யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு

யாழ்ப்பாணத்தில் ஆண் சடலம் மீட்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

யாழ்ப்பாணம் பரித்துறை பகுதியில் போதைத்து அதிகம் பாவித்த காரணமாக உயிரிழந்த நிலையில் ,31 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளம் வயதில் அதிக போதைக்கு அடிமையாகி, அதற்கு உள்ளான நிலையில் இவர் மரணமாகி உள்ளதாக தெரிய வருகிறது.

சடலம் மீட்கப்பட்டு தற்பொழுது உடல் மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

யாழ்ப்பாணம் தமிழ் பகுதியில் அதிகரித்து வரும் போத வஸ்து கலாச்சரத்தினால் ,இவ்விதம் பல இளைஞர்கள் வழி தவறிய சென்று உயிரிழந்து வருவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இவ்விதம் அதிக போதைக்கு உள்ளான நிலையில் ,31 வயதில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட இந்த , இளம் வாலிபர் உடைய செயல் என்னவென்பது கூறுவதாக மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகத்துக்குள் போதைகளை புகுத்தி அதை பயன்படுத்த உள்ளாக்கி அதனூடாக படுகொலை நடவடிக்கை ஆரம்பித்துள்ளது, வெளியில் தெரியாத ஒரு இனப்படுகொலை தான் என பார்க்கலாம்.

எவ்வாறு தொடரும் இந்த மொழியில் தெரிய முடியாத இந்த இனப்படுகொலைகளை தடுக்க வேண்டுமாக இருந்தால் ,தமிழர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பொருள் ஆகிறது.

ஆகவே எமது கலாச்சார பத்திரமான யாழ்ப்பாணத்தில் இவ்விதமான மரணங்கள் தொடர்வதையும் சடலம் மீட்கப்படுவதை தடுக்க வேண்டுமாக இருந்தால், மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்பதாகவே இதன் ஊடாக பார்க்க முடிகிறது.

இறந்த சிறுமியின் உடலில் காயம்
Posted in இலங்கை செய்திகள்

இறந்த சிறுமியின் உடலில் காயம்

இறந்த சிறுமியின் உடலில் காயம்

இறந்த சிறுமியின் உடலில் காயம் உள்ளதாக ,மருத்துவமனை தெரிவித்து மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கேள்வியை எழுப்பி இருக்கிறது .

பாசறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 7 வயது சிறுமி ஒருவர் மரணம் ஆனதாக போலீசார் தெரிவித்தனர் .

குருத்த சிறுமி கடந்த தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ,சிறுமியை பரிசோதித்த வைத்தியசாலை அதிகாரிகள் இந்த மரணம் சந்தேகத்திற்கு இடமாக உள்ளதாக தெரிவித்தனர்.

குறித்த சிறுமி இறப்பதற்கு முன்னர் ஒரு வார காலமாக காய்ச்சல் மற்றும் சளி நோயினால் பீடிக்கப்பட்டு இருந்ததாகவும் ,அப்பொழுது அவரது உடலில் காயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனை எடுத்து இந்த 7 வயது சிறுமியின் உடலில் இந்த காயங்கள் எப்படி வந்தது..? ஏன் வந்தது என்பது தொடர்பாக ,விசாரணையை போலீசார் நடத்த வேண்டும் என்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனை அடுத்து சிறுமியின் சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதுடன் ,அவரது குடும்பத்தினர் மீது விசாரணை நடவடிக்கையை போலீச ஆரம்பித்துள்ளனர்.

அப்படி என்றால் இந்த செய்தியின் ஊடாக அவர்கள் சொல்ல வருவது அந்தச் செய்தி தானா என்பதுதான் விடயமாகிறது.

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்
Posted in இலங்கை செய்திகள்

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம்

வீழ்ந்த இடத்தில்இருந்தே வீறு கொண்டெழுவோம் ,தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் கவர்ச்சி அலைகளுக்குள் சிக்குண்டு கிடக்கும் புலம் பெயர் தமிழ்ச் சமூகத்தில்,

எங்கள் தாயகப் பாடல்களை மட்டும் இசைக்கும், அதை எங்கள் இளையோரிடையே எடுத்துச் செல்லும் ஒரு முன் மாதிரியான நிகழ்வு..,,,

விடியலின் விதைகள்
“கலை மாலை”
இம்மாதம் 10ம் திகதி,
மாலை 6 மணிக்கு,

Hazelwick school,
Crawley,
RH10 1SX

பாடசாலை மண்டபத்தில் நடைபெற உள்ளது.

அனுமதி இலவசம்

வாய்ப்புள்ளவர்கள் கலந்து கொள்ளவும்.

நிகழ்வின் இடைவேளை நேரம் “தன்னுரிமையும் தனியரசு” நூல் அறிமுக நிகழ்வும் இடம் பெறும்.

Select கத்தி முனையில் மாணவியை கடத்த முயன்றவர் கைது கத்தி முனையில் மாணவியை கடத்த முயன்றவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மாணவி கடத்தல் கத்தி முனையில்

மாணவி கடத்தல் கத்தி முனையில்

மாணவி கடத்தல் கத்தி முனையில் கத்தி முனையில் தாயாருடன் சென்ற மாணவியை கடத்த முயற்சித்த நபர் கைது செய்யபப்ட்டுள்ளார்.

அனுர ஆட்சியில் கடத்தல், கொலை கொள்ளை, ஊழல் துப்பாக்கிச் சூடு, கைதுகள் என தொடர்ச்சியாக அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது.

இந்நிலையில், கொழும்பு – கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் காரில் இருந்த தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி,

மாணவியை கடத்திச் செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

சந்தேக நபர் கடந்த 02 ஆம் திகதி அன்று கறுவாத்தோட்டம் மல்வீதி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளார்.

பின்னர் சந்தேக நபர் தாயையும் மாணவியையும் கத்தி முனையில் மிரட்டி காரை செலுத்திச் செல்லுமாறு தாயிடம் கூறியுள்ளார்.

