Posted in உளவு செய்திகள்

உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதலை தொடர்ந்த வண்ணம் உள்ளது .

இவ்வேளை ரஷ்ய இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து உக்கிரேன் இராணுவத்தை காப்பாற்றிட அமெரிக்கா போர் விமானங்களை வழங்குகிறது .

மேலும் உக்கிரேன் விமான படையினருக்கு வான் படை பயிற்சிகளையும் வழங்கி வருகிறது .

உக்கிரேனுக்குள் நுழைந்த நேட்டோ கப்பல்கள் விமானங்கள் பதட்டம் அதிகரிப்பு

உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி ரசியா கண்டனம்

ரஷ்ய இராணுவத்தின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தவும் .ரஷ்ய இராணுவத்தின் ஆயுதங்களை சோதனை செய்யும் முகமான பரீட்ச்சார்த்த களமாக உக்கிரேனை அமெரிக்கா , பிரிட்டன் என்பன பயன்படுத்தி வருகின்றன .

உக்கிரேன் இராணுவத்தில் எண்பது வீதமான படைகள் இறந்தோ அல்லது காயமடைந்து உள்ளனர் என்கிறது மேற்குலக உளவு நிறுவனம் .

உக்கிரேனுக்கு விமானங்களை அனுப்பும் அமெரிக்கா தாக்குதல் தீவிரம்

இவ்வாறாக மாற்றமடைந்து வரும் களமுனையை தனது நலன் சார்ந்த நிலையில் அமெரிக்கா மாற்றியமைத்து நகர்கிறது .

நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் இராணுவத்தினர் வழங்களுடன் நேரடி பயிற்சிகளையும் அமெரிக்கா வழங்கி வருகிறது.

அமெரிக்காவின் இந்த செயல் பாடு ரஷ்யாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்கிரேன் மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து பலத்த ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.

முக்கிய பகுதிகளை மீட்கும் நோக்குடன் அணுமின் உற்பத்தி நிலையங்கள் மீதும் நேரடி தாக்குதலை ஆரம்பித்துள்ளது .

ரஷ்ய இராணுவத்தின் இவ்வகையான தாக்குதல்கள் அமெரிக்கா மற்றும் மேற்குலகத்திற்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக அமைந்துள்ளதை ஆடுகளம் காண்பித்து செல்கிறது .

உக்கிரன் ரஷ்ய போர் உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது .

மேலும் எரிபொருள் தட்டுப்பாட்டுடன் உணவு பற்றாகுறையும் நிலவி வருகிறது .உக்கிரேன் ரசியா போரானது தொடர்ந்து நீடித்து செல்லும் என்றால் உணவு தட்டுப்பாட்டால் உலகில் பஞ்ச நிலை ஏற்படும் எனப்படுகிறது .

உக்கிரேன் நாட்டில் போர் மூண்ட நாள் முதல் இன்றுவரை பல மில்லியன் டொலருக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்று பணத்தை அள்ளியுள்ளது .

தொடர்ந்து மேற்குலக முதுகில் ஏறி நின்று ஆடிவரும் உகிரேனை ,அமெரிக்கா குருதீஸ் போராளிகளை கைவிட்ட நிலையை போன்று ,உக்கிரேனிலும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம் .

Posted in இலங்கை செய்திகள் உளவு செய்திகள்

சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

,

இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு காரணம் சீனா வழங்கிய கடன் பொறியே என அமெரிக்கா உளவுத்துறை உண்மையை உடைத்து தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் உளவுத்துறை தலைவர் நிகழ்வு ஒன்றில் பேசும் பொழுது இன்று இந்த பொருளாதார நெருக்கடியில் இலங்கை நாடு சிக்கி தவிக்க சீனாவின் கடன் பொறியும் அதிகமான வட்டி வீதமும் மூலம் என இடித்துரைத்துள்ளார்.

ஆசை காட்டி சீனா நாடுகளை கடன் நிலைக்கு தள்ளி அந்த நாடுகளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நரி திட்டமே இது என்கிறது .

இலங்கையில் நெருக்கடி ஏற்படும் ரணில் எச்சரிக்கை

இலங்கையை கைவிட்ட உலக நாடுகள் பிச்சைக்கார நாடான இலங்கை

இலங்கை இன்று இந்த நிலையில் சிக்கி தவிக்க சீனாவே காரணம் என அமெரிக்கா உளவுத்துறை விடயத்தை போட்டுடைத்துள்ளது.

பவுத்த மதம் என்ற நிலையில் சீனாவுடன் ஒட்டி உறவாடிய இலங்கைக்கு இன்று இந்த பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்படக்காரணமாக அமைந்தது.

சீனா கடனால் சீரழிந்தத இலங்கை உண்மையை உடைத்த அமெரிக்கா உளவுத்துறை

மேலும் சீனா வழங்கிய பல பில்லியன் டொலர் காரணமாக அதில் லஞ்ச ஊழல் மோசடி புரிந்து ஏப்பம் விட்டது மறு காரணம் என தெரிவிக்க படுகிறது.

சீனாவின் இந்த நெருக்கடி ஏனைய நாடுகளுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும் என அமெரிக்கா உளவுத்துறை எச்சரித்துள்ளது.


அப்படி என்றால் மேலும் சில நாடுகள் சீனாவின் கடன் பொறிக்குள் சிக்கியள்ளது என்பதையே அமெரிக்கா உளவுத்துறை எச்சரிக்கிறது.

வளர்ந்து வரும் நாடுகளில் அபிவிருத்தி என்கின்ற போர்வையில் காபட் வீதிகளை அமைக்கும் ஒப்பந்தத்தில் சீனா களம் இறங்குகிறது .

அதன் ஊடாக வீதிகளை அபிவிருத்தி செய்வதுடன் தனது தயாரிப்பு வாகனங்களையும் அங்கே இறக்குமதி செய்து விடுகிறது .

அந்த நாட்டி செல்வ செழிப்பை சுரண்டிட இவ்விதமான ஆடம்பர ஆசைகளை காண்பித்து அந்த மக்களையும் நாட்டையும் இவ்விதம் நெருக்கடியில் சிக்க வைத்து தனது அரசியல் மேலாண்மையை அந்த நாடுகளில் நிறுவி விடுகிறது .

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

    அமெரிக்கா இராணுவ தளபதி சிரியாவுக்கு திடீர் பயணம்

    அமெரிக்காவின் Lieutenant General Michael Kurilla முக்கிய தளபதி ஒருவர் சிரியாவுக்கு திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் .

    இவரது இந்த பயணம் அதி முக்கியதத்துவம் வாய்ந்த ஒன்றாக கருத படுகிறது.

    அமெரிக்கா இராணுவ முகாமில் வெடிப்பு சத்தங்கள்

    அமெரிக்கா இராணுவ தொடரணி மீது தாக்குதல்

    சிரியா மீது அமெரிக்கா மற்றும் அதன் நேச படைகள் தாக்குதலை நடத்தி வருகின்ற பொழுதும் ரசியாவின் கடும் எதிர்ப்பினால் அது கை கூடவில்லை .

    இவ்வாறான நிலையில் அமெரிக்கா இராணுவ தளபதி திடீர் பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிது.

    அமெரிக்கா இராணுவத்தினர் ரசியாவினால் கைது

    போலந்தில் முகாம் அமைக்கும் அமெரிக்கா இராணுவம்

    அமெரிக்கா இராணுவ படையணியின் முக்கிய தளபதியின் இந்த பயணத்தின் பின்னர் முக்கிய தாக்குதல் நகர்வுகள் உள்ளடங்கி இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

      Posted in உளவு செய்திகள்

      ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

      ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

      உக்கிரன் நாட்டின் மீது போரினை தொடுத்துள்ள ரசியா நாடு பெரும் எதிர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது.

      உக்கிரேன் போர் முனையில் துருக்கியின் உளவு விமானங்கள் பெரும் பங்களிப்பு புரிந்து வரும் நிலையில் ரசியா ஈரானின் உளவு விமானங்களை கொள்வனவு செய்துள்ளது .

      இந்த ஈரான் உளவு விமானத்தின் செயல் திறன் ரசியா இராணுவத்தினருக்கு கை கொடுத்து வருவதால் ஈரானிடம் இருந்து மேலும் இதே உளவு விமானங்களை வாங்கி குவித்திட ரசியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

      ஈரான் உளவு விமானங்களை வாங்கி குவித்த ரசியா உக்கிரேனில் தாக்குதல் தீவிரம்

      உக்கிரேன் ரசியா போரினால் உலக நாடுகளில் உணவு மற்றும் எரிபொருள் விலை ஏற்றம் அதிகரித்துள்ளது.

      உக்கிரேன் ரசியா போர் முடிவுக்கு வந்தால் மட்டும் இந்த பேரவலத்தின் இருந்து நாடுகளை பாதுகாக்கலாம் என்ற நிலை உருவாக்கம் பெற்றுள்ளது .

      இவ்வாறான நிலையில் ரசியா உக்கிரேனில் போரினை வேகப்படுத்த ஈரான் உளவு விமானங்களை அதிகம் நம்பியுள்ளதாக எதிர் பார்க்க படுகிறது.

      ஈரானின் உளவு விமனங்கள் உக்கிரேன் களமுனையில் பறப்பதை அமெரிக்கா உளவு துறையினர் செய்தி படங்களுடன் வெளியிட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

        Posted in உளவு செய்திகள்

        உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா

        உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா

        உக்ரேன் மீது ரஷ்ய இராணுவம் தொடராக போரினை தொடுத்த வண்ணம் உள்ளது .இவ்வேளை உக்கிரேனுக்கு அவசர உதவியாக அமெரிக்கா ஏவுகணைகள் மற்றும் ஆட்டிலறி குண்டுகள் 150ஆயிரம், மற்றும் ராடர் உள்ளிட்ட முக்கிய ஆயுத தளபாடங்களை வழங்கியுள்ளது .

        ரசியாவின் ஏவுகணை தாக்குதல்கள் பலமாக உள்ளதால் தமது முதல்தர ஆயுதங்களை உக்கிரேனில் வைத்து அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சோதனையை நடத்திய வண்ணம் உள்ளனர்.


        அதன் ஒரு அங்கமாக உதவி என்ற போர்வையில் அமெரிக்கா உக்கிரேனுக்கு ஏவுகணை ஆட்டிலறி குண்டுகளை பெருமளவில் அள்ளி வழங்கிய வண்ணம் உள்ளது .

        அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் மூலம் ரசியாவின் உக்கிர தாக்குதல்களை தடுத்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது .

        என்று தணியும் இந்த போர் ..?

        Posted in இலங்கை செய்திகள்

        அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை

        அமெரிக்கா அதிகாரிகள் குழு இலங்கை வருகை

        இலங்கை ;அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் மற்றும் அமெரிக்க திறைச்சேறி திணைக்கள அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்டக் குழுவினர் இலங்கை வந்தடைந்துள்ளனர்.

        மூன்று நாட்களுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு
        அவர்கள் இன்று காலை இலங்கை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

        இவ்வாறு இலங்கை வந்தடைந்த அமெரிக்கா அக்குழுவினர் பதமர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் ஜனாதிபதி கோட்டபாயவுடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளார் .

        இதில் இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு அவற்றுக்கு உதவும் திட்டங்களும் முன் வைக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .

          Posted in உலக செய்திகள்

          தீ பிடித்த பயணிகள் விமனம – மூவர் காயம்

          தீ பிடித்த பயணிகள் விமனம – மூவர் காயம்

          அமெரிக்கா மியாமி சர்வதேச விமான நிலையாயத்தில் தரை இறங்கிய Red Air plane ஒன்று திடீரென தீ பிடித்து கொண்டது.

          இதன் பொழுது அந்த விமானத்தில் பயணித்த பயணிகள் மூவர் தீ ஏரி காயங்களுக்கு உள்ளான நிலையில் பாதிக்க பட்டுள்ளனர் .

          மூச்சு திணறலுக்கு உள்ளான மூவரும் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளனர்.

          இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க படுகின்றன ,
          சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.


          இதனால் மனித உயிர் அழிவுகள் தடுக்க பட்டன .

            Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

            அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை

            அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை

            அமெரிக்காவில் மக்கள் பாவனைக்கு வழங்க பட்ட ஆயுத அனுமதி ஊடக இதுவரை 700 பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,

            இந்த படு கொலைகளுக்கு காரணமாக விளங்கும் இந்த ஆயுத பாவனையை இரத்து செய்திட வேண்டும் என கோரி மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்

            தொடர்ந்து அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ஊடக நாள் தோறும் பல மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,

            இந்த துப்பாக்கி கலாச்சாரம் மக்களின் இயல்பு வாழ்வுக்கும் ,நடமாடும் மக்கள் சுதந்திரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது ,

            எனவே இந்த ஆயுத பாவனை அனுமதியை இரத்து செய்திட வேண்டும் என மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர் சமீப காலங்களாக அமெரிக்காவில் தொடரான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன

            அமெரிக்காவில் 700 பேர் சுட்டுக்கொலை சம்பவம் பலத்த எதிர் நிலைய உருவாக்காகியுள்ளது


            இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலியாகிய வண்ணம் உள்ளனர் மேலும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிக்கி பல நூறு மக்கள் செயல் முடக்க பட்ட நிலையிலும் அவதியுற்ற வண்ணம் உள்ளனர்

            ஆளும் ஜோ பைடன் அரசுக்கு எதிராக மேற்கொள்ள படும் இந்த போராட்டங்கள் ,ஆளும் ஜோ பைடன் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

            அமெரிக்காவில் நடத்த படும் இந்த துப்பாக்கி சுட்டுக் கொலை சம்பவம் தொடர்பில் எழுந்துள்ள இந்த நெருக்கடியை அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எவ்வாறு எதிர்கொள்ள போகிறார் என்பது மக்கள் எதிர் பார்ப்பாக உள்ளது

            பாடசாலைகள் ,பொது இடங்கள் ஆலயங்கள்,பார்கள் என பல்வேறு பட்ட பகுதிகளில் தொடராக இடம்பெற்று வரும் துப்பாக்கி சூட்டு கொலை

            மக்களை கிளர்ந்தெழ வைத்துள்ள செயலானது ஆளும் அமெரிக்கா அரசுகளுக்கு
            பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்பது இடம் பெறும் மக்கள் எதிர்ப்பு நிகழ்வுகள் கோடிட்டு காட்டுகின்றன

            உலக நாட்டு உல்லாச பயணிகள் அமெரிக்காவுக்கு உல்லாச பயணம் செல்வதற்கு இந்த ஆயுத சுட்டுக்கொலை சம்பவங்களினால் அங்கு செல்ல தயங்கி வருகின்ற நிகழ்வுகளும் இடம்பெறுகிறது

            இவ்வாறான அச்சம் தோய்ந்த சிலரது கருத்து சமூக வலைத்தளங்களில் இவ்வாறும் பதிய பெறுகிறது .

            • வன்னி மைந்தன் –
            Posted in உலக செய்திகள்

            ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

            ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

            உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவத்தினர் மேற்கொண்டு வரும் இராணுவ தாக்குதலுக்கு எதிராக உக்கிரேனும் தாக்குதல் நடத்தி வருகிறது இந்த தாக்குதலில் ரசியா இராணுவத்தின் 1390 முதல் தர தாக்குதல் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளன

            முன்னேறி வரும் ரசிய இராணுவதின் தாக்குதல்களில் சிக்கி உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,ஆனாலும் மேற்குலக நாடுகள் வழங்கி வரும் போராயுதங்கள் துணையுடன் தொடர்நது போராடி வருகிறது

            பிரிட்டன் அமெரிக்கா வழங்கும் நவீன ஆயுதங்கள் மூலம் தனது தலை நகரை உக்கிரேனது இராணுவம் தக்க வைத்துள்ளது

            நூற்றி மூன்று நாட்கள் கடந்து நடைபெறும் உக்கிர சமரில் ரசியா படைகளில் 31 600 பேர் பலியாகியும் ,இருபதாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்

            பல நூறு முக்கிய ஆயுத தளபாடங்கள் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபரங்களுடன் தெரிவித்துள்ளது

            இன்று வரை தொடர்ந்து வரும் ரஷியா இராணுவத்தினரது மோதல்களில் உக்கிரேன் பேரழிவை சந்தித்துள்ளது ,முக்கிய பகுதிகள் சூடு காடாக காட்சி அளிக்கிறது

            ரசியாவின் 1390 டாங்கிகள் அழிப்பு

            ரசியா படை முன்னேற்றத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக மார் தட்டும் உக்கிரேன் நாடு சந்தித்துள்ள பேரழிவில் இருந்து அந்த நாட்டை மீள கட்டியெழுப்ப பல்லாண்டுகள் செல்லும் என்பது நிபுணர்கள் கருத்தாக உள்ளது

            எதிர் வரும் கோடை காலத்திற்குள் தமது எதிரிகளது நாட்டின் மீதான போர் முடிவுக்கு வந்து விடும் என ரஷியா இராணுவம் தெரிவித்து வருகிறது

            இவர்களின் இந்த கூற்று மெய்ப்பிக்கும் வகையில் சமீப நாட்களில் ரசியா இராணுவம் பாரிய படையெடுப்பை மேற் கொள்வதுடன் அதிக எறிகணை தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

            ரசியா, டாங்கிகள், அழிப்பு,

            ரசியாவின் தாக்குதல் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் அமெரிக்கா ,பிரிட்டன் படைகள் நீண்ட தூர பல் குழல் ரொக்கட் ஏவுகணைகளை வழங்கினர்

            இதன் ஊடாக மேற்கொள்ள பட்ட தாக்குதலில் ரசியா நாட்டு இராணுவத்தின் முக்கிய தாக்குதல் தளபதி படுகொலை செய்ய பட்டுளளார் இவரது இளப்பு பேரிழப்பாக பார்க்க படுகிறது

            தமது தாய் மண்ணை மீட்க இறு திவரை போராடுவோம் என உக்கிரேன் மக்கள் சபதம் எடுத்து களத்தில் நிற்கின்றனர்
            இது வரை எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகதிகளாக அண்டைய நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர்

            ரசியா இராணுவம் அதிகம் முன்னேற்ற நட வடிக்கைக்கு பயன் படுத்த படும் டாங்கிகள் அழிப்பு ,ரசியா இராணுவத்திற்கு பெரும் பின்னடைவு என உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது

            ரசியா இராணுவ டாங்கிகள் அழித்துள்ள காட்சிகளை உக்கிரேன் இராணுவம் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது ,தாமே வென்றவர்கள் என உலகில் காட்டி மகிழ்கிறது

            இது உக்கிரேனுக்கு கிடைத்துள்ள தற்கால மகிழ்ச்சி என்பது ரசியா நாட்டின் பதிலாக வீழ்ந்துள்ளது , உக்கிரேன் போரில் வெல்ல போவது ரசியாவா உக்கிறேனா ..? பொறுத்திருந்து பார்க்கலாம் .

            • வன்னி மைந்தன் –
              Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

              ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

              ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

              ஈரான் நாட்டை சேர்ந்த பதினாறு பேருக்கு எதிராக அமெரிக்கா அரசினால் தடைகள் விதிக்க பட்டுள்ளது


              இவர்கள் ஈரானை விட்டு வேறு நாடுகள் எங்கும் செல்லா முடியா வண்ணம் இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

              ஈரானுக்கு விதிக்க பட்ட புதிய தடைகளில் ஈரான் நாட்டு புரட்சிகர படைப் பிரிவை சேர்ந்த முக்கிய தளபதிகளும் அடக்கம் பெறுகின்றனர்

              கிரேக்க பகுதியில் வைத்து இரண்டு அமெரிக்கா எண்ணெய் கடத்தல் கப்பல்களை ஈரான் கடலோர காவல் படையினர் சிறை பிடித்து சென்று இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்கா அரசினால் இந்த பயண தடை விதிக்க பட்டுள்ளது

              அமெரிக்கா அரசினால் பிரகடன படுத்த பட்டு அறிவிக்க பட்டவர்கள் தீவிரவாதாத்துக்கு பண பரிவர்தனம் செய்து வருகின்றனர் எனவும் இந்த பணப்

              பரிமாற்றம் Bahrain, Kuwait, Oman, Qatar, Saudi Arabia and the UAE குறித்த நாடுகளில் மேற்கொள்ள பட்டு வருவதாகவும் அமெரிக்கா சுட்டி காட்டியுள்ளது

              அப்படி என்றால் அமெரிக்காவினால் மேலும் பலர் இந்த நாடுகளில் குறி வைக்க பட்டுள்ளனர் என்பதும் அவர்களுக்கும் விரைவில் இவ்விதமான அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கலாம்

              ஈரானுக்கு அமெரிக்கா விதித்த இந்த புதிய தடைகள் ஈரான் நாட்டை பாதிக்குமா என்பதே சந்தேகம் ஆனாலும் விதித்துள்ளது

              ஈரானுக்கு புதிய தடைகள் அமெரிக்கா அதிரடி அறிவிப்பு


              பொருளாதார தடைகளை விதித்து ஈரானிய நாட்டினை அடி பணிய வைக்கும் முயற்சியில் அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து ஈடுபட்டு வருகிறது ஆனால் அதில் அவர்கள் தோல்வியை தழுவியுள்ளன

              பல தொடர் தடைகள் விதிக்க படுகின்ற பொழுதும் ஈரானோ அசைந்து கொடுப்பதாக தெரியவில்லை, மாறாக தனது பொருளாதாரத்தை அசுர வேகத்தில் மேம்படுத்திய வண்ணம் தனது அபிவிருத்தி மற்றும் செல்வ சேர்ப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது

              தனது நாட்டின் பாதுகாப்புக்கு ஏற்ப ஏவுகணை சோதனையிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளது ,தற்போது அணுகுண்டு தயாரிக்கும் அணுஉலை சோதனையும் முக்கிய கட்டத்தை அண்மித்துள்ளது

              இவ்வாறான நெருக்கடிகளை தகர்த்து பயணிக்கும் ஈரானுக்கு புதிய தடைகள் ஈரானை பதற வைக்குமா நிலை குலைய வைக்குமா என்பதே சந்தேகமே ..!

              • வன்னி மைந்தன் –
                Posted in உலக செய்திகள்

                ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

                ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

                ரசியா நட்டு இராணுவத்தினர் உக்கிரேன் மீது பெரும் போர் ஒன்றை தொடுத்து வருகின்றனர்


                இவர்களின் இந்த இராணுவ நகர்விற்கு தலைமை வகித்து வந்த முக்கிய மேயர் ஜெனரல் தரத்தை
                சேர்ந்த Russian Major General Roman Kutuzov iதளபதி Popasna பகுதியில் மேற்கொள்ள பட்ட உக்கிரேனின் தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளார்

                இவருடன் மிக பெரும் மூன்றாவது முக்கிய இராணுவ அதிகாரிகள் உக்கிரேன் இராணுவத்தால் படு கொலை செய்ய பட்டுள்ளனர்

                ரசியா இராணுவத்தின் மிக முக்கிய தாக்குதல் மூளையாக செயல் பட்டு வந்த Russian Major General Roman Kutuzov படுகொலை ரசியா இராணுவத்தில் உளவியலில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

                எனினும் இதற்கு பதிலடியாக ரசியா இராணுவத்தினர் உக்கிர தாக்குதல்களை உக்கிரேன் மீது மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                பரம எதிரியாக விளங்கும் உக்கிரேன் தனது முதல் நிலை எதிரிகளிடம் இருந்து ஏவுகணைகளை பெற்று தாக்குதல் நடத்தி வருகிறது

                ரசியாவை வீழ்த்தும் நோக்குடன் ரசியா எதிரிகளான அமெரிக்கா பிரிட்டன் தொடராக ஏவுகணைகளை வழங்கிய வண்ணம் உள்ளன

                பல் குழல் ஏவுகனை செலுத்திகள் முன்னேறி வரும் ரசியா இராணுவத்தினருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

                ரசியா இராணுவ அதிகாரி படுகொலை

                உலகில் முதல் வல்லரசாக விளங்கிய சோவியத் ரசியா உக்கிரேனில் இடம்பெற்று வரும் இந்த நூறு நாள் போரில் , ரசியாவின் ஆயுத பாலத்தின் மீதும் அந்த நாட்டு இராணுவத்தின் பலத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது

                ராசியா அதிபருக்கு மிக நெருக்கமான நம்பிக்கை தரும் ஒருவராக விளங்கி வந்த Russian Major General Roman Kutuzov மரணம்
                ரசியா ஜனாதிபதி பிளாடிமீர் புட்டீனுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                உக்கிரேன் நாட்டின் இராணுவ தலைமையகம் ரசியா நாட்டின் இராணுவ தளபதியின் மரணத்தை உறுதி செய்துள்ளதுடன் அவர் இறந்து கிடக்கு காட்சிகளையும் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தி வருகிறது

                அமெரிக்கா உளவுத்துறையினர் வழங்கிய துல்லியமான உளவு தகவலின் அடிப்படையில் ரசியாவின் முக்கிய தாக்குதல் மூளையாக செயல் பட்டு வரும் இவ்வாறான இராணுவ உயர் அதிகாரிகள் படுகொலை செய்ய பட்டு வருகின்றனர்

                ரசியாவின் இராணுவ நகர்வுகள் அவர்களின் முக்கிய ஆயுத தளபாட நகர்வுகளை செய்மதி ஊடாக கண்காணிக்கும் அமெரிக்க்கா இராணுவம் உக்கிரேன் இராணுவத்தினருக்கு வழங்கியா பின்னர் இராணுவம் இந்த தேடி அழிக்கும் தாக்குதலில் நடத்தியுள்ளது

                பிரிட்டன் அமெரிக்கா வழங்கிய குறும் தூர ஏவுகணை செலுத்திகள் ஊடான இந்த தாக்குதல்கள் ரசியாவை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது ,அப்படி என்றால் ரசியா

                இராணுவம் முக்கிய தாக்குதல் நிலைகளுக்குள் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவை உள்ளடக்குமா என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது

                அதற்கான வலிந்து தாக்குதல்களை தீவிரமாக பிரிட்டன் அமெரிக்கா திட்டம் போட்டு நகர்த்தி செல்கின்றன

                இவ்வகையான தாக்குதல் போர் மூன்றாம் உலக போர்

                ஒன்றை நேரடியாக விரைந்து உருவாக்கும் சாத்தியங்களை அதிகரித்து செல்வதாக எதிர் பார்க்க படுகிறது

                • வன்னி மைந்தன் –
                  Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                  வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                  வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                  வடகொரியா நாடானது தற்போது குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளது


                  தென் கொரியா கடல் பகுதியில் ,தென்கொரியா இராணுவம் மற்றும் அமெரிக்கா படைகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது

                  தென் கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,குறித்த ஏவுகணைகள் நான்கு நிலைகளில் இருந்து வட கொரியா ஏவி சோதனை புரிந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

                  வட கொரியா ஏவிய இந்த குறும் தூர ஏவுகணையின் வீச்சு எல்லை 110 முதல் 670 கிலோ மீட்டர் ஆகும் என தென்கொரியா தெரிவித்துள்ளது


                  எனினும் வடகொரியா இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக எதனையும் அறிவிக்கவில்லை

                  வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வந்த பொழுதும் ரொக்கட் கிங் அடங்குவதாக தெரியவில்லை

                  அவர் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்திய வண்ணம் உள்ளார் ,

                  தமது நாட்டை எதிரி இராணுவத்திடம் இருந்து பாதுகாத்து கொள்ள, வேண்டுமெனின் எமக்கு இது போன்ற ஏவுகணை சோதனைகள் அவசியம் என வடகொரியா இராணுவம் அடித்து கூறுகிறது

                  வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

                  உலக நட்டு தலைவர்களதும் ,உலக சண்டியர்களின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி வருகிறார் ரொக்கட் கிங்

                  மத்திய கிழக்கு நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் அமெரிக்கா போரை நடத்தி தோற்று போயுள்ளது ,தற்போது தென் ஆசியா மீது தனது பார்வையை திருப்பியுள்ளது ,

                  வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் தற்போது அதிவேகமாக தமது ஆயுத உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன ,இது அமெரிக்கா வல்லாதிக்க சக்திகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                  வட கொரியா தொடராக நடத்தும் இவ்விதமான ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை மேலும் பீதியடைய வைத்துள்ளது .

                  • வன்னி மைந்தன் –
                    Posted in உலக செய்திகள்

                    உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

                    உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

                    உக்கிரேன் நாட்டின் மீது ரசியா நூற்றி இரண்டாவது நாளாக இராணுவ நடவடிக்கையை தொடர்ந்த வண்ணம் உள்ளது

                    கடந்த தினம் உக்கிரேன் தலை நகர் கீவ் நகர் மீது முதன் முதலாக ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது


                    இந்த ஏவுகணைகள் யாவும் மேற்குலக நாடுகள் வழங்கிய ஆயுத கிடங்கு ஒன்றை இலக்கு வைத்து நடத்த பட்டுள்ளது

                    கார் திருத்தும் இடம் என தெரிவித்து அங்கு வைத்து சேதமாக்க பட்ட டாங்கிகள் திருத்த

                    பட்டு வந்துள்ளது, அவ்விதமான ஆயுத கிடங்கு மீதே ரசியா இராணுவம் குரூஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளன

                    இவ்வாறு ரசியா இராணுவத்தால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்றை தமது வான் காப்பு

                    படைகள் வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பபு அமைச்சு தெரிவித்துள்ளது

                    கருங்கடல் பகுதியில் ஐந்து ரசியா போர்க் கப்பல்கள் திடீரென குவிக்க பட்டுள்ளது என நாம் தெரிவித்தோம் அல்லவா


                    இந்த கப்பல்கள் திடீர் குவிப்பின் பின்னால் ரசியா பெரும் தாக்குதலுக்கு தயராகும் என தெரிவித்தோம் அல்லவா தற்போது அவை இடம் பெற்றுள்ளது

                    கோடை காலம் முடிவதற்குள் உக்கிரேன் போர் முடிவுக்கு வந்து விடும் என ரசியா தெரிவித்ததன் நோக்கம் இது தான் போலும்

                    மேற்குலக நாடுகள் தொடராக ஆயுதங்களை வழங்கி வருகின்றன ,அவர்களின் ஆயுத தொகுதிகள் யாவும் உக்கிரேனில் வைத்து அழிக்க படும் என ரசியா தெரிவித்துள்ளது

                    மேலும் மேற்குலக நாடுகள் வலிந்து போருக்கு தம்மை இழுத்து வருகிறது எனவும் அது அவர்களுக்கு சிறந்தது அல்ல எனவும் கடும் தொனியில் தெரிவித்துள்ளது

                    உக்கிரேனில் ஆயுத கிடங்குகளை அழித்த ரசியா

                    எதிரிகள் தம்மை வம்புக்குக்கு இழுத்தால் எதிரி கோட்டைகள் தகரும் என ரசியா காட்டமாக தெரிவித்துள்ளது

                    எதிரி நாடான உக்கிரேன் தலை நகர் தற்போது ரசியாவின் நேரடி தாக்குதல் எல்லைக்குள் உள்ளாக்க பட்டுள்ளது ,வரும் நாட்களில் அகோர தாக்குதல்

                    உக்கிரேன் தலை நகர் கீவ் மீது மேற்கொள்ள பட போகிறது என்பதற்கு இந்த திடீர் ஏவுகணை நேரடி தாக்குதல்கள் கட்டியம் இடுகின்றன

                    அப்படி என்றால் உக்கிரேன் முழுவதுமாக உக்கிர தாக்குதலை ரசியா இராணுவம் நடத்த போகிறது ,இங்கு இதுவரை பாவிக்க படாத ,புதிய வகை ஆயுதங்களை ரசியா

                    பாவனைக்கு உட்படுத்த பட போகிறது, அப்படி என்றால் பெரும் பேரழிவை உக்கிரேன் சந்திக்க போகிறது என்பதே கள நிலவரமாக உள்ளது.

                    • வன்னி மைந்தன் –
                      Posted in உலக செய்திகள்

                      டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் கொலை

                      டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

                      உக்கிரேன் மீது பாரிய இராணுவ படையெடுப்பை மேற்கொண்டு வரும் எதிரி படைகள் மீது உக்கிரேன் அரச இராணுவம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியால மேற்கொண்ட தாக்குதல்களில் மட்டும்

                      ஐந்து டாங்கிகள் 13 armoured combat vehicles, 8 UAVs, and 23 pieces of automotive equipment

                      மற்றும் எரிபொருள் பவுசர்கள் இவற்றுடன் 100 ரசியா இராணுவத்தினரும் படு கொலை செய்ய பட்டுள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தகவல் வெளியிட்டுள்ளது

                      நூற்றி ஒரு நாட்களை கடந்து பயணிக்கும் இந்த கொடிய போரில் தாம் வெற்றியை தம தாக்கி வருவதாக உக்கிரேன் அரச இராணுவத்தினர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்

                      முன்னேறி வரும் ரசியா டாங்கிகள் பலமாக அழிக்க பட்டு வருகிறது ,அந்த போர் ஆயுத

                      வண்டிகளில் பயணிக்கும் இளம் வயதுடைய ரசியா எதிரி படைகளும் பலியாகி சிதறி கிடக்கும் காட்சிகள் வெளியிட பட்டு வருகின்றன

                      துருக்கிய இராணுவத்தின் உளவு விமானங்களின் துல்லியமான களமுனை காட்சிகள் ஊடாகவே உக்கிரேனிய அரச இராணுவத்தினர் ரசியா டாங்கிகள் மற்றும் அதன் இராணுவம் மீது துல்லியமான தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளன

                      உக்கிரேன் போர்க் களத்தில் ரசியா எதிரி படைகள் பலமான இழப்புக்களை சந்திக்க துருக்கிய தயாரிப்பான ஆள் இல்லாத உளவு விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது

                      டாங்கிகளுடன் 100 ரசிய படைகள் படுகொலை

                      இதனால் என்னவோ உக்கிரேனுக்கு குறித்த உளவு விமானங்களை வழங்க வேண்டாம் என துருக்கியை ரசியா அரசு வேண்டி நின்றது

                      இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசியா டாங்கிகளை தாம் அழித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு புள்ளி விபாரங்களுடன் அதன் வகைகளை குறிப்பிட்டுள்ளது

                      இந்த டாங்கிகள் யாவும் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் டாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் மூலம் அழிக்க பட்டுள்ளமையும் ,அதன் திறம்பட்ட தாக்கும் திறன் இந்த படைக்கல இழப்பின் ஊடாக உலகத்திற்கு காண்பிக்க பட்டுள்ளது

                      உக்கிரேன் கள முனையில் ரசியாவின் டாங்கி படையின் முன்நகர்வு அளப்பரிய ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிட தக்கது

                      • வன்னி மைந்தன் –
                        Posted in உலக செய்திகள்

                        ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

                        ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

                        உக்கிரேன் கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வான் வழி தாக்குதல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த எதிரி விமனங்கள் நான்கை தமது வான் எதிர்ப்பு படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் அரச இராணுவம் அறிவித்துள்ளது

                        இந்த எதிரி விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த பொழுது ,தமது ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது

                        உக்கிரேன் மீது எதிரி படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இந்த தாக்குதல்களில் எதிரிகளின் போர் விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது

                        இவர்களின் துல்லியமான தாக்குதல் ஊடாகவே உக்கிரேன் அரச இராணுவத்தினருக்கு ரசியா போர் விமானங்களால் பாரிய சேதங்களை ஏற்படுத்த பட்டு வருகிறது

                        இதுவரை முப்பத்தி ஓராயிரத்து ஐநூறு ரசியா எதிரிகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது

                        நூறு நாட்களை கடந்து தொடரும் போரில் இரு தரப்புக்கும் பலத்த ஆளணி மற்றும் ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளது

                        மேலும் இரு நாடுகளின் பொருளா தாரத்திலும் பலத்த அடி வீழ்ந்துள்ளது ,ஆனால் அதனை கருத்தில் கொள்ளாது போரில் மட்டும் நாட்டம் காட்டிய வண்ணம் போரை நடத்திய வண்ணம் உள்ளனர்

                        ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்

                        இந்த கொடிய போரினை தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற் கொள்ள பட்டு வருகிறது பொழுதும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் தொடர் ஆயுத உதவிகளுடன் உக்கிரேன் பெரும் எதிர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது

                        உக்கிரேனில் எதிரியாக விளங்கும் ரசியா இராணுவம் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே போரை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளன

                        அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகள் மூலம் ரசியா விமானம் சுட்டு வீழ்த்த படுதல் தொடர்நது வருகிறது ,இது எதிரி இராணுவத்தினருக்கு பெரும் படைக்கல இழப்பை ஏற்படுத்தியுள்ளது

                        இது மேற்குலக வல்லரசுகளின் பழி வாங்கும் தாக்குதல் என உளவுத்துறை ஊடகங்கள் சாடி வருகிறது ,

                        அமெரிக்கா அதன் நேச நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் உக்கிரேன் இந்த போரில் தோல்வியை தழுவும் என்பதே நமது அவதானிப்பாக உள்ளது

                        எதிர் வரும் நாட்களில் எதிரி இராணுவம் கெமிக்கல் தாக்குதல்களை நடத்த கூடும் என அச்சம் மேலோங்கி காணப்படுகிறது

                        • வன்னி மைந்தன் –
                          Posted in உலக செய்திகள்

                          ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

                          ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்கா

                          கிரேக்கத்துக்கு அருகில் பயணித்து கொண்டிருந்த ஈரான் நாட்டின் எண்ணெய் கப்பல்

                          ஒன்றை அமெரிக்கா இராணுவத்தினர் ரஷியா நாட்டு மாலுமிகளுடன் இணைத்து கப்பலை கடத்தியுள்ளனர்

                          இந்த கப்பலில் பத்தொன்பது ரஷியா நாட்டு மாலுமிகள் பணியாற்றி வருகின்றனர்

                          ,அவர்களுடன் இந்த கப்பல் அமெரிக்காவுக்கு கடத்தில் செல்ல படுகிறது

                          அமெரிக்காவினது இந்த திடீர் கப்பல் கடத்தல் நடவடிக்கையால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

                          ,அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ,இஸ்ரேல், கப்பல்களை ஈரான் வரும் நாட்களில் கடத்தலாம் என எதிர்பார்க்க படுகிறது

                          இவ்விதமான சம்பவங்கள் மூன்றாம் உலக போருக்கு அடித்தளம் இடுவதாக பார்க்க படுகிறது

                          ரஷியா நாட்டவருடன் கப்பலை கடத்திய அமெரிக்காவின் செயல் பாடு உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

                          இஸ்ரேல் வாழங்கிய உளவு தக்வாலின் அடைப்படையில் கிரேக்க நாட்டு கடல் பகுதியில் வைத்து ஈரான் கப்பல் ரைஸியா மாலுமிகளுடன் சிறை பிடிக்க பட்டுள்ளது

                          அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட ஈரானின் எண்ணெய் கப்பலும் அதில் பணியாற்றிய ரசியா மாலுமிகளும் அமெரிக்காவினால் விடுவிக்க படுவார்களா என்ற அச்சம் நிலவுகிறது

                          இவ்வாறு சிறை பிடிக்க பட்ட ரசியா மாலுமிகளிடம் அமெரிக்கா உளவுத்துறையினர் கடுமையான விசாரணைகளை மேற் கொண்டு இருப்பார்கள் ,அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாக்க பட்டு இருக்கலாம்

                          ரசிய நாட்டவருடன் அமெரிக்காவினால் சிறை பிடிக்க பட்ட இந்த கப்பலை அடுத்து ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் முறுகல் பெற்றுள்ளதுடன் கிரேக்க நாட்டு கப்பல்களை ஈரான் விரைவில் சிறை பிடிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                          பிரிட்டன் கப்பல்களை ஈரான் சிறை பிடித்த நிலையில் ஈரானின் கப்பல்களை பிரிட்டனும் மறுதினம் சிறை பிடித்தது அது போன்ற நிகழ்வுகளும் இங்கே இடம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

                          அமெரிக்கா மேற்கொண்ட கப்பல் சிறை பிடிப்பால் உலக சந்தையில் மாசாகு எண்ணெய் விலை அதிகரித்துள்ளது ,அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம் பெறும் இந்த நேரடி மிரட்டும் போர் விரைவில் உலக சண்டையாக உருமாற்றம் பெறும் நிலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                          ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் முக்கிய இராணுவ நிலைகள்மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலால் நூற்றி இருபது இராணுவம் மன நிலை பாதிப்புக்கு உள்ளாகி இருந்தமை இங்கே நினைவ கூற தக்கது – வன்னி மைந்தன் –

                            Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

                            சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

                            சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

                            சீனா மற்றும் ரசியா இணைந்து ஜப்பான் நாட்டின் எல்லை அருகே , போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர் ,

                            இந்த போர் ஒத்திகை நடவடிக்கையில் சீனா ரசியா போர் விமானங்கள் ,கப்பல்கள்
                            பறந்து பெரும் தாக்குதல் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன

                            சீனா ரசியாவின் இந்த திடீர் கூட்டிணைந்த செயல் ,நாடுகளுக்கு இடையில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                            தாய்வான் மீது இராணுவ தாக்குதலை சீனா தொடுக்கலாம் என்ற
                            நிலையில். இந்த போர் ஒத்திகை இடம்பெற்று வருகின்றமை பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

                            சீனா ரசியா போர் ஒத்திகை – கடுப்பாகும் அமெரிக்கா

                            ரஷியா உக்கிரேன் மீது மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கை போன்று சீனாவும் ரசியாவினது ஆதரவுடன் போரை தொடுத்து விடுமோ என்ற அச்சத்தில் அமெரிக்கா கொதிக்கிறது

                            கொரியா பகுதியில் ஜப்பான்,அமெரிக்கா தென்கொரியா என்பன இணைந்து தொடர் போர் ஒத்திகையில் ஈடுத்து வருகின்றன

                            அவ்விதமான நாடுகளுக்கு இடையிலான நீண்ட நாட்கள் பகைமைகள் மூன்றாம் உலக போருக்கு வழிவகுக்கலாம் என்ற அச்சமே தற்போது மேலோங்கியுள்ளது .

                            பசுபிக் பகுதியில் அமெரிக்கா மேற்கொள்ளும் கூட்டினைந்த நாடுகளின் இராணுவ போர் ஆதிக்க பொறிமுறையை உடைத்து தமது பலத்த நிரூபிக்க வேண்டிய நிலையில் சீனா ,ரசியா உள்ளன ,

                            இவைகளே எதிர் காலத்தில் ஏற்பட போகும் மூன்றாம் உலக யுத்தத்தின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகளாக மாற்றம் பெற போகின்றன

                            அதற்கு அமைவாக நட்புடன் கூடிய பேரம் பேச்சுக்கள் ஊடான இராணுவ கூட்டணியை ரசியா சீனா உருவாக்கி வைத்துள்ளன ,

                            இதில் எந்த ஒரு நாட்டுக்கு மூன்றாம் நாடு ஒன்றினால் தாக்குதல் அல்லது பாதிப்பு ஏற்பட்டால் இராணுவ ஒத்துழைப்பை இரு நாடுகளும் ஒன்றுக்கு ஒன்று வழங்கும்

                            அவ்விதமான கூட்டு நகர்வின் ஊடாகவே இந்த போர் பயிற்சிகளில் சீனா ரசியா நாடுகள் இணைந்து நடத்திய வண்ணம் உள்ளன

                            சீனா ரசியா இந்த போர் ஒத்திகையை நடத்திய வண்ணம் இருக்க சீனாவின் ஆதரவுடன் வடகொரியா தனது ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்தி வருகிறது

                            ,வட கொரியா ஏவுகணைகள் அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வரை சென்று தாக்கும் திறன் கொண்டதாக அமைய பெற்றுள்ளது

                            பறந்து விரிந்து செல்லும் சீனா ரசிய போர் முறமை அமெரிக்காவுக்கு பெரும் நெருக்கடியான ஒன்றாகவே எதிர் காலத்தில் மாற்றம் பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – வன்னி மைந்தன் –

                            • வன்னி மைந்தன் –
                              Posted in உலக செய்திகள்

                              அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை

                              அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை

                              அமெரிக்கா சூப்பர் மார்க்கெட்டில் 10 பேர் சுட்டுக் கொலை

                              அமெரிக்கா நியுயார்க் பகுதியில் உள்ள சூப்ப மார்க்கட் ஒன்றுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர் திடிரென துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்

                              இதில் சம்பவ இடத்தில பத்து பேர்பலியாகினர் , மேலும் சிலர் காயமடைந்துள்ளனர்

                              ,ஆயுத தாரியை கைது செய்த போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

                              சமீப காலங்களாக இவ்விதமான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது

                                Posted in உலக செய்திகள்

                                சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்

                                சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்

                                சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் ,அங்குள்ள எண்ணெய் வயல்களுக்குள் நுழைந்து எழுபது தாங்கிகளில் ஆயில்கள் மாற்று எரிபொருளை திருடி சென்றுள்ளனர்

                                பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்துள்ள

                                அமெரிக்கா இராணுவம் ,இவ்விதமான திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருவதும் ,இவ்விதமாக


                                திருடும் எண்ணெய்களை கப்பல்கள் மூலம் கடத்தி செல்வதும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  அமெரிக்கா இராணுவ தாளத்தை வெளியிட்ட ஈரான் – முறுகல் உச்சம்

                                  அமெரிக்கா இராணுவ தாளத்தை வெளியிட்ட ஈரான் – முறுகல் உச்சம்

                                  ஈரான் சமீபத்தில் ஏவிய செய்மதி மூலம் அமெரிகாவின் கடற்படை தளத்தை படம் பிடித்து வெளியிட்டுள்ளது

                                  இந்த படத்தில் பகைரனில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் ஐந்தாவது கடற்படை

                                  தளத்தை அது வெளியிட்டு அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது
                                  இது நாடுகளுக்கு இடையில் பெரும் முறுகளை தோற்றுவித்துள்ளது