Posted in Uncategorized

20ம் திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியோர், மன்னிப்பு கேட்க வேண்டும்-மனோ எம்பி

20ம் திருத்தத்துக்கு கைகளை உயர்த்தியோர், கைகூப்பி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்

  • தமுகூ தலைவர் மனோ எம்பி
    20ஐ அகற்றிக்கொண்டு 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்ததை கொண்டுவர அரசு இணங்கியுள்ளதாக இன்று கட்சி தலைவர்கள் கூட்டத்தில் சபை முதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்தன அறிவித்தார். இந்நிலையில் 20ம்
  • திருத்திற்கு ஆதரவாக கையை உயர்த்தி, ஜனாதிபதி கோதாபய ராஜபக்சவுக்கு அதீத அதிகாரங்களை கொடுத்து, அதை நியாயப்படுத்தியும் பேசிய எம்பீகள், அதே கைகளை உயர்த்தி வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய நிலைமை இன்று உருவாகிவிட்டது. இவ்வளவு சீக்கிரம் கோதாபய ராஜபக்சவின் சர்வதிகாரம் வீழும் என இவர்கள் கற்பனையிலும் நினைத்து இருக்க மாட்டார்கள் என ஜனநாயக மக்கள் முன்னணி – தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

இன்று பாராளுமன்ற வாளாகத்தில் நடைபெற்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில், 20ஐ அகற்றவும், 19ன் அம்சங்களை உள்வாங்கி 21ம் திருத்த வரைபு ஒன்றை

பாராளுமன்றத்துக்கு சமர்பிக்கவும் அரசாங்கம் தயார் என சபை முதல்வர் தினேஷ் குணவர்தன அறிவித்தார். இதை பிராதன எதிர்கட்சிகள் ஏற்றுக்கொண்டுள்ளோம்.

முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றும் யோசனையும் தனக்கு கிடைத்ததாக சபாநாயகர் கட்சி தலைவர்களுக்கு கூறினார். எனினும் முழுமையாக

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை அகற்றப்பட சர்வஜன வாக்கெடுப்பு நடத்திட வேண்டிவரும் என்பதால், அதற்கு நாடு இன்றைய சூழலில் தயார் இல்லை என்பதால்,

முழுமையாக நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தற்சமயம் அகற்ற பெரும்பாலான கட்சி தலைவர்கள் ஆதரவு வழங்கவில்லை.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அகற்றப்பட்டால்,
விகிதாசார தேர்தல் முறைமை, 13ம் திருத்த மாகாணசபைகள் ஆகியவற்றையும்


அகற்ற வேண்டி வரும் என சில ஆளும்கட்சி பிரதிநிதிகள் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.

இது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு ஏற்புடைய நிலைப்பாடுகள் இல்லை.
தமது நிலைப்பாடும் இதுவே என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் நண்பர் ரிசாத் பதுர்தீன்,


தமிழ் தேசிய மக்கள் முன்னணி தலைவர் நண்பர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் என்னிடம் தெரிவித்தார்கள்.

    Posted in இலங்கை செய்திகள்

    முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு

    முகக்கவசம் தேவையில்லை – வெளியான அறிவிப்பு

    இலங்கையில் பரவி வந்த கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து முகக்கவசம்

    தேவை இல்லை என்ற அறிவிப்பு வெளியானது

    இந்த நிலையில் தற்பொழுது போக்குவரத்து மற்றும் உள்ளக செயல்பாடுகள் தவிர்ந்த


    இடங்களில் இவை அவசியம் இல்லை என தெரிவிக்க பட்டுள்ளது

      Posted in Uncategorized

      தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு

      தொடரும் போராட்டம் – தள்ளாடும் அரசு

      ஜனாதிபதி மற்றும் தற்போதைய அரசாங்கத்தைப் பதவி விலகுமாறு கோரி கொழும்பு காலி முகத்திடல் மற்றும் நாடாளவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு

      வருகின்ற நிலையில், குறித்த போராட்டத்திற்கு ஒருமைபாட்டை தெரிவிக்கவும், வலுசேர்க்கவும் இரண்டாவது நாளாக இன்றும் ஹட்டன் மல்லியப்பு சந்தியில் போராட்டம் தொடர்கின்றது.

      ஜனநாயகத்துக்கான மக்கள் குரல் எனும் தொனிப்பொருளின் கீழ் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் இளைஞர்கள் இணைந்து நேற்று இந்த போராட்டத்தை ஆரம்பித்தனர்.

      இந்த நிலையில், இன்றைய போராட்டத்தில் கோ கோட்டா ஹோம், மலையக மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும், தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆளுமை உள்ள அரசாங்கம் உருவாக வேண்டும், பாராளுமன்ற

      உறுப்பினர்கள் மனசாட்சியோடு நடந்துக் கொள்ள வேண்டும், விலை குறை அடுத்த தலைமுறை வாழ வேண்டும் போன்ற வாசகங்கள் எழுதிய சுலோக அட்டைகளை காட்சிப்படுத்தினர்.

      அத்தோடு, கறுப்பு கொடிகளை ஏந்தியிருந்ததோடு, கோஷங்களையும் எழுப்பியிருந்தனர். பொலிஸாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

      இந்த போராட்டத்தின் போது ஹட்டன் மல்லியப்பு சந்தியில் கோ கோட்டா கம கிராமத்தின்
      கிளை அங்குராப்பணம் செய்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.

        Posted in இலங்கை செய்திகள்

        பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்

        பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்

        இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா பிரதமர் மகிந்தா உள்ளிட்டவர்கள் பதவி

        விலக கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

        இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியாளர்கள் பதவி திறக்க மறுத்து வருவதால் போராட்டம் அதி உச்சம் பெற்றுள்ளது

        மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காது செல்லும் ராஜபக்ஸ்ச குடும்பங்களுக்கு எதிராக
        மக்கள் மேலும் கொதிப்படைந்து போராட்டம் உக்கிரம் பெற்று வருகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்

          சிகரெட் தர மறுத்த கடை உரிமையாளரை அடித்து கொன்ற கும்பல்

          இலங்கை முகுனுவடவன, மஹகம பகுதியில் உள்ள கடை ஒன்றுக்கு வருகை தந்த

          நால்வர் அடங்கிய குழுவினர் சிகரெட் கேட்டுள்ளனர்

          அவர் இல்லை என தெரிவித்ததை அடுத்து அவரை இளுத்து வைத்து அடித்து கொன்றுள்ளனர்

          கொலையை செய்த பின்னர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் ,இது குறித்த

          விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

            Posted in இலங்கை செய்திகள்

            யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்

            யாழில் மின்சாரம் தாக்கி பெண்மணி மரணம்

            இலங்கை யாழ்ப்பாணம் கைதடி வடக்கு பகுதியில் ஐம்பத்தி ஒன்பது வயது பெண்மணி

            ஒருவர் மின்சாரம் தாக்கி மரணமாகியுள்ளார்

            தொலைக் காட்ச்சி பார்க்க முனைந்த பொழுது இவ்விதம் மின்சாரம் தாக்கி

            பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

              Posted in இலங்கை செய்திகள்

              கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு

              கோட்டாவுக்கு எதிராக போராட்டத்தில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு

              இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவுக்கு எதிராக காலிமுக திடலில்


              போராட்டத்தில் கலந்து கொண்ட இரு போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட

              நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

              இராணுவ,காவல்துறையை அடக்கி எச்சரிக்கும் முகமான மிரட்டல் இதுவாக பார்க்க படுகிறது

                இட்லி தோசைக்கு பதிலாக 10 நிமிடத்தில் ஈசியான டிபன் sidedish தேவையில்லை| உடனடி டிபன்|No sidedish டிபன்
                Posted in இலங்கை செய்திகள்

                புத்தாண்டு தினத்தில் 7 பேர் மரணம்- 118 பேர் காயம்

                புத்தாண்டு தினத்தில் 7 பேர் மரணம்- 118 பேர் காயம்

                இலங்கையில் நடந்து முடிந்த புத்தாண்டு தின கொண்ட்டாட்டத்தில் சிக்கி


                ஏழுபேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 118 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்


                போலீசார் பாதுகாப்பு பல படுத்த பட்ட வேளையிலும் இந்த விபரீதங்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

                  Posted in Uncategorized

                  இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவி வழங்கும் இந்தியா

                  இலங்கைக்கு 2 பில்லியன் டொலர் உதவி வழங்கும் இந்தியா

                  இலங்கைக்கு இரண்டு பில்லியன் அமெரிக்கா டொலர்களை வழங்க இந்தியா இணக்கம் தெரிவித்துள்ளது

                  இதற்கு அமைவாக இந்த நிதி உதவி வழங்க படவுள்ளது

                  கடனை வழங்கியே இலங்கையின் பொருளாதாரம் இந்த நிலைக்கு மாறிட காரணமாக விளங்கியது


                  தற்போதையை நெருக்கடியை நிவர்த்தி செய்திட இலங்கை முன்னெடுக்கும் மீளவும் கடன் பெறும்


                  நிலை இவ்வாறு நீண்ட கால பொருளாதார நெருக்கடியை தணிக்கும் என கேள்வி எழுப்ப பட்டுள்ளது

                    Posted in Uncategorized

                    கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்

                    கோட்டா ,மகிந்தா பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் -காலி முகத்திடலில் மக்கள் முழக்கம்

                    இலங்கை அளவும் ஜனாதிபதி மகிந்த மற்றும் பிரதமர் மகிந்த சுள்ளிட்டா ராஜபக்ஸ


                    குடும்பம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து விலகும் வரை தமது போராட்டம் தொடரும் என

                    அங்குகூடியுள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்

                    மக்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து பதவி விலக மறுத்து வரும் கோட்டாவுக்கு

                    எதிராக நாளுக்கு நாள் மக்கள்


                    போராட்டம் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது

                      செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கை பெண் வெளி நாட்டில் திடீர் மரணம்

                      இலங்கை பெண் வெளி நாட்டில் திடீர் மரணம்

                      இலங்கை மட்டக்களப்பை சேர்ந்த 42 வயதுடைய பெண் ஒருவர் ஓமான் நாட்டில்

                      பலியாகியுள்ளார்


                      அங்கு இவருக்கு ஏற்பட்ட மர்ம நோயினால் பீடிக்க பட்ட நிலையில்

                      மரணமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        Posted in இலங்கை செய்திகள்

                        சர்வதேச நான்நய நித்தியதுடன் இலக்கை பேச்சு

                        சர்வதேச நான்நய நித்தியதுடன் இலக்கை பேச்சு

                        இலங்கை பொருளாதாரா நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில்


                        சர்வதேச நாணய நித்தியதுடன் இலங்கை பேச்சில் ஈடுபடுகிறது

                        நான்கு பில்லியன் டொலர் தேவைப்பாடு உள்ள நிலையில் இந்த பேச்சு இடம்பெற

                        உள்ளதாக புதிய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

                          Posted in இலங்கை செய்திகள்

                          சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு

                          சந்திரிகாவுடன் ,சஜித் முக்கிய பேச்சு – புதிய ஆடு களம் திறப்பு

                          இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியை அடுத்து தற்போது ஆளும்

                          அரசுக்கு எதிராக மக்கள் போராடி வருகின்றனர்

                          செயல் இழந்த பொருளாதரத்தை மீள கட்டி எழுப்பி அதற்கு தீர்வு காணும் நோக்கில் பேச்சுவராத்தையில் ஈடுபடடார் ,

                          இதில் சஜித்,சுமந்திரன்,பதியுதீன் உள்ளிட்ட தமிழ் முஸ்லீம் காட்சிகள் பிரதானிகளும் கலந்து கொண்டனர்

                            Posted in இலங்கை செய்திகள்

                            கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடு – மக்கள் கொந்தளிப்பு

                            கொள்ளையடித்த பணத்தை திருப்பி கொடு – மக்கள் கொந்தளிப்பு

                            இலங்கையில் ஆளும் கோட்டா அரசு அவர்கள் கொள்ளையடித்த மில்லியன் டொலர்

                            பணத்தை மீள திருப்பி வழங்க வேண்டும் என சிங்கள தமிழ் முசுலீம் மக்கள்

                            கோசங்களை எழுப்பியவாறு காலிமுக திடலில் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

                            சித்திரை புத்தாண்டு தினத்திலும் மக்கள் அதனை வீடுகளில் நிகழ்த்தாது அதே ஆர்ப்பாட்ட நிகழ்வு இடத்தில்


                            திரண்டு கொண்டாடி வருகின்றனர் ,கோட்டா வீடு போ என்ற கோசம் வானை பிளந்து மக்கள் போராட்டம் தொடர்கிறது

                              Posted in இலங்கை செய்திகள்

                              தமிழர் அழிவில் பால் சோறு உண்டவர்கள்; – பட்டினியால் தவிக்கும் அவலம் – மனோ கணேசன்

                              தமிழர் அழிவில் பால் சோறு உண்டவர்கள்; – பட்டினியால் தவிக்கும் அவலம் – மனோ கணேசன்

                              கொழும்பு தமிழ் சங்கத்தில் பூங்கோதையின் “நிறமில்லா மனிதர்கள்” நூல் வெளியீட்டில் எனது உரை


                              கோதாவுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் தமிழர்கள் அதிகமாக இல்லையே, ஏன்?.., என இங்கிலாந்தில் இருந்து என் சிங்கள நண்பர் கேட்டார்.
                              “யோசித்து பார்த்தால் இது, ஒரு நாடு, இரு தேசம்தான்.”


                              “உணவு, மருந்து… இல்லை என நீங்க போராடுறீங்க… நாங்க உயிர் வாழும் உரிமைக்காக போராடியவங்க.”


                              “இந்த உணவு, மருந்து… இல்லாம நம்ம தமிழர், யுத்த காலத்தில் வடக்கில், பொருளாதார தடைல வாழ்ந்தாங்க.”


                              “மலையக தமிழ் தோட்டத் தொழிலாளர், யுத்தம் இல்லாமலேயே அப்படி வாழ்றாங்க.”
                              “ஆனாலும் கொள்கை அடிப்படையில் நாம் கோதாவுக்கு எதிராகத்தான் நிற்கிறோம். வேறு எவரையும் விட அதிகமாக நிற்கிறோம்.”


                              “நாளைக்கு உணவு, கேஸ், கிடைத்தால் நீங்க போராட்டத்தை கைவிட்டு போயிடுவீங்கன்னு நமக்கு சந்தேகம் இருக்கு.”


                              “நம்ம மக்கள் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டாங்க. பத்து இலட்சம் பேர் புலம் பெயர்ந்தாங்க.”


                              “போராளிகள் செத்தார்கள். அது பிரச்சினை இல்லை. அவர்களின் சாவு, வீரச்சாவு.”
                              “ஆனால் எமது அப்பாவி மக்கள் ஒரு இலட்சம் பேர் கொல்லப்பட்டதை மறந்து நீங்கள், பாற்சோறு சாப்பிட்டு கொண்டாடினீர்கள். இது உண்மை.”


                              “ஆகவே, எங்கள் காயம் பெரிது. அதற்கு நாம் மருந்து போடுகிறோம். காயம் ஆறட்டும்.”
                              “நாங்கள் உங்கள் போராட்டத்தில் மெதுவாகத்தான் நாம் இணைவோம்.”


                              “அதுவரைக்கும் நாம் “நிறமில்லா மனிதர்” களாகவே இருப்போம்.”
                              “இது தலைநகர மாவட்ட எம்பியான எனது நிலைப்பாடு.”

                                Posted in Uncategorized

                                நீர்வீழ்ச்சியில் காணாமல் போன பெண்கள் சடலமாக மீட்பு

                                நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன வவுனியாவை சேர்ந்தவர்களின் பெயர் விபரம் வெளியானது – ஒருவரின் சடலம் மாத்திரம் மீட்பு


                                வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல்

                                போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது.


                                ஏனைய ஒரு யுவதியும், இளைஞனும் நீரிழ் மூழ்கி பலியாகியிருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அவர்களின் சடலங்களை மீட்பதற்கான தேடுதல் வேட்டை தொடர்ந்து 2ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.


                                வவுனியா மாவட்டத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையொன்றில் பணிபுரியும் இளைஞர், யுவதிகள் 48 பேர் பேரூந்து ஒன்றில், புத்தாண்டை முன்னிட்டு, மலையகத்தில் நுவரெலியாவுக்கு நேற்று (12) சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


                                இவ்வாறு சுற்றுலா செல்லும் வழியில், நுவரெலியா இறம்பொடையில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அருகாமையில் பஸ்ஸை நிறுத்திவிட்டு, நீர்வீழ்ச்சியையும், அதனை

                                சூழவுள்ள இயற்கை பகுதிகளையும் பார்வையிடுவதற்கு குழுக்களாக பிரிந்து சென்றுள்ளனர்.


                                இதில் ஆறு யுவதிகளும், ஒரு இளைஞனுமாக 7 பேர் கொண்ட குழுவினர் இறம்பொடை நீர்வீழ்ச்சி அமைந்துள்ள ஆற்றுப் பகுதியில் நீராடச்சென்றபோது நீரில்

                                அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.
                                வவுனியா நெடுங்கேனியைச் சேர்ந்த புவனேஸ்வரன் வினோதனி (வயது – 18), வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி

                                (வயது- 21) ஆகிய இரு யுவதிகளும், வவுனியாவை சேர்ந்த விதுசான் (வயது – 21) ஆகிய மூவருமே காணாமல் போயுள்ளனர்.


                                சடலமாக மீட்கப்பட்ட யுவதி வவுனியா, கல்மடு – ஈஸ்வரிபுரம் பகுதியைச் சேர்ந்த பொன்னுதுரை மதுசாலினி (வயது- 21) என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின்

                                சடலம் கற்பாறை
                                ஒன்றுக்குள் சிக்கியிருந்த நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  ஆர்ப்பாட்ட காரர்களுடன் பேச தயார் – மகிந்தா அழைப்பு

                                  ஆர்ப்பாட்ட காரர்களுடன் பேச தயார் – மகிந்தா அழைப்பு

                                  சமூக, பொருளாதார மற்றும் அரசியல் காரணங்களுக்காக காலி முகத்திடலில்

                                  தற்போது ஒன்று கூடியுள்ள ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பிரதமர் என்ற ரீதியில்

                                  கலந்துரையாடுவதற்கு தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ அறிவித்துள்ளார்.

                                  அதற்கமைய, நாடு எதிர்நோக்கியிருக்கும் தற்போதைய சவாலை வெற்றி கொள்வதற்கு

                                  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவிக்கும் பெறுமதியான கருத்துக்கள் குறித்து கலந்துரையாடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

                                  இந்த கலந்துரையாடலுக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தயாராக இருந்தால் அவர்களின் பிரதிநிதிகளை கலந்துகொள்ளுமாறு


                                  அழைப்பு விடுப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    மகிந்தவுக்கு சுமந்திரன் ஆலோசனையாம் – நம்பிட்டம் போங்க

                                    நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக தமிழ்

                                    தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

                                    வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

                                    அவர் மேலும் தெரிவிக்கையில்,

                                    ஒரு கொந்தளிப்பான அரசியல் நிலமை காணப்படுகின்றது. இந்த நிலை தொடர்பில் ஆராய்வதற்காக எமது கட்சியின் அரசியல் உயர் மட்ட குழு கூடியது. இந்த அரசியல் கொந்தளிப்புக்கு அடிப்படைக் காரணம் பொருளாதார வீழ்ச்சி. எப்படியாக

                                    இலங்கையினுடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதற்கான காரணிகள் என்ன? இனி என்ன மாதிரியாக இந்த நிலமை மாறப் போகிறது என்பன குறித்து நீண்ட நேரமாக கருத்து பரிமாற்றம் செய்தோம்.

                                    சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார வீழ்ச்சி ஒன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய பக்க விளைவுகளை எமது மக்கள் எதிர் நோக்க வேண்டிய நிலையும் வந்திருக்கிறது. இந்த நிலையில் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ்

                                    மக்களுடைய பிரதான அரசியல் கட்சியாக நாங்கள் எனன விதமான தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும். மக்களுக்கு என்ன மாதிரியான

                                    ஆலோசனைகளை கொடுக்க வேண்டும். பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலையில் என்ன மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மிகவும் ஆழமாக பேசியிருந்தோம்.

                                    இந்த பொருளாதார நிலை காரணமாக இன்னும் மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படுவதற்கான நிலமை தான் காணப்படுகின்றது. அது எமது மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்கப் போகிறது. அவர்களது பொருளாதார நிலமையும்

                                    பாதிக்கப் போகிறது. அதற்கு மாற்று வழிகளாக பல யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இது எங்களது மக்களுக்கு புதிதான விடயமல்ல. இருப்பினும் மக்கள் தயாராக இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் என்ற வகையில் அவர்களுக்கான

                                    வழிகாட்டுதல்களை நாங்கள் கொடுப்போம். எங்கள் பொருளாதார நிபுணர்கள் ஊடாக அது தொடர்பில் கலந்துரையாடுவதுடன், எமது அடுத்த மட்ட பிரதிநிதிகள்,

                                    செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம்.

                                    இம்முறை மே தினம் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் கொண்டாடப்படும். அது தமிழ் தேசிய மே தினமாக நடத்தப்படும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அதில் கலந்து கொள்வார்கள் என நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.

                                    இன்று அரசாங்கம் ஒன்று இல்லாத நிலமை காணப்படுகின்றது. அமைச்சரவை என நான்கு பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் உடனடியாக இராஜினாமா செய்தார். நிதி அமைச்சர் இல்லாத நாடு என நாங்கள் நினைத்துக்

                                    கொண்டிருந்த போது அவர் பாராளுமன்றத்தில் பேச எழுந்தார். அப்போது நீங்கள் தானா தற்போது நிதி அமைச்சர் என அவரிடம் நான் கேள்வி கேட்டேன். ராஜினாமா செய்து விட்டு, தான் நிதி அமைச்சர் என அவர் சொன்னார். அவ்வாறு அவர் சொன்ன போது அவருடன் கூட இருந்தவர்கள் எல்லாம் வியப்பாக அவரை திரும்பி பார்த்தார்கள். ஏனெனில் இப்பொழுது அவர் தான் நிதி அமைச்சர் என்பது அவர்களுக்கே தெரியாது. இப்படியாக நாடு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

                                    சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக சென்று பேச வேண்டும். கடன் கொடுத்த நாடுகள், அமைப்புக்களுடன் பேச வேண்டும். அமைச்சரா, இல்லையா என்று புரியாத நிலையில் உள்ளவர் தான் போய் பேச போகிறார். சர்வதேச நாணய நிதியமும்,

                                    மற்றைய நாடுகள், அமைப்புக்களும் உதவிக்கு முன் வருவதாக இருந்தால் கூட நாட்டில் ஒரு அரசியல் ஸ்திர தன்மை இல்லாமல் அவர்கள் அந்த செயற்பாட்டுக்குள் வர மாட்டடார்கள். ஆகவே அரசியல் ஸ்திரதன்மையை உருவாக்குவது அத்தியாவசியமான செயற்பாடு. அதற்கு உகந்த வகையில் ஜனாதிபதியோ, பிரதமரோ செயற்படுவதாக தெரியவில்லை.

                                    கடந்த சில நாட்களாக நான் கொழும்பில் இருந்த காரணத்தினால் பல்வேறு தலைவர்களுடன் பல கலந்துரையாடல்களில் பங்குபற்றியிருக்கிறேன். எதிர்வரும் நாட்களில் பிரதான எதிர்கட்சி சில முன்னெடுப்புக்களை செய்ய உள்ளார்கள்.

                                    அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதிபக்கு எதிரான குற்றப் பத்திரிகை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சட்டப் பிரேரணை உட்பட பல விடயங்களை முன்னெடுக்கவுள்ளார்கள். இது தொடர்பில் ஆராய்ந்தோம்.

                                    நாட்டில் இளைஞர்களாக சேர்ந்து தன்னெழுச்சியாக நடத்தப்படும் போராட்டங்களில் அரசியல்வாதிகள் இல்லாமலேயே நடத்தப்படுகின்றது. எமது பகுதிகளிலும் சில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

                                    இந்த மூன்று பிரேரணைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும். அந்த தீர்மானம் பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து கலந்துரையாடி உத்தியோக பூர்வமான தீர்மானமாக எடுப்போம். எமது மக்கள் மத்தியிலும் இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று எமது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை எமது கட்சி தலைவர் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்துவார்.

                                    தேசிய அரசாங்கம் வந்தால் நாங்கள் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. அவ்வாறான ஒரு தேவையை இப்போது நாங்கள் கருதவில்லை. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மாறி மாறி வந்த அரசாங்கங்களே காரணம். மிகவும் முக்கிய காரணம் 30 வருடத்திற்கு மேலாக ஒரு போரை நடத்தியது. அதற்காக

                                    கண்மூடித்தனமாக எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கினார்கள். அதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பொறுப்பு. இறுதியாக தவறு ஏற்பட்டது இந்த ஜனாதிபதியின் காலத்தில் தான். இதனை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களிடத்தில் உள்ளது.

                                    இதில் நாம் பொறுப்பில்லாதவர்களாக செய்யற்பட முடியாது. இதனுடைய தாக்கம் எங்களது மக்களுக்கும் மோசமாக அமையப் போகிறது. அவ்வாறு எமது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் செயற்பட வேண்டும். அதற்கு தேவையான

                                    ஆதரவை இடைக்கால அரசாங்கதற்கு கொடுக்க வேண்டுமாக இருந்தால் அப்போது அதற்கான முடிவை எடுப்போம். ஆனால், அமைச்சரவையில் நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட வில்லை.

                                    பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நான் சந்திக்கவில்லை. அவர் என்னை சந்திக்க கேட்டிருந்தார். அதனடிப்படையில் இரவு அவரை தனியாக சந்தித்து பேசியிருந்தேன். அரசியலமைப்பு தொடர்பாக பல

                                    பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என பல விடயங்கள் பேசப்படுகின்றன. பல கட்சித் தலைவர்கள் என்னுடன் பேசுகிறார்கள். இலவசமாக சட்ட ஆலோசனை பெறுகிறார்கள்

                                    என நான் யோசிகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் என்னுடன் பேசினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் தொலைபேசியில் காலையில பேசியிருந்தார். வேறு தலைவர்கள் பலர்

                                    பேசுகிறார்கள். சட்ட நிலைப்பாடு தொடர்பாகவும் அறிகிறார்கள். அரசியல் நிலையை ஸத்திரதன்மைக்கு கொண்டு வருதல் தொடர்பாக நடைபெறும் பேச்சுக்களிலும் நான்

                                    கலந்து கொண்டு வருகின்றேன். பிரதமர் மஹிந்த அவர்களுக்கு நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனையை அரசாங்கமே கொண்டு

                                    வந்தால் சில விடயங்களில்
                                    முன்னேற முடியும் என ஆலோசனை வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

                                      Posted in Uncategorized

                                      கடன் வேணுமா வாங்க தருகிறோம் அழைக்கும் சீனா – தப்பி ஓடும் இலங்கை

                                      கடன் வேணுமா வாங்க தருகிறோம் அழைக்கும் சீனா – தப்பி ஓடும் இலங்கை

                                      சீனாவிடம் அதிக வட்டிக்கு கடனை பெற்றே இலங்கை அதனை மீள் செலுத்த முடியா

                                      நிலையில் சிக்கி தவித்து வருகிறது .அழகான பாலங்கள் ,வீதிகள் என இலங்கையின் யுத்த பூமி எங்கும் காட்சி அளிக்கிறது

                                      அந்த அபிவிருத்திக்கு பெற்ற கடனை மீள வழங்க முடியா நிலையில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது

                                      இவ்வேளை இலங்கையின் நிலையினை புரிந்து மேலும் கடன்களை அள்ளி வழங்க

                                      காத்திருக்கிறோம் ஓடிவாங்க என சீனா அழைக்கிறது ,ஆனால் இலங்கையோ வாங்கிட தயக்கம் காட்டுகிறது

                                      இப்போது கழுத்தளவு மூழ்கியுள்ளது ,மேலும் வாங்கினால் அப்டியே மூழ்கிவிடுவார்கள் ,அந்த சாவு மணி அடிக்கவே சீனா அழைக்கிறது

                                        Posted in Uncategorized

                                        களத்தில் குதித்த சந்திரிக்கா – தயாராகும் புதிய கூட்டணி

                                        களத்தில் குதித்த சந்திரிக்கா – தயாராகும் புதிய கூட்டணி

                                        இலங்கையில் சந்திரிக்கா வந்திருக்கா சமாதானம் தந்திருக்க என்ற வாசகங்கள் 1994

                                        ஆண்டுகளில் எங்கும் ஒலித்தவை ,அதே அம்மணி நவாலி செண்பட்டீஸ் ஆலயம் முதல் குண்டு தாக்குதலை மேற்கொண்டு அப்பாவிகளை கொன்று குவித்தனர்

                                        எனினும் புலிகளுடன் பேச்சுக்களில் ஈடுபட்டவர் ,இன்று அதே அம்மணி ஜனாதிபதி

                                        தேர்தலில் களமிறங்கும் நோக்குடன் தேர்தலை சந்திக்க புதிய கூட்டணி அரசை அமைக்கும் நகர்வில் ஈடுபடுகிறார்

                                        இவருக்கு மேற்குல நாடுக்ளின் பலத்த ஆதரவு உள்ளது ,அம்மணி தனது விட்ட அதிகாரத்தை பிடித்து நாட்டில் நிரந்த தெரிவை மேற்கொள்ள புது முயற்சிகளை

                                        மேக்கொள்ள முனைகிறார்
                                        இது சாத்தியம் தானா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்