Tag: முதலை
முதலை தாக்குதலில் ஒருவர் காயம்
முதலை தாக்குதலில் ஒருவர் காயம்
கல் ஓயாவில் முதலை தாக்குதலில் தனது நண்பரைக் காப்பாற்றிய மீட்புப் பணியாளர் உயிரிழந்தார்.
அக்கரைப்பற்று, பெரியபள்ளக்காடு
அக்கரைப்பற்று, பெரியபள்ளக்காடு, கல் ஓயா ஆற்றில் முதலை தாக்குதலில் இருந்து தனது துணைவரைக் காப்பாற்ற முயன்ற ஒருவர் தானும் அதற்கு பலியாகிவிட்டார்.
ஒரு படகு எடுக்க ஆற்றின் குறுக்கே மற்றொரு நபருடன் நீந்திக் கொண்டிருந்தபோது, தண்ணீரில் இருந்து வெளிவந்த ஒரு
முதலை அவர்களில் ஒருவரை நோக்கி பாய்ந்து அவரை நீருக்கடியில் இழுத்துச் சென்றது.
சிறிது நேரம் கழித்து, முதலை
முதலையை ஒரு தடியால் அடித்து தனது நண்பரைக் காப்பாற்றிய மற்றொரு நபர். சிறிது நேரம் கழித்து, முதலை மீட்பவரை நோக்கித் திரும்பி அவரை நீருக்கடியில் இழுத்துச் சென்றது.
பாதிக்கப்பட்ட ஏ.கே.ராமீஸ் (37) ஒலுவில் பகுதியைச் சேர்ந்தவர். காணாமல் போன நபரைத் தேட கடற்படை டைவர்ஸ் அனுப்பப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று காவல் நிலையப் பொறுப்பதிகாரி (ஓஐசி) சுனில் கமகே தெரிவித்தார்.
வவுனியா வீட்டில் 9 அடி முதலை
வவுனியா வீட்டில் 9 அடி முதலை
வவுனியா கொக்குவெளி பகுதியில் உள்ள வீடொன்றின் வளவிலிருந்து 9 அடி நீளமான முதலையொன்று வனஜீவராசிகள் திணைக்களத்தால் மீட்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் புதன்கிழமை (4) அவ்வீட்டுக்கு பின்புறமுள்ள தோட்டப்பகுதியில் முதலை ஒன்று இருந்ததை வீட்டின் உரிமையாளர் அவதானித்துள்ளார்.
அவர் அதனை துரத்த முற்பட்டபோது, அக்காணியில் உள்ள கைவிடப்பட்ட கிணற்றில் முதலை வீழ்ந்துள்ளது.
இதனையடுத்து அவர் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதன் பின்னர், இன்றைய தினம் (5) அப்பகுதிக்குச் சென்ற வனஜீவராசிகள் திணைக்களத்தினர் காணியில் அமைந்துள்ள கிணற்றிலிருந்து முதலையினை பிடித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதலையிடம் சிக்கிய நபர்
முதலையிடம் சிக்கிய நபர்
முதலையிடம் சிக்கிய நபர் பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முதலைப் பாறை பகுதியில் நபர் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
நேற்று (28) மாலை முதலைப் பாறை பகுதியில் உள்ள தூவ ஆற்றில் எருமைகளை அழைத்துச் சென்ற நபரை முதலை இழுத்து சென்றதாக பொத்துவில் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பசரச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 41 வயதுடைய நபரே சம்பவத்திற்கு முகங்கொடுத்துள்ளார்.
காணாமல் போன நபரை தேடும் நடவடிக்கையில் பொலிஸாரும் பானம கடற்படை முகாமின் அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.
முதலை தாக்குதலில் ஒருவர் பலி
முதலை தாக்குதலில் ஒருவர் பலி
முதலை தாக்குதலில் ஒருவர் பலி ,இலங்கை கதிர்காம பகுதியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் முதலை தாக்குதலில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு முதலை தாக்குதலில் பலியான வரை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மெனிக் கங்கா பகுதியில் நீராடச் சென்ற நபரை இவ்வாறு முதலை தாக்கி பலியாகியுள்ளார்.
முப்பதிலிருந்து 35 வயது மதிக்கத்தக்க நபரை முதலில் தாக்கிய யானை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
முதலில் இழுத்துச் செல்லப்பட்ட இவரது சடலத்தை,தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
மீட்பு நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறுகளில் குளிக்கின்ற நபர்கள் அல்லது ஆற்றுங்கள் அருகில் செல்கின்ற நபர்கள் பதுங்கி இருக்கின்ற முதலையும் கடிக்கு இறையாகி பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இவ்வாறான சம்பவங்களினால் மக்கள் அந்த பகுதியில் பதட்டத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் 30 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க வாலிபரே இந்த முதலைக்கு இறைக்கு உள்ளானதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வாலிபர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு பலியாகி உள்ள சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளது நடவடிக்கையில் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள் அச்சுறுத்தும் முதலை
அச்சத்தில் மட்டக்களப்பு மக்கள் அச்சுறுத்தும் முதலை
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடுமையான வெயிலுடனான வானிலை நீங்கி மழை பெய்துவரும் நிலையில் மக்கள் குடியிருப்புகளை நோக்கி முதலைகள் வருகை தரும் நிலையில் மக்களை அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மக்கள் அதிகளவாக வாழும் கூழாவடி பகுதிக்குள் நுழைந்த முதலையொன்று மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதிக்குள் நீர்நிலைகள் இல்லாத போதிலும் முதலையொன்று மக்கள் பகுதிக்குள் நுழைந்ததனால் பெரும் பதற்ற நிலைமையேற்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதனை அப்பகுதியை சேர்ந்த மக்கள் பிடித்து அது தொடர்பான தகவல்கள் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து குறித்த முதலையினை கொண்டுசெல்லும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
தற்போது மழையுடனான வானிலை நிலவும் நிலையில் முதலைகளின் நடமாட்டம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Featured
நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி பலி
நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி பலி
கலங்குட்டிவ ஆற்றில் நீராடச் சென்ற பெண் ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்துள்ளார் என மெகலேவ பொலிஸார் தெரிவித்தள்ளனர்.
லிகொலவெவ, சியம்பலங்காமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் ஆற்றில் நீராடச் சென்ற போதே இச்சம்பவம் நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதேசவாசிகள் முதலையிடமிருந்து பெண்ணை மீட்டு தம்புத்தேகம வைத்தியசாலையில் சேர்த்த போதும் அவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது
முதலையிடம் சிக்கின சிறுவன்
முதலையிடம் சிக்கின சிறுவன்
களனி ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவனை முதலை இழுத்துச் சென்றுள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (16) கடுவெல பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
கடுவெல , வெலிவிட்ட புனித அந்தோனி வீதியை சேர்ந்த ஒன்பது வயதுடைய டிஸ்ன பெரேரா என்ற சிறுவனையே இவ்வாறு முதலை இழுத்துச் சென்றுள்ளது.
குறித்த சிறுவன் தனது பாட்டியுடன் குளிப்பதற்கு வந்துள்ளதாகவும் பாட்டி துணி துவைக்கும்வரை சிறுவன் நீராடிக் கொண்டிருந்த போது திடீரென முதலை வந்து சிறுவனை கௌவ்விக்கொண்டு போயுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கடுவெல பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் விரைந்த போது சிறுவன் முதலையின் வாயில் சிக்கிக் கொண்டிருப்பதையும் பலமுறை அந்த முதலை ஆற்றில் மேல் பரப்பிற்கு வந்து சென்றுள்ளதையும் கண்டுள்ளனர்.
ஆற்றில் குளிக்க சென்றவரை பிடித்து தின்ற முதலை
ஆற்றில் குளிக்க சென்றவரை பிடித்து தின்ற முதலை
தமிழகம் பழைய குளிதம் ஆற்று பகுதியில் குளிக்க சென்ற வாலிபரை அங்கு வந்த முதலை இழுத்து சென்று கொன்று திண்றுள்ள சம்பவம் பெரு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
முதலையினால் கொலை செய்ய பட்ட வாலிபர் சடலத்தய் மீட்கும் பணியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளனர் .
பல மணி நேர போராட்டத்தின் பின்னர் சடலம் மீட்க பட்டுள்ளது .
வாலிபனை முதலை இழுத்து செல்லும் காட்சிகள் ,சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளது .
இந்த சம்பவத்தை அடுத்து ,குறித்த குளத்தில் மக்கள் குளிக்க அதிரடியாக தடை விதிக்க பட்டுள்ளது.
முதலையுடன் வீதியில் நடக்கும் பெண்
முதலையுடன் வீதியில் நடக்கும் பெண்
இளம் பெண் ஒருவர் வீதியில் முதலையுடன் நடக்கும் காட்சிகள் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த பெண் முதலையை ,கழுத்தில் கட்டி வீதியால் நடந்து செல்லும் காட்சிகள் பார்ப்பவர்களை மிரள வைத்துள்ளது.
மனிதர்களை வேட்டையாடும் கொடிய விலங்கான , முதலையுடன் பெண்
இவ்வாறு வீதியில் நடந்து செல்லும் காட்சிகள் ,தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .
வீட்டுக்குள் நுழைந்த முதலை – தப்பிய குடும்பம்
வீட்டுக்குள் நுழைந்த முதலை – தப்பிய குடும்பம்
அமெரிக்கா புளோரிடா பகுதியில் வீடு ஒன்றுக்குள் பெரிய முதலை ஒன்று நுழைந்துள்ளது
இந்த முதலை நுழைவை அடுத்து அங்கு நின்ற மக்கள் பதறி ஓடினர் ,பின்னர் அந்த
முதலை விரட்ட பட்டு அருகில் உள்ள நீர் நிலைக்குள் விரட்டியடிக்க பட்டது
முதலையின் தாக்குதல் இலக்கில் இருந்து குறித்த வீட்டார் தப்பித்தது கடவுள் செயல்
என சமூக வலைத் தளங்களில் மக்கள் கருத்துரைத்து வருகின்றனர்
கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலை
கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலை
முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு உள்ளூர் நிர்வாகம் அறிவித்தது.
கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலைக்கு விடிவு
கழுத்தில் சிக்கிய டயருடன் 6 ஆண்டுகளாக அவதிப்பட்ட முதலைக்கு விடிவு
இந்தோனேசியாவில் சுலாவேசி மாகாணம் பலூ நகரில் உள்ள ஆற்றில் வாழ்ந்து வரும் ஒரு முதலையின் கழுத்தில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இருசக்கர வாகனத்தின் டயர் சிக்கியது. முதலை வளரும் போது டயர் கழுத்தை இறுக்கி முதலை இறக்க கூடும் என
மக்கள் அச்சப்பட்டனர். இதனால் முதலையின் கழுத்தில் சிக்கிய டயரை அகற்ற உள்ளூர் நிர்வாகம் பல்வேறு முயற்சிகளை எடுத்தது. ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த
முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்தது. முதலையின் கழுத்தில் இருந்து டயரை அகற்றும் நபருக்கு சன்மானம் வழங்கப்படும் என கடந்த 2020-ம் ஆண்டு உள்ளூர் நிர்வாகம் அறிவித்தது.
இருப்பினும், முதலை மீதுள்ள அச்சம் காரணமாக யாரும் பெரிதாக அதில் ஆர்வம் காட்டவில்லை. முயற்சித்த ஒரு சிலருக்கும் தோல்வியே கிடைத்தது. இந்த நிலையில்
உள்ளூரை சேர்ந்த டிலி (வயது 35) என்ற விலங்குகள் நல ஆர்வலர் பிரத்யேக பொறி ஒன்றினை அமைத்து அதில் கோழியாக இரையாக வைத்து, முதலையை பிடித்தார்
. அதன் பின்னர் உள்ளூர் மக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களின் உதவியோடு முதலையின் கழுத்தில் இருந்து டயரை வெட்டி எடுத்தார். அதனை தொடர்ந்து முதலை மீண்டும் ஆற்றில் விடப்பட்டது.
கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை
கொழும்பு கடலில் முதலை – மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கை கொழும்பு கடல் பகுதியிகள் முதலைகள் உலவி வருவதால் மீனவர்கள் மற்றும்
மக்களுக்கு எச்சரிக்கை விடுக்க ப்ட்டுள்ளது
குறித்த கடல் பகுதியில் மக்கள் குளித்து வருகின்ற நிலையில் இந்த அவசர அறிவிப்பு விடுக்க பட்டுள்ளது
பாலத்தில் முதலை – பதறி ஓடிய மக்கள்
பாலத்தில் முதலை – பதறி ஓடிய மக்கள்
அமெரிக்காவில் Houston பிரதான வீதியில் உள்ள பாலம் ஒன்றின் மேலே பெரும் முதலை ஒன்று
படுத்து கிடந்துள்ளது ,இதனை கண்ணுற்ற மக்கள் பதறி அடித்து ஓடினர்
சம்பவம் அறிந்து விரைந்து வந்த போலீசார் ,வனத் துறையினர் முதலையை அங்கிருந்து அகற்றினர்
மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது
தமிழர் வீடுகளுக்கு முதலை விட்ட இராணுவம் – பதறி ஓடிய மக்கள்
தமிழர் வீடுகளுக்கு முதலை விட்ட இராணுவம் – பதறி ஓடிய மக்கள்
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தமிழர் வீடுகளுக்குள் இலங்கை அரச இராணுவத்தினர் முதலை விட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது
இந்த பகுதியில் குளங்கள் ,ஆறுகள்,ஏதும் இல்லாத நிலையில் இந்த முதலைகள் திடீரென வீடுகளுக்குள் நுழைந்துள்ளது,முதலை விடப் பட்ட பகுதிக்கு அருகில் இராணுவ முகாம்கள் உள்ளன
கொடிகாமம்,கிளிநொச்சி ,இயக்கச்சி பகுதியில் இந்த முதலைகள் விட பட்டுள்ளன ,வீட்டு தாவரத்தில் உறங்கி கொண்டிருந்த சிறு பிள்ளை ஒன்றை முதலை உண்ண விரைந்து வந்துள்ளது ,
இதனை கண்டு நாய் குரைத்து ஒலி எழுப்பிய நிலையில் சுதாகரித்து கொண்ட மக்கள் வீ,ட்டின் முற்ற பகுதியில் வந்த பொழுது முதலையை கண்டுள்ளனர்
நாயின் குரைத்து இருக்க விட்டால் அந்த சிசுவை முதலை தின்று இருக்கும் என பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் ,
ஊரடங்கு வேளையில் இராணுவத்தினர் ,வீடுகளுக்கு அருகில் இவ்வாறு முதலைகளை விட்டு செல்கின்றனர் ,
மதம் பிடித்த யானைகளை ஆனையிறவு ,ஊரியன் ,கண்டாவளை ,பகுதிகளில் இராணுவத்தினர் விட்டுச சென்றுள்ளனர்
,
இந்த யானைகள் மக்களின் பயன் தரும் மரங்கள் ,மற்றும் மக்களை அடித்து கொன்றுள்ள சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன .
- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

மக்கள் இந்த விடயங்களை வெளியில் கூற முடியாத நிலையில் அச்சத்தில் உறைந்துள்ளனர் ,
இறுதி போர் முடிவடைந்த நிலையில் தமிழர் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது


































