமாக 40 கோடி டொலா் தொகையை, டொலா் அல்லது யூரோ அல்லது ரூபாய் மதிப்பில் பல தவணைகளில் இலங்கை மத்திய வங்கி கடனாகப் பெற முடியும்.

    இதுதவிர, இந்தியாவிடம் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக இலங்கை அரசு 100 கோடி டொலா் (ரூ.7,460 கோடி) கடன் பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல்

    உள்ளிட்ட எரிபொருள் வாங்குவதற்காக 50 கோடி டாலா் ரூ.3,700
    கோடி இலங்கை கடன் பெற்றுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      ஒருவர் குத்தி கொலை – தொடரும் படு கொலைகள்

      ஒருவர் குத்தி கொலை – தொடரும் படு கொலைகள்

      இலங்கை கம்மதாகம பகுதியில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறில் சிக்கி

      ஒருவர் குத்தி கொலை
      செய்ய பட்டுள்ளார்

      கொலையாளி கைது செய்ய பட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

        Posted in இலங்கை செய்திகள்

        கஞ்சா விற்ற பெண்கள் கைது

        கஞ்சா விற்ற பெண்கள் கைது

        இலங்கை மட்டக்களப்பு பகுதியில் கஞ்சா மற்றும் போதைவஸ்து விற்பனையில் ஈடுபட

        இரு பெண்கள் கைது செய்ய பட்டுள்ளனர்

        கைதானவர்கள தொடர்ந்து விளக்க மறியலில் வைக்க பட்டுள்ளனர்

        மகிந்த ஆடசியின் பின்னர் இலங்கையில் போதைவஸ்து பாவனை அதிகரித்து

        சென்றமை குறிப்பிட தக்கது

          Posted in இலங்கை செய்திகள்

          மனித உரிமைகள் ஆணைக்குழுவில் -பொலிஸ்மா அதிபர்

          பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகி உள்ளார்.

          றம்புக்கனை சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பொலிஸ்


          அதிகாரிகள் சிலர் இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்

            Posted in இலங்கை செய்திகள்

            கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்

            கொரனோ தொற்றுக்கு உள்ளான பசில் – பராளுமன்றம் வந்தார்

            இலங்கை முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸா


            கொரனோ சோதனை செய்து கொண்ட பின்னர் பாராளுமன்றம் வருகை தந்துள்ளார் ,


            இவரது வருகையை அடுத்து இவருக்கு எதிராக கோஷங்கள் பாரளுமன்றில்

            வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              ரம்புகளையில் இராணுவம் குவிப்பு -தொடரும் பதட்டம்

              ரம்புகளையில் இராணுவம் குவிப்பு -தொடரும் பதட்டம்

              ரம்புகளையில் போராட்டத்தில் ஈடுபட்ட நபரை சிங்கள படைகள் சுட்டு கொன்றன

              ,அவ்வாறான அந்த பகுதியில் தற்போது சிங்கள இராணுவத்தின் விசேட இராணுவ

              படைகள் குவிக்க பட்டு மக்கள் அச்சுறுத்த பட்டு வருகின்றனர்

              மக்களோ அரச படைகள் மற்றும் அரசுக்கு எதிராக ஆக்கிரோஷமாக போராடி வருகின்றனர் ,

                Posted in இலங்கை செய்திகள்

                இலங்கையில் கொண்டனர் சரக்கு வரி 65 வீதத்தால் அதிகரிப்பு

                இலங்கையில் கொண்டனர் சரக்கு வரி 65 வீதத்தால் அதிகரிப்பு

                இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக கொண்டேனர்

                ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பிலான வரி அறுபத்தி ஐந்து வீதம் இன்று

                நடைமுறைக்கும் வரும் நிலையில் அதிகரிக்க பட்டுள்ளது

                இந்த சேவை வரி காரணமாக பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி

                பொருள்களின் விலைகளும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதால் ,


                மீளவும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  வீதியை எரித்த போராட்ட காரர்கள்

                  வீதியை எரித்த போராட்ட காரர்கள்

                  பொகவந்தலாவை நகரில் டயர்களை எரித்து போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட

                  நிலையில், புதிதாக காபட் இடப்பட்டு புனரமைக்கப்பட்ட குறித்த வீதி

                  சேதமடைந்துள்ளது என நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

                  பாரிய நிதி செலவில் ஒரு வருடத்துக்கு முன்னர், பொகவந்தலாவை வீதி

                  புனரமைக்கப்பட்டதாகவும், நேற்றைய தினம் அங்கு டயர்கள் எரிக்கப்பட்டமையால் வெப்பத்தால் சேதமடைந்து போட்டப்பட்ட


                  காபட் கழன்றுள்ளதாகவும் நோர்வூட் பிரதேச சபை தெரிவித்துள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    வாலிபர் சுட்டு கொலை – மனித உரிமை ஆணையகம் பொலிசாருக்கு அழைப்பு

                    ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பல சிரேஷ்ட பொலிஸ்

                    அதிகாரிகளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அழைத்துள்ளது.