இதன்போது தாயும் மாணவியும் காரில் இருந்து இறங்கி சத்தமிட்டு பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கார் ஒன்றில் ஏறி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் கறுவாத்தோட்டம் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில்,

சந்தேக நபர் கொழும்பு கொலன்னாவை பிரதேசத்தில் வைத்து புதன்கிழமை (07) கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வியாழக்கிழமை (08) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை 72 மணிநேரம் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கப்பம் கோரும் நோக்கத்தில் மாணவியை கடத்திச் செல்ல முயன்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மாணவியை கடத்துவதற்காக சந்தேக நபர் நீண்ட நாட்களாக திட்டமிட்டுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தண்ணி விலை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

தண்ணி விலை அதிகரிப்பு

தண்ணி விலை அதிகரிப்பு

தண்ணி விலை அதிகரிப்பு தண்ணிவிலை அதிகரித்து விற்றவருக்கு மில்லியன்தண்டம் மெல்லியன் தண்டம் அறபடப்பட்டுள்ள சம்பவம் இலங்கை கொழும்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சூப்பர் மார்க்கெட் கடை ஒன்றில் தண்ணி போத்தல் ஒன்றின் உடைய விலை 130 ரூபாய்க்கு அதிகமாக விற்ற நிலையில் ,

அந்த விலை நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்ற கூட்டத்திற்காக அவருக்கு ரெண்டு மில்லியன் ரூபாய்கள் தண்ட அறவிடடப்பட்டுள்ளது.

அரசினால் நிர்ணயிக்கப்பட்ட விலையை அதிகரித்து பொருட்கள் விற்பனை செய்தால் அவர்களுக்கு தண்ட அறவிடப்படும் என அரசு அறிவித்திருந்த து .

இவ்வாறான நிலையில் ஒரு தண்ணி போத்தலின் விலை 130 க்கு அதிகமாக ரூபாவாக விற்பனை செய்யப்பட்டதை அடுத்து ,அவருக்கு இரண்டு மில்லியன் ரூபாய்கள் தண்டம் அறுவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆக இந்த விலையை விட அதிகரித்துவிட்ட குற்றச்சாட்டு அடிப்படையிலேயே நீதிமன்றத்தினால் இந்த தண்டம் அறடப்பட்டுள்ளது.

நாளுக்கு ஒரு விலையில் இலங்கையில் கடைகளில் விலை காணப்படுவதால் மக்கள் திணறி வருகின்றனர் .

ஒரு தொகையில் அவர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் அங்கு இருக்கிறது.

விலை நிரணையிப்பு இல்லாத விடயம் இலங்கை அரசின் கையாலாக தன்மை என்பதாக காணப்படுகிறது.

ஆகையால் இதனை தற்பொழுது பேசு பொருளாக்க வேண்டிய கட்டத்திற்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளதால் ,

இலங்கை நீதிமன்றம் சாட்டையடி தண்டனையை வழங்கி மக்கள் சுமைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது பாராட்டப்படுகிறது.

இந்த தண்டம் எச்சரிக்கை அடுத்து வரும் நாட்களிலும் இடங்களில் உள்ள கடைகள் இந்த அதிகமான விலைக்கு விற்க படமாட்டது என மக்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.

வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா
Posted in இலங்கை செய்திகள்

வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா

வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா

வரியாக 970பில்லியனை அள்ளிய அனுரா ஆட்சியின் சாதனையாக கடந்த மூன்று மாதத்தில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் அதிகமான வரிகளைஅறவிடப்பட்டு வருகின்ற நிலையில், இத்த பெரிய தொகை வரி பணத்தை இலங்கை ஆளும் அனுரா அரசு கடந்த மூன்று மாதத்தில் அறவிட்டுள்ளது .

நாட்டை முன்னோக்கி நகர்த்த வேண்டுமாக இருந்தால், மக்களிடத்தில் இருந்து வரிப்பணத்தை அறவிட்டால் மட்டுமே அதனை செய்ய முடியும்.

இவ்விதம் கடந்த மூன்று மாதத்தில் 970 ,58 பில்லியன் ரூபாய்களை இலங்கை வரியாக அறவிட்டுள்ளது .

அவ்வாறு வரியாக பெற்றுக் கொண்டுள்ள இந்த வருமானத்தை வைத்து தற்பொழுது அரசு இயங்கி வருகிறது.

மக்களிடமிருந்து அதிகமான வரிகளை அறவிடப்படுகின்ற பொழுதும் ,நாடு கடன் சுமையில் இருப்பதாக இலங்கை ஆளுகின்ற அரசுகள் அறிவிப்பது வேடிக்கையாக இருக்கிறது.

மிகப் பெரும் தொகையில் வட்டி விதங்கள் வரிகளாக பெற்றுக்கொள்ளப்படுகிறது.

ஆனால் நாடு மட்டும் ஒரு தலைக்கு நான்கு லட்சம் ரூபாய் கடன் அடிப்படையில் சிக்கித் தவிக்கிறது.

எப்படி அடைப்பது எப்படி நாட்டை மீட்பது என்பது தொடர்பாகவே ,தற்பொழுது மக்கள் மண்டையை பிடித்துக் கொண்டிருக்க ஆளுகின்ற அரசாங்கம் தங்கள் பைகளை நிரப்புவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.

இலங்கையில் விழுந்து நொருங்கிய உறங்குவானூர்தி
Posted in இலங்கை செய்திகள்

விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி

விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி

விழுந்து நொருங்கிய உலங்குவானூர்தி இலங்கையில் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்று இலங்கை விமானப்படைக்குச் சொந்தமான பில் ரக 212 ஹெலிகாப்டர் ஒன்று மாதரு ஓயா பகுதியில் வழக்கமான பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபொழுது விழுந்திருகின்றது.

சிம்ரன் கூட விமானத்தளத்தில் இருந்து புறப்பட்ட ஹெலிகாப்டர் சில நேரத்தில் அங்குள்ள மாதுரு ஓயா நீர் அணையில் விழுந்து மூழ்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உறங்குவான் விபத்து தொடர்புள்ளான விசாரணைகளை தற்பொழுது விமானப்படை ஆரம்பித்துள்ளனர்.

இந்த விமானம் விழுந்த விடயம் இலங்கை ராணுவத்தில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளதுடன் விசாரணை ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுரா ஆட்சி அரியணையில் குந்திய பின்னர் இடம்பெற்ற இரண்டாவது வானூர்தி விபத்தாக இது பார்க்கப்படுகிறது.

ஒரு மாத இடைவெளியில் வீழ்ந்து நொறுங்கிய இரண்டாவது விமானமாக இது காணப்படுகிறது.

இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது வான் விபத்தா என்பது தான் மக்களுக்கு கல்வியாக உள்ளது.

ஒரு மாதத்தில் இடம்பெற்ற இரண்டாவது வான் விபத்து சம்பவமாக இது காணப்படுகிறது.

34பேர் காவல்துறையால் கைது
Posted in இலங்கை செய்திகள்

34பேர் காவல்துறையால் கைது

34பேர் காவல்துறையால் கைது

34பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை இப்படி அறிவித்துள்ளது.

இலங்கையில் சட்டவிரோதமாக தங்கி இருந்து பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த 34 பேரையே தாங்கள் கைது செய்யப்படுவதாக குடிவரவு குடி அகழ்வு அமைச்சு அறிவித்துள்ளது.

இவ்வாறு இலங்கை தங்கி இருந்தவர்கள் 19 முதல் 54 வயதுக்கு உட்பட்ட பங்களாதேஷ் ஆண்கள் குழுவில் கண்டரிக்கப்பட்டுள்ளது.

விசா காலாவதியானா நிலையில் அது கடந்து நாட்டில் தங்கி இருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே ,இந்த பங்களாதேஷ் பிரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு அமைச்சர் அறிவித்துள்ளது.

இவர்கள் எதற்காக இலங்கைக்குள் வாழ்ந்து இருந்தார்கள் இந்த விடயம் தெரிவிக்கவில்லை.

கைது செய்யப்பட்டவர்கள் காவல்துறை விசாரணையின் பின்னர் தற்பொழுது நீதிமன்றில் பாரப்படுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு வருகின்ற உல்லாச பயணிகள் பலர் இவ்வாறு விசாக்கள் கால அவதியான நிலையிலும் அங்கு தங்கி வருவதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.

யாழ் மேயர் யார்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் மேயர் யார்

யாழ் மேயர் யார்

யாழ்ப்பாணத்துக்கான மேயர் யார், மேயரை எப்படி தெரிவு செய்யவேண்டும், மேயர் எப்படியானவராக இருக்க வேண்டும், மேயர் என்ன என்ன செய்ய வேண்டும்

என்ற கேள்விகளோடு யாழ்ப்பாண மேயரை தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைக்கான தேர்தல் முடிவடைந்த பின்னர் இது தொடர்பில் கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், யாழ்ப்பாணம் மாநகர சபை மேயராக வரக் கூடியவர் விலை போகாதவராகத் தமிழ்த் தேசியப் பற்றுடன் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும்.”

இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் வலியுறுத்தினார் தமிழ் மக்கள் கூட்டணியின் முக்கியஸ்தரும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயருமான சட்டத்தரணி வி.மணிவண்ணன்.

யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “யாழ். மாநகர சபை மேயர் பதவி என்பது மிக முக்கியமானது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை விட முக்கியமானது.

நாடாளுமன்ற உறுப்பினரை விட சிறப்பாகச் செயற்படக் கூடியவராக இருக்க வேண்டும். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளும் இராஜதந்திரிகள் யாழ். மேயரை நிச்சயம் சந்திப்பார்கள்.

அவ்வாறானவர்களுடன் இராஜதந்திர ரீதியாக உரையாட வேண்டும். யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கக் கூடிய அபிவிருத்தித் திட்டங்கள், தமிழ் மக்களின் அபிலாஷைகள், அவர்களின் பிரச்சினைகள் என்பவற்றை எடுத்துக் கூற வேண்டும்.

எனவே, மேயராக தமது கட்சி சார்பாக முன்னிலைப்படுத்தப்படுவர் சிறப்பானவராக இருக்க வேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கட்சிகள் பொறுப்புடன் உணர்ந்து கொண்டு அதற்கு ஏற்றது போல் மேயரைத் தெரிவு செய்ய வேண்டும்.” – என்றார்.

இந்நிலையில் மூத்த போராளி மனோகர் தெரிவிக்கையில்,

தமிழ்த்தேசியக் கட்சிகளாக இனங்காணப்படுபவர்களுடன் பேசும் போது யார் மேயர் என்பது போன்ற விடயங்களை முன்நிபந்தனையாக வைக்காமல் கூடிக் கலந்தாலோசிப்பதே சிறந்தது.

இம்முயற்சி கைகூடும் வரை சுமந்திரனை ஒதுக்கி வைத்தாலே எல்லாம் சுபமாக முடியும் என மூத்த போராளி மனோகர் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சித் தேர்தலின் பின்னரான நிலைமை தொடர்பான விடயத்தில் பதில் செயலாளர் சுமந்திரனை கையாளவிடுவது எதிர்பார்க்கும் நோக்கங்களுக்கு மாறான விளைவையே தரும் என்பதனை

தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்குக் குறிப்பாக மத்திய குழுவினருக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

குறிப்பாக யாழ். மேயர் விடயம் கவனத்துக்குரியது. இதனை முன்நிபந்தனைபோன்று வைப்பது ஏற்புடையதல்ல.

சுமந்திரன் கட்சிக்குள் நுழைந்த காலத்தில் இருந்தே தமிழ்த் தேசிய உணர்வாளர்களை நோகடிக்கும் விதத்திலேயே செயற்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் சுமந்திரன் தெரிவிக்கையில்,

“யாழ். மாநகர சபையின் எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாநகர சபை மேயர் வேட்பாளர் சுந்தரமூர்த்தி கபிலன் மாநகர சபை மேயராக அல்ல,

யாழ். மாநகர சபையின் உறுப்பினராகப் கூடப் பதவி வகிக்க முடியாது. அவர் உறுப்பினராக வந்தால் வழக்குத் தொடர்ந்து அவரை வெளியேற்றுவோம் என தெரிவித்தார்.

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு

கொட்டகலையில் துப்பாக்கிச் சூடு சம்பவம் வந்து இடம் பெற்றுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கொட்டகல பாலபல்ல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில் கடந்த இரவு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

திடீரென நடத்தப்பட்ட இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில். 34 வயதுடைய வாலிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.

வாகனம் ஒன்றில் வந்த மர்ம ஆயுததாரிகள், திடீரென துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இலங்கையில் தொடரும் இவ்விதமான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் ,அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் மத்தியில் அச்ச நிலை காணப்படுகிறது.

இலங்கையில் ஆயுதப் பாவனை தடைவிதிக்கப்பட்டுள்ளது .அவ்வாறு ஆயுதங்கள் பாவித்தால் 20 வருட கடூழிய சிறை தண்டனை என சட்டம் இருக்கிறது.

அவ்வாறான காலப்பகுதியில் இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துச் செல்வது ,அனுரா அரசின் திட்டமிடப்பட்ட நிழல் நடவடிக்கையா என்பது தொடர்பாகவே சந்தேகம் வெளியிடப்படுகிறது.

அனுரா ஆட்சி இடம்பெற்ற 30ஆவது சூட்டு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

மக்களை நல்வழிப்படுத்த வந்த அது அவருடைய ஆட்சி அதிகாரம், இன்று இப்படி இருப்பது மக்கள் மத்தியில் சந்தேகங்களையும் அவர் மீதான அதிர்த்தியம் அதிகமாக ஏற்படுத்தி வருவதாக ,நோக்கர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு துப்பாக்கி சூட்டு சம்பவம் அதிகரித்து காணப்பட்டால் ,அது மிகப் பெரும் அபாய நிலையில் ,இலங்கையை அழைத்துச் செல்லும் என்பதை மக்கள் கருத்தாக உள்ளது.

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை
Posted in இந்தியா செய்திகள் இலங்கை செய்திகள்

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கை நாடு முழுவதும் 24 விமான நிலையங்கள் மூடப்பட்டு பயணிகளுக்கு பயண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து கடந்த 36 மணி நேரத்தில் எல்லையில் நிலைமை மோசமடைந்துள்ளது.

டிரோன் தாக்குதல்

மூடியவிமான நிலையங்கள் பயண எச்சரிக்கைமற்றும் டிரோன் தாக்குதக்கலை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.

இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், லடாக், குஜராத், ராஜஸ்தான் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

விமான நிறுவனங்களும் எச்சரிக்கை நடவடிக்கை

இதுதவிர்த்து இண்டிகோ மற்றும் ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட பல விமான நிறுவனங்களும் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளன.

சிவில் விமானப் பாதுகாப்பு பணியகம் (BCAS) அனைத்து விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளது.

பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பயணிகள், ஊழியர்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளை அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியம் காரணமாக,

இந்தியா முழுவதும் 24 விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

நோட்டீஸ் டூ ஏர்மேன் என்ற பிரிவின் கீழ் இதற்கான நடைமுறையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன்காரணமாக இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விமான நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன.

விமானப் போக்குவரத்து அமைச்சகம்

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் உறுதி செய்துள்ள தகவலில், விமான நிலையங்கள் மூடுதல் என்பது தற்காலிக முடிவு.

தேசிய பாதுகாப்பு நிலைப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், குறிப்பிட்ட விமானநிலையங்களுக்கு வர வேண்டிய பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், வேறு விமான நிலையங்களுக்கு சில விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்டுள்ள பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்துள்ள விமான நிறுவனங்களை அணுகும்படி மத்திய அரசு அறிவித்துள்ளது.

புதிய விமான நிறுவனங்களில் ஒன்றான ஆகாசா ஏர், சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக விமானம் புறப்படுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரத்திற்கு முன்பே விமான நிலையத்துக்கு பயணிகள் வர வேண்டும்.

விமான நிலையத்திற்குள் செல்ல, அரசால் அங்கீகரிக்கப்பட்ட புகைப்பட அடையாள ஆவணங்களை எடுத்துச் செல்ல வேண்டும். விமானத்துக்குள் ஏழு கிலோ வரை எடையுள்ள ஒரு கைப்பை மட்டுமே அனுமதிக்கப்படும்.

ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களின்படி, அனைத்து பயணிகளும் விமானத்துக்குள் ஏறுவதற்கு முன்பு இரண்டாம் நிலை பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட உள்ளனர்,” எனக் கூறப்பட்டுள்ளது.

இண்டிகோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், “இந்த அசாதாரண சூழலில், அனைத்து விமான நிலையங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு சோதனைகள் மற்றும் சம்பிரதாயங்களை எதிர்கொள்ள, திட்டமிட்ட பயண நேரத்துக்கு முன்பே விமானநிலையத்துக்கு பயணிகள் வரவேண்டும்,” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும், பொதுமக்கள் நுழைவதற்கு தடை விதித்துள்ளதாக சமூக ஊடகங்களில் வதந்திகள் பரவத் தொடங்கி உள்ளன.

ஆனால், இதனை சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. “நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்குள் நுழைவதற்கு முழுமையான தடை இல்லை.

குறிப்பிட்ட சில விமான நிலையங்கள் மட்டுமே தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன” என்று அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு
Posted in இலங்கை செய்திகள்

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு

தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பு. இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க அழைப்பை விடுத்து இருக்கின்றனர் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு.

தமிழரசுக் கட்சி பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்கு

தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு

இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்கு தமிழர் கூட்டமைப்பு பகிரங்க அழைப்பு விடுப்பதாக,

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ.பிரசாந்தன் வியாழக்கிழமை (08) மாலை மட்டக்களப்பில் உள்ள

அவரது கட்சியின் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் படகு சின்னத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட மக்கள் வழங்கிய ஆணைக்காக அந்த மக்களுக்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.

உள்ளூராட்சி சபைகளில் மக்கள் வழங்கிய ஆணை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் மக்கள் எமக்கு வழங்கிய ஆணையின் பிரகாரம் 37 ஆசனங்கள் எமக்கு கிடைத்துள்ளன.

இதனை மக்கள் எமக்கு வழங்கிய பெரும் ஆணையாகவே நாம் பார்க்கின்றோம்.

அதனடிப்படையில் கிழக்கு மக்களுக்கு தனித்துவமான ஒரு அரசியல் குரல் தேவை என்பதை மக்கள் ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள்.

எமது கிழக்கு தமிழர் கூட்டமைப்பானது வாகரையில் ஏழு ஆசனங்களை பெற்றிருக்கின்றோம் அதே போன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திலும் இரண்டு வட்டாரங்களை தம்வசப்படுத்தியதுடன்

மண்முனை தென் மேற்கு பிரதேசத்தில் ஆறு ஆசனங்களைப் பெற்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பு முன்னிலையில் நிற்கின்றது.

அந்த அடிப்படையில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பிற்கு மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் தமிழர்களின் ஆட்சியினை உறுதிப்படுத்துவதற்காக

இணைந்து செயற்படுவதற்காக இலங்கை தமிழரசுக் கட்சிக்கு பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏறாவூர் நகர சபையில் இருக்கின்ற எல்லைப் புற கிராமங்கள் இரண்டில் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு வெற்றி பெற்றிருக்கின்றது.

அதனடிப்படையில் மக்களின் ஆணைக்கு கட்டுப்பட்டு தனிப்பட்ட அல்லது கட்சி விருப்பு வெறுப்பிற்கு அப்பால் கிழக்கு மாகாணத்தில்

தமிழர்கள் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்த்தியிருக்கின்றார்கள்.

அதன் அடிப்படையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு தமிழர்களின் ஆட்சியை உறுதி செய்வதற்காக அழைப்பு விடுக்கின்றோம்.

அவ்வாறு ஒன்றாக பயணிக்கின்ற போது கோறளைப்பற்று வடக்கு, கோறளைப்பற்று, ஏறாவூர்ப்பற்று, மட்டக்களப்பு மாநகர சபை, மண்முனை தென் எருவில் பற்று, மண்முனை தென் மேற்கு மற்றும் போரதீவுப்பற்று ஆகிய

உள்ளூராட்சி மன்றங்களிலும் நாங்கள் ஆட்சியமைக்க முடியும். அதாவது தமிழர்களின் ஆட்சியை உறுதிப்படுத்தும் வாய்ப்பு இருக்கின்றது.

பல்வேறு விட்டுக் கொடுப்பிற்கு மத்தியில் பயணிக்கின்ற கிழக்கு தமிழர் கூட்டமைப்பின் இந்த கோரிக்கையினை ஏற்று இலங்கை தமிழரசுக் கட்சியினர் ஒன்றாக பயணிப்பதற்கு முன் வருவார்கள் என நம்புகின்றோம்.

ஏன் என்றால் 2015 ஆண்டு மாகாண சபை தேர்தலின் பின்னர் எமது கட்சியின் தலைவர் சந்திரகாந்தன் அவர்களினால் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தோம்.

மாகாண சபை ஆட்சியினை நடாத்துவதற்கு நாங்கள் உங்களுடன் சேர்ந்து பயணிப்பதற்கு உறுதியாக இருக்கின்றோம். ஆனால் அந்த கருத்தை நிராகரித்திருந்தார்கள்.

மீண்டும் 2018 வருடமும் சேர்ந்து பயணிக்க அழைப்பு விடுத்திருந்தோம் அதனையும் நிராகரித்திருந்தார்கள். அதன் அடிப்படையில் கிழக்கு மக்கள் நில, நிருவாக, பொருளாதார இருப்புக்களில்

கிழக்கு மக்கள் பாதிக்கப்பட்டிருந்ததை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என நாங்கள் நம்புகின்றோம் என்றார்.

பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா

பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா

பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட அர்ச்சுனா ,பாராளுமன்றத்தில் தூக்கி வீசப்பட்ட ஆச்சுடா ராமநாதன் சம்பவம் இன்று பாராளுமன்ற பர பரப்பாக இடம்பெற்றுள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் மிக முக்கியமான விடயம் பேசப்பட்டு கொண்டிருந்த பொழுது, அங்கு அந்த பேச்சை குழப்பி சபையில் அநாகரிகத்தை மேற்கொண்டார் .

இதன் காரணத்தினால் அர்ச்சுனா இராமநாதன் அந்த பாராளுமன்றத் தேர்தலில் தூக்கி வீசப்பட்டார்.

தமிழ் மக்களுடைய விடுதலைக்காக தானே மீட்க வந்தவராகவும், தான் ஒருவரே பாராளுமன்றத்தை ஆட்டுவதாகவும், உருட்டி வந்து பொய்பித்தலாட்டம் ஆடிவந்த ,அர்ச்சுனா இராமநாதனுக்கு இந்த பாராளுமன்ற சாட்டையடி விழுந்திருக்கிறது.

நாள்தோறும் தமிழர் தமிழர் தேசியம் தமிழர் விடுதலை ,தமிழியம் தமிழ் பெண்கள் ,பெண்ணுரிமை எதிராக பேசி வருகின்றறார் அர்ச்சுனா.

பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப அங்கு நடத்தப்படும் விவாதங்களை திசை திருப்பி ,நேரத்தை வீணடித்து அதனை குழப்புவதை நோக்கமாகக் கொண்டு அர்ச்சுனா செயல்பட்டார்.

அதன் அடிப்படையில் இப்பொழுது இன்று பாராளுமன்றத்தில் பேசுகின்ற பொழுது சபையை குழப்பினார் ,என்ற காரணத்தினால் அங்கிருந்து அவர் தூக்கி வீசப்பட்டார்.

ஆக சபை குழப்பி என்கின்ற பெயர் அர்ச்சுனா இராமநாதனுக்கு எங்கே இலங்கை உடைய பாராளுமன்றம் சூட்டியிருக்கிறது.

ஆகவே சபை குழப்பி அர்ச்சனா இராமநாதன் தமிழருடைய சபைகளையும் தமிழ் தேசிய வரலாற்றை குழப்புகின்ற குழப்படி நாயகனாக காணப்படுகிறார்.

ஆகவே ஊசி கட்சிக்கு இன்று உருட்டி உருட்டி பாராளுமன்றத்தில் ஊசி போடப்பட்டு ,அர்ச்சனா ராமநாதன் இழுத்து வந்து, பாராளுமன்றத்துக்கு முன்னிலே வீசப்பட்ட சம்பவம் ,பரவலாக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்
Posted in இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன்

பருத்தித்துறையில் காய்ச்சலால் உயிரிழந்த இளைஞன் பருத்தித்துறையில் காய்ச்சலால் இளைஞர் ஒருவர் உயிரிழந்தது அப்பகுதியில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்த இளைஞர் உயிரிழந்த நிலையில் , உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 21 வயது நிரம்பிய இளைஞன் ஒருவரே காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

மேற்படி இளைஞர் கொழும்பில் உயர் படிப்பை கற்றுவரும் நிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிய நிலையில் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிருந்தார்.

நான்கு நாட்களாகக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டிந்த நிலையில் நேற்று புதன்கிழமை உடல்நிலை மிக மோசமான நிலையில் குடும்பத்தினர் அவரை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

அவரின் உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காகக் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த வாரமே காய்ச்சல் தொடர்பாக சுகாதார பிரிவினரால் மக்களுக்கு அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது.

கொசுக்களால் பரவும் நோய்கள் மற்றும் வழக்கமான வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருவதால், இரண்டு நாட்களுக்கு மேல் நீடிக்கும் காய்ச்சல் இருந்தால்,

மருத்துவரை அணுகுமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

இது தொடர்பில் ஆலோசகர் மருத்துவர் அச்சலா பாலசூரிய கூறியதாவது, சரியான மருத்துவ ஆலோசனை இல்லாமல் வீட்டிலேயே காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தானது.

சிலர் இது ஒரு எளிய வைரஸ் காய்ச்சல் என்று நினைக்கலாம், ஆனால், டெங்கு அல்லது சிக்குன்குனியா போன்ற கடுமையான நோய்கள் இதே போன்ற அறிகுறிகளுடன் தொடங்கலாம்.

இருப்பினும், ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வதும், நிலைமையை மோசமாக்கும் மருந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம்.

மருத்துவரை அணுகாமல் ஆஸ்பிரின் அல்லது ஐபுப்ரூஃபன் போன்ற மருந்துச் சீட்டு வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறார்.

காணி அபகரிப்பு வர்த்தமானி கேள்வி கேட்ட சிறிதரன்
Posted in இலங்கை செய்திகள்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன்

காணி அபகரிப்பு கேள்விகேட்ட சிறிதரன் வடக்கு, கிழக்கில் காணிகளை அபகரிக்கும் வர்த்தமானியின் உள்நோக்கம் என்ன என நாடாளுமன்றில் சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களிலுள்ள 5 ஆயிரத்து 700 ஏக்கருக்கும் அதிகமான தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சுவீகரிப்பதற்காக,

2025.03.28 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதை, கமத்தொழில், கால்நடை வளங்கள்,

காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த சபைக்குப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்,

என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

இன்றைய சபை அமர்வில், நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27.2 இன் கீழ், நாடாளுமன்றக் குழுத் தலைவராக, துறைசார் அமைச்சரிடம்,

வாய்மொழி மூல விடைக்கான வினாக்களை முன்வைக்கும்போதே இந்த விடயம் குறித்து சிறீதரன் எம்.பி. கேள்வி எழுப்பினார். இதன்போது அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

“குறித்த வர்த்தமானி அறிவித்தல் மூலம் கோரப்பட்டுள்ள காணிகள் என்ன தேவைக்காகக் கோரப்பட்டுள்ளன என்பதையும்,

6000 ஏக்கர் வரையான காணிகளை அவசரமாகச் சுவீகரிப்பதற்கான காரணம் என்ன என்பதையும் அமைச்சர் இந்தச் சபைக்கு அறிவிக்க வேண்டும்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலம் நடைபெற்ற யுத்தம் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து, உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும், உறவினர் நண்பர்களின் வீடுகளிலும் வாழும்போது

அவர்களது காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்காமல், மக்களின் காணிகளை சுவீகரிக்கும் இந்த வர்த்தமானி அறிவித்தலின் உள்நோக்கம் என்ன என்பதையும்,

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நீண்டகால யுத்தம் காரணமாக அவர்களது காணி ஆவணங்கள் தவறவிடப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலகங்கள் தெரிவிக்கும் நிலையில்,

இந்தப் புதிய வர்த்தமானி அறிவித்தல் மூலம் காணி உரிமையை உறுதிப்படுத்துமாறு எவ்வாறு கோர முடியும் என்பதையும் அமைச்சர் இந்த உயரிய சபைக்கு அறிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.

நாடாளுமன்றக் குழுத் தலைவர்களால் கேட்கப்படும் வாய்மொழி மூல வினாக்களுக்கு, துறைசார் அமைச்சர் உரிய காலத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர் காணி அபகரிப்பு இரகசியமாக ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் வர்த்தமானி கடந்த வாரம் வெளியாகி இருந்தது.

வடக்கு மாகாணத்தில் மருதங்கேணி முதல் முள்ளிவாய்க்கால் வரை யாழ்ப்பாணம் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகியவற்றின்

பெரும்பாலும் கடற்கரையோரப் பிரதேசங்களை அண்டி,5 ஆயிரத்து 940 ஏக்கர் நிலம் அரச உடமையாக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் காணி ஆணையாளர் நாயகத்தால் சத்தம் சந்தடியின்றி வெளியிடப்பட்டுள்ளது.

அரசு அடையாளப்படுத்திய காணிகளை எதிர்வரும் முன்று மாதங்களுக்குள் ஒருவரும் உரிமை கோராவிட்டால் அவை அரச காணிகளாக பிரகடனப்படுத்தப்படும் வர்த்தமானி அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலேயே இன்று நடந்த பாராளுமன்ற அமர்வில் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேள்வி எழுப்பி இருந்தார்.

திட்டமிடப்பட்ட செயலாக இந்த காணி அபகரிப்பு இரகசிய வர்த்தமானி வெளிவந்தமை அதிர்ச்சிக்குரியதாகும்.

சிங்கள பெளத்த பேரினவாதம் தமிழர்கள் நிலைகளை வளைத்து அதனை ஏப்பமிட துடிப்பதை இந்த காணி அபகரிப்பு விடயம் மீளவும் எடுத்துக் காட்டுகிறது.

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள்

ரணில் ஆடம்பரசெலவு அதிர்ச்சியில் மக்கள் உறைந்துள்ள செய்தி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா , 2022 முதல் 2024 வரை ,பயணித்த அவரது வெளிநாட்டு பயணங்கள் தொடர்பான ,விடயங்கள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கா , 23 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இதற்காக 1. 27 பில்லியன் அவர் செலவு செய்துள்ளதாக, வெளிவந்துள்ள தகவல் மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

நாடு வாங்குரோத்து நிலையில் செல்கின்ற பொழுது, இவ்விதமான ஆடம்பரமான வாழ்க்கைச் செலவுகளை, அவர் மேற்கொண்டு நாட்டை கீழ் நிலைக்குத் தள்ளி உள்ளதாக ,மக்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆடம்பர வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு, அதன் ஊடாகவும் பல மில்லியன்களை மோசடி செய்துள்ளதான, தகவலும் வெளியாகி இருக்கிறது.

சிங்கப்பூராக மாற வேண்டிய இலங்கை ,இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் வசம் சிக்கி ,இன்று சீரழிந்து வருவதாக அவர் கண்ணீர் மல்கினார் .

எனவேதான் இலங்கை மக்கள் விழிப்புணர்வு கொண்டு ,எழுந்து இவ்வாறான லஞ்ச ஊழல் பெருச்சாளிகளுக்கு எதிராக ,குரல் கொடுத்து போராட வேண்டுமென, தற்பொழுது மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் .

முன்னாள் தமிழின படுகொலையாளி ,மஹிந்த ராஜபக்,ஷ கோத்தபாய ராஜபக்,ஷ மைத்திரிபால சிறிசேன ,உள்ளிட்டவர்களும் இவ்வாறான ஆடம்பரமான பயணங்களை மேற்கொண்டு இருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்

அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம்

அர்ச்சுனா தங்கம் தப்பியோட திட்டம், போட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் சமூக ஊடக போராளிகள் தமது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

தேர்தல் பரப்புரைக்க கூறி உலக மக்களிடமிருந்து பல மில்லியன் கணக்கான பணத்தை கொள்ளையடித்த பாராளுமன்ற உறுப்பினர்.

அர்ஜுனா இராமநாதன் அவரது செயலர் தங்கமாகியோர் , இலங்கையை விட்டு புலம்பெயர் நாட்டுக்கு தப்பியோடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டு உள்ளதாக, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் இப்படி எழுதி வருகிறார்கள்.

இந்த விடயம் என்பது தற்பொழுது புலம்பெயர் வெளிநாட்டு தமிழர்கள் மத்தியில் ,பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

மக்களிடம் பணத்தினை வாங்கிவிட்டு தான் பெற்றுக்கொள்ளவில்லை என, கபட நாடக மாடி, தான் திருடன் என்பதை வசமாக சிக்கினார் அர்ஜுனா.

இதன் பின்னர் நாட்டில் இருக்க முடியாத காரணத்தினால் ,வெளிநாடு தப்பியோட இருப்பதாக அந்த குறிப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

தொடர்ந்தும் இலங்கை அரசியலில் மக்களை ஏமாற்றி ,அவதூறுபடுத்தி, தமிழ் பெண்களையும், தமிழ் தேசியத்தையும் ,தமிழ் தேச வாதத்தையும் ,இழிவுபடுத்தி வரும் அர்ச்சுனா விரட்டப்பட வேண்டியவர் என மக்கள் தெரிவிக்கின்றனர் .

வன்னி மைந்தன் tiktok தளம் இவரை பாராளுமன்ற உறுப்பின ஆக்கியதிலிருந்து ,இன்று வரை அவர் பல்வேறுப்பட்ட இன்னல்களை செய்து வருவதாகவும் ,வன்னி மைந்தன் tiktok தளம் மீதும் மக்கள் குற்றங்களை சுமத்தி வருகின்றனர் .

எனினும் வன்னி மைந்தன் தளம் தாங்கள் ஆதரிக்கின்ற பொழுது ,இவ்வாறான பேச்சுக்களை அவர் பேசவில்லை என மறுத்து வருகின்றனர் .

அப்படி அவர் உரைத்திருந்தால் இப்போது போன்று அன்றே திருப்பித் தாக்கி இருப்போம் என அவர்கள் வாதம் வைக்கிறார்கள்.

ஆகவேதான் தற்பொழுது 5 மாதத்தில் மக்கள் மனங்களிலிருந்து அர்ச்சுன ராமநாதன் வீழ்த்தப்பட்டுள்ள சம்பவம் காணப்படுகிறது.

பெண்கள் தொடர்பாக அவதூறு அர்ச்சுனா பேசும் பொழுது ,அதனை தட்டிக் கேட்காது தங்கம் பம்மிக் கொண்டுள்ளது, ஏன் என இந்த கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது.

அர்ச்சுனா தங்கமாகிய நாட்டை விட்டு தப்பி ஓடுவார்கள் என இப்படி தெரிவித்து வருகிறார்கள்.

மாகாண சபைத் தேர்தல் விரைவில்
Posted in இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்

மாகாண சபைத் தேர்தல் விரைவில் ,மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடாத்த வேண்டி இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என தமிழ் அரசியல்வாதிகள் தெரிவித்துள்ளனர்.

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள் என,

இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன், வைத்தியர் இ.சிறிநாத் ஆகியோரும் கருத்து தெரிவித்தனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல்

2025 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் இலங்கை தமிழரசுக் கட்சியானது வடக்கு கிழக்கிலே அமோகமான வெற்றியைப் பெற்றிருக்கின்றது. நாடு யாரிடமாவது இருக்கட்டும்,

தமிழர் தாயகம் தமிழரசோடு என்பது நாங்கள் தேர்தல் பரப்புரை காலத்தில் சொன்னதற்கமைவாக வடக்கு கிழக்கிலே இருக்கின்ற மக்கள் எங்களுக்கு அமோகமான வெற்றியைத் தந்திருக்கின்றார்கள்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி

இது உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வெற்றி என்பதைத் தாண்டி இது தமிழர்களுடைய எதிர்காலத்திற்கான ஆணையொன்றை தமிழ் மக்கள் தமிழரசுக் கட்சியிடம் ஒப்படைத்திருக்கின்றார்கள்.

நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வை அடைய வேண்டுமென்ற எங்களுடைய இலக்கிற்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மீண்டும் ஆணையை தந்திருக்கின்றார்கள்.

அந்தவகையிலே விரைவில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டுமென்று நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்.

மாகாணசபைத் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் வெல்வோம்

மாகாணசபைத் தேர்தலிலும் வடக்கு கிழக்கில் நாங்கள் கூடுதலான ஆசனங்களைப் பெற்று ஆட்சியமைக்க இருக்கின்றோம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் நாங்கள் போட்டியிட்ட பதினொரு சபைகளிலும் ஆசனங்களைப் பெற்றிருக்கின்றோம்.

பெரும்பான்மையாக தமிழர்கள் இருக்கின்ற அனைத்து பிரதேச சபைகளிலும் நாங்கள் பெரும்பான்மையான ஆசனங்களை வென்றிருக்கின்றோம். அனைத்து பிரதேச சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய சூழல் இருக்கின்றது.

அத்துடன் நாங்கள் சிறுபான்மையாக இருக்கின்ற இரண்டு பிரதேச சபைகளிலும் ஆசனங்களை பெற்றிருக்கின்றோம்.

இன்று மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து முதற்கட்டமாக பட்டியல் ஆசனங்கள், சபை அமைத்தல், யாருடன் இணைவது என்பது பற்றி கலந்துரையாட இருக்கின்றோம்.

இன்று நாங்கள் போட்டியிட்ட அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களையும் ஒவ்வொரு சபையாக அழைத்து அந்தந்த சபைகளில் பட்டியல் உறுப்பினர்கள் யார் என்றும் தவிசாளர்,

பிரதி தவிசாளர் பற்றி எவ்வாறு தீர்மானம் எடுப்பது என்பது பற்றியும் யாருடன் நாங்கள் இணைந்து ஆட்சியமைப்பது என்பது பற்றியும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கலந்துரையாட இருக்கின்றோம்.

