உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்
Posted in இலங்கை செய்திகள்

உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்

உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர்

உப்புவிற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் ,உப்பு விற்கச் சென்ற அமைச்சர் சந்திரசேகர் செயல்பாடுஆனையிறவு உப்புளத்தில் இடம்பெற்றுள்ளது.

ஆனையிறவு உப்பள கூட்டுத்தாபனம் மூலமும் செயற்பாட்டுக்கு ஆரம்பித்து செயல்பட்டு வருகிறது.

இங்கு உப்பு உற்பத்தி தொடர்பான விடயங்கள் தற்பொழுது பேசுபொருளாக்கப்பட்டு வருகிறது.

மீன்பிடி அமைச்சர் சந்திரசேகர்

மீன்பிடி அமைச்சராக விளங்கும் சந்திரசேகர் அங்கு சென்று அங்குள்ள நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

யட்டி விற்பனையை மறந்து தற்பொழுது உப்பு வியாபாரியாக மாறியிருக்கும் அமைச்சர் சந்திரசேகர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

தங்களுடைய பகுதிகளில் உப்பு 700 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாக புதிய தகவல் வழியாக இருக்கிறது.

உப்பு தட்டு பாட்டில் இருந்து மக்களை பாதிப்பில் இருந்து காப்பாற்ற தவறிவரும் மீன்பிடி அமைச்சர் ,மீன்பிடிக்கவும் செல்வதில்லை, அதை விடுத்து இப்பொழுது உப்பு வியாபாரத்தில் உப்பு வியாபாரியாக மாற்றப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சமீப காலங்களாக ஜட்டி வியாபாரத்தில் அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாணத்தில் சமீப காலங்களாக ஜட்டி வியாபாரத்தில் ஈடுபட்ட இவர் தற்பொழுது அதை நிறுத்திவிட்டு, இப்பொழுது உப்பு வியாபாரத்தில் ஒருவராக உப்பு வியாபாரிகள் தெரிவித்து வருகிறார்கள்.

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர் விளக்கம்

பிரபாகரனுக்கு சிலையா சந்திரசேகர்விளக்கம் ,பிரபாகரனுக்கு சிலையா நான் சொன்னேனா என்ன சொன்னேன் என சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.

“எமது தலைவர் ரோஹண விஜேவீரவுக்கு சிலை வைக்க வேண்டும் என்று கூட இதுவரை எங்கும் கூறாத நான், பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பில் கூறுவேனா?

நான் ஒருபோதும் எங்கும் அவ்வாறு எந்த கருத் தையும் தெரிவிக்கவில்லை” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று

பாராளுமன்றத்தில் நேற்று (22) வியாழக் கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்தே இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் கூறுகையில்,

நான் சபையில் இல்லாத சந்தர்ப்பத்தில் ஹர்ஷன ராஜகருணா எம்.பி. தவறான கூற்றொன்றை நான் கூறியதாக சபையில் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுக்கு சிலை

பிரபாகரனுக்கு சிலை வைப்பது தொடர்பாக நான் சபையில் தெரிவித்ததாகவும் அர்ச்சுனா எம்.பி. அதனை அவருக்குக் கூறியதாகவும் அவர் இங்கு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் எந்த சந்தர்ப்பத்திலும் நான் அவ்வாறு எதனை யும் கூறவில்லை. எனது கட்சியின் தலைவர் ரோஹண விஜேவீர, நான் அவருடன் நெருக்கமாகப் பழகியவன்.

அவர் மறைந்தாலும் அந்த நினைவுகளும் உணர்வுகளும் என்றும் எனக்குள் இருக்கின்றன.

யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம்

யாழ் ஒருங்கிணைப்பு தலைவராக அமைச்சர் சந்திரசேகர் நியமனம் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக கடற்றோழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியினால் கடந்த 28 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் வகையில் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக பாராளுமன்ற

உறுப்பினரும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவரது நியமனம் தொடர்பாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் போராசிரியர் ஏ. எச்.எம்.எச். அபயரத்ன

அவர்களினால் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருக்கு முகவரியிடப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் மூலம் அறியத்தரப்பட்டுள்ளது.

Posted in சினிமா

எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு – எஸ்.ஏ.சந்திரசேகர்

எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு – எஸ்.ஏ.சந்திரசேகர்

புரட்சி இயக்குனர்கள் என்று பெயர் பெற்ற நீங்கள் ஏன் இளைஞர்களுக்கான படம் என்று மாறினீர்கள்?
இப்போது தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இதுபற்றி கடந்த 5 ஆண்டுகளாக ஆய்வு செய்ததில் தியேட்டர்களுக்கு வருபவர்களில் 80 சதவீதம் பேர் இளைஞர்கள் தான். எனவே இளைஞர்களுக்கான படம் எடுக்க விரும்பினேன். அந்த இளைஞர்கள் எதை விரும்புகிறார்கள் என்பதை அப்டேட் செய்துகொண்டேன். புதிய இளைஞர்களின் படங்களையும் பார்த்து இந்த கதையை எழுதினேன். இளைஞர்களுக்கு இந்த படம் சில புரிதல்களை ஏற்படுத்தும். ரத்தக்கண்ணீர் எம்.ஆர்.ராதா போல இன்றைய இளைஞர்கள் ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுகிறார்கள். எல்லாவற்றுக்குமே எல்லை உண்டு. எல்லை மீறும்போது ஏற்படும் பிரச்சினைகளும் சிக்கல்களுமே கதை. அறிவுரையாக இல்லாமல் சுவாரசியமாக சொல்லி இருக்கிறேன்.

எஸ்.ஏ.சந்திரசேகர் தனது 70வது படமாக கேப்மாரி படத்தை இயக்கி இருக்கிறார். ஜெய், அதுல்யா, வைபவி சாண்டில்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம் இந்த மாதம் வெளியாக இருக்கிறது. இதையொட்டி எஸ்.ஏ.சந்திரசேகர் அளித்த பேட்டி:-

எஸ்.ஏ.சந்திரசேகர்

கேப்மாரி என்ற தலைப்பு ஏன்?
ஆங்கிலேயர் காலத்தில் தொப்பியை மாற்றி மாற்றி போட்டு ஏமாற்றுபவர்களை கேப் மாறி விளையாடுபவர்கள் என்று அழைக்க தொடங்கி பின்னர் கேப்மாரி என்ற வார்த்தை கெட்ட வார்த்தை போல மாறிவிட்டது. ஒரு இளைஞன் 4 பெண்களுடன் விளையாடுகிறான் என்னும்போது இந்த தலைப்பு பொருத்தமாக இருந்தது. வாழ்க்கையை கொண்டாட்டமாக எடுத்துக்கொண்டு எதையும் எளிதாக எடுத்துக்கொண்டு வாழும் ஜாலியான பையன் கதாபாத்திரத்துக்கு ஜெய் பொருந்தினார். அவர் படத்துக்குள் வந்த பிறகு படமே எளிதாகி விட்டது. அதுல்யாவும் வைபவியும் கூட நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள். மூவரையும் வேலை வாங்கியது எனக்கு எளிதாக இருந்தது. காமெடி வேடத்தில் சித்தார்த் விபின் கலக்கி இருக்கிறார். படம் பார்ப்பவர்கள் 2 மணி நேரம் ஜாலியாக படத்தோடு ஒன்றி பார்க்கலாம்.