Tag: திருடி
கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது
கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது
கோயில் ஸ்டுடியோ உபகரணங்களைத் திருடியதற்காக நபர் கைது ,படுகாவில் உள்ள மடுலுவாவ ஸ்ரீ சுதர்மராம கோயிலில் உள்ள ஒலிப்பதிவுக் கூடத்தில்
புகுந்து, சுமார் ரூ. 1.5 மில்லியன் மதிப்புள்ள கணினிகள் மற்றும் ஒலிப்பதிவுக் கருவிகளைத் திருடிய சந்தேக நபர், படுகா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோயிலைச் சேர்ந்த துறவி ஒருவர்
கோயிலைச் சேர்ந்த துறவி ஒருவர் அளித்த புகாரின் பேரில் பொலிஸார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். மேற்கு மாகாண புலனாய்வுப்
பிரிவுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
படுகாவின் வத்தரேகா, ஜெயமுத்துகமவைச் சேர்ந்த, இரண்டு பிள்ளைகளின் தந்தையான 36 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் போது, திருடப்பட்ட உபகரணங்களை மற்றொரு நபருக்கு விற்றதை சந்தேக நபர் ஒப்புக்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், திருடப்பட்ட அனைத்து ஒலிப்பதிவுக் கருவிகளையும் வாங்குபவரிடமிருந்து அதிகாரிகள் மீட்டனர்.
சந்தேக நபர்
மேலும், சந்தேக நபர் ‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெத்தம்பெட்டமைன்) என்ற போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பதாகவும், கைது
செய்யப்பட்டபோது அவரிடமிருந்து அந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் ஹோமகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், பதுக்க பொலிசார் மேற்கொண்டு விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஈரானின் மறைந்த உச்ச தலைவர் கமெனிக்கான இறுதிச் சடங்கு ஜூலை 4 அன்று தொடங்கி, ஜூலை 9 அன்று நல்லடக்கம் நடைபெறும்.

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
புதிய கையடக்கத் தொலைபேசி எனத் தவறாகக் கருதி லங்கம பேருந்தொன்றில் நடத்துனரின் பயணச்சீட்டு இயந்திரம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண்ணை விடுவிக்குமாறு காலி மேலதிக நீதவான் லக்மினி விதானகமகே உத்தரவிட்டார்.
இமதுவ ஹவ்பே பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இமதுவ ஹவ்பே பகுதியில் வசிக்கும் இந்தப் பெண், ஹவ்பேயில் அமைந்துள்ள வீட்டுக்குச் செல்வதற்காக அண்மையில் இமதுவவிலிருந்து பேருந்தில் ஏறியுள்ளார்.
கைப்பேசி என நினைத்து டிக்கெட் மெஷினை திருடிய பாட்டி
அந்த பேருந்து அக்குரஸ்ஸ டிப்போவிற்கு சொந்தமான பேருந்தாகும்.
குறித்த வயோதிப பெண் பேருந்தில் ஏறியதும், கண்டக்டர் டிக்கெட் இயந்திரத்தை இருக்கையில் வைத்துவிட்டு, தண்ணீர் குடிக்க சாரதியின் இருக்கைக்குச் சென்றார்.
அப்போது பேருந்தில் சில பயணிகள் மட்டுமே இருந்துள்ளனர்.
பேருந்தில் ஏறியதும் இருக்கைக்கு பக்கத்து இருக்கையில் டிக்கெட் இயந்திரம் இருப்பதை பார்த்த வயோதிப பெண், நவீன கைப்பேசி என நினைத்து அதனை வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.
வீட்டிற்குச் சென்றதும் புதிய கைப்பேசியில் அழைப்புகளை மேற்கொள்ள எண்களை டயல் செய்தாள் ஒவ்வொரு முறையும் அந்த எண்களை டயல் செய்யும் போது அழைப்புகளுக்கு பதிலாக பேருந்து டிக்கெட்டுகள் வெளி வந்தன.
இது கையடக்கத் தொலைபேசியல்ல, பயணச்சீட்டு இயந்திரம் என்பதை அறிந்து மறுநாள் காலி பேருந்து நிலையத்திற்கு கொண்டு வந்து அங்கிருந்த அதிகாரி ஒருவரிடம் கொடுத்துள்ளார்.
சம்பவத்தை அறிந்த அதிகாரி, அவரை தடுத்து நிறுத்தி, பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் சந்தேக நபரை இமதுவ பொலிஸ் சார்ஜன்ட் பிரேமசிறி காலி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தார்.
சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
சிரியாவில் 70 வண்டிகளில் ஒயில் திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
சிரியாவில் உள்ள அமெரிக்கா இராணுவத்தினர் ,அங்குள்ள எண்ணெய் வயல்களுக்குள் நுழைந்து எழுபது தாங்கிகளில் ஆயில்கள் மாற்று எரிபொருளை திருடி சென்றுள்ளனர்
பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு நாடுகளை ஆக்கிரமித்துள்ள
அமெரிக்கா இராணுவம் ,இவ்விதமான திருட்டு வேளைகளில் ஈடுபட்டு வருவதும் ,இவ்விதமாக
திருடும் எண்ணெய்களை கப்பல்கள் மூலம் கடத்தி செல்வதும் சர்ச்சைகளை கிளப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது









