பல்லேகெலேயில் திடீர் கனமழையால் பல மரங்கள் விழுந்தன
Posted in இலங்கை செய்திகள்

பல்லேகெலேயில் திடீர் கனமழையால் பல மரங்கள் விழுந்தன

பல்லேகெலேயில் திடீர் கனமழையால் பல மரங்கள் விழுந்தன

பல்லேகெலேயில் திடீர் கனமழையால் பல மரங்கள் விழுந்தன ,பல்லேகெலே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலகொல்ல பகுதியில், பலத்த காற்றுடன் கூடிய திடீர் கனமழை பெய்ததால், பல மரங்கள் விழுந்தன.

தெல்தெனியா-கண்டி சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு முச்சக்கர வண்டி மீது மரம் ஒன்று சரிந்து விழுந்ததில், ஒருவர் படுகாயம் அடைந்தார்.

காயமடைந்தவர் உடனடியாக ‘சுவா செரியா’ ஆம்புலன்ஸ் மூலம் கண்டி தேசிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மரங்கள் விழுந்ததால், பாதிக்கப்பட்ட சாலைகளில் போக்குவரத்து நீண்ட நேரம் தடைபட்டது.

புயல் முறிந்து விழுந்த மரங்கள்
Posted in இலங்கை செய்திகள்

புயல் முறிந்து விழுந்த மரங்கள்

புயல் முறிந்து விழுந்த மரங்கள்

புயல் முறிந்து விழுந்த மரங்கள் ,கொழும்பில் கடும் புயல் காரணமாக மரங்கள் முடிந்து விழுந்துள்ளன இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த இரவு வீசிய கடும் புயல் காட்டின் காரணமாக பல மரங்கள் விழுந்து வீடுகள் சுவர்களினை சேதமாகியுள்ளது.

சீரற்ற காலணி காரணமாகவே இந்த மரங்கள் விழுந்து முறிந்து வீடுகள் வீதிகள் வாகனங்கள் ,பொதுவுடமைகள், என்பன பலத சேதம அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு காலி வீதி கொள்ளுப்பட்டி, வெள்ளவத்தை , கிரன்பஸ், சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான மரங்கள் முறிந்து விழுந்து இருக்கின்றன.

இந்த மரங்கள் முறிந்து விழுந்தால் ஆறு வீடுகள் சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது அந்த சாலை வீதி போக்குவரத்தை தடை செய்யும் மரங்களை அதிலிருந்து அகற்றும் நடவடிக்கையில் மேற்கொள்ள பட்டு வருகின்றன .

மேலும் இந்த புயல் காற்றினால் பல வீடுகளுடைய கூரைகள் இடிந்து வீழ்ந்துள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இழப்பீட்டு நிதிகளை வழங்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.