எதிர்வரும் இரண்டு, மூன்று வாரங்களுக்குள் இலங்கை தமிழரசுக் கட்சி அனைத்து சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய ஒரு வியூகத்தை நாங்கள் அமைக்கவிருக்கின்றோம்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன்,

உள்ளூராட்சி சபைகளுக்கான பிரதிநிதித்துவ முறை என்பது சற்று சிக்கலான முறை என்பதை நீங்கள் அறிவீர்கள்.

அப்படியான சிக்கலான ஒரு முறை காணப்பட்டபோதிலும் தமிழர்கள் அதிகமாக வாழ்கின்ற அனைத்து சபைகளிலும் நாங்கள் கணிசமான வாக்குகளைப் பெற்றிருக்கின்றோம்.

வாக்குத்தொகை அடிப்படையில் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம், சபைகளின் பிரதிநிதித்துவத்தை கைப்பற்றியிருப்பதன் அடிப்படையிலும் நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம்.

பிரதிநிதித்துவ முறையில் காணப்படுகின்ற சில குறைபாடுகள் காரணமாக நாங்கள் அதிகப்படியான வாக்குகள் பெற்றிருந்தாலும் தொங்கு நிலையான ஆசனங்கள் எனப் பலவாறான ஆசனங்கள் காணப்படுகின்றபடியால்

அவற்றையெல்லாம் கடந்து ஒன்பது உள்ளுராட்சி சபைகளிலும் ஆட்சியமைக்கக்கூடிய அளவிற்கு எமது கட்சி உரிய ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டிருக்கின்றது.

எதிர்வரும் காலங்களில் சபைகளை அமைத்து சுமுகமான முறையில் அதனை கொண்டுசெல்லக்கூடிய வாய்ப்பினை ஏற்படுத்துவோம்.

சில கட்சிகள் கூட்டணியாகச் சேர்ந்து கடுமையான பிரயத்தனங்கள் செய்தும் கூட அவர்களுடைய முயற்சிகள் வெற்றி பெறவில்லை.

தமிழர்தாயகம் தமிழரசுக் கட்சியின் பக்கம் இருக்கின்றது என்பதை இவ்விடத்தில் கூற முடியும்.

எதிர்காலத்தில் நாங்கள் சிறப்பான செயற்பாடுகளையும் முன்கொண்டு செல்வோம்.

தேசிய மக்கள் சக்தியானது தாங்கள் நடுநிலை வகிப்பதாக கூறியிருப்பதாக அறிய முடிகின்றது.

நாங்கள் தமிழ்த் தேசியம் சார்ந்து சிந்திப்பவர்களாக இருக்கின்றபடியால் தமிழ்த் தேசிய எண்ணத்தோடு இருப்பவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுப்போம்.

மற்றையவர்கள் சிநேகபூர்வமாக எங்களுக்கு ஆதரவு தருவதற்கு முன்வருகின்றபோது பரஸ்பரம் நாங்கள் ஆதரவுகளை வழங்கி சபைகளை அமைக்கவேண்டிய தேவை இருக்கின்றது. நாங்கள் முதலாவதாக இருக்கின்றோம்.

ஏனென்றால் மட்டக்களப்பு பல்லினமும் வாழும் ஒரு பிரதேசமாக இருக்கின்றபடியால் பரஸ்பரம் புரிந்துணர்வு, பரஸ்பர விட்டுக்கொடுப்பு என்பது தவிர்க்க முடியாத விடயமாக இருக்கின்றபடியால்,

அவற்றை கையாளவேண்டிய தார்மீக பொறுப்பு எங்களிடம் இருக்கின்றது என தெரிவித்தார்.

மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு

மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு

மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு ,மசகு எண்ணெயின் விலை சர்வதேச சந்தையில் திடீர் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையின் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.63 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 61.61 அமெரிக்க டொலராக வீழ்ச்சி அடைந்துள்ளது.

இதேவேளை உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.64 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

கடந்த வாரமே மசகு எண்ணெயின் விலை குறைப்பு ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 58.04 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.12 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

விலை குறைப்பு, மக்கள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் ஊடாக வாக்குகளை கொள்ளையடிக்கின்ற அரசியல் தந்திரபாய நடவடிக்கை சித்து விளையாட்டாக பார்க்கப்படுகிறது.

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் திடீரென விலை குறைக்கப்படுவதும் ,தேர்தல் முடிவுற்றதும் அதே கதியில் விலை வானளாவிய உச்சத்தை தொடுவதும் வழக்கமாக உள்ளது.

எனவே இந்த எரிபொருள் விலை குறைப்புகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் தொடர்பாக மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

ஏமாற்று அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்ற தற்கால நவீன அரசியல்வாதிகளை ஓட விரட்டி அடிக்க வேண்டும்.

அனுரா அரசின் இந்த விலை குறைப்புகளும் விலை மாற்றங்களும் தமிழ் மக்கள் முதுகில் ஏற்றப்பட போகின்ற .மிகச்சுமையின் முன்னெற்பாட்டு அறிகுறியாகவே காணப்படுகிறது.

ஆகவே இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் சிங்கள மக்கள் யாவரும் தற்பொழுது விழித்துக் கொள்ளவேண்டும்.

எனவே, தேர்தல் காலத்தில் குறைக்கப்பட்ட விலைகள், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் மீண்டும் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை

சிறை வைக்கப்பட்ட இலங்கையர்கள் விடுதலை ,சிறை வைக்கப்பட்ட இலங்கையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது

மியான்மர் நாட்டுக்குள் நுழைந்த இலங்கையில் பதினைந்து பேர் பல மாதங்களாக மியன்மார் நாட்டில் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் .

அவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த, 15 கைதிகளும் தற்பொழுது விடுதலை செய்யப்பட்டு தாயகம் அழைத்துவரப்பட்டனர் .

இலங்கை விமானத்தின் ஊடாக இந்த 15 பேரும் தற்பொழுது நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மியன்மார் நாட்டிலிருந்து தடுத்து வைக்கப்பட்டிருந்த, 41 பேர் இலங்கை அரசாங்கம் மேற்கண்ட பேச்சுவார்த்தை அடுத்து இந்த 41 பேரில் விடுதலை செய்யப்பட்டு இருக்கிறனர் .

தற்பொழுது 15 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவ்விதம் கைதிகள் விடுதலை செய்யப்பட்டத்தை அடுத்து அவர்களது குஉடம்பம் பெரும் மகிழ்வில் உறைந்துள்ளது .

பல சொல்லென்ன சித்தரைவதைகளின் பின்னர் இலங்கையர்கள் பத்திரமாக தாய்நாடு திரும்பிய மகிழ்வில் அவர் தம் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .