22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு

22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு
Spread the love

22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு

22ஆயிரம் பேர் டெங்கு பாதிப்பு ,22 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.

சுற்றுப்புற சூழல் காரணமாக பெருகிவரும் நுளம்பு கொசுக்களின் ஊடாக இந்த நோய் தொற்றி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நுளம்புகளினால் காவிச் செல்லப்படும் கொடிய கிருமி ஒன்றே காய்ச்சலை ஏற்படுத்தி ,அது டெங்கு நோயாக மாற்றமடைந்து மரணமான சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், 22627 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நோய் தாக்கம் என்பது சுற்றுப்புற சூழல் காரணமாகவே ,அதிகமாக இடம்பெற்று வருவதாகவும், நீர் நிலையிலிருந்து எழுந்து பறக்கும் நுழம்புகளினால், இந்த நோய் அதிகமாக பரப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டு சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்திருக்கும்படி சுகாதாரப் பிரிவு அறிவித்து வருகின்ற பொழுதும், மக்கள் அதனை செவிமடுக்காது இருப்பதினாலேயே ,இந்த நோய் தொற்றுக்கொள்ள வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உயிர்பலிகளை தடுக்கவும் ,இந்த நோயின் தாக்குதலில் இருந்து எம்மை தற்காத்து கொள்ளவும் ,மக்கள் விழிப்பாக செயல்படும்படி வேண்டுதல் விடுக்கப்பட்டுள்ளது.