செம்மணியில் ஒரு மனித புதைகுழி
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் ஒரு மனித புதைகுழி

செம்மணியில் ஒரு மனித புதைகுழி

செம்மணியில் தோண்ட தோண்ட மிதக்கும் மண்டையோடுகள் ஆகவே செம்மணி ஒரு மனித புதைகுழி என பிரகடணம் செய்யபப்டவுள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி சித்துபாத்தி மயானத்தை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் சமர்பணங்களை முன்வைக்க சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

செம்மணி – சிந்துபாத்தி மயானத்தில், அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையால் கடந்த பெப்ரவரி மாதம் குழிகள் வெட்டப்பட்டபோது, மனிதச் சிதிலங்கள் பல மீட்கப்பட்டிருந்தன.

அந்த மனிதச் மனிதச் சிதிலங்கள் 1995, 1996ஆம் ஆண்டுகளில் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகாரம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது.

இரண்டாம் நாளான 16ஆம் திகதி அகழ்வின், போது முழுமையான என்புத்தொகுதிக்கு மேலதிகமாக , மண்டையோடு ஒன்றும்,, கை எலும்பு ஒன்றும் மீட்கப்பட்டன.

இவை அனைத்தும் அகழ்வு செய்யப்படும் பகுதியின் வெவ்வேறு இடங்களில் இருந்து மீட்கப்பட்டதால், அந்த இடம் மனிதப் புதைகுழியாக இருக்கலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டிருந்தது.

அந்நிலையில் 17ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் பெய்த மழை காரணமாக அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில் , இன்றைய தினம் திங்கட்கிழமை மீள அகழ்வு பணிகள் ஆரம்பமான போது, ஏற்கனவே அகழ்வு பணிகள் இடம்பெற்ற பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி அப்பகுதி சகதியாக காணப்பட்டமையால்,

பிறிதொரு பகுதியில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் போது, ஐந்து மண்டையோடுகளுடன் , எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இது வரையிலான அகழ்வு பணிகளில் 07 மனித மண்டையோடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன் , எலும்பு கூட்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. மூன்று மண்டையோடுகளுக்கு மேல் ஒரு பகுதியில் அடையாளம் காணப்பட்டால்

அப்பகுதியினை மனித புதைகுழி என பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.

அதனால், அப்பகுதியை மனித புதைகுழி என பிரகடனப்படுத்துமாறு யாழ் . நீதவான் நீதிமன்றில் சமர்ப்பனங்களை முன்வைக்க உள்ளதாக சட்டத்தரணிகள் தெரிவித்துள்னர்.

ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏவுகணை

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏவுகணை

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏவுகணை விமானத்தளம் தற்பொழுது முடக்க பட்டுள்ளதக தாக்குதலை நடத்திய ஏமன் ஹவுதி அன்சார் அல்லா படைகள் தெரிவித்துள்ளன .

மீளவும் இஸ்ரேல் தலைநகர் டெல் அவி பகுதியில் அமைந்துள்ள பெண்குறியன் விமானத்தளத்தை இலக்கு வைத்து, ஹவுதி படைகள் சூப்பர் சொனிக் ஏவுகணைகளை கொண்டு தாக்குதலை நடத்தினர்.

இந்த தாக்குதலில் அந்த விமானத் தள பகுதியில் ஏவுகணைகள் விழுந்து வெடித்ததால் அந்த விமானத்தளம் மீளவும் மூடப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் சர்வதேச விமானங்கள் இந்த விமான தளத்தில் வந்து இறங்க அச்சம் கொண்டு வருவதால் ,இஸ்ரேலுடைய பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது.

கடல் மற்றும் தரைவழியான தாக்குதல் தீவிரமாக இடம்பெற்று வருவதால் ,இஸ்ரேல் இப்பொழுது மிகப்பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது.

எனினும் ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் தெரிவிப்பதுபோன்று, தமது படைகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்படவில்லை எனவும் ,அவரது ஏவுகணைகள்

அந்த விமானத்தை தாக்க வில்லை எனவும் பரப்புரை செய்கின்றனர்.

விழுந்தும் மீசையில் மண் ஓட்டாத கதையாக இது காணப்படுகிறது.

மக்களை தாக்கி படுகொலை செய்து வருகின்ற வேளையில். ஹவுதிப்படைகள் இந்த தாக்குதலை நடத்திக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா
Posted in இலங்கை செய்திகள்

தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா

தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா

தேசிய வரிவாரம் ஆரம்பித்தார் அனுரா ,தேசிய வரிவாரம் ஒன்றை ஆரம்பித்திருக்கின்றார் ஜனாதிபதி அனுரா குமர திசை நாயக்கா .

நாட்டில் இடம்பெற்று வருகின்ற பொருளாதாரச் சரிவினை அடுத்து ,மக்கள் மத்தியில் வரியினை அதிகமாக அறவிட்டு அதனூடாக, நாட்டை கட்டி எழுப்புகின்ற நடவடிக்கைகள் இவர் ஈடுபட்டுள்ளார்.

நாள்தோறும் விலைவாசிகள் அதிகரிப்பு

நாள்தோறும் விலைவாசிகள் ,அதிகரித்து வரும் நிலையிலும் மக்கள் பெரும் துயரை சந்தித்து வருகின்ற நிலையிலும்,

உப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்ற வேளையில் தற்பொழுது ,மக்கள் மீது வரியை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்கிறார்.

தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்ட அரசு

தற்சார்பு பொருளாதாரத்தை கைவிட்டு ,இறக்குமதியில் கவனம் செலுத்தி வரும் அனுரா ஆட்சி எப்படி தனது நாட்டினுடைய, வருமானத்தை அதிகரித்துக் கொள்ள முடியும்.

விழுந்து போய் கிடக்கின்ற பொருளாதாரத்தை, எப்படி நிமித்த முடியும்..? ஆனால் இன்றைய தனது அமைச்சர் சபையை கூட்டி தற்போது வரி விதம் தொடர்பான கூட்டத்தை ஆரம்பித்திருக்கின்றார்.

சிந்தனையற்ற ஒருவராகவும் நாட்டை எவ்வாறு வழிநடத்திச் செல்வது என்பது தொடர்பாக தெரியாத ஒருவராக அனுரா ஆட்சி திணறிவு வருகிறது.

8 மாதத்துக்கு தள்ளாடும் அனுராவின் ஆட்சியாகவே இது காணப்படுகிறது .இது அனுரா ஆட்சிக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் தோல்வியாக நோக்கப்படுகிறது.

பெண் ஒருவர் குத்திக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

பெண் ஒருவர் குத்திக் கொலை

பெண் ஒருவர் குத்திக் கொலை

பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ரம்புக்கல பகுதியில் காணி ஒன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் பெண் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்திக் குத்து தாக்குதலில்

இந்தக் கத்திக்குத்து தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர் 48 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமணம் முடித்த நிலையில் இருந்த பெண். வேறு ஒரு கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், அதனால் ஆத்திரம் கொண்ட அவர்கள் இவரை குத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலை நடத்தியவர் அந்த பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுவிட்ட நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

கள்ளத்தொடர்பு காரணமாக கொலை

கள்ளத்தொடர்பு காரணமாகவே இந்த பெண் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான கத்திவிட்டு தாக்குதலும் குத்துச்சம்பவங்களும் கள்ளத்தொடர்புகளால் ஏற்பட்டு வருகிறது.

ஒருவர் வழி மாறி சென்று சென்று விட்டால் அதை விட்டு கடந்து செல்வதை தவிர்த்து அதற்கு மறுத்து ,அவர்களை படுகொலை செய்கின்ற நடவடிக்கையில் , இவ்வாறான கூலி குழுக்களை ஈடுபட்டுள்ளது வேதனையை பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தப்பி ஓடிய 2983இராணுவம் கைது
Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய 2983இராணுவம் கைது

தப்பி ஓடிய 2983இராணுவம் கைது

தப்பி ஓடிய 2983இராணுவம் கைது ,தப்பி ஓடிய ராணுவத்தினரை மூல கைது செய்ய நடவடிக்கையில் இலங்கை பாதுகாப்பு படைகள் ஈடுபட்டன அதன் அடிப்படையில் தற்போது 2983 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில்

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இடம்பெற்ற யுத்தத்தில், அவர்களது தாக்குதளுக்கு ஈடு கொடுக்க முடியாது, சிங்கள படைகளின் கூலிப்படைகளாக வேலை செய்த ராணுவ சிப்பாய்கள் உயிரை பாதுகாக்க தப்பி ஓடினர்.

இவ்வாறு தப்பியோடிய ஐம்பதாயிரம் படைகளில் ,தற்பொழுது மீளவும் 3000 படைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக ,இலங்கை காவல்துறை தெரிவிக்கிறது.

பலமுறை பொது மன்னிப்பு வழங்கப்பட்டும் மீளவும் படையில் வந்து சேர மறுத்த ராணுவத்தினரே தற்பொழுது கைது செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படையை விட்டு தப்பி ஓடிய ராணுவ சிப்பாய்கள்

படையை விட்டு தப்பி ஓடிய ராணுவ சிப்பாய்கள் வேறு நாடுகளுக்கு சென்றுள்ளதான தகவலும் வெளியாகி இருக்கிறது.

புலிகள் சுத்தி வளைத்து திடீர் தாக்குதல் நடத்துவதால் உயிர் பயத்திலிருந்து ராணுவத்தினர் இவ்வாறு தப்பி ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு

பாணந்துறையில் திடீர் துப்பாக்கிச் சூடு சம்பவம் என்று இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

போத வஸ்து குழுக்களுக்கு இடையில் இடம்பெற்று வந்த முருகனை எடுத்து மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு நபர்கள் துப்பாக்கிச்சூட்டு தாக்குதலை நடத்தினர்.

இதன் பொழுது அந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திலிருந்து குறித்த நபர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுததாரிகள் திடீர் துப்பாக்கி சூடு

ஆயுததாரிகள் திடீர் துப்பாக்கி சூட்டை நடத்த முற்பட்டபோது துப்பாக்கி இயங்காத காரணத்தினால் அவர் தெய்வாதீனமாக தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சூட்டை நடத்த வந்தவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் போலீசார் தற்போது விசாரணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இதே பகுதியில் முதலாம் ஒரு துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற்றது .

இதை அடுத்து குறித்த பகுதியில் தற்போது மீளவும் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

துப்பாக்கி வேலை செய்யாததினால ஒருவர் உயிர் தப்பியுள்ளார் என்ற விடயம் மகழ்ச்சியை தருகிறது .குறிப்பிடத்தக்கது.

இலங்கை அகதிகளின் பாதுகாப்பு இந்தியா வலியுறுத்து
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு

இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு

இந்தியாவலியுறுத்து இலங்கை அகதிகளின் பாதுகாப்பு ,இந்தியாவிலிருந்து இலங்கைக்கு செல்லும் அகதிகள் குறித்து இந்தியா தனது கருத்தை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை

இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்று திருமாவளவன் எம்பி தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பியின் சகோதரர் நடேசன் (வயது 92) புதுச்சேரி லாஸ்பேட்டை அவ்வைநகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.

அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று மாலை அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் திருமாவளவன் எம்பி செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில்,

இந்திய அரசை நம்பி, தாயகம் திரும்பியவர்களை இலங்கை அரசு கைது செய்வது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது.

அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய பொறுப்பு இந்திய அரசுக்கு உள்ளது. இந்திய அரசு உடனடியாக இதில் தலையிட வேண்டும்.

தமிழகத்தில் இருந்து அல்லது இந்தியாவில் எந்த மாநிலத்தில் இருந்தும் இலங்கைக்கு அனுப்பப்படும் தமிழ் அகதிகளை பாதுகாப்பாக

அவர்களது இல்லத்துக்கு போய்ச்சேர உரிய நடவடிக்கைகளை இந்திய அரசும், தமிழக அரசும் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

யாழ். மாநகர சபையின் முஸ்லிம் பெண் பிரதிநிதி
Posted in இலங்கை செய்திகள்

யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி

யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி

யாழ்மாநகர சபையின் முஸ்லிம்பெண் பிரதிநிதி முதன்முதலாக யாழ் மாநகர சபையில் முஸ்லிம் பெண் ஒருவர் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழ். மாநகர சபையில் தனக்குக் கிடைத்த 3 (போனஸ்) பிரதிநிதிகளில் ஒன்றை, யாழ் முஸ்லிம் சமூகம் சார்பில், றிபைன் பாத்திமா றிஸ்லாக்கு தமிழரசு கட்சி வழங்கியுள்ளது.

உள்ளுராட்சி தேர்தல்

2025 ஆம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தல் பற்றிய விசேட வர்த்தமானி சனிக்கிழமை (31) வெளியிடப்பட்டது.

குறித்த அறிவித்தல் மூலம் நியமனம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையில் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் றிஸ்லா வேட்பாளராக களமிறங்கியிருந்தார்.

மாநகரசபைத் தேர்தலில், பட்டியல் வேட்பாளராக பாத்திமா றிஸ்லா ஆசிரியரை இலங்கை தமிழ் அரசுக் கட்சி தமது நியமன உறுப்பினராக நியமித்துள்ளது.

யாழ் மாநகரசபையின் முதல் முஸ்லீம் பெண்

இந்த நியமனத்தை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன் இதன்படி யாழ் மாநகரசபையின் முதல் பெண் பிரதிநிதியாக ஆசிரியை பாத்திமா றிஸ்லா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தை கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாணக்கிளைத் தொகுதி தலைவர் சிறில் மற்றும் செயலாளர் ஆர்னோல்ட் ஆகியோர் உறுதி செய்துள்ளனர்.

இலங்கையில் கொரோனா தீவிரம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரோனா தீவிரம்

இலங்கையில் கொரோனா தீவிரம்

இலங்கையில் கொரோனா தீவிரம் அண்மை நாட்களாக வேகமாக பரவிவரும் கொரொனா தொற்று இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.

ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்ததாவது,

ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபு

ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபுகளான LF.7 மற்றும் XFG எனும் புதிய வைரஸ் வகைகள் நாட்டில் உள்ள சில நோயாளிகளிடையே கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் பொதுமக்கள் இவ்வாறான கொவிட் -19 திரிபுகள் தொடர்பாக வீண அச்சத்தை ஏற்படுத்தி கொள்ளத் தேவையில்லை.

அதிக ஆபத்துள்ள பிரிவினர் என சுட்டிக்காட்டப்படும் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் நோய்குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

மீண்டும் முகக்கவசம்

அத்தோடு பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவதுடன் கொவிட்-19 பரவலின் போது பின்பற்றிய சுகாதார நடைமுறைகளை மீள பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.

இந்நாட்களில் சனநெரிசலான பகுதிகளில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

கொவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள் காலத்துக்கு ஏற்ற அவ்வப்போது பரவுகின்றன. இருப்பினும், இதனை சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக கவனித்து வருவதால் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், காலி தேசிய வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த ஒரு மாத பச்சிளம் குழந்தைக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிடுகையில், உயிரிழந்த குழந்தையின் உயிரியல் மாதிரி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர்

மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வைரஸ் தற்போது ஆசியாவில் பரவி வரும் கொவிட்-19 திரிபு இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.

முல்லைத்தீவில் சிறுவன் உட்பட இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி

முல்லைத்தீவில் சிறுவன்உட்பட இருவர் பலி முல்லைத்தீவில் 10 வயதுடைய சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்தமை அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உடுப்புக்குளத்தில் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்ற இருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (01) அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதி

முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் உள்ள குளத்தில் இருவர் தோணியில் தாமரைப்பூ பறிக்க சென்றவேளை தோணி கவிழ்ந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை

இதன்போது தோணியில் இருந்த இருவரும் நீரிற்குள் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் அளம்பில் தெற்கில் வசிக்கும் 10 வயதுடைய சி.பிரணவன், 25 வயதுடைய இ.நிஷாந்தன் எனும் இருவரே உயிரிழந்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதே நேரம் ஞாயிற்றுக்கிழமை (01) பிற்பகல் குமுழமுனை ஆலய கேணியை பார்வையிட சென்ற இரு மாணவிகள் கேணியில் தவறி வீழ்ந்து உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள்

முல்லைத்தீவில் 2 மாணவிகள் உயிரிழப்புக்கள் முல்லைத்தீவில் இரண்டு பாடசாலை மாணவிகள் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களை கவலையில் மூழ்கவைத்துள்ளது.

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணி

குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் ஞாயிற்றுக்கிழமை (01) படம் எடுக்க சென்ற இரு யுவதிகள் தவறி விழுந்த நிலையில் ஆபத்தான நிலையில்

மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

முல்லைத்தீவு – குமுழமுனை கொட்டுக்கிணற்று பிள்ளையார் ஆலய கேணியில் படம் எடுப்பதற்காக இரு யுவதிகள் சென்றுள்ளனர். கேணிக்குள் இறங்கி படமெடுக்கும் போது இருவரும் கேணிக்குள் தவறி விழ்ந்துள்ளனர்.

மாஞ்சோலை வைத்தியசாலை

இந்நிலையில் குமுழமுனை இளைஞர்களால் மீட்கப்பட்டு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்த இரு மாணவிகளும். பூதன்வயல், மாமூலை பகுதியில் வசிக்கும் தரம் 10 இல் கல்விகற்கும் வித்தியானந்த கல்லூரி மாணவிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கிளிநொச்சி கிணறுகளில் மலத்தொற்று
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சி கிணறுகளில் மலத்தொற்று

கிளிநொச்சி கிணறுகளில் மலத் தொற்று

கிளிநொச்சி கிணறுகளில் மலத் தொற்று கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை கிணற்று நீரில் மலத்தொற்று இருப்பது ஆய்வில் கண்டயறிப்பட்டு தற்போது தொற்று நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கிளி வைத்தியசாலை வளாகத்தில் உள்ள கிணற்று நீர் வைத்தியசாலையின் அனைத்து தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குடிநீருக்கும் இந்த பெறப்பட்டு வைத்தியசாலைக்குள் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் சுத்திகரிக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.

ஏனைய தேவைகளும் நேரடியாக குறித்த கிணற்று நீர் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நீரில் ஒரு சில நாட்களுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் மலத்தொற்று (ஈகோலி) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மலத்தொற்றை நீக்கியாக குளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வைத்தியசாலையில் கிணற்றில் காணப்படும் மலத்தொற்று கிருமிகளை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழர்ளின் கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நகரையும் நகரை அண்டிய பிரதேசங்களிலும் பெரும்பாலான கிணறுகளில் மலத்தொற்று காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் கிளிநொச்சி மாவட்டத்தின் நகரையும் நகரை அண்டிய பகுதிகளின் பொது கிணறுகள் உள்ளிட்ட சில கிணறுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் படி பல கிணறுகளில் மலத்தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.

எனவே பொது மக்கள் கிணற்று நீரை குடிப்பதற்கு பயன்படுத்துகின்ற போது நன்கு சுட வைத்து பயன்படுத்த வேண்டும் அல்லது கிணற்றில் குளோரின் இட்டு தொற்று நீக்க வேண்டும் என சுதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

சீரற்ற காலநிலையால் மலையக மக்கள் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சீரற்ற காலநிலையால் மலையக மக்கள் பாதிப்பு

சீரற்ற காலநிலையால் மலையக மக்கள் பாதிப்பு

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலையால் மலையக மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

காற்றுடன் கூடிய மழையின் காரணமாக பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் 319ஜி கிராம சேவகர் காரியாலயத்திற்குட்பட்ட பகுதியில் மாத்திரம் 36 குடும்பங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொகவந்தலாவை கெர்க்கஸ்வோல்ட் எல்பட மேல்பிரிவு. மத்திய பிரிவு சிங்காரவத்தை ஆகிய தோட்ட பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதிக்கப்ட்டுள்ளனர்.

காற்றுடன் வீசிய மழைகாரணமாக பொகவந்தலாவை எல்பட மேல்பிரிவு தோட்டப்பகுதியில் உள்ள தொடர் லயன் குடியிருப்பு ஒன்றின் கூரை தகடுகள் காற்றுக்கு அள்ளுண்டு சென்றமையினால்

அக்குடியிருப்புகளில் வாழும் மக்கள் பல்வேறு அசெளகரியங்களை எதிர் நோக்கியுள்ளனர்.

இந்த அனர்த்தம் காரணமாக 75 ஆண்களும் 75 பெண்களும் மற்றும் 50 சிறுவர்களும் உள்ளடங்குவதாக பிரதேசத்திற்கு பொருப்பான கிராம உத்தியோகத்தர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் தற்காலிக மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு உணவுகளும் பாதிக்கப்பட்டு சொந்த குடியிருப்பில் இருப்பவர்களுக்கு ஒரு தொகை பணமும்

நோர்வூட் பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்ட உள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்தது.

மேலும், குறித்த பகுதியில் பாரி மரமொன்று சரிந்து மின்கம்பத்தின் மீது விழுந்தமையினால் அப்பகுதிக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை வீசிய பலத்த காற்று காரணமாக நோர்வூட் பிரதேச சபையின் களஞ்சியசாலையின் அறையின் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்தமையினால் குறித்த அறை முற்றாக சேதமடைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புலிகள் நகைக்கு உரிமைகோரும் ஒட்டுக்குழு
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் நகைக்கு உரிமைகோரும் ஈபிடிபி

புலிகளின் நகைக்கு உரிமைகோரும் ஈபிடிபி

புலிகளின் நகைக்கு உரிமைகோரும் ஈபிடிபி ,புலிகளின் வைப்பகத்தில் நகைகளை அடைவு வைத்தவர்கள் அதற்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கும் பட்சத்தில், அவற்றுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை அரசாங்கம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி,

அவ்வாறு அடைவு வைக்கப்பட்டமைக்கான ஆவணங்கள் தங்களுடைய கட்சி உறுப்பினர்களிடமும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

மேலும், மாகாண சபைக்கான அதிகாரங்கள் சூட்சுமமான முறையில் மீளப் பெறுப்படும் செயற்பாடு தொடருகின்ற நிலையில் அதுதடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி

யாழ். ஊடக மையத்தில் நேற்று (31) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந் பன்னீர்செல்வம் மற்றும் கிளிநொச்சி

மாவட்ட செயற்பாட்டாளர்களுள் ஒருவரான எஸ். சுந்தராம்பாள் ஆகியோர் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே குறித்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டன.

இவை தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற மன்னார் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் மன்னார் மாவட்ட வைத்தியசாலையை மத்திய அரசாங்கதிற்கு கையளிப்பதற்கான தீர்மானம் தொடர்பிலே, எமது நிலைப்பாட்டினை தெரிவிக்க வேண்டும்.

மாகாண சபையினை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வே அரசியல் தீர்விற்கான ஆரம்ப கொண்டு முன்னோக்கி செல்ல வேண்டும் என்பதை

வலியுறுத்துகின்ற தரப்பு என்ற அடிப்படையிலே, மாகாணத்தின் அதிகாரங்கள் மத்திய அரசாங்கத்திடம் கையளிக்கப்படுவதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது.

1987 ஆண்டு உருவாக்கப்பட்ட இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அடிப்படையில் 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மாகாணசபை சட்டத்தின் அடிப்படையில், மாகாணங்களுக்கு

வழங்கப்பட்ட அதிகாரங்களில் சில காலத்திற்கு காலம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களானால் மீளவும் மத்திக்கு எடுக்கப்பட்டிருக்கின்றது. சில முயற்சிகள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றன.

மாகாண அதிகாரங்களை மத்திக்கு திருப்பி எடுக்கு முயற்சி

ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினராகிய நாம், எமக்கு கிடைத்த அதிகாரங்களை பயன்படுத்தி, மாகாண அதிகாரங்களை மத்திக்கு திருப்பி எடுக்கு முயற்சிகளை கடந்த காலங்களில் எமது தேசிய நல்லிணக்க வழிமுறைகளின் ஊடாக தடுத்து நிறுத்தி இருக்கின்றோம்.

குறிப்பாக, 2012 ஆம் ஆண்டு காலப் பகுதியில் மாகாண சபையின் முக்கியமான பல அதிகாரங்களை மீளவும் மத்திய அரசாங்கத்திற்கு எடுத்துக் கொள்வதன் மூலம், மாகாணசபை முறைமையை இல்லாமல் செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அப்போது, ஆளுந்தரப்பில் பங்காளிகளாக இருந்த நாம், அந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த தமிழ் பேசும் பிரதிநிதிகளையும் மாகாண சபை தொடர்பான நியாயத்தினை

புரிந்து கொண்ட சிங்கள முற்போக்கு சக்திகளையும் ஒருங்கிணைத்து சுமார் 50 மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் எதிர்ப்புக்களை தெரிவித்து அதனை தடுத்து நிறுத்தியிருந்தோம்.

அதேபோன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட மாவட்ட வைத்தியசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுக்கின்ற திட்டத்தின் அடிப்படையில் கிளிநொச்சி,

முல்லைத்தீவு, மன்னார் போன்ற மாவட்ட வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த விவகாரம் அமைச்சரவைக்கு வந்தபோது, மாகாண சபை அதிகாரத்திற்கு உட்பட்ட குறித்த மூன்று வைத்தியசாலைகளையும் மத்திய அரசாங்கம் பொறுப்பெடுப்பது எமது அரசில் அபிலாசைகள் தொடர்பில் ஏமாற்றத்தினை

ஏற்படுத்தும் என்பதை வலியுறுத்தி அந்த திட்டததினை தடுத்து நிறுத்தியிருந்தோம். அதேபோன்று, 1,000 தேசிய பாடசாலை திட்டத்தின் மூலம்

மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான நடவடிக்கை

எமது பகுதிகளில் பல மாகாண பாடசாலைகளை மத்திய அரசாங்கத்தினுள் எடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனை தடுத்து நிறுத்துவதற்கான அரசியல் சூழல் இல்லாத நிலையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆட்சிக்கு வந்ததும், அந்த திட்டத்தினையே கைவிடச் செய்ததில் காத்திரமான பங்களிப்பினை வழங்கியிருந்தோம்.

இவ்வாறான பின்னணியிலேயே தற்போது மன்னார் வைத்தியசாலை விவகாரம் பேசுபொருளாக்கப்பட்டிருக்கிறது. இதுதொடர்பாக நாம் அவதானமாக இருக்க வேண்டும்.

குறிப்பாக மாகாண சபையை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வை ஏற்றுக்கொள்ளாத 6 தரப்பினர் ஆளுந்தரப்பாக இருக்கின்ற நிலையில், எமது அரசியல்

அபிலாசைளுக்கான அடிப்படையாக கொண்ட மாகாண சபை அதிகாரங்களை வலுவிழக்க செய்கின்ற, மத்திய அரசாங்கத்தினால் பிடுங்கி எடுக்கப்படுகின்ற அபாயம் அதிகளவில் இருக்கின்றது.

எனவே தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக எமது மக்களின் நலன்சார்ந்த தரப்புக்கள் ஒவ்வொன்றும் கண்ணில் எண்ணெய் ஊற்றி விடயங்களை அவதானிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.

உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு

அதேபோன்று, உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் புலிகளின் வங்கியில் அடைவு வைக்கப்பட்ட நகைகள் என்று ஒரு தொகுதி தங்க நகைகள் அரசாங்கத்தினால் காண்பிக்கப்பட்டது.

இறுதிக் காலகட்டத்தில் அப்போதைய சந்தைப் பெறுமதிப்படி சுமார் 9 கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் இருந்ததாக சொல்லப்படுகின்ற போதிலும், அந்தளவு நகைகள் தற்போது காண்பிக்கப்படவில்லை.

அதேபோன்று, நகைகளை அடைவு வைத்தவர்கள் அனைவரும் தற்போது இருக்கின்றார்கள் என்பதற்கோ, இருந்தாலும் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பாதுகாப்பாக இருக்கும் என்பதோ எதிர்பார்க்க முடியாதது.

எனவே, யாதார்தத்தினை புரிந்து கொண்டு நகைகளை அடைவு வைத்தமைக்கான ஆவணங்களை சமர்ப்பிப்பவர்களுக்கு, அவர்கள் அடைவு வைத்த தங்க நகைகளுக்கான தற்போதைய சந்தைப் பெறுமதியை வழங்குவதற்கு அரசாங்கம்

முன்வர வேண்டும். அடைவு நகை விவகாரத்தினை வெறுமனவே தேர்தல் வாக்குறுதியாக கடந்து செல்லாமல் விரைவான நடவடிக்கை முன்வைக்கப்பட வேண்டும் எனவும் ஈ.பி.டி.பி. வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமஉரிமை எல்லோருக்கும் மீனவ அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள்

சமஉரிமை எல்லோருக்கும் மீனவ அமைச்சர்

சமஉரிமை எல்லோருக்கும் மீனவ அமைச்சர்

சமஉரிமை எல்லோருக்கும் மீனவ அமைச்சர் ,இந்நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் மக்கள் மத்தியில் முதலில் நாடு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். எமது ஆட்சிகாலத்தில் அதற்குரிய நடவடிக்கை

எடுக்கப்படும்.” என கடற்றொழில் மற்றும் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஒருங்கிணைப்பில், ‘யாழ்ப்பாணம் முதலீடு மற்றும் வர்த்தக மன்றம் – 2025’ தலைப்பிலான கலந்துரையாடல் அரியாலை ஜே ஹொட்டலில் அண்மையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகப் பங்கேற்ற அமைச்சர் தனது உரையில் மேலும் கூறியவை வருமாறு,

ஜனாதிபதி அனுரா உறுதியாக உள்ளார்.

வடக்கை மேம்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார். அண்மையில் யாழ். சென்றபோது அங்கு என்ன செய்ய வேண்டும் என ஜயசூரிய கேட்டார்.

சர்வதேச விமான நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.

இப்படி வடக்கு குறித்து பல வழிகளிலும் சிந்திக்கப்படுகின்றது. எவ்வித பிரிவினையும் இன்றி அனைத்து மக்களுக்கும் சம உரிமை என்பதே எமது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும்.

முதலீட்டாளர்கள் வடக்குக்கு வரவேண்டும்

முதலீட்டாளர்கள் வடக்குக்கு வரவேண்டும். இங்குள்ள துறைகளில் முதலீடுகளை செய்ய வேண்டும். இங்கு வந்துள்ள முதலீட்டாளர்களுக்கும் இந்த அழைப்பை விடுக்கின்றேன்.

புலம்பெயர் தமிழர்கள் இது தொடர்பில் கூடுதல் கரிசனை செலுத்த வேண்டும். முதலீட்டாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள். அவர்களுக்குரிய வசதிகள் செய்துகொடுக்கப்படும்.

தமிழ் மக்களின் இருப்பு பற்றி கவலை வெளியிடுகின்றனர். இங்குள்ளவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதால்தான் இருப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றது.

எனவே, இலங்கை நம்பிக்கையான நாடுதான் என்ற நம்பிக்கையை அவர்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன், இலங்கை – கனடா வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள், முதலீட்டாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இருவர் கோரமாக வெட்டி படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

இருவர் கோரமாக வெட்டி படுகொலை

இருவர் கோரமாக வெட்டி படுகொலை

இருவர் கோரமாக வெட்டி படுகொலை ,பூநகரி மற்றும் களவாணி காவல்துறை பிரிவிக்கு பாவி உட்பட்ட பகுதியில் இது வரும் வட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக அந்த பகுதி காவல்துறை இனத்தெருவித்துள்ளனர்.

இது குழுக்களுக்கு இடையான நீண்ட கால தர்க்க வாக்குவாதங்களை எடுத்து கூறிய ஆயுதத்தால் அவர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக குற்றத் தடுப்பு பிரிவின தெரிவித்துள்ளார்.

தனிநபர் தாக்குதல் வஞ்சம் காரணமாகவே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளதாக மக்களும் பொலிசாரும் தெரிவித்த வருகின்றனர்.

இந்த வெட்டு தாக்குதலில் பிறந்தவர் 42 வயதானவரிடம் இவர் பூநகரி சம்பவம் கொண்டு பகுதியை சேர்ந்தவரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று வேறு ஒருவர் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இறந்தவர் காணியின் காவலாளியாக வேலை செய்து உள்ளதாகவும் அப்பொழுது அவர் சுடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வீட்டில் மகளுடன் தனியாக வசித்து வந்த உள்ள அவரை இப்பொழுது இவ்வாறு மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென இவர் மீது இந்த வாழ்வட்டு தாக்குதல் நடத்தப்பட்டது ஏன் படுகொலை செய்யப்பட்டது என்பது தொடர்பாகவே இப்பொழுது பல்வேறுப்பட்ட சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இது அரசியல் பின்புலத்தில் நடத்தப்பட்டதா எனது தாக்குதலாக இடம்பெற்ற தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக வாழ்பட்டு தாக்குதல் ரவுடி குழுக்களின் தாக்குதல் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் என அதிகரித்து காணப்படுவதும் பேருந்து விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மிகப் பெரும் அதிர்ச்சியை அதிபர்களை ஏற்படுத்தி உள்ளது.

துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது

துப்பாக்கிச்சூடு சந்தேகநபர் கைது ,பாணாந்துறை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு சம்பந்தர் அவர்கள் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் உள்ள உதிரி பாகங்கள் விற்பனை வியத்துக்கு முன்பாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அப்பொழுது சம்பவத்துக்கு உதவி விருந்த சந்துகன் அவர் ஒருவர் தற்பொழுது குற்றத் தடுப்பு பிரிவுகளாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரும் மோட்டார் சைக்கிள் செலுத்தினர் சம்பவத்திற்கு முந்தின இரவு சந்தேக நபரின் வீட்டில் தங்கி இருந்ததாக தெரியவந்துள்ளது.

தனிப்பட்ட புலன் காரணமாகவும் சொத்து பத்து ஆசை தொடர்பாகவுமே இந்த துப்பாக்கி சூடு சம்பவம் இடம்பெற காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டமிடப்பட்ட படுகொலை சம்பவத்தின் பின்புலம் என்னை என்பதும் ஏன் இவர்கள் இவரை படுகொலை செய்யமுள்ள பாகும் தற்போது விசாரணங்கள் இடம் பெற்று வருகின்றன.

இவை திட்டமிடப்பட்ட அரசியல் பழிவாங்கல தனிநபர் தாக்குதல் என்பது முழுமையாக தெரியவில்லை.

இலங்கையில் தற்பொழுது ஆளும் அனுராதா ஆட்சியில் நாடெங்கிலும் துப்பாக்கி சூடு சமூகங்கள் அதிகரித்து காணப்படுவதும் ,அதனால் பலர் பலியாகி காயமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேகமாக பரவும் சிக்குன்கன்யா நோய்
Posted in இலங்கை செய்திகள்

வேகமாக பரவும் சிக்குன்கன்யா நோய்

வேகமாக பரவும் சிக்குன்கன்யா நோய்

வேகமாக பரவும் சிக்குன்கன்யா நோய் குழந்தைகளிடையே இன்ஃப்ளூயன்ஸா, சிக்குன்கன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாகக் லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

அண்மைய சீரற்ற வானிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்குன்கன்யா நோய்கள் அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டுகிறார்.

அதன்படி, நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

டெங்கு மற்றும் சிக்குன்கன்யா அறிகுறிகளைக் கொண்ட குழந்தைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதாகவும், டெங்கு ஆபத்தானது என்றும், சிக்குன்கனியா ஏற்பட்ட பிறகு மக்கள் பல மாதங்களுக்கு மூட்டு வலியால் அவதிப்படுவார்கள் என்றும் வைத்திய நிபுணர் கூறினார்.

அத்துடன் கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் முதியவர்கள் சிக்குன்கன்யாவால் பாதிக்கப்பட்டால், அது தீவிரமாக இருக்கலாம் என்றும், இந்த நிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்குப் பிறக்கும் குழந்தையையும் பாதிக்கலாம் என்றும் வைத்திய நிபுணர் சுட்டிக்காட்டினார்.

இன்றைய காலகட்டத்தில் இன்ஃப்ளூயன்ஸா நோய் நிலை அதிகரித்து வருவதாலும், இந்த நோய் குழந்தைகளிடையே வேகமாகப் பரவக்கூடும் என்பதாலும் பொதுமக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வைத்திய நிபுணர் டாக்டர் தீபால் பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.

வானிலை சீற்றம் 10000பேர் பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வானிலை சீற்றம் 10000பேர் பாதிப்பு

வானிலை சீற்றம் 10000பேர் பாதிப்பு

வானிலை சீற்றம் 10000பேர் பாதிப்பு நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 14 மாவட்டங்களைச் சேர்ந்த 140 பிரதேச செயலகப் பிரிவுகளில் 2,757 குடும்பங்களைச் சேர்ந்த 10,270 பேர் பாதிக்கப்பட்டுள்ள.து

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

பெய்து வரும் பலத்த மழையை கருத்தில் கொண்டு நாடு முழுவதும் உள்ள பல நீர்த்தேக்கங்களில் பல வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், நிலவும் சூழ்நிலையில் 05 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நேற்று (01) நடவடிக்கை எடுத்தது.

காலி, கண்டி, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் பல பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஸ்ட புவியியலாளர் கலாநிதி வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

வெளியிடப்பட்ட மண்சரிவு எச்சரிக்கைகள் இன்று மாலை 4 .00 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சீரற்ற வானிலை காரணமாக முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் (அனர்த்த முகாமைத்துவ பிரிவு) கே.ஜி. தர்மதிலகா தெரிவித்துள்ளார்.

வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு மேலதிகமாக, அனர்த்தங்களால் காயமடைந்தவர்களுக்கு ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி, கனமழை மற்றும் காற்று காரணமாக நாடு முழுவதும் 55,940 மின் தடைகள் பதிவாகியுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இவற்றில் பல ஏற்கனவே சரி செய்யப்பட்டுள்ளதாகவும் சபை தெரிவித்துள்ளது.

தொடர்ச்சியான மின்சாரம் வழங்க குழுக்கள் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலைமை இன்று (01) முதல் படிப்படியாகக் குறையும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றும் பல மாவட்டங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மனிதஉரிமை ஆணையாளர் இலங்கை வருகை
Posted in இலங்கை செய்திகள்

மனிதஉரிமை ஆணையாளர் இலங்கை வருகை

மனிதஉரிமை ஆணையாளர் இலங்கை வருகை

மனிதஉரிமை ஆணையாளர் இலங்கை வருகை ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வொல்க்கெர் டேர்க் இந்த மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் இதனை உறுதி செய்துள்ளன எனினும் மனித உரிமை ஆணையாளரின் விஜயத்திற்கான திகதி இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என அவை தெரிவித்துள்ளன.

அரசாங்கம் மனித உரிமை ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் ஒருவர் ஒன்பது வருடங்களின் பின்னர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இறுதியாக 2016 பெப்ரவரியில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவி வகித்தவேளை செய்த் ராத் அல்ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

சர்வதேச சமூகத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள மனித உரிமை கரிசனைகளை எவ்வாறு கையாள்வது என தெரியாமல் அரசாங்கம் தடுமாறிக்கொண்டிருக்கின்ற ஒரு நிலையில்

அவுஸ்திரேலிய பிரஜையான வோல்க்கெர் டேர்க் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னதாக கடந்த வருடம் ஆகஸ்ட்மாதம் வெளியிட்ட அறிக்கையில் புதிதாக தெரிவு செய்யப்படும் அரசாங்கம்

இனமோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தீர்வை காணவேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

பொறுப்புக்கூறலில் காணப்படும் இடைவெளியை நிரப்புவதற்கும் நல்லிணக்கத்தை நோக்கி முன்னேறுவதற்கும் அரசாங்கம் அடிப்படை அரசமைப்பு நிறுவன ரீதியான மாற்றங்களை முன்வைக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தவேண்டும்,என்ற பரிந்துரையையும் அவர் முன்வைத்திருந்தார்.

வோர்க்கெர்டேர்க்கிற்கு முன்னர் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக பணியாற்றிய மிச்செலே பச்செலெட் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விருப்பத்தை வெளியிட்டிருந்தார் எனினும் அது சாத்தியமாகவில்லை.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் போர்கால உரிமை மீறல்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்காக இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை உருவாக்கியுள்ளது,

இலங்கை இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றது.