200 வீடுகள் சேதம்
200 வீடுகள் சேதம் ஆகியுள்ளதாக இலங்கையில் உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக புயல் வெள்ளம் மழை காரணமாக 200க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது .
இதனால் 245 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மட்டும் 1321 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .இங்கு அதிகமான வீடுகள் சேதமடைந்துள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாக பெரும் பாதிப்பு
இந்த சீரற்ற காலநிலை காரணமாக 1321 மேற்பட்ட நபர்கள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் 300க்கு மேற்பட்ட வீடுகள் கடினமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன.
புயல் காரணமாகவே இந்த பாதிப்புகள் அதிக இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள தற்பொழுது தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசு தெரிவித்துள்ளது.
வீடுகள் சேதமான நிலையில் காணப்படுகிறது
இந்தக் காற்றினால் வீட்டினுடைய கூரைகள் மரங்கள், விழுந்து பல வீடுகள் சேதமான நிலையில் காணப்படுவதாக ,பல காட்சிகள் தற்பொழுது காண்பிக்கின்றன.