                    இதன்படி, பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன, மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான

                    சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர், மத்திய மாகாணத்துக்கு பொறுப்பான பிரதி

                    பொலிஸ்மா அதிபர், கேகாலை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கேகாலை மற்றும் ரம்புக்கனை பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

                    அதற்கமைய, நாளை (22) காலை 11 மணிக்கு இலங்கை மனித உரிமை

                    ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

                      Posted in Uncategorized

                      பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு

                      பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு

                      இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா பாயாவிற்கு எதிராக மக்கள்

                      போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பதவி விலகும் படி


                      கோரினால் தான் பதவி விலகிட தயாராக உள்ளதாக கோட்டா அறிவித்துள்ளார்

                      இவரது இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என எதிர்பார்க்க படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –

                        மரத்தின் மேல் ஏறி வாலிபர் போராட்டம் –

                        இலங்கையில் ஆளும் கோட்டா அரசு உடனடியாக பதவி விலக கோரியும்

                        ,ரம்புகளையில் வாலிபர் சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு

                        தெரிவித்தும் வாலிபர் ஒருவர் மரம் ஒன்றின் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்

                        மக்களின் தொடர் போராட்டங்களுக்கு செவி சாய்க்காது கோட்டா தனது ஆட்சியை

                        முன்னெடுத்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

                          இலங்கை வந்தடைந்த இந்தியா எண்ணெய் கப்பல்

                          இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அதற்கு

                          கடனடிப்படையில் உதவிட 40 மெட்ரிக் தொன்


                          எரிபொருளுடன் இந்திய எண்ணெய் கப்பல் ஒன்று இலங்கை வந்தடைந்துள்ளது

                          இந்திய சமீப நாட்களாக தொடராக இலங்கைக்கு எரிபொருளை அனுப்பிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

                            செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                            Posted in இலங்கை செய்திகள்

                            கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

                            கிணறுகளில் மிதக்கும் மனித சடலங்கள்

                            இலங்கை மட்டு கொக்குவில் பகுதியில் உள்ள கிணறு ஒன்றுக்குள் இருந்து ஆணின் சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது


                            இவர் கொலை செய்ய பட்டு குறித்த குணற்றுக்குள் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

                            சடலம் மீட்க பட்டத்தை அடுத்து தொடர் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன


                            கோட்டா ஆட்சியில் நீர் நிலைகளில் தொடராக மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு – அமெரிக்க தூதர் சந்திப்பு

                              போராளிகள் மீதான வன்முறை பற்றி தெரிவிப்பு: மலையக அபிலாசை ஆவணம் கையளிப்பு
                              மனோ தலைமையில் தமுகூ தூதுக்குழு – அமெரிக்க தூதர் சந்திப்பு


                              இலங்கையில் இன்று போராடும் போராட்டக்காரர்கள் மீது வன்முறையை அவிழ்த்து விட வேண்டாம் என்ற நிபந்தனையை, சர்வதேச நாணய நிதி (ஐஎம்எப்) இலங்கைக்கு உதவும் போது, இலங்கை அரசாங்கத்தின் மீது விதியுங்கள். இலங்கையில் வாழும்

                              இந்திய வம்சாவளி மலையக தமிழரின் இருப்பை பதிவு செய்துக்கொண்டு நமது மக்களை பற்றிய அமெரிக்காவின் அக்கறையை இலங்கை தொடர்பான உங்கள்

                              கொள்கை நிலைப்பாடுகளின் போது வெளிப்படுத்துங்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், அமெரிக்க தூதுவர் ஜூலி சங்கிடம் தெரிவித்துள்ளார்.


                              தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு இன்று அமெரிக்க தூதுவரை சந்தித்து உரையாடியது. கூட்டணி சார்பில் தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்

                              இராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துக்கொண்டனர். அமெரிக்க தரப்பில் அமெரிக்க தூதுவர் ஜூலி சங். அரசியல் துறை அதிகாரி ரூபி வுட்சைட் ஆகியோர்

                              கலந்துக்கொண்டனர். மனோ எம்பியின் செயலாளர் பிரியாணி குணரட்னவும் உதவியாளராக கலந்துக்கொண்டார்.


                              இது தொடர்பில் மனோ எம்பி தனது டுவீட்டர் தளத்தில்,
                              “ஐஎம்எப் இலங்கைக்கு உதவ நினைக்கிறது. நன்றி. ஆனால், அதை ஜனநாயக நிபந்தனையுடன் செய்க. போராளிகள் மீது வன்முறை கூடாது.

                              காலிமுகம் உட்பட நமது போராளிகள் உலகில் மிக கட்டுப்பாடான போராளிகள். அமெரிக்க தூதர் ஜூலி சங்கிடம், ரம்புக்கன நிகழ்வுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்

                              கூறினேன். இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் அரசியல் சமூக பொருளாதார அபிலாசைகளுக்கு இலங்கை பரப்புக்கு உள்ளே தீர்வுகள் வேண்டும்” என்று கூறியுள்ளார்.


                              மேலும் இந்த சந்திப்பின் போது, மலையக தமிழரின் அரசியல் அபிலாஷை ஆவணத்தை அமெரிக்க தூதுவரிடம் கூட்டணி தலைவர் மனோ கணேசன் கையளித்தார். இலங்கையில் தென்னிலங்கையில் மத்திய, மேல், சப்ரகமுவ, ஊவா,

                              தென் மாகாணங்களில் வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார வாழ்நிலைமைகள் பற்றி அமெரிக்க தூதுவர் கேட்டு தெரிந்துக்கொண்டார்.


                              தான் கொரிய வம்சாவளி அமெரிக்கர் என்பதில் பெருமை அடைவதாகவும், இந்நிலையில் தமது நாட்டின் பன்மைத்தன்மை தமக்கு பலம் சேர்த்துள்ளதாகவும்

                              அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்தார். இதுவே இலங்கையும் எதிர்பார்க்கும் எதிர்காலம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் அமெரிக்க தூதுவரிடம் கூறினர்.


                              மத்திய மலைநாட்டுக்கு விஜயம் செய்து நேரடியாக விடயங்களை அறியுங்கள் என கூட்டணியின் பிரதிதலைவர் இராதாகிருஷ்ணன் விடுத்த அழைப்பையும் அமெரிக்க தூதுவர் ஏற்றுக்கொண்டார்.


                              இது தொடர்பில் அமெரிக்க தூதர் ஜூலி சங் தனது டுவீட்டர் தளத்தில்,
                              “மலையக தமிழர் உட்பட அநேகமான (இலங்கை) சமூகங்கள்,


                              எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு அவசியமாகின்றது. நிலையான பொருளாதார


                              மீட்சிக்கு இலங்கை மக்களின் தலைவர்கள் அவசர நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். (இவைபற்றி) @ManoGanesan
                              மனோ கணேசன் அவர்களுடன் உரையாடினேன்.” என்று கூறியுள்ளார்.

                                Posted in Uncategorized

                                லண்டன் Dartford வீட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சுற்றிவளைத்த போலீஸ்

                                லண்டன் Dartford வீட்டில் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் மீட்பு – சுற்றிவளைத்த போலீஸ்

                                லண்டன் Dartford பகுதியில் உள்ள வீடு ஒன்று திடீரென காவல்துறையினரால் சுற்றி வளைக்க பட்டது


                                இதன் பொழுது அந்த வீட்டில் மறைத்து வைக்க பட்டிருந்த இரண்டு விமான எதிர்ப்பு

                                துப்பாக்கிகள் மீட்க பட்டுள்ளன

                                இந்த சம்பவத்துடன் தொடர்புடைய முப்பத்தி ஆறு வயது நபர் கைது செய்ய பட்டு

                                தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்


                                இது தீவிரவாத செயலுடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                                  Posted in Uncategorized

                                  உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்

                                  உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்

                                  உக்கிரேன் மாறியபோல் பகுதியில் மேலும் போர் வெடித்துள்ள நிலையில் அந்த

                                  பகுதியை காவல் காக்கும் உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் என ரசியா

                                  மிரட்டல் விடுத்தது வருகிறது

                                  இதனை ஏற்க அந்த நாட்டு இராணுவம் மறுத்து போரிட்டு வருகிறது


                                  சரண் அடைய மறுத்தால் பெரும் தாக்குதல்கள் நடத்த படும் என்பது ரசியாவின் வாதமாக உள்ளது

                                  இங்கே ரசியா கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                    Posted in Uncategorized

                                    ரஷியா எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு

                                    ரஷியா எண்ணெய் கப்பல் சிறை பிடிப்பு

                                    கிரேஸ் நாட்டினால் ரசியாவின் எண்ணெய் கப்பல் ஒன்று 19 சிப்பந்திகளுடன் சிறை

                                    பிடிக்க பட்டுள்ளது

                                    சட்டவிரோத செயல் பாடுகளில் குறித்த கப்பல் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தே இந்த

                                    சிறை பிடிப்பு இடம்பெற்றுள்ளது

                                    இவை நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது

                                      Posted in Uncategorized

                                      மகிந்த வீடு முற்றுகை – உக்கிரம் பெறும் போராட்டம்

                                      இலங்கை பிரதமர் மகிந்தா தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் போராட்ட

                                      காரர்கள் குவிந்து பெரும் பேரணியை நடத்திய வண்ணம் உள்ளனர்

                                      இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிந்த உடனே பதவி விலக வேண்டும் என கோரி வருகின்றனர்

                                      இந்த கோஷங்கள் அங்கு வானை பிளந்த வண்ணம் உள்ளன

                                        Posted in Uncategorized

                                        உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி

                                        உணவை உட்கொண்ட 322 பேர் மருத்துவ மனையில் அனுமதி

                                        இலங்கை கொக்கல , ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணியாற்றிய 322 ஊழியர்கள்

                                        உட்கொண்ட உணவு விஷமானதால் அவர்கள் அனைவரும் வாந்தி ,தலைச்சுற்று

                                        ,வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                        மேற்படி சம்பவம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன