ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா
Posted in இலங்கை செய்திகள்

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா

ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும்அனுரா ,ரயில்வே ஊழியர் போராட்டம் திணறும் அனுரா அரசின் ஆட்கள் ஆட்டம் தற்பொழுது ஆரம்பித்துள்ளது.

சம்பள உயர்வு கோழியும் தமது பணி காலத்தின் அடிப்படையில் அவருக்கான ஊதியத்தினை உரிய முறையில் வழங்க வேண்டும் என கூறி இந்த போராட்டம் நடைபெற்று வருகிறது.

தனது ஆட்சியில் மக்கள் சுகபோகமாக வாழ்வதாக பரப்புரை செய்துவரும் அரசின் ஆட்சியின் உச்சந்தலையில் இவர்கள் குட்டை போட்டுள்ளார்கள்.

தமது மணி நேரத்துக்கான ஊதியம் போதாமை உள்ளதாகவும் அதை அதிகரிக்கும் அவர்கள் கோரிக்கை விடுத்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தற்பொழுது ரயில்வே சேவைகள் சற்று பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் மேல் கடனை வாங்கி நாட்டை ஒட்டி செல்லும் அனுரா அரசு மிக விரைவில், கவிழ்க்க பட கூடிய அபாயம் இருப்பதற்கான, முன்னெச்சரிக்கையாக இந்த மக்கள் எதிர் போராட்டம் காணப்படுகிறது.

தற்பொழுது அரசு ஊழியர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருவதால், எதிர்வரும் காலங்களில் மக்களும் விலைவாசிகள் எகிறிவிட்டதாக தெரிவித்து ,அனுராவுக்கு எதிரான போராட்டங்களை நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் இப்பொழுது இந்த ரயில்வே ஊழியர்கள் பணி புறக்கணிப்பு என்பது அனுராவுக்கு விடுக்கப்படும் முதல் எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது.

அப்படியென்றால் விரைவில் அனுரா ஆட்சி கவிழ்க்கப்பட போவதற்கான முன்னறிவிப்பாக இதை எடுத்துக் கொள்ளலாம்.

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

6 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அவசரமாக விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாகவே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கொழும்பு .காலி , களுத்துற, கண்டி ,சேகால, இரத்தினபுர பகுதிகள் மற்றும் ,அதனை அறிவித்த பல பகுதிகளுக்கு இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதே பகுதிகள் மற்றும் அதனை அறிவித்து வாழும் பகுதியில் வசிக்கின்ற அடுத்த மக்களை விழிப்பாக இருக்கும்படி இலங்கை வானியல் மையம் அறிவித்தல் விடுத்துள்ளது .

மலையக பகுதியில் அதிகமான வீதிகள் இடிந்து விழுந்து காணப்படுவதால் போக்குவரத்துக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சாலை வழியாக பயணிக்கும் சாரதிகள் மிக எச்சரிக்கையாக பயணிக்கும்படி அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் இன்று நாடு முழுவதும் பலத்த மழை பெய்து வருவதால் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களாக பெய்து வரும் மழையினால் நாளொன்றுக்கு, நூறு மில்லி மீட்டர் அளவு மழை கொட்டி தீர்த்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது

வவுனியாவில் மோட்டார்சைக்கிள் திருடன் கைது ,வவுனியாவில் மோட்டார் சைக்கிள் திருடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா பகுதியில் ஐந்து மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபன் ஒருவரே ,தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் வவுனியா வீர பெரியகுளம், மதவாச்சி ,வவுனியா ,முதலாம் குறுக்குத்தெரு ,மதவாச்சி அட்விரக்கட ,செட்டிகுளம் ,ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள் காணாமல் போயிருந்தது.

குறித்த திருட்டு சம்பவத்துடன் தொடர்பு கொண்ட நபரை தற்பொழுது மடக்கிப் படிக்கப்பட்டுள்ளார்.

தற் பொழுது சிதம்பர புறம் வீதி ஈரம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 27 வயது வாலிபன் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பொழுது ஐந்து மோட்ட சைக்கிள்களும் முறையே, 5,802,99 5 லட்சம் மூன்று லட்சம் ஒன்பது லட்சத்து 70 ஆயிரம் விலைகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது தெரியவந்தது .

குறித்த வாலிபன் தற்பொழுது கைது செய்யப்பட்ட நிலையில் ,போலீசார் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

நினைவு தூபி ஆற்றில் மிதந்தது

நினைவு தூபி ஆற்றில் மிதந்தது

நினைவு தூபி ஆற்றில் மிதந்தது தூபி மட்டக்களப்பு கல்லடி பாலத்து வாவியில் இன அழிப்பு வாரத்தை நினைவு கூர்ந்து மின் விளக்குகள் அலங்கரிக்கப்பட்டு இன அழிப்பின் அடையாளமான முள்ளிவாய்க்கால் தூபியினை கொண்ட புகைப்படங்கள்.

மற்றும் கறுப்பு ,சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இரண்டு மிதக்கும் தூபிகள் நேற்று (17) இரவு மிதந்து வந்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

குறித்த பாலத்தின் வாவி ஊடாக சம்பவதினமான இரவு 9.00 மணியளவில் மின் விளக்குகள் ஒளிர்ந்து கொண்ட நிலையில் இரு மிதக்கும் வகையிலான இன

அழப்பின் நினைவாக தயாரிக்கப்பட்ட தூபிகள் மிதந்து முகத்து வாரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.

இதனை கண்ட மக்கள் இரவில் மின்விளக்குகள் ஒளிர்ந்த வண்ணம் மனிதர்கள் இன்றி இரு சிறிய படகுகள் போல மர்மான பொருள் வாவியில் ஒரு

மணித்தியாலம் மிதப்பதை கண்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இனையடுத்து அங்கு வந்த பொலிசார் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்த நிலையில் அந்த மர்மான படகுகள் முகத்துவாரம் நோக்கி வாவியில் நகர்ந்து கொண்ட நிலையில், டச்பார் பகுதி

வாவிக்கரையில் அமைந்துள்ள மீன்பிடி படகு தயாரிக்கும் கட்டிட பகுதியில் கரையடைந்ததையடுத்து அங்கு சென்ற பொலிசார் அதனை கரைக்கு இழுத்து கொண்டு வந்தனர்.

சுமார் 4 அடி கொண்ட சதுரமான ரெஜிபோமில் நடுவில் முள்ளிவாய்கால் அமைந்துள்ள நினைவு தூபி போன்ற புகைப்படம் நிறுத்தப்பட்டு அதில் தலைமகனின் வீர வணக்க நாள், இன அழிப்பு வாரம் 12 வைகாசி முதல் 17

வைகாசி வரை, பொங்கு தமிழ் பேரவை என வாசகம் பொறிக்கப்பட்டு அதற்கு அருகில் கறுப்பு ,சிவப்பு, மஞ்சல் கொடிகள் ஏற்றப்பட்டு அதனை சுற்றி

மொழுகுதிரி போன்ற வடிவிலான மின்விளக்குகள் ஒளிரவிட்டு மிதக்கும் முறையில் தயாரிக்கப்பட்டு வாவியில் விடப்பட்டுள்ளது.

இன அழிப்பு நினைவு கூரும் முகமாக வாவியில் மிதக்கும் வகையில் அமைக்கப்பட்ட இந்த நினைவு தூபியை யார் அமைத்தது, இது எங்கிருந்து வாவியில் விடப்பட்டது என்பது குறித்து இதுவரை தெரியவரவில்லை.

மீட்கப்பட்ட இன அழிப்பு தூபியை பொலிஸார், பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றுள்ளனர்.

நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு

நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு

நகைத் திருடன் மடக்கிப் பிடிப்பு ,நகைத் திருடன் மடக்கி பிடிப்பு என இலங்கை காவல்துறையில் தெரிவித்துள்ளனர்.

பெரிய நீல அவனை போலீஸ் காவல்துறை பிரிவில் 16 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் பெறுபதியான ,தங்க நகைகளை திருடிய நபர் ஒருவர், தற்பொழுது காவல் துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்தின் போது கொள்ளையடிக்கப்பட்டு இருந்த மூன்று தங்க வளையல்கள் ஒரு பிரஸ்ட் இரண்டு தோடுகள் மற்றும் இரண்டு மோதிரங்கள் என்பனவற்றை காவல்துறை முற்றுள்ளனர்

சம்பவத்தூரில் மருதாணியில் மூன்று பகுதியைச் சேர்ந்த 37 வயதான சந்தேக நபரை தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது .

ஆளில்லாத வீடுகளை பார்த்து நுழையும் ஆசாமிகள் அங்கு திடீர் கொள்ளை நடத்திவிட்டு தப்பி செல்கின்றனர்.

ஆனால் கொள்ளையின் பொழுது சில சான்றுகளை அவர்கள் தவற விட்டுச் செல்வதால் அதில் சிக்கி விடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட நகைக் கொள்ளையனிடம் தொடர்ந்தும் விசாரணைகள் இடம் பெற்று வருகின்றது .

காவல்துறையர் மேற்கொள்ளும் விசாரணையின் பின்னர் அவர் நீதிமன்றில் பாரப்படுத்துவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருடன் மடக்கி பிடிக்கப்பட்டுள்ள நிலையில் கொள்ளையடித்தருடைய நகை கொள்ளை அடித்த வீட்டில் திருப்பி ஒப்படைக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம்
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம்

சூறாவளி வீடுகள் சேதம்

மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம் ,மட்டக்களப்பில் சூறாவளி வீடுகள் சேதம் என மட்டக்களப்பு செய்திகள் தெரிவிக்கப்பட்டுள்ளது .

கடந்த தினம் மட்டக்களப்பு மாவட்டத்தின் பேரறிவு பற்றி பிரதேச பிரிவு பகுதியில் வீசிய கடும் மினி சூறாவளி காரணமாக அங்கு பல வீடுகள் சேதமடைந்த காணப்பட்டுள்ளது .

சூறாவளியின் பொழுது கூட வந்து மீது தென்னை மரம் முறிந்து விழுந்ததில் அங்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,

வீட்டினுடைய கூரைகள் காட்டில் அடித்துச் செல்லப்பட்டு நிலையில் காணப்படுகிறது அது தவிர அங்கிருந்த உலபு இயந்திரங்கள் மீதும் அந்த தகரங்கள் விழுந்து தான் சேதமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

அதேபோன்று அதே பகுதியில் இரண்டுக்கும் மேற்பட்ட வீடுகள் கடுமையான சேதங்களுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் கிராம சேவலுக்கு அறிவிக்கப்பட்டு அதனுடைய அமைச்சுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது,

இரவில் அர்த்த முகாமத்துவ அமைச்சின் ஊடாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கான இழப்புகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,

முள்ளுவாய்க்கால் தினத்தில் இவ்வாறு சிங்கள தமிழர் பகுதிகளில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற குறிப்பிடத்தக்கது.

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி
Posted in இலங்கை செய்திகள்

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி

முள்ளி வாய்க்கால் நினைவு கஞ்சி ,மன்னார் மாவட்டம் ஆட்காட்டி வலி என்கின்ற கிராமத்தில் இன்றைய நிகழ்வு நடைபெற்றது

அனைவருக்கும் வணக்கம் இன்றைய நாள் முள்ளி வாய்க்கால் நினைவு நாளாக இறுதி இறுதி யுத்தத்தின் போது எங்கள் இனம் அழிக்கப்பட்டுக் கொண்டிருந்தபோது பசி பட்டினியோடு

இருந்த பச்சிளம் குழந்தைகள் வரை அனைவரின் பசியை போக்கியது உன்னதமான இந்த கஞ்சி ஒவ்வொரு தமிழனும் உயிர் உள்ளவரை எங்கள் நெஞ்சில் இருந்து அழியாத ஒரு சுவடு தான் இந்த கஞ்சி

போராட்டத்தின் போது வீரை சாவை தழுவிக் கொண்ட மாவீரர்களுக்கும் இறுதி யுத்தத்தின் போது கொல்லப்பட்ட

எமது உறவுகளுக்கும் ஒரு நிமிடம் இறைவனை பிரார்த்தனை செய்து கொள்ளுவோம் அனைவருடைய ஆத்மாவும் சாந்தி அடைய

தமிழ் ரவுடிகள் கனடாவில் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் ரவுடிகள் கனடாவில் கைது

தமிழ் ரவுடிகள் கனடாவில் கைது

தமிழ் ரவுடிகள் கனடாவில் கைது ,டொராண்டோவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல் தலைவரை நாடு கடத்த கனடா நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்
உக்கிரேன் விமானம் சுட்டு விழுத்தல்


2022 ஆம் ஆண்டு பாரிஸ் அருகே ஒரு போட்டி கும்பல் மீது நடந்த கொடிய தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கடந்த ஆண்டு டொராண்டோவில் கைது செய்யப்பட்ட இலங்கை கும்பல் தலைவரை நாடு கடத்த ஒன்ராறியோ நீதிபதி அனுமதி அளித்துள்ளார்.

டொராண்டோ தெற்கு தடுப்பு மையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரசன்னா நல்லலிகம், கனடாவின் நீதித்துறை

அமைச்சரின் ஒப்புதலுக்காக காத்திருக்கும் 30 நாட்களுக்குப் பிறகு பிரான்சிடம் சரணடையப்படுவார்.

வழக்கின் ஒரு சர்ச்சைக்குரிய பதிவின்படி, செப்டம்பர் 21, 2022 அன்று, நல்லலிங்கம் AAVA கும்பலின் நான்கு உறுப்பினர்களுக்கு ஆயுதங்களை

வழங்கி, போட்டி கும்பலின் “வாகனத்தை அடித்து நொறுக்க” பாரிஸின் வடக்கு புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள லா கோர்னியூவ் என்ற கம்யூனுக்குச் செல்லும்படி அறிவுறுத்தினார்.

நள்ளிரவுக்கு சற்று முன்பு, அந்தக் குழு இரண்டு கார்களில் லா கோர்னியூவுக்குச் சென்றது.

பாதுகாப்பு காட்சிகளில், நல்லலிங்கத்தின் கூட்டாளிகள் எனக் கூறப்படும் நான்கு பேர், ஒரு வாகனத்திலிருந்து வெளியேறி, வாள்கள், கத்திகள் மற்றும்

கத்திகளைப் பயன்படுத்தி போட்டியாளரின் காரையும், இறுதியில் அதில் இருந்தவர்களையும் தாக்குவது காணப்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்டபோது, ​​நல்லலிங்கம் என்று அவரது வழக்கறிஞர்களால் கூறப்படும் ஒருவர், இரண்டு வாகனங்களில் ஒன்றிற்குள் இருந்தார்.

சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​பிரெஞ்சு அதிகாரிகள் இரண்டு பாதிக்கப்பட்டவர்களை “வேதனையில்” கண்டனர். ஒருவர் பின்னர் காயங்களுக்கு ஆளானார்.

நல்லலிங்கம் மே 2024 இல் டொராண்டோவில் குடியேற்ற விசாரணைக்கு ஆஜராகத் தவறியதால் கைது செய்யப்பட்டார்.

சில வாரங்களுக்குள், நிலுவையில் உள்ள கைது வாரண்டில் அவரை நாடு கடத்த பிரான்ஸ் விண்ணப்பித்தது.

இவர்கள் சிறை பிடிக்க பட்ட செய்ய ;ல் தமிழ் ரவுடிகள் அடக்க அரசுக்குகள் மேற்கொள்ளும் ஆகிடும் முயற்சியை காண்பிக்கிறது .

ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு

ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு

ஆட்சி அமைப்பதில் இழுபறி கட்சிகள்பேச்சு ,தொடர்ந்து விடப்பட்ட வண்ணம் இருக்கின்றது.

நடந்து முடிந்த உள்ளூராட்சி சபை தேர்தலில் தற்பொழுது பல கட்சிகள் தோல்வியை ஆட்சி அமைக்க முடியாத நிலையில் சிக்கி இருக்கின்றன .

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்

இதனை அடுத்து தமது சக பாடி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டிருக்கின்றன.

பேரம் பேச்சுக்கள் உக்கிரமடைந்து வருக நிலையில் தற்போது டீல் பேச்சு காணப்படுகிறது.

விரைவில் ஒரு இணக்கப்பாட்டு தீர்வினை எட்டி , அதனூடாக ஆட்சி அமைத்து மக்கள் சேவைக்கு வருவோம் என கூறுகிறார்கள்.

தனி பெரும்பான்மை ஏற்ற கட்சிகளாக பல பகுதிகளில் தொகுதிகளில் காணப்படுகின்றன.

அதனால் அவ்வாறான பகுதிகளில், தனித்து ஆட்சி அமைக்க முடியாத நிலையில் .சக பாடி கட்சிகள் ஆதரவு தேவைப்படுகின்றன .

இதனை அடுத்து பல்வேறுபட்ட அரசியல் கட்சிகள், தீவிர கலந்த ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர் .

விரைவில் ஒரு இணக்கப்பாட்டு முடிவுக்கு வந்து ,இணக்கமான ஒரு ஆட்சி அமைப்பை நிறுவ அவர்கள் முற்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பின்வாசல் வழியாக பல்வேறு பட்ட பேச்சு இடம் பெறுவதாகவும் போட்டிகள் கைமாற தயாராகி கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

துப்பாக்கி சூடு வெளிவந்த மர்மம்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி சூடு வெளிவந்த மர்மம்

துப்பாக்கி சூடு வெளிவந்த மர்மம்

துப்பாக்கிச் சூடு வெளிவந்த மர்மம் கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் ,அதனுடைய மர்மங்கள் வெளிவந்திருக்கின்றன.

கொட்டஞ்சேனை பகுதியில் நடத்தப்பட்ட ,துப்பாக்கி சூட்டில் 42 வயது மற்றும் 70 வயதுடைய நபர்கள் காயமடைந்தனர் .

காயப்பட்ட ஆண் பெண்கள் வழங்கிய தகவலில் இருவரும் வீட்டில் இருந்த பொழுது அங்கு இவர்கள் மீது இருமுறை துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது .

கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளினால் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது தெளிவாகதெரிகிறது .

காவல்துறையினர் மேற்கொண்ட குற்றப்புலனாய்வு விசாரணையில், இந்த நபர் பல்வேறுபட்ட வழக்குகள் சிக்கி இருப்பதாகவும், இந்த சந்தர்ப்பத்தில் ஒன்பது மில்லி மீட்டர் ரக கை துப்பாக்கிய பயன்படுத்தியது விசாரணைகள் மூலம் வெளி வந்திருக்கிறது.

தேடப்படும் ஒரு குற்றவாளியாகவும் காவல்துறை தேடிக் கொண்டிருக்கிறது .

அவ்வாறு காணப்படும் அந்த கொலையாளியை, விரைவில் கைது செய்து விடுவோம் என காவல்துறை அறிவிக்கிறது.

முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது
முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது

இலங்கையில் பல்வேறுபட்ட குற்றச் செயல்களை செய்துவிட்டு இலகுவாக இவரால் தப்ப முடியும் என்றால் அது எப்படி என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

அப்படியென்றால் இவர் திட்டமிடப்பட்டு அரசியல்வாதிகளால் இறக்கி விடப்பட்ட கூலிக்கு கொலை செய்யும் கூலியாள் ,அரசியல்வாதிகள் அடியாள் என்பதாகவே பார்க்கப்படுகிறது.

அனுரா ஆட்சியில் இதுவரை 30க்கு மேற்பட்ட துப்பாக்கி சூடுகள் இடம்பெற்றுள்ளது.

26க்கு மேற்பட்டவர்கள் பலியாக உள்ளதான புதிய தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது
Posted in இலங்கை செய்திகள்

முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது

முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது

முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்தது ,முள்ளிவாய்க்கால் ஊர்தி வவுனியா வந்து அடைந்துள்ளதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்துள்ளனர்.

காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு
காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடுகாவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூடு

இலங்கை இனவாத அரசுகளினால் தமிழர்கள் கொன்றளிக்கப்பட்ட 16வது ஆண்டு நினைவை முன்னிட்டு, யாழ்ப்பாணம் திலீபன் மன்றிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஊர்தி பவுனியாவை வந்து அடைந்துள்ளது.

வலி சுமந்த வாரமாக இருக்கிற இந்த காலத்தில் ,வலி சுமந்த மக்கள் ஊத்தியில் மாலை போட்டு பூக்களை தூவி அஞ்சலித்தனர்.

இவ்வேளை முள்ளிவாய்க்கால் வாரத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கு மாநிலங்களில் இன்றும் கஞ்சிகள் வழங்கப்படுகின்றன.

இன்று முள்ளிவாய்க்காலின் இறுதி நாள் தமிழர்கள் எண்ணங்கள் கரைந்த நாள், சடலங்கலாக எங்கள் உறவுகள் அந்த மண்ணில் விழுந்த நாள்.

இறுதியாக எங்கள் தமிழினம் கழுத்து நெரித்து நசிக்கப்படுகிற அந்த நாள். அது இந்த நாள் .அந்த நாளை முன்னிட்டு இந்த ஊதி இங்கே வந்தது.

மறக்க முடியாத வலிகளையும், மறக்க முடியாத ரணங்களையும், தந்த அந்த நாளை தமிழ் பேசும் மக்கள் மறக்குமா சிங்கள தேசம் இன்னும் சிரிக்குமா.

வேதனையோடு மக்கள் தவிக்கிற அந்த நாளில், இந்த உறுதி திலீபன் முன்றலிலிருந்து வவுனியா வந்தடைந்ததுள்ளது மக்களின் ,மனா குமுறலையும் எழுச்சிகளை காண்பிக்கிறது.

காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன்

காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன்

காணிகள் பறித்தால் போராட்டம் வெடிக்கும்சுமந்திரன் என தமிழரசு கட்சியின் முக்கிய உறுப்பினராக விளங்கும் சுமந்திரன் அவர்கள் அதிரடியாக அறிவித்துள்ளார்.

தமிழர் நிலத்தை அபகரிக்க ஒரு பொழுதும் ஆளும் அடக்கி ஆளும் அரசுகளை விட மாட்டோம் என அவர் சூழ் உரைத்துள்ளார் .

தமிழரசு கட்சியை உடைத்து சிதைத்து அது குளிர்காயும் ஒருவராக சுமந்திரன் உள்ளார் ,என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் இப்படி சுமந்திரன் ஐயா அறிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய விடுதலையை எப்படி மீட்பது அதனை எப்பொழுது பெற்றுக்கொள்வது என்பது தொடர்பாக ,புலம்பெயர் வாழ் தமிழர்கள் மட்டுமல்லாது, உலகத்தவர்கள் எண்ணிக்கொண்டு இருக்க ,அதனை நோக்கி அரசியல்வாதிகள் பயணிக்கவில்லை என்பது கவலையான விடயம்.

அவ்வாறான நிலையில் அவருடைய காடுகளை அபகரித்தால் ,அதற்கு எதிராக போராட்டம் வெடிக்குமென தெரிவித்து உள்ளார் .

இவர் போராட்டம் என்று சொல்வது சட்டப் போராட்டமா ,அல்லது தமிழர்கள் மக்கள் எழுச்சி போராட்டமா, என்பதை ஐயா இப்பவும் தெரிவிக்கவில்லை.

தான் ஒரு சட்டத்தரணி என்பதை ,இதன் ஊடாக சட்டத்தின் நுணுக்கத்தின் ஊடாக பாவிக்கிறார் என்னவோ.

எது எப்படி இருப்பினும் சுமந்திரனை ,தமிழரசு கட்சியிலிருந்து விரட்டும் வரை ,தமிழர் போராட்டம் ஓயாது என்பது தமிழர் நிலைப்பாடாக உள்ளது குறிப்பிடத்தக்கது .

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல்

யாழ்ப்பாணம் மண்ணே நீ வீரத்தின்வேரே புதிய பாடல் ஒன்று எதிரி இணையத்தினால் கடந்த தினம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற நிகழ்கால நிகழ்வுகள், யாழ்ப்பாணத்தின் வீரம் ,இன்று யாழ்ப்பாணம் இன்று எவ்வாறு சிதைந்து கொண்டிருக்கிறது ,என்கின்ற சமூக அக்கறையுடனும் ,வீரத்தினுடைய பறை சாட்டுதலுடன் இந்த பாடல் வெளியாகி உள்ளது.

எங்களுடைய யாழ்ப்பாணம் மன்னே, வீரமான மண், தலைவர் பிறந்த மண் ,அந்த மண்ணில் தறுதலைகளாக ,கஞ்சா ,போதை தலைவிரித்து ஆடுவதை, இந்த பாடலில், பாடல் ஆசிரியர் ராகவி லண்டனையைச் சேர்ந்தவர் குறிப்பிட்டு பாடலை அசத்தியிருக்கின்றார்.

இந்தப் பாடலுக்கான இசையை ,சிறந்த முறையில் இளங்கோ செல்லப்பாவும், மதுரை குரலோன் எங்கள் அன்பு தம்பி பாவேந்தன் அவர்களும் பாடிய அசத்தியிருக்கிறார்கள்.

பாடல் வெளியான சில நிமிடங்களில், வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அதை ஒளிபரப்பப்பட்ட பொழுது ,மக்கள் மத்தியில் இருந்து ஏராளமான வாழ்த்துகள் குவிந்தன.

வரிகள் என்பது சடலம் ,இசை என்பது உயிர் ,ஆகவே அதை உயிரோட்டமாக கொடுத்து இருக்கிறார்கள் .பாவேந்தன் அவர்களும் இளங்கோ செல்லப்பா அவர்களும் .

புதிய பாடல் ஆசிரியர்கள் 100 பேரை அறிமுகம் செய்யும் திட்டத்தில் வன்னி மைந்தன் டிக் தளம் களமிறங்கியது.

அவ்வாறான அடிப்படையில் வன்னி மைந்தன் tiktok தளத்தின் ஊடாகவும் ,எதிரி இணையம் என்பன இணைந்து மூன்றாவது பாடலாசிரியராக, ராகவி அவர்களை இந்த உலக மக்களிற்கு நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

லண்டன் ராகவி படைத்த யாழ் மண்ணே என்ற பாடலை ,நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள்.

கீழே இணைப்பு உள்ளது இவர் போன்று நீங்களும் பாடல்கள் எழுத விரும்பினால் என்னோடு தொடர்பு கொள்ளுங்கள் 0044 7536707793

புதிய பாடல்களை அறிமுகப்படுத்த இளங்கோ செல்லப்பா ,பாவேந்தன் அவர்கள் இணங்கி இருப்பது பாராட்டுதலுக்கு .உரியது .

நாள்தோறும் புதிய புதிய பாடல்கள் வெளியாக இருக்கின்றன .

அதைக் கேட்க சிறந்த காணொளி காட்சி அமைப்புக்களை பார்க்க மறக்காதீங்க எம் சொந்தங்களே .

பார்வையாளராக உள்ள நீங்களும் இதில் பங்காளியாக மாற இன்றே வாருங்கள்.தமிழை வளர்ப்போம் புதிய புரட்சி படைப்போம் .

எதிரிஇணையம் ,வன்னிமைந்தன் டிக் டாக் தளத்தின் புதிய பாடலாசிரியராக மூன்றாம் இடத்தையும் ,முதலாவது பெண்ணாகவும் ராகவி அவர்கள் தடம் பதித்து சாதனை படைத்துள்ளார் .

வாழ்த்துக்கள் ராகவி அவர்களே.மிக்க நன்றி இளங்களோ செல்லப்பா மற்றும் பாவேந்தன் ஆகியோருக்கும் .

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும் .

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு

மாவீரச் செல்வங்கள் புதியபாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வன்னி மைந்தன் tiktok தளம் ,எதிரி இணையம் என்பன இணைந்து புதிதாக முன்னெடுக்கும், 100 பாடல் உருவாக்கத்தில் ,புதிய பாடல் ஆசிரியர்களை உருவாக்குதல் என்ற சிந்தனையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் வன்னி மைந்தன் டிக் டாக் திட்டத்தின் ஊடாக ,இரண்டாவது பாடல் ஆசிரியராக லண்டனச் சேர்ந்த ராஜ் அண்ணா அவர்கள் இணைந்து இருக்கின்றார்.

மாவீரன் செல்வங்களே என்கின்ற பாடலை எழுதி ,எங்களுடைய தேசத்தின் விடுதலையின் உடைய கனவு சுமந்து அந்த பாடல் வெளிவந்துள்ளது.அதனை எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது .

அந்தப் பாடலுக்கு .பாடல் வரிகள் ராஜ் லண்டன் ,கந்தக இசையமைப்பாளர் இளங்கோ செல்லப்பா அமைக்க ,பாடியவர் -மதுர குரலோன் பாவேந்தன் ஆகியோர் ,அதை பாடி அசத்தி பலம் சேர்த்து இருக்கிறார்கள்.

கேட்கும்போதே இனிமையாய் இருக்கக் கூடிய அந்த பாடல், திரும்பத் திரும்ப கேட்கும் வண்ணம் உணர்வை தூண்டுகிற வகையில் உள்ளது.

சிறந்த வரிகள் சிறந்த இசை, சிறந்த குரலாக மீண்டும் கலந்து நேர்த்தியாக இருக்கிறது.


காணொளி காட்சி அமைப்பும், அதுபோன்று இருக்கின்றது. அந்த பாடலை நீங்களும் ஒருமுறை கேட்டு பாருங்கள் .

முள்ளிவாய்க்கால் தினத்தில் வலிபட்ட தினத்தில் ,மூன்று பாடல்கள் இதுவரை வன்னி மைந்தன் டிடாக் மற்றும் எதிரி இணையம் வெளியிட்டு .இருக்கின்றன.

நீங்கள் கேட்பதோடு வரை நிறுத்தாது ,அதனை மற்றவருக்கும் பகிர்ந்து எங்கள் தேச நினைவுகளை மீளவு நினைவில் கொள்ளுங்கள்.

இந்த வழியில் புதிய பாடல்களை அறிமுகப்படுத்த இணங்கி அதற்கு ஆதரவு தந்திட ஒத்து கொண்டு புதியவர்களை வாய்ப்பு கொடுக்கும் அண்ணன்

இளங்கோ செல்லப்பா அவர்களுக்கும் தம்பி பாவேந்தன் அவர்களுக்கும் ஐயா செல்லப்பா அவர்களுக்கு அந்த வழியில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி.

தமிழருக்கு ஆதரவு தருவோம் அமெரிக்கா தெரிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எமது ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா

ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா

எமது ஆதரவு தமிழருக்கு அமெரிக்கா தமிழருக்கு ஆதரவு தருவோம் அமெரிக்கா ஈழத் தமிழருக்கு என்றுமே எமது ஆதரவு உண்டு என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற கொடூரங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும் என அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையில் தமிழர் இனப்படுகொலையின் 16 வருடத்தினை நான் நினைவு கூருவதற்காக உரையாற்றுகின்றேன்.

இன்றும் என்றும் நாங்கள் ஈழத்தமிழர்கள் சமூகத்தினர் உயிர்பிழைத்தவர்கள், அவர்களுடைய குடும்பத்தவர்கள் ,தொடரும் ஒடுக்குமுறைகளினை எதிர்கொண்டுள்ளவர்களுடன் ஐக்கியமாக இருக்கின்றோம்.

இலங்கை அரசாங்கத்திடமிருந்து அவர்கள் தங்கள் துயரங்களிற்கு நீதியை கோரும் வேளை நாங்கள் தமிழ் மக்கள் குறித்தும் அவர்கள் அனுபவித்த விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தவேண்டும்.

அனைவரினது உரிமைகளையும் கௌரவத்தையும் மதிக்கும் அமைதி தீர்விற்காக நாங்கள் பரப்புரை செய்யவேண்டும்,

தமிழர் இனப்படுகொலையின் போது இடம்பெற்ற அட்டுழியங்கள் மீண்டும் இடம்பெறாததை உறுதி செய்யவேண்டும்.

மிகமோசமான துன்பத்தின் மத்தியில் தமிழ் சமூகம் வெளிப்படுத்திய மீள் எழுச்சிதன்மை நீதிக்கான அவர்களின் உறுதிப்பாடு அசைக்க முடியாத உணர்வு ஆகியவற்றிற்கான வெளிப்பாடாகும்.

நாங்கள் அனைவரும் ஈழத்தமிழர்களிற்கு ஆதரவாகயிருப்போம்.

நாமலுக்கு பிரம்டன் மேயரின் அதிர்ச்சி பதில்
Posted in இலங்கை செய்திகள்

நாமலுக்கு பிரம்டன் மேயரின் அதிர்ச்சிபதில்

நாமலுக்கு பிரம்டன் மேயரின் அதிர்ச்சிபதில்

நாமலுக்கு பிரம்டன் மேயரின் அதிர்ச்சிபதில் கனடா இனப்படுகொலை நினைவுத்தூபி தொடர்பில் நாமல் அதிருப்தி தெரிவித்த கருத்துக்கு பதில் அளித்துள்ளார் பிரம்டன் மேயர்.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு

கிடைத்த கௌரவமாகும் என கனடாவின் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரம்டன் மேயர் பட்ரிக் பிரவுன் சமூக ஊடக பதிவில்,

தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபிக்கான நாமல் ராஜபக்சவின் எதிர்ப்பு,

அந்த குடும்பத்தின் கரங்களில் அப்பாவிகள் கொல்லப்பட்டதை அங்கீகரிக்கும் சரியான பாதையில் நாம் சென்றுகொண்டிருக்கின்றோம் என்பதற்கான உறுதியான சமிக்ஞை.

ராஜபக்ச குடும்பம் இனப்படுகொலை இடம்பெறவில்லை என உறுதியான நம்பிக்கைகொண்டிருந்தால் நீதியை குழப்புவதற்கான நடவடிக்கைள், வழக்கு விசாரணையிலிருந்து மறைந்திருத்தல் போன்றவற்றை கைவிட்டுவிட்டு

சர்வதேச விசாரணைகளிற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த குடும்பம் பொறுப்புக்கூறலை எதிர்கொள்வதற்கு பதில், இலங்கை அரசால் பாதுகாக்கப்பட்ட நிலையில், ஆடம்பரத்தில் மறைந்துள்ளது. இது வெட்கக்கேடான விடயம் எனவும் பிரம்டன் மேயர் இடித்துரைத்துள்ளார்.

ராஜபக்ச குடும்பம் இழைத்துள்ள மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போல்பொட் ,ஸ்லோபடான் மிலோசோவிக்,ஹென்றிச் ஹிம்லர்,

மற்றும் புளிசியான் கபுகா ஆகியோர் இழைத்த மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுடன் போட்டியிடும் அளவிற்கும் மோசமானவை.

கனடாவில் உருவாக்கப்பட்டுள்ள தமிழர் இனப்படுகொலை நினைவுத்தூபியை ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது அந்த நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவமாகும் எனவும்

பிரம்டன் மேயர் தனது பதிவில் நாமல் ராஜபக்க்சவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.


சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன்
Posted in இலங்கை செய்திகள்

சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன்

சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன்

சங்கு கூட்டணி தமிழரசுகட்சியுடன் ,இலங்கை தமிழர்சு கட்சிக்கும் சங்குக் கூட்டணிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று வவுனியாவில் இடம்பெற்றது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் முடிவுகளின் பின்னர் வவுனியா மாநகர சபை உட்பட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பதில் கட்சிகளுக்கு இடையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அந்த விடயம் தொடர்பாக தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் நோக்கத்துடன் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று ஒன்றுகூடினர்.

ஜனநாயகத் தமிழ்த்த் தேசியக் கூட்டணியின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் செந்தில்நாதன் மயூரனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான

செல்வம் அடைக்கலநாதன், ப.சத்தியலிங்கம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் முக்கியஸ்தர் க. சந்திரகுலசிங்கம், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் க.துளசி

மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதிகள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்

இலங்கை சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவது ஏன்

இனப்படுகொலை இடம்பெறவில்லையெனில் சர்வதேச குற்றவியல் விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் அஞ்சுவது ஏன் என கஜேந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

“தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால்,

சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும், இலங்கை அரசு எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்?”

இவ்வாறு எவெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கனடாவின் பிரம்டன் நிகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள தமிழின அழிப்பு நினைவகம், கடந்த 10 ஆம் திகதி அந்நகர மேயர் பற்ரிக் பிரவுனால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷை வெளிவிவகார அமைச்சுக்கு அழைத்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்,

எவ்வித ஆதாரமும் அற்ற இனப்படுகொலைக் குற்றச்சாட்டு மற்றும் அதனை அடிப்படையாகக்கொண்ட நினைவுச் சின்னத்தை நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட்ட ஒப்புதல் என்பன தொடர்பில் கடும் ஆட்சேபனையை வெளிப்படுத்தினார்.

அதுமாத்திரமன்றி இவ்வாறான நடவடிக்கைகள் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான அரசின் முயற்சிகளைப் பெரிதும் பலவீனப்படுத்தி சிக்கலாக்குவதாகவும் அவர் விசனம் வெளியிட்டார்.

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசால் இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டதாகக் கண்டறியப்படவில்லை என நீங்கள் உண்மையிலேயே நம்புவீர்களாக இருந்தால், சர்வதேச சுயாதீன குற்றவியல் விசாரணையை எதிர்கொள்வதற்கும்,

இலங்கை அரசு எவ்வித குற்றத்திலும் ஈடுபடவில்லை என்பதை நிரூபிப்பதற்கும் எதற்காக அஞ்சுகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அதுமாத்திரமன்றி ரோம் பிரகடனத்தில் கைச்சாத்திட்டு, அதனூடாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஏன் இடமளிக்கவில்லை என்றும் அவர் வினவியுள்ளார்.

“உண்மைக்கு அரசு அஞ்சுகின்றது என்பதே யதார்த்தமாகும். உண்மையின் ஊடாக மாத்திரமே நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப முடியும்.

இருப்பினும் முன்னைய அரசுகளைப் போன்று உங்களது அரசும் அதனைத் தொடர்ந்து நிராகரித்து வருகின்றது.” – என்றும் கஜேந்திரகுமார் எம்.பி. விசனம் வெளியிட்டுள்ளார்.

பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி
Posted in இலங்கை செய்திகள்

பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி

பள்ளத்தாக்கில் விழுந்த வண்டி

பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி ,பள்ளத்தாக்கில் பாய்ந்த வண்டி அதிகரிக்கும் இலங்கையில் வாகன விபத்துக்கள்.

கட்டன் கொழும்பு பிரதான வலியுடாக பயணித்துக் கொண்டிருந்த கப் வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மலை பள்ளத்தாக்கில் விழுந்தது.

இதன் பொழுது அந்த வாகனத்தை ஒட்டிச் சென்றவர்கள் படுகாயம் அடைந்த நிலையில் தற்போது மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கப்ராக வாகனம் பலத்த சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது

இந்த வாகன விபத்தில் காயம் அடைந்தவர்கள் மற்றவள டிவிசன் கொஸ்டின் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்கள் நலமுடன் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் ஆண்டு தோறும் 36 ஆயிரம் வாகன விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மூவரசுக்கு மேற்பட்டவர்கள் வாகன விபத்தில் பலியாகி வருகின்றனர்.

இவ்வாறான துயரமான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற பொழுது அதனை தடுக்க வழி ஏற்று இலங்கை காவல்துறை மற்றும் அரசு என்பன ஈடுபட்டு வருகின்றன.

கடந்த சமீப நாட்களில் பலமான விபத்துக்கள் இடம் பெற்று வருவதும் மக்கள் பலியாகியும் காயம் அடைந்து வருகின்ற சம்பவங்கள் தொடர்கின்ற வழியில் இந்த விபத்து இந்து இடம் பெற்றுள்ளது கவலை அளிக்கிறது.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியை சர்வதேசத்துக்கு எடுத்துச் செல்வது இராஜதந்திரிகளின் முக்கிய பொறுப்பு என அனுர தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றத்தின் செய்தியைச் சர்வதேச சமூகத்திற்கு எடுத்துச் செல்வதும், சர்வதேச சமூகத்தின் முன்

இலங்கையின் நற்பெயரை மேம்படுத்துவதும் தூதுவர்களின் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

பல்வேறு நாடுகளுக்கான இலங்கையின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டுச் செல்லும் புதிய தூதுக்குழுத் தலைவர்களுடன் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற

கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இக்கருத்துக்களைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு சேவைகளை வழங்குவதில் முன்னணியில் இருந்து சிறப்புக் கவனத்துடன் பணியாற்றுமாறும், எந்தவித பாகுபாடும் இல்லாமல் நியாயமாக செயல்படுமாறும்

புதிய இராஜதந்திரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

இலங்கைத் தூதரகத்தை, இலங்கையர்கள் தமது இடமாக உணரும் வகையில் செயற்படுமாறு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டிற்கான தமது சேவையை செயற்திறன்மிக்க வகையில் மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஈர்ப்பதற்கும், இலங்கையில் உள்ள தொழில்முனைவோர் வெளிநாட்டு சந்தை வாய்ப்புகளைக் கண்டறிய

உதவுவதற்கும் தேவையான ஒருங்கிணைப்பு இராஜதந்திர சேவையின் ஒரு பகுதியாகும் என்று ஜனாதிபதி அநுரகுமார தெரிவித்தார்.

அதன்படி, நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது தூதுவரின்

முக்கிய பொறுப்பாகும் என்றும், அதற்குத் தேவையான ஆதரவை வழங்க அரசு தயாராக இருப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நடந்த சில சம்பவங்களால் தூதுவர்கள் கடந்த காலங்களில் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் என்றும், தற்போதைய

அரசாங்கம் தூதுவர்களின் கௌரவத்தை பாதிக்கும் எவற்றையும் செய்யாது என்றும் எந்த நேரத்திலும் தூதுவர்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

புதிய தூதுக் குழுத் தலைவர்களாக, இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக ஜீ. எம். கொலொன்னெ, பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்

ஸ்தானிகராக ரியர் அட்மிரல் பிரெட் செனவிரத்ன, ஐக்கிய இராச்சியத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக எஸ். டீ. என்.யூ.சேனாதீர,

அமெரிக்காவின் நியூயோர்க் ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர பிரதிநிதியாக ஜயந்த ஜயசூரிய, கியூபாவுக்கான இலங்கைத் தூதுவராக ஆர்.எம்.மஹிந்த ரத்நாயக்க, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவராக

பேராசிரியர் பி. ஜனக் குமாரசிங்க, ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கைத் தூதுவராக பேராசிரியர் அருஷா கூரே ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அருணி ரணராஜா மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.